உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 20, 2011

தமிழக பொறியியல் கல்லூரிகள் - Nehru Institute of Engineering and Technology - Coimbatore

 தமிழக பொறியியல் கல்லூரிகள் 

(Nehru Institute of

Engineering and Technology - Coimbatore) 


Under Graduate Courses 
 
B.E. - Aeronautical Engineering
B.E. - Computer Science & Engineering
B.E. - Electronics & Communication Engineering
B.E. - Mechanical Engineering

Post Graduate Courses
 
M.B.A - Master of Business Administration
M.C.A - Master of Computer Applications

தொடர்புக்கு 

Nehru Institute of Engineering & Technology,
 
Palakkad Main Road,
T.M.Palayam,
Coimbatore - 641 105,
Tamil Nadu.
Phone : 0422 - 262 3055, 262 3611.

Corporate Office
:

451-D, Palakkad Main Road,
Kuniamuthur,
Coimbatore - 641 008,
Tamilnadu.
Phone : 0422 - 225 1148, 225 2562, 225 2402
Fax : 0422 - 225 1147
Email: nehruclg@md3.vsnl.net.in

Website; 
www.nehrucolleges.கம


 

Read more »

மின் வெட்டு காரணமாக கடலூரில் அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை

குடிநீரில், சாக்கடை கலந்து வருவதாக புகார் தெரிவித்து, தண்ணீரை பாட்டிலில் பிடித்துக் காண்பிக்கும் கடலூர் சுப்புராயலு நகர் பகுதி பெண்.
கடலூர்:
          மின் வெட்டு காரணமாக கடலூர் நகரில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது.
             கடலூர் நகருக்கு பெண்ணை ஆற்றிலும், கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை பகுதி மற்றும் திருவந்திபுரம் பகுதிகளிலும் 15-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.கடலோரப் பகுதியாக இருப்பதால் கடல் நீர் உள்புகுதலின் காரணமாக, கடலூரில் நிலத்தடி நீர் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. பெண்ணை ஆற்றில் இருந்து விநியோகிக்கும் நீர் சுவை குன்றியதன் காரணமாகவே, கேப்பர் மலையில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.16 கோடியில் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. 
             திட்டத்தை விரிவுபடுத்த மேலும் பல கோடி செலவிடப்பட்டு உள்ளது.எனினும் கேப்பர் மலை ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் குடிநீர் சுவை, 2 ஆண்டுகளில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். கடலூரை அடுத்துள்ள சிப்காட் தொழிற்சாலைகள் நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உருஞ்சுவதாலும் நிலத்தடி நீரில், கடல் நீர் கலப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் நிரந்தரமாகிப் போய்விட்ட மின் வெட்டு, கடலூர் நகர குடிநீர் விநியோகத்தைப் பெரிதும் பாதிக்கிறது. 
             பகலில் 3 மணி நேரம் மின் வெட்டு நிரந்தரம். இதுதவிர பகலிலும் இரவிலும் மின்வாரியம் நினைக்கும் நேரத்தில் எல்லாம் மின்சாரத்தை நிறுத்தி விடுவது, மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. இதுகுறித்து எந்த அதிகாரிகளும், எந்த அரசியல் தலைவர்களும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை என்பதே கடலூர் மக்களின் ஆதங்கம்.கடலூர் நகரில் நிலத்தடி நீர் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விட்டதால், பெரும்பாலான மக்கள் அனைத்து தண்ணீர் தேவைகளுக்கும் நகராட்சி குடிநீரையே நம்பி இருக்கிறார்கள். கோடைக்காலம் வந்துவிட்ட நிலையில், தண்ணீர் தேவை அதிகரிப்பது இயல்பானது.
            இந்நிலையில் அதிகரித்து வரும் மின் வெட்டு, ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து குடிநீர் இறைப்பதை பெரிதும் பாதித்து உள்ளது. 30 நிமிஷம் மின் வெட்டு ஏற்பட்டாலும் மீண்டும் அனைத்து மோட்டார்களையும் இயக்க 2 மணி நேரத்துக்கு மேல் ஆவதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.இதனால் நகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளுக்கு, முழுமையாக நீரேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சுப்புராயலு நகர் பகுதியில் குடிநீர் நிறம் மாறியிருக்கிறது. இங்கு குடிநீரில் சாக்கடை கலப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். அண்ணா நகர், துரைசாமி நகர், சாமிப்பிள்ளை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 30 நிமிஷம்கூட தண்ணீர் கிடைப்பது இல்லை என்கிறார்கள் பொதுமக்கள்.
               இதன் காரணமாக கடலூர் நகர மக்கள் டிராக்டர், லாரி டேங்கர்களில் வரும் நீரை, குடத்துக்கு ரூ.3 விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. டேங்கர்களில் வரும் குடிநீர் சுவையாக இருப்பதாகக் கூறினாலும், அதில் கால்சியம் கார்பனேட் அதிக அளவில் கலந்து இருப்பதால், சிறுநீரகத்தில் கல் உற்பத்தியாதல் போன்ற வியாதிகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதை, பலரும் அறிந்து இருக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குடிநீர் பிரச்னை குறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது 
      கோடைக்காலத்தில் நகரில் தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது. ஆனால் மின்வெட்டு குடிநீர் விநியோகத்தை பெரிதும் பாதிக்கிறது. மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் முழுமையாக நிரம்புவதில்லை. 30 நிமிஷம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மீண்டும் அனைத்து மோட்டார்களையும் இயக்க 2 மணி நேரம் ஆகும். குடிநீரில் சாக்கடை கலப்பதாக வந்த புகார் சரி செய்யப்பட்டு உள்ளது.ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து குடிநீர் பெறுவதில் பிரச்னை ஏற்படும்போது, மாற்று திட்டங்களை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

Read more »

2011-12 கல்வியாண்டில் பொறியியல் படிப்பு: அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 2.1 லட்சம் இடங்கள்


   
               பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 2.1 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
 
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
 
              டந்த 2010-11 கல்வியாண்டில் 1.9 லட்சம் அரசு ஒதுக்கீட்டின் கீழான பி.இ. இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.ஆனால், இப்போது புதுக் கல்லூரி தொடங்குவதற்காக மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ஏ.ஐ.சி.டி.இ.-க்கு தமிழகத்திலிருந்து 83 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 40 பேர் பொறியியல் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளனர்.மேலும், தமிழகத்தில் உள்ள 486 பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலான கல்லூரிகள், பி.இ. படிப்புகளில் மாணவரின் எண்ணிக்கையை உயர்த்த கோரி விண்ணப்பித்துள்ளன. 
 
           எனவே, வரும் 2011-12 கல்வியாண்டில் பி.இ. இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பி.இ. இடங்கள் 30 ஆயிரமாக உயர்ந்து வருகிறது. எனவே, வரும் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை 2.1 லட்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் மன்னர் ஜவஹர்.

Read more »

இயற்கை வளங்களை பாதுகாக்க புதுச்சேரி மாணவர்கள் சைக்கிள் பயணம்

பரங்கிப்பேட்டை : 

           இயற்கை வளங்களை பாதுக்காக்க வலியுறுத்தி புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டனர். 

               புதுச்சேரி அடுத்த பாகூர் பிரபு சர் அனுசாமி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 50 பேர் மற்றும் ஆசிரியர்கள் 10 பேர் இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி நேற்று சைக்கிளில் 4 நாட்கள் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டனர். பாகூரில் இருந்து கடலூர் வழியாக புதுச்சத்திரம், பு.முட்லூர், பிச்சாவரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், வீராணம் வழியாக கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்கிருந்து பாகூருக்கு திரும்பிச் செல்கின்றனர். வழிநெடுகிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரம் வளர்ப்பது உள்ளிட்டவைகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

Read more »

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது PSLV C-16

              இயற்கை வளங்களை கண்டறிய உறுதுணைபுரியும் ரிசோர்ஸ்சாட்-2 உள்ளிட்ட மூன்று செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

            சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவு தளத்தில் இந்த ராக்கெட் லை 10 மணி 12 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ'வின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குழுவினர் கைதட்டி மகிழ்ந்தனர்.

              இந்நிகழ்வை நேரில் பார்ப்பதற்காக குவிந்திருந்த ஆர்வலர்களும், மாணவர்களும் ஆரவாரம் செய்தனர். இந்த பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட், இந்தியாவிலேயே, 'இஸ்ரோ' விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட 1206 கிலோ எடையுள்ள 'ரிசோர்ஸ் சாட்-2', இந்தியா-ரஷியா கூட்டு தயாரிப்பில் உருவான 92 கிலோ எடையுள்ள 'யூத்சாட்,' சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட 106 கிலோ எடையுள்ள 'எக்ஸ்சாட்' ஆகிய 3 செயற்கை கோள்களை ஏந்திச் சென்றது. இஸ்ரோ மூலம் சிங்கப்பூர் செயற்கை கோள் அனுப்புவது இதுவே முதல் முறை.
 

              இந்தியா ஏற்கெனவே ரிசோர்ஸ்சாட்-1 என்ற செயற்கை கோளை கடந்த 2003-ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. அதன் ஆயுள் காலம் முடிவடைவதால், ரிசோர்ஸ்சாட்-2 என்ற அதிநவீன 2-வது செயற்கை கோள் இப்போது அனுப்பப்பட்டுள்ளது. இது, இயற்கை வளங்களை கண்டறியவும், அவற்றின் மேலாண்மை பற்றி ஆராயவும் பயன்படுத்தப்படும். ரிசோர்ஸ்சாட்-2 செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 5 ஆண்டுகள். இதில் 3 அதிநவீன கேமராவும், கனடா நாட்டின் 'காம்தேவ்' என்ற அதிநவீன கருவியும் கூடுதலாக அனுப்பப்படுகிறது.

                இவை ஒரு நாளைக்கு 14 முறை வானவெளியில் சுற்றி வந்து கப்பல்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை அனுப்பும்.கடந்த 1994-ம் ஆண்டு முதல் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை 44 செயற்கை கோள்களுடன் 17 முறை விண்ணில் அனுப்பியது. அவற்றில் 16 முறை வெற்றியடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குழுவினர் மிகவும் கவனமாக செயல்பட்டு பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட்டை உருவாக்கியிருந்தனர்.
 

Read more »

Slow learners forcibly sent out of schools

CUDDALORE: 

          The Education Department's directive that no student should be detained and everyone should be promoted up to Standard VIII is being violated with impunity by certain schools, according to Equal Education-Tamil Nadu, a service organisation.

           In a representation sent to the Director of School Education, the Cuddalore chapter office-bearers, M. Nizamudeen and R.V. Lenin, president and secretary, said all schools, including private, aided, matriculation and government-run schools, are bound by the directive. 
      
          However, certain school managements did not want to keep the slow-learners on their rolls, fearing that they could not produce cent per cent results. These schools usually call up the parents of such students and tell them to submit requisition letters seeking transfer certificates. If the parents refuse to oblige, they are made to fall in line by threatening that their wards would not be promoted, and, adverse remarks made on their transfer certificates.

       It was tantamount to compulsory expulsion of students and violation of the provisions of the Right to Education Act. Most of the students were studying in the same schools from kindergarten level and, therefore, if there were shortcomings in their learning ability, the onus was on the schools to rectify them through special coaching. Instead of correcting their teaching methodology, blaming the students and sending them out was objectionable.
What was disconcerting was that even certain government schools adopted such an arbitrary practice, fearing transfer of teachers and headmasters who might show poor results.

           Therefore, to eliminate such unhealthy practices, the forum suggested proper invigilation on the part of the Chief Educational Officers to verify whether the requests for transfer certificates were genuine or given under duress. If it had come to the notice of the Chief Educational Officers that an element of compulsion was involved in the issuance of transfer certificates, stringent action should be taken against those schools. Mr. Nizamudeen and Mr. Lenin also appealed to the parents that if they had any such complaint, they could call 9843943932 and 9500200094.

           Sources in the Educational Department told The Hindu that many such complaints were received over phone and, hence, a circular had been sent to all schools saying that if any deviation is noticed in regard to issuance of transfer certificate or giving promotion to students, approval would be withheld for release of the results.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior