உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

விருத்தாசலம் எருமனூர் கிராமத்தில் திடீர் சாலை மறியல்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/607a72e0-2c97-4afa-bf73-58c9f20250b9_S_secvpf.gif
 
விருத்தாசலம்:
 
        விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தில் அரசு வழங்கும் இலவச ஆடு-மாடுகளுக்கு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. நில மற்ற ஏழைகளை புறக்கணித்து விட்டு வசதி படைத்தவர்களுக்கு ஆடு, மாடுகள் வழங்க கணக்கெடுக்கப்பட்டதாக தெரிகிறது. 
 
       இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று எருமனூரில் விருத்தாசலம்- முகாசாபடூர் மெயின்ரோட்டில் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வீருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விருத்தாசலம் தாசில்தார் பிரபாகரனும் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கால்நடைத் துறை அதிகாரிகளிடம் பேசி முறையாக கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 1 1/2 மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior