உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 19, 2012

கடலூர் மாவட்ட தானே புயல் சேதம் பற்றிய குறும்படம் தயாரிப்பு

     கடலூர் தானே புயல் பாதிப்பு பற்றிய குறும்படத்தை தயாரித்து இருப்பதாக திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கூறினார்.


இதுகுறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கூறியது

           கடலூர், விழுப்புரம் பகுதியில்  தானே' புயலால் ஏற்பட்டது பாதிப்பு அல்ல, பேரழிவு. அந்த பகுதி மக்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சேகரித்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், விவசாய அழிவுகளை குறும்படமாக படம் பிடித்து வந்திருக்கிறேன்.

            எல்லாவற்றுக்கும் சாட்சியாக இந்த படம் அமையும். அரசியல்வாதிகளுக்கும், தமிழக அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பும் விதமாக இந்த படம் அமையும். கடலூர் பகுதியில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம் குறித்து முதல் அமைச்சரிடம் அதிகாரிகள் சரிவர சொல்லவில்லை என்பது தான் உண்மை.

குடிநீர், பால், மின்சாரம் எதுவும் அந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்கள் கடையும் இல்லை. ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் 100 சதவீதம் திறந்து உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

              கடலூர், விழுப்புரம் பகுதியில் சிறப்பு செயலாக்கத்துறையை அமைத்து, இந்த பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறையும் இதை செயல்படுத்தி, மக்களின் நிலையை கண்காணிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் உயரும் வரை சலுகை விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.













Read more »

தானே புயல் பாதித்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தமிழருவி மணியன்

           புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

         சுனாமி தாக்கியபோது ஒட்டு மொத்த தமிழகம் உதவிக் கரம் நீட்டியது. அதே போன்று கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதித்தவர்களுக்கும் உதவ வேண்டும். புயல் பாதித்த கடலூர் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தமிழக அரசு மட்டுமே எல்லா நிவாரணங்களையும் செய்துவிட முடியாது. புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி அறிவித்துள்ளது. இது போதாது. நிவாரணமாக ரூ.5ஆயிரம் கோடி வழங்க வேண்டும்.

             அந்தப் பகுதிகளில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். உடனடியாக அவை வழங்கப்பட வேண்டும். அந்தப் பகுதி மக்களுக்குப் போதிய வருமானம் இல்லாத நிலையில், அவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கையைத் தொடங்கும் வரை அங்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது. அவற்றைத் தாற்காலிகமாக மூட வேண்டும் என்றார்.











Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior