உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 02, 2009

கட​லூர் மாவட்​டத்​தில் 2.63 லட்​சம் பேருக்கு ​எய்ட்ஸ் பரிசோதனை

கடலூர்,​ டிச. 1:​ 

        கட​லூர் மாவட்​டத்​தில் 2.63 லட்​சம் பேருக்கு எச்.ஐ.வி. நோய்க் கிரு​மி​கள் உள்​ள​னவா என்று ஆய்வு செய்​யப்​பட்​ட​தாக மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தெரி​வித்​தார்.

திங்​கள்​கி​ழமை உலக எய்ட்ஸ் தினம் அனு​ச​ரிக்​கப்​பட்​ட​தை​யொட்டி கட​லூ​ரில் எய்ட்ஸ் விழிப்​பு​ணர்வு ஊர்​வ​லம் நடந்​தது. ஊர்​வ​லத்​தைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் கூறி​யது:​

க​ட​லூர் மாவட்​டத்​தில் 2,63,091 பேருக்கு எச்.ஐ.வி. வைரஸ் நோய்​கி​ருமி உள்​ளதா என்று பரி​சோ​திக்​கப்​பட்​டது. இதில் 2056 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்​பது கண்​டு​பி​டிக்​கப்​பட்டு உள்​ளது.        அவர்​க​ளில் 125 பேர் குழந்​தை​கள் அவர்​க​ளி​லும் 58 குழந்​தை​கள் ஆத​ர​வற்​ற​வர்​க​ளாக உள்​ள​னர்.     

ஆ​த​ர​வற்ற எஸ்.ஐ.வி. குழந்​தை​கள் பரா​ம​ரிப்​புக்​காக எச்.ஐ.வி. கட்​டுப்​பாடு அறக்​கட்​ட​ளை​யில் இருந்து ரூ.1.59 லட்​சம் நிதி ஒதுக்​கப்​பட்டு உள்​ளது.       125 குழந்​தை​க​ளுக்கு மாதம் தலா ரூ.400 வீதம் உத​வித் தொகை வழங்​கப்​ப​டு​கி​றது.          70 பேருக்கு மொத்​த​மாக தலா ரூ.10 ஆயி​ரம் வழங்​கப்​பட்டு உள்​ளது. ​ ​

எச்.ஐ.வி. தொற்​று​நோய் உள்​ள​வர்​க​ளுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து மையம் கட​லூர் அரசு தலைமை மருத்​து​வ​ம​னை​யில் செயல்​ப​டு​கி​றது.   எச்.ஐ.வி. தொற்று நோய் உள்​ள​வர்​க​ளுக்கு எதிர்ப்பு சக்​தியை அறி​யும் கருவி கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் அடுத்த வாரம் செயல்​பட இருக்​கி​றது என்​றார் 

எய்ட்ஸ்​ நோயால் பாதிக்​கப்​பட்டு ஆத​ர​வற்​ற​வர்​க​ளாக உள்ள குழந்​தை​க​ளுக்கு இந்த நிகழ்ச்​சி​யில் மாவட்ட ஆட்​சி​யர் உத​வித் தொகை​களை வழங்​கி​னார். கட​லூர் மாவட்​டத்​தில் 3 நாள்​கள் பிர​சா​ரம் செய்​யும் எய்ட்ஸ் விழிப்​பு​ணர்வு பிர​சார ஊர்​தி​யை​யும் மாவட்ட ஆட்​சி​யர் கொடி அசைத்​துத் தொடங்கி வைத்​தார். எய்ட்ஸ் நோய் உறு​தி​மொழி எடுத்​துக் கொள்​ளப்​பட்​டது,​. ​

மாவட்​ டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஸ்,​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் ​ எஸ்.நட​ரா​ஜன்,​ மருத்​து​வத்​துறை இணை இயக்​கு​நர் டாக்​டர் ஜெய​வீ​ர​கு​மார்,​ சுகா​தா​ரத்​துறை துணை இயக்​கு​நர் டாக்​டர் ஆர்.மீரா,​ மாவட்​டத் திட்ட அலு​வ​லர் ராஜு உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

Read more »

சர்​வ​தேச மாநாட்​டில் அண்​ணா​ம​லைப் பல்​கலை விரி​வு​ரை​யா​ளர்

சிதம்ப​ரம்,​ டிச. 1:​ 

சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக வேளாண்​புல முது​நிலை விரி​வு​ரை​யா​ளர் முனை​வர் சந்​திர.முரு​கா​னந்​தம்  மலே​சியா மற்​றும் சிங்​கப்​பூ​ரில் டிசம்​பர் 5-ம் தேதி வரை நடை​பெ​றும் 4-வது சர்​வ​தேச மருத்​து​வம் மற்​றும் வாச​னைப் பயிர்​கள் குறித்த மாநாட்​டில் பங்​கேற்று தனது ஆய்​வுக்​கட்​டு​ரையை சமர்ப்​பிக்​கி​றார். இம் ​மா​நாட்​டில் சந்​திர.முரு​கா​னந்​தம் கண்​வள்ளி கிழங்கு சாகு​படி குறித்த ஆராய்ச்சி கட்​டு​ரை​களை சமர்​பித்து விவா​தத்​தில் பங்​கேற்​கி​றார்.

Read more »

பட்டா மாறு​தல்:​ நீண்ட கால மனுக்​கள் பரி​சீ​லனை

சிதம்ப​ரம்,​ டிச. 1:​ 

சிதம்​ப​ரம் வட்​டம் பரங்​கிப்​பேட்டை குறு​வட்​டத்​தில் ஏற்​கெ​னவே மனுக்​கள் பெறப்​பட்டு விசா​ரணை முடிக்​கப்​ப​டா​மல் உள்ள பட்டா மாறு​தல் குறித்த நீண்​ட​கால நிலுவை மனுக்​களை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உத்​த​ர​விட்​டுள்​ளார்.

அ​தன்​பே​ரில் டிசம்​பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பரங்​கிப்​பேட்டை குறு​வட்​டம் சம்​பந்​தப்​பட்ட கிரா​மங்​க​ளின் மனு​தா​ரர்​கள் அந்​தந்த கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கத்​தில் விசா​ர​ணைக்கு ஆஜ​ராகி தங்​கள் குறை​களை நேர​டி​யாக தெரி​வித்து தீர்வு காண​லாம் என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் அறி​வித்​துள்​ளார்.​

Read more »

பரங்​கிப்​பேட்​டை​யில் இன்று பாபாஜி பிறந்த நாள் விழா

சிதம்ப​ரம்,​ டிச. 1:​ 

சிதம்​ப​ரத்தை அடுத்த பரங்​கிப்​பேட்​டை​யில் உள்ள பாபாஜி கோயி​லில் பாபா​ஜி​யின் 1806-வது பிறந்​த​நாள் விழா புதன்​கி​ழமை ​(டிசம்​பர் 2) கொண்​டா​டப்​ப​டு​கி​றது.

ப​ரங்​கிப்​பேட்​டை​யில் சுங்க அலு​வ​ல​கம் அருகே பாபாஜி கோயில் உள்​ளது. இக்​கோயி​லில் ஆண்டு தோறும் பாபாஜி பிறந்த நாளான கார்த்​திகை மாதம் ரோகிணி நட்​சத்​தி​ரம் அன்று பிறந்​த​நாள் விழா சிறப்​பாக கொண்​டா​டப்​பட்டு வரு​கி​றது. இந்த பிறந்​த​நாள் புதன்​கி​ழமை நடை​பெ​று​கி​றது. இத​னை​யொட்டி சிறப்பு அபி​ஷே​கம்,​ சிறப்பு யாகம்,​ அன்​ன​தா​னம் ஆகி​யவை நடை​பெ​று​கின்​றன.​

Read more »

அடிப்படை வசதியின்றி வடலூர் அரசு நூல​கம்

நெய்வேலி, ​ டிச. 1:​ 
 
            வள்​ள​லார் வாழ்ந்த வட​லூ​ரில் அர​சுக் கிளை நூல​கம் போதிய அடிப்​படை வச​தி​க​ளின்றி கடந்த 29 ஆண்​டு​க​ளாக வாட​கைக் கட்​ட​டத்​தில் இயங்கி வரு​வது அப்​ப​குதி புத்​தக விரும்​பி​களை பெரி​தும் கவ​லை​ய​டை​யச் செய்​துள்​ளது.
 
க​ட​லூர்-​விருத்​தா​ச​லம் சாலை மார்க்​கத்​தில் வட​லூர் வள்​ள​லார் தரு​மச்​சாலை பஸ் நிறுத்​தம் அருகே ஒரு வாட​கைக் கட்​ட​டத்​தில் 240 சதுர அடி பரப்​ப​ள​வில் இயங்கி வரு​கி​றது அரசு கிளை நூல​கம்.     இந்த நூல​கத்​தில் சுமார் ரூ.10 லட்​சம் மதிப்​பி​லான 15 ஆயி​ரம் புத்​த​கங்​கள் உள்​ளன.
 
இ ​ரண்டு கடை​கள் வாட​கைக்கு எடுக்​கப்​பட்டு அதில் ஒரு கடை வாச​கர்​கள் படிப்​ப​தற்​கும்,​ மற்​றொரு கடை புத்​த​கங்​கள் வைப்​ப​தற்​கும் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.      இந்த நூல​கத்​தில் கணினி பயன்​பாடு கூட கிடை​யாது.        தொலை​பேசி வச​தி​யும் கிடை​யாது.
 
இந்த நூல​கத்​தில் ஒரே சம​யத்​தில் 10 பேர் மட்​டுமே அமர்ந்து படிக்​க​மு​டி​யும். இத​னால் இந்த நூல​கத்​துக்கு வரும் வாச​கர்​கள் போதிய இட​வ​சதி இல்​லா​த​தால்,​ மந்​தா​ரக்​குப்​பம் மற்​றும் நெய்வேலி நூல​கங்​க​ளுக்​குச் செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. ​÷வள் ​ள​லார் வாழ்ந்த வட​லூர் மாநில அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர்​செல்​வத்​தின் முயற்​சி​யால் நாளுக்​கு​நாள் வளர்ச்​சி​ய​டைந்து வரு​கி​றது.     ஆனால் அறி​வை​யும்,​ நல்ல பண்​பு​க​ளை​யும் வளர்க்​கக் கூடிய நூல​கம் கண்​டு​கொள்​ளப்​ப​டா​மல் இருப்​பது வேத​னை​ய​டை​ய​வைக்​கி​றது.÷இ​து​கு​றித்து மாவட்ட மைய நூல​கர் அசோ​கன் கூறி​யது:​        
 
சரி​யான இடம் கிடைக்​கா​த​தால் வட​லூர் நூல​கம் வாட​கைக் கட்​ட​டத்​தில் இயங்கி வரு​கி​றது.       இடம் தேர்வு செய்​து​கொண்​டி​ருக்​கி​றோம்.     
 
வட​லூர் பேரூ​ராட்சி செயல் அலு​வ​ல​ரி​ட​மும் இடம் தொடர்​பாக கோரிக்கை வைத்​துள்​ளோம்.
 
கு​றிஞ்​சிப்​பாடி ஒன்​றி​யக் கல்​விக் குழு உறுப்​பி​னர் சிவக்​கு​மார்,​ நூலக வளர்ச்​சிக்​காக பெரி​தும் உத​வி​வ​ரு​கி​றார்.     இடம் தேர்​வான உடன் ரூ.15 லட்​சம் மதிப்​பில் அனைத்து வச​தி​க​ளு​டன் நூல​கம் செயல்​ப​டும் என்​றார் அசோ​கன்.

Read more »

ஊராட்சி கழிப்​பறை கட்​ட​டத்தை இடிக்க ஆட்​சி​யர் உத்​த​ரவு

சிதம்ப​ரம்,​ டிச. 1:​ 
 
 
சிதம்​ப​ரம் அருகே உள்ள லால்​பு​ரம் ஊராட்​சி​யில் புதி​தாக கட்​டப்​பட்டு வரும் கழிப்​ப​றையை இடிக்க மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உத்​த​ர​விட்​டுள்​ளார்.
 
லால்​பு​ரம் ஊராட்சி சார்​பில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்டு,​ சிதம்​ப​ரத்தை அடுத்த லால்​பேட்டை ஊராட்​சி​யில் வண்​டி​கேட் பகு​தி​யில் பாசி​முத்​தான்​ஓடை,​ சிவ​கா​ம​சுந்​த​ரி​ஓடை இடையே புதிய கழிப்​பறை கட்​ட​டம் கட்​டும் பணி நடை​பெற்று வரு​கி​றது. இந்த கழிப்​பறை கட்​ட​டத்​தால் கரை சேத​மாகி பாசி​முத்​தான்​ஓடை தண்​ணீ​ரும் வீணா​கும் என பாசி​முத்​தான்​ஓடை விவ​சாய சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் ஆட்​சி​ய​ரி​டம் புகார் தெரி​வித்​தார்.÷அ ​தன்​பே​ரில் மாவட்ட ஆட்​சி​யர் அதி​கா​ரி​க​ளைக் கொண்டு ஆய்வு மேற்​கொண்​ட​தில் பொதுப்​ப​ணித்​துறை உள்​ளிட்ட யாரி​ட​மும் அனு​மதி பெறா​மல் அப்​ப​கு​தி​யில் கழிப்​பறை கட்​டப்​பட்டு வந்​தது தெரி​ய​வந்​தது. மேலும் அந்த கழிப்​ப​றை​யால் பொது​மக்​க​ளுக்கு பாதிப்பு ஏற்​ப​டும் எனக் கருதி அந்​தக் கழிப்​ப​றையை உட​ன​டி​யாக இடித்து அகற்ற பொதுப்​ப​ணித்​துறை அதி​கா​ரி​க​ளுக்கு ஆட்​சி​யர் உத்​த​ரவு பிறப்​பித்​துள்​ளார்.

Read more »

உழ​வர் சந்தை மீண்​டும் இயக்க ஆட்​சி​யர் உத்​த​ரவு

சிதம்ப​ரம்,​ டிச. 1:​ 
 
சிதம்​ப​ரம் அண்ணா கலை​ய​ரங்​கம் வளா​கத்​தில் தொடங்​கப்​பட்ட உழ​வர் சந்தை இயங்​கா​மல் உள்​ளது குறித்து தின​ம​ணி​யில் கடந்த மாதம் 4-ம் தேதி ​ படங்​க​ளு​டன் கட்​டுரை வெளி​யிட்​டி​ருந்​தோம். அதன் எதி​ரொ​லி​யாக கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உழ​வர் சந்​தையை மீண்​டும் இயக்க உத்​த​ரவு பிறப்​பித்​துள்​ளார்.
 
சி​தம்​ப ​ரம் நக​ரில் அண்ணா கலை​ய​ரங்​கம் வளா​கத்​தில் 2000-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ம் தேதி வேளாண் விற்​ப​னைத் துறை​யி​ன​ரால் உழ​வர்​சந்தை தொடங்​கப்​பட்​டது. அப்​போ​தைய மத்​திய பெட்​ரோ​லிய இணை அமைச்​ச​ரும்,​ நாடா​ளு​மன்ற உறுப்​பி​ன​ரு​மான ஏ.பொன்​னு​சாமி தலை​மை​யில் தமி​ழக வேளாண் துறை அமைச்​சர் வீர​பாண்டி எஸ்.ஆறு​மு​கம் இந்த உழ​வர் சந்​தையை திறந்து வைத்​தார்.
 
அதே வளா​கத்​தில் ரூ.11 லட்​சம் செல​வில் பொரு​ளீட்டு கிடங்​கும்,​ ரூ.2.75 லட்​சம் செல​வில் உளர்​க​ள​மும் அமைக்க அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. அடிக்​கல் நாட்​டி​ய​தோடு சரி இன்று வரை கிடங்​கும்,​ உலர்​க​ள​மும் அமைக்​கப்​ப​ட​வில்லை. மொத்​தம் 28 கடை​க​ளு​டன் உழ​வர் சந்தை தொடங்​கப்​பட்டு சில மாதங்​களே இயங்​கி​யது. ஊர் எல்​லை​யில் உள்​ள​தால் பொது​மக்​கள் யாரும் வாங்க வரா​த​தால் வியா​பா​ரி​கள் உழ​வர் சந்​தைக்கு வரு​வதை நிறுத்தி விட்​ட​னர். அன்றி​லி​ருந்து 9 ஆண்​டு​க​ளாக உழ​வர்​சந்தை இயங்​கா​மல் உள்​ளது.÷தற்​போது ஆட்​சி​ய​ரின் கண்​டிப்​பான உத்​த​ர​வின் பேரில் சிதம்​ப​ரம் உழ​வர் சந்​தை​யில் திங்​கள்​கி​ழமை முதல் 5 கடை​கள் அமைக்​கப்​பட்டு புதுப்​பொ​லி​வு​டன் இயங்​கின. மேலும் கூடு​த​லான கடை​களை அமைக்க வேளாண் வணிக துணை இயக்​கு​நர் தன​வேல் உழ​வர் சந்​தையை திங்​கள்​கி​ழமை ஆய்வு மேற்​கொண்​டார். வேளாண் அலு​வ​லர்​கள் சித்ரா,​ அமுதா,​ வேலு,​ கலி​ய​மூர்த்தி உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.

Read more »

ஆக்​கி​ர​மிப்பு அகற்ற முயற்சி விவ​சாய சங்​கம் மறி​யல்

பண் ​ருட்டி,​ டிச. 1: ​ ​
 
 
     பண்​ருட்டி அருகே நெடுஞ்​சாலை பகு​தி​யில் ஆக்​கி​ர​மிப்பு கட்​டப்​பட்​டி​ருந்த வீடு​களை நெடுஞ்​சா​லைத் துறை​யி​னர் செவ்​வாய்க்​கி​ழமை அகற்ற முயற்​சித்​த​னர். இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து விவ​சாய சங்​கத்​தி​னர் மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.
 
பண் ​ருட்டி வட்​டம்,​ ஏரிப்​பா​ளை​யம் கேட் அருகே நெடுஞ்​சாலை ஓரம் உள்ள பகு​தியை 7 பேர் ஆக்​கி​ர​மிப்பு செய்து வீடு​கள் கட்டி பல ஆண்​டு​க​ளாக வசித்து வரு​கின்​ற​ன​ராம்.
 
இ​தை​ய​டுத்து,​ இந்த ஆக்​கி​ர​மிப்பு வீடு​களை அகற்ற வலி​யு​றுத்தி,​ அதன் அருகே உள்ள நிலத்​தின் உரி​மை​யா​ளர் சிவ​னே​சன்,​ நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம் ஆக்​கி​ர​மிப்பு வீடு​களை அகற்ற உத்​த​ர​விட்​டது.
 
இ ​தைத் தொடர்ந்து,​ ஆக்​கி​ர​மிப்பு வீடு​களை அகற்ற நெடுஞ்​சா​லைத் துறை​யி​னர் பொக்​லைன் இயந்​தி​ரம் மற்​றும் பணி​யா​ளர்​க​ளு​டன் செவ்​வாய்க்​கி​ழமை முயற்​சித்​த​னர்.
 
இ​தற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்த பாதிக்​கப்​பட்ட மக்​க​ளும்,​ விவ​சாய சங்​கத்​தி​ன​ரும் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.
 
இந்த போராட்​டத்​துக்கு விவ​சாய தொழி​லா​ளர் சங்க வட்​டச் செய​லர் எஸ்.கே. ஏழு​மலை தலைமை வகித்​தார். வட்​டத் தலை​வர் உத்​தி​ரா​பதி,​ புரட்சி பார​தம் மாவட்​டத் தலை​வர் தெய்​வீ​க​தாஸ்,​ ஊராட்​சித் தலைவி ரீனா மணி​வண்​ணன் ஆகி​யோர் ​ சாலை மறிய​லில் பங்​கேற்​ற​னர்.
 
த​க​வ​ல​ றிந்த கோட்​டாட்​சி​யர் செல்​வ​ராஜ்,​ வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​ டிஎஸ்பி.,சிரா​ஜு​தீன்,​ நெல்​லிக்​குப்​பம் காவல் நிலைய ஆய்​வா​ளர் பாண்​டி​யன் மற்​றும் போலீ​ஸôர் அங்கு விரைந்து சென்று பொது​மக்​களை சம​ரச பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​ட​னர்.​
 
இ​தில் ஆக்​கி​ர​மிப்​பா​ளர்​கள் 8 நாள்​க​ளுக்​குள் வீடு​களை தாங்​க​ளா​கவே காலி செய்​து​கொள்ள வேண்​டும். அவர்​க​ளுக்கு மாற்று இடம் அளிக்க பரிசீ​லிக்​கப்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டதை அடுத்து போராட்​டத்தை கைவிட்டு விவ​சாய சங்​கத்​தி​னர் கலைந்து சென்​ற​னர்.
 
இப் போராட்​டத்​தால் அப் பகு​தி​யில் ஏற்​பட்ட பதற்​றத்​தை​ய​டுத்து 50-க்கும் மேற்​பட்ட போலீ​ஸôர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​ட​னர்.

Read more »

பாம்புக்கடிக்கு ஆண்​டு​தோ​றும் 11 ஆயி​ரம் பேர் சாவு

கட ​லூர்,​ டிச. 1:​ 


பாம்பு கடித்து ஆண்​டு​தோ​றும் 11 ஆயி​ரம் பேர் இறக்க நேரி​டு​வ​தாக,​ தமிழ்​நாடு சுகா​தா​ரத் திட்ட கட​லூர் மாவட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் டாக்​டர் ஹஃ​பீ​ஸô தெரி​வித்​தார். ​

பாம்பு கடி​யால் பாதிக்​கப்​ப​டும் கிரா​மப்​புற மக்​க​ளுக்கு விரை​வில் சிகிச்சை கிடைப்​பது இல்லை. பல நேரங்​க​ளில் மாவட்​டத் தலைமை மருத்​து​வ​ம​னைக்​குக் கொண்டு வரு​வ​தற்கு ​தா​ம​தம் ஏற்​ப​டு​வ​தால் வழி​யி​லேயே பலர் இறக்க நேரி​டு​கி​றது. ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், தாலுகா அரசு மருத்​து​வ​ம​னை​க​ளில் பாம்பு கடிக்கு மருந்​து​கள் இருந்​தும் அவற்றை பயன்​ப​டுத்​து​வ​தில் மருத்​து​வர்​க​ளுக்​கும் செவி​லி​யர்​க​ளுக்​கும் போதிய பயிற்சி இல்​லா​மல் உள்​ளது.÷எ​னவே கட​லூர் மாவட்ட மருத்​து​வர்​கள் மற்​றும் செவி​லி​யர்​க​ளுக்கு தமிழ்​நாடு சுகா​தா​ரத் திட்​டம் சார்​பில் சிறப்​புப் பயிற்சி செவ்​வாய்க்​கி​ழமை அளிக்​கப்​பட்​டது. பயிற்​சிக்கு மருத்​து​வத்​துறை இணை இயக்​கு​நர் டாக்​டர் ஜெய​வீ​ர​கு​மார் தலைமை வகித்​தார். ​

நி​கழ்ச்​சி​யில் தமிழ்​நாடு சுகா​தா​ரத் திட்ட கட​லூர் மாவட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் டாக்​டர் ஹஃ​பீ​ஸô கூறி​யது:​ ​ கா​டு​கள் அழிக்​கப்​ப​டு​வ​தால் அங்​குள்ள பாம்​பு​கள் மற்​றும் விஷ ஜந்​துக்​கள் மக்​கள் வாழும் பகு​திக்​குள் வர நேரி​டு​கி​றது. ​ இந்​தி​யா​வில் ஆண்​டு​தோ​றும் 4 லட்​சம் பேர் பாம்​புக் கடிக்கு உள்​ளா​கி​றார்​கள். இவர்​க​ளில் 82 ஆயி​ரம் பேர் விஷப் பாம்​பு​கள் கடிக்கு உள்​ளா​கி​றார்​கள். இதில் ஆண்​டு​தோ​றும் 11 ஆயி​ரம் பேர் இறக்க நேரி​டு​கி​றது.

கி​ரா​மப் புறங்​க​ளில் பாம்பு கடிக்கு உள்​ளா​வோ​ருக்கு விரை​வில் சிகிச்சை அளிக்க தமி​ழ​கம் முழு​தும் உள்ள ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள் மற்​றும் தாலுகா மருத்​துவ மனை​க​ளில் பணி​பு​ரி​யும் மருத்​து​வர்​கள் மற்​றும் செவி​லி​யர்​க​ளுக்கு சிறப்​புப் பயிற்சி அளிக்​கப்​ப​டு​கி​றது. என்​றார் டாக்​டர் ஹஃ​பி​ஸô.÷க​ட​லூர் மாவட்​டத்​தில் 40 மருத்​து​வர்​கள் மற்​றும் 40 செவி​லி​யர்​க​ளுக்கு இந்​தப் பயிற்சி அளிக்​கப்​ப​டு​கி​றது. 4-ம் தேதி​வரை இந்​தப் பயிற்சி நடை​பெ​றும். பயிற்​சியை மருத்​து​வத்​துறை இணை இயக்​கு​நர் டாக்​டர் ​ ஜெய​வீ​ர​கு​மார் தொடங்கி வைத்​தார்.

Read more »

மார்க்​சிஸ்ட் ஆர்ப்​பாட்​டம்

கட ​லூர்,​ டிச. 1:​ 
 
     வங்​கக் கட​லில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்த கட​லூர் மீன​வர்​கள் மீது,​ இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் தாக்​கு​தல் நடத்​தி​ய​தற்​குக் கண்​ட​னம் தெரி​வித்து,​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யி​னர் கட​லூ​ரில் திங்​கள்​கி​ழமை மாலை ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். ​
 
 
க​ட​லூர் மீன​வர்​க​ளைத் தாக்​கிய இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் மீது நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். கடற்​கரை மேலாண்​மைச் சட்​டத்தை முழு​மை​யாக கைவிட வேண்​டும். ஆழ்​கட​லில் மீன் பிடிக்​கும் உரி​மை​யைப் பறிக்​கக் கூடாது ஆகிய கோரிக்​கை​க​ளுக்​காக இந்த ஆர்ப்​பாட்​டம் நடந்​தது. ​
 
மீன்​பி​டித் தொழி​லா​ளர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் வைத்தி​லிங்​கம் தலைமை தாங்​கி​னார். சங்க நிர்​வா​கி​கள் சுப்​பு​ரா​யன்,​ சந்​தி​ரன்,​ தங்​க​ராசு,​ தமிழ்​மா​றன் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர். ​ ​
 
மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் ஒன்​றி​யச் செய​லா​ளர் ஜி.மாத​வன்,​ நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன்,​ சி.ஐ.டி.யூ. மாவட்​டத் தலை​வர் கருப்​பை​யன்,​ மாவட்​டச் செய​லா​ளர் சுகு​மா​றன்,​ சிறப்​புத் தலை​வர் பாஸ்​க​ரன் மற்​றும் நிர்​வா​கி​கள் ஆள​வந்​தார்,​ கண்​ணன்,​ ​ ஊராட்சி ஒன்​றி​யக்​குழு உறுப்​பி​னர் தட்​சி​ணா​மூர்த்தி உள்​ளிட்ட பலர் பேசி​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior