உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 08, 2011

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ( டிசம்பர் 2010 ) முடிவுகள் வெளியீடு


அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளுக்கு டிசம்பர் 2010 தேர்வுகள் நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  

 கீழ்காணும் பாடபிரிவுகளுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 







  • B.A.L. (E.M.)













  • B.G.L. (E.M.)













  • B.L.I.S. (E.M.)












  • M.A. Sociology (E.M. & T.M.)









  • M.A. Economics (E.M. & T.M.)










  • M.A. Business Economics (E.M. & T.M.)










  • M.A. Environmental Economics (E.M. & T.M.)









  • M.A. History & Heritage Management (E.M. & T.M.)










  • M.A. History & Tourism Management (E.M. & T.M.)









  • M.A. Population Studies (E.M. & T.M.)










  • M.A. Political Science (E.M. & T.M.)









  • M.A. International Relations (E.M. & T.M.)










  • M.A. Police Administration (E.M. & T.M.)






  • M.A. Linguistics (E.M. & T.M.)









  • M.A. Translation Studies (E.M.)







  • M.A. Human Rights








  • M.A. Disaster Management







  • M.A. Rural Management










  • M.B.A. E-Business (E.M.)










  • M.B.A. International Business (E.M.)













  • M.B.A. Human Resource Management (E.M.)













  • M.B.A. (2 Years E.M.)













  • M.B.A. (2 Years T.M.)













  • M.B.A. Applied Management













  • M.B.A. Design Management













  • M.B.A. Retail Management













  • M.B.A. Global













  • M.B.A. Safety Management













  • M.B.A. Online













  • M.Com. (E.M. & T.M.)













  • M.Com. Co-op. Management (E.M. & T.M.)













  • M.Com. Banking & Insurance Management (E.M. & T.M.)













  • M.Com. Computer Applications (E.M.)













  • M.Com. Education Management (E.M.)













  • M.Com. Entrepreneurship













  • M.Com. Marketing













  • M.H.Sc Applied Ergonomics













  • M.H.Sc Public Health













  • M.H.Sc Physiotherapy













  • M.H.Sc Occupational Physiotherapy













  • M.H.Sc Applied Ergonomics













  • M.L.I.S. (E.M.)













  • M.L.M. (E.M.)













  • M.Phil. Philosophy













  • M.Phil. Botany













  • M.Sc. Mathematics (E.M.)













  • M.Sc. Zoology (E.M.)













  • M.Sc. Botany (E.M.)













  • M.Sc. Electronic Science (E.M.)













  • M.Sc. Geoinformatics (E.M.)













  • M.Sc. Mathematics Lateral Entry-II Year













  • M.Sc. Zoology Lateral Entry-II Year













  • M.Sc. Information Techonology













  • M.Sc. Bioinformatics













  • M.Sc. Information Techonology Lateral Entry-II Year













  • MHRM













  • P.G.Diploma in Advertising (E.M.)













  • P.G.Diploma in Co-op. Management (E.M. & T.M.)













  • P.G.Diploma in Hospital Management (E.M.)













  • P.G.Diploma in Library Automation & Networking













  • P.G.Diploma in Health Science in Public Health













  • P.G.Diploma in Human Resource Management













  • P.G.Diploma in Banking and Insurance













  • P.G.Diploma in Finance and Taxation













  • P.G.Diploma in Advertising and Salesmanship













  • Diploma in Accounting & Finance (E.M.)













  • Diploma in Computer Applications













  • Diploma in Youth & Dev. Work(CYP-HRD)













  • C.L.I.S. (E.M. & T.M.)













  • Pre-Foundation Programme













  • Foundation Programme (E.M. & T.M.) I Year













  • Foundation Programme (E.M. & T.M.) II Year








  • Read more »

    நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாமக சார்பில் வேல்முருகன் போட்டி

    நெய்வேலி:
            தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் கடலூர் மாவட்டத்தில் இருந்த நெல்லிக்குப்பம் தொகுதி நீக்கப்பட்டு, நெய்வேலித் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.  
                கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை குறிஞ்சிப்பாடித் தொகுதியிலிருந்த நெய்வேலி நகரம் தற்போது, பெரும்பாலான பண்ருட்டி ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கி நெய்வேலி தொகுதியாக உருவெடுத்துள்ளது.  மாவட்டத்திலேயே குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்ட தொகுதி நெய்வேலித் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 807.  
                   இதில் 83 ஆயிரத்து 277 ஆண் வாக்காளர்களும், 78 ஆயிரத்து 530 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.  ÷இந்தத் தொகுதியில் உள்ள ஒரு சிறப்பம்சம், நெய்வேலித் தொகுதிக்கு உட்பட்ட நெய்வேலி நகரத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டு பராமரித்து வருவதால், தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை, நெய்வேலி நகருக்கென ஒதுக்கவேண்டிய அவசியமில்லை. 
                 மேலும் பெரும்பாலானவர்கள் என்.எல்.சி. ஊழியர்களாக இருப்பதால், சட்டமன்ற உறுப்பினரை அதிக அளவில் யாரும் சந்திக்க வரமாட்டார்கள். எனவே சுலபமாக 5 ஆண்டுகளை கடத்திவிடலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் தலைவர்களிடையே நிலவுவதால் நெய்வேலித் தொகுதியை பெறுவதில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.  
     
                திமுக சார்பில் தற்போதைய நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.வான சபா.ராஜேந்திரன், அதிமுக சார்பில் சொரத்தூர் ராஜேந்திரன், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு அணியைச் சேர்ந்த சி.டி.மெய்யப்பன், சிதம்பரம் அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், பாமக சார்பில் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சேகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நெய்வேலித் தொகுதியை எப்படியாவது பெற்றேத் தீரவேண்டும் என அந்தந்தக் கட்சித் தலைமையிடம் போராடி வருகின்றனர்.  
                     இது தவிர்த்து அந்த்ந்தக் கட்சியைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் நெய்வேலித் தொகுதியை பெற்றுவிட முனைப்புக் காட்டுகின்றனர்.  ஒரே கூட்டணியில் உள்ள திமுகவும், பாமகவிற்கும் இடையே நெய்வேலியை பெறுவதில் மிகுந்த போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் பாமகவைச் சேர்ந்த வேல்முருகன் கடந்த 2 ஆண்டுகளாகவே நெய்வேலித் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.  ஆனால் திமுகவினரோ, நெய்வேலியே பாமக தவிர்த்து வேறு யாருக்கு ஒதுக்கினாலும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாகக் கூறிவருவதால் பாமகவினர் மிரட்சியாகக் காணப்படுகின்றனர்.

    Read more »

    குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி : சுகாதார அமைச்சரின் சாதனைகள்









    கடலூர் :


                    வன்னியர் வாக்கு வங்கி நிறைந்த பகுதிகளில் கடலூர் மாவட்டமும் ஒன்று. வன்னியர் சங்கம் தோன்றிய காலத்தில் தி.மு.க.-வின் செல்வாக்கு மாவட்டத்தில் குறைந்தபோது, ‘நானும் ஒரு வன்னியர்தான்’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, சரிந்த செல்வாக்கை சரிக்கட்டியதில் பெரும்பங்கு வகித்தவர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. தி.மு.க.வில் சாதாரண உறுப்பினராக இருந்த எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அதன்பிறகுதான் சேர்மன், எம்.எல்.ஏ. என பதவிகள் பெற்றதோடு, கட்சியில் தனது செல்வாக்கையும் உயர்த்திக்கொண்டார். கலைஞரின் தளகர்த்தர்களில் ஒருவராகவும் உயர்ந்தார்

                இந்த செல்வாக்கை பயன்படுத்தி 90-களிலதனது மகனை சிதம்பரம் தொகுதியில் நிறுத்தினார் எம்.ஆர்.கே. ஆனால், முதல் பரீட்சையில் மகன் தோல்வியடைய.... அடுத்து வந்த தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக ஆனார் எம்.ஆர்.கே.வின் மகன். பிறகு, அமைச்சரும் ஆகிவிட்டார். அவர்தான் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


    சுகாதார அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தொகுதி ஆரோக்கியமாக இருக்கிறதா?

    குறிஞ்சிப்பாடியின்  டீ கடை நடத்தும் ஏழுமலை.
                
                 “சாலை வசதியே இல்லாத குறிஞ்சிப்பாடி தொகுதியில இன்றைக்கு அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதியோட பஸ் போக்குவரத்தும் இருக்கு. இதுக்கு முழு காரணம் எங்க அமைச்சர்தான். மத்திய அரசின் கல்விக் கடன் திட்டம் எங்க தொகுதியில கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்டவங்களுக்கு கிடைச்சிருக்கு. பட்டா, கலர் டி.வி. என அரசின் திட்டங்களை முழுமையாக எங்களுக்கு கிடைக்க வழி செஞ் சிருக்கார் எங்க அமைச்சர்...” என்று அமைச்சரை ஆசை தீர பாராட்டினார். 
      குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விதவைப் பெண்ணான வள்ளி கூறியது  
                 
                    “ஊரெல்லாம்  பன்றிக் காய்ச்சல் வந்தபோது, அதில் என் கணவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அரசு சரியான மருந்தையும், சிகிச்சை-யையும் அளித்திருந்தால், என் கணவர் பிழைத்-திருப்பார். என் கணவர் உயிரிழந்ததற்கு எங்கள் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்கவில்லை. அமைச்சரிடம் மனு கொடுத்து போராடியும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை...” என்றார் சோகமாக. 
    சோளக்குப்பத்தைச் சேர்ந்த வள்ளாரி என்ற வயதான பெண் கூறியது
                   “கடந்த 6 ஆண்டு-களாக முதியோர் பணம் பெறுவதற்கு நானும் நடையாக நடந்தேன். இதை மனுவாகவும் எழுதி அனுப்பினேன். இதுவரை எனக்கு அந்தப் பணம் கிடைக்கவே இல்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு சென்றாலும், எனக்கு வேலை கொடுப்பதில்லை. கேட்டால் வயதாகிவிட்டது என்று சொல்கிறார்கள். நான் எப்படி ஜீவனம் நடத்துவது? எனக்கு இருப்பது ஒரே மகன்... அவனும் திருமணமாகி வேறு ஊருக்கு சென்றுவிட்டான்...” என்றார் பரிதாபமாக.

    சேரக்குப்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் பேசியது :
                “நிறைய நலத்-திட்டங்களையும் செஞ்சிருக்கார். இருபது வருஷமா இலவச மனைப் பட்டாவுக்காக போராடினோம். அமைச்சர்தான் வாங்கிக் கொடுத்தாரு. அதுமட்டுமல்ல, எங்க கிராமத்திலதான் முதல்முதல்ல வீடு கட்டும் திட்டத்தையும் தொடங்கி வச்சாரு. அது எங்களுக்கு பெருமை இல்லையா..? ஏதாவது விசேஷம் என்றால் பத்திரிகை கொடுத்தால் போதும், அவர் வரவில்லை என்றஸ்£ல், அவரை சார்ந்தவர்களில் யாராவது ஒருவர் வந்து செல்வார்கள். அதுமட்டுமில்ல... கிராமத்தில் சாவு என்றால், யாராக இருந்தாலும் உடனடியாக 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் கொடுத்தனுப்-புவார்...” என்றார்.

    மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த காசிநாதன் பேசியது :

                    “டி.வி. கொடுத்-தாலும், பென்ஷன் கொடுத்தாலும், வீடு கட்ட மானியம் கொடுத்தாலும் தி.மு.க.காரர்களுக்கு மட்டும்தான். அவர்களை தேடிப்-பிடித்துதான் எல்லா உதவிகளும் செய்கிறார்கள். இதில் பொதுமக்களோ, மாற்றுக் கட்சியினரோ பயன்பெற முடியாத நிலைதான் இருக்கு. ஒரு மாணவனை அரசு விடுதியில் சேர்க்க வேண்டும் என்றால் கூட கட்சிக்காரரின் சிபாரிசுக் கடிதம் கேட்கிறார்கள். அமைச்சரிடம் கேட்டால், உன் ஊரில் உள்ள கட்சிக்-காரனை அழைத்து வா என்கிறார். நானும் இந்தத் தொகுதியை சார்ந்தவன்தானே, ஓட்டு போட மட்டும் நாங்க வேண்டும். மற்ற பயன்பாடுகளுக்கு எல்லாம் கட்சிக்காரன் மட்டும்தானா?’’ என்றார் கொதிப்போடு.


    வடலூரைச் சேர்ந்த குப்பம்மாள்  பேசியது : 
                   “நீண்ட நாளாக நான் சளி கோளாறால் அவதிப்பட்டு வந்தேன். எம்.எல்.ஏ-.வை சந்தித்து விவரத்தைச் சொன்னேன். அவர் உடனடியாக என்னை மருத்துவ-மனையில் அனுமதிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். அதன்பேரில் நான் சேர்ந்து சிகிச்சை எடுத்தேன். மருந்து மற்றும் மாத்திரை செலவிற்காக எனக்கு பணம் ரூ.5000 கொடுத்து உதவினார்கள். இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால், அதற்கு அமைச்சர்தான் காரணம்...’’ என்றார் கண்ணீர் கலந்த நன்றி விசுவாசத்தோடு.


    வடலூரைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் பேசியது
                  “வள்ளலார் ஜோதியான மேட்டுக்குப்பம் இன்றுவரை புனரமைக்கப்படாமல் உள்ளது. அதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து, அதை மேம்படுத்த வேண்டும். சைவத்தின் வலிமையை உணர்த்திய வள்ளலார் மடம் இன்றுவரை சரியாக பராமரிக்கப்படாமலும், அதற்காக நிதி ஒதுக்கப்படாமலும் உள்ளது. இந்து அறநிலையத் துறை சார்பில் கூடுதல் நிதி பெற்று நிறைய உணவு மண்டபங்கள், தியான மண்டபங்கள், வெளியூர் பக்தர்கள் தங்கும் இட வசதி போன்றவைகளை ஏற்படுத்தித் தரவேண்டும்’’ என்று கோரிக்கைகளை வைத்தார்.

    கடலூர் மாவட்ட நுகர்வோர் அமைப்பு தலைவர் நிஜாமுதீன்  பேசியது  
                 
               “அமைச்சர் என்பவர் ஒரு தொகுதிக்கு மட்டும் உள்ளவர் அல்ல. மாவட்டம் முழுக்கவும், மாநிலம் முழுக்கவும் செயல்படக் கூடியவர். நகர்ப் பகுதியில் மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் அமைக்க வாய்ப்பும், இடமும் உள்ளது. ஆனால், அமைச்சரோ தனது தொகுதிக்குட்பட்ட கேப்பர் மலைக்கு இதை எடுத்துச் சென்றுவிட்டார். தொகுதி மறு சீரமைப்பிற்கு பிறகு கடலூர் நகர் பகுதியில் பாதிக்கு மேல் குறிஞ்சிப்பாடி தொகுதியில் சேர்கின்றன. ஆனால், இன்றுவரை ரயில்வே சுரங்கப் பாதை திட்டத்தை இந்த அமைச்சர் கொண்டு வரவில்லை. சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் இவர், மாவட்ட மருத்துவமனையை இதுவரை தரம் உயர்த்தவில்லை. மீனவர்கள் பிரச்னை, சுனாமி திட்டங்கள், பாலம் கட்டுதல், நலத்திட்டங்கள், கடலூருக்கு பை-பாஸ் சாலை அமைத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் இன்னும் கிடப்பிலேயே கிடக்கின்றன. உடனடியாக இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.
    குறிஞ்சிப்பாடி தொகுதியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு ஆயிரத்து 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ம.தி.மு.க.வைச் சேர்ந்த என்.ராமலிங்கத்திடம் பேசியது 
                 “எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கட்சியின் மீதும், மக்களின் மீதும் மிகவும் அக்கறைக் கொண்டவர். அதனாலேயே கடலூரில் உள்ள சர்க்கரை ஆலைக்கு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் வைக்கப்பட்டது. ஆனால், அவரது மகனான பன்னீர்செல்வமோ தொகுதி மக்கள் மீது எந்த அக்கறையும் கொள்வதில்லை. தனது அப்பா காலத்து தி.மு.க.வினரைக் கூட இவர் மதிப்பதில்லை என தி.மு.க.வினரே புலம்புகிறார்கள். இந்தத் தொகுதியில் நெசவுத் தொழிலாளர்கள் அதிகம். ஆனால், அவர்கள் வாழ்க்கை மேம்பட எந்த நடவடிக்கையும் அமைச்சர் மேற்-கொள்ளவில்லை. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பேரூராட்சி அலுவலகம் இன்று வரை சரியாக செயல்படுவதில்லை. 
                   அதையும் அவர் கண்டு-கொள்வதில்லை. குறிஞ்சிப்பாடியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்துமே இங்கு உள்ள பெருமாள் ஏரியை நம்பித்தான் உள்ளது. 9 கி.மீ. நீளமும், 7 கி.மீ. அகலமும் கொண்ட மிகப்பெரிய இந்த ஏரி இப்போது மண் மூடிக் கிடக்கிறது.

    இதனால் பல நூறு ஏக்கர் பரப்பிலான விவசாயமும் மண்மூடிப் போகும் அபாயம் இருக்கிறது. இந்த ஏரியைத் தூர்வாரி விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கு அமைச்சர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அப்படி செய்தால் இரண்டு போகம் விவசாயம் செய்யலாம். இவரால் முடியவில்லை என்றால் நெய்வேலி அனல்மின் நிறுவனத்திடம் சொல்லி இதை செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை” என புகார்களாக அடுக்கினார்.

    இதுபற்றியெல்லாம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரப்பினர் கூறுவது

                  “சட்டமன்றத்தில் மருத்துவக்கல்லூரி அமையும் என அறிவித்த உடனேயே மாவட்ட மக்களுக்காக உடனடியாக இடம் ஆர்ஜிதம் செய்து, கடந்த 13&-ம் தேதி துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளனர். கடலூரைச் சுற்றியுள்ள கிராமங்களையொட்டி சுமார் 68 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி, முதியோர் பென்ஷன் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது அமைய இருக்கக்கூடிய அரசு மருத்துவக்கல்லூரியையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் மிக பிரமாண்டமாக கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதியை கண்காணிக்கவும் உதவிகளை செய்து கொடுக்கவும் மூன்று உதவியாளர்களை நியமித்திருக்கிறார் அமைச்சர். அவர்கள் கொடுக்கும் தகவலோடு தானும் பல பகுதிகளுக்கு சென்று மக்களின் நிறைகுறைகளை அறிந்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்’’ என்றனர்.

                    எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது ஆங்காங்கே விமர்சனங்கள், குறைபாடுகள் இருந்தாலும் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை தொகுதிக்குள் பெருமளவு அமல்படுத்தியிருப்பதால், தனது தொகுதியில் ஆரோக்கியமாகவே இருக்கிறார் சுகாதார அமைச்சர்.


    தவலுக்கு நன்றி : 

              தமிழக அரசியல் 

    Read more »

    கடலூர் சட்டமன்றத் தொகுதி : மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிப்பு

     கடலூர்:

                  சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மக்களில் வாக்களிக்கத் தயக்கம் காட்டுவோர் எண்ணிக்கை, அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

                  கடந்த 5 ஆண்டுகளில் கடலூர் மக்களின் அடிப்படைத் தேவைகள் பெரும்பாலானவை புறக்கணிக்கப்பட்டு உள்ளன. 3 ஆண்டுகள் முடிவடைந்தும் நிறைவடையாத ரூ. 80 கோடி பாதாளச் சாக்கடைத் திட்டம்.÷இத்திட்டம் முடிவடையா விட்டாலும், திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் தவறிவிழுந்து பலர் இறந்து இருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

                 தோண்டப்பட்ட சாலைகள் பலவும் இப்போதும் மக்கள் நடமாட்டத்துக்கு உகந்ததாக இல்லை. இச்சாலைகளில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவோர் பலரும், உடல் உபாதைகளுக்கு நாளும் இலக்காகிக் கொண்டு இருக்கிறார்கள். நெடுஞ்சாலைகள் பலவும், 2 ஆண்டுகளுக்கு மேலாக சிதைந்து கிடக்கின்றன. அவற்றை புதுப்பிக்க இனிமேல்தான் டெண்டரே விட வேண்டும் என்கிறார்கள். அவைகள் தேர்தலுக்குள் சீராகும் வாய்ப்பே இல்லை.

                  ரூ. 26 கோடியில் போடப்பட்டு வரும் நகராட்சி சாலைகளும், தேர்தலுக்கு முன் முடிவடைய வாய்ப்பு இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அதிகாரிகளின் கவனம் முழுவதும், தேர்தல் ஏற்பாடுகளின் பக்கம் திரும்பி விட்டது.÷இதனால் சாலைப் பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளால் இயலாமல் போய்விட்டது.  பிப்ரவரி மாதத்துக்குள் சாலைப் பணிகள் முடிந்து விடும் என்ற உறுதிமொழியெல்லாம், இப்போது தகர்ந்துபோய், வாக்களிக்கும் நாளுக்கு முன்னர்கூட, சாலைப் பணிகள் முடிவடையப் போவதில்லை என்பதற்கு, அப்பணிகளின் இன்றைய நிலையே சாட்சி.

                 பல வேலைகள் தொடங்கப்படாமலும், தொடங்கிய வேலைகளிலும், சாலைகள் தோண்டப்பட்டும், கற்கள், சரளைக் கற்கள் கொட்டப்பட்டும் அரை குறையாக, போக்கு வரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. இச்சாலைகளில் நடந்து செல்வதும்கூட பாதுகாப்பாக இல்லை என்கிறார்கள் பொதுமக்கள். எனவே இச்சாலைகளின் பரிதாப நிலையை எண்ணிப் பார்த்து, எத்தனை பேர் வாக்குச் சாவடிகளுக்கு வருவார்கள். அடிப்படை வசதி செய்யாததால் வாக்களிக்க மாட்டோம் என்று கடலூரில் பலர் அறிவிக்கத் தொடங்கி விட்டனர். நகரின் தற்போதைய நிலை ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதைவிட, ஏன் வாக்களிக்க வேண்டும்? யாருக்கும் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்று கூறும் மக்கள் அதிகம்.

                அடித்தட்டு மக்கள் எப்போதும்போல் வாக்குச் சாவடிகளுக்கு வரக்கூடும். அவர்களிலும், கடலூர் நகரைப் பொறுத்தவரை இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி போன்ற பிரச்னைகள், வாக்களிக்கத் தூண்டுவதாக இல்லை. வாக்களிப்பதில் சோம்பேரித்தனமாக நடந்து கொள்ளும் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களும், நகரின் பரிதாப நிலையை எண்ணிப் பார்த்து, நம்மால் இச்சாலைகளில் எல்லாம் நடந்து சென்று வாக்களிக்க முடியாது என்ற கருதும் பட்சத்தில், அப்பிரிவு மக்களின் வாக்களிப்பு சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் கூறுகையில், 

                  "வளர்ச்சிப் பணிகளை தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று விதிகளை உருவாக்க வேண்டும்.÷டெண்டர் விட்டும் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டம், முடிவடையாத பாதாளச் சாக்கடை திட்டத்தால், நகரின் அலங்கோலமான நிலை காரணமாக, மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாக்களிப்பு ஆர்வம், இத்தேர்தலில் குறைய வாய்ப்பு உள்ளது' என்றார்.

    அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டடைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் கூறுகையில், 

                   "நகரச் சாலைகளின் நிலை, மக்களை வாக்களிக்கத் தூண்டுவதாக இல்லை.÷நடந்தோ, வாகனங்களிலோ வாக்குச் சாவடிகளுக்கு செல்வதே இயலாத நிலையில், பலர் வாக்களிக்க முன்வரத் தயக்கம் காட்டுவார்கள்' என்றார்.

    இது குறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறுகையில், 

                  "சாலைப் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கான கால அவகாசம் 6 மாதம் என்றாலும், பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி இருக்கிறோம். சாலைப் பணிகள் பல நிறைவடையும் தருவாயில் உள்ளன. மார்ச் 31-ம் தேதிக்குள் 50 சதவீதம் பணிகள் முடிக்கப்படும்' என்றார்.

    Read more »

    சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி அலசல்

    தொகுதி பெயர் : 
     
    சிதம்பரம்

    தொகுதி எண் :

    158

    அறிமுகம் : 

              கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது.

    எல்லை : 

               தற்போது சீரமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம் பேரவைத் தொகுதியில், சிதம்பரம் நகராட்சியும், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய 3 பேரூராட்சிகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் உள்ளிட்ட 69 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

     தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

    நகராட்சி: 

    சிதம்பரம் நகராட்சி - 33 வார்டுகள்

    பேரூராட்சிகள்: 

     கிள்ளை பேரூராட்சி -15 வார்டுகள் 
    பரங்கிப்பேட்டை பேரூராட்சி - 18 வார்டுகள்
    அண்ணாமலைநகர் பேரூராட்சி - 15 வார்டுகள்

    கிராம ஊராட்சிகள்: 69 

    மேல்புவனகிரி ஒன்றியம் (7)

          சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, மேல்அனுவம்பட்டு, தீத்தாம்பாளையம், தில்லைநாயகபுரம், லால்புரம்.

    குமராட்சி ஒன்றியம்(21)

                 அகரநல்லூர், சிதம்பரம் நான்-முனிசிபல், இளநாங்கூர், ஜெயங்கொண்டப்பட்டினம், கடவாச்சேரி, காட்டுக்கூடலூர், கீழகுண்டலப்பாடி, கூத்தன்கோயில், நாஞ்சலூர், பெராம்பட்டு, பூலாமேடு, சாலியந்தோப்பு, சிவபுரி, சிவாயம், சி.தண்டேஸ்வரநல்லூர், தவர்த்தாம்பட்டு, உசூப்பூர், வையூர், சி.வாக்காரமாரி, வல்லம்படுகை, வரகூர்.

    பரங்கிப்பேட்டை ஒன்றியம் (41)

             மணிக்கொல்லை, பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, கொத்தட்டை, சி.புதுப்பேட்டை, அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, தச்சக்காடு, கீழமணக்குடி, பு.அருண்மொழிதேவன், குரியாமங்கலம், ஆயிபுரம், பு.ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, பு.முட்லூர், நஞ்சைமகத்துவாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, தில்லைவிடங்கள், பின்னத்தூர், கோவிலாம்பூண்டி, பள்ளிப்படை, சி.கொத்தங்குடி, மீதிகுடி, நக்கரவந்தன்குடி, உத்தமசோழமங்கலம், குமாரமங்கலம், கணக்கரப்பட்டு, மேலதிருக்கழிப்பாலை, கவரப்பட்டு, வசப்புத்தூர், பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை, கீழப்பெரம்பை, பு.மடுவங்கரை.

    வாக்காளர்கள் : 

    ஆண் -   94,192 
    பெண்  -    92,427  
    மொத்தம்   -   1,86,619 

    வாக்குச்சாவடிகள் :

    மொத்தம்  215  

    தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்: 

    கோட்டாட்சியர் எம்.இந்துமதி   : 94450 00425.

    Read more »

    மறுசீரமைப்பில் காணாமல் போன நெல்லிக்குப்பம் தொகுதியின் வரலாறு

    கடலூர் : 

         சுதந்திரத்திற்கு பிறகு நடந்த 13 சட்டசபை பொதுத் தேர்தல்களில் 12 முறை இடம் பெற்றிருந்த நெல்லிக்குப்பம் தொகுதி தற்போது மறுசீரமைப்பில் காணாமல் போயுள்ளது.

                நாடு சுதந்திரம் அடைந்த பின் 1951ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி மற்றும் சிதம்பரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மட்டுமே இருந்தன. பின்னர் 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பமாக பெயர் மாறியது. அதன்பின் 1967ம் ஆண்டு தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியின் ஒருபகுதியை பிரித்து மீண்டும் பண்ருட்டி தொகுதி உருவானது. 

                   தற்போதைய மறுசீரமைப்பில் காணாமல் போன நெல்லிக்குப்பம் தொகுதியின் முதல் தேர்தலில் காங்., கட்சி வெற்றி பெற்றது. பின்னர் நடந்த 62ல் தி.மு.க., 67ல் மா.கம்யூ., 71ல் தி.மு.க., 77ல் மா.கம்யூ., 80ல் தி.மு.க., 84ல் அ.தி.மு.க., 89ல் மா.கம்யூ., 91ல் அ.தி.மு.க., 96ல் தி.மு.க., 2001ல் அ.தி.மு.க., 2006ல் தி.மு.க., வெற்றி பெற்றன. மேலும் 1996ல் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., மணி இறந்ததால் 2000ம் ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சண்முகம் வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதியை நீக்கி, பண்ருட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    Read more »

    தொகுதி ஒதுக்குவதில் சிக்கலை தரும் "கடலூர் மாவட்டம்'

    கடலூர் : 

                 கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

                 கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் கடந்த தேர்தலில் தி.மு.க., மூன்று தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க., ஒரு தொகுதியிலும், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி தலா இரண்டு தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.கடந்தமுறை தி.மு.க., அணியில் இருந்த கம்யூ., கட்சிகள் அ.தி.மு.க.,வுடனும், அங்கிருந்த வி.சி., தி.மு.க., அணிக்கு மாறியுள்ளன. 

                 மேலும், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., அ.தி.மு.க., அணியில் சேர்ந்துள்ளது.மாவட்டத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., சமபலத்தில் உள்ள நிலையில், கணிசமான ஓட்டு வங்கியை வைத்துள்ள பா.ம.க., மற்றும் வி.சி., கட்சியும் இணைந்துள்ளதால் தி.மு.க.,விற்கும், தே.மு.தி.க., வரவால் அ.தி.மு.க.,விற்கும் கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.மாவட்டத்தில் இரு அணியும் சமபலத்தில் உள்ளதால் கட்சி தலைமையிடம் தொகுதியை பெற்று விட்டால், கூட்டணி பலத்தில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என ஒவ்வொரு கட்சியினரும் கருதுகின்றனர். 

                 இதனால் இரு அணிகளிலும் தொகுதியைப் பெற கடும் போட்டி நிலவுகிறது.தி.மு.க., அணியில் இடம் பெற்றுள்ள வி.சி., கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய திட்டக்குடி (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு பொது தொகுதியை கூட்டணி தலைமையில் பெற்றிட முயன்று வருகிறது.அதேகூட்டணியில் உள்ள பா.ம.க.,வோ தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள புவனகிரி, நெய்வேலி மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்கு குறி வைக்கிறது. 

                  கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளோடு கூடுதலாக விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகிறது.அதேப்போன்று அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி நிர்வாகிகள் முயன்று வருகின்றனர்.

                 இந்நிலையில் அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியோடு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்காக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பெற்றிட முயற்சித்து வருகிறது.மற்றொரு கட்சியான ம.தி.மு.க., கடலூர், நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகள் மீதும், மா.கம்யூ., கட்சியோ கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த சிதம்பரம் அல்லது தங்களுக்கு செல்வாக்கு உள்ள மறுசீரமைப்பில் நீக்கப்பட்டுள்ள நெல்லிக்குப்பம் தொகுதியை உள்ளடக்கிய பண்ருட்டி தொகுதி மீது கண் வைத்துள்ளது.

                இப்படி இரு அணியிலும் இடம் பெற்றுள்ள கட்சி நிர்வாகிகள், தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெற்றிட போட்டா போட்டி போட்டு வருவதால், யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்கீடு செய்வது எனப் புரியாமல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் தலைவலிக்கு ஆளாகி வருகின்றனர்.

    Read more »

    கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு வழங்கல்

    கடலூர் : 
        
                  பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு நாளை (9ம் தேதி) முதல் 11ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் ராமச்சந்திரன் செய்திக்குறிப்பு:

                     பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ - இந்தியன் பொதுத் தேர்வுகள் வரும் 22ம் தேதி முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான அனுமதிச் சீட்டு வரும் நாளை 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு காரைக்கால் கல்வி மாவட்டத்திற்கு கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி மாவட்டத்திற்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளி, திண்டிவனம் மாவட்டத்திற்கு வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் மாவட்டத்திற்கு எம்.ஆர்.ஐ. சி.ஆர்.சி., உயர்நிலைப் பள்ளி, விருத்தாசலம் மாவட்டத்திற்கு இன்பேன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் மாவட்டத்திற்கு சி.கே (பாபா) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

                    மெட்ரிக் தனித் தேர்வர்களுக்கு புதுச்சேரி நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, மெட்ரிக் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள் கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தையும், ஆங்கிலோ - இந்தியன் அனுமதி சீட்டுகள் கிடைக்காதவர்கள் சென்னை, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு ராமச்சந்திரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Read more »

    Wall writing artists face colourless prospects


    Painters have a tough time because of the strict implementation of the model code of conduct in Cuddalore.


    CUDDALORE: 

              Ever since the model code of conduct came into force for the State Assembly elections on the evening of March 1, wall writing artists have seen their prospects become bleak .

            For, they will have to tighten the belt to lead an austere life till the elections get over. Once considered a lucrative business, the artists specialised in graffiti and wall writings and wielding paint brushes are now least sought after.

    Prospective candidates hesitate to engage them for two reasons: 

               public property should not be defaced and for using private property the written consent of the owners should be obtained and the copy of it should be submitted to the polling officials concerned. Above all, the expenditure incurred on this score will be credited to the election accounts of the respective candidates.

    Hand-to-mouth existence

                A.Jaffar, a painter of over 20 years standing in Cuddalore, told TheHindu that there were over 1,600 artists in the district and were leading a hand-to-mouth existence. In fact, many have quit the trade and became electricians and fitters. The moment the election schedule was announced even the thinning orders would be eroded. Days were when the artists painstakingly painted the portraits of political leaders and the symbols and flags of political parties a huge crowd would gather around them to watch them at work. Mr. Jaffar said that in his childhood he too was inspired by such artists and after returning home he would unfailingly reproduce the paintings in his scrapbook.

    “Looked down upon”

                  But nowadays these artists are looked down upon and are do not feel relevant anymore. Earlier, the painters had varied work to execute, including number plates of automobiles. But the advent of digital banners and flexiboards have thrown them virtually out of the trade. Mr. Jaffar said that 40 artists whom he had trained had switched to other pursuits. Now he had been assigned the nominal work of painting the booth numbers for the simple reason that it would not be easily torn as in the case of flexiboards or printed materials. He supplements his income by taking Hindi classes to school students. Mr. Jaffar and his ilk are still confident that one cannot totally write off their trade as it has the resilience to survive even on lean patronage.

    Read more »

    S. Eripalayam residents demand separate panchayat



    Residents of S.Eripalayam thronging the Cuddalore Collectorate on Monday.


    CUDDALORE: 

               Hundreds of residents of S. Eripalayam in Panruti block, who thronged the Collectorate here on Monday, urged the authorities to declare their village a separate panchayat or else they would boycott the Assembly elections.

                In a representation addressed to Collector P. Seetharaman, village leader R. Narasan said that there were 2,000 residents in S.Eripalayam, comprising Vanniyars, Adi Dravidars, potters, Christians and Muslims, and of them 1,500 were eligible voters. It had been the long-standing demand of the residents that the village be made panchayat. At present, the village was bifurcated for administrative reasons and attached to two panchayats, namely Siruvathur and Semakottai.

             Therefore, the village had virtually disappeared from the official records, thus making it difficult for the residents to get important official documents such as passports and nativity certificates. Even for getting educational aid, scholarships, farm loans and certification from the Village Administrative Officers, villagers had to travel more than six km to reach either Siruvathur or Semakottai. Mr. Narasan said that S. Eripalayam was bereft of basic facilities such as a community hall, fair price shop, proper roads and so on. Even the village pond was in bad condition.

             In an identical representation, members of 28 women self-help groups in the village said that none of groups had a building of their own. Since the village's name did not find a place in ration cards, it was difficult to open bank accounts and apply for passports. Therefore, as far as official record was concerned, the village had become a non-entity. Mr. Narasan pointed out that while rules permitted formation of a panchayat even with 500 voters, S. Eripalayam with 1,500 voters was placed in a pre-eminent position to get the panchayat status

    Read more »

    நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

    Country wise Vistior