உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 17, 2012

திட்டக்குடி அருகே கழுத்தை நெரித்து 8ம் வகுப்பு மாணவன் கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/ff064ba1-1793-4fe5-93bc-a865a3eeadb3_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
       திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் காலனியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சிவனேசன் (வயது 13). எழுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தந்தை அன்பழகன் சென்னை கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சிவனேசன் கடந்த 12-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியேறினான். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
 
       அன்று மாலை செல்வராசு என்பவரின் வீட்டில் சிவனேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதையடுத்து சிவனேசனின் தந்தை அன்பழகன் ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். புகாரில் சிவனேசனை யாரோ கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா மேற்பார்வையில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மகன் ராஜகுமார் (13) நான்தான் சிவனேசனை கழுத்தை நெரித்து கொன்றேன் என்று கூறி கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கத் திடம் சரண் அடைந்தான். சிவனேசனை, ராமநத்தம் போலீசில் ராஜமாணிக்கம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து ராஜகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில் சிவனேசனை கொன்றது ஏன் என்பது குறித்து அவன் கூறியது:- 
 
          நானும், சிவனேசனும் நண்பர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரில் சிலரது வீடுகளில் புகுந்து பித்தளை உள்ளிட்ட பாத்திரங்களை இருவரும் சேர்ந்து திருடினோம். திருடி வந்த பொருட்களை விற்று ஆடம்பராக செலவு செய்து வந்தோம். திருட்டு மூலம் பணம் அதிகளவில் புழங்கியதால் மது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோம். இந்த விஷயம் சிவனேசனின் தாய் அம்புஜத்துக்கு தெரியவந்ததால் அவர் என்னை அழைத்து கண்டித்தார். மேலும் இனிமேல் சிவனேசனை எங்கும் அழைத்து செல்லக்கூடாது, பழகக்கூடாது எனக்கூறி என்னை திட்டினார். அதுபோல் அன்றில் இருந்து என்னிடம் சிவனேசன் பேசுவதில்லை.   இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
 
          சில நாட்களுக்கு முன்பு சிவனேசனை எங்கள் ஊர் பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் அழைத்து சென்றேன். அங்கு அவனை கட்டி வைத்து வாயில் துணியை திணித்து அடித்து உதைத்தேன். மேலும் தொடர்ந்து என்னிடம் பழக வேண்டும் என்று சிவனேசனை மிரட்டினேன். இதனை அறிந்த சிவனேசனின் உறவினர்கள் விரைந்து வந்து அவனை மீட்டு சென்றனர். ஆனாலும் சிவனேசன் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தான். கடந்த 12-ந்தேதி சிவனேசன் எழுத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள சிறிய பாலத்தில் தனியாக அமர்ந்து இருந்தான். அப்போது அவனிடம் மது வாங்கி குடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினேன். இதற்கு சிவனேசன் சம்மதித்தான். இதைத்தொடர்ந்து நான் வைத்திருந்த ரூ.200ஐ சிவனேசனிடம் கொடுத்து மதுவாங்கி வரும்படி கூறினேன்.
 
           சிவனேசன் மதுபாட்டில் வாங்கி வந்தான். இருவரும் சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.   திருட்டு தொழிலுக்கு என்னுடன் தொடர்ந்து வர வேண்டும் என்று சிவனேசனிடம் கூறினேன். அப்படி வரமறுத்தால் முன்னர் எங்கெங்கு திருடினோம் என்பதை போலீசாரிடம் கூறி விடுவேன் என்று மிரட்டினேன். ஆனாலும் சிவனேசன் இதற்கு பயப்படவில்லை. இனிமேல் திருட வரமாட்டேன் என்று சிவனேசன் தொடர்ந்து கூறினான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் சிவனேசன் மயங்கி விழுந்து விட்டான். உடனே அவனை செல்வராசு என்பவரது வீட்டுக்கு தூக்கி சென்றேன். அங்கு சிவனேசனை கழுத்தை நெரித்து கொன்றேன்.
 
             பின்னர் கழுத்தில் சேலையால் தூக்கு மாட்டி விட்டு விட்டத்தில் தொங்கவிட முயன்றேன். அதற்குள் செல்வராசுவின் மகன் வெண்மணிராஜா வரவே உடலை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டேன். போலீசார் இந்த சம்பவத்தில் தீவிரமாக துப்பு துலக்கி வந்ததால் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துவிட்டேன். இவ்வாறு ராஜகுமார் வாக்குமூலத்தில் கூறினான். அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more »

பண்ருட்டியில் தானே புயலால் சேதம் அடைந்த முந்திரி மரங்களை அகற்றும் பணி தீவிரம்

கடலூர்:
 
            கடலூர் மாவட்டம் மேலிருப்பு கிராமத்தில் தானே புயலினால் சேதமடைந்த முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் பயன்படுத்தி அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  
 
           புயலினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முந்திரி விவசாயிகளின் நலனுக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிர் சேத நிவாரணத்தோடு, முந்திரி பயிர்களை மீண்டும் பயிர் செய்வதற்கு விலை ஏதுமின்றி மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றும், அந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான பராமரிப்பு செலவுகளையும், விவசாயப் பணிகளுக்கான செலவுகளையும், 5 ஆண்டு காலத்திற்கு அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
 
           மேலும் முந்திரி மற்றும் பலா தோப்புகள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், விழுந்த மரங்களை அகற்றிட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு, ஏற்படும் 6,000 ரூபாய் செலவினம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
 
          இந்த மரங்களை வெட்டுவதற்குத் தேவையான சங்கிலி ரம்பக் கருவிகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் என்று கூறினார்.
 
          இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ளும். மரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட பின், அடிக்கட்டையையும் அகற்றிய பின்னரே அத்தோட்டங்களில் உழவுப் பணியும், ஊடுபயிர் சாகுபடியும் மேற்கொள்ள இயலும் என்பதால், அடிக்கட்டை அகற்றும் பணி எந்திர உதவியுடன் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.  
 
          இதனடிப்படையில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேலிருப்பு ஊராட்சியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை அகற்றி, விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு முன்மாதிரி பணி நடைபெற்றது. முதல் நாளன்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை கொண்டு மரத்தில் உள்ள சிறு கிளைகள் அகற்றப்பட்டன.
 
        புதன் கிழமை  மேலிருப்பு கிராமத்தில் ராஜாராமன் என்பவரது முந்திரி தோப்பில் முற்றிலும் அழிந்த நிலையில் உள்ள முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் மூலம் வெட்டி எடுத்து அகற்றும் பணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பார்வையிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior