உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 08, 2010

கடலூர் நகராட்சிக்கு மத்திய அரசின் மதிப்பெண்

கடலூர்:
              
             சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரம் கடலூர். 500 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த நகரம் இது.

                ஆங்கிலேயர்கள் வணிகத்துக்காகத் தமிழகத்துக்குள் நுழைந்தபோது அமைத்துக் கொண்ட முதல் தலைநகரம் கடலூர். அவர்கள் கட்டிய முதல் கோட்டை, கடலூர் புனித டேவிட் கோட்டை. சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் இருப்பதால், அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களுக்காக மாநிலத் தலைமை அலுவலகங்களைத் தொடர்பு கொள்வது கூட, கடலூர் மாவட்ட நிர்வாகத் தலைவர்களுக்கு எளிதான விஷயம்.

               நூற்றுக்கணக்கான கோடி முதலீட்டில் ரசாயனத் தொழிற்சாலைகளை, பன்னாட்டு நிறுவனங்கள் அமைத்துக் கொள்ள மத்திய அரசு, தாராளமாக இடம் ஒதுக்கி இருக்கும் நிலங்கள், கடலூரை அடுத்துள்ள கடற்கரையில்தான் அமைந்துள்ளன. இத்தகைய புகழ்மிக்க நகரம் சுகாதாரக் கேட்டின் விளிம்பில் உள்ளது.கடலூர் மக்கள் ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரியாகச் செலுத்துகிறார்கள். ஆனால் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெறுவதில் கடலூர் மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

                மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அண்மையில் இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கும், இந்திய நகராட்சிகளின் சுகாதாரம் மற்றும் குடிநீர் தரம் பற்றிய அறிக்கையில் (ரிப்போர்ட் கார்டு) கடலூர் நகராட்சிக்கு அளித்து இருக்கும் சான்றிதழ் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.அந்த அறிக்கையில் ஒவ்வொரு, இனங்களிலும் 

கடலூர் நகராட்சிக்கு அளித்திருக்கும் மதிப்பெண் கீழே தரப்படுகிறது 

(அடைப்புக் குறிக்குள் இருப்பது பெறவேண்டிய மொத்த மதிப்பெண்):
நகரில் ஏழைகளுக்குக் கிடைத்துள்ள தனிப்பட்ட மற்றும் சமூக கழிப்பிட  சுகாதார வசதிகள்: 0 (4). 

நகருக்குள் வந்து போகும் மக்கள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த மக்களுக்குக் கிடைத்திருக்கும் கழிப்பறை வசதிகள்: 1.48 (4).

நகரில் திறந்தவெளிகளை கழிப்பிடமாகப் பயன்படுத்தாமல் இருப்பது: 0 (4).

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றி இருப்பது: 4 (4). 

மனிதக் கழிவுகளை பாதுகாப்புடன் சேகரிப்பது: 3 (6). 

நகரில் உற்பத்தியாகும் மிக மோசமான கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்புடன் வெளியேற்றுவதல்: 0 (6). 

நகரில் உற்பத்தியாகும் நடுத்தர கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்புடன் வெளியேற்றுதல்: 0 (3).

நகரில் உற்பத்தியாகும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து உபயோகித்தல்: 0 (3). 

மழைநீரை பாதுகாப்புடன் வெளியேற்றுதல்: 1 (3). 

மொத்த திடக் கழிவுகளையும் அவ்வப்போது சேகரித்தல்: 1 (4). 

மொத்த திடக்கழிவுகளையும் சுத்திகரித்து பாதுப்புடன் அகற்றுதல்: 0 (4).

நகரக் கழிவுகளால் சுற்றுப் புறங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருத்தல்: 0 (5). 

திறந்தவெளிகள் கழிப்பிடமாக மாற்றுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள்: 0 (4). 

கழிவுகள் அகற்றும் அமைப்புகளின் சரியான செயல்பாடுகள்: 0 (5). 

மழைநீர் அகற்றும் அமைப்புகள் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள்: 2 (4).

நகர மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரின் தரம்: 1.75 (7). 

நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீராதாரங்களின் தரம்: 0 (7). 

தண்ணீரால் உண்டாகும் நோய்களை கட்டுப் படுத்தும் நடவடிக்கைகள்: 3 (6).

                 ஏனைய நகராட்சிகளுக்கு வழங்குவதைப் போல் கடலூர் நகராட்சிக்கும் அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. இருப்பினும் இந்த அவலநிலை ஏன் என்று தெரியவில்லை.சுனாமி நிவாரணப் பணிகளுக்காக மட்டும், கடலூர் நகராட்சிக்கு ரூ. 35 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மட்டும் கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 2 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுளளது. ஆனால் அவை எல்லாம் பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கின்றன.

               கடலூர் நகராட்சிக்கு வரவேண்டிய வரிபாக்கி மட்டும் ரூ. 17 கோடி என்று அண்மையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வரி பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. தற்போது வசூலிக்கப்படும் வரி முழுவதும் நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியமாகவும், மின் கட்டணம் மற்றும் குடிநீர் திட்டப் பராமரிப்புப் பணிகளுக்குச் சரியாகிவிடுவதாகக் கூறப்படுகிறது.இதனால் பொதுநிதியில் பணம் இல்லை. பொதுநிதியில் பணம் இருந்தால்தான் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளமுடியும் என்கிறது நகாராட்சி நிர்வாகம். சில சிறப்பு திட்டங்களுக்கு அரசு நிதி வழங்குகிறது என்றும் நகராட்சி தெரிவிக்கிறது.

Read more »

ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது "மாற்றம் பெறாத மருவாய்"

நெய்வேலி:

               ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது நெய்வேலியை அடுத்த மருவாய் தேசிய நெடுஞ்சாலை சேதமடைவதும், அதையொட்டி விளை நிலங்கள் பாதிக்கப்படுவதும்,  பின்னர் அவற்றை ஆட்சியில் உள்ளவர்கள் பார்வையிடுவது என்பது தொடர் கதையாக தான் இருக்கிறதே தவிர, சேதமடைந்த பகுதியில் நிரந்தர தீர்வுக்கு யாரும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.

                கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மருவாய் பகுதியில், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள மருவாய் தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டு கன மழையின்போது பாலத்தின் மீது தண்ணீர் செல்வது தொடர் கதையாகத்தான் இருந்து வருகிறது. 2005-ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பரவனாற்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மருவாய் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த பல கிராமங்கள் நீரில் மூழ்கின, பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானது.

              இதனால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுóஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டு சாலையும் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவ்விடத்தைப் பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 2 ஆயிரம் வழங்கினார்.நிவாரணத் தொகை வழங்கியதோடு சரி, அதன் பின் 2006-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி உருவானது. 

               அத்துடன் இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சம்பிரதாயத்துக்காக மேற்கொள்ளப்பட்டதோடு நின்று போனது. அதன்பின் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றாலும், ஓரளவுக்கு மழை பெய்த போதிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த கன மழையால் மீண்டும் மருவாய் தரைப்பாலம் அரித்துச் செல்லப்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. 

                அப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.ஆனால் அப்பகுதி மக்களோ ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில் சேதம் ஏற்படுவதும் ஆட்சியில் உள்ளவர்கள் ஆறுதலுக்காக வந்து பார்வையிடுவதோடு சரி. நிரந்தரத் தீர்வு என்பது கானல் நீராகிவிட்டது என்கின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் கூறுகையில், 

               கடந்த முறை ஜெயலலிதா வந்தார் பார்த்தார். நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் வழங்கினார். அதைத் தொடர்ந்து அப்போது எதிர்க்கட்சியில் இருந்த இந்நாள் முதல்வர் கருணாநிதியும், தற்போதைய துணை முதல்வர் ஸ்டாலினும் வந்து பார்த்துச் சென்றனர். அதன்பின் 2006 மே மாதம் நடந்த தேர்தலையடுத்து கருணாநிதி முதல்வரானார். முதல்வரான பின் கருணாநிதியும் மருவாயை மறந்து விட்டார். துணை முதல்வர் ஸ்டாலினும் மறந்து விட்டார். 

                   தற்போது 5 ஆண்டு முடிவில் ஆட்சியிலிருக்கும் துணை முதல்வர் பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவராவது இதற்கு நிரந்தர தீர்வு காண்பார் என்றால், எங்களுக்கு அதில் துளியும் நம்பிக்கை இல்லை. காரணம் இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.  இவர்கள் தேர்தல் வேலையை பார்ப்பார்களா அல்லது மருவாயை பார்ப்பார்களா அடுத்து ஆட்சிக்கு வருவோர் யாரோ அப்போதாவது இந்த மருவாய் மாற்றம் பெறுமா என்ற கேள்விகளுடன் காத்திருக்கிறோம் என்றார் ராஜசேகர்.

Read more »

நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில் நண்டுவாக்களிகள் பிடிபட்டன



கடலூர் : 

             கடலூர் நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில், தினமலர் செய்தி எதிரொலியால் புதர்கள் அகற்றப்பட்ட போது நண்டுவாக்களி மற்றும் பாம்புகள் பிடிபட்டன.

              கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் கோட்டப் பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கோட்டப் பொறியாளர் அலுவலகம் பழமையான கட்டடம் என்பதாலும், மேல் தளத்தில் அதிகளவில் இலைச் சருகுகள் இருந்ததாலும் தண்ணீர் தேங்கி கட்டடத்தினுள் கசிந்தது. மேலும், இக்கட்டடத்தைச் சுற்றிலும் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தன. 

                   புதர்களில் இருந்து வரும் பாம்புகள் அலுவலகத்தில் படையெடுக்க துவங்கியதால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சத்திலேயே பணிபுரிந்து வந்தனர். இதையடுத்து, பொறியாளர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் இருந்த மரங்கள், செடி, கொடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின், பாம்புகளை பிடிக்க கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பூனம் சந்த் வரவழைக்கப்பட்டார். இவர் எட்டு காளியாங்குட்டி பாம்புகளை பிடித்தார். இவை அனைத்தும் இரண்டரை அடி முதல் மூன்றடி நீளம் வரை இருந்தன. மேலும், 40 நண்டுவாக்களிகளும் பிடிபட்டன.

Read more »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு: 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

               வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை, ஏழு லட்சத்து 30 ஆயிரத்து 628 மாணவர்கள் எழுதுகின்றனர். கடந்த தேர்வை விட, 40 ஆயிரத்து 941 பேர் கூடுதலாக தேர்வில் பங்கேற்கின்றனர்.

           தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வை நடத்துவதற்கான பணிகளை, தேர்வுத்துறை மும்முரமாக கவனித்து வருகிறது. இதற்கிடையே, மாவட்டம் முழுவதும் இருந்து தேர்வெழுதும் மாணவ, மாணவியர் விவரம் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன. 

               அதன்படி, இந்த தேர்வை ஏழு லட்சத்து 30 ஆயிரத்து 628 பேர் எழுதுகின்றனர். இதில், மாணவர்கள் மூன்று லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர்; மாணவியர் மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 200 பேர். கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வை, ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 பேர் எழுதினர். இவர்களில், மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 381 பேர் மாணவர்கள்; மூன்று லட்சத்து 67 ஆயிரத்து 306 பேர் மாணவியர். 

                       கடந்த தேர்வை விட, மாணவர்கள் 16 ஆயிரத்து 47 பேரும், மாணவியர் 24 ஆயிரத்து 894 பேரும் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். ஒட்டு மொத்தத்தில், 40 ஆயிரத்து 941 பேர் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய வரும் 11ம் தேதி நேர்காணல்

கடலூர் : 

             108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர் காணல் வரும் 11ம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. 

              தமிழ்நாடு அரசின் இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்தின் 108 ஆம்புலன்ஸ் சேவையும், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தும் நேர்காணல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 11ம் தேதி நடக்கிறது. இந்த நேர்காணலில் 108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான அவசர சிகிச்சை டெக்னிஷியன், டிரைவர் பதவிக்கும் தேர்வு நடக்கிறது. பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, உயிர் வேதியியல் பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள். 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் அசல் கல்வி, அனுபவ சான்றுடன் வர வேண்டும்.

                     அதேப்போன்று 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 5 ஆண்டு முன் அனுபவம் உள்ள 25 வயது முதல் 38 வயது வரை உள்ள டிரைவர்கள் தங்களது கல்வி, அனுபவ சான்றுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு நியமனம் வழங்கப்படும். இவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலர் வைத்தியநாதன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்லூரிகளில் கல்வி உதவி தொகை

கடலூர் :

             கடலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               கடலூர் மாவட்டத்தில் 2010 - 11ம் ஆண்டு கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் அனுப்பிய விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. தகுதியான கோப்புகளுக்கு வரவோலைகள் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

                எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை கோரி மனு செய்தவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அதிõரி கூறியுள்ளார். 

              வங்கக் கடலில் உருவான அடுத்தடுத்த மூன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  கடந்த 12 நாட்களுக்கு மேல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தனியார் மற்றும் அரசு பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் கல்வித்துறை அரையாண்டு தேர்வை கடந்த 9ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை முடிக்க ஏற்கனவே திட்டமிட்டு கேள்வித்தாள் தயார் செய்தது. 

                இந்த கேள்வித்தாள்கள் குறிப்பாக 9, 10ம் வகுப்புகளுக்கு புத்தகம் முழுவதும் முடிக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஆனால் பள்ளிகள் எதிர்பாராமல் விடுமுறை விடப்பட்டதால் பாடங்கள் முழுவதையும் ஆசிரியர்களால் நடத்தி முடிக்க முடியவில்லை. சிறப்பு வகுப்பும் நடத்தவும் முடியாத நிலையில் உள்ளனர்.  பாடங்களை முடிக்காமல் தேர்வு நடத்த முடியாது என்பதால் தலைமையாசிரியர்கள் தேர்வை ஒத்தி வைக்க முதன்மைக்கல்வி அதிகாரியிடம் வலியுறுத்தினர். 

               பள்ளிகள் வேலை நாட்கள் குறைந்த பட்சம் 200 முதல் 202 நாட்கள் இருக்க வேண்டும் என்பதால் வரும் 20ம் தேதி தேர்வு துவங்கி 31ம் தேதி வரை நடத்தி முடித்த விடலாம் என  அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் வழக்கத்தைவிட 10 நாட்கள் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி கூறினார்.

Read more »

பெண்ணாடத்தில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

 
திட்டக்குடி:
 
              பெண்ணாடம் பேரூராட்சி மேற்கு ரத வீதி, நகர பகுதி முழுவதையும் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பிரதான சாலையாகும். இந்த சாலை வழியாகத்தான் வடகரை, கோனூர், திருமலைஅகரம் உட்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.

                 நகரின் முக்கிய கோவில்களான விநாயகர் கோவில், பெருமாள் கோவில், சர்ச் ஆகிய பகுதிகளுக்கும் இந்த வீதி வழியாகத்தான் செல்ல வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வீதியில் தொடர் மழையால் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வெவ்வேறு தெருக்கள் வழியாகத்தான் தற்போது நெடுஞ்சாலைக்கு வருகின்றனர்.

                நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக தலையிட்டு போதிய வடிகால் வசதிக்கும், சாலை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற தலைவர் அமுதலட்சுமி ஆற்றலரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

Imperative to find alternative to cement, says French expert


Annamalai University Vice Chancellor M.Ramanathan handing over the proceedings of the international workshop on "Geopolymer cement and concrete" to Joseph Davidovits of Geopolymer Institute, France, at Chidambaram on Tuesday. 
 
CUDDALORE: 

            Going by the quantum of carbon-dioxide emission, the Portland cement industry is the highest polluting industry in the world. Therefore, more than the developed countries the developing countries that require enormous quantity of cement for infrastructure face acute pollution problem, according to Joseph Davidovits of Geopolymer Institute, France.

            Hence, it has become imperative to find an alternative to cement, said Mr. Davidovits, popularly known as “Father of Geopolymer technology.” He was participating as chief guest at an international workshop on “Geopolymer cement and concrete” organised by the Department of Civil and Structural Engineering of Annamalai University at Chidambaram on Tuesday.

         He opined that India and France that had now signed many pacts on high-technology aspects could have focussed attention on geopolymer technology too because it could be equated to nanotechnology.

          Mr. Davidovits, who has coined the term ‘geopolymer,' said that although geopolymer technology was considered new it had ancient roots and had been used in the construction of the pyramids at Giza in Egypt.

         The production of one tonne of Portland cement generated one tonne of carbon-dioxide. According to statistics, 1.8 billion tonnes of cement were produced in the world in 2000 and it accounted for 1.8 billion tonnes of carbon-dioxide. In developing countries, particularly China, India and Brazil, there was exponential increase in cement production.

           Any further economic development in these countries would strongly depend upon creation of more infrastructure and production of more cement. On the contrary, cement production remained constant in the Western countries, particularly in the U.S. and European Union.

          The production of one tonne of geopolymer cement would require 3.5 times less energy than that of Portland cement. Therefore, besides deriving cost benefit the geopolymer cement application would also safeguard environment, Mr. Davidovits added. B.Vijaya Rangan of Curtin University of Technology, Perth, Australia, called for transferring the laboratory work on geopolymer to large-scale applications.

            M. Ramanathan, Vice-Chancellor of Annamalai University, said that according to statistics 120 million tonnes of coal were burnt in 380 thermal stations in the country during 2006-2007 that generated 108 million tonnes of fly ash. Hardly 30 million tonnes of fly ash were utilised in the cement and brick industries and the remaining was dumped in ash pond. Using the fly ash in a purposeful manner would also spare vast stretches of land and address the pollution problem, Dr. Ramanathan added.

               P.Paramasivam of National University of Singapore, Singapore, B.Palaniappan, Dean, Faculty of Engineering and Technology, Annamalai University, C.Antony Jeyasehar, Head, Department of Civil and Structural Engineering and chairman of organising committee and S.Thirugnanasambandam, secretary, spoke.

Read more »

Indian Overseas Bank distributes aid to flood victims

CUDDALORE: 

          The Manjakuppam branch of Indian Overseas Bank distributed rice to the flood-affected people here recently.

         Senior Branch Manager S. Kesavan told the reporters that having realized its social responsibility, the bank had extended the help to the people in need. The bank was also propagating the idea of savings among the people.

        The bank had chosen to launch a major drive to broadbase the reach of the banking services during rainy season. Mr Kesavan further said thatthe bank had started the ‘Walk-in Bank' campaign all over the country on December 5 with the objective of meeting the people at their doorstep so as to bring them under the banking services.

           The bank staff, in groups, spread out to the residential, commercial, industrial and agricultural areas to promote the banking habit among the people. Mr Kesavan said that it provided them valuable inputs from the existing customers who had little time to spare at the counters. Those who were desirous of opening bank accounts could do so immediately by filling up the forms and producing the supporting documents for name and address proof. In a single day 100 new accounts were opened through the campaign, Mr Kesavan said.

Read more »

Concrete houses sought for flood-hit families

CUDDALORE: 

           Kattumannarkoil constituency MLA D. Ravikumar has called upon the State government to provide concrete houses under the Kalaignar Housing Scheme to the deserving families which have lost their huts in the floods.

          In a representation handed over to Deputy Chief Minister M.K. Stalin during his visit here on Monday, Mr. Ravikumar said that the entire Cuddalore district, particularly villages in the Kattumannarkoil Assembly constituency, suffered extensive damage to crops and houses.

          Chief Minister M. Karunanidhi's announcement of Rs. 5,000 solatium to damaged houses had come as a consolation to the affected people. However, the MLA demanded a compensation of Rs. 15,000 per hectare of crop losses. Mr. Ravikumar also urged the government to distribute textbooks and uniform to students in the marooned areas, compensation to artisans and fishermen who had lost their livelihood for about a fortnight at a stretch and provide 30 days' work under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme to farm labourers.

            He suggested strengthening of the banks of the Velliangal Odai, the Old Kollidam and the Manavaikkal.

Read more »

Temporary repair of roads soon

CUDDALORE: 

             Steps have been taken to temporarily repair the roads damaged in the floods in Cuddalore district, according to Collector P. Seetharaman. After attending a review meeting at Thittakudi on Tuesday, he told reporters that concerted efforts were being made to bale out stagnant water.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior