உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 25, 2011

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்த கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா




நிறைவு விழாவில், யோகா பயிற்சி செய்து காண்பிக்கும் சிறுவர்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலூரில் 20 நாள்கள் நடந்த கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா
கடலூர்:
 
        தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்த, கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  
 
              கடந்த 2-ம் தேதி முதல் நடைபெற்ற பயிற்சி முகாமில் சிறுவர் சிறுமியர் 160 பேர் கலந்து கொண்டனர். இதுதவிர கடலூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற வீரர்கள் வீராங்கனைகள் 120 பேர் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தங்கி சிறப்புப் பயிற்சி பெற்றனர்.  மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.திருமுகம் தலைமையில் சிறந்த பயிற்சியாளர்கள் இந்தப் பயிற்சிகளை அளித்தனர்.  பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு முட்டை, பால் வழங்கப்பட்டது.  
 
             பயிற்சி முகாம்கள் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட சமூகநல அலுவலர் ஆர். புவனேஸ்வரி தலைமை தாங்கி பயிற்சிகளில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்களையும் சீருடைகளையும் வழங்கினார்.  மேலும் மாநிலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ, மாணவியருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ, மாணவியருக்குத் தலா 6500 வீதம் 22 பேருக்கு ரொக்கப் பரிசுகளையும் புவனேஸ்வரி வழங்கினார்.  யோகா பயிற்சி பெற்றவர்கள் யோகாசனங்கள் செய்து காண்பித்தனர். விளையாட்டுப் பயிற்சியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
 

Read more »

பள்ளிகளிலேயே இணையத்தளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு

            பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்படுகின்றன.

               இந்த சான்றிதழ்களை வேலைவாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். 

 இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  

                 பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு தகுதி உடனடியாகக் கிடைக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாணவ, மாணவியர் நாடுகின்றனர்.  தேர்ச்சிபெற்ற அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கால விரயம், போக்குவரத்து செலவு ஆகியவற்றால் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  இந்தப் பிரச்னை எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டவுடன், அதனைத் தீர்க்கும் வகையில் மதிப்பெண் பட்டியலை பள்ளியில் பெறும் நாளிலேயே, மாணவ, மாணவியர் பயிலுகின்ற பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளேன்.  

             அதன்படி, 2011-ல் பிளஸ் 2 தேர்ச்சியடைந்த அனைத்து மாணவ, மாணவியர்களும் பள்ளியிலிருந்தே தங்களது கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம்.  பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மே 25 (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. மே 25 முதல் 15 நாள்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவ, மாணவியர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.  இவ்வாறு 15 நாள்களில் பதிவு செய்யும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மே 25-ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.  

            இந்தப் பணியை பள்ளிக் கல்வித் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனம் ஆகியவை இணைந்து செய்யும்.  மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்காக வரும்போதே, மாணவ, மாணவியர் தங்களது பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டை, குடும்ப அட்டையின் நகலினை தவறாது எடுத்து வந்து கல்வித் தகுதியையும் பதிவு செய்து கொள்ளலாம்.  அவர்களுக்கான பதிவு எண் பதிவு செய்யும் நாளன்றே வழங்கப்படும்.  பத்தாவது கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் அதற்கான வேலைவாய்ப்பு அடையாள அட்டையினையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். 

               மாற்றுத் திறனாளிகள் இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளியில் பதிவு செய்த பின்னர் தங்கள் முன்னுரிமையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.  படித்த பள்ளியிலிருந்தே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.  புதன்கிழமை முதல் 15 நாள்கள் வரை ஆன்-லைன் பதிவு அமலில் உள்ளதால் இந்த வாய்ப்பை மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.  

 இணையதள முகவரி 










Read more »

கூட்டுறவு மேலாண்மை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கடலூர் : 

             உயர்மட்ட பட்டய கூட்டுறவு மேலாண்மை படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

          சென்னை, அண்ணா நகரில் இயங்கி வரும் நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டிற்கான உயர்மட்ட பட்டய கூட்டுறவு மேலாண்மை படிப்பு வரும் ஜூலை 14ம் தேதி முதல் 2012 மார்ச் 21ம் தேதிவரை நடைபெற உள்ளது. பயிற்சி காலத்தில், கூட்டுறவுத் துறையில் நன்கு முன்னேறிய வெளி மாநிலங்களுக்கு இரண்டு வாரங்கள் அழைத்துச் சென்று, அங்கு கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடு குறித்து விளக்கப்படும். 

              மேலும், ஏதேனும் ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் ஏழு நாட்கள் தங்கி அந்த கூட்டுறவு நிறுவன செயல்பாடு குறித்து திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். இந்த பயிற்சியில் சேர வரும் ஜூன் 1ம் தேதி அன்று 30 வயதிற்குட்பட்டவராகவும், பட்டதாரியாகவும் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம் 10 ஆயிரம் ரூபாயை மூன்று சம தவணைகளில் செலுத்தலாம். 

பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பம் பெற 

முதல்வர், 
நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 
2377-ஏ, அண்ணா நகர், 
சென்னை-40 

             என்ற முகவரிக்கு 100 ரூபாய் "டிடி' அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் விவரம் வேண்டுவோர் 

044-26211423, 044-26210423

             ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Read more »

கிராமங்கள் தோறும் சேவை ரிசர்வ் வங்கி புதிய திட்டம்

கடலூர் : 

           அனைவருக்கும் சேவை கிடைக்க கிராமங்கள் தோறும் வங்கியை நிறுவ ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
 
இது குறித்து ரிசர்வ் வங்கி உதவிப்பொது மேலாளர் ஞானவேல் கூறியது: 

           நகரம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அதற்கு வங்கி சேவை அவசியம். வங்கி சேவை கிடைக்காத கிராமங்கள் பின் தங்கி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றியமைக்க கிராமங்களில் வங்கி சேவையை துவக்கிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதன் முதன்கட்டமாக 2000 பேர் வசிக்கக்கூடிய கிராமத்திற்கு வங்கி சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
              கடலூர் மாவட்டத்தில் 219 கிராமங்கள் வங்கி சேவை துவக்குவதற்கு தகுதியான கிராமங்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வங்கி பொப்பேற்று சேவையாற்றிட வேண்டும். அவ்வங்கிகள் நிரந்தர வங்கியாகவும் நிறுவலாம், நடமாடும் வங்கியாகவும் செயல்படலாம், பிஸ்னஸ் கவுன்ட்டர் ஆகவும் இயக்கலாம். அந்தந்த வங்கியே அதற்கான செயல்பாடுகளை தேர்வு செய்து கொள்ளும். கிராமங்களில் உள்ள வரவேற்பை பொறுத்து வங்கிகள் தமது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளும்.
 
         இதில் பிஸ்னஸ் கவுன்ட்டர் செயல்படுத்த பல வங்கிகள் முன்வந்துள்ளன. கிராமங்களில் உள்ள நன்கு அறிமுகமான நபர்களை தேர்வு செய்து வங்கிகள் நியமிக்க உள்ளன. அந்த ஊழியரிடம் உள்ள சிறிய கருவி மூலம் பணத்தை வேறு கணக்குக்கு மாற்றவோ, முதலீடு செய்யவோ முடியும். ஒரு குறிப்பிட்ட இலக்குவரை இந்த கருவி மூலம் செயல்படுத்த முடியும். இந்த கருவி அருகில் உள்ள வங்கி கிளையோடு இணைக்கப்பட்டிருக்கும்.
 
            இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என கூறினார். கலெக்டர் சீத்தாராமன், பி.ஆர்.ஓ., முத்தையா உடனிருந்தனர். 


Read more »

விண்டேன் பூச்சி மருந்து விற்பனை செய்ய அரசு தடை

கடலூர் : 

                    விண்டேன் பூச்சி மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             வேளாண் உபயோகத்திற்காக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விண் டேன் பூச்சி மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி விண்டேன் உற்பத்தி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு ஆணை வெளியிடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விண்டேன் பூச்சி மருந்தை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணையை மீறும் பூச்சி மருந்து உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 



Read more »

மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு கூட்டம்


முல்லை பெரியாறு, காவிரி  

நதிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்; ஸ்ரீதர்வாண்டையார் பேச்சு


 சிதம்பரம்:

               மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது  மூவேந்தர் முன்னேற்றக்கழக .தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் பேசியது:-

            நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாம் கடுமையாக உழைத்தோம்.கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்டோம். எனக்காக கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தனர்.அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்ததால் தவறான பாதையில் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். நான் மட்டும் அல்ல, தி.மு.க.கூட்டணியிலும் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள். மக்களின் எண்ணம் மாறி விட்டது.ம க்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். தலை வணங்குவோம். இனி வரும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் செயல்பட வேண்டும்.

           நாங்கள் தவறான பாதையில் (கூட்டணி) செல்ல வில்லை. தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும் தோல்வி அடைந்து விட்டது. பா.ம.க. 3 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைவைத்து நாம் தவறான பாதையில் சென்று விட்டோம் என்று கூற முடியாது. நாம் தவறான முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க.தலைவர் கருணாநிதி நாம் வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். அதன் அடிப்படையில் தான் நாம் தி.மு.க.கூட்டணியில் சேர்ந்து உள்ளோம். மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.அ தனால் நாம் தோல்வி அடைந்து விட்டோம். விரைவில் எம்.பி.தேர்தல் வரப்போகிறது. அதற்கு நாம் ஓராண்டுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.

            உள்ளாட்சி தேர்தலிலும் நாம் அதிக இடங்களில் போட்டியிட தயாராக வேண்டும். அடுத்த தேர்தலில் சரியான பாதையில் செல்ல வேண்டும். நமது கட்சி நிர்வாகிகள் யாருடைய அச்சுறுத்துதலுக்கும் பயப்பட தேவையில்லை .மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். அகமுடையார், கள்ளர், மறவர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். காவிரி நதிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.இதையெல்லாம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா செய்து கொடுப்பாரா? அப்படி செய்து கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அனைத்தும் போராடுகிற நிலையில் நிலுவையில் உள்ளது.

            அடுத்த சட்டசபை தேர்தலில் நாம் கேட்கிற தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க. விடம் இருந்து கிடைக்க வில்லையென்றால் நாம் நமக்கென்று 25 தொகுதிகளை இப்போதே தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். 25 தொகுதிகளில் நாம் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.அ தன்பிறகு நாம் கேட்காமலேயே நமக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். சிதம்பரம் தொகுதியில் எனக்கு அனைத்து சமூகத்தினரும் வாக்கு அளித்து உள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிகளை 1 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.ஆனால் பதவி ஏற்று 7 வாக்குறுதிகளை மட்டும் உடனடியாக நிறை வேற்றுவதாக கூறியுள்ளார். ஆனால் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி, கான்கிரீட்வீட்டுக்கு கூடுதல் நிதி உதவி போன்ற நல்ல திட்டங்களை நிறை வேற்றவில்லை.ஆகவே நாம் விரைவில் இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். இவ்வாறு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் கூறினார்.

               கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் கேப்டன் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில பொருளாளர் அபிராமம் கோவிந்தசாமி, மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், இணை செயலாளர் ராஜா, முத்து, மறவன்நடராஜன், ஐரோப்பிய மாணவரணி தலைவர் கோகுல்வாண்டையார், மாவட்ட இளைஞரணி வேல்ராஜ், மதியழகன், மதுரை சுரேஷ், நாகவேல், ஜோதி மணி உள்பட தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

          சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தலைவர் ஸ்ரீதர்வாண்டையாருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஐ.நா.சபையின் அறிக்கையின்படி போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              பெட்ரோல் ,டீசல் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் திறந்து விட வேண்டும்.கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையாருக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.

              அதன்படி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார், இளைஞர் அணி துணை தலைவர் சிற்றரசு, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இந்திரக்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்துநீக்குவதற்கு முழு ஆதரவு அளிப்பது, சாதி வாரியாக கணக்கு எடுக்கும் பணிக்கு உத்தரவிட்ட மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கட்சி புதிய மாநில பொதுச்செயலாளராக கேப்டன் நடராஜன், மாநில இணை தலைவராக ஆறுமுக நாட்டார், மாநில துணை தலைவராக ஒச்சாயி தேவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



Read more »

Party reviews poll outcome at Chidambaram

CUDDALORE: 

        The executive committee and the general body of the Moovendar Munnetra Kazhagam that held an emergency meeting at Chidambaram on Monday took stock of the outcome of the Assembly elections.

        Speaking on the occasion, party leader Sridhar Vandayar said that the party accepted the verdict of the people and thanked those who had cast their votes in his favour. Mr. Vandayar, who contested the elections on the DMK symbol in the Chidambaram Assembly constituency, was defeated by K. Balakrishnan of the Communist Party of India (Marixist). He called upon party men to concentrate on the local body elections and the Lok Sabha elections.


Read more »

The Tamilnadu Government has ordered Hike in pension

CUDDALORE: 

       The State government has ordered an increase in pension amount from Rs. 500 to Rs. 1,000 a month for eight categories of beneficiaries.

       As per the new direction, the monetary outgo on this score would be over Rs. 6.19 crore a month in Cuddalore district, according to P. Seetharaman, District Collector. Mr. Seetharaman said there are 61,984 beneficiaries under eight social security schemes, including the Indira Gandhi Old Age Pension Scheme, Indira Gandhi Differently-abled Persons' Pension Scheme, Indira Gandhi Widows' Pension Scheme, Destitute Women's Pension Scheme and also the pension scheme for poor spinsters who have attained 50 years of age. The scheme had come into force from May and the first payment would be made through cheques before June 7, he added.


Read more »

Tamil Nadu Veterinary and Animal Sciences University courses for veterinarians

           Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) is set to commence short-term postgraduate diploma courses in seven super specialty branches to upgrade the skills of practising veterinarians soon, according to TANUVAS vice-chancellor R. Prabakaran.

         Another major project conceptualised by the university for this year is an extensive anti-rabies campaign in the state involving different stakeholders like local bodies and department of animal husbandry. Dr. Prabakaran said new PG diploma courses would be introduced in topics such as small animal orthopaedics, veterinary ophthalmology, critical care medicine, small animal dermatology, ethno veterinary medicine, poultry feed technology and commercial poultry management.

     The courses would be offered through distant education to the veterinarians. Ten students would be admitted to each course. An M. Tech course in food science would be started in the academic year 2011-12, Dr. Prabakaran said. There would be only five seats for the course.

MoU

        Dr. Prabakaran said the university had recently signed a Memorandum of Understanding with seven foreign universities to revamp fisheries education. Of these, three were in the United States, one each in China, Indonesia, Nepal and Bangladesh.



Read more »

Dhanalakshmi Srinivasan Group of Educational Institutions




              Success will always be with the people whoyearn to learn novel things as the globe rapidly moves towards competence. In this exciting context, where there are myriadopportunities, education has assumed greater significance, not merely academic but, “the manifestation of the perfection already in man”. The aim of Dhanalakshmi Srinivasan Educational Institutions is to mould the student as not only a professional success but also a true human being. We aim to be the torch bearers of the future with quality courseware, dissemination of knowledge, virtue and morality.

          In this modern era, where brainpower reigns over all other strengths, we aim to mould aspirants to take on, in the right path. We provide the needed academic ambience and the necessary life-skills, so that our alumnae attain victory beyond their chosen profession.

Birth of the Trust

             Founded in the year 1994 by Shri. A. Srinivasan, the trust has been in the fore front of providing quality education at an affordable cost not only in the region of Perambalur but also in Trichy & Chennai. The trust developed an immense passion for contributing to the society, and continues to strive to promote the cause of education. In pursuance of the vision of the Founder-Chairman, the trust today runs 17 Educational Institutions, Technical & Nontechnical, catering to the educational thirst of the students. It has 350 acres campus spread over aesthetically landscaped with lush green environment, 40 lakhs square feet built up space, 25000 students, 152 well equipped laboratories.

Vision

        We aspire to be a preferred, promising institution for professional and technical education, contributing both to the country and to the community. To be a world class nodal centre committed to advanced learning, research and training to serve the nation, meeting the national/ international standards.

Mission

           To provide education and training opportunities to students in the field of engineering and technology. To offer professional courses according to social needs and international standards with a strong link to industry. To explore the advancement of education and services for sustainable corporate development.

Home Away From Home

             Our Institutions have seven aesthetically designed modern hostels with homely ambience. It provides accommodation to more than 25,000 students studying in our various Institutions. The life in hostels enables students to spend ample time in the college, departments utilizing library and other facilities to ensure they develop academically and acquire the necessary skills that can be obtained only through experience. In addition, the hostel life allows students to interact with their colleagues and staff make friends, and develop into good human beings capable of independent judgment and coping with the day to day pressures of life and make them to feel as home away from home.

for more details



Contact

College Office Administrative Office
Srinivasan College of Arts and Science,
Thuraiyur Road,
Perambalur – 621212
Tamilnadu
Phone : 04328 – 220672
Fax : 04328-220075
Dhanalakshmi Srinivasan Group of Institutions
Thuraiyur Road, Perambalur-621 212
Tamilnadu, South India.
Phone : 04328- 220554, 220555.291255
Fax : 04328 - 220075
Email: info@dsgroups.org
 




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior