கடலூர், நவ. 1: வளர் இளம்பெண்களிடம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, கோ. அய்யப்பன் எம்.எல்.ஏ. வலியறுத்தினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கடலூர் திருப்பாப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேசிய ஊட்டச் சத்து வார விழாவை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்து, ஆரோக்கிய போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், பள்ளிகளுக்கு மின்விளக்குகள்,...