உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 04, 2009

இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு

கடலூர், நவ. 1: வளர் இளம்பெண்களிடம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, கோ. அய்யப்பன் எம்.எல்.ஏ. வலியறுத்தினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கடலூர் திருப்பாப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேசிய ஊட்டச் சத்து வார விழாவை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்து, ஆரோக்கிய போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், பள்ளிகளுக்கு மின்விளக்குகள்,...

Read more »

50 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

சிதம்பரம்,நவ.1: சிதம்பரம் ரோட்டரி சங்கம் பொன் விழாவை முன்னிட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 50ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ரோட்டரி ஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.÷அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் பழ.முத்துவீரப்பன் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.அஷ்ரப்அலி தலைமை வகித்தார்.÷முன்னாள்...

Read more »

விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் ஜனவரியில் இயக்கப்படும்

கடலூர், நவ.1: விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில்கள் ஜனவரி மாதம் இயக்கப்படும் என்று, தென்னக ரயில்வே பொது மேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.÷விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தூர ரயில்பாதை ரூ. 270 கோடியில் அகலப் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. 2007 ஜனவரியில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மயிலாடுதுறை - சீர்காழி இடையே 22 கி.மீ. தூரம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. விழுப்புரம்...

Read more »

அதிகரித்து வரும் சோரியாசிஸ் நோய்

கடலூர், அக். 31: இந்தியாவில் சோரியாசிஸ் நோய் அதிகரித்து வருவதாக, மருத்துவத் துறை முன்னாள் இயக்குநரும், கிழக்குக் கடற்கரை தோல் மருத்துவர்கள் சங்கத் தலைவருமான டாக்டர் சி. மகாலிங்கம் வேதனை தெரிவித்தார். உலக சோரியாசிஸ் தினத்தையொட்டி, கடலூரில் ரோட்டரி சங்கம் மற்றும் கிழக்குக் கடற்கரை தோல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சோரியாஸிஸ் வித்தியாசமான தோல் நோய். மேலை நாடுகளில், குறிப்பாகக் குளிர்...

Read more »

மக்கள் நலப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர், அக். 30:கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 மக்கள் நலப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  பண்ருட்டி ஒன்றியம், மாளிகம்பட்டு, காட்டுமன்னார் கோயில் ஒன்றியம், ஸ்ரீஆதிவ ராக நல்லூர், கீரப்பாளையம் ஒன்றியம், பூந்தோட்டம், ஓடாக்க நல்லூர், மேல்புவனகிரி ஒன்றியம், தீர்த்தாம்பாளையம், வடகிருஷ்ணாபுரம், கம்மாபுரம்...

Read more »

சிதம்பரம் நகராட்சி செயலிழந்துள்ளது: பாமக உறுப்பினர் புகார்

சிதம்பரம்,அக்.30: சிதம்பரம் நகராட்சியில் தலைவர் மற்றும் அதிகாரிகள் கடமைக்கு வேலை பார்க்கின்றனரே தவிர எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் நகராட்சி ஒட்டுமொத்தமாக செயலிழந்துள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் ஆ.ரமேஷ் நகரமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.÷சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior