உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 26, 2010

பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 2 சிறுவர்கள் காயம்


பண்ருட்டி : 

               பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில், இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாலவிகார் பள்ளி வேன் நேற்று மாலை 4.15 மணியளவில், 20 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு திருவதிகைக்குச் சென்றது. திருவதிகை செட்டிப்பட்டறை பாதையில் சென்ற போது, சாலையின் ஓரம் டயர் சிக்கியதால் வேன் கவிழ்ந்தது. வேனில் சென்ற முத்துகிருஷ்ணாபுரம் திலீபன்(6), விக்னேஷ்(6) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Read more »

மரத்தில் ஏறி ஆயுள் கைதிகள் தற்கொலை மிரட்டல் :கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு




கடலூர் : 
          
               கடலூர் மத்திய சிறையில், ஆயுள் கைதிகள் மூன்று பேர் அடுத்தடுத்து  கட்டடம் மற்றும் மரத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 734 பேர் உள்ளனர். தண்டனை கைதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. 

                     வெளியிலிருந்து உணவு மற்றும் தின்பண்டங்கள் கொண்டு வர தடை விதித்ததற்கு, கைதிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி கைதிகளுக்கு வழங்கிய உணவில் பல்லி இறந்து கிடந்தது. இதுகுறித்து ஆயுள் கைதிகளான மிட்டாய் சுரேஷ், பாம் கணேசன், பிரகாஷ் ஆகியோர் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். தரமான உணவு வழங்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக, மேலும் சில ஆயுள் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுள் கைதிகள், நேற்று முன்தினம் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

                         இதனைக் கண்டித்து, நேற்று காலை 6.45 மணிக்கு சென்னையைச் சேர்ந்த ஆயுள் கைதி கண்ணன் (28) சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி அங்கிருந்து கட்டடத்தின் உச்சிக்கு சென்று, ""தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்ட ஆயுள் கைதிகளை பொது வார்டிற்கு மாற்ற வேண்டும்; சரியான அளவில் உணவு வழங்க வேண்டும்'' என, கோஷம் எழுப்பி, தன்னைத் தானே பிளேடால் கிழித்து, தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி காலை 10.30 மணிக்கு கட்டடத்தில் இருந்து கீழே இறக்கினர். அவர் உடலில் பல இடங்களில் பிளேடால் கிழித்த காயம் இருந்ததால் சிறை மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

                             இந்த பரபரப்பு அடங்கிய சற்று நேரத்தில், சென்னையைச் சேர்ந்த ஆயுள் கைதி  மகேஷ் (28), திட்டக்குடி சங்கர் என்கிற ஆணி சங்கர் (24) ஆகியோர் இதே கோரிக்கையை வலியுறுத்தி, காலை 11 மணிக்கு சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தின் உச்சியில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர். மீண்டும் சிறையில் பரபரப்பும் பதட்டமும் உண்டானது. தகவலறிந்த கடலூர் தாசில்தார் மோகன், டி.எஸ்.பி., மகேஷ்வரன், சிறை கண்காணிப்பாளர் ஆனந்த், ஜெயிலர் வேணுகோபால் ஆகியோர் மரத்தில் ஏறி மிரட்டிய கைதிகளை சமாதானப்படுத்தியதால், 12.15 மணிக்கு கீழே இறங்கினர்.  "சிறையில் சாப்பாடு ஒழுங்காக தருவதில்லை. அடித்து துன்புறுத்துகின்றனர்' என, தாசில்தாரிடம் கைதிகள் புகார் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்தார். இதனையடுத்து அதிகாரிகளின் விசாரணை மதியம் 2 மணிக்கு மேலும் தொடர்ந்தது.

                                இந்நிலையில், மாலை 3.30 மணிக்கு ஆர்.டி.ஓ., முருகேசன் சிறைக்குச் சென்று கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, பார்வையாளர்கள், சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை பார்க்க அனுமதிக்கக் கோரி சிறைக் காவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ.,வின் சிறப்பு அனுமதி பெற்று, மாலை 5.05 மணிக்கு பார்வையாளர்கள், கைதிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் மாலை 6.20 மணிக்கு வெளியேற்றப்பட்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுறுக்குமடி வலைகளுக்கு 4 மாதங்கள் ஓய்வு


கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் சுறுக்குமடி வலைகளுக்கு 4 மாதம் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  
 
                 கடலூர் மாவட்டத்தில் 50 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. 1000-க்கும் மேற்பட்ட பெரிய விசைப் படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன.  மாவட்டத்தில் மீன்பிடிக்க பெரும்பாலும் இழுவை வலைகளே பயன்படுத்தப்படுகின்றன. 100 படகுகள் சுறுக்குமடி வலைகளைப் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் சுறுக்குமடி வலைகள் தடைசெய்யப்பட்டு உள்ளன. மிகச் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, அந்த வலைகள் வாரிக் கொண்டு போய்விடும். எனவே மற்றவர்களுக்கு மீன்கள் கிடைக்காது போய்விடும் என்பதால் சுறுக்குமடி வலை தடை செய்யப்பட்டு உள்ளது.  
                  சுறுக்குமடி வலைகளின் விலை |20 லட்சம் முதல் |30 லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள் மீனவர்கள். இவற்றைப் பயன்படுத்தும் விசைப் படகுகளின் விலை 40 லட்சத்துக்கு மேல். சுறுக்குமடி வலை தமிழகத்தில் தடை செய்யப்பட்டு இருந்த போதிலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராம பஞ்சாயத்துக்குள் கூடிப் பேசி, அவற்றை எந்தெந்த மாதங்களில் எந்த இடங்களில் மட்டும் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.  
                   அந்த ஒப்பந்தத்தின்படி அக்டோபர் மாதம் முதல் 4 மாதங்கள் சுறுக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று தடை உள்ளது. இந்த மாதங்களில் மீன் மிகவும் குறைவாகக் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே சில நாள்களாக சுறுக்குமடி வலைகள் அனைத்தும், விசைப் படகுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, லாரிகளில் ஏற்றப்பட்டு மீனவர்களின் இருப்பிடங்களுக்கும், வலைகளைப் பழுதுபார்க்கும் கூடங்களுக்கும் கொண்டு போகப்பட்டு வருகின்றன. இந்த வலைகளைப் பழுது பார்க்க, 3 மாதங்களுக்கு மேல் தேவைப்படும் என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.  
                     கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களாக மீன்கள் கிடைப்பது, வழக்கத்தைவிட மிகவும் குறைந்துவிட்டதாக மீனவர்கள் கூறுகிறார்கள். பல ரக மீன்களை 5 ஆண்டுகளாக, கடலூர் கடல் பகுதிகளில் இருந்து முற்றிலும் மறைந்துபோய் விட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.  இதனால் கடலூர் மாவட்ட அங்காடிகளில் மீன்கள் விலை அபரிமிதமாக உயர்ந்து விட்டன. அதே நேரத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.  
இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், 

                    கடலூர் மாவட்ட கடல் பகுதிகளில் மீன் வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கிழங்கா, சுதும்பு, கத்தள, சாவாளை உள்ளிட்ட பல ரக மீன்கள் காணாமல் போய்விட்டன. கடல் இறால் கிடைப்பதும் மிகவும் குறைந்துவிட்டது.  கடந்த ஆண்டு இதே மாதத்தில் கடலூரில் இருந்து 100 டன் மீன்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டு 3 டன்கள் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.  
                          கடலூர் பகுதியில் ரசாயனத் தொழிற்சாலைகளின் திரவக் கழிவுகள் கோடிக்கணக்கான லிட்டர் நாள்தோறும் கடலில் கலப்பதால், சுமார் 2 கி.மீ. தூரத்துக்குள் மீன்களே இல்லாமல் போய்விட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிட்டது. நுகர்வோருக்கு மீன்களின் விலை உயர்ந்து விட்டது என்றார்.

Read more »

என்எல்சி தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் நோட்டீஸ்


 
நெய்வேலி:
 
                   என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களில் தொமுச தவிர்த்த இதர 8 தொழிற்சங்கங்கள் என்எல்சி நிர்வாகத்திடம் திங்கள்கிழமை ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியுள்ளன. 
 
                  சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 35 நாள்களுக்கும் மேலாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளன.  அதன்படி அதிமுக தொழிற்சங்கம், ஹிந்து மஸ்தூர் சபா, பாரதிய மஸ்தூர் சங்கம், பாமக, தேமுதிக தொழிற்சங்கம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் என்எல்சி நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிவிப்புக் கடிதத்தை நிர்வாகத்துறை துணைப் பொதுமேலாளர் பெரியசாமியிடம் வழங்கியுள்ளன. 
 
                    இதையடுத்து 15 நாள்கள் கழித்து மேற்கண்ட தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட நேரிடும். என்எல்சியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் பாமக தொழிற்சங்கமும், அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்களும் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுச ஸ்டிரைக் நோட்டீஸ் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

முள்வேலி சித்ரவதை முகாமைப் போல் என்.எல்.சி. தொழிலாளர்கள் அவதி: தா. பாண்டியன்


 
 
                             இலங்கையில் உள்ள ராஜபட்ச அரசின் முள்வேலி சித்ரவதை முகாமை போல் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் குற்றம்சாட்டினார்.  
 
விழுப்புரத்தில் திங்கள்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறியது: 
 
                       நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 33 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகால கோரிக்கைகளை ஜனநாயக முறையில் வலியுறுத்தி வருகின்றனர்.  அவர்களின் கோரிக்கையை அந்த சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஆளும் கட்சியால் நடத்தப்படும் தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார்கள். அதை தொழிலாளர்கள் நிராகரித்து விட்டனர்.  
 
              தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதிகளை அழைத்து தீர்வு காண்பதற்கு பதிலாக, அவர்களை மிரட்டி பணியவைக்க, தமிழக அரசு காவல்துறையின் மூலம், அவர்களின் வீடுகளில் நுழைந்து, பெண்கள், குழந்தைகளை துன்புறுத்தி, அவமதித்துள்ளனர்.  பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு பதிலாக நூற்றுக்கணக்கான பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனநாயகப் போராட்டத்தை தடை செய்வது, முடக்குவதிலேயே அரசு முழுக்கவனம் செலுத்துகிறது. 
 
                     தொழிலாளர்களின் பிரச்னை குறித்து மக்களவை உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா தலைமையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிரதமர், சுரங்கத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை விளக்கினர்.  இருந்தும் இதுவரை திட்டவட்டமான, தெளிவான தீர்வுக்கான வழியை தெரிவிக்கவில்லை. எனவே தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை.  வரும் 27-ம் தேதி ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. நீங்கலாக அனைத்துக் கட்சிகளும் இதில் கலந்து கொள்கின்றன. 
 
                   இதுவரை முதல்வர் இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். தொழிலாளர்களுக்கு எதிராகவே திமுக அரசு நடந்து கொண்டிருக்கிறது என்றார்.  பேட்டியின்போது, மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன், கடலூர் மாவட்டச் செயலர் டி. மணிவாசகம், ஏஐடியுசி மாநிலச் செயலர் ஜே. லட்சுமணன், கம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்டச் செயலர் ஏ.வி. ஸ்டாலின்மணி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலர் ஆ. இன்பஒளி, கடலூர் மாவட்டச் செயலர் எம். சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

வண்ணத்துப் பூச்சியினத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும்: துணைவேந்தர்


 

                       வண்ணத்துப் பூச்சியினத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் வலியுறுத்தினார்.  

பாரதியார் பல்கலை.யில் திங்கள்கிழமை வண்ணத்துப் பூச்சிகள் பாதுகாப்பு குறித்த பயிலரங்கைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:  

                   வேளாண்மையிலும், சூழல் பாதுகாப்பிலும் பூச்சிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு சில வகைகளைக்காட்டிலும் பெரும்பாலான பூச்சிகள் மனிதர்களுக்கு நன்மை செய்யக் கூடியவையாகவே இருக்கின்றன.  வண்ணத்துப் பூச்சி, விட்டில் பூச்சி போன்றவை, தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன். இந்தியாவில் ஏறத்தாழ 1,500 வண்ணத்துப் பூச்சி வகைகள் இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வண்ணத்துப் பூச்சிகள் அதிகளவில் காணப்படுகிறது.  ஆனால், தற்போது மாறி வரும் சூழல் காரணங்களால் வண்ணத்துப் பூச்சிகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. 

                     விளை நிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், காடுகள் அழிப்பு ஆகியன பூச்சிகளின் அழிவுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.  அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக ஏராளமான விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது.  இத்தகைய உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு அறிவியல் ரீதியாக ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  

                    இங்கிலாந்து சுற்றுச்சூழல் மையம் பால் வாரிங்: சுற்றுச்சூழல் மாற்றம் காரணமாக வண்ணத்துப் பூச்சி இனங்கள் அழிந்து கொண்டே செல்கிறது. இதேநிலை நீடித்தால், வரும் காலங்களில் பூச்சியினங்களைப் பார்க்க முடியாத சூழல் ஏற்படக் கூடும்.  இந்த நிலையை எப்படி மாற்றுவது என்பதற்கான தீர்வை இதுபோன்ற பயிலரங்களின் மூலமாக முடிவு செய்ய வேண்டும்.  

ஹாங்காங் தாவரவியல் பூங்கா விஞ்ஞானி ரோஜர் ஹென்ரிக்: 

                         நகரமயமாக்கல், விவசாய நிலங்கள் குறைவது போன்றவற்றால் பூச்சியினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் பெரும்பாலான பூச்சியினங்கள் அழிந்துவிட்டன.  இந்தியா மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளில் இப் பிரச்னை இருக்கிறது. தற்போது ஆசிய நாடுகளில் வண்ணத்துப் பூச்சிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  அறிவியல் சார்ந்த முயற்சிகள், மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வனவளத்தைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலமாகத் தான் பூச்சியினங்களை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும் என்றார். பல்கலை.யின் உயிரி அறிவியல் துறையக இயக்குநர் எஸ்.மணியன், விலங்கியல் துறைத் தலைவர் கே.சசிகலா உள்ளிட்டோர் பேசினர்

Read more »

கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி துப்புரவுப் பணி: தலைமை ஆசிரியை வெளியிட்ட விளக்கக் கடிதம்

கடலூர்:

                   விடுதி மாணவிகளே துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர் என்று, கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை விளக்கம் அளித்து உள்ளார். 22-10-2010 தினமணியில் இப்பள்ளியில் மாணவிகள் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட புகைப்படம் வெளியாகி இருந்தது. 

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை வெளியிட்ட விளக்கக் கடிதம்:

                      எங்கள் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சாரணியர் இயக்கம், தேசிய பசுமைப்படை, சாலைப் பாதுகாப்பு அமைப்பு, நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், செஞ்சுருள் இயக்கம், மாதிரிப் நாடாளுமன்றம் போன்ற அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சமூகசேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, போக்குவரத்துக் கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகள் குறித்து மாணவிகளுக்குக் கற்பித்து வருகிறோம்.

                       உள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்கள் பணிகளை தாங்களே செய்து கொள்ளவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும், தாங்கள் தங்கி இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து இருக்கவும், சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விடுதி மாணவிகள் அவர்களின் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, புகைப்படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது என்று, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read more »

கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கடலூர் மாவட்டத்துக்கு 98 கோடி விடுவிப்பு

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்ற, இதுவரை 97.94 கோடி நிதி விடுவிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                    கலைஞர் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்துக்கு 2010-11-ம் ஆண்டில் 26,119 வீடுகள் அனுமதிக்கப்பட்டு அவைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு முதல் தவணையாக |48.97 கோடியும் 2-வது தவணையாக |48.97 கோடியும், தமிழக அரசால் விடுவிக்கப்பட்டு உள்ளது.பெறப்படும் நிதி பயனாளிகளுக்குக் கிடைக்க ஏதுவாக, ஊராட்சிகளுக்கு உடனே விடுவிக்கப்படும்.

                    கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் 2010-11-ம் ஆண்டுக்கான வீடுகள் அனைத்தையும் விரைந்து கட்டி முடிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பயனாளிகள் தொய்வின்றிக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

உள்ளாட்சி தினவிழா சிறப்பாகக் கொண்டாட கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர்:

                   ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 1-11-2010 அன்று, உள்ளாட்சி தினவிழா சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சியில் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையிலும், இவற்றின் பணிகளை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், உள்ளாட்சி தினவிழாவை 1-11-2010 அன்று சிறப்பாகக் கொண்டாடுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.உள்ளாட்சி தினத்தன்று, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து, சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அமைத்தல், நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

                       விழிப்புணர்வுப் பேரணிகள், கருத்தரங்குகள், மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேசிய மாணவர் சேவை இயக்கம், மற்றும் தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடன், ஊராட்சி மன்றக் கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், நீரேற்று நிலையங்கள் போன்ற கட்டடங்களை சுத்தம் செய்தல், வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாணவ மாணவியருக்கு உள்ளாட்சி நிர்வாகம் குறித்து பேச்சுப் போட்டி, பொது அறிவுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Read more »

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிதம்பரம்:

                 சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் அ.ராமராஜு வெளியிட்டார்.

                    இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் எம்.காமராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் தில்லைகோவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.1-1-2011க்குள் 18 வயது பூர்த்தியடைந்த விடுபட்ட வாக்காளர்கள் சேருவதற்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி சட்டமன்றத் தொகுதி வரைவு வாக்காளர்கள் பட்டியல்கள் கோட்டாட்சியர் அலுவலகம், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளன.

                      பெயர் விடுபட்டவர்கள், புதிதாக சேருபவர்கள் படிவம் எண் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து 9-11-2010-க்குள் வழங்க வேண்டும். 5-1-2011-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 

வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்கள் விவரம்: 

புவனகிரி-  2,00,164, 
சிதம்பரம்-1,81,522, 
காட்டுமன்னார்கோவில்- 1,72,644.

Read more »

உடற் கல்வி ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி துவக்கம்

கடலூர் : 

                     உடற் கல்வி ஆசிரியர்களுக்கான நான்கு நாள் நடைபெறும் திறன் வளர் பயிற்சி கடலூரில் நேற்று துவங்கியது.

                    வடலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் மற்றும் பள்ளி கல்வித் துறை சார்பில் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியர்களுக்கான திறன் வளர் பயிற்சி வகுப்பு நேற்று (25ம் தேதி) துவங்கியது. வரும் 28ம் தேதி வரை நான்கு நாட்கள் பயிற்சி நடக்கிறது.

              மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். பயிற்சி வகுப்பை மாநில அளவில் பயிற்சி பெற்ற திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள் தேவசேனாதிபதி, புதுப் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஜோதிபிரியா பயிற்சி அளித்தனர்.

                   மாவட்ட கல்வி அலுவலர் பூங்கொடி, பள்ளி முதல்வர் ஆக்னல், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முத்து கிருஷ் ணன், துணை முதல்வர் செல்வராசு பங்கேற்றனர்.


Read more »

சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடப்பணி மந்தம் மாணவ, மாணவிகள் அவதி

நடுவீரப்பட்டு : 

               சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

            பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் படிக்க போதிய இட வசதி இல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் பள்ளியில் கூடுதல் மாணவ, மாணவிகள் படிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் அரசு நபார்டு திட்டத்தின் கீழ் 70 லட்சம் மதிப்பில் 9 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறை ஆகியவை கட்ட அனுமதி அளித்தது. இதற்கான கட்டடப்பணி கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கியது. பணிகள் துவங்கிய சில நாட்களில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

                    மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் தற்காலிகமாக பாடம் நடத்தப்படுகிறது. மழை பெய்தால் வகுப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கக்கூடிய நிலை உள்ளது. அதிகாரிகள் பள்ளியின் கட்டடப் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

சிதம்பரம் : 

                  சிதம்பரம் பஸ் நிலையத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பஸ்கள் நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்துவதால்  பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தக் கட்டைக்கு எதிரே மேல் கூரையில் ஊர் பெயர் எழுதப்பட்டு அந்தந்த கட்டைகளில் பஸ்கள் நிறுத்த வேண்டும். சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்ட இவ்வசதியை டிரைவர்கள் பின்பற்றுவதில்லை.

                      அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டைகளில் பஸ்சை நிறுத்தாமல் பஸ் நிலையத்தில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த பஸ், எங்கு நிற்கிறது என தெரியாமல் பயணிகள் பஸ் நிலையம் முழுவதும் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. பஸ்களை முறையாக ஒதுக்கப்பட்ட அந்தந்த ஊர் கட்டைகளில் நிறுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியும் கூட டிரைவர்கள் பின்பற்றுவதில்லை. 

                   குறிப்பாக கடலூர், காட்டுமன்னார் கோவில், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் எப்போதும் தாறுமாறாகவே நிற்கிறது. பயணிகள் அவதியை தவிர்க்கவும், எளிதாக பஸ் ஏறவும் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

Cuddalore District Collector warns against duplicate entries in electoral rolls

CUDDALORE: 

              District Collector P.Seetharaman has warned that any voter who has registered himself or herself in the electoral rolls in more than one place will be prosecuted as provided under Section 31 of the Representation of People Act 1950.

             While releasing the draft electoral rolls here on Monday, the Collector said that it was an offence for any voter to enrol at more than one place either within the same constituency or in another constituency.

Draft rolls displayed

          He further said that following the direction of the Election Commission the draft electoral rolls had been prepared with January 1, 2011 as the eligible date for the new voters and displayed in all taluk offices, municipalities, and designated polling stations.

Special camps

              The Collector said that the last date for receiving applications for inclusion in the electoral rolls is November 9; special camps to be conducted on October 30 (Saturday) and on November 7 (Sunday) and release of the final list on January 5, 2011. Form 6 is meant for the new voters and those who have migrated from one constituency to the other; Form 7 for deletion of names, Form 8 for rectification of errors relating to names, age and photographs, and Form 8 A for those voters who have migrated within the same constituency. The Collector said that bulk applications would not accepted.

Read more »

Prison inmates on fast

CUDDALORE:

             The inmates of the Cuddalore Central Prison have been shunning food for the past two days, ie., on Sunday and Monday.

             It is learnt that as many as 50 inmates developed nausea after a wall lizard was found in the jail food served on Sunday. When three of the inmates, namely Prakash, Bomb Ganesh and Suresh objected to the quality of food, they were allegedly beaten up by the Deputy Jailer and warders.

              Voicing a strong protest, the inmates refused to come out of their cells to take food. Meanwhile, another inmate named Mahesh, with a knife in hand, climbed on to a tree on the jail premises on Monday, threatening to commit suicide if the jail authorities did not give assurance to improve the food quality and take action against the warders and the Deputy Jailer. An official team led by Revenue Divisional Officer Murugesan went to the prison to hold talks with the inmates on Monday.

              When contacted, Jail Superintendent K.Anandan said that since an official inquiry was going on he could not comment on it.

Read more »

Farmers urged to repay bank loans promptly

CUDDALORE:

               Principal District Sessions Judge D.Ramabadhran has called upon farmers to cooperate with banks and pay back loans promptly to avoid getting entangled with the money lenders who are charging usurious rates of interest.

             He was delivering a speech after inaugurating the fully air-conditioned branch of State Bank of India at Palayamkottai in Sri Mushnam block, about 70 km from here, on Monday.
                
              The bank branch would be helpful to the farmers. If the farmers promptly repaid the loans the bankers would deliver their services at their doorsteps. However, the judge said, it was a matter of concern that an opinion was gaining ground that the bank loans need not be repaid.
                
                Lending The loanees should get over such a notion, for, only the financially sound banks could continue with their lending activity. He congratulated the bankers for having created an ambience that rivalled even that of the urban branches.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior