உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 20, 2011

கடலூர் மாவட்டத்தில் காவலர்கள் பற்றாக்குறை

சிதம்பரம்:

          புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமிழக காவல் நிலையங்களில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 

            ரோந்து செல்ல காவலர்கள் இல்லாததால் திருட்டு, வழிபறி உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளன. தற்போது காவல் நிலையங்களில் பணியாற்றிய தலைமைக்காவலர்கள் அனைவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

         இதனால் காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களில் காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட பயிற்சி பெற்ற காவலர்களை காவல் நிலையங்களில் உள்ள காவலர் பணியிடங்களில் நியமனம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 

            இதனால் ரோந்து பணிக்கு கூட காவலர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பயிற்சி பெற்று காத்திருக்கும் காவலர்களை காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என காவல்துறையினர் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.




Read more »

சூன் 26ல் மெரினா கடற்கரையில் இலங்கை தமிழர் படுகொலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்துவோம்


"சூன் 26ல் மெரினா கடற்கரையில் இலங்கை 

தமிழர் படுகொலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி

நினைவேந்துவோம்"








Read more »

ஆராய்ச்சி கட்டுரைகளை இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய புதிய திட்டம்

        உலகளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை மின்னணு வசதி மூலம் கல்லூரிகளிலேயே மாணவர்கள் இலவசமாக பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

        முதுகலை பட்ட மேற்படிப்பு, அறிவியல் ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆய்வுக்கு தேவையான ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு புத்தகங்களில் இருந்து திரட்டுகின்றனர். இதில் முக்கிய புத்தகங்கள், ஒரு சில நூலகங்களில் மட்டுமே கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஆராய்ச்சி புத்தகங்கள் கிடைக்காமல் சிலர் சிரமப்படுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் இந்த புத்தகத்தை பல ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது.

       இதைத் தொடர்ந்து மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு துறை சார்பில், பல்கலைக் கழக மானிய குழு, ஐ.ஐ.டி., - ஏ.ஐ.சி.டி.இ., இணைந்து, "என். லிஸ்ட்' என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில், 2,500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வசதியை பல்கலைக்கழக மானியம் பெறும் கல்லூரி மாணவர்கள் பெறும் வகையில், மின்னணு தகவல்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. 

        இங்குள்ள முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, "யூசர்நேம், பாஸ்வேர்டு' வழங்கப்படும். இணையதள வசதியை பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக ஆராய்ச்சி கட்டுரைகளை பெறலாம். இத் திட்டத்தில் இந்தியா முழுவதும், 600 கல்லூரிகளை இணைக்க திட்டமிட்டு, இதுவரை, 1,500 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியிலும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.





Read more »

சிதம்பரம் அண்ணாமலை நகர் மேம்பால சுவற்றில் அழகான ஓவியங்கள் மீது அரசியல் போஸ்டர்

சிதம்பரம் : 

      கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர் மேம்பால சுவற்றில் வரையப்பட்டுள்ள அழகிய ஓவியங்கள் மீது, அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளது அப்பகுதியினரை முகம்  சுளிக்க வைத்துள்ளது.
 
        அரசுக்கு சொந்தமான இடங்கள் என்றாலே அரசியல் கட்சியினருக்கு அத்தனை சுதந்திரம். சொந்த இடமாக உரிமை கொண்டாடி இஷ்டத்துக்கும் சுவர் விளம்பரங்கள் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என நாசம் செய்து விடுவர். இந்த நிலையைப் போக்க சிதம்பரத்தில் அரசு சார்பில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பாலத்தின் சுவர்கள், அலுவலக சுவர்களில், பார்த்தால் யாருக்கும் அசுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராத அளவில், கலைநயத்துடன் கூடிய ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக, வரலாற்று நிகழ்வுகளை மக்களுக்கு நினைவு படுத்தம் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.
 

         சிதம்பரம் அண்ணாமலைநகர் மேம்பால சுவர்களில், இதுபோன்ற ஓவியங்கள் சுவற்றை அலங்கரித்திருந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென இரவோடு, இரவாக ஒரு அரசியல் கட்சி சார்பில், நம்மை யார் கேட்பது என்ற ரீதியில் அழகான ஓவியங்கள் மீது வரிசையாக போஸ்டர்கள் ஒட்டி அசுத்தம் செய்துள்ளனர். அரசு ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து, அழகுபடுத்தும் சுவர்களை இதுபோன்று ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும், அநாகரிக போக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.








Read more »

Plea to tackle water problem asked Chidambaram Assembly constituency MLA K. Balakrishnan

CUDDALORE: 

          Chidambaram Assembly constituency MLA K. Balakrishnan has appealed to Collector V. Amuthavalli to take steps to meet the drinking water needs of the residents of Chidambaram.

            He met the Collector recently and told her that Chidambaram was currently facing water problems and tankers should be deployed to supply adequate water to residents of all 33 wards. He requested the Collector to take immediate steps to desilt the Vakkiramari reservoir and other waterbodies.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior