உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

இணையதள கோரிக்கைக்கு ஸ்டாலின் பரிந்துரை : மாணவியின் படிப்பு செலவை ஏற்றார் அமைச்சர்



                 தந்தையை இழந்த மாணவிக்கு, இன்ஜினியரிங் கல்லூரி படிக்க ஆகும் செலவை, தமிழக அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

                பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தை சேர்ந்த சிவகாமிநாதன் மகள் முத்துலட்சுமி. இவரது தந்தை ஓட்டல் சப்ளையர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், நோய்வாய்ப்பட்டு இறந்தார். தாய் வேலம்மாள், பீடிக்கு தாள் ஒட்டும் வேலை செய்தும், விதவைக்கான அரசின் உதவித்தொகை 400 ரூபாயை கொண்டும், முத்துலட்சுமியை படிக்க வைத்தார். பாளையங்கோட்டை மேரி சார்ஜென்ட் பள்ளியில் படித்த முத்துலட்சுமி, பிளஸ் 2 தேர்வில் 1091 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் படிக்க வசதியில்லாததால், வயிற்றுப்பாட்டிற்காக தாமும் பீடிச்சுற்ற வேண்டியிருக்குமோ என்ற பயம், முத்துலட்சுமியை வாட்டியது. அவரின் நிலையறிந்த நெல்லை கலெக்டர் ஜெயராமன், தாசில்தார் மூலம் விசாரணை நடத்தி, குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அடிப்படையிலும், அரசின் பிற உதவிகள் கிடைக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

                  இருப்பினும், கவுன்சிலிங்கில் வெளியூர் கல்லூரிகளில் "சீட்' கிடைத்தால், விடுதியில் தங்கி பயில இயலாத வறுமை. எனவே, துணைமுதல்வர் ஸ்டாலின் இணையதளத்தில், தமது நிலையை விளக்கி உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கையை அறிந்த ஸ்டாலின், அந்த மாணவிக்கு உதவுமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கானுக்கு பரிந்துரைத்தார். மாணவி முத்துலட்சுமியின் நிலையை கேட்டறிந்த அமைச்சர் மைதீன்கான், பாளையங்கோட்டை பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரியில் இ.சி.இ., படிப்பில் சேரவும், மாணவி கல்லூரிமுடிக்கும் வரை ஆகும் செலவை, தமது சொந்த பொறுப்பில் ஏற்றுக்கொள்வதாகவும், நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். தமது மகள் மேலும் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு முதல்வர், துணைமுதல்வர், அமைச்சருக்கு மாணவியின் தாய் வேலம்மாள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Read more »

சிக்குன் குனியா மீண்டும் தலை தூக்கும் அபாயம்

                            
                      தமிழகம் மற்றும் புதுவையில் பருவ மழை தொடங்கி இருப்பதால், மீண்டும் சிக்குன் குனியா தலை தூக்கும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக கடும் வெயில். தண்ணீர் இல்லையென்றால் கொசுக்களும் அதிகம் உருவாகாது. கொசு பிரச்னை குறைந்ததால் எதிர் கட்சிகளின் கோஷங்களைக் கேட்காமல் இப்போது ஆளும் அரசுகள் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கிறது. இப்போது பருவ மழை தொடங்கியுள்ளது.

புதுவை நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய இயக்குநர் பி.ஜம்புலிங்கம் கூறியது: 

                       சிக்குன் குனியாவை ஒழிப்பது மக்கள் கையில் உள்ளது. சிக்குன் குனியா நோய் பரப்பும் கொசுக்கள் முழுக்க முழுக்க வீட்டையும், வீட்டை சுற்றியும் உள்ள இடங்களில் உருவாவதால், இந்நோயை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்தான் ஒழிக்க முடியும். நம் வீட்டை சுற்றி சிறு சிறு அளவில் மழை நீர் தேங்கும் அளவுக்கு வாய்ப்புகள் இருந்தால் அதில் சிக்குன் குனியா நோயை பரப்பும் கொசுக்கள் உருவாகும். யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல், மலேரியா போன்றவை பரப்பும் கொசுக்கள் இறந்தவுடன் அதனுள் இருக்கும் கிருமி அதோடு அழித்து விடும். ஆனால் சிக்குன் குனியா வைரஸ், கொசு வைக்கும் முட்டையிலும் இருக்கும். இதில் உருவாகும் கொசு, இந்த வைரûஸ தாங்கியே வளரும் என்றார். கொசு உருவாகும் புதிய வழிகள்: மரக்கன்று நடும்போது அதன் பாதுகாப்புக்கு வைக்கப்படும் வலைகள், கன்று மரமாகும்போது அதை யாரும் நீங்குவதில்லை. இது அகற்றப்படாத நிரந்தர குப்பைத் தொட்டிகாய மாறி வருகிறது. இதில் பலர் டீ கப்புகள், பிளாஸ்டிக் பொருள்களை போட்டுவிடுகின்றனர். இந்த வலைகள் சிக்குன் குனியா கொசுவை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையாக உள்ளது. சிக்குன் குனியா மற்றும் டெங்கு ஒழிப்பில் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கொசுப் பிரச்னையை எதிர்கட்சிகள் அரசியலாக்க ஆர்ப்பாட்டம் நடத்தலாம். தொண்டர்களின் சக்தியை, ஆர்ப்பாட்டத்தில் வீணடிக்காமல், அதை களப்பணியாக மாற்றலாம். களப்பணி மூலம் ஒவ்வொரு வீடாக சென்று மழை நீர் தேங்க வாய்ப்புள்ள ஆதாரங்களை அழிக்கலாம்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் விளம்பரத்துக்காகவா போக்குவரத்து சிக்னல்?


கடலூரில் சிதம்பரம் சாலையும், ரயில்வே மேம்பாலமும் சந்திக்கும் இடத்தில், போக்குவரத்துக்கான சிக்னல் விளக்குகள் எதுவும் இயங்காமல், விளம்பரத்துக்காக மட்டும
கடலூர்:
         
                   விளம்பரப் பலகைகளைத் தொங்க விடுவதற்காகவே, கடலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அண்மைக் காலமாக போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
 
                       4 சாலைகள் சந்திக்கும் இடங்களில் ஒரு முழுமையான தானியங்கி  போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டுமானால், ரூ. 10 லட்சம் வரை செலவாகும் என்று போலீ சார்தெரிவிக்கிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துச் சிக்னல்களை அமைக்க அரசு தாராளமாக நிதி வழங்கிவிடும். ஆனால் கடலூர் போன்ற சிறிய நகரங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க, மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் வணிகர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளை கெஞ்சிக்கொண்டு இருந்த காலம் உண்டு.ஆனால் அண்மைக்காலமாக கடலூர் உள்ளிட்ட நகரங்களில், போக்குவரத்து சிக்னல்கள் மிகவும் தாராளமாக அமைக்கப்பட்டு வருகின்றன. 
 
                  முற்றிலும்  தேவையற்ற இடங்களில்கூட தாராளமாக அமைக்கப்பட்டு வருகின்றன. ஆட்சியரின் அனுமதி பெற்று, இந்த போக்குவரத்துச் சிக்னல்களைத் தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று, அமைத்து வருவதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, ஏற்கெனவே தானியங்கி போக்குவரத்து சிக்னல் இருக்கும்போது, மேலும் புதிதாக 4 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கடலூரில் ஆட்சியர் முகாம் அலுவலகம், உட்லண்ட் சந்திப்பு, ஜவான்ஸ் பவன் ஆகிய 3 இடங்களில் மட்டுமே தானியங்கி சிக்னல்கள் செயல்படுகின்றன. இவையும் போலீஸôரின் கண்காணிப்பில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன.
 
                       ஆனால் நகரில் மிகக்குறுகிய தூரத்துக்குள் தேவையற்ற வகையில், சுமார் 50 இடங்களில் அண்மையில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை ஒவ்வொன்றிலும், தலா 8 குழல் விளக்குகள் எரியும் வகையில் விளம்பரங்கள் பொறிக்கப்பட்ட பெட்டிகள் தொங்க விடப்பட்டு உள்ளன.   இவற்றில் பொருத்தப்பட்டு இருக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எதுவும் எரிவதில்லை. ஆனால் விளம்பரத்துக்கான விளக்குகள் மட்டும் 24 மணி நேரமும் எரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே தனியார் விளம்பரத்துக்காகவே இந்த உத்தி என்பது தெரியவருகிறது.பல இடங்களில் இந்த சிக்னல்கள் அங்கு ஏற்கெனவே வைக்கப்பட்டு இருக்கும், கைகாட்டிப் பலகைகள், வெளியூர்களுக்கு வழிகாட்டும் பலகைகளை மறைத்து வைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். பல இடங்களில் போதுமான உயரத்தில் அமைக்கப்படாததால், அந்த வழியாகச் செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறாகவும் உள்ளன.மேலும் இந்த போக்குவரத்து சிக்னல்களுக்கு மின்வாரியத்திடம் மின் இணைப்பு பெறப்படுகிறது. 
 
                    இவை அனைத்தும் விளம்பரப் பயன்பாடாக இருப்பதால், மின் பட்டியல் பிரிவு 5-ன் கீழ்தான் (கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 5.80) பெறப்பட வேண்டுமாம். ஆனால் பெரும்பாலான சிக்னல்கள், மின் பட்டியல் 1 ஏ பிரிவின் கீழ்தான் (வீட்டு உபயோகத்துக்கானது. கட்டணம் ரூ. 2.20) இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறதாம். சில இடங்களில் நகராட்சி தெருவிளக்கு இணைப்புகளுடனும் இணைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. நகராட்சி  தெருவிளக்குகளை இயக்கும் தொழிலாளர்களே இதையும் இயக்குகிறார்கள்.
 
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது
 
                          பல இடங்களில் தவறான பிரிவில், மின் இணைப்பு பெறப்பட்டதைக் கண்டுபிடித்து, இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். 3 ஆண்டுகளுக்கு முன் நகரங்களில், மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள், உயர்நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டன. உள்ளாட்சி நிறுவனங்களின் அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டவை உள்ளிட்ட காரணங்களுக்காக அவை அகற்றப்பட்டன. அந்த விளம்பர பேனர்களின் மறுவடிவம்தான், இந்த போக்குவரத்துக் சிக்னல் விளம்பரங்கள் என்று விவரம் அறிந்த பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
 
 

Read more »

400 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் ரூ. 14.50 லட்சத்துக்கு ஏலம்


சிதைந்து கிடக்கும் பழமை வாய்ந்த கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்.
கடலூர்:
 
               400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசுக் கட்டடத்தை உடைத்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ள, ரூ.14.50 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது.
 
                      கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் 400 ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்டது. இப்பொழுதும் இக்கட்டடம் பயன்பாட்டில் உள்ளது. பராமரிக்கப்பட்டு நினைவுச் சின்னமாகவும் காட்சி அளிக்கிறது. இதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ் வசித்ததாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடந்த போர்களில் வெற்றி வாகைசூடி, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நிறுவப்பட காரணமாக இருந்தவர் ராபர்ட் கிளைவ்.  மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்கு எதிரில் சற்று தொலைவில் அமைந்து இருக்கும் பழமை வாய்ந்த கட்டடத்தில், கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்தது. இதுவும் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிழக்கு இந்திய கம்பெனியினர் இக்கட்டடத்தை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்ததாகக் கடலூர் மாவட்ட வரலாற்று ஆவண  சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.  
 
                      இவ்வளவு பழமை வாய்ந்த கட்டடம் தமிழக பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. கட்டடத்தின் மொட்டை மாடியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. தொட்டி தொடர்ந்து ஒழுகி வந்ததன் காரணமாக அப்பகுதியில் செடி, கொடிகள் முளைத்து, கட்டடம் பழுதானதாகக் கூறப்படுகிறது.  மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இதில் இயங்கி வந்ததால், பொதுப்பணித் துறையினர் இக்கட்டடத்தை முறையாகப் பராமரிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது .இதனால் கடந்த ஆண்டு இக்கட்டடத்தின் படிக்கட்டுகள் இருந்த பகுதி, இடிந்து விழுந்து விட்டது. அதைத் தொடர்ந்து இங்கு இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்துக்கு மாற்றப்பட்டது. பழமை வாய்ந்த இக்கட்டடத்தை இடித்துவிட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. சுட்ட செங்கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்டு அழகுடனும் கம்பீரமாகவும் விளங்கிய இக் கட்டடம் 2 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்டது. இதில், விலை உயர்ந்த தேக்கு மரங்கள் ஏராளமாக உள்ளன. எனவே கட்டடத்தை இடித்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக்கொள்ள ஏலம் விடப்பட்டது. ரூ.14 லட்சம் அடிப்படை கேள்வித் தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏலம் கேட்க சுமார் 25 பேர் டெண்டர் படிவங்களை வாங்கிச் சென்று இருந்தனர். இறுதியாக ராமலிங்கம், மாப்பிளை மைதீன் என்ற இருவர் மட்டும் டெண்டர் படிவத்தை அளித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் அதிகத் தொகையாக ரூ.14.50 லட்சத்துக்கு ஏலம் கேட்டு இருந்த மாப்பிளை மைதீனுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஊராட்சி ஒன்றிய அலவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உண்மையிலேயே அதன் மதிப்பு ரூ.14.50 லட்சம் தானா?400 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டு இருந்த கட்டடம், விரைவில் இடித்துத் தரை மட்டமாக்கப்பட உள்ளது. ரூ.14.50 லட்சத்துக்கு இடித்துவிட ஏலம் விடப்பட்டபோதிலும், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கட்டடமும் அதில் உள்ள பொருள்களும் உண்மையில் விலை மதிப்பிட முடியாதவை என்பதை, தேசப்பற்று மிக்க சரித்திர ஆர்வலர்கள் அறிந்து இருப்பார்கள், அதை வெறும் கட்டடமாகப் பார்க்கும் மற்றவர்கள் அறிந்து இருக்க நியாயம் இல்லைதான்.

Read more »

சிதைந்து வரும் இசைச் சிற்பம்


கேட்பாரற்று கிடக்கும் இசை குதிரை சிற்பத்தின் அருகே கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன்.
பண்ருட்டி:
 
                    விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த இசைச் சிற்பங்கள் கவனிப்பாரற்று சிதைந்து வருகின்றன.
 
                    நம் நாட்டின் பண்பாடு, நாகரிகம் கலாசாரங்களை எடுத்துக்காட்டுவதில் ஓவியங்களும் சிற்பங்களும் ஒர் அங்கமாக விளங்குகின்றன. அத்தகைய சிற்பங்களும் ஓவியங்களும் மாற்றார் படையெடுப்பால் தமிழ்நாடு முழுவதும் சிதைக்கப்பட்டன. எஞ்சியுள்ள கலைச் சின்னங்கள் கவனிப்பாரற்று சிதைந்து கொண்டிருப்பதை இன்றும் பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது.பாவங்களும், கருமங்களும் தொலைய வேண்டுமானால் காசிக்கும், கங்கைக்கும் சென்று தீர்த்தமாடி விட்டு வரவேண்டும் என்கிற நம்பிக்கை நமக்கு இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் நம் சொந்த ஊரில் இருக்கும் ஆறும், குளங்களும் புண்ணிய கங்கைகள்தான் என்பதை நம்மில் சிலர் சிந்திக்கத் தவறுகின்றனர். அதனால் தான் உள்ளூர்க் குளம், தீர்த்தகுளம் ஆகாது என்கிற எதிர் மறையான பழமொழியைப் பெரியோர்கள் கூறி வைத்துள்ளனர். இது போன்று சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலும், இசை தரும் குதிரை சிற்பமும் கவனிப்பாரற்று சிதைந்து கிடக்கின்றன.
 
இது குறித்து கல்வெட்டாய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது: 
 
                      இந்த இசை தரும் குதிரைச் சிற்பம் உள்ள இடம் கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டுகளில் தலை நகரமாக விளங்கி இன்று சிறிய கிராமமாக காட்சி தரும் சேந்தமங்கலம் என்ற ஊராகும். விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதிக்கு தேற்கே 1 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் பல போர்களை நிகழ்த்திய வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. பல்லவர் குலத் தோன்றல்களாகிய மணவாளக் காடவராயரும், அவர் மகனாகிய கோப்பெருஞ்சிங்கக் காடவராயரும் தங்கள் வீர வாள்களால் நிகழ்த்திய போர்களில் பெற்ற வெற்றியின் சின்னமாக அப்பகுதியில் இருந்த பெரிய காட்டை அழித்து வாணிலை கண்டீச்சுரம் (வாள்நிலை கண்ட ஈச்சரம்) என்கிற சிவன் கோயிலைக் கட்டினர். ஏழு வாயில்கள் மற்றும் அகழிகள் சூழ்ந்த கோட்டைக் கொத்தளங்களை அமைத்து, அருகே மக்களைக் குடியமர்த்தி சேர்ந்தமங்கலம் என்ற பெயரைச் சூட்டினர்.இவர்களுக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர-நாயக்கர் போன்ற மன்னர்களின் ஆளுகைக்கு உள்பட்டுப் பின்னர் கவனிப்பாரற்று சிதைந்து வந்துள்ளது. தற்போது இக்கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு திருப்பணி தொடங்கி நடந்தேறி வருகிறது.இக்கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நாற்புறங்களிலும் அழகிய படிக்கட்டுகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில்மிக்க கருங்கல் மண்டபத்தை கட்டியுள்ளனர். இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன. சீறிப் பாய்வதுபோல் நின்று கொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல விதமான ஒலியெழுப்பி நம்மை வியப்படையச் செய்கிறது. இதில் ஒரு குதிரை தரையில் விழுந்து கிடக்கிறது. எஞ்சி நிற்கும் ஒரு குதிரையாவது விழுவதற்குள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் ஆவல் என பண்ருட்டி தமிழரசன் கூறினார்.

Read more »

வேதாத்திரி மகரிஷி பாடசாலை திறப்பு

சிதம்பரம்:

                   சிதம்பரம் சிவசக்தி நகரில் வேதாத்திரி மகரிஷியின் பாடசாலையான அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

                    உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் பாடசாலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலை. யோகா கல்வி மைய இயக்குநர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி வாழ்த்துரையாற்றினார்.  சேவா சங்க விழுப்புரம் மண்டலத் தலைவர் எம்.சீனுவாசன் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை மனவளக்கலை அறக்கட்டளை தலைவர் என்.ஜி.மாணிக்கம், பொறுப்பாசிரியர் ஏ.பன்னீர், செயலாளர் எம்.சீனுவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். தினமும் மாலை 6.30 மணி முதல் எளியமுறை குண்டலினி யோகப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என விழாவில் அறிவிக்கப்பட்டது.

Read more »

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலம்:
                     விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் சனிக்கிழமை அகற்றினர். 
                        விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுவதாக நகர்மன்ற தலைவர் முருகனுக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் முருகன், நகர்மன்ற உறுப்பினர் அரங்க.பாலகிருஷ்ணன், துப்புரவு அலுவலர் பரமசிவம், மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை சென்றனர். அங்கிருந்த நடைபாதை கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்தினர். மேலும் பஸ் நிலையத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க நகராட்சி ஊழியர்கள் இருவர் கண்காணித்து வருமாறு நகர்மன்றத் தலைவர் அறிவுறுத்தினார்.

Read more »

ராஜபட்ச வருகையை கண்டித்து தடையை மீறி கருப்புக் கொடி:108 பேர் கைது

சிதம்பரம்:

                 இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்தியா வருகையைக் கண்டித்து சிதம்பரத்தில் தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 108 பேரை நகர  போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

                    இலங்கை அதிபர் ராஜபட்சவின் வருகையைக் கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே மதிமுக. தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. இதற்கு  போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை போலீஸ் தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மதிமுக மாவட்டச் செயலாளர் சௌ.பத்மநாபன், அரசியல் ஆய்வு மையத் தலைவர் மு.செந்திலதிபன், வெளியீட்டு அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், நகரச் செயலாளர் க.சீனுவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம், நகரச் செயலாளர் வி.எம்.சேகர், தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.எஸ்.லோகநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 பேரை நகர  போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன், சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Read more »

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 44 பேர் கைது

கடலூர்: 

                     கடலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 44 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடலூரில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் டவுன்ஹால் அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளரும் நகராட்சி துணைத் தலைவருமான தாமரைச் செல்வன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர்கள் முல்லைவேந்தன், அறிவுடை நம்பி, திருமேனி, தமிழ் தேசிய விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் திருமார்பன், கடலூர் நகரச் செயலாளர் பாவாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் கோபால், பாலகிருஷ்ணன், செந்தில், முரளி, பிரபு, ஆதவன், சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 44 பேரைப் போலீஸôர் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Read more »

முற்றுகை போராட்டம்: மனித உரிமை தொழிற்சங்கத்தினர் 40 பேர் கைது

கடலூர்:

                     கடலூரில் தொழிற்சாலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தினர் 40 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

                     கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாஷன் தொழிற்சாலையில் 2 ஆண்டுகளுக்கு முன் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. தொழிற்சங்கம் தொடங்கப்பட்டதன் காரணமாக, அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் துரைசாமி, மனோகரன், ஜெயக்குமார், ராமலிங்கம் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் பஞ்சப்படி வழங்க வேண்டும், தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தினர் கடந்த 1-ம் தேதிமுதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 

                      மனித உரிமைகள் கழக தொழிற்சங்க மாநில அமைப்பாளர் மேட்டூர் ராமசுப்பன், செயலாளர் மதுரை முருகேசன் ஆகியோர் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த தொழிலாளர்கள் சுமார் 50 பேர், தொழிற்சாலை முன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலர்களும் தொழிலாளர்களும் தொழிற்சாலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீஸôர் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தின் மாநில அமைப்பாளர் ராமசுப்பன், செயலாளர் முருகேசன், கடலூர் மாவட்டத் தலைவர் ராஜகோபால், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் முதுநகர் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவர்களை, மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பாளர் சுரேஷ் கண்ணன் சந்தித்துப் பேசினார். தொழிலாளர்கள் பணிநீக்கம் மனித உரிமைகளை மீறிய செயல்ஆகும். அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். பணிநீக்கம் செய்யப்பட்ட 4  தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் போராட்டம் தீவிரம் அடையும் என்று அவர் தெரிவித்தார்.

Read more »

ராஜபட்சவைக் கண்டித்து விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: 

                   ராஜபட்சவைக் கண்டித்து விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் பாலக்கரையில் நாம் தமிழர் கட்சி சார்பில், இந்தியாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 10 பேரை விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருமாவளவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்தும், விருத்தாசலம் பாலக்கரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் ராசாமுகமது உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

குடிநீர் பற்றாக்குறையை நீக்க பல கோடி ஒதுக்கீடு: ஆட்சியர்

கடலூர்:

                   கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை நீக்க, பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

                     பள்ளிகளில் மரங்களை வளர்த்து பசுமைப் போர்வை ஏற்படுத்த 10 பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா, கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மரங்களை நட்டு, 10 பள்ளிகளுக்கு தலா ரூ.9500 வீதம் நிதி வழங்கி, மாவட்ட ஆட்சியர் பேசியது: 

                   உலக அளவில் பனிப்பாறைகள் உருகி, புவி வெப்பம் அதிகரித்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறை காரணமாக பல கோடி ரூபாய் குடிநீர் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மழை குறைந்து உள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. குடிநீர் விநியோகத்துக்காக கைப்பம்புகள், ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.எனவே மழைப் பொழிவை அதிகப்படுத்த மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும். பள்ளிகளில் மரங்களை வளர்க்க, பசுமைப் போர்வைத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில், 10 பள்ளிகளுக்கு தலா ரூ.9,500 நிதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 100 மரங்கள் நடப்பட வேண்டும். 

                            இது தவிர வனத்துறை  மூலமாகவும் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொண்டு நிறுவனங்கள் சமுதாய நோக்குடன் அதிக அளவில் மரங்களை நடுவதற்கு முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேஷாத்திரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.சேகர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழநி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

கடலூரில் செவ்வாய்க்கிழமை போலீசார் நடத்திய திடீர் சோதனையில்2 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்

கடலூர்:

                  கடலூரில் செவ்வாய்க்கிழமை போலீசார்  நடத்திய திடீர் சோதனையில் 2 ஆயிரம் புதிய திரைப்பட திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில், கடலூர் டெல்டா போலீஸ் உதவி ஆய்வாளர் அம்பேத்கர், திருப்பாப்புலியூர் உதவி ஆய்வாளர் ஆனந்த பாபு ஆகியோர் திருப்பாப்புலியூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சி.டி. விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

                   இதில் புதிதாக வெளிவந்துள்ள சுறா, இரும்புக் கோட்டை முரட்டுச்சிங்கம், சிங்கம், கோரிப்பாளையம், குற்றப்பிரிவு, மாஞ்சாவேலு உள்ளிட்ட திரைப்படங்களின் திருட்டு சி.டி.க்கள் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. திருட்டு சி.டி.க்களை உருவாக்க பயன்படுத்திய கணினிகளும் கைப்பற்றப்பட்டன. இவற்றை தயாரித்து விற்பனை செய்ததாக, கடலூர் துரோபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துரை மகன் முருகன் (40), சிவசக்தி நகர் ராமசாமி மகன் மாணிக்கம் (40), பாதிரிக்குப்பம் ராஜாராம் மகன் பெத்தபெருமாள் (45) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Read more »

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டுகோள்

சிதம்பரம்:

                      செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வியில் ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் தரமான கல்வி பெற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பயன்பெற வேண்டும் என்று புவனகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

                            அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.1-ம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் குழுவில் அமர்ந்து அட்டைகளைப் பயன்படுத்தி செயல்வழிக் கற்றல் முறையிலேயே கல்வி பயிலுவார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என ஆ.கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Read more »

என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் உண்ணாவிரதம்

நெய்வேலி:

                 என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமையும் தொடர்ந்தது. 

                      என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலி ஸ்கியூ பாலத்தில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தின் 2-ம் நாளான செவ்வாக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் என்பவர் மயங்கியதைத் தொடர்ந்து, அவர் என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

                           இந்த போராட்டத்தை ஆதரித்து நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள், திலகர், ஏஞ்சலின் மோனிகா, சுப்பிரமணி மற்றும் விருத்தாசலம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். காவல்துறையினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தபோதிலும், சுமார் 65 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை ஆதரித்து புதன்கிழமை பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் பேசவுள்ளார். கடந்த இரு தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் ஈடுபட்டிருந்த போதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து யாரும் அவர்களிடம் பேச்சு நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

Green Cover Project launched in school

CUDDALORE: 

               The Education Department along with the Tamil Nadu Pollution Control Board (TNPCB) has embarked upon a “Green Cover Project” to promote tree planning in schools to combat global warming.

               The schools are given financial aid for procuring saplings, tree guards, etc. Inaugurating the project at Thiruvahindrapuram Government School near here on Tuesday, Collector P. Seetharaman said that the State government made budgetary allocation for the pilot project. It had released Rs. 95,000 through the TNPCB to extend an assistance of Rs. 9,500 each to 10 schools to raise at least 100 trees at each school. Originally, it was planned to implement the project only in four schools in the revenue district. Later, it was decided to cover 10 schools - five each in Cuddalore and Vriddhachalam educational districts.

Rain-deficit district

              Mr. Seetharaman said that owing to global warming, rainfall had become erratic, thereby posing an imminent threat of water shortage.As Cuddalore had become a rain-deficit district, groundwater level had depleted. The situation forced the district administration to spend crores of rupees on installing hand pumps and tapping water sources by sinking deep borewells. Mr. Seetharaman said that creating green cover would induce rainfall and improve the situation. Arrangements had been made to raise saplings through the Forest Department for public distribution, he added.

Role of NGO

                    Mr. Seetharaman stressed on the role of non-governmental organisations in expanding green cover. He also administered oath to students on protecting planet earth for the posterity. The oath, prepared by the Education Department and the TNPCB, focused on the need for keeping the environment clean, setting up parks, keeping drainage uncluttered, adhering to pollution control norms by industries, proper maintenance of automobiles, judicial use of petroleum products and electric appliances.

Read more »

50 persons arrested

CUDDALORE: 

              Fifty activists, including 14 women, of the Human Rights Trade Union were arrested and remanded to judicial custody when they staged protest before Shasun Chemicals Ltd. here on Tuesday. Police said that they were demanding reinstatement of four employees who were dismissed by the company about two-and-half years ago. The arrests were made as they defied police instructions not to assemble there, sources said.

Read more »

ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பால பணி... துவங்குமா? டூ ரூ.17.5 கோடி ஒதுக்கியும் பயனில்லை

சிதம்பரம் : 

                           விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் 17.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அந்த திட்டம் கைவிடப்பட்டது. ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

                      விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி நீண்ட போராட்டத்திற்கிடையே முடிக்கப்பட்டு தற்போது ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்த பாதையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் - கடலூர் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக சிதம்பரம் மார்க்கமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கடலூர் மார்க்கமாக சென்னை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளுக்கும் அடிக்கடி வாகனங்கள் சென்று வருகிறது. ஆலப் பாக்கம் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
 
                       இதனைக் கருத்தில் கொண்டு பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டத்தில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மேம்பாலம் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட் டுள்ளது. ஆனால் ரயில்வே பாதையில் பல இடங்களில் பாலம் கட்டப்பட்ட போதும் ஆலப்பாக்கம் ரயில்வே பாலம் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. சர்வே பணி, மண் ஆய்வு போன்ற பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் ரயில் கிராசிங் நேரங்களில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்துக்கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப் பற்ற காடு போன்ற இடத் தில் வாகனங்கள் நிற்பதால் பயணிகள் அச்சத்துடன் உள்ளனர்.ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட திட்டம் உள் ளது, விரைவில் கட்டப்படும் என விழுப்புரம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். ஆனால் அதற் கான திட்டம் எங்கே போனது, ஏன் கட்டப்படவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இதே விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் பாதையில் சீர்காழி அருகே அரசூர் ரயில்வே "கேட்' பகுதியில் மேம்பாலம் அமைக் கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.

                  கடலூர் - விருத்தாசலம் சாலையில் கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் ரயில்வேகேட் அருகே 12 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.ஆனால் முக்கிய தேவையான ஆலப்பாக்கம் பாலம் மட்டும் கட்டப்படவில்லை. ரயில்வே பாலம் இல்லாததால் வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாது, கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் பாதிக்கின்ற நிலை உள்ளது. எனவே கைவிடப்பட்ட ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மேம்பால திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தடையற்ற சீரான போக்குவரத் திற்கும், பொதுமக்களுக் கும் உதவிட வேண்டும்.

Read more »

ஒழுங்குமுறை விற்பனை கூட வருவாய் அதிகரிப்பு: வேளாண் அலுவலர் தகவல்

விருத்தாசலம் : 

             ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அதிக வருவாய் வந்ததாக கோட்ட வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
                 விருத்தாசலம் கோட் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் கிராமங்களில் விளைபொருள் குழுக்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரிடையாக ஒழுங்கு முறை விற்பனை கூடத் தின் மூலமாக விற் பனை செய்வது பற்றியும், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து தேவைப்படும் நிறுவனங்கள் நேரிடையாக விவசாயிகளிடையே கொள்முதல் செய்யவும், விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத் தில் சென்ற 2008- 09 ஆண்டில் 54 ஆயிரத்து 893 டன்களாக இருந்த வரத்து, 2009-10ல் 67 ஆயிரத்து 458 டன்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனை கூடத்தின் வருவாய் 93 லட்சத்து 44 ஆயிரத்து 762 லட்சத்தில் இருந்து 1 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரத்து 980 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி

கடலூர் : 

               கடலூரில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை அடங்கிய 217 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பரிசீலனை செய்த கலெக்டர் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற 30 பேருக்கு 63 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Read more »

திருவந்திபுரம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

கடலூர் : 

                      உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு பள்ளிகளில் பசுமை போர்வை ஏற்படுத்த மரக்கன்றுகள் நடும் விழா கடலூரில் நடந்தது.அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டியும், உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டும் பள்ளிகளில் பசுமை போர்வை ஏற்படுத்துதல் தொடக்க விழா திருவந்திரபும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி வரவேற்றார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் சேகர் முன் னிலை வகித்தார்.ருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேஷாத்திரி, ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டது.மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் பழநி நன்றி கூறினார்.

Read more »

அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண்டும்: எம்.எல்.ஏ., அய்யப்பன்

கடலூர் : 

                அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண் டும் என திருமண உதவி தொகை வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் அரசு சேவை இல்லத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலை வழங் கும் விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சேர்மன் தங்கராசு முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் தாமரைச்செல்வன், கவுன்சிலர்கள் நவநீதம் சாமுவேல், இளங்கோ, சமூக நல அலுவலக கண் காணிப்பளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் 69 பேருக்கு தலா 20 ஆயிரம் வீதம் 13.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது:

                      மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவித் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற் போது 25 ஆயிரம் ரூபாயாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.தற்போது பணம் பெற வந்துள்ள பயனாளிகள் 6 மாதத்திற்கு முன் விண்ணபித்திருந்ததால் இவர்களுக்கு பழையத் தொகையான 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. திருமணத்திற்காக சிரமப்படும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் கொண்டு வந்த இந்த திட்டத்திற்காக நிதி உதவி வழங்குவதை பெருமையாக கருதுகிறோம். கடலூர் பகுதியில் சாலைகள், பாலங்கள் என பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக இருந்த பலர் செயல்படுத்த முடியாத திட்டங்களை முதல்வர் கருணாநிதி ஏழைகளின் நிலை அறிந்து பல்வேறு இலவச திட்டங்களையும், மாணவர்களுக்கு கல்வி முதல், "கான்கிரீட்' வீடுகள் திட்டம் வரை நிறைவேற்றி வருகிறார். அரசு செய்து வரும் உதவியை மறக்காமல் முதல்வர் கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

Read more »

ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு: டி.ஆர்.ஓ., தகவல்

சிதம்பரம் : 

                         சிதம்பரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 396 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 31 ஆயிரத்து 726 ரூபாய் மதிப் பில் நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஓ., நடராஜன் வழங்கினார். சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, திருவக்குளம், சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர் ஆகிய 6 குறுவட்டங்களுக் கான ஜமாபந்தி கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. ஜமாபந்தி இறுதி நாளான நேற்று முன்தினம் வரை 2,309 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 396 மனுக்கள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. 1,824 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 89 மனுக்கள் தள் ளுபடி செய்யப்பட்டது.நிறைவு விழாவிற்கு தாசில்தார் காமராஜ் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராமராஜ் முன் னிலை வகித்தார். விழாவில் 396 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 31 ஆயிரத்து 726 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி டி.ஆர்.ஓ., நடராஜன் பேசுகையில், "பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் விவரம் முதல் முறையாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டு வரும் 22ம் தேதி பயனாளிகளுக்கு வழங்கப்படும்' என தெரிவித்தார்.

Read more »

'மது' அருந்தும் இடமாக மாறும் அண்ணா விளையாட்டரங்கம்

கடலூர் : 

                            கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மதில் சுவர்கள் இல்லாமல் உள்ளதால் இரவு நேரத்தில் சமுக விரோதிகள் அமர்ந்து மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருப்பது விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்களுக்கு குறையாகவே இருந்து வருகிறது. ஆனால் கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கம் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைத்துள்ளதை மறுக்க முடியாது.
 
                    இங்கு கால் பந்து, கைப்பந்து, கிரிக்கெட், இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், டென்னிஸ், நீச்சல் குளம், பிற மாவட்டங்களில் இல்லாத அளவில் குவாஷ் அரங்கம் மற்றும் தடகள போட்டிகளுக்கு ஏற்ப ஓடுதளங்கள், பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சியில் ஈடுபடுவதற்கான தனியாக நடை பாதை என அனைத்து வசதிகளும் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற பலர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட விளையாட்டரங்கம் தற்போது பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அரங்கை சுற்றியுள்ள மதில் சுவர் இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனை ஒருவரும் கண்டு கொள்ளாததால் இரவில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து நடைபாதை விளக்குகள் மற்றும் ஒயர்களை திருடிச்செல்வது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடைபயிற்சி பாதையில் அமர்ந்து மது அருந்துவதும் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read more »

கடலூரில் அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்திய லாரி பறிமுதல்

கடலூர் : 

                  கடலூரில் அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்திய லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் தாழங்குடா அருகே உள்ள பெண்ணையாற்றை ஒட்டியுள்ள உப்பனாறு அருகே நேற்று மதியம் லாரி ஒன்று மணலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்க அப்பகுதியினர் உதவச் சென்றபோது, உப்பனாற்றில் இருந்து அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தாசில்தார் தட்சணாமூர்த்தி, வி.ஏ.ஓ., பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று அனுமதியின்றி கிளஞ்சல் ஏற்றி நின்ற லாரியை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நூலகத்திற்கு இடம் தேர்வு செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு

விருத்தாசலம் : 

              விருத்தாசலத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்து தரக்கோரி வாசகர் வட்டம் சார்பில் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.

இதுகுறித்து அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் முருகன் விடுத்துள்ள அறிக்கை:
 
                   விருத்தாசலம் அரசு கிளை நூலகம் 30 ஆண்டிற்கு மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினரின் ஒத்துழைப்போடு பல இடங்கள் தேர்வு செய்த போதிலும், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இறுதியாக காட்டுகூடலூர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலோடு தயாரான ஆவணங்கள் சி.இ.ஓ., வின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பள்ளிக்குரிய இடத்தை நூலக கட்டடம் கட்ட தர வேண்டாம் என கல்விதுறை இயக்குனர் அறிவுறுத்தியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே புதிய நூலகம் கட்டுவதற்கு அரசே இடத்தை தேர்வு செய்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி வாசகர் வட்டம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. போராட்ட தேதி வாசகர் வட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பண்ருட்டியில் பாக்கெட் சாராய விற்பனை "படுஜோர்'

பண்ருட்டி : 

                பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி சித்திரைச்சாவடி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டடம் அருகில் பாக்கெட் சாராய விற் பனை படுஜோராக நடந்து வருகிறது. கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் அதிரடி நடவடிக்கையால் பல இடங்களில் பாக்கெட் சாராய விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது. ஆனால் இங்குள்ள சாராய வியாபாரிகள் விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவியில் இருந்து தினமும் பாக்கெட் சாராயத்தை "பர்சேஸ்' செய்து மோட்டார் பைக் மற்றும் பஸ்களில் கொண்டு வந்து இப்பகுதியில் விற்பனை செய்கின்றனர். நீண்ட நாட்களாக சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior