உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 25, 2011

தீபாவளிப் பண்டிகை : ரயில் முன்பதிவு முடிந்தது

                 தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் 90 நாள்களுக்கு மேல் உள்ள நிலையில் ரயில்களில் இப்போதே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்துவிட்டன. 

                இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதில் தெற்கு ரயில்வே அதிக கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  நாடு முழுவதும் அக்டோபர் 26-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரயில்களில் பயணம் செய்ய 90 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. அதன்படி தீபாவளியைக் கொண்டாட அக்டோபர் 21-ம் தேதி புறப்பட திட்டமிடுபவர்கள் சனிக்கிழமை முன்பதிவு செய்யத் தொடங்கினர். 

                இதற்கு முன் ஏற்பாடாக ரயில்வே துறையும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்திருந்தது.  ரயில்வே முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் கவுன்டர்களில் ரயில்வே பாதுகாப்புப்படை, கமாண்டோ படையினர் கொண்ட 15 குழுக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தன. புரோக்கர்களை கட்டுப்படுத்த கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. எழும்பூர், சென்ட்ரல், மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களில் உள்ள விசாரணை கவுன்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

                சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் அனைத்து வகுப்புகளிலும் முன்பதிவு முடிந்தன. மாலை 4 மணிக்குள் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவுகள் முடிந்துவிட்டன.  இது குறித்து டிக்கெட் கவுன்டர்களில் உள்ள அதிகாரிகள் கூறியது:  தீபாவளியையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

                     ஆனால் கவுன்டர்களில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. ஆனாலும் அனைத்து ரயில்களிலும் எல்லா வகுப்புகளுக்கும் டிக்கெட்டுகள் முன்பதிவாகிவிட்டன. இ-டிக்கெட் மூலம் அதிக அளவில் முன்பதிவு செய்ததே இதற்கு காரணம். ஞாயிறு, திங்கள்கிழமைகளில் அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.  இந்த நிலையில் இ-டிக்கெட் மூலம் அதிக அளவில் முன்பதிவுகள் செய்யப்பட்டிருப்பதால், புரோக்கர்கள்தான் அதிக அளவில் இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்திருப்பார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

               எனவே ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்பவர்களை தீவிரமாக கண்காணிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சிறப்பு ரயில்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 தீபாவளி: அக்டோபர் 22-ம் தேதிக்கு ரயில்களில் டிக்கெட் முடிந்தது


               தீபாவளிக்கு அக்டோபர் 22-ம் தேதி வெளியூர் செல்வதற்காக ரயில்களில் இப்போதே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்துவிட்டன.  வரும் அக்டோபர் 26-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 90 நாள்களுக்கு முன்பு ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.  இதனால் அக்டோபர் 21-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களிலும் சனிக்கிழமை டிக்கெட்டுகள் முன்பதிவாகிவிட்டன.  

                இதேபோல் அக்டோபர் 22-ம் தேதி புறப்படும் அனைத்து ரயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு முடிந்துவிட்டன. பெரும்பாலான டிக்கெட்டுகள் www.irctc.co.in. , www.cleartrip.com ஆகிய இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்த நிலையில் அக்டோபர் 23, 24, 25-ம் தேதிகளில் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.  

                எனவே இந்த நாள்களில் வெளியூர் செல்பவர்கள் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்ய முற்படுவார்கள்.  அதேபோல் அக்டோபர் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் திரும்பும் பயணத்துக்கு வரும் வெள்ளி (ஜூலை 29), சனி (ஜூலை 30), ஞாயிறு (ஜூலை 31), திங்கள்கிழமைகளில் (ஆகஸ்ட் 1) அதிக அளவில் டிக்கெட் எடுக்க முற்படுவார்கள்.  இணையதளம் வாயிலாக புரோக்கர்களே அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்வதாக பலமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

              எனவே குறிப்பிட்ட இந்த நாள்களில் இணைய தளம் வாயிலாக முன்பதிவு செய்யும் நேரத்தை காலை 8 மணி முதல் என்பதை மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களிலும் கடந்த 2 நாள்களாக கொடுக்கப்பட்ட பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து பயணிகளின் நலனை ரயில்வே துறை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 






Read more »

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க கோரிக்கை

கடலூர் : 
        
               சவுதி அரேபியாவில், தனியார் கம்பெனியில் சம்பளம் பெறாமல் கொடுமைகளை அனுபவித்து வரும் தமிழர்களை மீட்கக் கோரி, எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்பிய கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் வெங்கடேசன் உள்ளிட்டோர், நேற்று மாலை எஸ்.பி.,யிடம் கொடுத்துள்ள மனு: 

                   விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் விஜயா இன்டர்நேஷனல் நிறுவனத்தை நடத்தி வரும் செங்கோல் என்பவர், சவுதி அரேபியாவில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் டிரைவர் வேலை இருப்பதாகவும், உணவு இலவசமாக கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் எனக் கூறினார். அதை நம்பிய வெங்கடேசன், கர்நத்தம் ராஜிவ்காந்தி, பண்ருட்டி வீரப்பன், நெல்லிக்குப்பம் சையது அன்வர் பாஷா, காட்டுமன்னார்கோவில் கணேஷ் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, சரவணன் உள்ளிட்ட பலர், தலா ஒரு லட்ச ரூபாய் பணத்தை செங்கோலிடம் கொடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி அரேபியாவிற்குச் சென்றனர்.

                அங்கு அப்துல்லா நசிர் அப்துல்லா அல் தகீம் என்ற கம்பெனியில் பஸ் டிரைவர் வேலைக்குச் சேர்ந்தனர். தினமும் 15 மணி நேரம் வேலை வாங்கியதோடு, சொற்ப அளவே சம்பளம் வழங்கப்பட்டது. அதிலும் உணவு மற்றும் தங்குமிடத்திற்கு பெருந்தொகையை பிடித்துக் கொண்டனர். இதை தட்டிக் கேட்ட போது, அடித்து துன்புறுத்தியதும் உண்டு. இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டு, தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு கேட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை

                   . பின்னர், ரியாத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மற்றும் ஜெ., பேரவையினர் உதவியுடன், 13 பேர் மட்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளோம். ஆசை வார்த்தை கூறி எங்களை ஏமாற்றிய, கள்ளக்குறிச்சி விஜயா இன்டர்நேஷனல் நிறுவனத்தை நடத்தி வரும் செங்கோல் மற்றும் அவரது நண்பர்கள் செல்வம், மணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் செலுத்திய தொகையை பெற்றுத் தர வேண்டும். மேலும், சவுதி அரேபியாவில் நாங்கள் வேலை செய்த கம்பெனியில், பல்வேறு இன்னல்களுக்கு இடையே பணியாற்றி வரும் 25க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

                  மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.பி., பகலவன், இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.





Read more »

கடலூர் மாவட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்ய சிறப்பு முகாம்கள்

கடலூர் : 

     வருமான வரித்துறை படிவங்கள் தாக்கல் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி துவங்குகிறது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி பிரதாப் சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                  வருமான வரித்துறை சார்பில் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மக்கள் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்கான சிறப்பு முகாம்  நெய்வேலி, சிதம்பரத்தில் நடக்கிறது. 

நெய்வேலி, வட்டம் 25, விருந்தினர் மாளிகையிலும், 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் ஹால் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 

             காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை செயல்படும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






Read more »

கடலூர் தமிழ்க்கூடல் பயிற்சி மைய மாணவர்கள் 17 பேர் வி.ஏ.ஓ. தேர்வில் தேர்ச்சி

கடலூர் : 

       கடலூர் தமிழ்க்கூடல் பயிற்சி மைய மாணவர்கள் 17 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி பெற்றனர் .தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜனவரியில் வி.ஏ.ஓ., தேர்வு நடத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தமிழ்க்கூடல் பயிற்சி மையம் சார்பில் நடந்த வி.ஏ.ஓ., இலவச பயிற்சி முகாமில் பயின்ற மாணவர்களில் 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



Read more »

கடலூர் மாவட்டத்தில் பட்டாமாறுதல் பெற விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம்

கடலூர்:

          தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் முறையில் புதிய முறையினை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி இதுவரையில் பட்டாமாறுதல் தொடர்பாக கடந்த காலத்தில் தாசில்தார் அலுவலகத்தை அணுகி அவர்களிடம் மனு அளிப்பது வழக்கம். அதனை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

         இம்முறையில் பொதுமக்களுக்கு வீண் அலச்சலுடன், பணம், மற்றும் நேரம் வீணாகி வந்தது. மேலும் இம்முறையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதில் காலதாமதம் ஆகி வந்ததால். இதனை தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி பட்டாமாறுதல் தொடர்பாக ஏதேனும் மனு அளிக்க விரும்புபவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் (வி.ஏ.ஓ.) நேரடியாக மனு அளிக்கலாம் என்றும், அதனை தொடர்ந்து மனுவின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், பொதுமக்களின் அலைச்சலுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படாது என அறிவித்திருந்தார். இதன்அடிப்படையில் இம்முறையானது கடலூர் மாவட்டத்தில் இன்று  முதல் அமலுக்கு வருகிறது.
 
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-

           கடலூர் மாவட்டத்தில் பட்டாமாறுதல் பெற விரும்புபவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அதிகாரிகளிடம் இன்று முதல் (திங்கள்கிழமை) முதல் வாரத்தில் திங்கள்கிழமை தோறும் மனு அளிக்கலாம். இதில் கிராம நிர்வாக அதிகாரிகள் இல்லாத கிராமத்தினர் கிராம நிர்வாக அதிகாரி பொறுப்பாளரிடம் செவ்வாய் கிழமை தோறும் மனு அளிக்கலாம். இவ்வாறு பெறப்படும் மனுவிற்கு ஆதரமாக மனுதாரர்களுக்கு ஒரு ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். உட்பிரிவு செய்ய அவசியம் இல்லாத இனங்களில் 15 நாட்களுக்குள்ளாகவும், உட்பிரிவு செய்ய வேண்டிய இனங்களில் 30 நாட்களுக்குள்ளாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

           மேலும் மனு அளிப்பவர்கள் உட்பிரிவு கட்டணம் ஏதும் கட்டுவதற்கு தேவையில்லை. பட்டா பெறும்போது உரிய கட்டணத்தை செலுத்தினால் போதுமானதாகும். மேலும் அன்றை தினத்தில் நிலத்தின் பத்திரத்தை நகல் (ஜெராக்ஸ்) எடுத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும்: சிப்காட் கூட்டமைப்பு கோரிக்கை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/4ab06ee5-0b94-4cad-9c55-9c95fd47f962_S_secvpf.gif



கடலூர்:

        கடலூர் முதுநகரை அடுத்து சிப்காட் வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு தொழிற்சாலைகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் ரசாயனம் வந்து செல்கிறது.

           இந்தநிலையில் நேற்று சிப்காட் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். அப்போது சிப்காட் தொழிற்சாலை கூட்டமைப்பு சார்பில் தரமான சாலைவசதி, தொழிற்சாலைகளை மேம்படுத்த உதவிகள், கடலூருக்கு புறவழிச்சாலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏவிடம் விடுக்கப்பட்டது.

           அதற்கு அவர் அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சிப்காட் கூட்டமைப்பு சார்பில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக சிப்காட் கூட்டமைப்பின் உதவி தலைவர் இந்திரகுமார் அனைவரையும் வரவேற்றார். தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். உதவி தலைவர் ஆனந்தகுமார் ஜோதி நன்றி கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 

Read more »

தொட்டில் குழந்தை திட்டம் கடலூர் மாவட்டம் உட்பட 5 மாவட்டங்களில் விரிவுபடுத்த திட்டம்


முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

           ’’நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் போதெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல புதுமையான முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். அவ்வாறு என்னுடைய எண்ணத்தில் உதித்த ஒரு சிறப்பான திட்டம் தான், 1992-ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் ஆகும்.


        இந்தியாவில் பல மாநிலங்களில் பெண் சிசு வதை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், எனது தலைமையிலான தமிழக அரசு மட்டுமே முதன் முதலாக சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடவும், குழந்தைகளை இறப்பின் பிடியிலிருந்து காப்பாற்றவும் உறுதி பூண்டு, 1992 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் என்ற மகத்தான திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

             வறுமை, ஆண் குழந்தை வேண்டும் என்ற மனப்பாங்கு, பெண் சிசுக் கொலை என்பது கொடூரமான செயல் என்ற உணர்வு இல்லாமை, பெண் குழந்தைகளுக்கு மரபு வழியாக செய்யப்படும் சடங்குகளுக்காக ஏற்படும் செலவினம் போன்றவை பெண் சிசுக் கொலைக்கு முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.    2001 ஆம் ஆண்டு, இரண்டாம் முறையாக நான் தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.  பெண் சிசுக் கொலை நடைமுறையிலிருந்த, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, குழந்தை வரவேற்பு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

              இவ்வரவேற்பு மையங்களில் போதிய அளவு பணியாளர்கள், வெப்ப அளிப்பான் கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள், குளிர்சாதன பெட்டிகள், எரிவாயு அடுப்பு இணைப்பு, அத்தியாவசிய பாத்திரங்கள், குழந்தை படுக்கை விரிப்பான்கள், குழந்தைகளைத் துடைப்பதற்கான குட்டைத் துணிகள், பாலூட்டும் பாட்டில்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தொலைபேசி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டன.    மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகங்களில் 188 தொட்டில் மையங்கள் தொடங்கப்பட்டன.

              பெண் சிசுக் கொலை என்ற கொடிய வழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த விழிப்புணர்வு முகாம்கள், ஆய்வரங்கங்கள் மற்றும் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. மேலும் சுகாதாரம் மற்றும் காவல்துறை பணியா ளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. இப்புதுமையான திட்டம், இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளின் பாராட்டையும் பெற்றுள்ளது.   இந்த மகத்தான திட்டத்தின் மூலம் பல பெண் குழந்தைகள் இறப்பின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்புத் திட்டம் மூலமாக புதிய குடும்பச் சூழலிலோ அல்லது குழந்தைகள் காப்பகங்களிலோ வளர்ந்து, கல்வி பெற்று வளமான வாழ்க்கை பெற இத்திட்டம் வழி வகுத்துள்ளது.

           இத்தன்னிகரில்லாத் திட்டத்தின் கீழ் இதுவரை 3200-க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதோடு, 582 ஆண் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மகத்தான நோக்கத்திற்கேற்ப, 2088 பெண் குழந்தைகள் மற்றும் 372 ஆண் குழந்தைகள் என மொத்தம் 2460 குழந்தைகள் உள்நாட்டில் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.  170 பெண் குழந்தைகள் மற்றும் 27 ஆண் குழந்தைகள் என மொத்தம் 197 குழந்தைகள் வெளிநாட்டில் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 13 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆண் குழந்தைகள் என மொத்தம் 18 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

                 ஒவ்வொரு குழந்தையும், மாற்றுச் சூழலில் மறுமலர்ச்சி பெற்று வாழவும், மகிழ்ச்சியான குடும்பச் சூழல், அன்பு, அரவணைப்பு மற்றும் புரிந்து கொள்ளும் சூழ்நிலையில் வளரவும் இத்திட்டம் வழிவகை செய்துள்ளது. மேலும், இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகளில் 160 குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது இத்திட்டத்தின் மூலம் விளைந்த மிகப் பெரிய நன்மையாகும். 

                 தமிழகத்தில் 2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகையில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்று இருந்த குழந்தை பாலின விகிதம், 2011 ஆம் ஆண்டில் 946 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 5 மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம் பின்வருமாறு அதிகரித்துள்ளது: எனினும், 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, 


             கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை விகிதம் கவலையளிக்கத் தக்க வகையில் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது மற்றும் பெண் சிசுக் கொலை எனக் கருதப்படுகிறது.  

            எனவே, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் தொட்டில் குழந்தை திட்டத்தை விரிவுபடுத்த நான் ஆணையிட்டுள்ளேன். அதன்படி, இந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் தொடங்கப்படும். இம்மையங்களில், மேற்பார்வையாளர், துணை மருத்துவச் செவிலியர் மற்றும் உதவியாளர் போன்ற பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இம்மையங்களில் குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர், மருந்துகள் மற்றும் துணிகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்படும். இம்மையங்கள் 47.45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

               இந்த ஐந்து மாவட்டங்களிலும், பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் இல்லம் மற்றும் காப்பகங்கள் ஆகிய இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படும். இம்மாநிலத்திலிருந்து பெண் சிசுக் கொலையை அடியோடு ஒழித்து, பெண் குழந்தைகளின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், பெண்களின் உரிமைகளை நிலை நாட்டவும் வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில், பொதுமக்களும், பெண் குழந்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்’’ கூறப்பட்டுள்ளது.





Read more »

‘Cradle baby' scheme to be extended to Cuddalore

         The ‘cradle baby' scheme, a brainchild of Chief Minister Jayalalithaa, will be extended to Cuddalore, Ariyalur, Perambalur, Villupuram and Tiruvannamalai districts as the 2011 census has revealed a fall in the child sex ratio in these districts.

         “The figures are causing concern,” Ms Jayalalithaa said in an official statement on Sunday. She added that female infanticide and foeticide could be the reason for this trend in these districts. Cradle baby centres will be set up at a cost of Rs. 47.45 lakh and each centre will have a superintendent, an assistant nurse, an assistant and other workers. The centres will have adequate stock of milk powder, medicine and clothes. Besides, cradles will be placed at hospitals, primary health centres and children homes to receive girl children.

          She said the cradle baby scheme, launched in Salem district in 1992 with a view to eradicating female infanticide, was later extended to Madurai, Theni, Dindigul, Dharmapuri, Erode and Namakkal districts in 2001 when she became Chief Minister of the State for the second time. As many as 188 centres in these districts were equipped with incubators, life-saving drugs, refrigerators, gas connections, bed sheets and clothes for children. The government also organised camps, seminars and conferences to create awareness of female infanticide.

         “The scheme was appreciated not just in India, but across the world. Many girls were saved from the clutches of death and were later given in adoption; they grew up in families and received good education and are leading a prosperous life,” he said. Ms. Jayalalithaa said that so far 3,200 girls and 582 boys had been rescued. Subsequently, 2,088 girls and 372 boys were given in adoption in the country and another 170 girls and 27 boys were in foreign countries. Non-resident Indians adopted 13 girls and 5 boys. A total of 160 children were handed over to their parents.

       She said the scheme and the awareness created by the government had had the desired effect in these districts. 

            The child sex ratio in the State was 1000:942 as per the 2001 census and the figure became 1000: 946 in 2011 census. 

          But Cuddalore, Perambalur, Ariyalur, Villupuram and Tiruvannamalai witnessed a negative trend. 





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior