உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 30, 2010

தமிழக கவர்னர் சிதம்பரம் வருகை

சிதம்பரம் :

                 சிதம்பரத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் வருகையையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை பார்க்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரும் 6ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.  கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்குகிறார். அவரது வருகையையொட்டி பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஹெலிபேட் மைதானத் தில் நேற்று மதியம் ஹெலிகாப்டர் ஒத்திகை பார்க்கப்பட்டது.

Read more »

குறைந்த நீர்.. நிறைந்த மகசூல்...

சிதம்பரம்: 
                குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிகளவு நெல் சாகுபடி செய்ய வேளாண் ஆராய்ச்சிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 5 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும் நிலை, குறைந்து வரும் நிலப்பரப்பு மற்றும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு நெல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
                நீர் பற்றாக்குறை ஏற்படும் போது அதிகப்படியான நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்க சொட்டுநீர்ப் பாசன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய சூழலில் கோவை அருகே இலையமுத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயின் சொட்டுநீர் நிறுவன ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் செய்முறை விளக்கப் பண்ணையில் சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக வெற்றிகரமாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்க உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
                  பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளில் கிடைத்த மகசூலை விட சொட்டுநீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்த ஜெயின் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் செய்முறை விளக்கப் பண்ணையில்  அதிகமான மகசூல் கிடைத்துள்ளது. பாரம்பரிய பாசன முறையில் ஏக்கருக்கு 3.1 டன் வரை இருந்த நெல் மகசூல் இப்புதிய பாசன முறையில் 3.8 டன்களாக உயர்ந்துள்ளது. மேலும் மிகக் குறைந்த அளவில் நீரைப் பயன்படுத்தி மின்சாரத்தின் பயன்பாட்டை பாதியாக குறைக்கச் செய்துள்ளனர்.

                 இப்புதிய சாகுபடி முறையில் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு பாரம்பரிய பாசன முறையை விட உற்பத்தி அளவு அதிகரித்துள்ளது. பாலித்தீன் பைகள் அல்லது நெல் உமியை படுக்கையாகக் கொண்டு சொட்டுநீர்ப் பாசனத்தில் நெல் சாகுபடி செய்யப்படுவதால் களைகளின் வளர்ச்சி பெருமளவில் கட்டுப்படுத்தப்படுவதுடன், நீரின் தேவையும் வெகுவாக குறைகிறது. மறுபுறம் சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக நெல் சாகுபடி செய்யப்படும் போது அதிகளவு வேளாண் முதலீடுகள் காரணமாக சாகுபடி செலவு அதிகரிக்கிறது.

                பாரம்பரிய முறையில் ஏக்கருக்கு |22,700 வரை நெல்லுக்கு செலவிடப்படுகிறது. சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக செய்யப்படும் நெல் சாகுபடிக்கு |31,400 வரை செலவாகிறது. இருப்பினும் அதிகளவு மகசூல் காரணமாக பாரம்பரிய முறையை விட அதிக வருமானம் கிடைக்கிறது சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக ஏக்கருக்கு |38 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. ஒரு முறை அமைக்கப்படும் சொட்டுநீர்ப் பாசன முறையை விவசாயிகள் பத்து பருவ காலங்களுக்கு பயன்படுத்தலாம். 

                எனவே நீண்ட கால அளவில் பார்க்கும் போது குறைந்த நீர், குறைந்த மின்சாரம் மற்றும் சாகுபடிப் பரப்பளவைக் கொண்டு அதிக உற்பத்தி மற்றும் மகசூலைப் பெற முடிகிறது. மேலும் மழை குறைந்த காலத்தில் குறிப்பாக நீர் பற்றாக்குறை ஏற்படும் வறட்சிக் காலத்தில் சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக அதிக லாபம் பெற முடியும்.

பிற பயன்கள்: 

                       தற்போது நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் சூழலில் தேசிய அளவில் மொத்த நெல் சாகுபடி பரப்பளவான 43.4 மில்லியன் ஹெக்டேரில் 89.31 மில்லியன் டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

                        இவையல்லாமல் குறைந்த நீர்ப்பாசனம் உள்ள பகுதிகளில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 10 சதவீத அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டால் நெல் உற்பத்தியை 130 மில்லியன் டன்கள் வரை பெருக்க முடியும் என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் .எனவே தமிழக விவசாயிகள் குறைந்த நீர்ப்பாசனம் உள்ள பகுதிகளில் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம். இந்த புதிய சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக நெல் சாகுபடி பற்றி தெரிந்து கொள்ள கோவையிலிருந்து 70 கி.மீட்டர் தொலைவில் இலையமுத்தூரில் அமைந்துள்ள ஜெயின் சொட்டுநீர்ப் பாசன ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் செயல்முறை விளக்கப் பண்ணைக்கு விவசாயிகள் சென்று பார்வையிட்டு பயன்பெறலாம்.

Read more »

மண் பரிசோதனையுடன் நீர் பரிசோதனையும் அவசியம்

கடலூர்: 

                 சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம்.முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன.

                  தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும் பாசன நீரின் தன்மையால் நிலவளம் மாறுபடுகிறது. மோசமான நீர், வளமான நிலத்தையும் பயிரிடத் தகுதியற்றதாக மாற்றிவிடும்.

           இரு தன்மைகள்திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் புதிதாக அமைத்த உடனேயே நீரின் பண்புகளை ஆராய்ந்து அறிவது விவசாயத்துக்கு நல்லது. பாசன நீரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை உவர் தன்மை, களர் தன்மை.பாசன நீரில் கால்சியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் குளோரைடுகள், சல்பேட்டுகள் அதிகம் இருந்தால் உவர் தன்மை ஏற்படும். சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், மெக்னீஷியம் கார்பனேட் ஆகிய உப்புகள் அதிகம் இருந்தால் பாசன நீரில் களர் தன்மை ஏற்படும்.

                   பாசன நீரை ஆய்வு செய்யும் போது அந்த நீரால் பாசன வசதி பெறும் நிலத்தில் உள்ள மண்ணையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை பரிந்துரைக்கிறது.என்ன செய்ய வேண்டும்?கிணற்றில் பம்புசெட் பொருத்தப்பட்டு இருந்தால், அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு பின்னர் கிடைக்கும் நீரை மாதிரியாகச் சுத்தமான பாட்டிலில் காற்றுக் குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும்.

                சேகரிக்கும் முன், அதே நீரைக் கொண்டு முதலில் பாட்டிலைக் கழுவ வேண்டும். தாமதம் இல்லாமல் விரைவில் ஆய்வுக் கூடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.பம்பு செட் இல்லாத கிணறாக இருந்தால், மேல்மட்ட நீரைச் சேகரிக்காமல் வாளியைக் கொண்டு, ஆழத்தில் உள்ள நீரைச் சேகரிக்க வேண்டும். கவலை பொருத்தப்பட்ட கிணற்றில், ஒரு மணி நேரம் நீரை இரைத்து விட்டு, பின்னர் நீர் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். 

                  பாசன நீர் மாதிரியுடன் விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், திறந்த வெளிக் கிணறா? ஆழ்குழாய்க் கிணறா? குளம் அல்லது ஆற்று நீரா? கிணற்றின் ஆழம் எவ்வளவு மண்ணின் விவரம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும்.பாசன நீரை ஆய்வு செய்து, உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட் ஆகியவற்றின் நிலை, கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் எஞ்சிய சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் ஈர்ப்பு விகிதம், மெக்னீஷியம் கால்சியம் விகிதம், நீரின் ரசாயனத் தன்மை, ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கிப்படுகின்றன.

                   பாசன நீரை ஆய்வு செய்த பிறகு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய உழவியல் முறைகள், தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி முறைகள், உர நிர்வாகம், நீர் நிர்வாகம் ஆகியவைகளும் வேளாண் அலுவலர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றன.கட்டணம் எவ்வளவு?பாசன நீரை ஆய்வு செய்வதற்கு மாதிரி ஒன்றுக்கு, | 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  பாசன நீர் ஆய்வுக்காக, மாதிரிகளை சேகரித்து அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

                       அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் பல்கலைக்கழக கிளை அலுவலகங்களிலும், கூட்டுறவுத் துறை மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் பாசன நீர் ஆய்வுக் கூடங்கள் உள்ளன.நீரை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், 1,700 ஆய்வு மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

Read more »

128 லட்சத்தைப் பாழாக்கிய கடலூர் சுகாதார வளாகங்கள்


 
கடலூர்:
 
              கடலூர் நகராட்சிப் பகுதியில், பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சுகாதார வளாகங்களுக்குச் செலவிட்ட மக்கள் வரிப்பணம் 128 லட்சம், பாழாய்ப் போய்விட்டது. தற்போது பொது சுகாதாரம் மற்றும் நவீனக் கழிப்பறைகள் குறித்து பெருமளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
              கிராமப் புறங்களில் வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் கண்டிப்பாகக் கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்காக மானியம் மற்றும் கடன் பெருமளவுக்கு வழங்கப்பட்டும் வருகிறது.நகர்ப் புறங்களில் குடிசை வீடுகள் நிறைந்த பகுதிகளில் தனி நபர் கழிப்பறைகள் கட்டுவது சாத்தியமற்றதாக உள்ளது. இதனால் பின்தங்கிய பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளும் சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டு வருகின்றன. 
 
               ஆனால், இந்த சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அனைத்தும் சிதைந்து கிடக்கின்றன. இதற்கு பயனாளிகளின் பொறுப்பற்ற தன்மையும் முக்கிய காரணமாக இருக்கிறது.இதன் விளைவாக சிறிய நகரமான கடலூரில், பல இடங்களில் சாலையோரங்கள், திடல்கள், ரயில்வே தண்டவாளங்களின் ஓரங்கள் எல்லாம் பொதுக் கழிப்பிடங்களாக மாறி, துர்நாற்றத்தையும் சுகாதாரக் கேட்டையும் உருவாக்கி வருகின்றன. நகராட்சி கட்டிக் கொடுத்த பொது சுகாதார வளாகங்கள் பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கின்றன.
 
                  கடலூர் நகராட்சிப் பகுதியில் 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 127 லட்சத்தில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. வாம்பே நிதி உதவித் திட்டம் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றில் இருந்து, 73 லட்சத்தில் 33 பொதுக் கழிப்பிடங்கள், 55 லட்சத்தில் மார்க்கெட் காலனி, அம்பேத்கர் நகர், சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, எஸ்.ஆர்.காலனி ஆகிய 6 இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.
 
                மேற்கண்ட பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சுகாதார வளாகங்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி, பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாழடைந்து கிடக்கின்றன. இத்திட்டங்களில் செலவிட்ட மக்கள் வரிப்பணம் பாழாகிக் கிடக்கிறது. பணம் வருகிறது என்பதற்காக, சுகாதார வளாகங்களை பிரம்மாண்டமாகக் கட்டிவிடுவதுடன் நகராட்சியின் கடமை முடிந்து விட்டதாக நினைத்து விடமுடியாது. அவற்றை முறையாகப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் சமூகக் கடமையும் ஒரு நல்லாட்சிக்கு இருக்கிறது.
 
இதுகுறித்து நகராட்சி உறுப்பினர் சர்தார் கூறுகையில், 
 
                   "மேற்கண்ட பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சுகாதார வளாகங்கள் மட்டுமன்றி மேலும் பல சுகாதார வளாகங்களும் சிதைந்து கிடக்கின்றன. இவை கட்டப்பட்டதுடன் சரி. அவற்றை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று, நகராட்சியின் சுகாதார அதிகாரிகள் யாரும், போய் பார்ப்பதில்லை, ஆய்வு செய்வதில்லை. மக்களுக்கு அறிவுரைகள் வழங்கியதில்லை. கட்டி முடிக்கப்பட்ட போதே, சுகாதார வளாகங்களை யார் பராமரிப்பது ? என்ற கேள்வி எழுந்தது. மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கலாம் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாகத்தான் சுகாதார வளாகங்களுக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டு இருக்கிறது' என்றார்.

Read more »

என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம் முற்றுகை

நெய்வேலி:

             என்எல்சி முதல் அனல் மின் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 510 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி தெர்மல் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, செப்டம்பர் 19-ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                 இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் 4 முறை தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத் துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் முகமாக பல்வேறு போராட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.அதன்படி ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை 2-ம் சுரங்கம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது.

                  இதையடுத்து புதன்கிழமை முதல் அனல்மின் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு, ஏஐடியுசி தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநிலத் தலைவர் சுப்ராயன், துணைத் தலைவர் வகிதாநிஜாம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பின்னர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் 510 பேரை நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு கைது செய்து விடுவித்தார். போராட்டத்தின் தொடர்ச்சியாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ல் முதல் அனல்மின் நிலையம் முன், அரை நிர்வாணத்துடன் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தப்படும் என ஏஐடியுசி மாவட்டச் செயலர் சேகர் அறிவித்துள்ளார்.

Read more »

பண்ருட்டி முந்திரிக் கொட்டை: மூட்டைக்கு ஆயிரம் உயர்வு

பண்ருட்டி:]

               எப்போதும் இல்லாத அளவுக்கு முந்திரிக் கொட்டையின் விலை மூட்டைக்கு (80 கிலோ)  ஆயிரம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வியாபாரிகள் மட்டுமே லாபம் அடைந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்று தெரிய வருகிறது.

               ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பூப்பூக்கத் தொடங்கும். மே மாதம் இறுதியில் முந்திரிக் கொட்டை அறுவடை முடிந்துவிடும். பண்ருட்டி வட்டத்தில் உள்ள 16900 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள முந்திரிக் காடுகளில் இருந்து 12 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரிக் கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழை, புயல், கடும் பனிப்பொழிவு, வெயில் போன்ற  காரணங்களால் முந்திரி மகசூல் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர்.

                இந்நிலையில் பண்ருட்டியில் உள்ள முந்திரி பயிர் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஐவரி, கானா, நைஜீரியா, சினிபிஷா, பெனின், இந்தோனிஷியா போன்ற நாடுகளில் இருந்து முந்திரிக் கொட்டைகளை இறக்குமதி செய்து அதை பதப்படுத்தி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் வரையில்  3 ஆயிரத்து 500 முதல்  4 ஆயிரம் வரை விலை போன 80 கிலோ கொண்ட முந்திரிக் கொட்டை மூட்டை, தற்போது  4 ஆயிரத்து 500-க்கு விலை போகிறது. இதனால் முந்திரி பயிர்களின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து முந்திரி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்  கூறியது:

சாத்திப்பட்டு ஜெயஜோதி டிரேடர்ஸ் உரிமையாளர் கே.அன்புகுமரன்: 

                ஒரு மூட்டை முந்திரிக் கொட்டை  5 ஆயிரத்து 500 விற்பனை ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. காமன்வெல்த் போட்டி, பண்டிகை நாள்கள் வருவதாலும் தேவை அதிகரித்துள்ளதாலும், விளைச்சல் குறைந்ததாலும் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் வியாபாரிகளுக்குதான் லாபம்.

கீழ்மாம்பட்டு சி.குப்புசாமி  கூறியது

                  கடந்த 4 ஆண்டுகளாகவே உற்பத்திக் குறைவால் தற்போது விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் பெரு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு லாபம் தரும், சிறு விவசாயிகள் கடன் வாங்கி பயிர்  செய்வதாலும், கொட்டைகளை இருப்பு வைக்க வசதி இல்லாததாலும் உடனே  விற்றுவிடுவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

கானங்குப்பம் விவசாயி ஆர்.மணிவேல்: 

                விவசாயிகளுக்கு லாபம் இல்லை. சொந்த நிலம் என்பதால் விட மனமில்லாமல் பயிர் செய்ய வேண்டிய நிலை. கூலி, மருந்து என செலவு அதிகம். கடன் வாங்கி பயிர் செய்யும் விவசாயிகள் அறுவடை காலத்திலேயே கொட்டைகளை விற்பனை செய்து கடனை அடைத்து விடுவர், இல்லை என்றால் வட்டி கட்ட முடியாது. மேலும் இருப்பு வைக்க இடம் இல்லாததும் ஒரு குறைதான் என கூறினர். 

                     மேலும் வியாபாரிகள் கொட்டைகளை வாங்கி சேர்த்து வைத்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி விலை ஏற்றம் செய்வதாகவும் பலர் கூறினர். எது எப்படியோ செம்மண் காட்டில் உச்சி வெயிலில் விஷப் பூச்சிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு கொட்டையாக சேர்த்த விவசாயிக்கு எந்த பலனும் இல்லை என்பதுதான் உண்மை.

Read more »

அதிக சொத்து சேர்த்ததாக கடலூர் கனிமத் துறை அதிகாரி மீது வழக்கு

கடலூர்:

               கடலூர் மாவட்ட கனிமங்கள் துறை உதவி இயக்குநர் மீது, லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

                கடலூரில் மாவட்ட கனிமங்கள் துறை உதவி இயக்குநராக இருப்பவர் சிவகுமார். அவர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பிரிவினருக்குப் பல புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து கடலூர் சேகர் நகரில் உள்ள அவரது வீட்டை துணைக் கண்காணிப்பாளர் மனேகரன் தலைமையிலான கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனர்.

               இதில் அங்கு இருந்து  1.22 லட்சம் பணம் மற்றும் ஆவணங்களை பலவும் கைப்பற்றப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புப் போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். மேலும் அவரது மனைவி பெயரில் புதுவையில் ஆந்திர வங்கியில் உள்ள லாக்கருக்கு லஞ்ச ஒழிப்புப் போலீசார் புதன்கிழமை சீல் வைத்தனர். லஞ்சம் வாங்கி அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் கூறினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க 45 லட்சம் ஒதுக்கீடு

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள், உபகரணங்கள் வழங்க 9 சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா  5 லட்சம் வீதம்  45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

கடலூர் மாவட் ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               இத் திட்டத்தில் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், கை தாங்கிகள், முடநீக்கியல் சாதனங்கள், செயற்கை உறுப்புகள், கருப்புக் கண்ணாடிகள், ஊன்றுகோல்கள், பிரெய்லி கடிகாரங்கள், எலக்ட்ரானிக் பேசும் கைக் கடிகாரங்கள், காதொலிக் கருவிகள், ரீசார்ஜ் பேட்டரிகள் ஆகியன வழங்கப்பட உள்ளன. பாட்டரியால் இயங்கும் மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் இத்திட்டத்தில் வழங்கப்பட மாட்டாது. 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி போன்றவற்றை 3 ஆண்டுகளுக்கு முன் பெற்றவர்கள் மட்டுமே தற்போது விண்ணப்பிக்கலாம். 

                    இதில் மாற்றுத்திறனாளிகள் இடைத்தரகர்களை அணுகாமல், உரிய அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட உதவிகளைப் பெறுவதற்கு 1-4-2010-க்குள்  விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், 

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், 
37, ராமதாஸ் தெரு, 
புதுப்பாளையம், 
கடலூர்- 1 

                     என்ற முகவரிக்கு அல்லது, சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்துக்குக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ 30-9-2010-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரேஷன் கார்டு நகல்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

ஆதிதிராவிட நலப் பள்ளிகளை கல்வித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரிக்கை ஒரத்தூரில் சமுதாய நலக் கூடம் அமைக்க கோரிக்கை

சிதம்பரம்:

                சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது கிளை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. பல ஆண்டுகளாக புறம்போக்கு பகுதியில் சாலை ஓரங்களில் குடியிருப்போருக்கு இலவச குடி மனைப் பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.

               ஒரத்தூர் மருத்துவமனையில், மருத்துவர், இரவு நேரத்தில் தங்கி பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை தினமும் வழங்க வேண்டும். ஒரத்தூரில் சமுதாய நலக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக் குழுத் தலைவர் கே.அன்பழகன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.ரகுபதி, துணைச் செயலர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் டி.மணிவாசகம், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எம்.சேகர், வட்டச் செயலர் எஸ்.காசிலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

Burglar held for series of break-ins


Superintendent of Police Ashwin Kotnis displaying the valubles recovered from an offender in Cuddalore on Wednesday. 
 
CUDDALORE: 

            A special police team formed by Superintendent of Police Ashwin Kotnis on Wednesday nabbed a person who was involved in a series of break-ins and recovered 71 sovereigns of gold jewellery, 4.5 kg of silver articles and cash amounting to Rs.20,000, all worth about Rs.10 lakh.

             Addressing a press conference here on Wednesday, Mr. Kotnis said that in the past two months a series of theft cases were reported from places such as Kurinji Nagar in Veli Semmandalam area and at Kondur, located within the jurisdiction of the Nellikuppam police station limits. On July 30, the house of T. Jothiramalingam (60), situated on Nandagopal Street in Kurinji Nagar, was burgled and valuables worth Rs.21,000 were taken away.

           On August 21, 25 sovereigns of gold jewellery and silver articles were looted from the house of P. Amaran (60) at Kurinji Nagar. Again on September 26, the intruder broke into the house of J. Suresh (36) of Annai Teresa Street in Kondur and decamped with 48 sovereigns of gold jewellery, four kg of silver articles and Rs.20,000 in cash. Suspecting a pattern in all these incidents, the Superintendent of Police constituted a special police team to trace those involved.

               While the special team was carrying out a vehicle check early on Wednesday at Veli Semmandalam, A.Vadivel (42), a resident of Lawspet, Puducherry, was detained. During interrogation it came to light that Vadivel was involved in the cases. His modus operandi was to move around in a two-wheeler during daytime, carrying a sack with an improvised crowbar, and pose as a carpenter. Whenever he came across any locked house, he would stealthily make use of a crowbar to remove the latch and gain entry. Earlier, he was caught in four such break-ins that took place at Hasthampatti in Salem district and was convicted, the SP added.

Read more »

Security intensified in view of Ayodhya verdict

CUDDALORE: 

             Superintendent of Police Ashwin Kotnis has said that in view of the scheduled pronouncement of the verdict on the title suits on the Ayodhya issue today, the entire security machinery in Cuddalore district has been kept on full alert.

            Mr. Kotnis told reporters here on Wednesday that about 1,500 personnel, including those belonging to the local police and the armed constabulary, had been mobilised for the purpose. The bomb disposal squads in the headquarters as well as in the sub-divisions had been kept ready. Ten special striking forces, each consisting of one sub-inspector and 10 constables, would be doing the rounds.

                At 80 sensitive places identified across the district, strong posses of police personnel had been deployed. Open line patrolling had been intensified and the personnel were on duty round-the-clock. Processions, public meetings, display of posters either supporting or opposing the verdict, and, distribution of sweets in public were prohibited. Mr. Kotnis said check-posts have been put up at 27 places to thoroughly scrutinise vehicles and the passengers. He pointed out that peace committee meetings had already been held impressing upon the communities the need to maintain peace, regardless of the nature of the verdict.

                   The leaders of various faiths had assured that they would not encourage any act that would mar public peace. Mr. Kotnis appealed to the people to coordinate with the law-enforcing authorities to ensure that normal life is not disrupted by any means. District Collector P. Seetharaman has stated that steps have been taken to ensure uninterrupted supply of essential commodities.

Read more »

புதன், செப்டம்பர் 29, 2010

3 ஆண்டுகளாகக் கட்டப்படும் கடலூர் நகராட்சி எரிவாயு தகன மேடை


கடலூர் மஞ்சக்குப்பத்தில் கட்டப்படும் எரிவாயு தகனமேடை.
 
கடலூர்:
 
              கடலூரில் 2 எரிவாயு தகன மேடைகள், கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகின்றன. கடலூரில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு ஆகியவற்றின் கரைகளில் சடலங்கள் புதைக்கவும் எரிக்கவும் செய்யப்படுகின்றன. சடலங்கள் எரிக்கப்படும்போது நகருக்குள் பெருமளவுக்கு துர்நாற்றம் அடிக்கும் நிலையும் உள்ளது. 
                 
             இதனால் நகருக்குள் காற்று மாசுபடுவதாகக் கூறப்படுகிறது.எனவே கடலூர் மஞ்சக்குப்பம், கம்மியம்பேட்டை ஆகிய இரு இடங்களில் தலா  50 லட்சம் செலவில், எரிவாயு தகன மேடைகள் அமைக்கும் பணி, 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இவற்றில் மஞ்சக்குப்பம் எரிவாயு தகனமேடைக்கான பணிகள் மட்டுமே பெரும்பாலும் நிறைவு அடைந்துள்ளது. எரிவாயு தகன மேடைகளை தனியார் அறக்கட்டளை மூலமாகத்தான் நிர்வகிக்க வேண்டும் என்று, நகராட்சிகளின் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 
 
             இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையின்பேரில், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரங்கநாதன் தலைமையில் அறக்கட்டளை ஒன்று 4 மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. அறக்கட்டளையில் நகராட்சித் தலைவர் மற்றும் ஆணையர், மக்கள் பிரதிநிதிகள் பலரும் உறுப்பினர்களாக உள்ளனர்.அறக்கட்டளைக்கு இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கணக்குத் தொடங்கி  10 ஆயிரம் நிதியும் செலுத்தி உள்ளனர். 
 
              இந்நிலையில் நகராட்சி, 2 மாதங்களுக்கு முன் இதே பணிக்காக மற்றொரு வங்கியில் கணக்கு தொடங்கி இருக்கிறது. பொதுமக்கள் சிலரிடம் நன்கொடைத் தொகையும் வசூலித்து, அந்தக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கு தொடங்கியது பற்றி நகராட்சி நிர்வாகம், தங்களுக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அறக்கட்டளைத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்தார். எனவே இப்பணியில் நாங்கள் அக்கறை கொள்ள மாட்டோம் என்று, நகராட்சிக்குக் கடிதம் கொடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். 
 
அறக்கட்டளைத் தலைவர் ரங்கநாதன் மேலும் கூறியது: 
 
                              கடலூரில் 2 எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவற்றில் விறகைக் கொண்டு டீசலைச் சூடாக்கி, அதில் இருந்து கிடைக்கும் வாயுவை எரித்து, சடலங்கள் தகனம் செய்யப்படும். மஞ்சக்குப்பம் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி மட்டும் பெரும்பாலும் முடிந்துள்ளது. அதிலும் சில வேலைகள் பாக்கி உள்ளன.
 
                ஒரு எரிவாயு தகன மேடை, முறையாகச் செயல்பட மாதம்  35 ஆயிரம் நிதி வேண்டும். மேலும் ஒரு சடலத்துக்கு  2,500 கட்டணம் வசூலிக்க வேண்டும். பராமரிப்புப் பணிகளுக்காக அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஆனால் எங்களுடன் ஆலோசிக்காமல், நகராட்சியே வங்கிக் கணக்கைத் தொடங்கி இருப்பது எங்கள் மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டது என்றார்.
 
இதுகுறித்து நகராட்சி ஆணையர் டி.குமார் கூறியது , 
 
                             ""எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. சென்னையில் இருந்து பொறியாளர் ஒருவர் வந்து, இயந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காகத்தான் காத்து இருக்கிறோம். மற்ற பணிகள் எல்லாம் முடிந்து விட்டன. மஞ்சக்குப்பம் எரிவாயு தகன மேடை விரைவில் செயல்படத் தொடங்கும்'' என்றார்.

Read more »

பூகம்பத்தை தாங்கும் கட்டுமானம்: என்எல்சி சாதனை


பிளாக்குகளை பயன்படுத்தி சோதனை முறையில் கட்டப்பட்டுள்ள கட்டடம்.
 
நெய்வேலி:
 
                  பூகம்பத்தின் போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளும் கட்டுமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது என்எல்சி நிறுவனத்தின் ஆயத்தப் பொருள் உற்பத்திப் பிரிவு.
 
                 என்எல்சி நிறுவனத்தின் கட்டுமானத் துறையின் கீழ் செயல்படும் இத்துறை, என்எல்சி குடியிருப்பு, அலுவலகங்களுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்றவைகளை மரத்துக்கு மாற்றாக கான்கிரீட்டில் உற்பத்தி செய்து கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது.இங்கு பல பொருள்கள் மரத்துக்கு மாற்றாக பயன்படுத்துவதுதால் கோடிக்கணக்கான மதிப்புள்ள மரங்கள் வெட்டுப்படுவது தடுக்கப்படுகிறது. 
 
                 மேலும் நிறுவனத்தின் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பலைப் பயன்படுத்தி உலர் சாம்பல் செங்கல், மின்கம்பம், குப்பைத் தொட்டி உள்ளிட்டப் பொருள்களை தயாரித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பணியையும் ஓசையின்றி செய்துவருகிறது. இந்நிலையில் என்எல்சியின் ஆயத்தப் பொருள் உற்பத்திப் பிரிவும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகமும் இணைந்து இண்டர் லாக்கிங் கட்டுமானம் என்ற புதிய முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. 
 
                  இந்த முறையில் இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பிளாக்குகளைப் பயன்படுத்தி ஒன்றையொன்று பொருந்திக்கொள்ளும் வகையில் கட்டுமானம் செய்யப்படுகிறது. இவற்றைப் பொருத்த சிமெண்ட் கலவை பயன்படுத்தப்படுவதில்லை.வழக்கமான கட்டுமானத்தில் செங்கற்கள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கி இடையில் சிமென்ட், மணல் கலவை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த புதிய வகைக் கட்டுமான பிளாக்குகளின் சிறப்பான வடிவத்தால் ஒன்றுடன் ஒன்று உடனடியாக கச்சிதமாகப் பொருந்திக் கொள்கின்றன. 
 
                  இப்புதிய முறையில் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தை வேறு இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். பிளாக்குகளை சேதமின்றி பிரித்து திரும்பவும் பயன்படுத்த முடியும். வழக்கமான கட்டுமானங்களுடன் ஒப்பிடும்போது இப்புதிய முறையில் கட்டப்படும் கட்டுமானங்கள் அதிக எடையைத் தாங்கும் திறன், பூகம்பத்தால் ஏற்படும் அதிர்வைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்கும். மழைக் காலத்தில் கூட கட்டுமானத்தை தொடர்ந்து செய்யலாம். கொத்தனார்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இல்லாமல் கூட கட்டுமானப் பணியைச் செய்யலாம். 
 
                  இந்த முறையிலான கட்டுமானத்தில் 19 முதல் 24 சதவீத கட்டுமானச் செலவு குறைவதுடன், 65 சதவீத கட்டுமான காலத்தையும் குறைக்க முடியும்.இப்புதிய முறையில் சோதனை அடிப்படையில நெய்வேலியில் ஒரு சிறிய கட்டடமும், ஒரு சுற்றுச்சுவரும் கட்டுப்பட்டுள்ளன என்று என்எல்சி கட்டுமானத் துறையின் பொதுமேலாளர் சங்கரன் கூறினார்.
 
                        மேலும் கட்டுமான செலவைக் குறைக்கவும், மின்வசதி மற்றம் தண்ணீர் வசதிக்கு தேவையான குழாய்களை சுவர்களினுள் பதிப்பது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன என்றார் சங்கரன்.

Read more »

ஓட்டை உடைசல் பஸ்களால் பரிதவிக்கும் பயணிகள்

பண்ருட்டி:

                    அரசு பஸ்கள் நடுவழியில் பழுதடைந்து நிற்பதும், அதில் பயணம் செய்வோர்  அவதி அடைவதும் தொடர்கதையாகி வருகிறது.

                    தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுமக்களின் வசதிக்காக நகரப் பகுதியில் நகர பஸ்களும், நீண்டதூர பயணத்துக்கென விரைவு பஸ்களையும் இயக்குகிறது. டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏர் பஸ், சூப்பர் ஃபாஸ்ட், எக்ஸ்பிரஸ் என பல்வேறு பெயர்களில் பஸ்களை இயக்கி வசதிக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கிறது.÷இவை வெவ்வேறு பெயர்களில் இயக்கப்பட்டாலும் சேவையில் வித்தியாசமில்லை என்றும் அனைத்து பஸ்களுமே பராமரிப்பின்றி இயக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

                 இந்நிலையில் சென்னை-கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வழித் தடத்தில் இயங்கும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பஸ்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்த பஸ்கள் எந்த நிலையில் இருந்தாலும் பயணிகள் வேறுவழியின்றி அவசரத்துக்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

                      நீண்டதூர அரசு விரைவு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள், மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்துள்ளதால் மழைக்காலத்தில் சாரல் அடிப்பதாலும், மழைநீர் உள்ளே ஒழுகுவதாலும் பயணிகள் பெரும் பாதிப்படைகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. நீண்ட தூரம் இயக்கக்கூடிய பெரும்பாலான பஸ்களில் ஸ்டெப்னி, ஜாக்கி உள்ளிட்டவை இல்லை. இதனால் டயர் பஞ்சராகி பஸ் நடுவழியில் நின்றால், டயரை மாற்றி பயணத்தை தொடர முடியாத நிலை உள்ளது.

                      உதாரணமாக, சனிக்கிழமை சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வந்துகொண்டிருந்த விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக விரைவு பஸ், பண்ருட்டி அருகே டயர் பஞ்சர் ஆனதால் பண்ருட்டி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோரை பணிமனையில் இறக்கி விட்டதால் அவர்கள் மாற்று வண்டியில் ஏறிச்செல்ல பணிமனையில் இருந்து மூட்டை முடிச்சுகளுடனும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடனும் தேசிய நெடுஞ்சாலைக்கு நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டியதாயிற்று. அங்கு வந்த பிறகும் அவர்கள் மாற்று வண்டிக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். அவசரமாக செல்ல வேண்டிய பலர் அவ்வழியே வந்த டவுன்பஸ்ஸில் ஏறிச் சென்றனர்.

தள்ளுவண்டி...

              கடந்த இருவாரங்களுக்கு முன் கடலூரில் இருந்து வேலூர் செல்லும் அரசு விரைவு பஸ் பண்ருட்டி பஸ் நிலையம் அருகே பழுதாகி நின்றது. இதில் வந்த பயணிகளே பஸ்சை  தள்ளி பஸ்நிலையம் அருகே ஓரம்கட்டிவிட்டு வேறு வண்டியில் சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து கும்பகோணம் சென்ற பஸ் பஞ்சராகி நான்குமுனை சந்திப்பில் நின்றது. இந்த வண்டியில் ஸ்டெப்னி, ஜாக்கி இல்லாததால் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அதே இடத்தில் நின்றது.

                       ""விரைவு பஸ் என்ற பெயரில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்துக் கழகம் நாங்கள் பாதுகாப்பாகவும், குறித்த நேரத்திலும், எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் சென்றுசேரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை'' என்பதே பெரும்பாலான பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. அரசுப் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் இதனை சிந்தித்து உருப்படியான நடவடிக்கை எடுத்தால் சரி.

Read more »

மனசாட்சி இல்லாத நகராட்சி; குமுறும் கடலூர்வாசிகள்

கடலூர்:
 
                பாதாள சாக்கடைத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்களால், கடலூர் மக்கள் வெறுப்படைந்து சங்கடங்களின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
 
              கடலூரில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில் மட்டும், சுமார் 70 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சிதைக்கப்படும் சாலைகளை சீரமைக்க 20 கோடிக்கு மேல் செலவாகிறது. எனவே கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டச் செலவு 100 கோடியை நெருங்கி விட்டது. சாலைகளைச் சீரமைக்க பணம் இல்லை என்று கை விரிக்கிறது நகராட்சி நிர்வாகம். அரசு 15 கோடி தந்தால் சமாளித்து விடுவோம் என்று தெரிவிக்கிறது. பாழ்பட்டுக் கிடக்கும் சாலைகள், அதனால் சிரமப்படும் மக்களைப்பற்றி அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
 
              சாலைகள் மிக மோசமாக இருக்கிறது என்று மக்கள் புகார் செய்தால், நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஓடோடி வந்து பார்வையிடுவதில் எப்போதும் குறை வைப்பது இல்லை. ஆனால் அவரது உத்தரவுகளை நகராட்சி அலுவலர்களும் ஊழியர்களும் முறையாகச் செயல்படுத்துவது இல்லை. நகராட்சித் தலைவரின் உத்தரவு ஒன்றும், அலுவலர்கள்,  ஊழியர்களின் செயல்பாடு மற்றொன்றுமாக இருப்பதாகக் கடலூர் மக்கள் வருத்தப்படுகிறார்கள்.
 
                 பாதாளச் சாக்கடைக்காக அமைக்கப்பட்ட ஆள் இறங்கு குழிகளில், மூடிகள் உடைந்து நொறுங்கியும், மூடிகளே இல்லாமலும், இருக்கும் முடிகள் சரியாக மூடப்படாமல் கிடப்பதும் இங்கே சர்வ சாதாரணமான காட்சிகள். ஆட்சியர் முதல் சாதாரண அரசு ஊழியர்கள் வரை, அமைச்சர் முதல் நகராட்சி கவுன்சிலர்கள் வரை, திட்டத்தை நிறைவேற்றும் காண்ட்ராக்ட் ஊழியர்கள் அனைவரும், கடலூர் நகர வீதிகளில்தான் செல்கிறார்கள். ஆனால் யாரும் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.   
 
                 தோண்டப்படும் பகுதியில் எந்த அறிவிப்புப் பலகைகளும் வைப்பதில்லை. நீதிபதிகள் குடியிருப்புச் சாலையில், பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழியில், திங்கள்கிழமை இரவு தனியார் நிறுவனப் பொறியாளர் மணி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார். பலத்த காயங்களுடன் அவர் இச்சம்பவத்தில் உயிர் பிழைத்ததே ஆச்சரியம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இத்தகைய சம்பவங்களுக்கு கடலூரில் எப்போதும் குறைவில்லை.
 
                இத்தகைய சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற, சட்டம் இருந்தாலொழிய, அரசிடம் மாத ஊதியம் பெறுவோருக்கு மனச்சாட்சியும் பேசப் போவதில்லை, மனநிலையில் மாற்றமும் ஏற்படப் போவதுமில்லை என்கிறார்கள் விவரம் அறிந்த கடலூர் பொதுமக்கள். 
 
இதுகுறித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 
 
                   பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் இடங்களில் பிரதிபலிப்பான்கள், தடுப்புக் கட்டைகள், அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்ற விதி, கடலூரில் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. புதுப்பாளையம் பிரதான சாலை போன்ற நெடுஞ்சாலைகளைத் தோண்டும் போது, மாற்றுச்சாலை ஒன்றை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
 
                    எனவே பொறியாளர் மணி விபத்துக்கு உள்ளானதற்கு, பாதாள சாக்கடைத் திட்ட காண்ட்ராக்டர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்தான் பொறுப்பு. அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும். மும்பையில் சாலை விபத்தில் ஒருவர் இறந்ததற்கு, மாநகராட்சி மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. அதேபோல் கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் குற்றவியல் வழக்கு தொடர சட்டத்தில் இடம் இருக்கிறது என்றார் மருதவாணன்.

Read more »

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தொடர் முழக்க போராட்டம்

சிதம்பரம்:

               சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

                   மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்றார், பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், கடலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் இரா.சிலம்புச்செல்வி, நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.கே.அருள், பால்ஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வ.அன்பழகன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகட்டும் திட்டத்துக்கு 19 கோடி செங்கல் வழங்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, 19 கோடி செங்கற்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

                கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்கான வீடுகளுக்கு செங்கல் வழங்குவது குறித்து, செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பேசியது: 

               கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் நடப்பு ஆண்டில் கட்டப்படும் வீடுகளுக்கு மட்டும் 19 கோடி செங்கற்கள் தேவை. இவற்றைத் தங்கு தடையின்றி வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் செங்கல் உற்பத்தியாளர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

           அவ்வாறு உற்பத்தி செய்யும் செங்கற்களில் ஓயயப என்று முத்திரை பதிக்க வேண்டும். நிலக்கரி சாம்பல் மூலம் சிமெண்ட் கற்கள் தயாரிப்பதற்கு, காதி கிராம தொழில் வாரியத்தில், மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 95 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செங்கல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு, குழுக்களுக்கு தலா 4 லட்சம் வீதம் 3.60 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. 

                வீடுகள் கட்டும் பணியில் கம்பி கட்டும் தொழிலை மேற்கொள்ள 80 சுயஉதவிக் குழுக்களுக்கு, தலா 4 லட்சம் வீதம் 3.20 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. எனவே கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்குத் தேவையான செங்கல் வழங்கப்படும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

கடலூரில் ரிசர்வ் வங்கியின் புதிய நாணயங்களை கொடுத்து : வியாபாரிகளிடம் மோசடி அதிகரிப்பு

கடலூர்: 

               ரிசர்வ் வங்கியில் வழங்கப்படும் சில்லறை நாணயங்களை வைத்து "கோல்மால்' செய்து, கடைக்காரர்களை ஏமாற்றி வரும் சம்பவம் கடலூரில் அதிகரித்துள்ளது. பெரிய வியாபார நிறுவனங்கள் சில்லறை தட்டுப்பாட்டை போக்க ரிசர்வ் வங்கி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை கிலோ கணக்கில் வழங்கி வருகிறது.  

               அதே போல வங்கிக் கிளைகளுக்கு தேவையான சில்லறை நாணயங்களை ரிசர்வ் வங்கியில் கேட்டுப் பெறலாம்.  ரிசர்வ் வங்கி நாணயங்கள் அனுப்பும் "கோனி' பையை வைத்து ஒரு மோசடி கும்பல், கடலூரில் பல கடைக்காரர்களை ஏமாற்றியுள்ளது. கடந்த வாரம் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள மருந்துக்கடைக்கு இரண்டு பேர் சில்லறை நாணயங்கள் அடங்கிய மூட்டை எடுத்து வந்தனர். ரிசர்வ் வங்கியில் இருந்து வாங்கிய நாணயங்கள் இவை. எங்களுக்கு தற்போது தேவையில்லாததால் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.  

               மருந்து கடைக்காரரும் புதிய நாணயம் தானே என ஆசைப் பட்டார். அந்த பையில் ஒரு ரூபாய் நாணயம் 10,000 என எழுதப்பட்டிருந்தது. இதை ரிசர்வ் வங்கி தான் எழுதியுள்ளது என நம்பி கடைக்காரர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து சில்லறையை வாங்கியுள்ளார். அவர்கள் சென்ற பின் கோனிப் பையைப் பிரித்து நாணயத்தை எண்ணிப்பார்த்த போது தான் குட்டு வெளியானது. அந்த கோனிப்பையில் வெறும் 3,000 ரூபாய் மட்டுமே இருந்தது  கண்டு கடைக்காரர் திடுக்கிட்டார். அதன்பின் பையை சோதனை செய்ததில்  ஐந்து ரூபாய் நாணயம் 2,500 எண்ணிக்கைக்குப் பதிலாக ஒரு ரூபாய் நாணயம் நிரப்பப்பட்டிருந்தது. 

                     ரிசர்வ் வங்கியில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கள் உட்புறமாக திருப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் இன்னும் சில கடைகளில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இப்படியும் சிலர் மோசடியில் இறங்கியுள்ளனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Read more »

அதிகாரிகளின் அலட்சியப் போக்கு பண்ருட்டியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

பண்ருட்டி: 

               பண்ருட்டி  நகராட்சியில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, அலுவலக நேரத்திற்கு வருகையின்மை போன்ற காரணங்களால் வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சி  கமிஷனராக பணிபுரிந்த உமா மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன் மருத துவ விடுப்பில் சென்றார். 

                இதனால் விழுப்புரத்திலிருந்து வரும் பொறியாளர் சுமதிசெல்வி பொறுப்பு வகித்து வருகிறார். சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மன்னார்குடியிலிருந்தும், பணி மேற் பார்வையாளர் சாம்பசிவம் கள்ளக்குறிச்சியிலிருந்தும், கட்டட ஆய்வாளர் சேகர் ஆத்தூரிலிருந்தும், மேற்பார்வையாளர் மாஜினி கடலூரிலிருந்தும் வருகின்றனர். அதிகாரிகள் அனைவரும் வெளியூரிலிருந்து வருவதால் தினமும் காலதாமதமாக காலை 11 மணிக் கும், மாலை 5 மணிக்கே சென்று விடுவதும் வழக கம். 

                வாரம் தோறும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மதியமே சென்று விடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் ஞானதீபம் பணியின் போது குடிபோதையில் இருப்பதால் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவது மட்டுமே இவரது பணியாக உள்ளது. ஒட்டுமொத்த அதிகாரிகளின் அலட்சியப் போக் கால் பண்ருட்டியில் 33 வார்டுகளிலும் சுகாதார, வளர்ச்சிப் பணிகள், சான் றிதழ் வழங்குவதில் காலதாமதம், திட்டங்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

                    பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறச் சென்றால் அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. அதிகாரிகளே சரியில் லாததால் சில ஊழியர்கள் பணிக்கே வராமல் வருகைப் பதிவேட்டில் பதிந்து அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள்,  காங்கிரஸ் துணை சேர்மன்  உள்ளிட்டோர் பல கூட்டங்களில்  அதிகாரிகளை  கண்டித்தும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் உள்ளனர். அதிகாரிகள் முறைகேடுகளை சேர்மன் சிறிதும் கண்டிப்பதில்லை. கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பண்ருட்டி நகராட்சியை காப்பாற்ற முடியும்.

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் துப்புரவு பணி

கடலூர் : 

                கடலூர் சில்வர் பீச் சில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் துப்புரவு பணி மேற்கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட் டம் சார்பில் கடலோர சுற் றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று துவங்கியது.  துணைவேந்தர் ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பதிவாளர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார். 

                   நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரபேட்டை கடற்கரைகளை தூய்மைபடுத்தி நேற்று கடலூர் வந்தனர். தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கடலோர பகுதியில் விழிப்புணர்வு பலகையை நட்டு துப்புரவு பணி மேற்கொண்டனர்.  ஊர்வலத்தில் புல முதல்வர்கள் துறைத் தலைவர்கள் மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் பல் கலைக்கழக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அருகே பாலம் பழுதால் போக்குவரத்து துண்டிப்பு: 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாதிப்பு

திட்டக்குடி:

                திட்டக்குடி அருகே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஓடைப்பாலம் பழுடைந்து உடையும் நிலையில் இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 

                திட்டக்குடி அடுத்த புதுக்குளம் கிராமம் வழியாகச் செல்லும் வெள்ளவாரி ஓடை மீது பிரிட்டிஷ் காலத்தில் சிறிய அளவிலான பாலம் கட்டப்பட்டது. திட்டக்குடி முதல் பெருமுளை, சிறுமுளை, புதுக்குளம், நாவலூர், குமாரை, நெடுங்குளம் வழியாக வேப்பூர் மற்றும் விருத்தாசலம் வரை இணைப்பு சாலை செல்கிறது. இவ்வழியாக திட்டக்குடிக்கு பள்ளி மாணவ, மாணவிகளும் விருத்தாசலம், தொழுதூர், பெரம்பலூர் பகுதிகளுக்கு பொறியியல் கல்லூரி  மாணவ, மாணவிகள் மட்டுமின்றி தினசரி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் செல்வோர், கிராம மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் செல்கின்றனர். 

                கடந்த ஆண்டு திட்டக்குடி முதல் நாவலூர் வரை 83 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் சாலை சீரமைப்பு பணி நடந்தது. ஆனால் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வெள்ளவாரி ஓடைப்பாலத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து புதுக்குளம் உள் ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக பாலம் முற்றிலும் வலுவிழந்து உடைந்து சரிந்தது. தற்காலிகமாக இரு சக்கர வாகனம், மாட்டு வண்டிகள் மட்டும் சென்று வரும் அளவிற்கு சீரமைக்கப்பட்டது. 

               பாலம் முற்றிலுமாக உடைந்து விடும் நிலையில் இருப்பதால் கடந்த 10 நாட்களாக பஸ் போக்குவரத்து உட்பட கனரக வாகனங்கள் செல் வது நிறுத்தப்பட்டது. திட் டக்குடியிலிருந்து நாவலூர் வரை செல்லும் தடம் எண் 4 அரசு டவுன் பஸ் புதுக்குளம் கிராமத்திலேயே நிறுத்தப்படுகிறது. பாலத்தின் மறுமுனையிலுள்ள கிராம மக்கள் மூன்று முதல் நான்கு கி.மீ., தூரம் நடந்து வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.

                      இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் பொதுமக்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பழுதான பிரிட் டிஷ் காலத்தில் கட்டிய ஓடை பாலத்தை முழுமையாக அகற்றி, போதிய நிதி ஒதுக்கீடு செய்து போர்க் கால அடிப்படையில் புதிய பாலம் கட்டித்தர  மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read more »

கடலூரில் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்: மக்கள் அச்சம்

கடலூர் : 

                 கடலூரில் குடியிருப்பு பகுதியில் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். 

                கடலூர் நகரின் மையப்பகுதியான சரஸ்வதி நகரின் 5வது தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக மின் கம்பங்கள் வழியாக மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மின் பாதை சாலையிலிருந்து 12 அடி உயரத்தில் அமைக்கப்படும். ஆனால் சரஸ்வதி நகரின் 5வது தெருவில் மின் பாதை கம்பிகள் மிக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. 

                 மேலும் இந்தத் தெருவில் ஒன்னரை அடி உயரத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால்  மின் கம்பி மிகக் குறைந்த உயரத்தில் உள்ளது. தெருவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுகையில் துள்ளிக் குதித்தாலோ அல்லது பெரியவர்கள் வீட்டிற்குத் தேவையான கழி, சொரடு பேன்றவற்றை சற்று கவனக்குறைவாக எடுத்துச் சென்றாலோ மின் கம்பியில் சிக்கும் ஆபத்து உள்ளது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு, மின் கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

விருத்தாசலம் பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் விளைச்சல் பாதிப்பு

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் மேட்டுக் காலனி பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் பாய்ந்து வருவதால் நிலத் தின் தன்மை மாறுபடுவதோடு விளைச்சல் பாதிக்கப்படுகிறது. விருத்தாசலம் ஆலிச்சிக்குடி ரோடு மேட்டுக் காலனி பகுதியில் புறவழிச்சாலை அருகில் விளை நிலங்கள் உள்ளது. 

                  இங்கு 20 ஏக்கர் அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நகரத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து கடைவீதி வழியாக வரும் கழிவு நீர் விளை நிலங்களில் பாய்கிறது. தொடர்ந்து சில ஆண்டுகளாக கழிவுநீர் பாய்வதால் நிலத்தின் தன்மை மாறி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் கழிவுநீரில் பன்றி, மாடு உள்ளிட்டவைகள் மேய்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி விளை நிலங்களில் கழிவுநீர் பாய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மறியல்: 650 பேர் கைது


 
நெய்வேலி:
 
             என்எல்சி 2-ம் சுரங்கம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 650 ஒப்பந்தத் தொழிலாளர்களை மந்தாரக்குப்பம் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் செப்டம்பர் 19-ம் தேதி இரவுப்பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
                 இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை 3 முறை நடைபெற்றது.இப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தம் நடவடிக்கைகளில் இறங்கினர். ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை 2-ம் சுரங்கம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
               இதன்படி திங்கள்கிழமை மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, 2-ம் சுரங்க வாயிற்பகுதிக்குச் சென்றதும் அங்கு மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து நெய்வேலி டிஎஸ்பி மணி தலைமையிலான போலீஸôர் தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்தனர்.மறியல் போராட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலர் சேகர் தலைமை வகித்தார். 
 
                      சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள், இளஞ்செழியன், குப்புசாமி, பொன்னுசாமி  உள்ளிட்டோர் ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும்  மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இதேபோன்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் மனிதசங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. 
 
இன்று மீண்டும் பேச்சு:
 
                   என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சென்னையில் திங்கள்கிழமை மண்டல தொழிலாளர் நல ஆணையர் ஜகன்நாதராவ் முன்னிலையில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தார். என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவுப்பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
               இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆணையர் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையின் போது நிர்வாகத் தரப்பில், உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெறுங்கள், பின்னர் பேசித் தீர்வுகாணலாம் என்று கோரியதாகக் கூறப்படுகிறது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாகவும், செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகவும் வெங்கடேசன் தெரிவித்தார்.
 
                          பேச்சுவார்த்தையின் போது நிர்வாகத் தரப்பில்  துணைப் பொதுமேலாளர் பெரியசாமி, கூடுதல் முதன்மை மேலாளர் அறிவு, முதுநிலை மேலாளர் சோமு உள்ளிட்டோர் இருந்தனர்.

Read more »

Irulas observe fast in Cuddalore

Seeking better amenities:Irulas observing fast in front of the Cuddalore Collectorate on Monday.

CUDDALORE: 
       
           The Irula families, residing at various places in Cuddalore district, gathered in front of the Collecatorate here and observed a day-long fast on Monday in support of their demands.

             Led by State president of the Sarpam Irula Workers' Association K.Srinivasan and district president S.Devadoss, they urged the authorities to provide basic amenities in their habitations located in all the six blocks of the district such as Cuddalore, Panruti, Chidambaram, Kattumannarkudi, Vriddhachalam and Thittakudi. They sought identity cards under the Kalaignar Housing Scheme, ration cards and Electors Photo Identity Cards.

            They alleged that the officials were denying community certificates to their wards even after submission of valid supporting documents. The tribal leaders further stated that adequate protection should be given to tribal women to safeguard their rights and to save them from sexual harassment. They sought permanent rehabilitation measures for the Irulas living in the coastal areas, as this acquired urgency particularly in the post-tsunami period. Towards evening, a section of the Irulas grew restive and started squatting on the road to block vehicular traffic. The officials intervened and persuaded them to give up the road blockade.

Read more »

Kiln owners told to supply 19 crore bricks before year-end

Collector P.Seetharaman holding a meeting with the brick kiln owners in Cuddalore on Monday. 
 
CUDDALORE: 

                With the construction works under the Kalaignar housing scheme picking up momentum, the Cuddalore district administration is gearing to meet the requirements of construction materials.

          Cuddalore has the second largest number of 2,10,758 huts, next to Villupuram, in the State and of which 1,26,735 have been found eligible for conversion into concrete houses under the scheme. But there is an enormous requirement of building materials for the purpose. For instance, for the construction of 26,119 houses in the first phase a total number of 19 crore bricks would be required this year.

              In a meeting convened here on Monday by District Collector P.Seetharaman, the brick kiln owners expressed certain constraints in meeting the demand. Since, rainy season was ahead for the next three months it would be a difficult task to turn out so many bricks within the stipulated time. Moreover, the brick industry was already facing labour shortage and hence, it would be a gigantic task to mobilise the workforce as well as funds as it would require huge investment.

            The Collector told them that this was the opportune time for the kiln owners to get bulk orders from the government. They could also use the existing stocks to fulfil the demand. Mr. Seetharaman also suggested usage of flyash in brick production and promised to get loan, with subsidy, from the Khadi and Village Industries Board for the purpose. The Collector even said that if there was any slippage in the supply position he was even contemplating to tap the resources from other districts such as Namakkal and Thanjavur where the number of houses to be built under the scheme was comparatively less.

                  The Collector underscored the point that as a supplementary measure the district administration had already trained members of about 175 Self-Help Groups in brick making and preparing the iron works for the proposed constructions. For the purpose, a loan of Rs 7 crore was given away to these SHGs, at the rate of Rs 4 lakh each. The Collector said that the kiln owners could enter into a memorandum of understanding with the respective Panchayat Presidents and the Block Development Officers for determining the number of bricks required and the price factor.

                      The market sources said that in anticipation of a huge demand for bricks under the scheme the prices of bricks had gone up significantly from Rs 2,300 to Rs 4,000 (per 1,000). The construction of private buildings would thus be hit both by the price increase in construction materials and short supply of labour, the sources added.

Read more »

திங்கள், செப்டம்பர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                 கால்நடை பராமரிப்புத் துறை மூலம், மத்திய அரசின் காப்பீட்டுப் பிரீமியத்தில் 50 சதவீத மானியத்துடன், கடலூர் மாவட்டத்தில் பசுக்கள் மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கால்நடைகளை வளர்போர், தங்களிடம் உள்ள கிடேரிகள், கறவை மாடுகள், கருவுற்ற மாடுகள், பால் வற்றிய மாடுகள் அனைத்தையும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

                    கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் மாடுகளுக்கு காப்பீடு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யப்படும். இறக்கும் மாடுகள், நிரந்தரமாகக் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத மாடுகள், விபத்தில் சிக்கும் மாடுகள் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தில் இழப்பீடு கிடைக்கும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், தரம் உயர்த்தப்பட்ட கால்நடை கிளை நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள, கால்நடை மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு, மாடுகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior