உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 13, 2011

ஐஎஸ்பின் (ISBN) எண் பெறுவது எப்படி நூல் வெளியீடு

சிதம்பரம்:

              இன்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட் புக் எண்  பெறுவது எப்படி என்கிற நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், மணிபாரதி பதிப்பகம் சார்பில் அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

               புத்தகங்களை வெளியிடுபவர்கள் தங்களது நூலிற்கு இன்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட் புக் எண் எவ்வாறு பெறுவது என தெரியாமல் உள்ளனர். இந்த நூல், நூல்களை வெளியிடும் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது மிகப்பெரிய நூலகங்களில் புத்தகங்களை அடுக்கி வைத்து, உடனடியாக எடுத்துக் கொடுப்பதற்கு வசதியாக இந்த ஐஎஸ்பிஎன் எண் வழங்கப்படுகிறது. வெப்சைட் மூலம் நூல்களின் எண்களை தெரிந்து நூல்களை எளிதில் பெற இந்த எண் வழி வகுக்கிறது. 

                இந்நிலையில் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், நூலாசிரியர்கள் பயன்பெறும் வகையில் இந்த நூல் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது என பதிப்பாளர் ச.மணிவண்ணன் தெரிவித்தார்.வேளாண்புல முதல்வர் முனைவர் ஜே.வசந்தகுமார் வெளியிட்டார். முதல் பிரதியை மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார். பதிப்பாளர் ச.மணிவண்ணன் வரவேற்றார். ரோட்டரி முன்னாள் தலைவர்கள் முனைவர் க.கதிரேசன், பேராசிரியர் தொல்காப்பியன், மீ.அகோரமூர்த்தி, முனைவர் ஜி.ரவி, முன்னாள் செயலாளர் க.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOR MORE DETAILS ABOUT ISBN


Read more »

மலாய் பல்கலைக்கழகத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் நெய்வேலி பேராசிரியர் வி.எஸ்.தியாகராஜன் பங்கேற்பு

நெய்வேலி:

            மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் வி.எஸ்.தியாகராஜன் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார். 

             மலாய் பல்கலைக்கழகமும், சென்னை அநுராகம் பதிப்பகமும் இணைந்து கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை அண்மையில் மலேசியாவில் நடத்தின. இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கலை, அறிவியல், நிர்வாகம், மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.  மலாய் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியன் வரவேற்றார். மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் டத்தோ எஸ்.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்திய ஆய்வியல் துறைத் தலைவரும், மாநாட்டுத் தலைவருமான முனைவர் எஸ்.குமரன் சிறப்புரையாற்றினார்.

              நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் வி.எஸ்.தியாகராஜன் கலந்துகொண்டு எளிய முறையில் தமிழ் கற்பிப்பது எப்படி எனும் தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார். பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பித்து தாய்நாடு திரும்பியபேராசிரியர் தியாகராஜனை என்எல்சி அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நெய்வேலி நகர தமிழ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பாராட்டினர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை சென்னை அநுராகம் பதிப்பகத்தின் உரிமையாளர் நந்தன் மாசிலாமணி செய்திருந்தார்.







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior