உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா

டிச 02 , காட்டுமன்னார்கோவில்:
         
                   காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நேற்று தீபத்திருவிழா நடந்தது.

காட்டுமன்னார்கோவில் அருகே மேலக்கடம்பூர். இங்கு மிகவும் பழமையான அமிர்தகடேஸ்வரர் கோயில் உள் ளது. ஒவ்வொரு பிரதோஷ காலங்களில் ஐம்பொன் சிலையான ரிஷப தாண்டவமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோயிலில் சனி பகவான் கழுகு வாகனத்தில் உள்ளார். குரு பகவான் மூன்று நிலையில் காணப்படுகிறார். தேர் வடிவில் கோயில் காணப்படுகிறது. இந்த சிறப்புகள் வாய்ந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

வி.சிறுத்தைகள் நிர்வாகிகள் நியமனம்

டிச 02 , நெல்லிக்குப்பம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வழிகாட்டுதலின் படி மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் அறிவுறுத்தலின்படி தமிழ்தேசிய விடுதலை பேரவையின் மாவட்ட துணை செயலாளர் விடுதலை புலியன் பரிந்துரையின் பேரில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றியசெயலாளராக வரக்கால்பட்டு சுரேஷ், துணை செயலாளர்களாக  கீழ்குமாரமங்கலம் பாலமுருகன், பெரியகங்கணாங்குப்பம் வீரகுமார், பில்லாலி தொட்டி செல்வம், நத்தப்பட்டு கோபாலகிருஷ்ணன், கடலூர் நகர செயலாளராக வில்வ நகர் சுபாஷ், நெல்லிக்குப்பம் நகர செயலாளராக பெரிய சோழவல்லி விஜயன், பண்ருட்டி நகர செயலாளராக வினோத், துணை செயலாளராக சுரேஷ், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்களாக மருவாய் காமராஜ், புலியூர் மகேந்திரன், பண்ருட்டி ஒன்றிய செயலாளராக பழனிவேல், துணை செயலாளர்களாக குமார், ஜவஹர்லால்நேரு, ஞானசேகரன் ஆகி யோரை தமிழ்தேசிய விடுதலை பேரவை மாவட்ட செயலாளர் அதிமான் நியமனம் செய்துள்ளார்

Read more »

புழுதி நகரமாகிறது விருத்தாசலம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


டிச 02 ,  விருத்தாசலம்,:

                 புழுதி நகரமாக மாறி வரும் விருத்தாசலத்தில் சீரமைப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளவேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விருத்தாசலத்தில்  புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் ஆகிய கோயில் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என எப் பொதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரமாக விருத்தாசலம் உள்ளது.
இந்த நகரில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் உள்ள அனைத்து சாலைகளின் ஓரங்களில் மண் மேடுகள் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.
         
தற்போது சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாலை கள் சேதமடைந்து  குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலையில் நெடுஞ்சாலை துறையினர் செம்மண் அடித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகவும் வெயில் காலங்களில் புழுதி ஏற் பட்டு, புழுதி நகரமாகவே விருத்தாசலம் மாறிவிட்டது.

இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர் நிலை மிகவும் பரிதாபமாக உள் ளது. புழுதியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. நகரில் கழிவு நீர் கால்வாய்கள் சரி வர பராமரிக்கப்படாததால், முக்கிய இடங்களில் சாலையில் கழிவு நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி குடிநீரில் கலந்து வாந்தி பேதி, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களை ஏற்படுத்தி வருகிறது.

           கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. நகரின் அனைத்து பகுதிகளிலும் நகராட்சி குப்பைகள் அகற்றப்படாததால் குப்பைகள் குவியல், குவியலாக உள்ளது. இதில் பன்றிகள் குடித்தனம் நடத்தி நோயை பரப்பிவருகிறது.

நகரின் முக்கிய இடமான பேருந்து நிலையம், பாலக்கரை, கடை வீதி, ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு,  சிதம்பரம் ரோடு, பெண்ணாடம் ரோடு, சேலம் ரோடு ஆகிய இடங்களில் மின் விளக்குகள் சரி வர எரியாமல் இருண்டு உள்ளதால் பொது மக்கள் நடமாடவே பயப்படும் நிலை உள்ளது. முக்கிய இடங்களே இப்படி என்றால் புறநகர் பகுதிகள் சொல்லவே வேண்டாம். மின் விளக்குகள் சரி வர எரியாததால் நகரில் திருட்டு, சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து ஐந்தாம் தூண் அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி கூறுகையில், நகராட்சி நிர்வாகம் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுத்து அழகான  சுகாதாரமான நகராக மாற்றவேண்டும் .
அடிப்படை வசதிகளை நிறைவேற்றகோரி இன்னும் சில தினங்களில் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.





Read more »

மந்தராக்குப்பத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு துண்டு பிரசார

டிச 02 , நெய்வேலி, : 

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நெய்வேலி நியு லைட் சாரிடபல் டிரஸ்ட் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

மந்தராக்குப்பம் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் நிர்வாகியும் மனநல நிபுணருமான டாக்டர் சகாயராஜா தலைமை தாங்கினார். செஞ்சிலுவை சங்க உறுப்பினர் லட்சுமி நாராயணன், மனிதநேய மேம்பாட்டு மைய நிறுவனர் கேசிதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கங்கைகொண்டான் பேரூராட்சி தலைவர் சக்திவேல் வழங்கி துவக்கி வைத்தார். ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மகிமைதாஸ் நன்றி கூறினார்.

Read more »

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாகனம் இல்லாமல் பணிகள் பாதிப்பு

   டிச 02 , காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் தாசில்தாருக்கு வாகனம் இல்லாததால் பணிகள் பாதிப்படைந்துள்ளது.


காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாள் இருந்த வாகனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பழுதாகி நின்றது. இதனால் அந்த வாகனம் பயன்இல்லை என முடிவு செய்து அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் வட்டாட்சியர் பல்வேறு கிராமங்களுக்கு சென்று அரசு திட்டங்களை நடை முறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியருக்கு வழங்கப்பட்ட வாகனத்தை வட்டாட்சியர் பயன்படுத்தி வருகிறார். இதனால் வட்டாட்சியரின் வாகன டிரைவர் பணியின்றி இருந்து வருகிறார். சமூக நலப்பிரிவின் பணிகள் பெரிதும் பாதிப்படைகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட புதிய வாகனத்தை வழங்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Read more »

ஸ்ரீமுஷ்ணத்தில் மரக்கன்று நடும் விழா

ஸ்ரீமுஷ்ணம்:

                   ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மரக்கன்று நடும் விழாவை நடத்தினர். கல்வி நிறுவன செயலாளர் மகாவீர்சந்த் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்சி துணை முதல்வர் அழகுதுரை வரவேற்றார். மருந்தாளுநர் கல்லூரி முதல்வர் அபிராமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை முன்னிலை வகித்தனர்.


     காவல்துறை குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் கணேசன் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். கல்லூரி வளாகம், காவல்துறை வளாகம், பேரூராட்சி வளாகம் ஆகிய பகுதிகளில் மாணவர் கள் மரக்கன்றுகளை நட்டனர். விரிவுரையாளர் இசபெல்லா மரம் வளர்த்தல் அவசியம் பற்றி பேசினார். விரிவுரையாளர் கலைவாணன் நன்றி கூறினார். த.வீ.செ. கல்வி நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழாவை சீத்தாலட்சுமி ஆதிவராகன் துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நடத்தினர். நிறுவன செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கி னார். விரிவுரையாளர் சோமசுந்தரம் வரவேற்றார். ஆசிரியர் பயிற்சி முதல்வர் ஆறுமுகம் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன், சுரேஷ், ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.





Read more »

மானிய விலை​யில் முந்​திரி ஒட்டுச் செடி​கள்

பண்ருட்டி,​ டிச. 2:​ 

                  பண்​ருட்டி பகுதி முந்​திரி விவ​சா​யி​க​ளுக்கு தர​மான முந்​திரி ஒட்​டுக் கன்​று​கள் மானிய விலை​யில் வழங்​கப்​ப​டும் என தோட்​டக்​கலை உதவி இயக்​கு​நர் வி.ராம​லிங்​கம் தெரி​வித்​துள்​ளார். ​

                 இது குறித்து அவர் வெளி​யிட்​டுள்ள செய்தி குறிப்பு:​ பண்​ருட்டி பகு​தி​யில் புதி​தாக முந்​திரி பயிர் செய்​யும் விவ​சா​யி​கள்,​ அதிக மக​சூல் தரும் வி.ஆர்.ஐ.3 ரக ஒட்​டுச் செடி​களை நடப்பு பரு​வத்​தில் 7 ல​ 7 மீட்​டர் இடை​வெ​ளி​யில் ஏக்​க​ருக்கு 80 கன்​று​களை நடவு செய்​ய​லாம். தேசிய தோட்​டக் கலை இயக்க திட்​டத்​தில் புதிய பரப்​பில் சாகு​படி செய்​யும் விவ​சா​யி​க​ளுக்கு அரசு தோட்​டக் கலை பண்​ணை​யில் உற்​பத்தி செய்​யப்​பட்ட இக்​கன்​று​கள்,​ நோய்,​ பூச்சி தாக்​கு​தல் குறை​வா​க​வும்,​ காய்ப்​புத்​தி​றன் மற்​றும் உடைப்​புத்​தி​றன் அதி​க​மா​க​வும் கொண்​டவை. இத்​த​கைய தர​மான முந்​திரி ஒட்​டுக் கன்​று​கள் மானிய விலை​யில் வழங்​கப்​ப​டு​கின்​றன.

                மே​லும் வேப்​பம் பிண்​ணாக்கு,​ டிரை​கோ​டர்​மா​வி​ரிடி,​ அசோஸ்​பை​ரில்​லம்,​ பாஸ்​போ​பாக்​டீ​ரியா மற்​றும் எண்​டோ​சல்​பான் போன்ற இடு​பொ​ருள்​கள் மானிய விலை​யில் விநி​யோ​கம் செய்​யப்​ப​டு​கி​றது.

               தோட்​டக்​கலை இயக்க திட்​டத்​தில் பண்​ருட்டி வட்​டா​ரத்​துக்கு 125 ஹெக்​டர் புதிய பரப்​பில் முந்​திரி சாகு​படி இலக்கு நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ள​தால்,​ தேவைப்​ப​டும் விவ​சா​யி​கள் தங்​கள் பகுதி தோட்​டக் கலை உதவி அலு​வ​லர்​களை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பய​ன​டை​யும்​படி செய்​திக் குறிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

Read more »

அனல்​மின் நிலை​யம் அமைப்​பதை எதிர்த்து ஆர்ப்​பாட்​டம்

பண்ருட்டி,​ டிச. 2:​ 
 
           கொள்​ளுக்​கா​ரன்​குட்​டை​யில் அனல்​மின் நிலை​யம் அமைக்க கிராம மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தால்,​ தலை​மை​யேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வேன் என ஒன்​றி​யக் குழுக் கூட்​டத்​தில் குழு தலை​வர் எழி​ல​ரசி ரவிச்​சந்​தி​ரன் கூறி​னார்.
 
          பண்​ருட்டி ஊராட்சி ஒன்​றி​யக் குழு​வின் சாதா​ரண கூட்​டம் அதன் தலை​வர் எழி​ல​ர​சி​ர​விச்​சந்​தி​ரன் தலை​மை​யில் புதன்​கி​ழமை நடை​பெற்​றது.÷கூட்​டத்​தில் நடை​பெற்ற விவா​தம்:​​எழி ​ல​ர​சன்:​​ மாளி​கம்​பட்டு உள்​ளிட்ட கிரா​மப் பகு​தி​யில் உள்ள தொடக்க மற்​றும் நடு​நி​லைப் பள்​ளி​கள் மிக மோச​மான நிலை​யில் மழைக் காலத்​தில் ஒழுகி மாண​வர்​கள் அமர்ந்து படிக்க முடி​யாத நிலை​யில் உள்​ளன. இப்​பள்​ளி​க​ளுக்கு இருக்​கை​கள் செய்து கொடுத்து மாண​வர்​கள் படிக்க வசதி ஏற்​ப​டுத்​தித் தர​வேண்​டும்.÷அ​னை​வ​ருக்​கும் கல்வி இயக்​கத்​தின் மூலம் மாளி​கம்​பட்​டில் ரூ.4.60 லட்​சம் செல​வில் கட்​டப்​பட்​டுள்ள கட்​ட​டம் 5 ஆண்​டு​க​ளா​கி​யும் திறக்​கப்​ப​டா​மல் உள்​ளது. இதை திறக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.
 
          எழி​ல​ரசி ரவிச்​சந்​தி​ரன்:​​ விரைந்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.÷பூரா ​மூர்த்தி:​​ இது​நாள் வரை சின்​ன​பு​றங்​கனி கிரா​மத்​துக்கு ஒரு சிமென்ட் சாலை வசதி கூடி செய்து தர​வில்லை. ஏன் என்று தெரி​ய​வில்லை.
 
             எழி​ல​ரசி ரவிச்​சந்​தி​ரன்:​​ விரை​வில் சிமென்ட் சாலை அமைக்க நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும். மாலா: ​​ எல்.என்.புரத்​தில் கட்​டப்​பட்ட கரும காரிய கொட்​ட​கைக்கு ஆன கூடு​தல் தொகை ரூ.2 லட்​சம்,​ 9 மாதங்​கள் ஆகி​யும் தர​வில்லை.÷எழி​ல​ரசி ரவிச்​சந்​தி​ரன்:​​ உரிய அதி​கா​ரி​களை ஆலோ​சனை செய்து பணம் அளிக்க நட​வ​டிக்கை எடுக்​கின்​றேன்.  
 
               கம்சலிங்​கம்:​​ ஒன்​றி​யக் கூட்​டத்​தில் கட​வுள் வாழ்த்து,​ தேசிய கீதம் பாடு​வ​தில்லை,​ வரும் கூட்​டம் முதல் பாட நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். வேளாண்மை அலு​வ​ல​கத்​தில் இருந்து விவ​சா​யி​க​ளுக்கு மானி​யம் கிடைப்​ப​தில்லை. விதை,​ உரம் எது​வும் குறித்த காலத்​தில் அளிப்​ப​தில்லை. இது குறித்து மாவட்ட நிர்​வா​கத்​துக்கு அறிக்கை அனுப்ப வேண்​டும்.
 
              கொள்​ளுக்​கா​ரன்​குட்​டை​யில் அமை​ய​வுள்ள டேனக்ஸ் அனல்​மின் நிலை​யத்​தால் விவ​சா​யம் பாதிக்​கப்​ப​டும். முன்​னரே நெய்வேலி நிலக்​கரி நிறு​வ​னத்​தா​லும்,​ புதிய வீரா​ணம் திட்​டத்​தா​லும் தண்​ணீர் உருஞ்​சப்​பட்டு நிலத்​தடி நீர் அத​ல​பா​தா​லத்​துக்கு சென்​று​விட்ட நிலை​யில்,​ அனல் மின் நிலை​யம் அமைப்​பதை எதிர்க்​கின்​றேன்.
 
                எழி​ல ​ரசி ரவிச்​சந்​தி​ரன்:​​ கிராம மக்​கள் பாதிப்பு என்று கரு​தி​னால் நானே முன்​னின்று ஆர்ப்​பாட்​டம் செய்​தி​றேன் என கூறி​னார். ​
 
                 கூட்​டத்​ தில் வட்​டார வளர்ச்சி அலு​வ​லர் எஸ்.கல்​யாண்​கு​மார்,​ துணை வட்​டார வளர்ச்சி அலு​வ​லர் ஜி.இந்​தி​ரா​தேவி,​ பொறி​யா​ளர் பி.ஆனந்தி உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

அதி​மு​க​வுக்கு ஆத​ரவு:​ தமிழ் தேசிய காங்​கி​ரஸ் முடிவு

சிதம் ப​ரம்,​ டிச. 2:​ 
 
      தமிழ் தேசிய காங்​கி​ரஸ் கட்சி மாநில பொதுக்​கு​ழுக் கூட்​டம் சிதம்​ப​ரம் கம​லீஸ்​வ​ரன் கோயில் தெரு அறு​பத்​து​மூ​வர் மடத்​தில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.
 
நி​று​வ​னத் தலை​வர் ஏ.எஸ்.லோக​நா​தன் தலைமை வகித்​தார். 
தீர் ​மா​னங்​கள்:​ 
 
நடை​பெ​ற​வுள்ள திருச்​செந்​தூர்,​ வந்​த​வாசி இடைத்​தேர்த​லில் அதி​மு​க​வுக்கு நிபந்​த​னை​யற்ற ஆத​ரவு அளிப்​பது,​ அக்​கட்சி வேட்​பா​ளர்​களை ஆத​ரித்து பிர​சா​ரம் செய்​வது,​ திரு​ம​ணத்தை கட்​டா​ய​மாக பதிவு செய்ய ஆணை பிறப்​பித்​துள்ள அரசு பதி​வுக் கட்​ட​ணத்தை தள்​ளு​படி செய்து இல​வச திரு​ம​ணப் பதிவு முறையை செயல்​ப​டுத்த உத்​த​ரவு பிறப்​பிக்​கக் கோரு​வது.

Read more »

கிடங்​கில் தீ ரூ.20 லட்​சம் வேப்​பம் பிண்​ணாக்கு எரிந்து சேதம்

ட​லூர்,​ ​ டிச. 2:​ 

            கட​லூ​ரில் சேமிப்​புக் கிடங்​கில்,​ புதன்​கி​ழமை ஏற்​பட்ட தீ விபத்​தில் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள வேப்​பம் பிண்​ணாக்கு எரிந்து  அடைந்​தது. இ.ஐ.டி. பாரி நிறு​வ​னத்​துக்​குச் சொந்​த​மான சேமிப்​புக் கிடங்கு கட​லூர் முது​ந​கர் கிளைவ் தெரு​வில் உள்​ளது.   வேப்​பங் கொட்​டை​யில் இருந்து பூச்​சிக் கொல்லி மருந்​துக்​கான எண்​ணையை பிரித்து எடுத்​து​விட்டு பிண்​ணாக்கு,​ இந்த சேமிப்​புக் கிடங்​கில் வைக்​கப்​பட்டு இருந்​தது. இது உரம் தயா​ரிக்க பயன்​ப​டுத்​தக் கூடி​ய​தா​கும். ​ இந்த சேமிப்​புக் கிடங்​கில் புதன்​கி​ழமை திடீ​ரென தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் அஸ்​பெஸ்​டாஸ் கூரை​கள் வெடித்​துச் சித​றின.   அக்​கம் பக்​கத்​தில் உள்​ள​வர்​கள் பார்த்து தீய​ணைப்பு நிலை​யத்​துக்​குத் தக​வல் தெரி​வித்​த​னர். 

                  கட​லூர் நிலைய தீய​ணைப்பு அலு​வ​லர் வெங்​க​டே​சன் தலை​மை​யில் தீய​ணைப்​புப் படை​யி​னர் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி,​ தீயை அணைத்​த​னர். ​ சே​மிப்​புக் கிடங்​கில் தலா ரூ.1,000 மதிப்​புள்ள 2 ஆயி​ரம் மூட்டை வேப்​பம் பிண்​ணாக்கு அடுக்கி வைக்​கப்​பட்டு இருந்​தது.   அவற்​றில் பெரும் பகுதி எரிந்து சேதம் அடைந்து விட்​ட​தாக சேமிப்​புக் கிடங்கு நிர்​வாகி ஒரு​வர் தெரி​வித்​தார்.

Read more »

ரூ.1 கோடி செல​வில் மீன​வர்​க​ளுக்கு வீடு​கள் கட்ட அடிக்​கல் நாட்​டு ​விழா

சிதம்​ப​ரம்,​ டிச. 2:​ 

          சிதம்​ப​ரத்தை அருகே சுனா​மி​யால் பாதிக்​கப்​பட்ட கிள்ளை மீன​வர் தெரு​வில் தமிழ்​நாடு குடிசை மாற்று வாரி​யத்​தின் மூலம் மீன​வர்​க​ளுக்கு தலா ரூ.3 லட்​சம் மதிப்​பில் 36 வீடு​கள் கட்ட அடிக்​கல் நாட்டு விழா புதன்​கி​ழமை நடை​பெற்​றது.  கிள்ளை பேரூ​ராட்சி தலை​வர் எஸ்.ரவிச்​சந்​தி​ரன் தலைமை வகித்து அடிக்​கல் நாட்​டி​னார்.   இந்​நி​கழ்ச்​சி​யில் மீன​வர் நல​வா​ரிய உறுப்​பி​னர் சத்​தி​ய​மூர்த்தி,​ பேரு​ராட்சி துணைத் தலை​வர் பரம.தயா​ளன்,​ உறுப்​பி​னர்​கள் சங்​கர்,​ கலா,​ கஸ்​தூரி,​ கிராம முக்​கி​யஸ்​தர்​கள் அரு​ண​கிரி,​ மதி​ய​ழ​கன் பூரா​சாமி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

Read more »

குடி​யி​ருப்​போர் சங்க கூட்​ட​மைப்பு எதிர்ப்பு

​ கட​லூர்,​ ​ டிச. 2:​ 
 
                    கட​லூர் பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு ரூ.26 கோடி கூடு​த​லாக ஒதுக்​கீடு செய்​வது முறை​யல்ல என்று கட​லூர் நகர அனைத்து குடி​யி​ருப்​போர் நலச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்பு எதிர்ப்பு தெரி​வித்து உள்​ளது.
 
             கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் மு.மரு​த​வா​ணன் புதன்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ கட​லூர் பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்​காக 150 கி.மீ. நீளச் சாலை​கள் தோண்​டப்​பட்டு பணி​கள் முடிக்​கப்​ப​டா​மல்,​ மக்​கள் கடு​மை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர். போக்​கு​வ​ரத்து நெருக்​க​டி​யும் மக்​கள் சாலை​க​ளைப் பயன்​ப​டுத்த முடி​யாத நிலை​யும் ஏற்​பட்டு உள்​ளது. 18 மாதங்​க​ளில் முடிக்க வேண்​டிய பணி,​ ஆமை வேகத்​தில் நடந்து வரு​கி​றது. இத​னால் சாலை​க​ளில் ஏரா​ள​மான விபத்​து​கள் நிகழ்​கின்​றன. ​
 
 
இத்​திட்​டத்தை நிறை​வேற்​றும் குடி​நீர் வாரிய அதி​கா​ரி​கள் மற்​றும் நக​ராட்சி அதி​கா​ரி​க​ளின் செயல்​பா​டு​கள் கவலை அளிக்​கி​றது. ஒப்​பந்​தக்​கார்​கள் இத்​திட்​டத்தை நிறை​வேற்​றும் திற​னற்​ற​வர்​க​ளாக இருக்​கி​றார்​கள். ஒப்​பந்​தக்​கா​ரர் மனது வைத்​தால்​தான் கட​லூர் மக்​க​ளைக் காப்​பாற்ற முடி​யும் என்ற நிலை ஏற்​பட்டு உள்​ளது. ​
 
இந்த நிலை​யில் இத்​திட்​டத்​துக்கு அரசு ரூ.25.66 கோடி கூடு​த​லாக வழங்க நக​ராட்சி பரி​ந​து​ரைத்து உள்​ளது. ஒப்​பந்​தக்​கா​ரர் ஒப்​பந்​தப்​படி பணி​களை முடிக்​கா​மல்,​ கால​தா​ம​தம் செய்​வ​தும்,​ 50 சதம் பணி​கள்​கூட முடி​வ​டை​யாத நிலை​யில்,​ இந்​தக் கூடு​தல் நிதி ஒதுக்​கீடு செய்​துள்​ளது மக்​கள் மத்​தி​யில் சந்​தே​கங்​களை ஏற்​ப​டுத்தி உள்​ளது. ​
 
உ​டைக்​கப்​பட்ட சாலை​க​ளைச் செப்​ப​னிட ஒப்​பந்​தத்​தில் கூறப்​பட்டு உள்​ள​படி,​ ஒப்​பந்​த​தா​ரர் நெடுஞ்​சா​லைத் துறைக்​கும்,​ நக​ராட்​சிக்​கும் பணம் செலுத்தி இருக்​கி​றாரா?​ மழை​யால் பாதிக்​கப்​பட்ட சாலை​க​ளைச் செப்​ப​னிட நக​ராட்சி மற்​றும் நெடுஞ்​சா​லைத் துறை செல​விட்ட தொகை ஒப்​பந்​த​தா​ர​ரி​டம் பிடித்​தம் செய்​யப் பட்​டதா?​ மற்​றும் ரூ.40 கோடி செல​வில் நடந்​துள்ள பணி​கள் குறித்து,​ பணி​கள் வாரி​யாக மக்​க​ளுக்​குத் தெரி​விக்க வேண்​டும்.
 
வெ​ளிப்​ப​டை​யான அணு​கு​மு​றையை நிர்​வா​கம் ஏற்​ப​டுத்​து​வ​தன் மூலம்,​ ஒப்​பந்​தக்​கா​ரர் முறை​யாக செய்​ய​வில்லை என்​றால் நீதி​மன்​றத்தை நாடு​வது உள்​ளிட்ட நட​வ​டிக்​கை​களை மேற்​கொள்ள இருக்​கி​றோம் என்​றும் மரு​த​வா​ணன் செய்​திக் குறிப்​பில் கூறி​யுள்​ளார்.

Read more »

கட​லூர் பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு மேலும் ரூ.26 கோடி

​ கட​லூர்,​ டிச. 2:​ 


கட​லூர் நகர பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு மேலும் ரூ.26 கோடி வழங்​கும் வகை​யில் திருத்​திய மதிப்​பீட்​டுக்கு கட​லூர் நக​ராட்சி புதன்​கி​ழமை ஒப்​பு​தல் அளித்​தது. இதற்கு சில உறுப்​பி​னர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். ​÷க​ட​லூர் பாதா​ள  சாக்​க​டைத் திட்​டம் ரூ.40.40 கோடி மதிப்​பீட்​டில் தயா​ரிக்​கப்​பட்டு நிறை​வேற்​றப்​பட்டு வரு​கி​றது. 18 மாதங்​க​ளில் முடிக்​கப்​ப​டும் என்று அறி​விக்​கப்​பட்ட இத்​திட்​டம்,​ 3 ஆண்​டு​கள் ஆகி​யும் முடிக்​கப்​ப​ட​வில்லை. 60 சதம் பணி​கள் முடிந்து விட்​ட​தாக குடி​நீர் வடி​கால் வாரி​யம் அறி​வித்து உள்​ளது.   ஆனால்,​ 50 சதம் பணி​கள் கூட முடி​வ​டை​ய​வில்லை என்று பொது​மக்​கள் புகார் தெரி​விக்​கின்​ற​னர். அனைத்​துக்​கும் மேலாக பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு சாலை​க​ளில் தோண்​டப்​பட்ட குழி​கள்,​ பள்​ளங்​கள் முறை​யாக மூடப்​ப​டா​த​தா​லும் சாலை​கள் போடப்​ப​டா​த​தா​லும் பொது​மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர். பாதா​ளச் சாக்​கடை திட்​டம் மீதே மக்​க​ளுக்கு பெரி​தும் வெறுப்பு நிலவி வரு​கி​றது. ​÷இந்த நிலை​யில் அத் திட்​டத்​துக்​கான மதிப்​பீட்டை ரூ.66.03 கோடி​யாக உயர்த்தி அதா​வது மேலும் ரூ.25.63 கோடி ஒதுக்க அரசு முடிவு செய்து உள்​ளது.   இந்த முடி​வுக்கு கட​லூர் நக​ராட்சி புதன்​கி​ழமை ஒப்​பு​தல் அளித்​தது. திருத்​திய மதிப்​பீட்​டின்​படி இத்​திட்​டத்​தின் ஆண்டு பரா​ம​ரிப்​புச் செலவு 20.79 லட்​சம். இத்​திட்​டத்​தில் வீடு​களை இணைக்க வீடு​க​ளுக்கு தலா ரூ.5 ஆயி​ரம் முதல் ரூ.15 ஆயி​ரம் வரை மக்​கள் வைப்​புத் தொகை செலுத்த வேண​டும்.    மாதம்​தோ​றும் ரூ.70 முதல் ரூ.100 வரை கட்​ட​ணம் செலுத்த வேண்​டும். வணிக நிறு​வ​னங்​கள் ரூ.10 ஆயி​ரம் முதல் ரூ.1.5 லட்​சம் வரை வைப்​புத் தொகை செலுத்த வேண்​டும். மாதக் கட்​ட​ணம் ரூ.140 முதல் ரூ. 1,200 வரை செலுத்த வேண்​டும் என்​றும் தெரி​விக்​கப்​பட்​டது. ​


பா ​தா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு கூடு​தல் நிதி ஒதுக்​கு​வ​தற்கு நக​ராட்​சிக் கூட்​டத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் உறுப்​பி​னர்​கள் ஆனந்த்,​ சரளா,​ காங்​கி​ரஸ் உறுப்​பி​னர் சர்​தார்,​ அ.தி.மு.க. உறுப்​பி​னர் குமார் ஆகி​யோர் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். 60 சதம் பணி​கள் முடிந்து விட்​ட​தா​கக் கூறு​கி​றார்​கள்.   முடி​வுற்ற பணி​களே திருப்​தி​யாக இல்லை. அப்​படி இருக்க மீதம் உள்ள 40 சதம் பணிக்கு ரூ.26 கோடி கூடு​த​லாக ஒதுக்​கு​வது முறை​யல்ல என்று அவர்​கள் தெரி​வித்​த​னர். ​÷ப ​தில் அளித்​துப் பேசிய நக​ராட்​சித் தலை​வர் து.தங்​க​ராசு,​ திட்​டத்​தில் பல மாறு​தல்​களை அரசு செய்து உள்​ளது. ரூ.3 கோடி​யில் சுத்​தி​க​ரிப்பு நிலை​யம் கட்ட திட்​ட​மி​டப்​பட்டு இருந்​தது. தற்​போது ரூ.12 கோடி​யில் கட்ட திட்​ட​மி​டப்​பட்டு இருக்​கி​றது. கழிவு நீரை நவீன முறை​யில் சுத்​தி​க​ரிக்க முடிவு செய்து இருக்​கி​றார்​கள்.   எனவே திட்ட மதிப்​பீடு உயர்ந்து இருக்​கி​றது என்​றார். ​

இதை ஏற்க மறுத்த மார்க்​சிஸ்ட் உறுப்​பி​னர்​கள் ஆனந்த்,​ சரளா ஆகி​யோர் கண்​க​ளில் கருப்​புத் துணி​யைக் கட்​டிக் கொண்டு,​ அவை​யின் முன்​னால் அமர்ந்​த​னர். அவர்ளை தி.மு.க. உறுப்​பி​னர்​கள் அங்​கி​ருந்து அப்​பு​றப்​ப​டுத்​தி​னர்.   இரு உறுப்​பி​னர்​க​ளும் அவை​யில் இருந்து வெளி​ந​டப்பு செய்​த​னர். இத​னால் அவை​யில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது. ​

Read more »

கட​லூர் மீன​வர்​கள் மீது நடுக்​கட​லில் தாக்​கு​தல்

கட​லூர்,​ ​ டிச. 2:​ 

                            நடுக்​கட​லில் கட​லூர் மீன​வர்​கள் மீது மீண்​டும் தாக்​கு​தல் நடத்​தப்​பட்​டுள்​ளது. க ​ட​லூரை அடுத்த தாழங்​குடா மீன​வர்​கள் கடந்த நவம்​பர் 24-ம் தேதி கட​லில் மீன்​பி​டிக்​கச் சென்​ற​போது,​ இந்​தி​யக் கடற்​படை.யினர் வழி​ம​றித்து அடை​யாள அட்டை இருக்​கி​றதா பட​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ள​னவா என்று கேட்​டும்,​ 12 மைல் தூரத்​துக்கு மேல் ஏன் வந்​தீர்​கள் என்​றும் கேட்டு மிரட்​டி​னர். 50க்கும் மேற்​பட்ட மீன​வர்​க​ளைத் தடி​யால் தாக்​கி​னர். ​இ​து​கு​றித்து மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அனைத்து மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​க​ளை​யும் அழைத்​துப் பேசி​னார். இக்​கூட்​டத்​தில் இந்​தி​யக் கடற்​ப​டைப் பிர​தி​நி​தி​கள் யாரும் பங்​கேற்​க​வில்லை.

எனி​னும் நடந்த தாக்​கு​த​லுக்கு கடற்​படை அதி​கா​ரி​கள் வருத்​தம் தெரி​வித்​த​தா​க​வும்,​ இனி இத்​த​கைய சம்​ப​வம் நிக​ழாது என்று கடற்​படை அதி​கா​ரி​கள் உறுதி அளித்து இருப்​ப​தா​க​வும் ஆட்​சி​யர் தெரி​வித்​தார். ​தா​ழங்​குடா மீன​வர் கிரா​மத்​தில் கடற்​படை அதி​கா​ரி​கள் செவ்​வாய்க்​கி​ழமை முகா​மிட்டு,​ கட​லுக்கு மீன்​பி​டிக்​கச் செல்​லும் மீன​வர்​கள் எவ்​வாறு நடந்து கொள்ள வேண்​டும் என்று விழிப்​பு​ணர்வு முகாம் நடத்​தி​னர். மீன​வர் அடை​யாள அட்டை இல்​லா​விட்​டா​லும் ரேஷன் அட்டை,​ வாக்​கா​ளர் அடை​யாள அட்டை இருந்​தால் அவற்றை எடுத்​துச் செல்​ல​லாம் என்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அறி​வு​றுத்தி இருந்​தார். ​

இந்த நிலை​யில் புதன்​கி​ழமை கட​லூரை அடுத்த சொத்​திக் குப்​பம் கிரா​மத்​தைச் சேர்ந்த மீன​வர்​கள் 10 பேர் 3 பட​கு​க​ளில் மீன் பிடிக்​கச் சென்று இருந்​த​னர். ​அ​வர்​களை இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் வழி​ம​றித்​துத் தாக்கி உள்​ள​தாக தெரி​ய​வந்​துள்​ளது. ஒரு பட​கில் இருந்த மீன​வர்​கள் ஞான​வேல்,​ குண​பா​லன் ஆகி​யோர் தடி​யால் தாக்​கப்​பட்​ட​னர்.

இ​து​கு​றித்து தமிழ்​நாடு மீன​வர் பேரவை கட​லூர் மாவட்​டத் தலை​வர் சுப்​பு​ரா​யன் கூறு​கை​யில்,​ சொத்​திக் குப்​பம் மீன​வர்​கள் மாவட்ட ஆட்​சி​ய​ரின் அறி​வு​ரை​யின் பேரில் ரேஷன் அட்டை மற்​றும் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​களை எடுத்​துச் சென்று உள்​ள​னர். அவை​கள் எதை​யும் பார்க்​கா​மல் இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் மீன​வர்​க​ளைத் தாக்கி உள்​ள​னர். இது மிக​வும் கண்​டிக்​கத் தக்​கது என்​றார்.​

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior