உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 10, 2012

மாரடைப்பு நோய்க்கு புதிய சிகிச்சை முறை

சிதம்பரம்:

மாரடைப்பு நோய்க்கு புதிய முறையில் சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை அப்பல்லோ மருத்துவமனை முதுநிலை இதயநோய் மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலுதெரிவித்தார்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இதயநோய் சிகிச்சை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 

கருத்தரங்கில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு மாரடைப்புக்கு உயிர்காக்கும் புதிய சிகிச்சை முறையை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது:


தீவிர மாரடைப்பின்போது எம் கார்டு மற்றும் க்ளியர்வே கத்தீட்டர் ஆகிய கருவிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலம் மருந்துகளை சீராக செலுத்தி ரத்தக் கட்டியை கரைத்து இதயத்துக்குள் ரத்தஓட்டத்தை சீராக்குகிறது. மாரடைப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் புதிய மருத்துவக் கருவிகளில் க்ளியர்வே கத்தீட்டர் என்பது ஒன்றாகும். அதன் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் பலூன் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு மருந்தை சீராக செலுத்தி ரத்தக்கட்டியை நீக்குகிறது. ÷பாரம்பரிய சிகிச்சை முறையில் ரத்தக்கட்டிகளை சிதறடிக்க கத்தீட்டர் மூலம் மருந்து செலுத்தப்படும். இது பாதிப்புள்ள பகுதிக்கு 20 சதவீத குறைவான அளவே மருந்து சென்றடையும்.


        ஆனால் புதிய கருவியான க்ளியர்வே கத்தீட்டர் பயன்படுத்துவதால் உயிர் சேதத்தை குறைக்க வசதியாக இருக்கும். ரத்தக்கட்டியை கட்டுப்படுத்துவதற்கான எம்கார்டு ஸ்டெண்ட் என்ற புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.÷பிரத்யோக மைக்ரான்- வலை தொழில்நுட்பத்தை கொண்டுள்ள எம்கார்டு, ரத்தக்கட்டிகளை சிக்க வைப்பதுடன், ரத்தநாளங்கள் நிவாரணமடைவதற்கு உதவுகிறது. தீவிர மாரடைப்புகள் இளம்வயதினில் குறிப்பாக புகைப்பழக்கம் உள்ளவர்களில் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. மார்புவலி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு விரைந்து வருவதன் மூலம் இதய தசைகளை காப்பாற்றலாம். இந்த புதிய கருவிகளுடன் உகந்த சிகிச்சை துரிதமாக மேற்கொள்ளப்படுவதால் இதய தசைகள் பெருமளவில் சேதமடையாமல் காப்பாற்றப்பட்டு நோயாளி உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என ஜி.செங்கோட்டுவேலு தெரிவித்தார்.
















Read more »

தேனீ வளர்ப்பு முறைகள்


 சிதம்பரம்: 
கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதுவும் குறிப்பாக தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறு மற்றும் குறு விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. தோட்டக் கலைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் சமவெளிப் பகுதிகளில் கூட தேனீ உற்பத்தியைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக விவசாயிகள் தேனீ வளர்ப்பின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும்.


 தோட்டக்கலைப் பயிர்களும், தேனீ உற்பத்திப் பெருக்கம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
இவற்றின் மகரந்தச் சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிப்பது தேனீக்கள்தான். ஒரு சராசரி தேன்கூட்டில் 50 ஆயிரம் தேனீக்கள் வரை ஒரு நாளைக்கு 10 லட்சம் செடிகளில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.இவ்வாறு மிக குறைந்த செலவில் இயற்கை முறையில் உற்பத்திப் பெருக்க உதவும் தேனீ வளர்ப்பு வாயிலாக விவசாயிகளுக்கு தேன் விற்பனை மூலமாகவும், தேன்கூட்டின் பிற மதிப்பு கூட்டுப் பொருள்கள் விற்பனை வாயிலாகவும் விவசாயிகள் அதிகளவு லாபம் பெற முடியும்.தோட்டக் கலைப் பயிர்களின் உற்பத்திப் பெருக்கம் (சதவீதத்தில்) குறித்த விவரம்: தக்காளி-160 சதவீதம், முந்திரி-157, கொடை மிளகாய்- 227, கத்தரி- 31, துவரை- 133, கொண்டைக் கடலை- 79.5, சோளம், பீன்ஸ்- 41, மா- 68, வாழை- 63. 
 தோட்டக்கலைப் பயிர்களில் மகரந்தச் சேர்க்கைக்கு பல நன்மை தரும் பூச்சிகள் பெரிதும் துணை செய்கின்றன. குறிப்பாக எறும்பு, பட்டாம்பூச்சிகள், வண்டுகள் என பல வகை பூச்சி வகைகள் பெரிதும் உதவி செய்கின்றன.இத்தகைய நடைமுறை சூழலில் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்யும் தேனீக்களின் விளைவாக பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்ட அளவை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகால ஆராய்ச்சியின் வாயிலாக கண்டறிந்துள்ளனர்.
 
முதலில் ஏக்கருக்கு ஒன்று அல்லது இரண்டு தேனீப் பெட்டிகள் வைத்து பழகிய பின்பு அவற்றின் பொருளாதார லாபங்களை பெற்ற பின்பு தேவையின் அடிப்படையில் விவசாயிகள் தேனீ கூடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். தற்போது தமிழக அரசு கதர்த்துறை சார்பில் சட்டப்பேரவையில் தேனீ வளர்ப்பை பிரபலப்படுத்த ஒரு கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாக 440 விவசாயிகள் 4400 தேனீ குடும்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த முயற்சியில் விவசாயிகள் தங்களை இணைத்து கொண்டு தங்களின் தோட்டங்களில் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்த முடியும்.  குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியும் என்கிறார் உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன். 




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior