உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 20, 2010

கடலூர் மக்கள் பாராட்டும் கவுன்சிலர் "ஓசையின்றி சாதனை'


ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சிமெண்ட் தளம் போடப்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம் கருமாறப் பட்டறை வீதி.
 
கடலூர்:
 
                 நகராட்சிக் கூட்டங்களில் பேசாமலேயே, வார்டு மக்களின் கோரிக்கைகளை குறைவின்றி நிறைவேற்றி வருகிறார், கடலூர் நகராட்சி சுயேச்சை உறுப்பினர் ராஜ்மோகன். ஆனால் அவர் நகராட்சி கூட்டங்களில் ஒருமுறை கூடப் பேசியதில்லை.  மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி வார்டு உறுப்பினர்தான் மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும். 
 
                 உள்ளாட்சி நிர்வாகம்தான் ஜனநாயகத்தின் அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்தில் நல்லவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, நல்ல பணிகள் நடைபெற்றால் போதும்; ஜனநாயகம் வெற்றி பெற்றுவிடும்.உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் மக்களின் எதிர்பார்ப்பு, அடிப்படை வசதிகள். அத்தகைய பணிகளைத் திறம்பட ஆற்றி இருப்பதாக, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிருப்பவர், கடலூர் நகராட்சி 10-வது வார்டு உறுப்பினர் ராஜ்மோகன். மஞ்சக்குப்பம் பகுதியில் வேணுகோபாலபுரம், உப்பளவாடித் தெரு, துகாராம் தெரு, மார்க்கெட் தெரு, மிஷன் தெரு பகுதிகளை உள்ளடக்கியது 10-வது வார்டு.
 
                       சிறந்த உள்ளாட்சிப் பிரதிநிதிக்கு நல்ல எடுத்துக் காட்டாகத் திகழும் ராஜ்மோகன், அனைவரிடமும் நட்பு பாராட்டி ஒரே மாதிரியாக, பழகும் தன்மை கொண்ட எளிமையான மனிதர். எந்த அரசியல் கட்சியையும் சாராத உண்மையான சுயேச்சை. 10-வது வார்டில் தெரு விளக்குகள் அனைத்தும் ஒழுங்காக எரிகின்றன. குப்பைகள் தினமும் அகற்றப்படுகின்றன. சாக்கடை தினமும் சுத்தப்படுத்தப்படுகின்றன. அரசின் நலத் திட்ட உதவிகள் முறையாகப் பெற்றுத் தரப்பட்டு உள்ளன.
 
                  முதியோர் மற்றும் விதவைகள் 45 பேருக்கு பென்ஷன், தகுதியுள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டு, கலைஞர் காப்பீட்டுத் திட்ட மருத்துவ அட்டை பெற்றுத் தந்துள்ளார். தனது வீட்டில் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தி, பொறியியல் மாணவர்கள் 10 பேருக்கு, இலவச இன்டெர்நெட் சேவை அளிக்கிறார்.ஒவ்வொரு நாளும் காலையில், அவரும் அவருக்கு உதவியாக இருக்கும் சம்பத் மற்றும் இளைஞர்கள் சிலரும், வார்டு முழுவதும் சுற்றி வந்து, மக்களின்  குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை களைய நடவடிக்கை எடுக்கிறார்கள். பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுக்கும் ராஜ்மோகனைத் தொடர்பு கொண்டால்போதும். 
 
                           எந்தவிதச் செலவும் இன்றிப் பெற்றுத் தந்துவிடுவார் என்கிறார்கள் வார்டு மக்கள். அரசு வெள்ள நிவாரணத் தொகை வழங்கியபோது, தகுதியான அனைவருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பெற்றுத் தந்தவர் ராஜ்மோகன் என்கிறார்கள் மக்கள்.இந்த வார்டில் உள்ள பிள்ளையார்கோயில் தெரு, 30 ஆண்டுகளாக 10 குடிசை வீடுகளால் அக்கிரமிக்கப்பட்டு, மினி பஸ்கூட போகமுடியாத நிலை இருந்ததை மாற்றிக் காட்டிய பெருமை ராஜ்மோகனுக்கு உண்டு.  ஆக்கிரமிப்பை அகற்றினால், வாக்கு வங்கி பறிபோய்விடுமே என்று எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரதிநிதிகள் அங்காலாய்க்கும் நேரத்தில், ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். துணை முதல்வருக்கும் கடிதம் எழுதி, ஆக்கிரமிப்பை அகற்றச் செய்தார். விசாலமான அந்தத் தெருவில், தற்போது சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
 
ராஜ்மோகன் பற்றி அந்த வார்டில் வசிக்கும் ஜெயராமன் கூறுகையில்,
 
                 "எந்த கெட்ட பெயரும் இல்லாமல் உண்மையான மக்கள் பணி ஆற்றுபவர் ராஜ்மோகன். 35 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினார். அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பாதாளச் சாக்கடைக்கு  தோண்டியபின், அனைத்து தெருக்களிலும் தார் அல்லது சிமென்ட் தளம் அமைத்துக் கொடுத்து இருக்கிறார். மக்களுக்கு ஆற்றும் பணிகளுக்கு அவர் எதையும் எதிர்பார்த்தது இல்லை. இவ்வளவு சாதனைகளையும் செய்வதற்கு அவர், நகராட்சி கூட்டத்தில் ஒருமுறைகூடப் பேசியதில்லை' என்றார்.
 
                       ராஜ்மோகன் எம்.ஏ., எம்.பி.ஏ. எம்.எல்.ஐ.எஸ். பி.ஜி. டிப்ளமோ இன் டி.சி.ஏ. பட்டங்கள் படித்தவர். எனது வார்டில் இன்னும் 1,000 மீட்டர் சாலைப் பணி மட்டும் பாக்கி. அதையும் செய்துமுடிப்பேன்.என்னைப் பற்றி செய்தித் தாள்களில் எதுவும் வர வேண்டாம். எனது சேவைக்கு அது இடையூறாக அமையலாம் என்று கூறி அங்கிருந்து நகர்ந்துவிட்டார் ராஜ்மோகன்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை.யுடன் இணைந்து கடல் வண்ண மீன் உற்பத்தி


வண்ணமீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றுகிறார் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் (இடமிருந்து 3வது).

சிதம்பரம்:

                அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் துறையுடன் இணைந்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் நல்ல நீரில் கடல் வண்ண மீன்கள் வளர்ப்பது குறித்து புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை சிறப்புச் செயலர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.

                     சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கடல் வண்ணமீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்த 5 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.விழாவில் தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: நல்ல நீரில் கடல் வண்ணமீன் வளர்ப்பது மிக சிரமமான காரியமாக இருந்தது. ஆனால் அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் நல்ல நீரில் வண்ண மீன்களை வளர்ப்பது குறித்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து வெற்றி கண்டுள்ளது பெருமைக்குரியது.

                     இதுவரை தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் அரசு உதவியுடன் பல்வேறு திட்டப் பணிகள் மூலம் நல்ல நீரில் உணவுக்கான மீன் உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு கடல் வண்ணமீன் உற்பத்தி செய்வது குறித்த திட்டப் பணிகளை தமிழக மீன்வளத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தும் என கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.

விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்துப் பேசுகையில், 

                   "இதுவரை கடல் வண்ணமீன் வளர்ப்பு குறித்து பயனாளிகளுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.  தற்போது அரசு மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது பெருமைக்குரியது' என்றார்.

மத்திய அரசு கடலோர மீன் வளர்ப்பு ஆணைய செயலாளர் ஆர்.பால்ராஜ் வாழ்த்துரையாற்றுகையில், 

                          "கடல் வண்ண மீன்களை உற்பத்தி செய்து பாக்கெட்டில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பத்தை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்றார்.விழாவில் கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.   ஈஸ்வர்தேவ் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பயிற்சி முகாம் செயலாளர் முனைவர் டி.டி.அஜீத்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முனைவர் எஸ்.குமரேசன் நன்றி கூறினார்.

Read more »

பண்ருட்டி - கடலூர் சாலையில் சுமை தாங்கி கல்லை அபகரிக்க திட்டம்: நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?

கம்
சுமை தாங்கி கல்லை அபகரிக்க திட்டம்: நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?


நிலத்தில் நடப்பட்ட நிலையில் உள்ள சுமை தாங்கி கல்.

பண்ருட்டி:

              பண்ருட்டி-கடலூர் சாலையில் உள்ள சுமை தாங்கி கல் சிதைக்கப்பட்டு தனிநபர்கள் அபகரித்துச் செல்ல முயற்சித்துள்ளனர். இந்த கல்லை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

                  பண்ருட்டி-கடலூர் நெடுஞ்சாலையில் (ஒன்றிய அலுவலகத்துக்கு அருகே) கிறிஸ்தவ தேவாலயத்துக்கு எதிரே சாலை ஓரம் சுமை தாங்கி கல் உள்ளது. பல ஆண்டு காலமாக இருந்து வந்த இந்தக் கல்லை அபகரிக்க சிலர் திட்டமிட்டு சிதைத்துள்ளனர். சிதைக்கப்பட்ட சுமை தாங்கி கல்லின் மேல் பகுதி அருகே உள்ள ஒரு வீட்டின் வாசல் முன் படிக்கட்டாக போடப்பட்டுள்ளது. மேலும் நிலத்தில் நடப்பட்டிருந்த இரு கல்லில் ஒன்றை பள்ளம் பறித்து அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். அந்த கல்லில் "தேவகோட்டையில் நாட்டுக்கோட்டை ப.ள.அ.வேங்கடாசல செட்டியார் தர்மம்' என எழுதப்பட்டுள்ளது.

                     மோட்டார் போக்குவரத்து வளர்ச்சி அடைவதற்கு முன்னர் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருள்களை தலைச் சுமையாக கொண்டு செல்வர், சுமை மிகுந்த பொதிகளை இறக்கி ஏற்ற வசதியாக சாலையின் ஓரத்தில் அங்காங்கே சுமை தாங்கி கல் அமைக்கப்பட்டிருக்கும்.பண்ருட்டி-கடலூர் சாலையில் செல்பவர்களுக்கு நீண்ட நாள்களாக காட்சி பொருளாகவும், நினைவுச் சின்னமாகவும் இருந்த இந்த கல்லை அபகரிக்கும் நோக்கில் யாரோ சிதைத்துள்ளனர். 

                    நெடுஞ்சாலையில் உள்ள இந்தக் கல்லை அகற்ற தனி நபர்களுக்கு அனுமதி அளித்தது யார்? இதைப் பாதுகாக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்த சுமைதாங்கி கல்லை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னை கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


சிதம்பரத்தை அடுத்த அம்மாப்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பந்த்தின் போது கண்ணாடிகள் உடைக்கப்பட்ட அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்.

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழைப்பின்பேரில் செவ்வாய்க்கிழமை நடந்த முழு அடைப்பில் சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வடலூர் நீங்கலாக, கடலூர் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

                    13 ஆயிரம் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளுக்காக, செப்டம்பர் 19-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்த போராட்டமாக இருந்தது, தொ.மு.ச. தனியாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதைத் தொடர்ந்து, தொழிற்சங்கங்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டது. பின்னர் அதுவே எதிர்க்கட்சிகளின் போராட்டமாக மாறிவிட்டது. எனவே அதிமுக, பாமக, இரு கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை, கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தன.

                   முழு அடைப்பு நியாயம் அல்ல என்று மாவட்ட நிர்வாகமும், சட்டவிரோதமானது என்று காவல் துறையும் அறிவித்தன. தொழிலாளர்கள் பிரச்னையை அரசியல் ஆக்கி ஆதாயம் தேடுகிறார்கள் எதிர்க்கட்சிகள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். அரசு ஊழியர் சங்கங்கள் பந்த் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டனர்.இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெரும்பாலான ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிதம்பரத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 

                      குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் கடைகள் திறந்து இருந்தன.கடலூரில் காலை 6 மணிக்கு மேல் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. கடலூரில் சினிமா தியேட்டர்களில் காலை, மதியம் காட்சிகள் நடைபெறவில்லை. ஹோட்டல்கள் மூடப்பட்டு இருந்தன. நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.பெரும்பாலான ஆட்டோக்கள், டாக்ஸிகள், லாரிகள் ஓடவில்லை. 

                 வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது. கடலூரில் காய்கறி மார்க்கெட்டுகள் இயங்கவில்லை. காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. ரமேஷ் குடவாலா தலைமையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மாசானமுத்து தலைமையில் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உள்ளிட்ட 6 மாவட்ட எஸ்.பி.க்கள், சுமார் 3 ஆயிரம் போலீசார்  பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகள், முக்கிய இடங்களில் போலீசார்  குவிக்கப்பட்டு இருந்தனர். வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

                    கடலூரில் ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த போலீஸôர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 5 தனியார் பஸ்களும் 5 அரசு பஸ்களும் கல்வீச்சில் சேதம் அடைந்தன. ஆனால் இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் செய்யப்படவில்லை என்று  போலீ சார் தெரிவித்தனர். கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 19 பேரை பிடித்துவைத்து விசாரணை செய்துவருவதாகவும் போலீசார்  தெரிவித்தனர். 

சிதம்பரம்:

                சிதம்பரம் வழியாகச் செல்லும் பஸ்கள், கார்களை வல்லம்படுகை செக்போஸ்ட்டில் போலீசார்  நிறுத்தி வைத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஒன்றாகச் சேர்த்து போலீசார்  பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். 

நெய்வேலி:

                      நெய்வேலியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் காய்கறி சந்தை நடைபெறவில்லை. என்.எல்.சி. ஊழியர்கள் முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. 

பண்ருட்டி:

                பண்ருட்டியில் புதுப்பேட்டை பகுதியில் கடைகளை அடைக்கக்கோரிய தொரப்பாடி அதிமுக பேரூர் செயலர் கனகராஜ், பாமக நகர செயலர் குமார், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கநாதன், தேமுதிக நகர செயலர் முருகன் உள்ளிட்ட 14 பேரை போலீசார்  கைது செய்தனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

விருத்தாசலம்:

                      விருத்தாசலத்தில் கடைகளை மூடச் சொல்லி எதிர்க்கட்சியினரும், திறக்கச் சொல்லித் திமுகவினரும் கோரியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.

Read more »

81 வகையான சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: கவிஞர் சல்மா


தமிழ்நாடு சமூகநல வாரிய கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசுகிறார் நலவாரியத் தலைவரும், கவிஞருமான சல்மா (இடது).
 
சிதம்பரம்:
 
             இந்தியாவில் பெண் பாதுகாப்புக்காக 81 வகையான சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலைதான் உள்ளது. பெண்கள் வன்முறைக்கு உள்ளாகும் நிலை இன்றும் உள்ளது. சட்டங்களினாலும், திட்டங்களினாலும் இதை முறியடிக்க முடியாது. பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு போராடினால்தான் முறியடிக்க முடியும் என தமிழக சமூகநல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா தெரிவித்தார்.
 
                      சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில் தமிழ்நாடு சமூகநல வாரியம் சார்பில் ""பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சமமற்ற பாலியல் விகிதாசாரத்தினால் ஏற்படும் எதிர்கால விளைவுகள்'' குறித்த 2 நாள் கருத்தரங்கு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கை தமிழக சமூக நலவாரியத் தலைவரும் கவிஞருமான சல்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார்.
 
தமிழக சமூக நலவாரியத் தலைவரும் கவிஞருமான சல்மா  பேசியது: 
 
                    பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்தான் சமூக மாற்றம் ஏற்படும். இந்த 21-ம் நூற்றாண்டிலும் பெண் கருவை அழிக்கும் நிலை உள்ளது. வரதட்சிணை கொடுமையால் பெண் கொலை நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான உரிமைகள் சரியானபடி அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்ற அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் உதவித் தொகை, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் தொடங்க கடனுதவி உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.இஸ்லாமிய சமுதாய பெண்கள் கல்வி அறிவு பெறாதவர்களாக உள்ளனர். 
 
                    இஸ்லாமிய மதத்தில் பெண்கள் கல்வி பயிலக் கூடாது என்று கூறப்படவில்லை. இஸ்லாமிய பெண்கள் அரசு திட்டங்களை பெற்று பயனடையவில்லை. அத்தகைய பெண்கள் அதிகம் வாழும் கிள்ளை பகுதியில் அப்பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இஸ்லாமிய பெண்கள் இதில் பங்கேற்று கருத்துகளைப் பெற்று யோசித்து உணர்ந்து செயல்பட வேண்டும்.பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாலியல் விகிதாசாரம் குறைந்துள்ளது. இந்தியாவில் 20 ஆண்டுகளில் 1 கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். 
 
                   பெண்கள் பிறப்பு விகிதாசாரம் குறைந்ததால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்ற பயமும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு போராட வேண்டும் என கவிஞர் சல்மா தெரிவித்தார்.விழாவுக்கு கோட்டாட்சியர் அ.ராமராஜூ தலைமை வகித்தார். கிள்ளை பேரூராட்சி தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், கடலூர் மாவட்ட சமூகநல அலுவவர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினார். தமிழக சமூகநல வாரிய அலுவலர் டொமினிக் வரவேற்றார். 
 
                   நலவாரிய இணை இயக்குநர் குமாரபிரசாத் கருத்தரங்கு குறித்து விளக்கவுரையாற்றினார். கருத்தரங்கில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமுதாய பெண்கள் அதிகம் பேர் பங்கேற்றனர். ஏக்தா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.

Read more »

தமிழக அரசு மருத்துவமனைகளில் ரூ. 600 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளன: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நெய்வேலி:

                  அரசு மருத்துவமனைகளில் ரூ. 600 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு அவற்றின் உதவியுடன் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். 

                    வடலூரில் இயங்கிவரும் அஞ்சலை தனியார் மருத்துவமனையின் வெள்ளிவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அம்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சின்னதுரை வரவேற்றார். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: 

                 தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க பல பத்திரிக்கைகள் உள்ளன. தமிழக முதல்வர் பத்திரிக்கைகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிக்கிறார் என்பது பத்திரிக்கையாளர்களுக்குத் தெரியும். முதல்வர் கருணாநிதி அதிகாலையில் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் அரசின் குறைபாடு குறித்து செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்து, உடனேயே சம்மந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தகவல் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். இருப்பினும் சில பத்திரிக்கைகள் சாதாரணமான காய்ச்சலைக் கூட மர்மக் காய்ச்சல், மக்கள் பீதி என எழுதுகின்றனர். இதனால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என தெரியவில்லை. குறைகளை சுட்டிக்காட்டுங்கள். 

                  அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கிறோம். இந்த அரசு பொறுப்பேற்ற பின் மருத்துவம் சார்ந்த 31 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 6677 மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கின்ற நிலை அரசு மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேரம் என்று போர்டு மட்டும் வைத்துவிட்டு, இரவில் டாக்டர் இருப்பது கிடையாது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான். 

                    இதன்மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரம் மருத்துவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ரூ. 600 கோடிக்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு, அவை பொதுமக்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக இன்று அனைத்து அரசு மருத்துவமனைகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். விழாவில் திருவங்காடு டாக்டர் ராஜகீர்த்தி, ஒபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.செல்வராஜ், டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, குறிஞ்சிப்பாடி ஒன்றியக் கல்விக்குழு உறுப்பினர் சிவக்குமார். காங்கிரஸ் மாவட்டச் செயலர் அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

சிதம்பரம் சேக்கிழார் மணி மண்டபத்தில் புதுக்கவிதை வடிவில் பெரிய புராணம் நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம்,:

                  சிதம்பரம் சேக்கிழார் மணி மண்டபத்தில் வடலூர் தேவார நால்வர் தொண்டு பாதை அமைப்பு சார்பில் புதுக்கவிதை வடிவில் நூலாசிரியர் பா.சத்தியமோகன் எழுதிய பெரியபுராணம் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

                   உ.கேதார தீட்சிதர் வரவேற்றார். பேராசிரியர் ஐ.ஆனந்தநடராஜ தீட்சிதர் தலைமை வகித்தார். மௌனசாமி மடாதிபதி சுந்தரமூர்த்தி சுவாமிகள் நூலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். வடலூர் அன்னதான ஆதீனம் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.  எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். விழாவில் வடலூர் ஊரன்அடிகள், உ.ர.உமாநாததீட்சிதர், டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி, கயிலைச்செல்வர் செ.கதிரேசன், வெங்கடேச தீட்சிதர்  உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். 

                      நூலாசிரியர் பா.சத்யமோகனுக்கு விழாவில் சேக்கிழார் அடித்தொண்டர் என்ற விருது வழங்கப்பட்டது. பா.சத்யமோகன் ஏற்புரையாற்றினார். இளம்பொறியாளர் ச.அருண்சித்தார்த் நன்றி கூறினார். கவிஞர் பா.முத்துகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Read more »

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்

சிதம்பரம்:

                  சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 8 பேர் தாற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டதால் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

                       இருமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் போது, தொகுப்பு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6-ம் தேதி முதல் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

                  இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் அக்டோபர் 14-ம் தேதி முதல் வேலைக்கு திரும்ப முடிவெடுத்தனர்.இந்நிலையில் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அக்டோபர் 14-ம் தேதி பணிக்கு சென்றபோது, தொழிúôற்சங்க மாநில நிர்வாகிகள் பாலகுருசாமி, வேலவன், பஞ்சநாதன், பரமசிவம், இளவரசன், எழிலன், ஆறுமுகம், ராமச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் தாற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

                      இதையடுத்து வேலைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து அக்டோபர் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் சங்கத்துக்கு ஆதரவாக அக்டோபர் 15-ம் தேதி விவசாய சங்கங்கள் பங்கேற்ற, ஆலை ஆட்சியர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் சேத்தியாத்தோப்பில் கோட்டாட்சியர் அ.ராமராஜு, டிஎஸ்பி ராமசந்திரன், வட்டாட்சியர் எம்.காமராஜ், ஆட்சியர் ஆசியாமரியம் உள்ளிட்டோர் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. இதனால் வேலைநிறுத்தப் போராட்டம் தீவரமடைந்துள்ளது.

Read more »

பஸ் கண்ணாடி உடைப்பு : பா.ம.க.,வினர் 4 பேர் கைது

சிதம்பரம் : 

              சிதம்பரத்தில் பஸ் கண்ணாடிகள் உடைத்த சம்பவம் தொடர்பாக பா.ம.க.,வைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று கடலூர் மாவட்டத்தில் "பந்த்' நடந்தது. 

                  அதை மீறி சிதம்பரம் பகுதியில் இயக்கப்பட்ட பஸ்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். அதில் மந்தக்கரை மற்றும் விபூஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் மூன்று பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பா.ம.க.,வைச் சேர்ந்த வடக்கு பவழங்குடி பழனிவேல், சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ், அன்பரசன் மற்றும் கட்டை சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

மாநில அளவிலான நீச்சல் போட்டி: கடலூர் அணி 54 பதக்கம் வென்றது

கடலூர் : 
 
                   தஞ்சாவூரில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் கடலூர் அணி 25 தங்கம் உட்பட 54 பதக்கங்களை வென்றது. தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தமிழகத்தில் இருந்து 15 அணிகளைச் சேர்ந்த 350 பேர் பங்கேற்றனர். கடலூர் அணி சார்பில் 30 பேர் பங்கேற்றனர். அதில் அக்ஷரா வித்யாஷரம் பள்ளி மாணவர்கள் நாக ராகவேந்திரா ஒரு தங்கம், நவீன் ஒரு தங்கம் ஒரு வெள்ளி, சஞ்சய் பால் தினகர் ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றனர். 

                      பெடிட் செமினார் பள்ளி சுதாமன் ஒரு வெண்கலம், சி.கே.பள்ளி செபா பிராங்களின் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், நிர்மல்காந்த் ஒரு தங்கம், சூர்ய பிரசாத் ஒரு தங்கம், டேவிஸ் நிரஞ்சன் 3  தங்கம், சுசிந்தர் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், கவுரவ் சேகரன் ஒரு தங்கம், ஹரிணி ஸ்ரீ ஒரு வெள்ளி, பிளஸ்ஸட் மதர் தெரசா பள்ளி ருக்ஷனா 2 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.

                         ஆரோ சைல்டு பள்ளி விமல் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், ஷெர்வின் ஜெகா 2 தங்கம், ஒரு வெள்ளி, கிருஷ்ணசாமி பள்ளி சுதர்ஷன் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், ஜனார்த்தனன் ஒரு வெள்ளி, லதீஷ் ஷரன் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், பல்ராம் ஒரு தங்கம், மகாத்மா காந்தி இன்டர் நேஷனல் பள்ளி விஜயகுமார் ஒரு வெள்ளி, அர்ஷித்தா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றனர். 

                          செயின்ட் மேரீஸ் பள்ளி கோடீஸ்வரி 2 தங்கம், புனித அன்னாள் பள்ளி லட்சுமி சுவாதிகா 3 வெள்ளி, ரக்ஷனா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம், ஏ.ஆர்.எல்.எம்., சுபாஷ் சுந்தரம் 3 தங்கம், ஒரு வெள்ளி, அபிஷேக் ஒரு தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் அருணா ஆகியோரை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பாராட்டினார்.

Read more »

விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு : அதிகாரிகள் அக்கறை கொள்வார்களா?

விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் நகரத் தில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் விருத்தாசலம் நகரமும் ஒன்று. இந்நகரத்தைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கிராமத்தைச் சேர்ந்தோர் நாள்தோறும் நகருக்கு வருகை தருவது அதிகரித்து வருகிறது. 

                     இதன் காரணமாக விருத்தாசலம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. ஆனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்து அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்காததால் தினம்தினம் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப் படுகின்றனர்.

                   பஸ் நிலையத்தின் உள்ளே தள்ளு வண்டிகள் ஆக்கிரமிப்பு, இருசக்கர வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்துவது இதனால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே வரும் பஸ்கள் பஸ் நிலையம் முன்புறம் உள்ள ஜங் ஷன் ரோட்டிலும் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதற் குள் வாகனங்களின் அணிவகுப்பு அதிகரிக்கிறது.
 
                ஜங்ஷன் ரோட்டில் பஸ் நிலையத்தின் அருகி லேயே இரண்டு இடங்களில் வேகத்தடை போன்று  மெகா சைஸ் அளவில் சாக் கடை கால்வாய் அமைத் துள்ளனர். இதில் கனரக வாகனங்கள் ஏறி செல்ல முடியாமல் சில நேரங்களில் மணி கணக்கில் நின்று விடுவதால் நெரிசல் அதிகரிக்கிறது. நகரத்தின் பிரதான வீதியான கடைவீதியில் தினந்தோறும் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம்  இருக்கும் என்பதால் இச் சாலை ஒரு வழிச் சாலையாக மாற்றப் பட்டது. 

                  விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி, பெண்ணாடம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கடைவீதி வழியாகவும், நகரத்திற்கு வரும் வாகனங்கள் பழைய தபால் நிலையம் அருகே உள்ள சாத்துகுடல் மேட்டுத் தெரு  வழியாக செல்லும்படி மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ஒரு வழிப்பாதை குண்டும் குழியுமாக இருப்பதாலும், இட நெருக்கடியாக இருப்பதாலும் டிரைவர்கள் இச்சாலையை பயன்படுத்தாமல் எப்போதும் போல் கடைவீதி  வழியாகவே நகரத் திற்குள் வருகின்றனர். இதனால் கடைவீதியிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை.

                  கடலூர் ரோட்டில் ஸ்டேட் பாங்க் எதிரில் இருபுறங்களிலும் இருந்து வரும் பஸ்கள் ஒரே இடத்தில்  நின்று பயணிகளை ஏற்றி செல்லும். இதை தடுக்க சில வாரங்களுக்கு முன் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் தான் கடலூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நிற்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவித்தனர். ஆனால் இதனை யாரும் கடை பிடிப்பது இல்லை. போலீசாரும் கண்டு கொள்வது கிடையாது. ஜங்ஷன் ரோடு, கடை வீதிகளில் கடைகளுக்கு லோடுகள் இறக்கும் லாரிகளை ரோட்டிலேயே நிறுத்தி இறக்குகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரத்தில் பாலக் கரை, கடை வீதியில் சிக் னல்கள் அமைக்கப் பட்டது.

                        பாலக்கரையில் அமைக் கப்பட்ட சிக்னல்கள் பாலம் கட்டும் பணிக்காக அகற்றப்பட்டது. இதுவரை மீண்டும் அமைக் கப் பட வில்லை. கடைவீதியில் உள்ள சிக்னல்கள் பல ஆண்டுகளாகவே இயங்காமல் போக்குவரத்திற்கு பயனற்று தற்போது டிஜிட் டல் பேனர் கட்டுவதற்கு கம்பமாக பயன்படுகிறது. நகரத்தில் குடித்து விட்டு வாகனங்களில் செல்பவர்களை பிடித்து அவர்களிடம் "மாமூல்' கறப்பதில் அதிக ஆர்வம் காட்டும் போக்குவரத்து போலீசார், மக்கள் தினந் தோறும் பாதிக்கப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவனம் செலுத்துவதில்லை. பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் விருத்தாசலம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

Cuddalore students shine


Winners of state-level swimming competition in Cuddalore. 
 

CUDDALORE: 

           Cuddalore students proved their mettle in the State-level swimming competitions held in Thanjavur on October 15 by bagging the most number of medals. They ended with a tally of 54 medals, including 25 gold, 18 silver and 11 bronze.

                In the Under-6 category, R.Subash Chander of A.R.L.M. School made a clean sweep with three gold and one silver, while J.Davis Niranjan of C.K. School of Practical Knowledge bagged three gold in the Under-7 category, V.Koteeswari of St. Mary's Matriculation Higher Secondary School won two gold and two silver in Under-8 category and K.Y. Rukshana of Blessed Mother Teresa School obtained two gold and two silver in Under-12 category.

               District Swimming Coach S. Aruna told The Hindu that there was a lot more potential in Cuddalore and if tapped properly they would even shine in State and national championships. As many as 15 teams, comprising a total of 350 students, participated in the event. He led a contingent of 30 swimmers from Cuddalore. Mr. Aruna said that the surprising thing about the students was none of them belonged to the fishermen community.

                   It disproved the notion that Cuddalore being a coastal district it was but natural to get so many medal winners. The coach emphatically said that the students belonged to various communities and they took to swimming out of their own interest and put in a lot of effort.
  
They were trained in four types of strokes: 

                         breast, back, butterfly and free style. Once they hit the water it would take about two months for the students to learn the basics. Then, gradually they were taught the technique of acquiring speed and endurance. Initially, they would participate in local competitions and gradually progress to higher-level competitions.

                    Once the students overcome fear, they would show their full potential to emerge as ace swimmers. Mr. Aruna further said that as of now the boys undergoing training outnumbered girls and hoped that in course of time more number of girls would also participate in swimming competitions.

Read more »

Minister thanks administration, police

CUDDALORE: 

               Health Minister M.R.K. Panneerselvam has thanked the people and the organisations that did not participate in the bandh called by the opposition parties in support of the NLC contract workmen on Tuesday.

                  In a statement issued here, the Minister also thanked the district administration and the police personnel for having maintained law and order on the day. District Collector P. Seetharaman in his statement observed that the bandh did not affect normal life because the transport corporation and private operators ran their services as usual. Mr. Seetharaman noted that excepting major commercial complexes and some hotels all other shops remained open and educational institutions functioned normally. The police had detained a number of people for stone throwing, he added.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior