உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 09, 2010

கடலூர் மாவட்டத்தில் 100 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு


ஞாயிற்றுக்கிழமை அடித்த ஜல் புயலில், கடலூர் அருகே எஸ்.புதூரில் ஒடிந்து விழுந்து கிடக்கும் வாழை மரங்கள்.
 
கடலூர்:

             "ஜல்' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததால், 100 கிராமங்களில் திங்கள்கிழமை 2-வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. 500 ஏக்கரில் வாழை, கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.

                 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்றுடன் மழை பெய்ததால், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மின்கம்பங்கள் சாய்ந்தன புயல் தாக்கியதும் முதல் பாதிப்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுதான். கடலூர், கேப்பர் மலை உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததில் திங்கள்கிழமை 2-வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் உயர் அழுத்த மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்தன. 

                   பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததால், மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகரங்களில் காலை முதல் இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. சில இடங்களில் இரவு 8 மணிக்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

விவசாயப் பயிர்கள் பாதிப்பு:

                        புயல் காரணமாக கேப்பர் மலைப் கிராமங்கள் மற்றும் நெல்லிக்குப்பம் பண்ருட்டி பகுதிகளில் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்தன. கரும்பு, ரோஜா, மல்லிகை பூந்தோட்டங்கள் பலவும் சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். தென்னை, மா, பலா, தேக்கு உள்பட 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டன. கரும்புப் பயிர்களும் சாய்ந்தன.

இது குறித்து கடலூரை அடுத்த ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் விவசாயியுமான ஞானசேகரன் கூறுகையில், 

                    "100 ஏக்கரில் ரோஜா மற்றும் மல்லிகை தோட்டங்கள் சேதம் அடைந்து உள்ளன. இனி இவற்றில் புதிதாகத் தளிர் வந்த பிறகுதான், பூக்களைக் காண முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது' என்றார். 

பெண்ணை ஆற்றில் வெள்ளம்

                         நட்டு 10 நாள்கள் ஆன சம்பா நெல் வயல்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது.

Read more »

மர வியாபாரியின் குடோனாக மாறிய நெல்லிக்குப்பம் ஜீவா நகர் பஸ் நிறுத்த நிழற்குடை

நெல்லிக்குப்பம்:

                     நெல்லிக்குப்பம் ஜீவா நகர் பஸ் நிறுத்தம் தனியார் மரம் வியாபாரியின் குடோனாக மாறியதால் மக்கள் சிரமப்படுகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி ஜீவா நகர் அருகே மின்வாரிய அலுவலகம் இரண்டு முக்கிய தனியார் மருத்துவமனைகள், சர்க்கரை ஆலை அலுவலகம், கல்வியியல் கல்லூரியும் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பஸ் நிறுத்தம் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் தனர். பஸ் நிறுத்தம் கட்டினால் பஸ் கள் நிறுத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

                     இதனைத் தொடர்ந்து டாக்டர் சடகோபன் நினைவாக டாக்டர் கிருஷ் ணகோபால் தனது செலவில் நமக்கு நாமே திட்டத்தில் சாலையின் இருபுறமும் இரண்டு பயணிகள் நிழற்குடைகளை கட்டினார். 2001ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் சந்தீப் சக்சேனா திறந்து வைத்தார்.விழாவில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இனி இங்கு பஸ்கள் நிற்கும் என கூறினர். ஓரிரு மாதங்கள் பஸ்கள் நின்றன. அதன்பிறகு பஸ்கள் நிற்பதில்லை. பஸ் நிறுத்தத்தை மர வியாபாரி ஒருவர் குடோனாக பயன் படுத்த துவங்கினார்.

                       மற்றொரு பஸ் நிறுத் தம் பகலில் மீன் கடையாகவும் இரவில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறியது.அப்பகுதி மக்கள் கலெக்டர், முதல்வர், கவர்னர் என பலருக்கு தொடர்ந்து மக்கள் மனு அனுப்பி வந்தும் பஸ்களை நிறுத்த நடவடிக்கை இல்லை.பயணிகள் நிழற்குடை கட்டினால் பஸ்கள் நிறுத் தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கூறியது போல் பஸ்கள் நிற்பதில்லை. மனுக்கள் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் பஸ்கள் நிறுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

Read more »

அரசு தொழில் நுட்பத் தேர்வு நாளை முதல் துவங்குகிறது

கடலூர் :  

               அரசு தொழில் நுட்பத் தேர்வு நாளை 10ம் தேதி துவங்குகிறது. 

இதுகுறித்து அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனரின் செயலாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                   அரசு தொழில் நுட்பத் தேர்வுகளான விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் அச்சுக் கலைப்பிரிவு பாடங்களுக்கான தேர்வுகள் நாளை 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. அதில் விவசாய பிரிவு தேர்வு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த 5,401 பேருக்கு கடலூர் நகராட்சி பள்ளியில் நடக்கிறது.  அதேப் போன்று அச்சுக்கலை தேர்வு விருத்தாசலம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியிலும், கைத்தறி நெசவு தேர்வு சேலம் மாவட்டம் வேம்படித்தலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. அச்சுக்கலை மற்றும் கைத்தறி நெசவுப் பிரிவு தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) நாளை முதல் தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் பற்றிய படக்காட்சி மாவட்டம் முழுவதும் திரையிடப்படுகிறது

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் படக்காட்சி காண்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                               அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து கொள் ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலமாக விளம்பரம் செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலமாக  படக்காட்சி போடவுள்ள கிராமங்கள் பற்றிய விவரம் வருமாறு:

                  கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கரைமேடு கிராமத்திலும், 7.30 முதல் 8.30 மணி வரை உள்ளேரிப்பட்டு கிராமத்திலும் முறையே 9ம் தேதி கடலூர் துறைமுதுநகர், சேடப்பாளையமும், 10ம் தேதி தோட்டப் பட்டு, மருதாட்டிலும், 11ம் தேதி தூக்கணாம்பாக்கம், பள்ளிப்பட்டிலும், 12ம் தேதி கீழ்க்குமாரமங்கலம், காரணப்பட்டிலும், 13ம் தேதி காராமணிக்குப்பம், வரக்கால்பட்டிலும் படக்காட்சி நடைபெறும்.

                      அண்ணா கிராமம் ஒன்றியத்தில் 16ம் தேதி பட்டாம்பாக்கம், நெல்லிக் குப்பத்திலும், 17ம் தேதி பி.என்.பாளையத்திலும், 18ம் தேதி கோழிப்பாக்கம், பெரிய பகண்டையிலும், 19ம் தேதி கீழ்கவரப்பட்டு, மேல்கவரப்பட்டிலும், 22ம் தேதி தட்டாம்பாளையம், கண்டரக்கோட் டையிலும், 23ம் தேதி கொங்கராயனூர், மாளிகைமேட்டிலும் நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர் இல்லை : நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் அவதி

நெல்லிக்குப்பம் :  

                      நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பிற்கு ஆசிரியர் இல்லாததால் மாணவிகள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,000 மாணவிகள் படிக்கின்றனர். நெல்லிக்குப்பம் வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளி மாணவிகள் தேர்ச்சி சதவீதத்திலும், அதிக மதிப்பெண் எடுப்பதிலும் தனியார் பள்ளிகளை விட சிறந்து விளங்குகின்றனர். சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட்டு வருகின்றனர். ஆனால், இப்பள்ளியில் 10ம் வகுப்பு நான்கு பிரிவுகள் உள்ளன. அறிவியல் பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களில் ஒருவரை தற்காலிகமாக பள்ளி துணை ஆய்வாளர் பணிக்கு மாற்றினர். இவர் மாவட்ட கல்லி அலுவலர் அலுவலக பணியை பார்ப்பதால் பள்ளிக்கு வரமுடியவில்லை.

                      இதனால் 10ம் வகுப்பில் இரண்டு பிரிவுகளில் அறிவியல் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை. ஒரே பள்ளியில் படிக்கும் பாதி மாணவிகளுக்கு மட்டும் அறிவியல் ஆசிரியர்கள் இல்லாததால் அந்த மாணவிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. தேர்ச்சி சதவீதம் குறைந்தால் ஆசிரியர்களை குறைகூறும் கல்வித்துறை அதிகாரிகள் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும். மாணவிகளின் நலன்கருதி அறிவியல் ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

Read more »

ஜல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட கடலோரகிராம மக்களிடம் கலெக்டர் குறைகேட்பு

கடலூர்:

                புயல் மழைக் காரணமாக கடலோர கிராம மக்களை கலெக்டர் சீத்தாராமன் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். "ஜல்' புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை தொடங்கிய மழை தீவிரமடைந்து நண் பகலில் பேய் மழை பெய்தது. கடல் அலை சீற்றத்துடன் 10 அடி உயரம் வரை எழுந்தது. இதனால் தேவனாம்பட்டினம், தாழங்குடாவில் மூடப்பட்டிருந்த முகத்துவாரங்கள் அலையின் வேகத்தால் மணல் மேட்டை கடந்து கடல்நீர் ஆறுகளில் நிரம்பியது. உப்பனாறு, பெண்ணையாறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

                       மீனவர்கள் தங்கள் படகுகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் சூறாவளிக் காற்று கடலூரை விட்டு நகர்ந்து சென்னை நோக்கி நகர்ந்தது. அதனைத் தொடர்ந்து மழை குறைந்தது. கடலோரப் பகுதியில் உள்ள சித்திரைப்பேட்டை, திருச்சோபுரம், பெரியக்குப்பம், சாமியார் பேட்டை, பெரியப்பட்டு, முடசல்ஓடை, கிள்ளை, பரங்கிப்பேட்டை கிராம மக்களை கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், பி.ஆர்.ஓ., முத்தையா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், ஆகியோர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது கலெக்டர் கடல் சீற்றம் தணியும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும் அந்தந்த கிராமங்களில் பொறுப்பு அதிகாரியாக செயல்படுவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும், ரேஷன் கடைகள் திறந்து வைக்க வேண்டுமென்றும் கலெக்டர் உத்தரவிட்டார்.

Read more »

Gale uproots electric posts

— Photo: C Venkatachalapathy

At least five electric posts installed on the Caper Hills were felled by strong wind that blew across Cuddalore on Sunday.

CUDDALORE: 

               At least four electric posts were pulled down by the gale that blew across Cuddalore in the wake of the “Jal” cyclonic storm on Sunday. It snapped high tension wire and cut power supply to Old Town, Vandipalayam and Capper Hills areas. Ever since, the employees of the Tamil Nadu Electricity Board were busy restoring the power supply in these places. 

                 The EB sources said that so far 70 per cent of the power connections in the affected areas were restored and the remaining 30 per cent would be restored by Tuesday.

Read more »

Steps to provide livelihood to tsunami-hit

CUDDALORE:

                 Projects worth Rs. 5.12 crore will be taken up in 26 panchayats in Cuddalore district under the “Post-tsunami sustained livelihood programme,” supported by the International Fund for Agricultural Development (IFAD). A statement from Collector P. Seetharaman said that people would have to put in 10 per cent of the project cost as their share and the money was being collected. As part of the programme, four fishermen associations had been formed at M.G.R. Nagar and Kalaignar Nagar at Killai and at Annankoil. The youth in these areas were also imparted training in livelihood measures.

Read more »

1.29 lakh students to be screened for vision problems

CUDDALORE:

            A total number of 1.29 lakh students will be screened for vision problems in Cuddalore district during the current academic year , Collector P. Seetharaman has said.

               In a statement released here on Thursday, he said that last year, a total of 1.14 lakh students from Class VI to VIII were screened and 6,942 given corrective glasses free of cost under the Kalaignar Kannoli Kappom Thittam. This year, students in Class VI, IX, X, Plus-One and Plus-Two would be screened. The Government Headquarters Hospital here had been provided with modern equipment to carry out cataract surgery and other vision correction procedures, Mr. Seetharaman said. Patients who required anti-glaucoma surgery or laser treatment for retinopathy or keratoplasty would be recommended for treatment under the Kalaignar Health Scheme.

Read more »

Schools told to maintain records on drivers

CUDDALORE: 

               All schools in Cuddalore district have been instructed to maintain proper records on their drivers. Even details of those engaged on a temporary basis should also be collected, said Superintendent of Police Ashwin Kotnis.

               He was speaking at a press conference held here on Wednesday. Mr. Kotnis said that school managements and the Revenue and Police officials had been sensitised to keeping a tab on drivers of educational institutions. The institutions should employ only persons with 10 years of driving experience. Schools had been told to adhere to the passenger limit fixed by the Transport Department, he said.

Monitoring activities

               Check-posts had been set up at 24 places to keep a tab on vehicular movement. The police were closely monitoring activities of persons with criminal records. As regards security arrangements for the festive season, Mr. Kotnis said that watch towers had been erected at 18 commercial hubs to streamline crowd and regulate traffic. Security personnel equipped with binoculars were keeping a vigil on these towers. The law enforcing personnel were also inspecting authorised explosive godowns and coming down heavily on 
those storing unauthorised explosives or were carrying on the trade on the sly.

             Mr. Kotnis said that shops selling firecrackers should not be located in thickly populated areas. The shops should have fire-fighting equipment at their disposal. Those bursting crackers should do so only on open grounds. Elders should remain by the side of children while they handle fireworks, he said. 

Any complaints regarding unauthorised cracker shops could be communicated over telephone numbers 04142—284345, 284350 and 284333, Mr. Kotnis said.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior