உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 10, 2010

கடலூர் மாவட்டத்தில் 6 1/2 லட்சம் பேருக்கு இலவச பொங்கல் பொருட்கள்: ஜனவரி 1-ந்தேதி முதல் கிடைக்கும்

கடலூர்:
  
கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-

             தைதிங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட அறிவித்துள்ள தமிழக அரசு இந்த தமிழ் புத்தாண்டுக்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கிட உத்தரவிட்டுள்ளது.  
 
                      அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 189 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் விதத்தில் பச்சரிசி 1/2 கிலோ, வெல்லம் 1/2 கிலோ, பாசிப்பயிறு 100 கிராம், மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் 20 கிராம், போன்ற நான்கு பொருட்கள் அடங்கிய தனி பைகளை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி(சனிக்கிழமை) முதல் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையில் அந்தந்த நியாயவிலை கடைகளில் ஒவ்வொரு பகுதி வார்டு வாரியாக தனித்தனியாக நாள் ஒதுக்கப்பட்டு இந்த இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

               மேலும் எந்த நாளில் எந்தபகுதி அல்லது வார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பு நியாயவிலை கடைகளில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. இதில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டை என அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் என ஒருவர் கூட விடு படாமல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

                 எனவே குடும்ப அட்டை தாரர்கள் கூட்டம், கூட்டமாக சூழ்ந்து நெரிசலில் சிக்காமல் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தேதியில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று தமிழக அரசின் இலவச பொங்கல் பொருள் பைகளை பெற்றுக் கொள்ளலாம்.

Read more »

என்.எல்.சி. சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து 16 பேர் காயம்

நெய்வேலி:

               நெய்வேலி என்.எல்.சி. முதலாவது சுரங்கத்தில் வேலை பார்ப்பதற்காக வி.பாயிண்டிலிருந்து சுரங்கத்திற்கு தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு லாரி சென்றது. இந்த லாரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் எந்திரம் அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

                இந்த விபத்தில் லாரியில் இருந்த 16 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் ஆரோக்கியதாசன், தர்மலிங்கம் ஆகியோர் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
 
 

Read more »

Water released from Wellingdon dam

CUDDALORE: 

          Health Minister M.R.K. Panneerselvam opened the sluices of the Wellingdon dam to release 340 cusecs of water for irrigation on Thursday.

         He said that owing to repair works carried out on the dam, water could not be stored for the past few years. Chief Minister M. Karunanidhi had sanctioned a sum of Rs. 29.71 crore to strengthen the bunds to a length of 800 metres. As the dam had now become fit for storing water, the level was kept at 24 ft. The water release on Thursday would benefit 10,084 acres of farmlands in the ayacut areas. Steps would be taken to gradually raise the height to 29.72 ft, and after completion of such works, the ayacut areas could be extended up to 24,000 acres, covering a total of 61 villages.

           Mr. Panneerselvam also said that to take permanent flood control measures, the Chief Minister had earmarked Rs. 301 crore to Cuddalore district, out of which Rs. 108 crore would be utilised for the reinforcement of the Kollidam bank. During a Cabinet meeting held recently in Chennai, it was decided to desilt the course of the Vellar, the Uppanar and the Paravanar and strengthen their banks, the Minister said. A sum of Rs. 38 crore had been sanctioned for undertaking repair works on rain-damaged Vepur-Vriddhachalam road and Mangalore-Thittakudi road. The works would be taken up soon, the Minister said.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior