உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 15, 2009

கடலூர் அருகே ரசாயன கப்பல் கடலில் தவிப்பு

கடலூர்:

                        வங்ககடலில் உருவாகியுள்ள வார்ட் புயல் காரணமாக  கடந்த 4 நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.

                       இந்நிலையில் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பிவிசி தொழிற்சாலைகளுக்கு ஜப்பானில் இருந்து விசிஎம் (வினையல் குளோரைடு மோனமார்) என்ற ரசாயனத்துடன் வந்துள்ள 2 கப்பல்கள் அலையின் சீற்றத்தால் சித்திரைப் பேட்டையில் உள்ள துறைமுகத்திற்கு வரமுடியாமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 7 ஆயிரம் டன் ரசாயனமும், மற் றொரு கப்பலில் 3 ஆயிரம் டன் ரசாயனமும் இருக்கிறது. இது குறித்து கடலூர் துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது “இரண்டு கப்பல்களும் புயல் காரணமாக துறைமுகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கப்பல்களில் உள்ள ரசாயனம் போதிய பாதுகாப்புடன் உள்ளது. புயல் தாக்கத்தால் பாதிப்புகள் வராது. எனினும் கடலில் அலையின் சீற்றம் குறைந்த பிறகே கப்பல்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படும். அது வரையில் நடுக்கடலிலேயே நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக நடுகடலில் 10 ஆயிரம் டன் ரசாயனத்துடன்  கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் கடலூர் கடற்கரை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more »

பாரதியார் பிறந்தநாள்

கடலூர்:

                                  கடலூரில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கடலூர் திருப்பாதிரி புலியூர் பாடலேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை தாங்கினார். தமிழாசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். ஓய்வு பெற்ற கல்வித்துறை கண்காணிப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கடல் நாகராசன் பரிசு வழங்கினார்.

                        மற்றொரு விழா; திருவள்ளுவர் பயிற்சி பள்ளி யில் நடந்த விழாவிற்கு பயிற்சி பள்ளி நிறுவனர் ஸ்ரீநிவா சன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுபாஷ் முன் னிலை வகித் தார். ஆசி ரியை கயல்விழி வரவேற் றார். சிறப்பு விருந்தினராக ஐந்தாம் உலக தமிழ்சங்க நிறுவனர் முத்துகுமரன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசராகவன் பாரதியும்& தமிழ்சங்கமும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். ஆசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.



Read more »

விக்கிரவாண்டி & தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில்மண் பரிசோதனை

பண்ருட்டி: 

                 சாலைகளில் ஏற்படும்  விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான சாலை களில் விபத்துகள் குறைந்துள்ளது. விக்கிரவாண்டியிலிருந்து  தஞ்சாவூர்  வரை செல்லும் சாலை தற்போது குறுகிய அளவில் உள்ளது.

                  இவற்றின் மொத்த நீளம் 165 கி. மீட்டர் ஆகும். 7 மீட்டர் அகலம் உள்ள சாலையை 10 மீட்ட ராக அகலப்படுத்துவதற்கு அரசு முடிவு செய்தது. இதன்படி சாலையை ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. சாலையை அகலப்படுத்தவும், பாலங்களை புதுப்பிக்கவும் மத்திய அரசு  ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் அதிபதி கூறியதாவது: விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை உள்ள சாலையில் பெரிய பாலங் கள் 54, சிறிய பாலங்கள் 300 உள்ளது. தற்போது  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் இப்பணிகள் துவங்க விக்கிரவாண்டியிலிருந்து மண் பரிசோதனை  செய்யப்பட்டு வருகிறது. தற் போது பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை பெண்ணை ஆற்றில் மண் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.  இந்த பணிகள் வரும் ஏப்ரல் வரை நடை பெறும். ஆய்வுக்கு பின் முறையாக டெண்டர் விடப்பட்டு சாலைகள் அகலப்படுத்தும்  பணிகள் துவங்கும். சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும் என்றார்.

Read more »

இடை​நிலை ஆசி​ரி​யர்​க​ளுக்கு ​ நிய​மன ஆணை

கட​லூர்,​​ டிச.​ 14:​ 

          இடை​நிலை ஆசி​ரி​யர்​கள் 73 பேருக்கு பணி நிய​மன ஆணை​களை கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் திங்​கள்​கி​ழமை வழங்​கி​னார்.​ ​க​ட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஊராட்சி ஒன்​றி​யப் பள்​ளி​க​ளில் காலிப் பணி​யி​டங்​க​ளுக்கு இடை​நிலை ஆசி​ரி​யர்​கள் தேர்வு அண்​மை​யில் நடந்​தது.​  இதில் 73 பேர் தேர்ந்து எடுக்​கப்​பட்​ட​னர்.​  இவர்​க​ளில் ஆண்​கள் 16,​ பெண்​கள் 57.​  73 பேரில் 37 பேர் கட​லூர் மாவட்​டத்​தி​னர்.​ 36 பேர் பிற மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​த​வர்​கள்.​  இவர்​க​ளுக்​குப் பணி​நி​ய​மன ஆணை​களை மாவட்ட ஆட்​சி​யர் திங்​கள்​கி​ழமை வழங்​கி​னார்.​மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​​ மாவட்​டத் தொடக்​கக் கல்வி அலு​வ​லர் விஜயா ஆகி​யோர் கலந்​து​கொண்​ட​னர்.​

Read more »

பரப்​புரை இயக்​கம்

சிதம்ப​ரம்,​​ டிச.14:​ 

              தமி​ழ​கத்​தில் கல்வி,​​ தொழில்,​​ வேலை,​​ வணி​கத்​தில் 85 விழுக்​காடு தமி​ழர்​க​ளுக்கு ஒதுக்​கக் கோரி தமிழ்த் தேசப் பொது​வு​ட​மைக் கட்சி பரப்​புரை இயக்​கம் சார்​பில் டிசம்​பர் 11,12 தேதி​க​ளில் சிதம்​ப​ரத்​தில் வீடு வீடாக சென்று பிர​சா​ரம் செய்​யப்​பட்​டது.​   நக​ரச் செய​லா​ளர் கு.சிவப்​பி​ர​கா​சம் தலைமை வகித்​தார்.​ ​  மாண​வர்​க​ளும்,​​ இளை​ஞர்​க​ளும் பங்​கேற்று துண்​ட​றிக்​கை​களை வீடு வீடா​கச் சென்று அளித்து பிர​சா​ரம் செய்​த​னர்.

Read more »

26 ஆயிரம் ஊன​முற்​றோருக்கு அடை​யாள அட்டை

கடலூர்,​​ டிச.​ 14:​ 
 
             கட​லூர் மாவட்​டத்​தில் ஊன​முற்​றோர் 26 ஆயி​ரம் பேருக்கு அடை​யாள அட்டை வழங்​கப்​பட்டு இருப்​ப​தாக மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் திங்​கள்​கி​ழமை தெரி​வித்​தார்.​ ​
 
              க​ட​லூர் ஒய​ஸிஸ் ஊன​முற்​றோர் பள்ளி வளா​கத்​தில் சர்​வ​தேச ஊன​முற்​றோர் விளை​யாட்​டுப் போட்​டி​க​ளைத் தொடங்கி வைத்து ஆட்​சி​யர் பேசி​யது:​ க ​ட​லூர் மாவட்​டத்​தில் ஊன​முற்​றோ​ருக்​காக இரு அர​சுப் பள்​ளி​கள் உள்​பட 15 பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன.​ இவற்​றில் 850 குழந்​தை​கள் படிக்​கி​றார்​கள்.​ இவர்​க​ளுக்கு ஆண்டு உத​வித்​தொகை 1 முதல் 5 வகுப்பு வரை ரூ.500,​ 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.1500,​ 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயி​ரம் வழங்​கப்​ப​டு​கி​றது.​ ஆ​தி​தி​ரா​வி​டர் சமூ​கத்​தில்​தான் ஊன​முற்​றோர் எண்​ணிக்கை அதி​க​மாக உள்​ளது.​ மாநி​லத்​தி​லேயே ஊன​முற்​றோர் எண்​ணிக்​கை​யில் கட​லூர் மாவட்​டம் 5-வது இடத்​தில் உள்​ளது.    ​ 
 
                கட​லூர் மாவட்​டத்​தில் 26 ஆயி​ரம் பேருக்கு ஊன​முற்​றோர் அடை​யாள அட்​டை​கள் வழங்​கப்​பட்டு உள்​ளன.​ ஊன​முற்​றோர் 2,847 பேருக்கு மத்​திய அரசு உத​வித் தொகை ரூ.400-ம்,​​ மாவட்ட ஊன​முற்​றோர் மறு​வாழ்​வுத் துறை மூல​மாக 1400 பேருக்கு ரூ.500-ம் வழங்​கப்​ப​டு​கி​றது என​றார் ஆட்​சி​யர்.​ ​மா​வட்ட மறு​வாழ்வு அலு​வ​லர் சீனி​வா​சன் வர​வேற்​றார்.​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

நெல்லிக்குப்பத்தில் 1000 க்​கும் மேற்​பட்​டோர் ஆர்ப்​பாட்​டம்

கடலூர்,​​ டிச.​ 14:​ 
 
                நெல்​லிக்​குப்​பத்​தில் நீக்​கப்​பட்ட பஸ் நிறுத்​தத்தை மீண்​டும் அனு​ம​திக்​கக் கோரி,​​ திங்​கள்​கி​ழமை ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ எங்கே அதி​க​மான மக்​கள் கூடி​நின்று கை காட்​டு​கி​றார்​களோ அவ்​வி​டங்​கள் எல்​லாம் பஸ் டிரை​வர்​க​ளுக்கு பஸ் நிறுத்​தங்​கள்​தான்.​   
 
                         100-க்கும் மேற்​பட்ட பய​ணி​கள் நின்று கைகாட்​டி​னா​லும் பஸ்​கள் நிற்​கா​மல் செல்​லும் நிலையை செயற்​கை​யாக உரு​வாக்கி இருக்​கி​றது நெல்​லிக்​குப்​பம் காவல்​துறை.​ பஸ் நிறுத்​த​மும் இங்கு அர​சி​யல் ஆக்​கப்​பட்டு விட்​டதோ என்று ஐயத்தை உரு​வாக்கி உள்​ள​னர்.​ ​30 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் வசிக்​கும் பகு​தி​யில்,​​ 60 ஆண்​டு​க​ளுக்கு மேல் இருந்து வந்த பஸ் நிறுத்​தத்தை திடீ​ரென அகற்​றி​விட்​ட​தால் மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர்.​ ​பஸ் நிறுத்​தத்தை அகற்​றி​னால்​தான் பஸ் நிலை​யத்​துக்​குள் பய​ணி​கள் கூட்​டம் வரும் என்ற நோக்​கத்​தில் இந்த ஏற்​பாட்டை காவல்​துறை மேற்​கொண்டு இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​      
 
                 வழக்​க​மான முறை​யில் பஸ் நிறுத்​தம் வேண்​டும் என்று கோரி நெல்​லிக்​குப்​பம் நகர மக்​கள் கடந்த 2 மாதங்​க​ளா​கப் பல்​வேறு போராட்​டங்​களை ​ ​ நடத்​தி​விட்​ட​னர்.​ ஆனால் அரசு செவி​சாய்க்​க​வில்லை.​ ​ எ​னவே தமிழ்​நாடு முஸ்​லிம் முன்​னேற்​றக் கழ​கம் சார்​பில் திங்​கள்​கி​ழமை சாலை​ம​றி​யல் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது.​   இந்த போராட்​டத்​தில் த.மு.மு.க.வினர் மட்​டு​மன்றி பொது​மக்​க​ளும் ஏரா​ள​மா​கக் கலந்து கொண்​ட​னர் ஊர்​வ​ல​மாக வந்த அவர்​களை போலீ​ஸôர் தடுத்து நிறுத்​தி​னர்.​     எனி​னும் தங்​கள் அனை​வ​ரை​யும் கைது செய்​யு​மாறு அவர்​கள் கோஷ​மிட்டு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​÷அஞ் ​சல் நிலைய பஸ் நிறுத்​தம் அருகே நிறுத்​தப்​பட்ட அவர்​க​ளி​டம்,​​ நெல்​லிக்​குப்​பம் எம்.எல்.ஏ.​ சபா.ராஜேந்​தி​ரன்,​​ நக​ராட்​சித் தலை​வர் கெய்க்​வாட் பாபு,​​ வட்​டாட்​சி​யர் பாபு மற்​றும் போலீ​ஸôர் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னர்.​    செவ்​வாய்க்​கி​ழமை காலை 7 மணி முதல் அஞ்​சல் நிலைய பஸ் நிறுத்​தம் அனு​ம​திக்​கப்​ப​டும் என்று உறுதி அளித்​த​தைத் தொடர்ந்து போராட்​டம் முடி​வுக்கு வந்​தது.​ உறுதி அளித்​த​படி பஸ் நிறுத்​தம் அனு​ம​திக்​கப்​ப​டா​விட்​டால் மீண்​டும் 16-ம் தேதி முதல் போராட்​டத்​தைத் தொடங்​கு​வோம் என்று அறி​வித்து உள்​ள​னர்.​ ​போராட்​டத்​துக்கு த.மு.மு.க.​ மாநில துணைச் செய​லா​ளர் எஸ்.எம்.ஜின்னா தலைமை வகித்​தார்.​ மாவட்​டச் செய​லா​ளர் எம்.ஷேக் தாவுத் முன்​னிலை வகித்​தார்.​ மாவட்​டப் பொரு​ளா​ளர் அமீர்​பாஷா,​​ நக​ரத் தலை​வர் அப்​துல்​ர​கீம்,​​ துணைத் தலை​வர் அப்​துல் ரகு​மான்,​​ போராட்​டக்​குழு தலை​வர் சர்​பு​தீன் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

நிய​ம​னம்

கடலூர்,​​ டிச.​ 14: 
 
                 தமிழ்​நாடு மாநில நுகர்​வோர் பாது​காப்பு கவுன்​சில் உறுப்​பி​ன​ராக கட​லூர் மாவட்ட நுகர்​வோர் பாது​காப்​புப் பேரவை பொதுச் செய​லா​ளர் எம்.நிஜா​மு​தீன் நிய​மிக்​கப்​பட்டு இருக்​கி​றார்.​          
 
                  இ​தற்​கான உத்​த​ரவை மாநில உண​வுத் துறை முதன்​மைச் செய​லர் கே.சண்​மு​கம் அண்​மை​யில் பிறப்​பித்​துள்​ளார்.​     இந்​தக் கவுன்​சில் தலை​வ​ராக உண​வுத் துறை அமைச்​ச​ரும்,​​ உறுப்​பி​னர் செய​ல​ராக உண​வுத் துறை செய​ல​ரும் இடம்​பெற்று உள்​ள​னர்.​      
 
                 த​மிழ்​நாடு மின்​சார வாரி​யத் தலை​வர்,​​ மாசுக் கட்​டுப்​பாடு வாரி​யத் தலை​வர்,​​ பி.எஸ்.என்.எல்.​ தலை​மைப் பொது மேலா​ளர்,​​ ஆயுள் காப்​பீட்டு நிறு​வன மண்​டல மேலா​ளர்,​​ வங்​கி​க​ளின் ஒருங்​கி​ணைப்​பா​ளர் உள்​ளிட்ட பல்​வேறு துறைத் தலை​வர்​கள்,​​ அலு​வ​லர்​கள்,​​ எம்.பி.க்கள் கே.எஸ்.அழ​கிரி,​​ விஜ​யன்,​​ எம்.எல்.ஏ.க்கள் லதா அதி​ய​மான்,​​ ராஜேந்​தி​ரன்,​​ மற்​றும் பல்​வேறு நுகர்​வோர் அமைப்​பு​க​ளின் தலை​வர்​கள் மாநில நுகர்​வோர் கவுன்​சில் உறுப்​பி​னர்​க​ளாக இடம் பெற்​றுள்​ள​னர்.​  உ​றுப்​பி​னர்​க​ளின் பத​விக் காலம் 3 ஆண்​டு​கள் ​ ஆகும்.​ கவுன்​சில் ஆண்​டுக்கு இரு​முறை கூடி நுகர்​வோர் பிரச்​னை​கள் குறித்து விவா​தித்து அர​சுக்கு பரிந்​து​ரை​களை அளிக்​கும்

Read more »

டிசம்​பர் 15 முதல் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

சிதம்ப​ரம்,​​ டிச.​ 14:​ 
 
             கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உத்​த​ர​வின்​படி சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​லக நில அள​வைப் பிரி​வில் பட்டா மாற்​றம் மற்​றும் புல எல்லை அளக்​கக்​கோரி ஏற்​கெ​னவே கொடுக்​கப்​பட்டு நிலு​வை​யில் உள்ள மனுக்​க​ளுக்கு தீர்வு காண டிசம்​பர் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வடை பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடை​பெற உள்​ளது.​    
 
            சி​தம்​ப​ரம் கஸ்பா குறு​வட்​டத்​தில் அந்​தந்த கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கத்​தில் நில​அ​ள​வர்​கள் முகா​மிட்டு மனுக்​கள் மீது நட​வ​டிக்கை மேற்​கொள்ள உள்​ள​னர்.​ எனவே மனு அளித்​த​வர்​கள் அந்த கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கங்​க​ளில் தங்​க​ளது கோரிக்கை குறித்த கிரய பத்​தி​ரம் மற்​றும் ஆவ​ணங்​க​ளு​டன் ஆஜ​ராகி தீர்வு பெற்​றுக் கொள்​ள​லாம் என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் தெரி​வித்​துள்​ளார்.

Read more »

நக​ராட்சி,​​ பேரூ​ராட்சி பகு​தி​க​ளில் ​ ​நலிந்த பிரி​வி​ன​ருக்கு வீட்​டுக்​க​டன்

கடலூர்,​​ டிச.​ 14:​ 
 
               கட​லூர் மாவட்​டத்​தில் நக​ராட்சி மற்​றும் பேரூ​ராட்​சிப் பகு​தி​க​ளில் குறைந்த வரு​வாய் மற்​றும் நலி​வ​டைந்த பிரி​வி​ன​ருக்கு வட்டி மானி​யத்​தில் வீட்​டுக் கடன் வழங்​கப்​ப​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்து உள்​ளார்.​ ​ 
 
ஆட் ​சி​யர் திங்​கள்​கி​ழமை வெளி​யிட்ட செய​திக் குறிப்பு:​ 
 
              நக​ராட்சி மற்​றும் பேரூ​ராட்​சிக்கு உள்​பட்ட பகு​தி​க​ளில் வசிக்​கும் குறைந்த வரு​வாய் மற்​றும் பொரு​ளா​தா​ரத்​தில் ​ நலி​வ​டைந்த பிரி​வி​ன​ருக்கு வட்டி மானி​யத்​தில் வீடு கட்ட கடன் வழங்​கப்​ப​டும்.​ மனைப்​பட்டா உள்​ள​வர்​க​ளுக்கு வங்​கி​கள் மூலம் இக்​க​டன் வழங்​கப்​ப​டும்.​ இதற்​கான பய​னா​ளி​க​ளைத் தேர்வு செய்ய உத்​தே​சிக்​கப்​பட்டு உள்​ளது.​ மாத வரு​மா​னம் ரூ.3300 வரை உள்​ள​வர்​க​ளுக்கு மானிய வட்​டி​யில் அதி​க​பட்​சக் கடன் ரூ.1 லட்​சம்.​ மாத வரு​மா​னம் ரூ.3,301 முதல் ரூ.7,300 வரை உள்​ள​வர்​க​ளுக்கு மானிய வட்​டி​யில் அதி​க​பட்​சக் கடன் ரூ.1.60 லட்​சம்.​ வங்​கிக்​குச் செலுத்த வேண்​டிய வட்​டி​யில் மத்​திய அரசு ரூ.1 லட்​சத்​துக்கு 5 சதம் மானி​ய​மாக கடன் வழங்​கப்​ப​டும்.​ ரூ.​ 1 லட்​சத்​துக்கு மேற்​பட்ட கடன்​க​ளுக்கு வங்​கி​கள் நிர்​ண​யிக்​கும் வட்டி செலுத்த வேண்​டும்.​ வாய்ப்பை பயன்​ப​டுத்த விரும்​பு​வோர் தகுந்த சான்​றி​த​ழு​டன் விண்​ணப்​பத்தை செயற்​பொ​றி​யா​ளர் மற்​றும் நிர்​வாக அலு​வ​லர் தமிழ்​நாடு வீட்​டு​வ​சதி வாரி​யம்,​​ விழுப்​பு​ரம் வீட்டு வச​திப் பிரிவு கிழக்​குப் பாண்டி சாலை,​​ மகா​ரா​ஜ​பு​ரம் விழுப்​பு​ரம் ​(தொலை​பேசி எண் 04146- 249606) என்ற முக​வ​ரிக்கு விண்​ணப்​பிக்​க​லாம் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

Read more »

பஸ் படிக்​கட்டு உடைந்து 5 பேர் காயம்

விருத்தா​ச​லம்,​​ டிச.​ 14:​ 

                  விருத்​தா​ச​லம் அருகே சாலை​யில் வந்​து​கொண்​டி​ருந்த அரசு பஸ்​ஸில் திடீ​ரென படிக்​கட்டு உடைந்து விழுந்​தது.​ இதில் பலத்த காய​ம​டைந்த 5 பேர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​ட​னர்.​ இதைக் கண்​டித்​தும்,​​ சாலையை சீர​மைக்​கக் கோரி​யும் அப் பகுதி மக்​கள் திடீர் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ பண் ​ருட்​டியி​லி​ருந்து திங்​கள்​கி​ழமை காலை புறப்​பட்ட அரசு பஸ் காட்​டுக்​கூ​ட​லூர் வழி​யாக விருத்​தா​ச​லத்​துக்கு வந்து கொண்​டி​ருந்​தது.​ காலை 9 மணி​ய​ள​வில் சின்​னக்​கண்​டி​யங்​குப்​பம் கிரா​மத்​தில் பய​ணி​களை ஏற்​றிக்​கொண்டு புறப்​பட்டு சென்று கொண்​டி​ருந்த போது பஸ்​ஸின் பின்​பக்க படிக்​கட்டு திடீ​ரென உடைந்து விழுந்​தது.​

                      இச் சம்​ப​வத்​தில் அந்த பஸ்​ஸில் பய​ணித்த அதே கிரா​மத்​தைச் சேர்ந்த சுகந்தி ​(17),​ சீத்தா ​(20),கோட்​டேரி கிரா​மத்​தைச் சேர்ந்த வெங்​க​டா​லம் ​(60),​ ஐயப்​பன் ​(32),​ சிங்​கா​ர​வேல் ​(65) ஆகி​யோர் பலத்த காய​ம​டைந்​த​னர்.​ இதை​ய​டுத்து,​​ அவர்​கள் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​ட​னர்.​ அ​ரசு பஸ்​ஸின் அவ​லத்​தைக் கண்​டித்​தும்,​​ சாலையை செப்​ப​னிட வலி​யு​றுத்​தி​யும் அப் பகுதி மக்​கள் திடீ​ரென சாலை மறி​யல் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ இத​னால்,​​ காட்​டுக்​கூ​ட​லூர் சாலை​யில் 2 மணி நேரம் போக்​கு​வ​ரத்து பாதிக்​கப்​பட்​டது.​ த​க​வ​ ல​றிந்த வட்​டாட்​சி​யர் பூபதி,​​ காவல் நிலைய உதவி ஆய்​வா​ளர்​கள் மாரி​யப்​பன்,​​ உஸ்​மான் ஆகி​யோர் அங்கு விரைந்து சென்று மறிய​லில் ஈடு​பட்​ட​வர்​க​ளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னர்.​ அப் பகு​தி​யில் கூடு​தல் பஸ்​களை இயக்க வேண்​டும்;​ குண்​டும்,​​ குழி​யு​மான சாலை​களை ​ சீர​மைக்க வேண்​டும் என பொது​மக்​கள் விடுத்த கோரிக்​கை​கள் குறித்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என வட்​டாட்​சி​யர் உறு​தி​ய​ளித்​தார்.​ இ​தைத் தொடர்ந்து,​​ போராட்​டத்தை கைவிட்ட பொது​மக்​கள் அங்​கி​ருந்து கலைந்து சென்​ற​னர்.​

Read more »

அலட்​சி​யம் காட்​டும் நெடுஞ்​சா​லைத்​ துறை


நெய்வேலி, ​​ டிச.​ 14:​ 
 
                விக்​கி​ர​வாண்டி-​கும்​ப​கோ​ணம் தேசிய நெடுஞ்​சா​லை​யில் வாகன விபத்​துக்​க​ளால் உயி​ரி​ழப்பு மற்​றும் கை,​​ கால் இழப்பு தொடர் கதை​யாகி உள்​ளது.​ சாலை​யை​யும்,​​ பாலங்​க​ளை​யும் சீர​மைக்க வேண்​டிய நெடுஞ்​சா​லைத் துறை​யி​னர் விபத்து தடுப்பு நட​வ​டிக்​கை​களை இது​வரை மேற்​கொண்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.​ இந்த நெடுஞ்​சா​லைத் துறை​யின் போக்​கைக் கண்​டித்து பண்​ருட்டி எம்​எல்ஏ தலை​மை​யில் இம்​மா​தம் 26-ம் தேதி வட​லூ​ரில்  மறி​யல் போராட்​ட​மும் நடை​பெ​ற​வுள்​ளது.​ விக்​ கி​ர​வாண்டி-​தஞ்சை சாலை தேசிய நெடுஞ்​சா​லை​யாக மாற்​றப்​பட்டு 3 ஆண்​டுக்கு மேலா​கி​றது.​ 167 கி.மீ.​ உள்ள இச் சாலை​யில் 156 சிறிய பாலங்​க​ளும்,​​ 60-க்கும் மேற்​பட்ட பெரிய பாலங்​க​ளும்,​​ 2 தரைப் பாலங்​க​ளும் உள்​ளன.​ இச்​சா​லை​யில் கன​ரக வாக​னப் போக்​கு​வ​ரத்து தற்​போது அதி​க​ரித்​த​வண்​ணம் உள்​ளது.​ மிக​வும் குறு​க​லான இச்​சா​லை​யில் வாகன விபத்​தும் தொடர்ந்​த​வண்​ணம் உள்​ளது.​ மேலும் சில நேரங்​க​ளில் வாக​னங்​கள் ஒன்றை ஒன்று முந்த முயற்​சிக்​கும் போது சாலை​யோ​ரத்​தில் உள்ள கால்​வா​யில் கவி​ழும் நிகழ்​வு​க​ளும் அரங்​கே​றி​ வ​ரு​கி​றது.​ இச்​சா​லை​யில் வட​லூர் அருகே கண்​ணுத்​தோப்பு கிரா​மத்​தில் உள்ள மிகக்​கு​று​க​லான பாலத்​தில் மாதத்​துக்கு ஒரு விபத்து வீதம் நடை​பெற்​றுக் கொண்​டு​தான் இருக்​கின்​றன.​ ஒவ்​வொரு விபத்​தின் போது பாலத்​தின் பக்​க​வாட்​டுச் சுவர் இடிந்து விழு​வ​தும்,​​ பின்​னர் அவை சம்​பி​ர​தா​யத்​துக்கு கட்​டப்​ப​டு​வ​தும் தொடர்​க​தை​யாகி வரு​கி​றது.​ பா​லத்​தில் ஏன் அடிக்​கடி விபத்து ஏற்​ப​டு​கி​றது,​​ அவற்றை தடுக்க என்​ன​வழி என்​பது குறித்து இது​வரை நெடுஞ்​சா​லைத் துறை ஆய்வு நடத்​தி​யதா என்​பது கேள்​விக்​கு​றியே.​ குறைந்​த​பட்​சம் பாலத்​தின் நிலை குறித்​தும்,​​ பாலத்​தில் தடுப்​புச் சுவர் இல்லை என்​பதை சுட்​டிக்​காட்ட கூடிய விளம்​ப​ரத் தட்​டி​கூட வைக்​கப்​ப​டா​த​தும் பெரிய குறை​யா​கவே காணப்​ப​டு​கி​றது.​ இந்​நி ​லை​யி ல் சனிக்​கி​ழமை இரவு இரும்​புக் குழாய்​களை ஏற்​றி​வந்த லாரி ஒன்று சாலை​யின் விளிம்பு தெரி​யா​மல் தலைக்​குப்​புற கவிழ்ந்​த​தில் லாரி உருக்​கு​லைந்​துள்​ளது.​ மேலும் லாரி​யின் டிரை​வ​ருக்கு தலை​யில் பலத்​தக் காய​மும்,​​ கிளீ​ன​ருக்கு இடுப்பு எலும்பு முறி​வும் ஏற்​பட்​டுள்​ளது.​ இந்​நி​லை​யில் இச்​சா​லை​யில் உள்ள பாலங்​களை உட​ன​டி​யாக சீர​மைக்​கக் கோரி பண்​ருட்டி எம்​எல்ஏ வேல்​மு​ரு​கன் தலை​மை​யில் வட​லூர் நான்​கு​முனை சந்​திப்​பில் சாலை​ம​றி​யல் போராட்​டம் நடத்​தப்​போ​வ​தாக அறி​வித்​துள்​ள​னர்.​ சா​லை​யில் மேற்​கொள்​ளப்​ப​ட​வுள்ள பணி​கள் குறித்து தேசிய நெடுஞ்​சா​லைத்​துறை கூடு​தல் பொறி​யா​ளர் அதி​பதி கூறி​யது:​ இச்​சா​லை​யில் மேற்​கொள்​ளப்​ப​ட​வுள்ள பணி​கள் தொடர்​பாக மதிப்​பீடு செய்​யும் பணி நடை​பெ​று​கி​றது.​ மார்ச் மாதத்​தில் மதிப்​பீட்டு அறிக்கை கிடைத்​த​வு​டன் ஜூன் மாதத்​தில் பணி​கள் தொடங்​கி​வி​டும் என்​றார் அதி​பதி.

Read more »

உடல்​ந​லன் குறித்த தேசிய கருத்​த​ரங்கு

சிதம்ப​ரம்,​​ டிச.​ 14:​ 

                   சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக தொலை​தூ​ரக் கல்வி மைய பொறி​யி​யல் பிரிவு சார்​பில் பாது​காப்பு,​​ உடல்​ந​லன்,​​ சுற்​றுச்​சூ​ழல் மற்​றும் சக்தி சார்ந்த தலைப்​பு​க​ளில் தேசிய அள​வி​லான கலந்​தாய்வு கருத்​த​ரங்கு பல்​க​லைக்​க​ழக ஆம்​டெக் ஹாலில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​÷க​ருத்​த​ரங்​கில் இந்​தி​யா​வின் பல்​வேறு பகு​தி​க​ளி​லு​மி​ருந்து மாண​வர்​க​ளும்,​​ ஆசி​ரி​யர்​க​ளும்,​​ தொழில்​நுட்ப வல்​லு​நர்​க​ளும் பங்​கேற்​ற​னர்.​ 83 ஆய்​வுக் கட்​டு​ரை​கள் மீது கலந்​து​ரை​யா​டல் நடை​பெற்​றது.​ து​ணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் குத்​து​வி​ளக்​கேற்றி கருத்​த​ரங்​கைத் தொடங்கி வைத்​துப் பேசு​கை​யில்,​​ இக்​க​ருத்​த​ரங்கு இல்​லத்​துக்கு ஏற்ற தலைப்​பில் உள்​ள​தா​க​வும்,​​ குடும்​பத்​தி​ன​ருக்கு பய​னுள்​ள​தாக விளங்​கும் என்​றும் தெரி​வித்​தார்.​மூளை பலத்​துக்கு இந்​தியா​÷தொ​லை​தூ​ரக் கல்வி மைய இயக்​கு​நர் எஸ்.பி.நாகேஸ்​வ​ர​ராவ் தலைமை வகித்​துப் பேசு​கை​யில்,​​ பண பலத்​துக்கு அமெ​ரிக்கா,​​ மனித வளத்​திற்கு சீனா,​​ உடல் பலத்​துக்கு ஆப்​பி​ரிக்கா,​​ ஆனால் மூளை பலத்​துக்கு இந்​தி​யா​தான் உள்​ளது.​ எனவே இக்​க​ருத்​த​ரங்கு உண்​மை​கள் சேர வேண்​டி​ய​வர்​க​ளுக்கு செம்​மை​யாக போய் சேர வேண்​டும் எனக்​கூ​றி​னார்.​

                   பொ​றி​யி​யல் பிரிவு தலை​வர் பி.கந்​த​பாபா வர​வேற்​றார்.​ பிர​பா​கர் அறி​முக உரை​யாற்​றி​னார்.​ பொறி​யி​யல் புல முதல்​வர் பி.பழ​னி​யப்​பன் வாழ்த்​துரை வழங்​கி​பே​சு​கை​யில்,​​ சமு​தா​யத்​தில் பெண்​கள் விழிப்​பு​ணர்வு,​​ பாது​காப்பு,​​ உடல்​ந​லன் சுற்​றுச்​சூ​ழல் மற்​றும் சக்தி சார்ந்த வளர்ச்சி ஒருங்கே இருக்க வேண்​டும் எனக்​கூ​றி​னார்.​ ப ​தி​வா​ளர் எம்.ரத்​தி​ன​ச​பா​பதி நிறைவு உரை​யாற்​று​கை​யில்,​​ பல்​வேறு ஆதா​ரங்​கள் மூலம் கிடைக்​கும் மின்​சா​ரத்​தை​யும்,​​ கோல் உற்​பத்​தி​யில் நம்​நாடு எதிர்​நோக்​கி​யுள்ள எதிர்​பார்ப்​பு​க​ளை​யும்,​​ சவால்​க​ளை​யும்,​​ இப்​புவி எதிர்​நோக்​கி​யுள்ள சுற்​றுச்​சூ​ழல் ஆபத்​து​க​ளை​யும் அறி​வி​யல் ஆர்​வ​லர்​கள் செய்ய வேண்​டி​ய​வற்​றை​யும் புள்ளி விவ​ரங்​க​ளு​டன் விளக்​கி​னார்.​÷அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக முன்​னாள் துணை​வேந்​தர் பி.வி.வைத்​தி​ய​நா​தன் சிறப்​பு​ரை​யாற்​றி​னார்.​ கே.சீனி​வா​சன் நன்றி கூறி​னார்.​ விழா​வில் பிஜி​ஆர் எனர்ஜி சிஸ்​டம்ஸ் லிமி​டெட் தலை​வர் முரளி,​​ ஆசி​யன் பெயிண்ட்ஸ் தொழிற்​சாலை மேலா​ளர் ராஜ​சே​கர்,​​ செல்​வக்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

Read more »

சிதம்​ப​ரம் பஸ் நிலை​யம் திறப்பு

சிதம்ப​ரம்,​​ டிச.​ 14:​  
 
                    2008-09 ஆம் ஆண்டு வெள்ள நிவா​ரண திட்​டத்​தின் கீழ் ரூ.90 லட்​சம் செல​வில் நக​ராட்​சி​யால் புதுப்​பிக்​கப்​பட்ட சிதம்​ப​ரம் பஸ் நிலை​யம் திறக்​கப்​பட்​டது.​ க​ட​லூர்,​​ சென்னை பஸ்​கள் நிற்​கும் பகுதி முழு​வ​தி​லும் சிமெண்ட் சாலை,​​ பஸ் நிற்​கும் தடுப்​புக் கட்​டை​கள்,​​ நடை​பாதை ஆகி​யவை புதி​தாக அமைக்​கப்​பட்​டன.​ இ ​தன் திறப்பு விழா திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​ நக​ர​மன்​றத் தலை​வர் ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம் தலைமை வகித்​தார்.​ ஆணை​யா​ளர் பி.ஜான்​சன் முன்​னிலை வகித்​தார்.​ பொறி​யா​ளர் மாரி​யப்​பன் வர​வேற்​றார்.​ பஸ் நிலை​யத்​தில் கீரப்​பா​ளை​யம் ஒன்​றி​யக்​கு​ழுத் தலை​வ​ரும்,​​ திமுக நக​ரச் செய​லா​ள​ரு​மான கே.ஆர்.செந்​தில்​கு​மார் திறந்து வைத்​தார்.​ இந் ​நி​கழ்ச்​சி​யில் திமுக அவைத் தலை​வர் தென்​ன​வன் ஆறு​மு​கம்,​​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி நக​ரச் செய​லா​ளர் ராமச்​சந்​தி​ரன்,​​ நக​ர​மன்ற உறுப்​பி​னர்​கள் த.ஜேம்ஸ்​வி​ஜ​ய​ரா​க​வன்,​​ அப்​பு​சந்​தி​ர​சே​க​ரன்,​​ இரா.வெங்​க​டே​சன்,​​ மணி​கண்​டன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior