உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 10, 2012

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் கடலூரில் தானே புயல் நிவாரணப்பணி

கடலூர் : 

           புயல் பாதித்த கடலூரில்சேலம் பெரியார் பல்கலைக் கழக என்.எஸ். எஸ்., மாணவர்கள் துப்புரவு பணிமேற்கொண்டனர். கடந்த 30ம் தேதி வீசிய புயலில் சாலையோரம் இருந்த ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் முறிந்து கீழே விழுந்தன. சாலை யோரம் விழுந்து கிடக்கும் மரங்களை நெடுஞ்சாலைத் துறையினரும், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மின்வாரியத்தினரும் அப்புறப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவைகள் முழுமையாக அப்புறப்படுத்தாததால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

             இதனை அகற்றிடும் பொருட்டுசேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் முத்துச்செழியன் ஏற்பாட்டில் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிங்காரம், ராஜவேல், திட்ட அலுவலர்கள் கனகராஜ், தங்கராஜ், வேல்ராஜ், ஜெய்ராஜ் ஆகியோர் தலைமையில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் 100 பேர் கடலூர் வந்துள்ளனர். இவர்கள் கடலூர் சில்வர் பீச், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். 









Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வை


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/9ffa4128-cb30-447b-8530-593c1e2f1c8f_S_secvpf.gif
 
கடலூர்:

           தானே புயலால் புதுவை மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை இணை செயலாளர் லோகேஷ் ஜா தலைமையிலான இந்த குழுவினர் நேற்று முன் தினம் புதுவையில் புயல்சேத பாதிப்புகளை பார்வையிட்டனர்.  

             
           நேற்றுக்  காலை கடலூரில் சேத பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டது. காலை 9-30 மணி அளவில் கடலூர் சென்ற அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி, புயல் நிவாரண அதிகாரி அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.    கூட்டத்தில் புயல் சேத விவரங்கள் குறித்து வீடியோ பதிவு புகைப்படங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் மத்திய குழுவிடம் அளித்தனர். மேலும் சேத விபரம் குறித்து விவர அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 30 நிமிடம் நடந்தது.

           இதையடுத்து மத்திய குழுவினர் கடலூர் நகர பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து புயல் கரையை கடந்த தாழங்குடா துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளனர் .
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணி தீவிரம்


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/e0cb364a-2f67-42e9-822d-b149827c95e5_S_secvpf.gif
 

கடலூர்:
 
             ‘தானே’ புயலால் சேதம் அடைந்த கடலூர் மாவட்டம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. புயலால் முறிந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை நட்டு மின்இணைப்பு கொடுக்கும் பணியில் உள்ளூர் ஊழியர்களுடன், வெளிமாவட்ட மின்ஊழியர்களும் ஈடுபட்டு உள்ளனர்.  
 
              கடலூர் மாவட்டத்தில் மின்சார நிலையை சீர் செய்வதற்கான பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்காக மட்டும் 300 கோடி ரூபாய் நிதியை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். எனவே பணிகளில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு தேவையான பொருட்களுக்கும், பணியாளர்களுக்கும் நிதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நடைபெற்று வரும் பணிகளை கண்காணிப்பதற்காக சென்னையிலும், கடலூரிலும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கடலூர் மாவட்டத்தில் நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகளில் 82 சதவீதம் அளவுக்கும், கிராம பஞ்சாயத்துகளில் 77 சதவீதம் அளவுக்கும் அத்தியாவசிய பணிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
             விருத்தாச்சலம் போன்ற பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கான மின்இணைப்புகள் அனைத்துக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. இருந்த போதிலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளுக்கும், நகர பஞ்சாயத்துகளுக்கும் பொங்கலுக்கு முன்பாக மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  நீர் நிரம்பி உள்ள இடங்களுக்கும், தூரத்தில் தனித்திருக்கும் இடங்களுக்கும் ஒரு வார காலத்துக்குள் மின்சாரம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகளை செய்வதற்காக இன்னும் கூடுதலான பணியாளர்கள் கடலூர் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 
                வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பொங்கல் விடுமுறை வருகிறதால், அந்த விடுமுறை நாட்களில் வேலை பார்க்கும் மின் ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அக்காலக்கட்டத்தில் பணியாளர்களுக்கு மும்மடங்கு சம்பளம் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தானே புயல் : நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கம் ஒரு நாள் ஊதியத்தை கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணமாக அளிக்க முடிவு

            தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமை தாங்கினார்.

            தமிழகத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க, தமிழக அரசு மேற்கொண்டு வரும் போர்க்கால நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், சாலைப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.














Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior