உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 24, 2011

விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்



விருத்தாசலம்:
                      விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
            கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கண்மணி நகரைச் சேர்ந்தவர் ராஜவேல் - மலர்கொடி தம்பதியினர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் செந்தில்குமார் டிப்ளமா எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
            அதே நிறுவனத்தில் சீன நாட்டின் ஷாங்ஷான் லிலி வாண் மாவட்டத்தைச் சேர்ந்த லியூ ஹாங்க்யூ - யாங் யூன்யிங் தம்பதியின் ஒரே மகளான லியூயிங், விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் நிறுவனத்தின் பணி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற போது ஒருவரை ஒருவர் காதலிக்கத் துவங்கினர்.தங்கள் காதலை பெற்றார்களிடம் கூறி சம்மதம் பெற்றனர்.              அதைத் தொடர்ந்து இரு வீட்டார் விருப்பத்துடன் விருத்தாசலம் ராஜா மகால் திருமண மண்டபத்தில் இந்து ஐதீக முறைப்படி மந்திரம், மேளதாளம் முழங்க நேற்று திருமணம் நடந்தது. மணமகள் லியூயிங் கழுத்தில் மணமகன் செந்தில்குமார் தாலி கட்டினார். திருமண விழாவில், லியூயிங் பெற்றோர் வேட்டி, சேலை அணிந்து திருமண சடங்குகளை ஆர்வமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்தது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மணமகள் லியூயிங் கூறுகையில், 
               "முதலில் செந்தில்குமார் தான் காதலை வெளிப்படுத்தினார். என் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மொழி மட்டும் தடையாக இருக்கிறது. விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்' என்றார்.
மணமகளின் தந்தை லியூ ஹாங்க்யூ கூறுகையில், 
                "எனக்கு எனது மகள் முக்கியம். அவளின் ஆசையை நிறைவேற்றி வைப்பது எனது கடமை. என் மகளுக்கு நல்ல தமிழ்க் குடும்பம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.




Read more »

விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் சாக்கடை கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு

விருத்தாசலம் : 

             புண்ணிய நதி என அழைக்கப்படும் விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் சாக்கடை கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் "மினி கூவமாக' மாறி வருவதால் நதியின் பெருமையை குலைப்பதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மிகப்பெரிய பிரதான நகரமாக விருத்தாசலம் விளங்கி வருகிறது. 

             இந்நகரில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், கொளஞ்சியப்பர் கோவில், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்டவைகளும், புண்ணிய நதியான மணிமுக்தா ஆறு ஓடுவதும் இந்நகரின் முக்கிய சிறப்பாகும். மணிமுக்தா ஆற்றின் கரையோரம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இருப்பதால் கோவில் விழா நாட்களிலும், காணும் பொங்கல் அன்றும் ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் ஒன்று கூடி விளையாடி மகிழ்வர். 

           அதுபோல் மாசி மக திருவிழாவில் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் கூடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்கள் இந்த புண்ணிய நதியில் குளித்துவிட்டு மாலை அணிவதும் வழக்கம்.இவ்வளவு சிறப்பு மிக்க மணிமுக்தா ஆற்றில் இருந்துதான் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் கோவில்களுக்கு பங்குனி மாதங்களில் அலகு மற்றும் காவடிகளை எடுத்துச் செல்வர்.

              மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்த மணிமுக்தா ஆறு உரிய பராமரிப்பில்லாததால் "மினி கூவமாக' மாறி வருகிறது. நகரின் முக்கிய வடிகாலான ஊத்தோடை வழியாக பெரும்பாலான பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. இக்கழிவுநீர் மணிமுக்தா ஆற்றின் பாலத்தின் கீழ் குளம்போல் தேங்கி நிற்கிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் அடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாலத்தை கடந்து செல்பவர்கள் மூக்கை மூடிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது

              .பிரசித்தி பெற்ற இந்த ஆறு சுகாதார சீர்கேடு அடைந்து வருவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் நகரப் பகுதியில் நிலத்தடி நீரின் தன்மையும் மாறி வருகிறது. நல்ல சுவையாக இருந்த குடிநீர் தற்போது குடிப்பதற்கு லாயக்கற்ற நீராக மாறி வருவதால் நகர மக்கள் "மினரல் வாட்டரை'யே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு ஆற்றை ஒட்டியுள்ள வியாபாரிகள் தங்கள் பங்கிற்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட மண் வளத்தை பாதிக்கும் மக்காத கழிவுகளை கொட்டி புண்ணிய நதியான மணிமுக்தாவை பாழ்படுத்தி வருகின்றனர். 

             விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை ஏட்டளவில் மட்டும் இல்லாமல் நடைமுறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.அதோடு ஆற்றின் ஓரமாக கால்வாய் வெட்டி ஊத்தோடை வழியாக விடப்படும் கழிவுநீரை நகர எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று விடும்படியும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் கழிவுகள் கொட்டாத வகையிலும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

            சுகாதாரத்துறை சார்பில் கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் முழுவதும் 1,512 மையங்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து போடப்பட்டது. மேலும், மாவட்ட எல்லையோரம், குடிசைப் பகுதிகள், புதியதாக உருவான பகுதிகள், பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் வாழும் பகுதி என 101 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

            கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் கலெக்டர் சீத்தாராமன் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் கமலக்கண்ணன், துணை இயக்குனர் மீரா, கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உடனிருந்தனர். கடலூர் பஸ் நிலையத்தில் அய்யப்பன் எம். எல்.ஏ., துவக்கி வைத்தார். நகராட்சி சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், கமிஷனர் இளங்கோவன், கவுன்சிலர் செல்வி அஞ்சாபுலி, சுகாதார ஆய்வாளர்கள் பத்மநாபன், பாக்கியநாதன் உடனிருந்தனர். 

             மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என 6,048 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 2 லட்சத்து 47 ஆயிரத்து 510 குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று (24ம் தேதி) மற்றும் நாளை (25ம் தேதி) வீடு வீடாகச் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் பிப். 27ம் தேதி நடக்கிறது. 

சிதம்பரம்: 

            நெல்லுக்கடை தெரு மகப்பேறு மருத்துவமனையில் சேர்மன் பவுஜியாபேகம் துவக்கி வைத்தார். கமிஷனர் (பொறுப்பு) மாரியப்பன், சுகாதார ஆய்வாளர் சத்தியசுந்தர், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

நெல்லிக்குப்பம்: 

              சேர்மன் கெய்க்வாட் பாபு துவக்கி வைத்தார். கமிஷனர் புவனேஸ்வரி, சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

விருத்தாசலம்: 

            அரசு மருத்துவமனையில் டாக்டர் கதிர்வேல் தலைமையில் குழந்தைகள் நல மருத்துவர் பார்த்தசாரதி சொட்டு மருந்து போட்டு முகாமை துவக்கி வைத்தார். 

சிறுபாக்கம்: 

             சிறுபாக்கம் பஸ் நிலையத்தில் டாக்டர் உதயகுமார் தலைமையில் ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன் துவக்கி வைத்தார்.

பண்ருட்டி: 

              பஸ் நிலையம் முன்பு ரோட்டரி சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சேர்மன் பச்சையப்பன், துணை சேர்மன் கோதண்டபாணி துவக்கி வைத்தனர். 

சேத்தியாத்தோப்பு: 

            ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரி ஹென்றி டேனியல் தலைமையில் ஜேசீஸ் தலைவர் சேரலாதன் துவக்கி வைத்தார். 

கிள்ளை: 

             பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியப்பகுதி ஊராட்சி கிராமங்களில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாமை அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் துவக்கி வைத்தனர்.

Read more »

மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு

கடலூர் : 

            மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளை கல்லூரி முதல்வர் பாராட்டி, பரிசு வழங்கினார். மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. 

             அதில் பங்கேற்ற கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவி ரேவதி 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், தத்தித் தாண்டுதல், தொடர் ஓட்டத்தில் முதலிடமும், 100 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றார். பாக்கியலட்சுமி ஈட்டி எறிதலில் முதலிடம், குண்டு எறிதல், 400 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், வட்டு எறிதலில் மூன்றாமிடம் பெற்றார். சோனியா 400 மீ., இரண்டாமிடம், கலையரசி 400 மீ., ஓட்டத்திலும் சத்யாவதி ஈட்டி எறிதல், சரண்யா 3,000 மீ., ஓட்டத்திலும் மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோரை கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் பாராட்டி பரிசு வழங்கினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பட்டியல் வெளியீடு

கடலூர் : 

           பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் முடித்து பதிவு செய்துள்ள மனுதாரர்களின் பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பெயர் விடுபட்டவர்கள் வரும் 25ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுக வேண்டும். அதற்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
 

Read more »

Neonatal ICUs at 40 GHs planned: Health Minister M.R.K.Panneerselvam


Interesting exhibits: Health Minister M.R.K.Panneerselvam at the Police Department pavilion in the government exhibition in Cuddalore on Saturday. 
 
CUDDALORE:

           It has been proposed to set up Neonatal Intensive Care Units (NICU) at 40 government hospitals across the State.

        These units will take care of newborn babies having breathing problems and suffering from fits, according to M.R.K. Panneerselvam, Health Minister. Ten such units have already been set up and another one would come up at a cost of Rs. 25 lakh in the Cuddalore Government Headquarters Hospital, the Minister said at the inauguration of the government exhibition at Manjakuppam grounds here on Saturday.

         These units would have paediatricians and specially trained nurses. The Minister further said that the government had also launched the life-saving treatment for infants up to one year, for it would extend medical assistance to the extent of Rs.1 lakh. The benefit would be available even to those infants undergoing treatment in private hospitals. The exhibition had showcased the welfare schemes and the achievements of various departments.

          The objective of the expo was to create awareness of various welfare schemes among people and help the eligible persons get the benefits. Giving an elaborate account of the schemes, the Minister said that as far as Cuddalore district was concerned, 5.3 lakh free colour television sets were distributed, Rs.359 crore farm loan was waived benefiting 1,06,601 farmers, 7,287 beneficiaries got two acres of land and 22,483 farm labourers obtained financial assistance to the tune of Rs.24.12 crore, and 1,23,220 pregnant women got monetary benefits to the extent of Rs.68.02 crore.

        The Minister said that in the past five years, people had benefited from a surfeit of schemes. Earlier, the Minister visited all stalls and in the one set up by the Police Department evinced keen interest in the latest guns, and bomb disposal and detection equipment on display. Mr. Panneerselvam appreciated the efforts taken by Public Relations Officer Pon. Muthiah and his team for having organised the exhibition.

          Collector P. Seetharaman, MLA G.Aiyappan, Municipal Chairman T.Thangarasu, and Vice-Chairman Thamaraiselvan were present. The exhibition would be open to public from 4 p.m. to 9 p.m. till January 31, sources said. There would be cultural programmes and orchestra every day.

Read more »

3,000 persons open savings account in a single day near Cuddalore

CUDDALORE: 

         The Naduveerapattu village, primarily an agriculture-oriented area located about 15 km from here, is now buzzing with banking activity, thanks to the financial inclusion concept promoted by Indian Overseas Bank.

         The Naduveerapattu branch of the bank brought under its purview as many as 3,000 daily wage workers, farm hands and housewives to open savings account in a single day on Sunday. At a function held in the village on Sunday, B. Natarajan, Chief Regional Manager, IOB, Puducherry region (comprising Puducherry and the districts of Cuddalore, Villupuram and Tiruvannamalai) gave away passbooks to the new customers.

           S. Siddardhan, Chief Manager, IOB Central Office, Chennai, told The Hindu that the financial inclusion system was aimed at taking banking services to all villages having a population of 2,000. As far as Tamil Nadu was concerned, the IOB had been given a target of covering 800 villages before March 2012, but even now it had brought 650 villages under its fold. Mr. Natarajan said that all 90 designated villages in his region had already been covered. Mr. Siddhardhan said that the services would be made available through “business correspondents” carrying a micro-automated telling machine, a hand-held device, operating on a bio-metric system.

Read more »

Modern facilities sought

CUDDALORE: 

         The Consumer Guild of Tamil Nadu has called upon the Travancore Devaswom Board to provide modern facilities at Sabarimala for better crowd management so as to avert tragedies such as the one that occurred at Pulmedu recently.

        Guild secretary C.D. Appavu, in a representation, said the board could install a rope car to enable devotees cross the terrains. He said that whatever facilities available to the pilgrims en route to the place of worship were provided by the All India Aiyappa Seva Sangam. The Guild called upon the Devaswom Board to explore the feasibility of installing escalators to facilitate speedy ‘darshan.'

Read more »

வடலூர் வள்ளலாரின் சொத்துக்களை ஒருங்கிணைக்க கோரிக்கை

வடலூர்:
 
              வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தின் சார்பில் 140-வது தைப்பூச ஜோதி தரிசன விழாவை யொட்டி டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில் சுத்தசன்மார்க்க நிலைய வைரவிழா புதிய கட்டிடம் மற்றும் சிமெண்டு சாலை திறப்பு விழா நடந்தது. தொழில் அதிபர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

           ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் வரவேற்றார். விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி மாசானமுத்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
 
விழாவில் தொழில் அதிபர் டாக்டர் மகாலிங்கம் பேசியது:-

            வள்ளலார் உலகம் வாழ்விக்க வந்த உத்தமர்.அவரின் கொள்கை உலக மக்கள் அனைவரின் பார்வையினை தன் பக்கம் ஈர்த்து உள்ளது. வள்ளலார் நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே நிறுவனமாக்கி முதல்வரின் நேரடி பார்வையில் இயங்கவேண்டும். அதன் மூலம் வள்ளலாரின் தெய்வ நிலைய வளர்ச்சியை கொண்டு வரவேண்டும். வள்ளலார் சொத்துக்கள் பல இடங்களில் பரவி கிடக்கிறது. இதனை பல சமூக விரோதிகள் சட்ட விரோதமாக அனுபவித்து வருகிறார்கள். அதனை கைப்பற்றவேண்டும்.

               சன்மார்கிகள் அனைவரும் வருங்காலத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து தனித்தனியாக கிடக்கும் சொத்துக்களை ஒருங்கிணைத்து ஒரே நிறுவனமாக இயங்கவேண்டும் என கோரிக்கை வைத்து அதனை முதல்வரின் மேற்பார்வையில் செயல்பட வைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

              முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், திருவெண்காடு டாக்டர் ராஜமூர்த்தி, டாக்டர் துரை நமச்சிவாயம், குருகுலம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகுவரதராசன், விரிவுரையாளர்கள் ஹேமலதா, ரஞ்சிதக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜவெங்கடேசன் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தாளாளர் டாக்டர்செல்வராஜ் செய்து இருந்தார்.

Read more »

நெல்லிக்குப்பம் 300 ஆண்டுக்கு பின் கைலாசநாதர் கோவிலில் தைப்பூச விழா



           நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

           இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. 300 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச விழா, அன்னதானம் நிகழ்ச்சியும், நெல்லிக்குப்பம் கிளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்றது.

            இதை முன்னிட்டு கைலாச நாதர், அகிலாண்டேஸ்வரி, சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகம் ஆகிய சாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்து சாமிகளுக்கு அலங் காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் வடை-பாயாசத்துடன் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் குப்புசாமி, துளசிதாஸ், பொருளாளர் தனசேகரன், நகரமன்ற உறுப்பினர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                 தொண்டர்படை அமைப்பாளர் கமலக்கண்ணன் வரவேற்றார். நகரசபை தலைவர் கெய்க்வாட்பாபு, அன்ன தானம் வழங்கி தொடங்கி வைத்தார். ஊறுகாய் வெங்காய தயிர் பச்சடி, பொறியல், கூட்டு, அப்பளம், மசால்வடை, பாயாசம், கேசரி, சாம்பார் சாதம், வெஜிடேபிள் பிரியாணி, புதினா சாதம் ஆகிய அன்ன தானம் வழங்கப்பட்டது.

               மாநில தொண்டர்படை துணை தளபதி புஷ்பநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன், நகர இணைச்செயலாளர் வைத்தியநாதன், நாராயண மூர்த்தி, கோவிந்தராஜ், செந்தில்குமார், கண்ணன், முருகன், வேலு, தண்டபாணி, ஞானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் பாக்கியராஜ் செய்து இருந்தார்.

Read more »

Pilot project for Adi Dravidars launched

CUDDALORE:

          Union Minister for Social Justice and Empowerment Mukul Wasnik launched the Prime Minister Adarsh Gram Yojana (PMAGY), a pilot project, at Parathur about 15 km from Chidambaram, on Friday.

          Mr. Wasnik said that the project was being launched on an experimental basis in 1,000 villages, where the Scheduled Castes constituted over 50 per cent of population, in five States in different regions of the country.

          In all, there were 44,800 such villages in 25 States across the country. As far as Tamil Nadu was concerned, 68 villages in Cuddalore district and 157 in Tiruvarur districts had been selected for the project. The main objective of the project was to enable everybody in the Adi Dravidar settlements to lead life with dignity. It was a matter of concern that even in the 21st century there were instances of atrocities against the Scheduled Caste. In terms of development, the country had made rapid strides but even today a large part of the country was facing problems of illiteracy, poverty and malnutrition.

              The PMAGY aimed at removing disparity between the SCs and non-SCs living in the same place. Under the project, every village would be provided a financial assistance of Rs. 10 lakh to improve the basic amenities and infrastructure.

Mr. Wasnik said that the implementing officials should accomplish the following aspects:

           In all identified villages, poverty should be reduced by at least 50 per cent, infant mortality rate should be scaled down to 30 for every 1,000 live births and maternal mortality rate to 100 for every one lakh cases.

            There must be 100 per cent institutionalised child delivery and full immunisation of children, cent per cent enrollment and retention of students from Class I to VIII, access to protected drinking water, registration of all births and deaths, abolition of child marriages and child labour, no public consumption of liquor and any other intoxicants, and, inclusion of all eligible families under the Indira Awaz Yojana.

            Mr. Wasnik also inaugurated a community hall, a playground and distributed sports articles. Health Minister M.R.K. Panneerselvam, Adi Dravidar Welfare Minister A. Tamilarasi, Viduthalai Chiruthaigal Katchi leader Thol.Thirumavalavan, and Collector P.Seetharaman were present.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior