உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 11, 2011

உள்ளாட்சி தேர்தல்: கடலூர் மாவட்டத்தில் 924 பதட்டமான ஓட்டுச்சாவடிகள்

கடலூர் : 

           ""கடலூர் மாவட்டத்தில் 924 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது'' என கலெக்டர் அமுதவல்லி கூறினார்.


கடலூரில்கலெக்டர் அமுதவல்லி கூறியது: 

                 மாவட்டத்தில் 2,772 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு 605 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் 410 இடங்களில் 924 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் நுண்ணறி பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணியில் 25 ஆயிரத்து 356 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுகின்றனர். பணியமர்த்தப்பட்ட ஓட்டுப்பதிவு அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மையங்களுக்கு தேர்தல் நடைபெறும் முதல் நாள் பகல் 12 மணிக்குச் செல்ல வேண்டும்.

                 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சள் கலரில் ஓட்டுச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை கலரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு இளஞ்சிவப்பும், ஊராட்சி வார்டு உறுப்பினர் வெள்ளை மற்றும் நீலமும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இரு வார்டு கொண்ட ஓட்டுச் சாவடிகளில் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் வார்டிற்கு வெள்ளை நிற ஓட்டுச் சீட்டுகளும், இரண்டாம் வார்டிற்கு நீல நிற ஓட்டுச் சீட்டுகளும் பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி கூறினார்.

எஸ்.பி., பகலவன் கூறியது:

          தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் 4 அடுக்குப் பாதுகாப்பு, 127 நடமாடும் ரோந்து படையும், சட்டம் ஒழுங்கிற்கு 55 படையும் போடப்பட்டுள்ளது. மேலும் தேவையான போலீசாரை அரசிடம் கேட்டுள்ளோம். புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு ஊடுருவும் மதுபான கடத்தலைத் தடுக்க 4 கூடுதல் செக்போஸ்ட்கள் அமைக்கப்படும். இன்று (நேற்று) கூட மதுகடத்தல் செய்த வாகனம் பிடிபட்டுள் ளது. அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

Read more »

கடலூர் கெடிலம் ஆற்றில் ஆலைக் கழிவு நீரில் மூழ்கிய குடிநீர் குழாய்!


கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்று நீரில் கருப்பு நிறத்தில் கலந்து செல்லும் அசுத்தம் நிறைந்த ஆலைக் கழிவுகளுக்கு உள்ளே, மூழ்கிக் கிடக்கும் நகராட்சி கு
கடலூர்:
 
            கடலூர் கெடிலம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள ஆலைக் கழிவு நீரில், நகராட்சி குடிநீர் குழாய் மூழ்கியுள்ளது. இதனால் இந்தக் குடிநீரை பயன்படுத்தும் நகர மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கடலூர் நகரின் மையப் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. 
 
              காட்டாறு என்பதால், மழைக் காலங்களில் சில நாள்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது உண்டு.மற்ற நாள்களில் கெடிலம் ஆற்றின் இரு கரையிலும் உள்ள ஊர்களில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள் கொட்டிக் குவிக்கப்படுகிறது. கெடிலம் ஆற்றின் கரைகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகளும் ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்தக் கழிவுகள் ஆங்காங்கே குட்டைகள் போல் தேங்கியிருப்பது வாடிக்கை. கடலூரில் கம்மியம்பேட்டை, அரசு மருத்துவமனை பின்புறம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் உப்பங்கழி நீருடன், சாக்கடை நீரும் கெடிலம் ஆற்றில் விடப்படுகிறது. 
 
                 அண்மையில் பெய்த மழையால் கெடிலம் ஆற்றில் சிறிதளவு தண்ணீர் ஓடுகிறது. ஆனால் இந்த தண்ணீர் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும், ஆறு பாய்ந்தோடும் கரையோரப் பகுதி முழுவதும் கடந்த இரு நாள்களாக துர்நாற்றம் வீசுகிறது. கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர். கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் இருந்து செம்மண்டலம் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் நகராட்சி பிரதான பகிர்மான குடிநீர் குழாய் கெடிலம் ஆற்றைக் கடந்து செல்கிறது. ஆற்றில் ஓடும் இந்தக்கழிவு நீரில், குடிநீர் குழாய் மூழ்கிப்போயுள்ளது என்பது தான் அதிர்ச்சி தரும் விஷயம். குழாயில் உள்ள சிறு துளைகள் வழியாக அசுத்த நீர் உள்ளே புகும் அபாயம் உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் அசுத்த குடிநீரை குடிக்கும் அவலம் உருவாகும். இதை நகராட்சி நிர்வாகம் உணர்ந்து இருக்கிறதா என்று தெரியவில்லை. 
 
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கூறுகையில், 
 
             நீராதாரங்களில் ஆலைக் கழிவு உள்ளிட்ட எதுவும் கலக்கக்கூடாது என்பது தான் சட்டம். ஆனால் கெடிலம் ஆற்றில் ஆலைக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகள் விடப்படுகிறது. இதனால் கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள குடிநீர் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. கடலூர் நகர மக்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பிரச்னை குறித்து பலமுறை புகார் செய்து விட்டோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior