உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

பஸ் நிறுத்​தத்துக்காக போராடும் பொதுமக்கள்

கட ​லூர்,​ நவ. 26:​

50 ஆண்​டு​க​ளாக இருந்து வந்த பஸ் நிறுத்​தம் அகற்​றப் ​பட்​ட​தால்,​ அதை மீண்​டும் பெறு​வ​தற்​காக நெல்​லிக்​குப்​பம் மக்​கள் நீண்ட போராட்​டத்தை நடத்தி வரு​கி​றார்​கள். ​ ​​ ​

பண்​ருட்டி-​கட​லூர் மார்க்​கத்​தில் நெல்​லிக்​குப்​பத்​தில் போலீஸ் லைன்,​ பிள்​ளை​யார் கோயில்,​ அஞ்​சல் நிலை​யம்,​ ஜான​கி​ரா​மன் நகர் ஆகிய பஸ் நிறுத்​தங்​க​ளும்,​ கட​லூர்-​ பண்​ருட்டி மார்க்​கத்​தில்,​ ஜான​கி​ரா​மன் நகர்,​ அஞ்​சல் நிலை​யம்,​ கடைத்​தெரு,​ ​ காவல்​நி​லை​யம்,​ போலீஸ் லைன் ஆகிய பஸ் நிறுத்​தங்​க​ளும் 50 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இருந்து வந்​துள்​ளன. ​​ ​ ஓராண்​டுக்கு முன் ரூ.1 கோடி செல​வில் நெல்​லிக்​குப்​பத்​தில் பஸ் நிலை​யம் கட்​டப்​பட்டு,​ துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் திறந்து வைத்​தார். ஆனால் கடந்த ஓராண்​டாக பஸ் நிலை​யத்​துக்​குள் எந்த பஸ்​சும் வந்​து​போ​வது இல்லை. இந்த நிலை​யில் செப்​டம்​பர் மாதக் கடை​சி​யில்,​ நெல்​லிக்​குப்​பம் பஸ் நிலை​யத்தை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் பார்​வை​யிட்டு பஸ் நிலை​யத்​துக்​குள் அனைத்து பஸ்​க​ளும் வந்து போக நட​வ​டிக்கை மேற்​கொண்​டார்.​ ​ அக்​டோ​பர் 1-ம் தேதி முதல் அனைத்து பஸ்​க​ளும் பஸ் நிலை​யத்​துக்​குள் வந்​து​போ​கின்​றன. பஸ் நிலை​யத்​துக்கு உள்ளே செல்​லும் வழி​யும்,​ வெளி​யே​றும் வழி​யும் ஒரே இடத்​தில் இருப்​ப​தா​லும்,​ பஸ் நிலைய வாயி​லில் எப்​போ​தும் பஸ்​கள் நிற்​கும் சூழ்​நிலை ஏற்​ப​டு​வ​தா​லும் பண்​ருட்டி-​ கட​லூர் நெடுஞ்​சா​லை​யில் வாக​னப் போக்​கு​வ​ரத்து நெரி​சல் தொடர்ந்து ஏற்​ப​டு​கி​றது.​ ​ இந்த நிலை​யில் பஸ் நிலை​யத்​தில் இருந்து,​ 500 மீட்​டர் தொலை​வில் உள்ள அஞ்​சல் நிலை​யம்,​ கடைத் தெரு ஆகிய இரு பஸ் நிறுத்​தங்​க​ளி​லும் பஸ்​கள் நிற்​கக் கூடாது என்று போலீ​ஸôர் அண்​மை​யில் உத்​த​ர​விட்டு உள்​ள​னர். ​​ ​ அஞ்​சல் நிலைய பஸ் நிறுத்​தத்​தில் இறங்​கித்​தான் 3 பள்​ளி​கள்,​ வங்​கி​கள்,​ எம்.எல்.ஏ. அலு​வ​ல​கம் உள்​ளிட்​ட​வற்​றுக்கு பொது மக்​கள்,​ மாணவ,​ மாண​வி​யர் செல்ல வேண்​டி​யது இருக்​கி​றது. பஸ் நிறுத்​தத்தை எடுத்து விட்​ட​தால் பொது மக்​கள் பஸ் நிலை​யத்​தில் இறங்கி நீண்​ட​தூ​ரம் நடந்தோ,​ ரூ.30க்கு மேல் செல​விட்டு ஆட்டோ ரிக்​ஷாக்​க​ளி​லோ​தான் செல்ல வேண்​டிய கட்​டா​யம் இருப்​ப​தாக பொது​மக்​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​ பஸ் நிலை​யத்​துக்​குள் பஸ்​க​ளும் பொது மக்​க​ளும் செல்ல வேண்​டும் என்ற கட்​டா​யத்​துக்​காக 50 ஆண்​டு​க​ளாக அனு​ப​வித்த வந்த,​ மக்​க​ளுக்கு வச​தி​யாக இருந்த பஸ் நிறுத்​தங்​களை ஏன் அகற்ற வேண்​டும் என்று கேட்​கி​றார்​கள் நெல்​லிக்​குப்​பம் பொது மக்​கள். மேலும் இரவு 10 மணிக்கு மேல் பஸ் நிலை​யத்​துக்​குள் பஸ்​கள் செல்​வ​தில்லை. எனவே பாது​காப்​பற்ற நிலை ஏற்​பட்டு உள்​ளது என்​றும் பொது மக்​கள் கூறு​கின்​ற​னர்.​ ​ பஸ் நிறுத்​தங்​கள் அகற்​றப்​பட்​ட​தைக் கண்​டித்து நெல்​லிக்​குப்​பம் நகர மக்​கள் இணைந்து உண்​ணா​வி​ர​தம்,​ 3 ஆயி​ரம் வீடு​க​ளில் கருப்​புக் கொடி என பல போராட்​டங்​களை நடத்தி உள்​ள​னர். மேலும் தொடர் போராட்​டங்​களை நடத்​த​வும் திட்​ட​மிட்டு உள்​ள​னர். மக்​கள் பிர​தி​நி​தி​க​ளு​டன் மாவட்ட நிர்​வா​கம் பேச்சு நடத்தி,​ பறிக்​கப்​பட்ட உரி​மையை மீண்​டும் வழங்க வேண்​டும் என்று பொது​மக்​கள் எதிர்​பார்க்​கி​றார்​கள்.

உரி​மை​ பறிப்​பு

இது​கு​றி​தது மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் வி.உத​ய​கு​மார் கூறு​கை​யில்,​ "பஸ் நிலை​யம் செயல்​பட வேண்​டும் என்​ப​தில் கருத்து வேறு​பாடு இல்லை. ஆனால்,​ போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பை எடுத்து விட்​ட​தால் 6 நக​ராட்சி வார்​டு​க​ளைச் சேர்ந்த 20 ஆயி​ரம் மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர். 3 பள்​ளி​கள்,​ பாரத ஸ்டேட் வங்கி,​ கோயில்​கள் திரு​மண மண்​ட​பங்​கள்,​ எம்.எல்.ஏ. அலு​வ​ல​கம் ஆகி​ய​வற்​றுக்​குச் செல்​வோர் பஸ் நிலை​யம் சென்று வர வேண்​டிய நிலை இருப்​ப​தால் பெரி​தும் அவ​திப்​ப​டு​கி​றார்​கள். 1000 மக்​கள் தொகை கொண்ட கிரா​மத்​துக்கு பஸ் வசதி செய்து கொடுக்​கும் அரசு,​ 20 ஆயி​ரம் மக்​கள் வசிக்​கும் பகு​திக்கு,​ 60 ஆண்​டு​க​ளாக பயன்​ப​டுத்தி வந்த பஸ் நிறுத்​தத்தை அகற்ற வேண்​டிய கட்​டா​யம் என்ன. போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பை எடுக்​கப்​பட்​ட​தால்,​ பஸ் நிலை​யத்​துக்​குள் வணிக வளர்ச்சி எது​வும் ஏற்​ப​டப் போவ​தில்லை. பஸ் நிறுத்​தத்தை அகற்​றி​யது மக்​க​ளின் அடிப்​படை உரி​மை​யைப் பறிப்​ப​தா​கும்' என்​றார் உத​ய​கு​மார்.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதக் கடை ரூ.7.56 லட்சத்துக்கு ஏலம்

சிதம்பரம், நவ. 26:

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் 3-ம் பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்களில் பிரசாதக் கடை அமைத்து நடத்தவும், கிழக்கு நுழைவு வாயிலில் தேங்காய் பழக்கடை, மேற்கு நுழைவு வாயிலில் தேங்காய், பழக்கடை வைத்து நடத்தவும் வியாழக்கிழமை ஏலம் நடைபெற்றது.÷அறநிலையத்துறை இணை ஆணையர் ந.திருமகள் முன்னிலையில் உதவி ஆணையர் ஆர்.ஜெகந்நாதன், செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், கே.சிவக்குமார் ஆகியோர் ஏலத்தை நடத்தினர்.÷பிரசாதக் கடை ஏலம் எடுக்க 12 பேர் டெபாசிட் கட்டி வந்தனர். தேங்காய் பழக்கடை ஏலம் எடுக்க 2 பேர் வந்திருந்தனர்.÷பிரசாதக் கடைக்கு தேவஸ்தானத்தின் குறைந்தபட்ச மதிப்பான ரூ.5 லட்சம் கேள்வியிலிருந்து ஏலம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்தொகையை உயர்த்தி கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் ஏலத்தொகை படிப்படியாக குறைக்கப்பட்டது. அப்போதும் ஏலத்தொகை ரூ.2 லட்சம் வரை ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. அதேபோன்று கிழக்கு நுழைவுவாயில் மற்றும் மேற்கு நுழைவு வாயிலில் தேங்காய் பழக்கடைகள் 2-க்கும் தேவஸ்தான மதிப்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து கேள்வி தொடங்கப்பட்டது. ரூ.20 ஆயிரம் வரை ஏலம் மதிப்பு குறைக்கப்பட்டு ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

பின்னர் டெண்டர் பெட்டியை திறந்ததில் ஆலயத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயிலில் பிரசாதக் கடைகள் நடத்த ரூ.7.56 லட்சத்துக்கு புவனகிரி வடக்கு திட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் டெண்டர் போட்டிருந்தார். அதிகபட்ச தொகையாக அவர் டெண்டர் கோரியதால் அவருக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தேங்காய் பழக்கடைகளுக்கான ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

Read more »

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் விரைவில் கட்டண முறை அமல்படுத்தப்படும்

சிதம்பரம், நவ. 26:

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் விரைவில் அர்ச்சனை, சிறப்பு தரிசனம் மற்றும் அபிஷேகம் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் விதிப்பது குறித்தும், பூஜை செய்பவர்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளிட்டவை குறித்து அறநிலையத்துறை அலுவலர்களால் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விதிப்பு முறை வருகிற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழா முதல் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ந.திருமகள் தெரிவித்தார்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:


கோயிலில் வியாழக்கிழமை மேலும் 5 உண்டியல்கள் வைக்கப்படவிருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத்துக்குப் பிறகு நடராஜர் கோயிலில் மேலும் 5 உண்டியல்கள் வைக்கப்படும். தேங்காய் பழக்கடைகள் ஏலம் போகாததால் அறநிலையத் துறை சார்பில் அக்கடைகள் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆலயத்தில் பூஜை செய்யும் பொது தீட்சிதர்கள் ஆலய செயல் அலுவலர் அலுவலகத்தில் தங்களது பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என ந.திருமகள் தெரிவித்தார்

Read more »

இருந்தும் பயனில்லாத சிக்னல்: வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி, நவ. 26:

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் இரு சிக்னல்கள் இருந்தும், ஒன்று கூட எரியாததால் கடந்த இரு நாள்களாக வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், போக்குவரத்து போலீஸரும் அவதி அடைந்துள்ளனர்.

பண்ருட்டிக்கு வியாபாரம் மற்றும் பணி நிமித்தமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் நகரின் மையப் பகுதியான காந்திசாலை, ராஜாஜி சாலை, சென்னை-கும்பகோணம் சாலை மற்றும் கடலூர் சாலையில் மளிகை, பாத்திரம், தங்க நகை உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ளதால், நான்கு முனை சந்திப்பு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்து பரபரப்பாக காணப்படும்.÷மேலும் சென்னை-கும்பகோணம், கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலைகள் நான்கு முனை சந்திப்பில் சந்திக்கின்றன. இதனால் இச்சாலையில் வரும் வாகனங்கள் நான்கு முனை சந்திப்பைக் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.÷இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நான்கு முனை சந்திப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொறுத்தப்பட்ட சிக்னல் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புதிதாக ஒரு சிக்னல் பொருத்தப்பட்டு அது பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் பழைய சிக்னல் பராமரிப்பின்றி கை விடப்பட்டது.

இந்நிலையில் புதிய சிக்னல் இம்மாதம் 18-ம் தேதி திடீர் என செயல்படாமல் போனது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் சரி செய்யப்பட்ட புதிய சிக்னல் கடந்த இரு நாள்களாக மீண்டும் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து போலீஸôர் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்ப படாத பாடுபடுகின்றனர்.

Read more »

300 பட​கு​கள் மீன்​பி​டிக்​கச் செல்​ல​வில்லை

கட ​லூர்,​ நவ. 26:​

கட​லூர் அருகே தாழங்​கு​டா​வைச் சேர்ந்த 50-க்கும் மேற்​பட்ட மீன​வர்​கள்,​ இந்​திய கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்ட சம்​ப​வம் தொடர்​பாக,​ வியா​ழக்​கி​ழமை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​ சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன் ஆகி​யோர் சம்​பந்​தப்​பட்ட கிரா​மத்​துக்​குச் சென்று சமா​தா​னப் பேச்சு நடத்​தி​னர்.÷தா​ழங்​கு​டா​வைச் சேர்ந்த மீன​வர்​கள் 100 பேர் 20 பட​கு​க​ளில்,​ செவ்​வாய்க்​கி​ழமை,​ வங்​கக் கட​லில் வழக்​க​மாக மீன்​பி​டிக்​கும் பாறைப் பகு​தி​யில் வஞ்​ச​ரம் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​னர். காலை 10 மணி அள​வில் இந்​திய கடற்​ப​டை​யி​னர் ஒரு கப்ப​லில் அங்கு வந்​த​னர். அதில் இருந்து இறங்கி பட​கு​க​ளுக்கு வந்த சிப்​பாய்​கள்,​ மீன​வர்​களை அணுகி அடை​யாள அட்டை இருக்​கி​றதா பட​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு இருக்​கி​றதா 12 மைல் தூரத்​துக்கு அப்​பால் ஏன் வந்​தீர்​கள் என்று கேட்டு மிரட்டி,​ தடி​யால் சர​மா​ரி​யா​கத் தாக்​கி​னர். இதில் 50க்கும் மேற்​பட்ட மீன​வர்​கள் காயம் அடைந்​த​னர். ​÷பு ​தன்​கி​ழ​மை​யும் அதே பகு​தி​யில் மீன்​பி​டிக்​கச் சென்ற மீன​வர்​கள் இந்​தி​யக் கடற்​ப​டை​யி​ன​ரால் விரட்​டி​ய​டிக்​கப்​பட்​ட​னர். இத​னால் பாதிக்​கப்​பட்ட மீன​வர்​கள் ரூ. 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மதிப்​புள்ள வலை​களை அப்​ப​டியே போட்​டு​விட்டு கரை திரும்பி உள்​ள​னர். மீன் வலை​கள் கடற்​ப​டை​யி​ன​ரால் சேதப்​ப​டுத்​தப்​பட்டு இருக்​க​லாம் என்ற அச்​சம் மீன​வர்​கள் மத்​தி​யில் உள்​ளது. 3 நாள்​க​ளாக தாழங்​குடா மீன​வர்​க​ளுக்கு தொழில் தடை​பட்​டது. ​÷இச்​சம்​ப​வம் கட​லூர் மாவட்ட மீன​வர்​க​ளி​டையே கடும் அச்​சத்தை ஏற்​ப​டுத்தி இருக்​கி​றது. இத​னால் வியா​ழக்​கி​ழமை தாழங்​கு​டா​வைச் சேர்ந்த 300 பட​கு​க​ளில் 250 பட​கு​கள் மீன்​பி​டிக்​கச் செல்​ல​வில்லை. இந்​தி​யக் கடற்​ப​டை​யின் செய​லுக்​குக் கண்​ட​னம் தெரி​வித்து சில வீடு​க​ளில் கருப்​புக் கொடி ஏற்​றப்​பட்டு இருந்​தது. கட​லூர் நக​ரில் சுவர்​க​ளி​லும் பஸ்​க​ளி​லும் கண்​ட​னச் சுவ​ரொட்​டி​கள் ஒட்​டப்​பட்டு இருந்​தன. மீன​வக் கிரா​மங்​கள் ஒன்​று​கூடி வியா​ழக்​கி​ழமை கூட்​டம் நடத்தி நட​வ​டிக்கை எடுக்​கத் திட்​ட​மிட்டு இருந்​த​னர். ​÷இந்த நிலை​யில் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​ கட​லூர் எம்.எல்.ஏ. கோ.அய்​யப்​பன்,​ மாவட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஸ் ஆகி​யோர் தாழங்​குடா கிரா​மத்​துக்​குச் சென்​ற​னர். அங்​குள்ள மீன​வர்​க​ளைச் சந்​தித்​துப் பேசி​னர். நடந்த சம்​ப​வத்​துக்கு கடற்​படை அதி​கா​ரி​கள் வருத்​தம் தெரி​வித்​த​தா​கக் கூறி​னர். எனி​னும் மீன​வர்​கள் சமா​தா​னம் அடை​ய​வில்லை. மீன​வர்​க​ளுக்​குக் கட​லில் மீன்​பி​டிக்க எல்லை வகுப்​பதை ஏற்க முடி​யாது என்று தெரி​வித்​த​னர். மேலும் மீன​வர்​க​ளுக்கு அடை​யாள அட்​டை​களை அர​சு​தான் வழங்க வேண்​டும் என்​றும் வலி​யு​றுத்​தி​னர். இந்​திய கடற்​ப​டையே எங்​களை அன்​னி​யர்​கள்​போல் தாக்​கு​வதை ஏற்க முடி​யாது என்​றும் கூறி​னர். ​

இப்​பி​ரச்​சினை தொடர்​பாக அனைத்து மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​க​ளு​டன் பேசு​வ​தாக மாவட்ட ஆட்​சி​யர் தெரி​வித்து விட்டு கட​லூர் திரும்​பி​னார்.​

Read more »

ஆட்​சி​யர் அறி​வுரை

​ கட​லூர்,​ நவ. 26:​

மீன​வர்​கள் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​க​ளு​டன் மீன்​பி​டிக்​கச் செல்​லு​மாறு,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வியா​ழக்​கி​ழமை அறி​வுரை வழங்​கி​னார்.

24-ம் தேதி கட​லூர் தாழங்​குடா மீன​வர்​கள் 100 பேர் வங்​கக் கட​லில் வழக்​க​மான இடத்​தில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​போது இந்​தி​யக் கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்​ட​னர். இத​னால் மீனவ மக்​க​ளி​டையே கொந்​த​ழிப்பு ஏற்​பட்​டது. எனவே வியா​ழக்​கி​ழமை மாலை மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​களை அழைத்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​னார். பின்​னர் அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ ​÷க​டற்​படையினர் மீன​வர்​க​ளைத் தாக்​கக்​கூ​டாது என்று மீன​வர்​கள் கேட்​டுக் கொண்​ட​னர். சந்​தே​கப்​பட்​டால் மீன​வர்​க​ளைப் பிடித்து,​ கட​லூர் காவல் துறை​யி​ன​ரி​டம் ஒப்​ப​டைக்​க​லாம் என்​றும் கூறி​னர். கடற்​ப​டை​யி​ன​ரி​டம் இருந்து தங்​க​ளுக்​குப் பாது​காப்பு வேண்​டும் என்​றும் கோரி​னர்.÷இந்​திய இறை​யாண்​மைக்கு அச்​சு​றுத்​தல் ஏற்​பட்டு இருப்​ப​தா​லேயே நாட்டு நலன் கருதி கடற்​ப​டை​யி​னர் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு இருக்​கி​றார்​கள் என்று மீன​வர்​க​ளி​டம் எடுத்​துக் கூறப்​பட்​டது. அவர்​க​ளும் ஏற்​றுக் கொண்​ட​னர். அனைத்து மீன​வர்​க​ளுக்​கும் விரை​வில் அடை​யாள அட்டை வழங்க மீன்​வ​ளத் துறைக்கு உத்​த​ர​வி​டப்​பட்டு இருக்​கி​றது.÷மீ​ன​வர் அடை​யாள அட்டை வழங்​கும் வரை,​ வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​களை மீன​வர்​கள் எடுத்​துச் செல்​லு​மாறு அறி​வு​றுத்​தப்​பட்டு இருக்​கி​றது. மீன​வர்​கள் அச்​ச​மின்றி மீன் பிடிக்​கச் செல்​ல​லாம் என்​றார் ஆட்​சி​யர்.÷கூட் ​டத்​தில் சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன்,​ கட​லூர் நக​ராட்​சித் தலை​வர் து.தங்​க​ராசு,​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ மீன் வளத்​துறை உதவி இயக்​கு​நர் அறி​வு​மதி,​ மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் சுப்​பு​ரா​யன்,​ ஏகாம்​ப​ரம்,​ குப்​பு​ராஜ் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

மார்க்​சிஸ்ட் கண்​ட​னம்

​ கட​லூர்,​ நவ. 26:​

கட​லூர் மீன​வர்​களை இந்​தி​யக் கடற்​படை தாக்​கி​ய​தற்கு மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி கண்​ட​னம் தெரி​வித்து உள்​ளது. ​

அக்​கட்​சி​யின் கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் டி.ஆறு​மு​கம் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ கட​லில் மீன்​பி​டிக்​கச் சென்ற தாழங்​குடா மீன​வர்​கள் 50க்கும் மேற்​பட்​ட​வர்​களை இந்​திய கடற்​ப​டை​யி​னர் தாக்கி உள்​ள​னர். மீன்​க​ளை​யும் வலை​க​ளை​யும் விட்​டு​விட்டு தப்​பிப் பிழைத்​துக் கரை சேர்ந்து உள்​ள​னர். இத் தாக்​கு​தலை மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி வன்​மை​யா​கக் கண்​டிக்​கி​றது. மத்​திய அரசு உடனே தலை​யிட்டு மீன​வர்​க​ளின் வாழ்​வா​தா​ரங்​க​ளை​யும்,​ உரி​மை​க​ளை​யும்,​ பாது​காக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். ​÷மத்​திய அரசு கொண்​டு​வர இருக்​கும் கடல் மீன் தொழில் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தில் மீன​வர்​க​ளின் உரி​மை​க​ளைக் கடு​மை​யா​கப் பாதிக்​கும் பல்​வேறு சரத்​து​கள் இடம்​பெற்று உள்​ளன. இச்​சட்​டம் நடை​மு​றைக்கு வரும் முன்பே கட​லோ​ரக் காவல் படை​யி​னர் அத்​து​மீறி முறை​யான விசா​ர​ணை​யின்றி,​ மீன​வர்​க​ளைத் தாக்கி இருப்​பது வேதனை அளிக்​கி​றது. ​

க​டல் வளத்​தை​யும்,​ மீனவ மக்​க​ளின் உரி​மை​க​ளை​யும் வாழ்​வா​தா​ரத்​தை​யும் பாதிக்​கும் கடல் மீன் தொழில் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்தை எதிர்த்​துக் குரல் கொடுக்க அனைத்​துப் பகுதி மக்​க​ளும் அணி திரள வேண்​டும் என்று கேட்​டுக் கொள்​கி​றோம் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

Read more »

ரூ.500 லஞ்​சம்: அரசுப் பள்ளி ஆசி​ரி​யர் கைது

​ கட​லூர்,​ நவ. 26:​

ரேஷன் கார்டை ஆய்வு செய்​வ​தற்கு ரூ.500 லஞ்​சம் வாங்​கி​ய​தாக,​ அர​சுப் பள்ளி ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை ​(49) வியா​ழக்​கி​ழமை கைது செய்​யப்​பட்​டார். ​

க​ட​லூர் மாவட்​டத்​தில் உரிய முக​வ​ரி​யில் இல்​லாத குடும்ப அட்​டை​தா​ரர்​க​ளின் கார்​டு​கள் போலிக் கார்​டு​கள் என்று கண்​ட​றி​யப்​பட்டு,​ விசா​ர​ணை​யில் வைக்​கப்​பட்டு உள்​ளன. இந்​தக் கார்​டு​க​ளின் உண்​மைத் தன்மை கண்​ட​றிய ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கி​றது. இப்​ப​ணி​யில் ஆசி​ரி​யர்​க​ளும் ஈடு​ப​டுத்​தப்​பட்டு உள்​ள​னர்,​ கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் அர​சி​னர் மக​ளிர் மேல்​நி​லைப் பள்ளி ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை​யும் இப்​ப​ணி​யில் அமர்த்​தப்​பட்டு இருந்​தார்.÷அ ​வர் கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் சின்​ன​வா​ணி​யர் தெரு​வில் கடை வைத்து இருக்​கும்,​ நேமி​சந்த் ஜெயின் ரேஷன் என்​ப​வ​ரின் ரேஷன் கார்டை புதுப்​பிக்க ரூ.500 லஞ்​சம் கேட்​டா​ராம். மேலும் அவ​ரது கடை​யில் உள்ள ஸ்டே​ஷ​னரி பொருள்​க​ளை​யும் இல​வ​ச​மா​கப் பெற்​றுச் சென்​றா​ராம்.

இ ​து​கு​றித்து நேமி​சந்த் ஜெயின் கட​லூர் மாவட்ட லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸ​ரி​டம் புகார் செய்​தார். லஞ்ச ஒழிப்​புப் போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் வேத​ரத்​தி​னம் வழக்​குப் பதிவு செய்து,​ ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை​யைக் கையும் கள​வு​மா​கப் பிடிக்க உத்​த​ர​விட்​டார். வியா​ழக்​கி​ழமை ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் தனது வீட்​டில் இருந்​தார் அவ​ரி​டம் நேமி​சந்த் ஜெயின் ரூ.500 லஞ்​சம் கொடுக்​கும்​போது,​ மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸôர் விரைந்து சென்று கைது செய்​த​னர்.

Read more »

குடும்ப வன்​முறை வழக்​கு​க​ளில் விரை​வில் தீர்வு

கட ​லூர்,​ நவ. 26:​

குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளில்,​ விரை​வில் தீர்வு காண வேண்​டும் என்று கட​லூ​ரில் நடந்த பெண்​க​ளுக்கு எதி​ரான வன்​முறை எதிர்ப்பு மாநாட்​டில் கோரிக்கை விடப்​பட்​டது.÷

அ​னைத்​ திந்​திய ஜன​நாய மாதர் சங்​கம் சார்​பில் இந்த மாநாடு கட​லூ​ரில் புதன்​கி​ழமை நடந்​தது. மாநாட்​டில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​÷

கு டும்ப வன்​முறை சட்​டம் 2005-ல் அம​லுக்கு வந்​தது. 2007 முதல் இது​வரை தொட​ரப்​பட்ட வழக்​கு​க​ளில் இன்​ன​மும் தீர்வு காணப்​ப​ட​வில்லை. எனவே குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளில் விரை​வில் தீர்வு காண நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். ​

வி​ருத்​தா​ச​லம் வட்​டம் ஆவட்​டி​யில் இளம் பெண் கலைச்​செல்வி,​ குடும்ப வன்​மு​றை​யால் எரித்​துக் கொல்​லப்​பட்​டார். இது​வரை குற்​ற​வாளி கைது செய்​யப்​ப​டா​தது கண​டிக்​கத் தக்​கது. விரை​வில் குற்​ற​வா​ளி​யைக் கைது செய்ய வேண்​டும். கட​லூர் மாவட்​டத்​தில் சிறு​மி​யர் மீதான பாலி​யல் பலாத்​கார சம்​ப​வங்​கள் அதி​க​ரித்து வரு​வது கவலை அளிக்​கி​றது. இது​கு​றித்து போலீ​ஸôர் கடு​மை​யான நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். சிறு​வர் மீதான வன்​கொ​டுமை தடுப்​புச் சட்​டம் குறித்து மக்​க​ளி​டையே விழிப்​பு​ணர்வை ஏற்​ப​டுத்த வேண்​டும் என்று கோரும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப் பட்​டன.÷மா ​நாட்​டுக்கு அனைத்​திந்​திய ஜன​நாய மாதர் சங்க கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் வி.மேரி தலைமை தாங்​கி​னார்., மாவட்ட நிர்​வா​கி​கள் எம்.மனோ​ரஞ்​சி​தம்,​ பி.சிவ​காமி,​ எஸ்.லட்​சுமி எஸ்.சந்​திரா உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர். ​ ​

மா​வட்ட ஊராட்​சித் தலைவி இரா.சிலம்​புச்​செல்வி தொடங்கி வைத்​துப் பேசி​னார். குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளைத் தொகுத்து மாவட்​டத் தலை​வர் எஸ்.வாலண்​டீனா பேசி​னார். மாநி​லச் செய​லா​ளர் ஜோதி​லட்​சுமி,​ சக்கி குடும்ப நல ஆலோ​சனை மைய நிர்​வாகி கோடீஸ்​வ​ரன்,​ சிதம்​ப​ரம் நக​ராட்​சித் தலை​வர் பெüஜி​யா​பே​கம்,​ கோண்​டூர் ஊராட்சி மன்​றத் தலை​வர் சுஜாதா ராமச்​சந்​தி​ரன் உள்​ளிட்ட பலர் பேசி​னர்.

Read more »

சாதிச் சான்​றுக்கு வரும் 30-க்குள் விண்​ணப்​பிக்க வேண்​டும்

கட ​லூர்,​ நவ.26: ​

மாண​வர்​கள் நிரந்​தர சாதிச் சான்​றி​தழ் கோரி வரும் 30-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கு​மாறு கட​லூர் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் அமு​த​வல்லி வேண்​டு​கோள் விடுத்து உள்​ளார்.​ ​ அவர் செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ ​​

கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து அரசு மற்​றும் தனி​யார் உயர்​நிலை,​ மேல்​நி​லைப் பள்​ளி​கள்,​ மெட்​ரிக் பள்​ளி​க​ளில் 10 மற்​றும் 12-ம் வகுப்​பில் பயி​லும் மாணவ மாண​வி​யர் சாதிச் சான்​றி​தழ்​களை,​ தங்​கள் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர்​கள் மூலம் விண்​ணப்​பித்​துப் பெற்​றுக் கொள்​ள​லாம். ​​ ஆனால் இது​வரை சுமார் 10 ஆயி​ரம் மாணவ,​ மாண​வி​யர் நிரந்​த​ரச் சாதிச் சான்​றி​தழ் கேட்டு விண்​ணப்​பிக்​க​வில்லை என்று தெரிய வந்​துள்​ளது. ​​ எனவே சாதிச் சான்​றி​த​ழுக்கு இது​வரை விண்​ணப்​பிக்​கா​த​வர்​கள் 30-11-2009-க்குள் அந்​தந்​தப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர்​கள் மூல​மாக விண்​ணப்​பிக்​கு​மாறு கேட்​டுóக் கொள்​ளப்​ப​டு​கி​றார்​கள் என்று செய்​திக்​கு​றிப்பு தெரி​விக்​கி​றது.

Read more »

பிரா​ம​ணர் சங்க நிர்​வா​கி​கள் தேர்வு

சிதம் ​ப​ரம், ​ நவ. 26:

காட்​டு​மன்​னார்​கோவி​லில் பிரா​ம​ணர் சங்​கக்​கூட்​டம் அண்​மை​யில் நடை​பெற்​றது. கூட்​டத்​தில் தலை​வர்-​ எஸ்.சீனு​வா​ச​நா​ரா​ய​ணன்,​ செய​லா​ளர்-​ கே.ஆர்.ராமா​னு​ஜம்,​ துணைத்​த​லை​வர்-​ வி.ராம​கி​ருஷ்​ணன்,​ துணைச்​செ​ய​லா​ளர்-​ டி.சீனு​வா​சாச்​சாரி,​ பொரு​ளா​ளர்-​பி.வி.சட​கோ​பன் ஆகிய புதிய நிர்​வா​கி​கள் தேர்வு செய்​யப்​பட்​ட​னர். நோபல் பரிசு பெற்ற சிதம்​ப​ரத்​தில் பிறந்த வெங்ட்​ரா​ம​கி​ருஷ்​ண​னுக்கு பாராட்டு தெரி​விப்​பது,​ எம்.பி. நிதியி​லி​ருந்து ஈமக்​கி​ரியை மண்​ட​பம் கட்​டிக்​கொ​டுத்த அர​சுக்​கும்,​ உறு​து​ணை​யாக இருந்​த​வர்​க​ளுக்​கும் நன்றி தெரி​விப்​பது எனத் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

Read more »

சிதம்பரம் ஆலயத்துக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை


சிதம் ​ப​ரம்,​ நவ. 26:​

சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லுக்கு வரும் ஊன​முற்​றோர் கோயிலை சுற்​றிப்​பார்க்க கைப்​பிடி வைக்​கப்​பட்டு,​ அம​ர​வைத்து அழைத்​துச் செல்​லக்​கூ​டிய 2 சக்கர நாற்காலிகளை பக்​தர் ஒரு​வர் கோயி​லில் உள்ள அற​நி​லை​யத்​துறை அலு​வ​ல​கத்​துக்கு நன்​கொ​டை​யாக வழங்​கி​யுள்​ளார். சி​தம்​ப​ரம் விளங்​கி​யம்​மன்​கோ​யில் தெரு​வைச் சேர்ந்த நக​ர​மன்ற முன்​னாள் தலை​வர் சி.ப.கண்​ணை​யன் மக​னும்,​ நக​ர​மன்ற முன்​னாள் உறுப்​பி​ன​ரு​மான சி.ப.க.ராஜன் இந்த சக்கர நாற்காலிகளை ஆலய செயல் அலு​வ​லர் க.சிவக்​கு​மா​ரி​டம் வழங்​கி​னார். ஆல​யத்துக்கு ஊன​முற்​றோரை அழைத்து வரும் சுற்​று​லாப் பய​ணி​கள் ஆலய செயல் அலு​வ​லர் அலு​வ​ல​கத்​தில் உள்ள இந்த சக்கர நாற்காலிகளை பெற்று ஆல​யத்தை சுற்​றிப் பார்த்​து​விட்டு மீண்​டும் அலு​வ​ல​கத்​தில் ஒப்​ப​டைக்க வேண்​டும் என பக்​தர்​க​ளுக்கு செயல் அலு​வ​லர் க.சிவக்​கு​மார் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.​


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior