உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 23, 2012

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

நெய்வேலி:

          என்எல்சி அனல்மின் நிலையங்களில் இருந்து மத்திய மின் தொகுப்புக்கு நாள்தோறும் வழங்கப்படும் மின்விநியோக இலக்கைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 ÷இந்நிலையில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்னுற்பத்தி பாதிக்கக் கூடிய சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில் மக்கள் தொடர்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

        என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் நாளொன்றுக்கு 51.5 மில்லியன் யூனிட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு வழங்க ஏதுவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ÷இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 57.5 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மின்விநியோகத்தில் புதிய சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

       மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சமரசத் தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும், தகவல் தொடர்பாக மக்கள் தொடர்புத் துறையை அணுகி அதன் மூலம் உரிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

அண்ணாமலைப் பல்கலைகே கழக வேளாண்புலதிற்க்கு புதிய காப்புரிமை

சிதம்பரம்:

     ஆகாயத் தாமரையிலிருந்து நானோ தொழில்நுட்பம் வாயிலாக துணிமணிகள் உற்பத்தி செய்ய உதவும் மெல்லிய இதழ்கள் தயாரிக்க, மத்திய அரசிடம் அண்ணாமலைப் பல்கலை. உழவியல்துறை காப்புரிமைப் பெற்றுள்ளது என அண்ணாமலைப் பல்கலை வேளாண்புல முதல்வர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன் தெரிவித்தார் ÷சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் வேளாண் கல்லூரி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வேளாண்புல முதல்வர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன் பேசியது: 

        தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பார்த்தீனியம் களை ஒழிப்பு நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை வேளாண்புலம் ஈடுபட்டது.÷தற்போது ஆகாயத் தாமரையிலிருந்து நானோ தொழில்நுட்பம் வாயிலாக துணிமணிகள் உற்பத்தி செய்ய உதவும் மெல்லிய இதழ்கள் தயாரிக்க மத்திய அரசிடம் அண்ணாமலைப் பல்கலை. உழவியல் துறை காப்புரிமைப் பெற்றுள்ளது.

         மேலும் தற்போது தேசிய வேளாண் புதுமை திட்டத்தின் விரிவாக்கத்துக்கு மத்திய வேளாண் அமைச்சகம் வாயிலாக அதிகப்படியாக ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறையுடன் இணைந்து சர்வதேச நெல் ஆராய்ச்சி மைய பங்களிப்புடன் வெகுவிரைவில் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைப் பெற்று தரும் புதிய நெல்ரகத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த உள்ளோம். கனடா நாட்டின் நோவா ஸ்கோட்டியா பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்டுள்ள உயர்கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டங்களைப் பெற முடியும் என ஆர்.எம்.கதிரேசன் தெரிவித்தார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விழாவில் பேசியது:

         மாணவர்களின் உயர்கல்விக்கு ஊக்கம் தரப்படுவதால் இப் பல்கலை மாணவர்கள் பல துறைகளில் தலைமைப் பண்புகளுடன் சிறந்து விளங்குகின்றனர் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.


ஆந்திர மாநில வருவாய்த் துறை தலைமைச் செயலர் ஏ.ஆர்.சுகுமார் பேசியது: 

         இப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நமது நாட்டின் சிறந்த வேளாண் நிறுவனங்களில் சிறப்பான பங்களிப்பு வழங்கி வருகின்றனர் என தெரிவித்தார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு துணைவேந்தர் எம்.ராமநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.÷வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் டி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலத்தில் புதிய மகளிர் கல்லூரி: முத்துகுமார் எம்.எல்.ஏ., கோரிக்கை


விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் பெண்கள் கல்லூரி துவங்க வேண்டுமென முத்துகுமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் முத்துகுமார் எம்.எல்.ஏ.பேசியது:

விருத்தாசலம் தொகுதியிலுள்ள 200 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உயர் கல்வி படிப்புக்காக திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர். இங்குள்ள 65 சதவீதம் பெண்கள் படிக்கும் விருத்தாசலம் அரசு கல்லூரியில் 60 சதவீதம் பெண்கள் இடம் கிடைக்காமல் வெளியேறுகின்றனர். எனவே விருத்தாசலத்தில் புதிய மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும்.பீங்கான் தொழில் நுட்ப கல்லூரியை சீரமைத்து, அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். செராமிக் தொழிற்சாலைகளின் வசதிக்காக அரசு நிதி மூலம் ஓர் கில்லன் (சுடு சூளை) கட்டடித் தர வேண்டும். பொம்மை தொழிலுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும்.தொகுதியிலுள்ள பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர், நவீன கழிவறை கட்டித் தரவேண்டும். அரசு கல்லூரி விளையாட்டு மைதானம் தரம் உயர்த்த வேண்டும். காணாதுகண்டான் கிராமத்திள்ள எரிசாராய ஆலை மற்றும் நல்லூர் ஒன்றியம் ஏ.சித்தூர் ஆரூர் சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீரை மாசு படிவதை தடுக்க வேண்டும்.விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு முத்துகுமார் எம்.எல்.ஏ., பேசினார்.




Read more »

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொருட்காட்சி துவக்கம்

கடலூர்:


கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொழுது போக்கு பொருட்காட்சியை எஸ்.பி., திறந்து வைத்தார். தமிழ்நாடு எண்டர்டெய்ன்மென்ட் பொருட்காட்சி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் துவங்கியது. எஸ்.பி., பகலவன் திறந்து வைத்தார். பொருட்காட்சியின் நிர்வாகி அப்பாஸ் உடனிருந்தார். பொருட்காட்சியில் நூறு அரங்கங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ ஜெயன்ட் வீல் ராட்டிணம், கொலம்பஸ், பிரேக் டான்ஸ், டோரா டோரா உள்ளிட்ட அனைத்து வகையான ராட்டிணங்களும், சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் தாவும் தவளை, கார்ட்டர் பில்லோ, பலூன், மினி ஜீப் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.பொருட்காட்சி தினமும் மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடக்கிறது. இதற்கான நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior