உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

Enumeration of huts in Cuddalore from March 29


CUDDALORE: 

         Enumeration of huts in 13 blocks of Cuddalore district will begin on March 29 to identify beneficiaries for the Kalaignar Housing Scheme.

            A total number of 27 teams would carry out the exercise, according to Collector P. Seetharaman. In a statement here, he said that it had been proposed to convert all huts into concrete buildings in the next six years under the scheme. Cuddalore district had the highest number of huts in the State, next to Villupuram. 1.95 lakh huts in Cuddalore district As per the 2001 statistics, there were 681 villages with a total of 1.95 lakh huts in Cuddalore district. Of them, 270 villages had 200 huts each, 334 villages had more than 200 huts each, 73 villages had 500 huts each, and, four villages had 1,000 huts each. Mr. Seetharaman noted that the Village Administrative Officers, ‘Makkal Nala Paniyalargal,' panchayat clerks, Block Development Officers, tahsildars and Sub-Collectors would be involved in preparing the list of beneficiaries.

Read more »

வருவாய் ரூ.63,092 கோடி; செலவு ரூ. 66,488 கோடி: புது வரி இல்லா பட்ஜெட்


புதிய சட்டப் பேரவையில் 2010-2011 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் க.அன்பழகன். உடன், முதல்வர் கருணாநிதி, துணை முதல
 
           புதிய சட்டப் பேரவையில் ரூ. 66 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அன்பழகன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய, புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். 2010-11-ம் நிதியாண்டில் வரிகள் உள்ளிட்ட இனங்களின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் மொத்த வருவாய் ரூ.63,092 கோடியாக இருக்கும். மொத்தச் செலவு ரூ.66,488 கோடியாகும். 2006-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து நிதி அமைச்சர் பொறுப்பை வகித்து வரும் அன்பழகன், இம்முறையும் வரிச்சுமை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மொத்த வருவாயில் 49 சதவீதம் அரசுப் பணியாளர்களுக்கான சம்பளத்துக்குச் செல்கிறது. நிதானமான, அதே சமயம் அழுத்தம் திருத்தமான உரையுடன் மிகவும் தெள்ளத்தெளிவாக பட்ஜெட் உரையைத் தொடங்கிய அன்பழகன், புதிய சட்டப்பேரவை  கட்ட முழுமுதல் காரணமாக அமைந்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  வரிச் சலுகைகள்: மிளகு, சீரகம், சோம்பு உள்ளிட்ட பொருள்களின் பொடி வகைகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு ஓராண்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.வணிகச் சின்னம் இடப்பட்ட காபித் தூள் (உடனடி காபித்தூள் தவிர), பெயிண்ட் பிரஷ், வணிகச் சின்னம் இடப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், கத்தி, கத்திரிக்கோல், கையில் பயன்படுத்தும் ஊசிகள், கொக்கிகள்-பட்டன்கள் போன்ற தையல் பொருள்கள், வணிகச் சின்னம் இடப்பட்ட உடனடி உணவுப் பொருள்கள் (மாவு, பொடி மற்றும் ஈர மாவு உள்பட) ஆகிய பொருள்கள் மீது இப்போதுள்ள 12.5 சதவீத வரி, 4 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த வரிக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் 
 
.மீனவர்களுக்கு: 
 
         மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய ஐஸ் கட்டிகளுக்கு வரிவிலக்கு  அளிக்கப்பட்டுள்ளது. ஜரிகை (பாலியஸ்டர் ஃபிலிம் நூல் மற்றும் ரேடியன்ட் நூல்  நீங்கலாக) மீதான கொள்முதல் மற்றும் விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.ரூ.176 கோடியில்: மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ. 176 கோடியாகும். இத்துறை முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கும். பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கரும்பு கொள்முதல் விலை உயர்வு, பதநீர் கொள்முதல் உயர்வு, பெண்கள் திருமண நிதி உதவி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இலவச கலர் டி.வி. திட்டத்தைத் தொடர்ந்து குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டு நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயத்தை ஊக்குவிக்க வரும் நிதி ஆண்டில் ரூ. 2,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். பயிர்க்கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்கு ரூ. 140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
இரண்டேகால் மணி நேர உரை: 
 
             அமைச்சர் அன்பழகன் காலை 9.31 மணிக்குத் தொடங்கிய உரையை பிற்பகல் 11.46 மணிக்கு நிறைவு செய்தார். ஏறக்குறைய இரண்டேகால் மணி நேரம் பட்ஜெட் உரை நீடித்தது.வரவு } செலவு திட்டம் 2010-2011
 
தமிழக அரசின் சொந்த வருவாய்    (ரூ. கோடியில்)
 
 வணிக வரிகள்                                              26,846
 
ஆயத்தீர்வைகள்                                            7,508 
 
முத்திரைத் தாள்களும் பத்திரப் பதிவுக் கட்டணங்களும்              4,096
 
வண்டிகள் மீதான வரிகள்                           2,397 
 
ஏனைய வரிகள்                                                   592
 
வரி அல்லாத வருவாய்                                4,101
 
மாநிலத்தின் மொத்த வருவாய்               45,540 
  
மொத்த வருவாய் வரவுகள்
 
 மாநிலத்தின் சொந்த வருவாய் வரவுகள்      45,540
 
மத்திய அரசிடமிருந்து பெறப்படுபவை         17,552
 
மொத்த வருவாய் வரவுகள்                                63,092
 
மொத்த வருவாய் வரவுகள்                         63,092
 
மொத்த வருவாய் செலவுகள்                     66,488
 
வருவாய் பற்றாக்குறை                                  3,396
 
மூலதனச் செலவு                                             12,285
 
மூலதனச் செலவு (கடன் மற்றும்முன்பணங்களின் நிகரம் உள்பட)               12,826
 
மொத்த நிதிப் பற்றாக்குறை                          16,222
 
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு   4,36,646
 
நிதிப் பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பின் சதவீதம்                             3.72%
            

வரிச் சலுகைகள்:
 
                    மிளகு, சீரகம், சோம்பு உள்ளிட்ட பொருள்களின் பொடி வகைகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு ஓராண்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.வணிகச் சின்னம் இடப்பட்ட காபித் தூள் (உடனடி காபித்தூள் தவிர), பெயிண்ட் பிரஷ், வணிகச் சின்னம் இடப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், கத்தி, கத்திரிக்கோல், கையில் பயன்படுத்தும் ஊசிகள், கொக்கிகள்-பட்டன்கள் போன்ற தையல் பொருள்கள், வணிகச் சின்னம் இடப்பட்ட உடனடி உணவுப் பொருள்கள் (மாவு, பொடி மற்றும் ஈர மாவு உள்பட) ஆகிய பொருள்கள் மீது இப்போதுள்ள 12.5 சதவீத வரி, 4 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த வரிக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். 
 
கான்கிரீட் வீடுகள் 
 
             இலவச கலர் டி.வி. திட்டத்தைத் தொடர்ந்து குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டு நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
மாற்றுத் திறனாளிகளுக்கு:
 
               மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ. 176 கோடியாகும். இத்துறை முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கும். பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
விவசாயம் 
 
          கரும்பு கொள்முதல் விலை உயர்வு, பதநீர் கொள்முதல் விலை உயர்வு, பெண்கள் திருமண நிதி உதவி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. விவசாயத்தை ஊக்குவிக்க வரும் நிதி ஆண்டில் ரூ. 2,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். பயிர்க்கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்கு ரூ. 140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
மீனவர்களுக்கு 
 
        மீனவர்கள் பயன்படுத்தக் கூடிய ஐஸ் கட்டிகளுக்கு வரிவிலக்கு  அளிக்கப்பட்டுள்ளது.
 
இரண்டேகால் மணி நேர உரை 
 
            அமைச்சர் அன்பழகன் காலை 9.31 மணிக்குத் தொடங்கிய உரையை பிற்பகல் 11.46 மணிக்கு நிறைவு செய்தார். ஏறக்குறைய இரண்டேகால் மணி நேரம் பட்ஜெட் உரை நீடித்தது.
  • விலைவாசி மேலும் அதிகரிக்கும் - ஜெயலலிதா
  • பட்ஜெட்டில் மகத்தான நலத்திட்டங்கள் - தங்கபாலு
  • முள்ளை மறைத்து கொண்டிருக்கும் மலர் - தா. பாண்டியன்
  • வரி நீக்கம் வெறும் மாயஜாலம் - விஜயகாந்த்

Read more »

மணல் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை



கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் மணல் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.

மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து மாவட்ட ஆட்சியர்  பேசியது

                 மணல் திருட்டு கடுமையான குற்றமாகக் கருதப்படும். விவசாயிகள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு மணல் எடுப்பதாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற வேண்டும். மணல் திருட்டைக் கண்டுபிடிக்க  மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.÷விவசாய மின் மோட்டார்களில் செப்புக் கம்பிகள் திருட்டு குறித்து அதிக புகார்கள் வந்தன. எனவே விவசாயிகளின் நலன் கருதி செப்புக் கம்பிகளைத் திருடுவோரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை முடுக்கி விடப்பட்டது. அண்மையில் செப்புக் கம்பிகள் திருடிய 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பேர் சாதாரண சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 6 பேரைப் போலீஸôர் தேடி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில்தான் பல்வேறு குற்றங்களுக்காக அதிகமானோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மற்றும் பாசிமுத்தான் ஓடைப் பகுதிகளில் தாமதமாக நடப்பட்ட நெல் பயிருக்கும், கான்சாகிப் வாய்க்கால் நவரைப்பட்ட நெல் பயிருக்கும் வீராணத்தில் இருந்தும், கொள்ளிடம் கீழணையில் இருந்தும் தண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இதுகுறித்து  பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரிடம் பேசி இருக்கிறேன்.÷பட்டா மாறுதல்கள், பெயர் மாற்றம் குறித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டா மாறுதல் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, வட்டாட்சியர் அலுவலகங்களில் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம், விருத்தாசலம் நகராட்சிக் கழிவுகளால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலவலர் மணி, நபார்டு உதவிப் பொது மேலாளர் ராஜகோபால், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வெங்கடேசன், மத்தியக் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ந.மிருணாளினி  உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

ஏப்ரல் மாதம் அமலாகும் என ஊழியர்கள் எதிர்பார்ப்பு

நெய்வேலி:
 
                        என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் எப்போது ஏற்படும், அதன்பின் புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் எந்த மாதத்திலிருந்து ஊதியம் பெறலாம், எவ்வளவு நிலுவைத் தொகை கிடைக்கும் என என்எல்சி தொழிலாளர்கள் கடந்த 2 மாதமாக விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். என்எல்சியில் 5 ஆயிரம் பொறியாளர், 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுதவிர 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் மினிரத்னா என்ற அந்தஸ்துடன் இயங்கி வருகிறது. 
 
 
                       இந்நிலையில்  நிறுவனப் பொறியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய மாற்று ஒப்பந்தம் கடந்த 6 மாதத்துக்கு முன் ஏற்பட்டதையடுத்து, அவர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், நிரந்தரத் தொழிலாளர்களுக்கான கடந்த கால ஊதிய மாற்றும் ஒப்பந்தம் 31-12-2006-ம் ஆண்டோடு முடிவடைந்ததை அடுத்து, 01-01-2007 முதல் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொழிற்சங்கங்கள் போதிய கவனம் செலுத்தாததால் புதிய ஒப்பந்தம் காலதாமதமானது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க செயல்பாடு குறித்து அதிருப்தி நிலவியதால், தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களின் அதிருப்தியை போக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை இடைக்கால நிவாரணத் தொகையை பெற்றுக் கொடுத்தனர்.
 
                     இந்நிலையில் அதிகாரிகளுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்பட்டதால், தொழிலாளர்கள் விரக்தியோடு தினந்தோறும் தொமுச அலுவலகத்தை நோக்கி படையெடுத்தவண்ணம் இருந்தனர். இதையடுத்து என்எல்சியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளித் தொழிற் சங்க நிர்வாகிகள் கடந்த இரு வாரமாக நிர்வாகத்துடன் தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பலனாக புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் 01-01-2007 முதல் 31-12-2012 வரை என காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்கள் ஏற்கெனவே பெற்றுவந்த அடிப்படை சம்பளத்தில் 24 சதவீத ஊதிய உயர்வும் (ஊதிய நிர்ணயிப்பு அளவீட்டுத் தொகை), 3 சதவீத ஊதிய ஊக்கத் தொகை உயர்வும், சிறப்பு ஊதிய ஊக்கத் தொகை 1 சதவீதமும் அளிக்க நிர்வாகம் முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் தொழிற்சங்கத் தரப்பில் அடிப்படை சம்பளத்தில் 35 சதவீதமும், சிறப்பு இன்கிரிமென்ட் 3 சதவீதமும் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். இது தவிர்த்து அலவன்ûஸ பொறுத்தமட்டில் 75 சதவீதம் உயர்வு கோரியிருப்பதாகவும் தெரிகிறது.  மேலும் சுரங்க அலவன்ஸ் மற்றும் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகள் குறித்தும் தற்போது பேச்சு நடத்தி வருவதால் தொமுச தலைமை நிர்வாகிகள் ஒவ்வொரு பிரிவு வாரியாக தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு வருகின்றனர்.
 
                 மேலும் பேச்சுவார்த்தையில் உள்ள சங்கங்களுக்கிடையே சில கருத்து வேறுபாடுகளும் நிலவுவதாகத் தெரிகிறது. ஒரு சங்கம் சதவீத அடிப்படையில் அலவன்ஸ் வழங்க வேண்டும் என்றும், மற்றொரு சங்கமோ ரொக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் கோருவதாகத் தெரிகிறது. இதனிடையே பேச்சுவார்த்தையில் இல்லாத தொழிற்சங்கங்கள் ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக் குறித்து பல்வேறு விமர்சனங்களை செய்துவருவதால் தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித குழப்பம் நிலவ ஆரம்பித்துள்ளது.÷தொழிலாளர்களோ பேச்சுவார்த்தை விவரம் எதுவும் தெரியாமல், மார்ச் மாத இறுதிக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இயக்குநர்கள் குழுக் கூட்டத்தின் ஒப்புதலுக்குப் பின் புதிய ஊகித அடிப்படையில் சம்பளமும், காலம் தாழ்ந்து ஏற்படும் ஒப்பந்தம் என்பதால் எப்படியும் ரூ.ஒரு லட்சம் அளவுக்கு நிலுவைத் தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் மெய்யாகுமா அல்லது பொய்யாகுமா என்பது இம்மாதம் 30-ம் தேதி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவுள்ள சம்பள ரசீதை பார்த்தால் தெரிந்துவிடும்.

Read more »

மண் பாண்டம் செய்ய இலவசமாக மண் எடுக்க அனுமதி


பண்ருட்டி:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரியில் உள்ள களி மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுக்கொண்டார். இந்திய தேசிய கிராம மற்றும் நகர தொழிலாளர் முன்னணி தமிழ்நாடு சார்பில் பண்ருட்டி தாலூகா முதல் மாநாடு புதன்கிழமை பண்ருட்டியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், இந்திய தேசிய கிராம மற்றும் நகர தொழிலாளர் முன்னணி தமிழ்நாடு காப்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  கூறியது: 

                      தமிழகம் முழுவதும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். இளைஞர்களின் வருகையால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. ராகுல்காந்தி இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் நகர, வட்டார தலைவர்கள், மாநில மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முறையாக தேர்வு செய்யப்படுவர். வரும் சட்ட மன்ற தேர்தலில் கூட்டணியா, தனித்தா? என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும். இலங்கையில் அகதி முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னும் சொந்த மண்ணுக்கு அனுப்பப்படவில்லை. இவர்களை சொந்த மண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். அனைத்து கட்சியிலும் கோஷ்டி பூசல் உள்ளது. போட்டி என்று வரும் போது கோஷ்டி இருக்கத்தான் செய்யும்,  தமிழக மக்களின் பிரச்னைக்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று கார்த்தி ப.சிதம்பரம் கூறியதை வரவேற்கிறேன். பண்ருட்டி போன்ற சில நகராட்சிகள் பாதாள சாக்கடை திட்டம் வேண்டாம் என தவறான கொள்கையை வைத்துள்ளன. பாதாள சாக்கடை திட்டம் ஏற்பட்டால் கொசு இருக்காது மக்கள் சுகாதாரமாக வாழ முடியும். பண்ருட்டி ராமச்சந்திரன் அமைச்சராக இருந்த போது பண்ருட்டி வளர்ச்சி அடைந்ததுடன் சரி தற்போது கேட்பார் இன்றி கிடக்கின்றது என கூறினார்.

Read more »

உலக பொட்டாஷ் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை இணைந்தும் நடத்தும் ஆய்வு

சிதம்பரம்:
 
               அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, சுவிட்சர்லாந்தில் உள்ள உலக பொட்டாஷ் நிறுவனத்துடன் இணைந்து  மஞ்சள் பயிரில் மகசூலை பெருக்க சாம்பல் சத்தின் முக்கியத்துவத்தை கணித்தல் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக உலக பொட்டாஷ் நிறுவனம் 3450 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முதுநிலை விரிவுரையாளர் முனைவர் பி.கே.கார்த்திகேயன் மற்றும் துறைத் தலைவர் மு.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சி மூலம் தமிழ்நாட்டின் பல்வேறுபட்ட விவசாய நிலங்களில் சாம்பல் சத்து மூலம் மகசூலை பெருக்குவதற்கான முடிவுகளை அளிக்கவுள்ளது.

Read more »

காலாவதியான பால் பொருள்கள் மீட்டழிப்பு


பண்ருட்டி:

               கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான ஐஸ் கிரீம் மற்றும் பால் பொருள்களை நகர சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். பண்ருட்டி நகரில் காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி இல்லாத பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து நகர சுகாதார அலுவலர் கோ.இராஜேந்திரன் தலைமையில், ஆய்வாளர்கள் எஸ்.மணிகண்டன், ஆர்.சுதாகர், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் கொளஞ்சியப்பன், பாண்டியன் உள்ளிட்டோர் கடலூர் சாலையில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை திடீர் என சோதனை மேற்கொண்டனர். இதில் ஐஸ் கிரீம் கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான ஐஸ் கிரீம் மற்றும் பால் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3000 ஆகும்.இதனைத் தொடர்ந்து ஸ்வீட் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

Read more »

பவர் டில்லர் ஒதுக்கீட்டில் பாரபட்சம்

கடலூர்:

               மானிய விலையில் பவர் டில்லர் வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக கடலூர் மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.  

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த புகார்கள்:

                பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்: கடலூர் மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக, ரூ.448.5 கோடி பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.  புதிய வீராணம் திட்டத்தில் 42 பணிகள் ரூ.24 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கிறது.ஆனால், கடலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. வாய்க்கால்களில் தற்போது இருக்கும் அகலப்படியே மராமத்துப் பணிகள் செய்யப்படுகிறது. பதிவேடுகளில் உள்படி அளந்து முழுமையான அகலத்துக்கு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மானிய விலையில் பவர் டில்லர் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.  ஆண்டு முழுவதும் அதிகப் பரப்பளவில் விவசாயம் நடைபெறும் கடலூர் மாவட்டத்துக்கு 40, விழுப்புரம் மாவட்டத்துக்கு 82, நாகை மாவட்டத்துக்கு 70 ஒதுக்கப்பட்டு உள்ளது. பவர் டில்லர் ஒதுக்கீட்டில் கடலூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கான்சாகிப் வாய்க்கால் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள நவரைப்பட்ட நெல் பயிருக்கு, ஏப்ரல் 10-ம் தேதி வரை கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். 

மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் டி.ரவீந்திரன்: 

                     வெள்ளப் பாதிப்பு திட்டப் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஏரிகள் மராமத்துப் பணி பாதியில் நின்றுவிட்டது. வெள்ளாற்றின் கரையோர நிலங்கள், அரித்துச் செல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கிள்ளை பெரிய வாய்க்காலை மராமத்து செய்ய வேண்டும். மராமத்துப் பணிகளை ஜூன் மாதத்துக்கு முன்பே முடிக்க வேண்டும்.

விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன்: 

                  விருத்தாசலம் நகராட்சிக் கழிவுநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி, சுமார் 300 ஏக்கர் விளை நிலங்களை பாழாக்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.  நில உடைமையாளர்கள் சங்கச் செயலாளர் 

கொத்தட்டை ஆறுமுகம்: 

               பெண்ணாடம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கு மாற்றுப் பாதை ஏற்படுத்த வேண்டும். 

பட்டாம்பாக்கம் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடபதி: 

              சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் வழங்க அரசு நிர்ணயித்து இருக்கும் செலவுத் தொகை ரூ.55 ஆயிரத்துக்கு எந்த நிறுவனமும் சொட்டுநீர் பாசன கருவிகளை அமைத்துத் தர முன்வரவில்லை. கூடுதல் செலவாகிறது. செலவுத் தொகையை அரசு உயர்த்த வேண்டும். 

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்: 

                     சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு வீராணம் நீர் காலதாமதமாக திறக்கப்பட்டதால், 600 ஏக்கர் நெல் பயிருக்கு ஏப்ரல் 15 வரை தண்ணீர் வழங்க வேண்டும். 

 வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் சோமசுந்தரம்: 

                     பெண்ணாடம் சர்க்கரை ஆலை அறிவித்தபடி மானியம் மற்றும் சலுகைகளை வழங்கவில்லை. அறிவித்தபடி கரும்பு அறுவடை இயந்திரமும் வழங்கவில்லை. எனவே ஆலை நிர்வாகத்தை அழைத்துப் பேசி மானியம் கிடைக்கவும், கரும்பு அறுவடைக்கு இயந்திரம் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Read more »

கல்வியில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்: திருவள்ளுவர் பல்கலை., துணைவேந்தர் பேச்சு

குறிஞ்சிப்பாடி :

               கல்வி என்பது சமுதாயத்தின் பல இன்னலுக்கு அரு மருந்தாக உள்ளது என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக துணை வேந்தர் பேசினார். குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் வரவேற்றார். ஜெயகணபதி கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள் மோகன், சட்டநாதன், சுந்தரமூர்த்தி, ராஜாமணி, ராமலிங்கம், ராஜாராம், வைத்திலிங்கம், கணேசன், கிருபாகரன், கல்லூரி பேராசிரியர் வணங்காமுடி, சிண்டிகேட் உறுப்பினர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜோதிமுருகன் பேசியதாவது: 

                இந்த பட்டம் உங்கள் வாழ்க்கையின் முதல் படி. கல்வி என்பது சமுதாயத்தின் பல இன்னலுக்கு அரு மருந்தாக உள்ளது. கல்வி சமுதாய மாற் றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் அரசு துறை, வங்கி துறைகளில் மட்டுமே பணி வாய்ப்புகள் இருந்தது. தற்போது இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கல்லூரி கல்வி மட்டும் தனியார் துறையில் பணியாற்ற போதாது. தனியார் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமையை மாணவர்கள் வளர்த்து கொண்டால், வேலை வாய்ப்புகளை அதிகம் பெறலாம். வேலை தேட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு வேலை கொடுக்க வேண்டும் என் பதை பற்றி சிந்தியுங் கள். கல்வி என்பதை முழுமையாக கற்று முடிக்க முடியாது. இந்த பட்டம் என் பது உங்கள் கல்வியின் முடிவு இல்லை. தொடக்கமாக எடுத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் வெற்றி அடைய ஒரே ஆயுதம் தன்னம்பிக்கை. ஆசிரியர் கள் மாணவர்களுக்கு பாடத்துடன், தன்னம்பிக்கையும் சேர்த்து கற்பிக்க வேண்டும். இவ்வாறு துணைவேந்தர் ஜோதிமுருகன் பேசினார்.

Read more »

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி: மேலும் இரண்டு தனிப்படை அமைப்பு

கடலூர் : 

                மாவட்டத்தில் தொடர்ந்து கை வரிசை காட்டி வரும் கொள்ளையர்களை பிடிக்க மேலும் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இரவு ரோந்து பணியும், வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.

             இருப்பினும் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் புகுந்து தம்பதியினர்களை தாக்கி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்.பி., தலைமையில் அவசரக் கூட்டம் நடந்தது. அதில் டி.எஸ். பி.,க்கள், சிறப்புபடை, ரவுடி ஒழிப்பு படை மற்றும் டி.எஸ்.பி.,க்களின் கிரைம் பார்ட்டிகள் கலந்து கொண்டனர். தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேல் மற் றும் குமரேசன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து கொள்ளையர் களை விரைந்து பிடிக்கவும், இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் எஸ்.பி., உத்தரவிட்டார்.

Read more »

ரேஷன் கடைகளில் முறைகேடு: விற்பனையாளர்கள் இருவருக்கு சிறை

கடலூர் : 

                    ரேஷன் கடையில் முறைகேடு செய்த விற்பனையாளர் இருவருக்கு தலா ஒரு ஆண்டு சிறையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர் கடந்த 97ம் ஆண்டு மஞ்சக்குப்பம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். 98ம் ஆண்டு இவரை இடம் மாற்றம் செய்தபோது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 532 ரூபாய் பொருள் இருப்பு குறைவு கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்று மஞ்சக்குப்பம் ரேஷன் மெயின் கடை எண்.1ல் பணிபுரிந்த விற்பனையாளர் கணேசன் தனது பணிக்காலத்தில் 44 ஆயிரத்து 489 ரூபாய் பொருள் இருப்பு குறைவு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 
                இதுகுறித்து வணிகவியல் குற்றப்புலனாய்வு போலீசார், இருவர் மீது கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரமேஷ், விற்பனையாளர்கள் விஜயகுமார் மற்றும் கணேசனுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Read more »

மகளுடன் கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்: பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்

கடலூர் : 

                 தேவனாம்பட்டினம் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை பொதுமக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். கடலூர் தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நேற்று மாலை பெண் ஒருவர் தனது 10 வயது சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அந்த சிறுமியை தண்ணீரில் அமுக்கி மூழ்கடித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட கடற்கரையில் அமர்ந்திருந்த கடலூரைச் சேர்ந்த ரவி ஓடிச் சென்று சிறுமியை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். அதற் குள் அந்த பெண் கடலில் மூழ்கினார். மற்றவர்களின் உதவியுடன் அந்த பெண் ணையும் காப் பாற்றி இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

                  விசாரணையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகரைச் சேர்ந்த தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் பணிபுரியும் சீனுவாசன் மனைவி பத்மா (34). அவரது மகள் நிவேதா (10) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிப்பதாகவும், கடந்த சில ஆண் டாக பத்மாவின் கழுத்தில் கேன்சர் நோய் ஏற்பட்டுள் ளது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

                   நோய் முற்றிய நிலையில் இறந்து விடுவோமோ என்ற அச்சத் திலும், அப்படி இறந்தால் தனது மகளை யார் காப் பாற்றுவது என்ற கேள்வியும் எழுந்தது. அதனால் தனது மகளையும் அழைத் துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு வந்ததாகவும், வரும்போதே வழியில் தனது கைப்பையை தூக்கியெறிந்து விட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். பத்மா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது கணவர் சீனுவாசனிடம் தெரிவிக்க புதுச்சேரி போலீசார் சென்றபோது கடந்த 2 நாட்களாக அவரும் வீட்டில் இல்லை என தெரியவந்தது.

Read more »

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஐந்து சவரன் நகை திருட்டு

கடலூர் :

                 பஸ்சில் பயணம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஐந்து சவரன் நகை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சேத்தியாதோப்பு அடுத்த பெரியக்குப்பத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(60). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் சிதம்பரத்தில் உள்ள நகை கடையில் ஐந்து சவரன் காசு மாலையை வாங்கிக் கொண்டு தனியார் பஸ்சில் வீடு திரும்பினார். சேத்தியாதோப்பிற்கு சென்று பார்த்தபோது லெதர் பேக்கில் வைத்திருந்த காசு மாலையை காணவில்லை. அதன் மதிப்பு 74,000 ரூபாய். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலிசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Read more »

கும்பகோணம் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சிதம்பரத்தில் சரண்


சிதம்பரம் : 

                            கும்பகோணம் மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்டவர், சிதம்பரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். கும்பகோணம் அருகே உள்ள மேல்கொர்க்கை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். மின் வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் கொலை வழக்கில் தன்னை போலீஸ் தேடுவதாக கும்பகோணம் பட்டீஸ்வரம், சுவாமிமலை மெயின் ரோட்டை சேர்ந்த ரவிசங்கர் (38) என்பவர் சிதம்பரம் மாஜிஸ்திரேட் (2) கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.அவரை 15நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஈஸ் வரமூர்த்தி உத்தரவிட்டார்.

Read more »

போக்கியம் கொடுத்த நிலத்தை மீட்க மோசடி: இருவருக்கு வலை


கடலூர் : 

                     இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிக்க ரேஷன் கார்டில் பெயரை சேர்த்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் காண்பித்து மோசடி செய்த 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் சோனஞ்சாவடியைச் சேர்ந்தவர் கே.அசோக்குமார் (55). இவர் அதே பகுதியில் வசித்த விஜயரங்கன் என்பவரிடமிருந்த 2 ஏக்கர் நிலத்தை கடந்த 20 ஆண்டிற்கு முன் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து போக்கியம் எடுத்துள்ளார். தற்போது அந்த நிலத்தை தனியார் நிறுவனம் விலைக்கு கேட்டுள்ளனர். தற்போது விஜயரங்கன் உயிருடன் இல்லாததால் அவரது மகன் சதீஷ்குமார் அந்த நிலத்தின் மீதான போக்கியத்தை செட்டில் செய்யும்படி அசோக்குமாரிடம் கூறினார்.

                     இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு கே.அசோக்குமார் செட்டில் செய்ய மறுத்துள்ளார். நிலத்தை தனியார் கம்பெனிக்கு விற்க வேண்டும் என்பதால் சதீஷ்குமார், தனது உறவினரான பழனிவேல் மகன் அசோக்குமார் பெயரை ரேஷன் கார்டில் போலியாக சேர்த்து கிருஷ்ணமூர்த்தி மகன் கே.அசோக்குமார் என பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நிலத் தின் மீதான போக்கியத்தை செட்டில் செய்து கொண்டு தனது பெயருக்கும் கிரையம் செய்து கொண்டார். இதுகுறித்து கே.அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி பிரிவில் வழக்குப் பதிந்து சதீஷ்குமார் மற்றும் பி.அசோக்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Read more »

மீனவர்களுக்குள் மோதல் 4 பேர் காயம்: 6 பேர் கைது

கடலூர் :

                      மீனவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் ராசாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ராமசாமி, கந்தசாமி. இவர் களுக்குள் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று ராமசாமி மகன் மகாலிங்கத்தை, கந்தசாமி மற்றும் அவரது மகன்களும் சேர்ந்து தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய மகாலிங்கம் தனது சகோதரர்களுடன் திரும்பி வந்து கந்தசாமி மற்றும் அவரது மகன்கள் மூவரையும் வீடு புகுந்து தாக்கினர். அதில் படுகாயமடைந்த நான்கு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் கந்தசாமி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து ராமசாமி மகன்கள் மகாலிங்கம் (26), ஆறுமுகம் (23), சுகுமார் (28), அண்ணாமலை (34) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

Read more »

மாமுல் தர மறுப்பு: கடை சூறையாடல்


கடலூர் :

               மாமுல் தர மறுத்த கடையை அடித்து சேதப்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வமணி. இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 3 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சீனு, குமார் மகன் வினோத் ஆகியோர் செல்வமணியின் கடைக்கு சென்று மாமூல் 50 ரூபாயும், ரீசார்ஜ் கார்டு கேட்டனர். செல்வமணி மறுக் கவே ஆத்திரமடைந்த சீனு,வினோத் இருவரும் செல்வமணியை தாக்கினர். மேலும், கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வரவே இருவரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Read more »

நிதி நிறுவனத்தில் மோசடி: ஒருவர் கைது


கடலூர் : 

              தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் மேசாடி செய்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். மகனை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த என்.பூலாமேடு கிராமத் தைச் சேர்ந்தவர் மனோகரன்(55). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அவரது மகன் ராஜசேகர்(30). சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனத்தில் வணிக கடன் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்தார்.இவர் தான் வேலை செய்த நிறுவனத்தில் கடந்த 2008ம் ஆண்டு தனது தந்தை பெயரில் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அதில் ஏழு தவணை யாக 28,490 ரூபாய் செலுத் தினார். பின்னர் தவணை செலுத்தவில்லை.

                           இது குறித்து ஸ்ரீராம் பைனான்ஸ் அதிகாரிகள் விசாரணை செய்ததில், ராஜசேகர் கொடுத்த ஜாமீன் ஆவணங்கள் ஏற்கனவே வேறு இருவருக்கு வழங்கிய கடன் தொகைக்காக கொடுத்தது என தெரிய வந்தது. இந்நிலையில ராஜசேகர் தலைமறைவானார். இது குறித்து கிளை மேலாளர் கார்த்திக், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷிடம் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றபிரிவு சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து மனோகரனை கைது செய் தனர். ராஜசேகரை தேடி வருகின்றனர்.

Read more »

வீடு புகுந்து தம்பதிகளை தாக்கி 11 சவரன் நகை கொள்ளை: பண்ருட்டியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் அட்டகாசம்

பண்ருட்டி : 

                     பண்ருட்டியில் இரு வீடுகளில் புகுந்து தம்பதியினர்களை தாக்கி 11 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரும், இவரது மனைவி லதாவும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் தெருக்கதவை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் தெருக்கதவை உடைத்துக் கொண்டு வீட் டினுள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயின் மற்றும் லதா அணிந்திருந்த இரண்டரை சவரன் தாலி சரடை அறுத்தனர். இருவரும் கூச்சலிட்டனர்.

                        ஆனால் அந்த தெருவில் இருந்த 7 வீடுகளின் கதவுகளும் வெளிப் பக்கம் தாழ்ப்பாள் போட்டு துணி மற்றும் சைக்கிள் செயின் கொண்டு கட்டப்பட்டிருந்தது. இதனால் எவரும் ஓடி வரமுடியவில்லை. இந்நிலையில் பண்ருட்டி விழமங்கலம் ராமன் தெருவை சேர்ந்த தி.மு.க., கிளை செயலாளர் சவுந்தர் ராஜன்(42), அவரது மனைவி மகேஸ்வரி (32), தாய் காசியம்மாள் (72) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் வெளிக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல், தனியாக தூங்கிக் கொண்டிருந்த காசியம் மாளை தாக்கினர். சத்தம் கேட்டு எழுந்து வந்த சவுந்தர்ராஜன் மற்றும் மகேஸ்வரியை மர்ம நபர் கள் நான்கு பேரும் சேர்ந்து உருட்டு கட்டைகளால் தாக்கினர். பின்னர் மகேஸ்வரி அணிந்திருந்த ஐந்து சவரன் தாலியை அறுத்தனர். இருவரும் கூச்சலிடவே, தெரு மக்கள் கூடுவதற்குள் மர்ம ஆசாமிகள் நான்கு பேரும் தப்பியோடிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த சவுந்தர்ராஜன், மகேஸ்வரி ஆகியோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

                      இதுகுறித்து சவுந்தர்ராஜன் கூறுகையில், வீட்டினுள் வந்த கொள்ளையர் கள் நான்கு பேரும் ஜட்டி மட்டுமே அணிந்திருந்தனர். எங்கள் முகத்தில் டார்ச் லைட் அடித்தனர். நாங்கள் நிலை குலைந்ததும், எங்களை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு, எனது மனைவி கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தாலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டனர் என்றார். தகவலறிந்த எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இரு கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior