உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 22, 2011

சிக்கிம் மணிபால் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

                இந்தியா முழுவதும் சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகத்திற்கு சுமார் 700 கல்வி மையங்கள் உள்ளன. இவைகளில் தொலை நிலைக்கல்வி முறையில் படிக்க இளநிலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.smude.edu.in  இணையதளத்திலிருந்து மாணவர்கள் விண்ணப்பங்களை பெறலாம்.

Read more »

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை


கடலூர்:
 
           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருப்பதைத் தொடர்ந்து, தண்டனைக்குரிய அடைந்துள்ள ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் வியாழக்கிழமை தெரிவித்தார். 
 
              சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு (17). 1996-ம் ஆண்டு நாவரசு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த கரூரைச் சேர்ந்த ஜான்டேவிட் 6-12-1996 அன்று, நாவரசுவை ராகிங் காரணமாகக் கொலை செய்தார். அவரது தலையை அண்ணாமலை நகரில் உள்ள வாய்க்காலில் போட்டார். உடலை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்து, சென்னை செல்லும் வழியில் கை கால்களை வாய்க்கால்களில் வீசினார். தலையற்ற உடலை சென்னையில் நகரப் பஸ் ஒன்றில் விட்டுச் சென்றார்.  
 
              நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு, கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 11-3-1998 அன்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், ஜான் டேவிட்டை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.  உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தும் கடலூர் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தும் புதன்கிழமை உத்தரவிட்டனர்.  
 
              கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஜான் டேவிட் கிறிஸ்தவ மத போதகராக மாறி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஜான் டேவிட் தமிழக போலீஸôரிடம் சரண் அடைந்து மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது போலீஸôர் அவரைக் கைது செய்ய வேண்டும்.  
 
எனவே இது குறித்து வியாழக்கிழமை கடலூர் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ்  கூறியது:  
 
                 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. எனினும் ஜான் டேவிட் பற்றிய தகவல்களை சேகரிக்க சிதம்பரம் டி.எஸ்.பி., அண்ணாமலை நகர் போலீஸ் ஆய்வாளர், சிதம்பரம் நகர போலீஸ் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  தனிப்படையினர் திருச்சி, கரூர், சென்னை பகுதிகளுக்கு சென்று தகவல்களைச் சேகரிப்பார்கள். வெளிநாட்டில் ஜான் டேவிட் இருந்தால், வெளியுறவுத்துறை மூலம் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எஸ்.பி.
 
 
 
 

Read more »

அண்ணாமலைப் பல்கலையில்தொலைதூரக் கல்வி சேர்க்கை விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம்:
            அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 4.50 லட்சம் பேர் பயில்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.  
             அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 2011-12 கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 
               82 ஆண்டுகாலமாக சேவையாற்றி வரும் அண்ணாமலைப் பல்கலையில் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  மொத்தம் 500 பாடப் பிரிவுகள் நடத்தப்படுகிறது. சமுதாய சேவையையும், வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 48 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் எம்பிஏ பைனான்ஸ் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மெண்ட ஆகிய 3 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 
             பண்டமெண்டல் ஆஃப் மீயூட்சுவல் பண்ட்ஸ் என்ற சான்றிதழ் வகுப்பும் தொடங்கப்பட்டுள்ளன.  மீடியா துறையில் முதுகலை டிப்ளமோ இன் நியூஸ் ரீடிங், முதுகலை டிப்ளமோ இன் ரேடியோ டெக்னாலஜி, முதுகலை டிப்ளமா இன் டி.வி. ஜர்னலிசம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.  கப்பல் துறையில் பணியாற்றுபவர்களுக்காக டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளான லாஜிஸ்டிக்ஸ் சப்ளை செயின் ஆபரேஷன்ஸ், ஷிப்பிங் லாஜிஸ்டிக்ஸ் ஆபரேஷன்ஸ், ஷிப்பிங் போர்ட் ஆபரேஷன்ஸ், டிரான்ஸ்போர்டேஷன் வேர்ஹவுஸ் ஆபரேஷன்ஸ் ஆகிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  
              தமிழ் இசைக்காக தொடங்கப்பட்ட இப்பல்கலையில் பி.மியூசிக் நாகஸ்வரம், பி.மியூசிக் தவில், சர்டிபிகேட் புரோகிராம் இன் தேவாரம், சர்டிபிகேட் புரோகிராம் இன் மிருதங்கம் ஆகிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  மாணவர்கள் வசதிக்காக சுமார் 30 கி.மீ. தொலைவில் தொடர்பு கொள்ளும் வகையில் 68 தகவல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 
            ஏற்கெனவே விடியோ கான்பரன்சிங் வசதி புதுதில்லி, சென்னை, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ளது. இந்த ஆண்டு சேலம், கொல்கத்தா, கோவை, திருச்சி, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட 10 இடங்களில் விரிவுபடுத்தப்  படும். மாணவர்கள வசதிக்காக ஒய்டு ஏரியா நெட்வொர்க் மூலம் 60 படிப்பு மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது கட்டணத்தை கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் 50 மையங்களில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். தொலைதூரக் கல்வி மையத்தில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 

         பல்கலைக்கழகத்தில் நேரடியாக படித்த மாணவர்களுக்கும், தொலைதூரக்கல்வி மையத்தில் படித்த மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.  தொலைதூரக் கல்வி மையத்தின் மூலம் எம்.எட். படிப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் எம்.எட். படிப்பு தொடங்கப்படும் என்றார் ராமநாதன்.  இந்நிகழ்ச்சியில், தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் வரவேற்றார். விழாவில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், துணை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி தவமணி, மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம். செனட் உறுப்பினர்கள் தில்லைசீனு, பேராசிரியர் டி.ராஜவன்னியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

பண்ருட்டி : 

               சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 2011-2012-ம் ஆண்டுக்கான சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் விழா பண்ருட்டியில் உள்ள தகவல் மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது. விழுப்புரம் தகவல் மைய கண்காணிப்பாளர் சவுகத்அலி தலைமையில் நடைபெற்ற விழாவில், பண்ருட்டி டி.எஸ்.பி. ஆறுமுகம் முதல் விண்ணப்பத்தை வழங்கினார். விழாவில் ஜான்டூவி பள்ளி தாளாளர் வீரதாஸ், பண்ருட்டி மைய அதிகாரிகள் ராமமூர்த்தி, மணிவண்ணன், தியாகராஜன், ஸ்டாலின், ஆதிநாராயணன், சந்தானகிருஷ்ணன், சுரேஷ்நாதன், கெஜலட்சுமி, லதா, கெஜவல்லி, உஷாதேவி, ராமநாதன், கிருபாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

விழுப்புரம்: 

              அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி விழுப்புரம் மையத்தில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப விற்பனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சேவியர்தன்ராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். முதல் விண்ணப்பத்தை தொழிலதிபர் தியாகராஜன் பெற்றுக்கொண்டார்.  இந்த மையத்தில் பி.ஏ, பி.எஸ்சி., பி.காம், எம்.ஏ, எம்.பி.ஏ, எம்.காம், எம்.எஸ்சி, ஐ.டி. ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் தொடர்பு அலுவலர் எம். செல்லப்பன், பேராசிரியர் உதயகுமார், கண்காணிப்பாளர் செüகத்அலி, தனி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

கள்ளக்குறிச்சி: 

             அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கம் கள்ளக்குறிச்சி படிப்பு மையத்தில் 2022-12-ம்  ஆண்டுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடந்தது.  நிகழ்ச்சியில் படிப்பு மைய பொறுப்பு அதிகாரி என். பிரதிப்ராஜ் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முதுநிலை மேலாளர் எம்.சுந்திரசேகரன், குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார். 

                 பின்னர், முதல் விண்ணப்ப விற்பனையை தொடங்கி வைத்தார்.  இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் கே.பி.ஆர்.பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.  இதில் பல்கலைக்கழக அலுவலர்கள் வி.அறிவழகன், வி.சுரேஷ், எம்.மணிவண்ணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் எஸ்.யாமினிதேவி, டி.சிலம்பரசன் என்.ஞானவேல் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Read more »

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு

                 எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான -எஸ்.ஆர்.எம்.இ.இ.இ. 2011- நுழைவுத் தேர்வு சனிக்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.  

இது குறித்து பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னவைக்கோ கூறியது: 

                     எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளில் 5,500 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 115 நகரங்களில் 190 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.  காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்காக 1 லட்சத்து 36 ஆயிரத்து 126 பேர் பதிவு செய்துள்ளனர்.  நுழைவுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். கலந்தாய்வுக்கு 14 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்படுவர் என்றார்.    

Read more »

பங்கு வணிகம் குறித்த பாடத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஆன்லைனில் தேர்வு

கடலூர்:

              பங்கு வணிகம் குறித்த பாடத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு, சோதனை அடிப்படையில் ஆன்லைனில் தேர்வு கடலூரில் புதன்கிழமை நடத்தப்பட்டது.  நிதிக் கல்வி அறிவுத் திட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் வணிவியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு, பங்கு வர்த்தகம் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

              கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் வணிகவியல் பிரிவில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு பங்கு வர்த்தகம் குறித்த பாடம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.  மேற்கண்ட 4 பள்ளிகளைச் சேர்ந்த வணிகவியல் பாடப் பிரிவு மாணவர்கள் 320 பேருக்கு ஆன்லைனில் தேர்வு, சோதனை அடிப்படையில் புதன்கிழமை நடத்தப்பட்டது. 

              கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் இத் தேர்வு நடைபெற்றது. மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி பார்வையிட்டார். பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடப்பது இதுவே முதல்முறை என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

என்.எல்.சி.க்கு வைகோ பாராட்டு


மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

               "இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பான வளர்ச்சி பெற்று விளங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது. நாட்டின் உயிர்நாடியான மின்உற்பத்தித் துறையில் என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து சாதனையைப் படைத்து வருகிறது.

                கடந்த நிதி ஆண்டில் 1788 கோடி யூனிட் மின்சார உற்பத்தி செய்து சிறப்பான இடத்தைப் பெற்றதுடன் ரூ. 1,247 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி. நிறுவனம் சாதனை புரிந்து உள்ளது.
எனவே, என்.எல்.சி. நிறுவனத்தின் வெற்றி மகுடத்தில் நவரத்னா என்னும் ரத்தினக்கல் இந்திய அரசால் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

               பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்புமிக்க உயரிய நவரத்னா விருதைப் பெற்றுள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் அதிபர், இயக்குனர்கள் மற்றும் என்.எல்.சி. வளர்ச்சிக்காக உழைத்து வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்.எல்.சி. மென்மேலும் வளர்ந்து மகாரத்னா விருதையும் பெற்றிட வாழ்த்துவதுடன், என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனமாக ஒளிவீசித் திகழ்ந்திட மதிமுக உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.



Read more »

Lookout notice for John David convicted in the Navarasu murder case

CUDDALORE: 

           A lookout notice has been issued to trace the whereabouts of John David, convicted in the Navarasu murder case, according to Superintendent of Police Ashwin Kotnis.

             Mr. Kotnis told the presspersons here on Thursday that following the Supreme Court upholding the Cuddalore Sessions Court's verdict of double life sentence awarded to John David in the case, the Annamalai Nagar Police (under whose jurisdiction the college falls) had been directed to pursue the matter.

           The SP said special teams had been formed to conduct enquiry at places such as Karur (said to be John David's native place), Tiruchi and Chennai. He underscored the point that the legal process would have to be followed in which the Supreme Court would have to give the direction to the Madras High Court and the latter in turn would have to instruct the trial court (Cuddalore Sessions Court) to issue the arrest warrant.

          Mr. Kotnis said the report of John David having become a priest in Australia had to be verified, adding that vigil had been mounted at airports. Navarasu, son of former Vice-Chancellor of Madras University K.Ponnuswamy, and a fresher at the Rajah Muthiah Medical College of Annamalai University, Chidambaram, was reported missing from the college hostel from November 6, 1996.

           The prosecution version had it that after Navarasu's mutilated torso was found in Chennai facts emerged that the victim's hostel mate John David had committed the gruesome murder, pursuant to a ragging incident. Though the trial court had sentenced John David to undergo two life sentences consecutively, the Madras High Court acquitted him of the charges. A special leave petition was filed in the Supreme Court contesting the High Court judgment. The Supreme Court Bench set aside the High Court verdict and restored the trial court judgment with a change that the two life sentences should run concurrently.

Read more »

Fire-fighting equipment, rescue operation demonstrated

CUDDALORE: 

          The Fire Service Week observed by the Fire Wing of the Central Industrial Security Forces (CISF), deployed in the Neyveli Lignite Corporation, concluded here on Wednesday.

   Speaking on the occasion, Hardeep Singh, Senior Commandant of the CISF, said that its fire wing was inducted in the NLC on January 14, 2011 with the sanctioned strength of 272 personnel.

Safety measures

         It was now providing safety measures to the thermal power stations and in the second phase of induction, safety aspects of the mines would be taken care of. The personnel demonstrated the working of fire-fighting equipment and rescue operation on the occasion. NLC director (mines) B. Surender Mohan appreciated the works done by the CISF, who were also rendering assistance to the people living in the peripheral areas. Other directors of the NLC R. Kandasamy (projects and planning), K. Sekar (finance), S.K. Acharya (human resources) and Chief Vigilance Officer K.S. Padmanabhan were present. Prizes were distributed to winners of various competitions conducted on the occasion.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior