உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 07, 2012

கடலூர் மாவட்டத்தில் நிவாரணம் தொடர்பான விவரங்களை அறிய இலவச தொலை பேசி எண் 1077

          தானே புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நிவாரணம் தொடர்பான விவரங்களை அறிய 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், பொதுமக்களின் மறியலால் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படும் என்றும் கடலூர் ஆட்சியர் அமுதவல்லி கூறியுள்ளார். நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல் செய்ய வேண்டாம் என்று கடலூர் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »

சிதம்பரம் வேளங்கிராயன்பேட்டை கடற்கரை அருகே இளம் பெண் சடலம்

     சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேளங்கிராயன்பேட்டை கடற்கரையோரம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஆடையற்ற நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளது. இறந்து கிடந்த பெண் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.

           இளம்பெண்ணின் சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து இறந்து போன இளம்பெண் யார் என்றும், அவர் மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior