உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 25, 2010

தமிழக சட்டப் பேரவைக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ல் வெளியீடு

             தமிழக சட்டப் பேரவைக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படுகிறது. பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான காரணம் தனித்தனியே தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

              சட்டப் பேரவைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் திருத்தங்கள் செய்வதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 13-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  விண்ணப்பங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதன்பின், கள விசாரணைக்காக வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்கள் கொடுக்கப்படும்.   படிவங்களில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிகளுக்குச் சென்று வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வர். இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, விண்ணப்பங்களை அளித்த மக்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

இணையதளத்தில் தகவல்: 

              வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் இருந்தோ அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் இருந்தோ (வருவாய்க் கோட்டாட்சியர்கள், மாநகராட்சிப் பகுதிகளில் மண்டல அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள்) அறிந்து கொள்ளலாம்.  இந்த விவரங்களை http://elections.tn.gov.in  அல்லது http://ceotamilnadu.nic.in என்ற இணையதளங்களிலும் காணலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை முகவர்களும் இந்த நடவடிக்கைளின் போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவலாம்

ஜனவரி 5-ல் வெளியீடு: 

                சரிபார்ப்புப் பணிகள் முடிவுற்ற பின்னர், ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதான இறுதி உத்தரவுகள் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்படும். இதன்பின், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 

              இந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பின், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது அளிக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அந்தந்த விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெயர் சேர்க்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தபால் மூலம் தெரிவிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கனமழை : தத்தளிக்கும் கடலூர் நகரம்


வடிகால் வசதி இல்லாததால், வன்னியர் பாளையம் பகுதியில் வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீர். வடிகால் வாய்க்கால்கள் அடைப்பட்டு கிடப்பதால் மழைநீர் தேங்கி, ஏரி போல் காட்சி அளிக்கிறது
 
கடலூர்:

          வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டெல்டா பாசனப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

                பகல் நேரத்தில் சற்று வெயில் காய்வதும், மற்ற நேரங்களில் மேகமூட்டத்துடன் மழை பெய்வதுமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. காலை 8 மணி வரையிலும் மழை நீடித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

                  கடலூரில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் பெருமளவுக்குத் தேங்கி உள்ளது. கடலூரில் முறையான மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால், சரவணன் நகர், துரைசாமி நகர், புதுநகர், கே.கே.நகர், வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், எஸ்.எஸ்.ஆர். நகர், வரதராஜன் நகர், ரட்சகர் நகர், கூத்தப் சுப்புராயன் நகர் உள்ளிட்ட ஏராளமான நகர்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

               சாலைகள் அபரிமிதமாக உயர்த்தப்பட்டப் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகத் தொடங்கி இருக்கிறது. ஏராளமான மாநில நெடுஞ்சாலைகளும், தேசிய நெடுஞ்சாலையும் சேதம் அடைந்து வாகனப் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.வீராணம் ஏரியின் நீர் மட்டம் 45.5 அடி (மொத்த உயரம் 47.5 அடி), வீராணம் நேரடி பாசனப் பகுதிகளுக்கு 15 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மற்ற ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

              வாலாஜா ஏரியில் இருந்து 1,509 கனஅடியும், பெருமாள் ஏரியில் இருந்து 2,215 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 12,466 கனஅடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது.

புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின் அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:

அண்ணாமலை நகர் 45 
கொத்தவாச்சேரி 42 
காட்டுமன்னார்கோயில் 41 
சிதம்பரம் 38 
லால்பேட்டை 33 
கடலூர் 32.7 
புவனகிரி 24 
வானமாதேவி 20.3 
சேத்தியாத்தோப்பு 20 
பண்ருட்டி, 19 
குப்பநத்தம் 2.6 
காட்டுமயிலூர் 12 
ஸ்ரீமுஷ்ணம் 10 
வேப்பூர் 9, 
பெலாந்துரை
விருத்தாசலம் 7
பரங்கிப்பேட்டை 19 
தொழுதூர் 8

Read more »

சிதம்பரம் நகரில் ஓராண்டாகியும் முடிவுறாத வடிகால் பாலப்பணி


சிதம்பரம் கோவிந்தசாமிதெருவில் பாதியில் நிறுத்தப்பட்ட தில்லையம்மன் வடிகால் வாய்க்கால் பாலம்.
 
சிதம்பரம்: 

              சிதம்பரம் நகரில் வடிகால் பாலம் அமைக்கும் பணி தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் முடிவுறாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

               வெள்ளச் சேதத்தை தடுத்த நகர்மன்ற உறுப்பினர் இரா.வெங்கடேசன் கோரியதன் பேரில் சிதம்பரம் பஸ் நிலையம் அருகாமையில் உள்ள கோவிந்தசாமித் தெருவில் ஓராண்டுக்கு முன் ரூ.33 லட்சம் செலவில் தில்லையம்மன் வடிகால் வாய்காலின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

               பாலம் அமைப்பதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றுவது உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமானது.  பின்னர் அதற்கு தீர்வு ஏற்பட்டு தற்போது ஒப்பந்தக்காரரால் பணி விரைந்து முடிக்கப்படாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாலம் அமைக்கும் பணியினால் கோவிந்தசாமித் தெரு முற்றிலும் துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களும், அச்சாலை வழியாக முத்தையாநகர், மீதிகுடி, கோவிலாம்பூண்டி, சிதம்பரம்நாதம்பேட்டை மற்றும் பல்வேறு நகர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பல்வேறு சாலைகள் வழியாக சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.

                தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பாலத்தின் கட்டமைப்பின்மீது நீர் சூழ்ந்து குட்டை போல் காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதியில் நீர்வடிய வாய்ப்பில்லாததால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. எனவே தில்லையம்மன் வடிகால் வாய்க்கால் பாலத்தை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

தோட்டக்கலைப் பயிர்களுக்கு வளம்தரும் புதிய பாசனமுறை

பெரியப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குழாய் நீர்ப்பாசனமுறை. (உள்படம்) இம்முறையை செயல்படுத்தி வெற்றி கண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ரங்கராமானுஜம்

சிதம்பரம்: 

             தோட்டக்கலை பயிர்கள் அருகில் பிளாஸ்டிக் குழாய்களை சொருகி, அதில் நீர் ஊற்றி செய்யப்படும் புதிய பாசனமுறை, சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: 

               மழை இல்லாத காலங்களில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க மண் பானை வாயிலான நீர்ப் பாசனம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முறையில் நடைமுறைப் பிரச்சனைகள் காணப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை பிரிவு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரங்கராமானுஜம், பெரியப்பட்டு கிராமத்தில் இந்த புதிய நீர்ப்பாசன முறையை தனது ரங்கா உயர் தொழில்நுட்ப பண்ணையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளார்.

               இந்த புதிய நீர்ப் பாசன முறையில் பானைகளுக்கு பதிலாக நீண்ட பிளாஸ்டிக் குழாய்கள் (குழாய்களின் அடியில் சிறிதாக பல ஓட்டைகள் போடப்பட்டுள்ளன) தோட்டக்கலை பயிர்களுக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதைக்கப்படும் குழாய்களில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. சிறிய ஓட்டைகள் வாயிலாக தண்ணீர் மெதுவாக தோட்டக்கலை பயிர்களின் வேர்ப் பகுதிக்கு சென்று சேர்வதால் மரங்கள் கடுமையான இயற்கை சீற்றங்களையும் தாண்டி வளர முடிகிறது.

                அதிகளவு மழை பெய்யும் சமயத்தில் ஒருவரே எளிதாக இந்த பிளாஸ்டிக் குழாய்களை தங்களின் கைகளால் வெளியே எடுத்து விடலாம். இந்த பாசன முறையில் அதிகளவு வேளாண் தொழிலாளர்கள் தேவையில்லை. பிளாஸ்டிக் குழாய்கள் எளிதாக உடைந்து விடாது. எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை கடுமையான வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் மீண்டும் பொருத்தலாம்.பிற பயன்கள்: பழைய பிளாஸ்டிக் குழாய்கள், உடைந்த குழாய்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் பெற்று நீர்ப்பாசன முறையை நடைமுறைப்படுத்தலாம். 

                   பிளாஸ்டிக் வாயிலாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்த்து அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தலாம். குறைந்த செலவில் சிறந்த பாசன முறை வாயிலாக இயற்கை சீற்றங்களில் இருந்து நீண்டகால தோட்டக்கலை மரங்களை பாதுகாக்கவும், மகசூலைப் பெருக்கவும் முடியும். எனவே தமிழக விவசாயிகள் தங்களது தோட்டக்கலை பயிர்களுக்கு இப் புதிய நீர்ப் பாசன முறையை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்றார் ராஜ்பிரவீன்.

Read more »

நெற்பயிரைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோய்


பாக்டீரியா இலைக்கீற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர் .
 

            தற்போது பயிரிடப்பட்டுள்ள பிபிடி 5204, ஏடிடி 39 போன்ற நெல் ரகங்களில் பாக்டீரியா இலைக் கீற்று நோய்த் தாக்குதல் அதிகளவில் உள்ளது.

               இத்தாக்குதலில் இருந்து பயிரைக் பாதுகாக்கும் முறை குறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் கோ.வி.ராமசுப்பிரமணியம் தலைமையில், உதவிப் பேராசிரியர்கள்  விவசாயிகளுக்கு வழிமுறைகளை விளக்கி வருகின்றனர். 

பாக்டீரியா இலைக் கீற்று நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து உதவிப் பேராசிரியர் சுமதி கூறும் போது, 

                "நெல் பயிரை இலைக் கீற்று நோய்த் தாக்கும் போது சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். உதாரணமாக ஆரம்ப நிலையில் இலையின் சிறு நரம்புகளுக்கிடையில் நீர்க்கசிவான கீற்றுக்கள் தோன்றி பின்னர் இலை செம்பழுப்பு நிறமாக மாறும். இலைக் கீற்றுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இலைகள் முழுவதும் பரவி பின்னர் இலைகள் காய்ந்து விடும். இதுபோல் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை கீழ்கண்ட முறைகளில் பாதுகாக்கலாம்

பாதுகாப்பு முறைகள்:  

                நோய் தோன்றியுள்ள வயல்களில் இருந்து மற்ற வயல்களுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. நோய் தாக்கிய பயிரில் இருந்து விதைகளை சேகரிக்கக் கூடாது. மண் பரிசோதனை செய்து அதன்படி தழைச்சத்து உரமிட வேண்டும். இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கோசைட் 200 கிராம் அல்லது 18 கிராம் ஸ்ட்ரெப்டோ சைக்கிளின் அல்லது ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்டுடன் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து நோயின் தீவிரத்துக்கு ஏற்ப ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தெளிக்க வேண்டும். இதுபோன்ற முறைகளை விவசாயிகள் கையாண்டால் நோயை கட்டுப்படுத்தி லாபமடையலாம்' என்றார்.

Read more »

என்எல்சிக்கு வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 6 கோடி இழப்பீடு

நெய்வேலி:

              என்எல்சி விரிவாக்கப் பணிகளுக்கு வீடு நிலம் வழங்கிய உரிமதாரர்களுக்கு ரூ. 6 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை, லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் மூலம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

             என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக, நிறுவனம், நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை லோக்அதாலத் மூலம் வழங்கி வருகிறது. அதன்படி நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான், உய்யக்கொண்டராவி, மணகதி மற்றும் கம்மாபுரம் பகுதியில் நிலம் வழங்கிய 255 நில உரிமதாரர்களுக்கு ரூ. 6 கோடி மதிப்பில் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டன.

                 இதற்கான நிகழ்ச்சி என்எல்சி பயிற்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நெய்வேலி சார்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவிபாஸ்கர், மாவட்ட நீதிபதி ஏ.எஸ்.ராஜா, என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி மற்றும் சுரங்க இயக்குநர் பி.சுரேந்திரமோகன் உள்ளிட்டோர் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர்.இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்எல்சி நில எடுப்புத் துறை பொது மேலாளர் என்.எஸ்.ராமலிங்கம், வீரசிகாமணி, முருகேசன், கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு, தமிழக அரசு ரூ. 16.15 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
  
கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                 தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு சாலைத் திட்டத்தில் ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் சிமென்ட் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க ரூ. 16.15 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

                கடலூரில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தி உள்ள பகுதிகளில், முதல் கட்டமாக 40 சாலைகள் அமைக்க ரூ. 10.18 கோடியும், 2-ம் கட்டமாக 75 சாலைகள் அமைக்க ரூ. 10.32 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணி ஆணைகளை நகராட்சித் தலைவர் து.தங்கராசு வழங்கினார். பணிகளை உடனே தொடங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

               மழை காலமாக இருப்பதால் தார்ச் சாலைப் பணிகள் 15-12-2010-க்கு பிறகு தொடங்க அறிவுறுத்தப்பட்டது. பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் ரூ. 1.33 கோடியில் தார்ச் சாலைகளும், ரூ. 1.39 கோடியில் சிமென்ட் சாலைகளும் அமைக்க பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. பணிகளை உடனே தொடங்க உத்தரவிடப்பட்டது தார்ச் சாலைப் பணிகள் டிசம்பர் 15-க்கு மேல் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

                  விருத்தாசாலம் நகராட்சியில் சிமென்ட் சாலைகள் ரூ. 80.10 லட்சத்திலும், தார்ச் சாலைகள் ரூ. 150.23 லட்சத்திலும் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ. 1.02 கோடியில் தார்ச் சாலைகள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது.சிதம்பரம் நகாரட்சியில் சி.ஆர்.ஐ.பி.சி. திட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 65  லட்சத்தில் மேலரத வீதி, சாலைப் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. 

                   மேலும் இதே திட்டத்தில் சாலைப் பணி மற்றும் ரவுண்டானா மேம்பட்டுப் பணிகள் ரூ. 2.5 கோடியில் மேற்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் 31-3-2011-க்குள் நிறைவடையும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

திட்டக்குடி அருகே சமுதாய நல கூடத்தில் பள்ளி இயங்கும் அவலம்

திட்டக்குடி :

             திட்டக்குடி அருகே அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதுமின்றியும் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். 

               அடுத்த பெருமுளை ஊராட்சியில் வ.உ.சி. அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கடந்த 1954 முதல், கூரை கொட்டகையில் இயங்கி வந்தது. இப்பள்ளியை அதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான ராமசாமி நிர்வகித்து வந்தார். இங்கு பெருமுளை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கூரை கொட்டகையில் இயங்கி வந்த தொடக்கப்பள்ளி, கும்பகோணம் தீ விபத்து எதிரொலிக்குப்பின் ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய நல கூடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

                  தற்போது இக்கட்டடத்தில் மின் இணைப்பு, குடிநீர், கழிப்பிடம், சமையலறை என எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இப்பள்ளி மாணவர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., சார்பில் வழங்கப்பட்ட கல்வி உபகரணங்கள் அனைத்தும் மின்வசதியின்றி பாழாகி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கலெக்டர் சீத்தாராமன் இப்பள்ளியை ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை வசதிகளை விரைந்து சீரமைக்கவும், பழுதான நிலையிலுள்ள சமையலறையை புதுப்பித்து பாதுகாப்பாக உணவு தயாரிக்க வேண்டுமென ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் எச்சரித்தார்.

                     ஆனால் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவு தயாரிக்கப்படும் இடம், தொற்று நோய்களின் பிறப்பிடமான மகளிர் சமுதாய நலக்கூட வாசலில் தான் நடக்கிறது. 

இதுபற்றி அப்பள்ளியை நிர்வகித்து வரும் ராமசாமி கூறுகையில், 

                      "கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டுமென கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு கல்வித்துறையிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. பெருமுளையை சேர்ந்த தனிநபர் ஒருவர், அரசே பள்ளியை ஏற்று நடத்த வேண்டுமென கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கல்வித்துறை பள்ளியை நடத்தவும், ஆறு மாத காலத்திற்குள் கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க உத்தரவிட்டு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது' என்றார். 

                  கிராமப்புற ஏழை மாணவர்களின் நலன் கருதி முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு, கல்வித்தொகை முழுமையாக இலவசம், லேப்- டாப், இலவச சைக்கிள், பஸ் பாஸ் என பல்வேறு சலுகைகளும், எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம் செயல் வழிக்கற்றல் உள்ளிட்ட பல்வேறு பாடத் திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. 

                      ஆனால் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பயின்று வரும் மாணவர்கள் குறித்து கிராம மக்கள், பெற்றோர்கள் தரப்பிலிருந்து பலமுறை புகார் தெரிவித்தும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது பள்ளி இயங்கி வரும் சமுதாய நலக்கூடமும் பழுதான நிலையில் உள்ளதால் மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக் குறியாகவே உள்ளது.

Read more »

சிதம்பரத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது

சிதம்பரம் : 

               சிதம்பரம் இருவழிச் சாலையாக உள்ள சிதம்பரம் மேலவீதியை பல்வழிச் சாலையாக மாற்ற 65 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி துவங்கியது. 

                 சுற்றுலா தலமான சிதம்பரத்தில் புகழ் பெற்ற நடராஜர் கோவில் இருப்பதாலும்,  பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம் இருப்பதாலும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதற்கேற்ப சிதம்பரம் நகரை சிங்கார சிதம்பரமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் போடப்பட்டது. ஆனால் முழுமையாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பல தடைகளைத் தாண்டி நகரில் நடைபாதை, பூங்காக்கள் அமைக்கப்பட்டு அவைகள் பராமரிக்கப்படாமல் போனது.

              இருந்தும் தற்போதைய கலெக்டர் சீத்தாராமன் சிதம்பரம் நகரை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அந்த முயற்சியின் ஒரு கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருவழிச்சாலையாக உள்ள சிதம்பரம் மேலவீதி, போல்நராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம் - கவரப்பட்டு, சிதம்பரம் - டி.எஸ்.பேட்டை ஆகிய சாலைகள் பல்வழிச் சாலைகøளாக மாற்றப்படுகிறது. முதற்கட்ட பணியாக சிதம்பரம் மேலவீதி ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தும்  பணி நேற்று துவங்கியது.

                  இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே நடந்தது. ஆர்.டி.ஓ., ராமராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சீனுவாசன், தாசில்தார் காமராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில் உதவி பொறியாளர் தவராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், சப் இன்ஸ்பெக்டர் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை செறிவூட்ட ரூ.1.55 கோடி ஒதுக்கீடு

திட்டக்குடி : 

                நிலத்தடி நீரை செயற்கையாக செறிவூட்ட 1.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி 29.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை சீரமைப்பு பணி நடந்து முடிந்தது. 

                 தற்போது பெய்து வரும் பருவமழை நீர் வெள் ளாற்று வழியாக தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வெலிங்டன் ஏரிக்கு திருப்பி விடப்பட்டு நீர்ப்பிடிப்பு செய்யப்படுகிறது. நேற்று தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 1,060 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. மதியம் 12 வரை வெலிங்டன் ஏரியில் 1,038.38 மில்லியன் கன அடி நீர்ப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் கூறியது: 

                    வெலிங்டன் ஏரி கரை சீரமைப்பு பணி நிறைவு பெற்று நீர்ப்பிடிப்புடன் காண்பதால் மனநிறைவு ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் ஏரியின் முழு உயரத்தில் 24 அடி நீர்ப்பிடிப்பு செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதன்பின் கலெக்டரிடம் அனுமதி பெற்று தண்ணீர் திறந்து விடப்படும். ஷட்டர்கள், வாய்க்கால்களை பழுது நீக்கவும், தேவைப்படின் புதுப்பிக்கவும் 70 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி பெறப்பட்டுள்ளது.
 
               கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏதும் இல்லை. மொத்தமுள்ள 420 ஏரிகளில் 97 ஏரிகளில் மட்டுமே முழுமையாக தண்ணீர் நிறைந்துள்ளது. 105 ஏரிகளில் 75 சதவீதமும் மீதமுள்ள ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் நிறைந்துள்ளது. வெள்ளாறு, கெடிலம் ஆற்றுப்பகுதிகளில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்க 233 கோடி ரூபாய்க்கு நாளை டெண்டர் அறிவித்து, டிசம்பர் 30ல் தெரிவிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும். நீர்வளம், நில வள திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள அரசாணை பெறப்பட்டுள்ளது. 

              உலக வங்கி நிதியுதவியுடன் 40 லட்சம் ரூபாயில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி, வடலூர் மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் இப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு விவசாயிகளின் பங்களிப்பு அவசியம் தேவை. நிலத்தடி நீரை செயற்கையாக செறிவூட்ட பண்ருட்டி அடுத்த கீழிருப்புக்கு  40 லட்சமும், சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு பகுதிக்கு 1 கோடியே 15 லட்சமும் நிதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு நஞ்சன் தெரிவித்தார்.

Read more »

அண்ணாமலை பல்கலை.யில் புதிய பாடம் அறிமுகம்: கவர்னர் பர்னாலா விண்ணப்பம் வெளியிட்டார்

சிதம்பரம்:
 
                   இந்திய நீரழிவு நோய்க்கான ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை டாக்டர் ராமச்சந்திரா நீரழிவு மருத்துவமனையுடன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

               நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலை கழக வேந்தரும் தமிழக ஆளுனருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு போஸ்ட் டிப்ளமோ இன் கிளினிக்கல் டயபெடொலஜி என்ற புதிய படிப்புக்கான விண்ணப்பத்தை வெளியிட்டார். தொலைதூரக் கல்வி வாயிலாக கற்பிக்கப்படும் இப்படிப்பானது அதிக நீரழிவு நோயாளிகள் உருவாகாமல் இருப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. உலகிலேயே இந்தியாவில் தான் அதிக நீரழிவு நோயாளிகள் உள்ளனர். இப்படிப்பினை கற்பதினால் நோயாளி களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கு உதவுவதுடன் அதிகம் இந்நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

இதுபற்றி அண்ணா மலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ம.ராமநாதன் கூறியது:
 
               உலக சுகாதார அமைப்பு புள்ளி விபரத்தில் தற்போது இந்தியாவில் 50 மில்லியன் உள்ள நீரழிவு நோயாளிகள் வரும் 2030-ம் ஆண்டில் 80 மில்லியனாக உயரக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. இந்த நோய்க்கான மூலாதாரம் மற்றும் எதிர்த்து போராடக்கூடிய வல்லமை கொண்ட சத்துணவு மட்டுமின்றி பொருளாதாரம் மற்றும் மருத்துவ ரீதியாக இயன்ற அளவு இந்நோயை கட்டுப்படுத்துவதற்கும் இப்படிப்பு உதவுகிறது என்று கூறினார். சமூக விழிப்புணர்வு பாடத்தை அறிமுகப்படுத்திய ஐ.டி.ஆர்.எப். இயக்குனருக்கு அவர் பாராட்டை தெரிவித்தார்.

                        டாக்டர் ஏ. ராமச்சந் திரன் வரவேற்றார். தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குனர் டாக்டர் எஸ்.பி. நாகேஸ்வரராவ், அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவ புல முதல்வர் பேராசிரியர் என். சிதம்பரம், டாக்டர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more »

Work on to protect railway track

CUDDALORE:

              A railway track running along the banks of the Vellar in the Killai-Parangipettai section near Chidambaram is facing the threat of erosion whenever the river is in spate. Therefore, to safeguard the track from possible flood damage, a protective wall of palmyra trunks on the banks is being erected. The State government has sanctioned a sum of Rs. 92 lakh for the purpose. Chief Engineer of Water Resources Department T. Anbalagan, who visited Cuddalore, inspected the work. He urged officials to expedite the work as the Vellar was getting augmented flow.

Read more »

Call to control price variations of lignite

CUDDALORE: 

            Chairman-cum-Managing Director of Neyveli Lignite Corporation A.R. Ansari has said that it is difficult to supply lignite at fixed prices to industries because this factor is controlled by the Central Electricity Regulatory Commission.

           Moreover, the prices are also determined by stripping ratio and groundwater control. The price of lignite is going up owing to higher compensation to be paid to land providers and increased prices of specialised mining equipment and their maintenance, Mr. Ansari said. A statement from the NLC said that Mr. Ansari was addressing the inaugural meeting of the Regional Coal Consumers' Council (RCCC), constituted by the Union Ministry of Coal, in his capacity as its chairman at the NLC corporate office at Neyveli on Tuesday.

         Representatives of big, small and tiny industries participated in the meeting. They put forth the demands that price variations in lignite should be controlled to the possible extent, quality assurance given, supply be carried out through Fuel Supply Agreement (FSA) and the lifting time for lignite increased. Mr. Ansari said that low grade lignite should be consumed first and high grade fuel conserved for the future. For effecting the sale through the FSA, it might require a dedicated mine for which the approval of the Union Ministry of Coal was a must.

          He ruled out the possibility of extending the FSA system to consumers because small buyers, particularly in the brick kiln industry, were facing difficulties in importing the fuel.
A statement from the NLC said that the main objectives of the Council were to look into the grievances of the consumers, their lignite requirements and supply of lignite in a transparent manner to the genuine buyers. After utilisation of lignite for its power plants, the NLC had been selling lignite to the cement, chemical, sugar, paper and brick industries. In all, 10 big industries and 57 small and tiny units were participating in the e-auction for lignite.

          The NLC had been supplying 19 lakh tonnes of lignite annually to a private power plant at Neyveli. NLC directors B.Surender Mohan (Mines) and R.Kandasamy (Planning and Projects) and representatives of the industries were present.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior