உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 12, 2009

பொதுவிநியோக திட்டப்பணி கணினி மயமாக்க வேண்டும்

கடலூர் :

                              தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கட லூரில் நடந்தது.

                                மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் தங்கராசு வரவேற்றார்.
மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார். மாநில தலைவர் சாமிநாதன், பொது செயலாளர் ராஜேந்திரன், மாநில துணை தலைவர் ஜெயசந்திர ராஜா கருத்துரை வழங்கினர். அரசு பணியாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு சிவராமன், அமைச்சு பணியாளர் சங்கம் சிங்காரம், சத்துணவு பணியாளர் சங்கம் சீனுவாசன் வாழ்த்துரை வழங்கினர்.

                             கூட்டத்தில் பொது வினியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். அரசு நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தின் அனைத்து பணிகளையும் கணினிமயமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர அமைப்பாளர் தேவராஜ் நன்றி கூறி னார்.

Read more »

கடலூரில் மருத்துவகல்லூரி குடியிருப்போர் சங்கம் தர்ணா

கடலூர் : 

              கடலூரில் அரசு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நலசங்கங்க ளின் கூட்டமைப்பு சார் பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. 


                      போராட்டத்திற்கு அனைத்து குடியிருப்போர் நலசங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அரங்கநாதன் தலைமை தாங் கினார். இணை பொது
செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். இப்ராஹீம், ராஜா முன்னிலை வகித்தனர். பொதுசெயலாளர் மருதவாணன் விளக்கவுரையாற்றினார். வழக்கறிஞர் திருமார்பன், பொது நல இயக்கம் வெண்புறா குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கடலூரில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். திருவந்திபுரத்தை அரசு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் சாலை, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.  கோண்டூரில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். பெண்ணையாற்றில் வெள்ளநீர் நகர் பகுதியில் புகுந்திடாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். மாணவர்கள் வசதிக்காக கடலூருக்கு சிறப்பு பேருந்துகள் காலை, மாலை இரு வேளையும் இயக்க வேண் டும்.  ஒருங்கிணைந்த வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொருளாளர் சம்பத் நன்றி கூறினார்.




Read more »

பட்டாமாற்றல் முகாம் வட்டாட்சியர் அறிவிப்பு

டலூர் : 

கடலூர் வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

                    கடலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கட லூர் வட்டாட்சியர் அலு வலக நில அளவை பிரிவில் பட்டாமாற்றம் மற்றும் புலஎல்லை அளக்ககோரிய மனுக்கள் நிலுவையில் உள்ளவற்றை முடித்திட வரும் 28ம் தேதி வரை பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடக்கிறது. 



                     குறிஞ்சிப்பாடி குறுவட்டத்தில் உள்ள 24 கிராமங்களில் வரும் 14ம் தேதி வரை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் நில அளவர்கள் முகா மிட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளார்கள். எனவே திருவந்திபுரம் குறுவட்டத்தை சேர்ந்த ஏற்கனவே மனு அளித்தவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகங்களில் தங்கள் கோரிக்கை குறித்த கிரைய பத்திர ஆவணங்களுடன் ஆஜராகி தங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Read more »

அரிசி மூட்டைகளை திருட முயற்சி லோடு மேன்கள் தப்பி ஓட்டம்

கடலூர் :

                    ரேஷன்கடைக்கு லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட அரிசி மூட்டைகளை கீழே தள்ளி திருட முயற்சி நடந்தது. பறக்கும் படையினர் பின்தொடர்ந்து வந்து அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். கடலூர் நெல்லிக்குப் பம்  சாலையில் நுகர்பொருள் வாணிபகழக குடோன் உள்ளது.

                 கட லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள  ரேஷன் கடைகளுக்கு இங்கிருந்து அத்தியாவசிய பொருட்கள் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.வழக்கம் போல நேற்று கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சமுட்டிக்குப்பத்திற்கு 200 அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும் படை தாசில்தார் கண் ணன், மாவட்ட வழங் கல் அலுவலர் தேவராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் சங்கர், சுப்ரமணி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை பின்தொடர்ந்து  சென்றனர்.  கடலூர் முதுநகர் அருகே செல்லும்போது  லாரி மீது இருந்த லோடுமேன்கள் சிலர் அரிசி மூட்டைகளை  கீழே தள்ளி னர்.

               இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பறக்கும் படை யினர் அந்த லாரியை மடக்கி நிறுத்தினர். அதிகாரிகள் சுற்றி வளைத்ததை கண்ட லோடுமேன்கள் லாரியில் இருந்து குதித்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரிசி மூட்டைகளை திருட முயன்ற லோடுமேன்களை தேடிவருகிறார்கள். 7 அரிசி மூட்டைகளையும் பறக்கும் படை அதிகாரிகள் மீண்டும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

Read more »

கடல் மீன் தொழில் சட்​டத்​துக்கு எதிர்ப்பு ​ ​ கட​லூர்,​​ விழுப்​பு​ரம் மீன​வர்​கள் ​ ​15 முதல் வேலை​நி​றுத்​தம்

கட​லூர்,​​ டிச.​ 11:​ 

                 கட​லூர்,​​ விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளைச் சேர்ந்த அனைத்து மீன​வர்​க​ளும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மீன் பிடிக்​கச் செல்​வ​தில்லை என்று தீóர்​மா​னித்​துள்​ள​னர்.​ 

                   மீன்​தொ​ழில் ஒழுங்​கு​மு​றைச் சட்​டம் 2009ஐ மத்​திய அரசு நிறை​வேற்ற இருக்​கி​றது.​ இதற்கு நா டு​மு​ழு​வ​தும் மீன​வர்​க​ளி​டையே எதிர்ப்பு கிளம்பி உள்​ளது.​   இந்​தச் சட்​டம் அம​லுக்கு வரும் முன்பே அச்​சட்​டத்​தின் அடிப்​ப​டை​யில்,​​ இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் நட​வ​டிக்கை எடுக்​கத் தொடங்கி விட்​ட​னர்.   இதன் கார​ண​மாக ​ 50-க்கும் மேற்​பட்ட கட​லூர் மீன​வர்​களை இந்​தி​யக் கடற்​படை தாக்​கி​ய​தாக கூறப்​ப​டு​கி​றது.​ இத​னால் மீன​வர்​கள் பெரி​தும் ஆத்​தி​ரம் அடைந்​த​னர்.​

            இது தொடர்​பாக கட​லூர்,​​ விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளைச் சேர்ந்த 64 மீன​வர் பஞ்​சா​யத்​து​க​ளின் பிர​தி​நி​தி​கள்,​​ மற்​றும் அனைத்து மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் கூட்​டம் கட​லூ​ரில் வியா​ழக்​கி​ழமை நடந்​தது.​

           மத்​திய அரசு நிறை​வேற்ற திட்​ட​மிட்டு இருக்​கும் ​ மீன்​பி​டித்​தொ​ழில் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து,​​ மீன​வர்​கள் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வேலை​நி​றுத்​தம் செய்​வது என்று கூட்​டத்​தில் முடிவு செய்​துள்​ள​னர்.​

            வே​லை​நி​றுத்​தம் செய்​யும் காலத்​தில் யாரும் மீன்​பி​டிக்​கச் செல்ல மாட்​டார்​கள்,​​ அனைத்து மீன் அங்​கா​டி​க​ளும் மூடப்​ப​டும்,​​ வீடு​கள் மற்​றும் பட​கு​க​ளில் கறுப்​புக் கொடி ஏற்​றப்​ப​டும்,​​ மீன​வர்​கள் அனை​வ​ரும் கறுப்​புச் சின​னம் அணி​வர் என்​றும் தெரி​வித்​த​னர்.​ த​மிழ்​நாடு மீன​வர் பேரவை சார்​பில் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வேலை​நி​றுத்​தம் நடை​பெ​றும் என்று பேர​வை​யின்
கட​லூர் மாவட்​டத் தலை​வர்  சுப்​பு​ரா​யன் அறி​வித்​துள்​ளார்.​      

            தமிழ்​நாடு மீன​வர் பேரவை சார்​பிóல் நிறு​வ​னத் தலை​வர் அன்​ப​ழ​க​னர் தலை​மை​யில் 17-ம் தேதி தில்​லி​யில் மீன​வர்​கள் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வர் என்​றும் சுப்​பு​ரா​யன் தெரி​வித்​தார்.​

Read more »

பண்​ருட்​டி​யில்​ போக்​கு​வ​ரத்து சீர​மைப்பு ஆலோ​சனைக் கூட்​டம்

பண்​ருட்டி,​​ டிச.​ 11:​ 

               பண்​ருட்​டி​யில் வாக​னப் போக்​கு​வ​ரத்தை ஒழுங்​கு​ப​டுத்​து​வது குறித்த ஆலோ​ச​னைக் கூட்​டம்,​​ பண்​ருட்டி காவல் நிலை​யத்​தில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​பண்​ருட்டி டிஎஸ்பி சிரா​ஜு​தீன் தலை​மை​யில் நடை​பெற்ற இக் கூட்​டத்​தில்,​​ போக்​கு​வ​ரத்து சப்-​இன்ஸ்​பெக்​டர் பச்​சை​யப்​பன் முன்​னிலை வகித்​தார்.​ பண்​ருட்டி தனி​யார் பஸ் தொழி​லா​ளர் சங்​கத் ​ தலை​வர் கோ.காம​ராஜ்,​​ செய​லர் எம்.சாமி​நா​தன்,​​ ​ ​ ஆட்டோ உரி​மை​யா​ளர் மற்​றும் ஓட்​டு​நர் சங்க நிர்​வா​கி​கள் பல​ரும் இதில் கலந்து கொண்​ட​னர்.​

                         பண்​ருட்​டி​யில் வாக​னப் போக்​கு​வ​ரத்தை ஒழுங்​கு​ப​டுத்த அனை​வ​ரும் ஒத்​து​ழைக்க வேண்​டும் என்று கூட்​டத்​தில் கேட்​டுக் கொள்​ளப்​பட்​டது.​ இதன் தொடர்ச்​சி​யாக போலீ​ஸôர் மேற்​கொள்​ள​வி​ருக்​கும் நட​வ​டிக்​கை​கள் தீர்​மா​னங்​க​ளாக நிறை​வேற்​றப்​பட்​டன.​÷பண்​ருட்​டி​யில் இயங்​கும் ஆட்​டோக்​க​ளுக்கு ​ஆர்.சி.​ புக்,​​ இன்​சூ​ரன்ஸ் மற்​றும் உரிய ஆவ​ணங்​கள் இருக்க வேண்​டும்.​ இவை இல்​லாத ஆட்​டோக்​கள் பறி​மு​தல் செய்​யப்​ப​டும்.​ ஆட்​டோக்​க​ளுக்​கென ஒதுக்​கப்​பட்ட இடத்​தில் மட்​டுமே அவை நிறுத்​தப்​பட வேண்​டும்.​ போக்​கு​வ​ரத்​துக்கு இடை​யூ​றாக நிறுத்​தக் கூடாது.​ அவ்​வாறு நிறுத்​தும் பஸ்,​​ ஆட்​டோக்​கள் மீது உரிய நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.​ 

            பண்​ருட்டி வழி​யாக செல்​லும் அனைத்து பஸ்​க​ளும் பஸ் நிலை​யத்​தி​னுள் வந்து செல்ல வேண்​டும்.​ ஆட்​டோக்​க​ளில் அதிக பய​ணி​களை ஏற்​றக் கூடாது.​ ​ பஸ் நிலை​யத்​தி​னுள் பஸ்​கள் அதிக வேகத்​தில் செல்​வ​தை​யும்,​​ அதிக ஒலி எழுப்​பும் காற்று ஒலிப்​பான்​களை பயன்​ப​டுத்​து​வ​தை​யும் தவிர்க்க ​ வேண்​டும் என தீர்​மா​னிக்​கப்​பட்​டது.​

                      இக் கூட்​டத்​தில் பேசிய,​​ அரசு போக்​கு​வ​ரத்​துக் கழக நேர பரி​சோ​தனை அலு​வ​லர் பால​கி​ருஷ்​ணன்,​​ பஸ் நிலை​யத்​தில் மாடு​கள் ஏரா​ள​மாக சுற்​றித் திரி​வ​தால் பஸ்ûஸ குறிப்​பிட்ட இடத்​தில் நிறுத்த முடி​ய​வில்லை.​ மேலும் பஸ் நிலை​யத்​தில் இரு சக்​கர வாக​னங்​கள் அதிக அள​வில் வந்து செல்​வதை கட்​டுப்​ப​டுத்த வேண்​டும் என போலீ​ஸô​ரி​டம் கோரிக்கை விடுத்​தார்.

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் உணவு பதப்படுத்துதல் பயிற்சி

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 11: ​ 

                     இந்​தி​யா​வில் உணவு சரி​யாக பதப்​ப​டுத்​தப்​ப​டா​த​தால் ஆண்​டுக்கு ரூ.50 ஆயி​ரம் கோடி இழப்​பீடு ஏற்​ப​டு​கி​றது என அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக துணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் தெரி​வித்​தார்.​

                   அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ வேளாண்​பு​லத்​தில் வேளாண் பொரு​ளா​தா​ரத் துறை​யும்,​​ புது​தில்லி மத்​திய உயிர் தொழில்​நுட்​பத் துறை​யும் இணைந்து நடத்​தும் மிக​வும் பின் தங்​கிய தாழ்த்​தப்​பட்ட மக​ளி​ருக்​கான 5 நாள் உணவு பதப்​ப​டுத்​து​தல் குறித்த தொழில் முனை​வோர் பயிற்சி முகாம் திங்​கள்​கி​ழமை தொடங்​கி​யது.​ பயிற்​சி​யில் சுமார் 100 பெண்​கள் பங்​கேற்​ற​னர்.​ து​ணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் குத்​து​வி​ளக்​கேற்றி முகாமை தொடங்கி வைத்​துப் பேசி​யது:​ உ​ணவு சரி​யாக பதப்​ப​டுத்​தப்​ப​டா​த​தால் ஆண்​டுக்கு ரூ.50 ஆயி​ரம் கோடி இழப்​பீடு ஏற்​ப​டு​கி​றது.​ இந்த இழப்​பீட்டை தவிர்க்க இது​போன்ற பயற்சி மிக​வும் அவ​சி​ய​மா​ன​தா​கும்.​ மிக​வும் பின் தங்​கிய மாவட்​ட​மான கட​லூர் மாவட்​டத்​தில் இந்த பயிற்சி அளிப்​பது மிக​வும் வரப்​பி​ர​சா​த​மா​கும் என துணை​வேந்​தர் எம்.ராம​நா​தன் தெரி​வித்​தார்.​ வேளாண்​புல முதல்​வர் பி.நாரா​ய​ண​சாமி தலைமை வகித்​தார்.​ வேளாண் பொரு​ளா​தா​ரத் துறைத் தலை​வர் கே.ஆர்.சுந்​த​ர​வ​ர​த​ரா​ஜன் வர​வேற்​றார்.​ இந்​தி​யன் ஒவர்​ஸீஸ் வங்கி முது​நிலை மண்​டல மேளா​ளர் பி.பாஸ்​கர் சிறப்​பு​ரை​யாற்​றி​னார்.​ தொழில் முனை​வோர் பயிற்சி முகா​மில் பயிற்சி பெற்று தொழி​ல​தி​ப​ரான விரு​து​ந​கர் ராஜ்​கு​மார் தனது அனு​ப​வங்​களை எடுத்​து​ரைத்​தார்.​ நி​கழ்ச்​சியை விரி​வு​ரை​யா​ளர் சீனு​வா​சன் தொகுத்து வழங்​கி​னார்.​ விரி​வு​ரை​யா​ளர் ஆர்.ரங்​க​ரா​ஜூலு நன்றி கூறி​னார்.

Read more »

விடு​த​லைச் சிறுத்​தை​கள் ​ஆர்ப்​பாட்​டம்

​ கட​லூர்,​​ டிச.​ 11:​ 
 
                  விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் கட​லூ​ரில் வியா​ழக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ தி ​ரு​மா​வ​ள​வன் எம்.பி.​ வழி​காட்​டுத​லின்​படி,​​ உணவு,​​ உடை,​​ இருப்​பி​டம் ஆகி​ய​வற்​றுக்​காக விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி பல்​வேறு கட்​டப் போராட்​டங்​களை நடத்​தி​வ​ரு​கி​றது.​   
 
                    கட்சி சார்​பில் பெறப்​பட்ட மனுக்​கள் அடிப்​ப​டை​யில் திட்​டக்​குடி வட்​டத்​தில் 8,869 குடும்​பங்​கள்,​​ விருத்​தா​ச​லம் வட்​டத்​தில் 4,753 குடும்​பங்​கள்,​​ காட்​டு​மன்​னார்​கோ​யில் வட்​டத்​தில் 6,750 குடும்​பங்​கள்,​​ சிதம்​ப​ரம் வட்​டத்​தில் 4,450 குடும்​பங்​கள்,​​ பண்​ருட்டி வட்​டத்​தில் 3,076 குடும்​பங்​கள்,​​ கட​லூர் வட்​டத்​தில் 2,076 குடும்​பங்​கள் வசிக்க வீடில்​லா​த​வர்​க​ளாக இருக்​கி​றார்​கள்.​  எ​னவே ​ கட​லூர் மாவட்​டத்​திóல் தாழ்த்​தப்​பட்ட,​பிற்​ப​டுத்​தப்​பட்ட,​​ பழங்​கு​டி​யி​னர்,​​ சிறு​பான்​மை​யி​னர் உழைக்​கும் மக்​கள் அனை​வ​ருக்​கும் 5 சென்ட் வீட்​டு​மனை வழங்க வேண்​டும்,​​ வீடில்​லாத அனை​வ​ருக்​கும் வீடு கட்​டிக் கொடுக்க வேண்​டும் என்ற கோரிக்​கை​க​ளுக்​காக இந்த ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​   மா​வட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் நடந்த இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மா​றன் தலைமை தாங்​கி​னார்.

Read more »

மடக்​கிப்​ பி​டிக்​கப்​பட்ட லாரி சோத​னைக்​குப் பிறகு விடு​விப்பு

கட​லூர்,​​ டிச.​ 11:​ 

                       கட​லூர் சிப்​காட் ஆலை​யில் இருந்து வியா​ழக்​கி​ழமை இரவு புறப்​பட்​டுச் சென்ற ரசா​ய​னக் கழிவு லாரியை சந்​தே​கத்​தின் பேரில் அதி​கா​ரி​கள் சோத​னை​யிட்​ட​னர்.​ ​​ சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் விலங்​கு​க​ளின் எலும்​பில் இருந்து உரம் மற்​றும் ​ கோழித்​தீ​வ​னம் தயா​ரிக்​கும் ரசா​யன தொழிற்​சாலை இயங்கி வரு​கி​றது.​   இந்த ஆலை​யில் இருந்து ரசா​யான கழி​வு​களை ஏற்​றிக்​கொண்டு வியா​ழக்​கி​ழமை இரவு புறப்​பட்ட லாரி விழுப்​பு​ரத்​துக்கு சென்​று​கொண்​டி​ருந்​தது.​ லாரியை திண்​டி​வ​னத்​தைச் சேர்ந்த காஜா ஓட்​டிச்​சென்​றார்.​
             
              இந்​நி​லை​யில்,​​ கட​லூர் முது​ந​கர் பகு​தி​யில் வந்து கொண்​டி​ருந்த இந்த லாரியை சந்​தே​கத்​தின்​பே​ரில் அப் பகுதி பொது​மக்​க​ளும்,​​ நுகர்​வோர் பாது​காப்பு சங்​கத்​தி​ன​ரும் மடக்​கிப் பிடித்​த​னர்.​   மேலும்,​​ இது​கு​றித்து அதி​கா​ரி​க​ளுக்கு தக​வல் தெரி​வித்​த​னர்.​ இதைத் தொடர்ந்து லாரி அரு​கே​யுள்ள காவல் நிலை​யத்​துக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டது.​

            த ​க​வ​ல​றிந்த கோட்​டாட்​சி​யர் செல்​வ​ராஜ்,​​ வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர் ஜெயக்​கு​மார்,​​ மாசு கட்​டுப்​பாட்டு வாரிய அலு​வ​லர் சேகர் ஆகி​யோர் அங்கு விரைந்து வந்து விசா​ரணை நடத்​திய பிறகு லாரியை விடு​வித்​த​னர்.​

               பின்​னர் இது​கு​றித்து மாசு காட்​டுப்​பாட்டு வாரிய அலு​வ​லர் சேகர் கூறி​யது:​ ரசா​யன கழி​வு​களை ஏற்​றிக்​கொண்ட புறப்​பட்ட இந்த லாரி முறை​யாக அனு​மதி பெற்று தான் விழுப்​பு​ரம் மாவட்​டத்​தில் உள்ள உயி​ரி​யல் உரம் தயா​ரிக்​கும் ஆலைக்​குச் சென்​று​கொண்​டி​ருந்​தது.​ இது விசா​ர​ணை​யில் தெரிய வந்​தது.​இ​ருப்​பி​னும்,​​ கடந்த சில மாதங்​க​ளாக இந்த ஆலை​யில் இருந்து வெளி​யேற்​றப்​ப​டும் கழிவு முறை​யாக விழுப்​பு​ரம் மாவட்​டத்​தில் உள்ள சம்​பந்​தப்​பட்ட ஆலைக்கு தான் கொண்டு செல்​லப்​ப​டு​கி​றதா என்​பதை உறு​தி​செய்ய வேண்​டும் என உத்​த​ர​வி​டப்​பட்​டுள்​ளது என்​றார் அவர்.​

Read more »

மருத்​து​வ​ம​னை​யில் இருந்து தப்பிய பெண் கைதி கைது

கடலூர்,​​ டிச.​ 11: ​ 
 
                  கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் போலீ​ஸôர் பிடி​யில் இருந்து தப்​பிச்​சென்ற பெண் கைதியை தனிப்​ப​டை​யி​னர் ஆந்​திர மாநி​லத்​தில் கைது செய்​த​னர்.​ வே​லூர் மாவட்​டம்,​​ ஆம்​பூ​ரைச் சேர்ந்த ராஜா​வின் மனைவி லட்​சுமி ​(33).​ திருட்டு வழக்கு தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட அவர் பின்​னர்,​​ நீதி​மன்ற உத்​த​ர​வின் பேரில்,​​ கட​லூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.​ கடந்த 5-ம் தேதி ஏற்​பட்ட உடல்​ந​லக்​கு​றை​வை​ய​டுத்து,​​ கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட அவ​ருக்கு மக​ளிர் காவ​லர் ​ ​ காவ​லுக்கு இருந்​தார்.​÷இந்​நி​லை​யில்,​​ கடந்த 7-ம் தேதி அதி​காலை கழி​வ​றைக்​குச் செல்​வ​தா​கக் கூறிச்​சென்ற லட்​சுமி அங்​கி​ருந்து தப்​பி​னார்.​
 
                   இ​தை​ய​டுத்து,​​ பணி​யில் கவ​னக்​கு​றை​வாக இருந்​த​தா​கக் கூறி மக​ளிர் காவ​லர் இந்​திரா பணி​யிடை நீக்​கம் செய்ப்​பட்​டார்.​
 
                 இ​த​னி​டையே,​​ மத்​திய சிறை கண்​கா​ணிப்​பா​ளர் ஆனந்த் உத்​த​ர​வின்​பே​ரில்,​​ அமைக்​கப்​பட்ட தனிப்​ப​டை​யி​னர் தலை​ம​றை​வான லட்​சு​மியை ஆம்​பூர் பகு​தி​யில் ஈடு​பட்​ட​னர்.​ இந்​நி​லை​யில்,​​ ஆந்​திர மாநி​லம்,​​ குப்​பம் கிரா​மத்​தில் இருந்​து​வந்த லட்​சு​மியை ஆந்​திர போலீ​ஸôர் உத​வி​யு​டன் தனிப்​ப​டை​யி​னர் கைது செய்​த​னர்.​ அவ​ரி​டம் நடத்​திய விசா​ர​ணை​யில்,​​ கிரா​மத்​தில் தனி​யாக இருக்​கும் தனது குழந்​தை​க​ளைப் பார்ப்​ப​தற்​காக,​​ அவர் தப்​பிச் சென்​றது தெரிய வந்​தது.

Read more »

பண்ருட்டியில் அதி​முக பிர​மு​கர் கைது:​ காவல் நிலை​யம் முற்​றுகை

பண்ருட்டி,​​ டிச.​ 11:​ 

                 பண்​ருட்​டி​யில் சொத்து பிரச்னை வழக்​கில் கட்ட பஞ்​சா​யத்​துக்கு வர​ம​றுத்​த​வ​ருக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தா​கக் கூறி அதி​முக பிர​மு​கர் பன்​னீர்​செல்​வத்தை போலீ​ஸôர் வெள்​ளிக்​கி​ழமை கைது செய்​த​னர்.​ இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த கட்​சி​யி​னர் காவல் நிலை​யத்தை முற்​று​கை​யிட்டு ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​

                       பண்​ ருட்டி வட்​டம்,​​ ராம​சாமி தெரு​வைச் சேர்ந்​த​வர் சையது இஸ்​மா​யில் ​(51).​ இவ​ரும்,​​ இவ​ரது சகோ​த​ரர்​கள் சலீம் இப்​ரா​ஹிம்,​​ முஸ்​தபா ஆகி​யோ​ரும் சேர்ந்து கூட்​டாக தொழில் செய்து வந்​த​னர்.​ இதில் ஈட்​டிய வரு​வாய் மூலம் வாங்​கப்​பட்ட சொத்​து​கள் சலீம் இப்​ரா​ஹிம் பெய​ரில் உள்​ளன.​ இத​னி​டையே,​​ உடல்​ந​லக்​கு​றை​வால் அவ​திப்​பட்ட சலீம் இப்​ரா​ஹிம் கடந்த சில ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் இறந்​தார்.​

                   இ​தை​ய ​டுத்து,​​ பொது சொத்தை பிரிப்​ப​தில் சலீம் இப்​ரா​ஹிம் குடும்​பத்​தி​ன​ருக்​கும்,​​ சையது இஸ்​மா​யி​லுக்​கும் இடையே பிரச்னை ஏற்​பட்​டது.​ இது​தொ​டர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது.​ இந்​நி​லை​யில்,​​ இது​தொ​டர்​பாக பேசி முடிக்க வரு​மாறு ஜெயல​லிதா பேர​வை​யின் முன்​னாள் செய​ல​ரான பன்​னீர்​செல்​வம் சையது இஸ்​மா​யி​லுக்கு அழைப்பு விடுத்​தா​ராம்.​ ஆனால்,​​ அதை அவர் ஏற்​க​ம​றுத்​து​விட்​டா​ராம்.​

                      இ​தை​ய​டுத்து,​​ பன்​னீர்​செல்​வம்,​​ அவ​ரது ஆத​ர​வா​ளர்​கள் சையது இப்​ரா​ஹிம்,​​ பயாஸ் அக​மது,​​ அப்​பாஸ்,​​ அப்​துல் காதர் ஆகி​யோர் சேர்ந்து,​​ கட​லூர் சாலை​யில் உள்ள இடத்தை ஆக்​கி​ர​மித்​த​ன​ராம்.​ இது​தொ​டர்​பாக பண்​ருட்டி காவல் நிலை​யத்​தில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சையது இஸ்​மா​யில் புகார் கொடுத்​தார்.​

                           இந்​நி​லை​யில்,​​ வெள்​ளிக்​கி​ழமை காலை காந்தி பூங்கா அரு​கே​யுள்ள கடை​யில் பேசிக்​கொண்​டி​ருந்த அதி​முக பிர​மு​கரை காடாம்பு​லி​யூர் இன்ஸ்​பெக்​டர் செல்​வம் மற்​றும் போலீ​ஸôர் விசா​ர​ணைக்​காக ​ புதுப்​பேட்டை காவல் நிலை​யத்​துக்கு அழைத்து சென்​ற​னர்.​ பின்​னர்,​​ கொலை மிரட்​டல் வழக்​குப் பதிந்து கைது செய்​த​னர்.​  இ​து​கு​றித்த தக​வல் அறிந்த அதி​மு​க​வி​னர் மற்​றும் ஆத​ர​வா​ளர்​கள் புதுப்​பேட்டை காவல் நிலை​யத்தை முற்​று​கை​யிட்டு ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ இ​த​னி​டையே,​​ பண்​ருட்டி குற்​ற​வி​யல் நடு​வர் நீதி மன்​றத்​தில் ஆஜர்​ப​டுத்​தப்​பட்ட பன்​னீர்​செல்​வத்தை 15 நாள்​கள் நீதி​மன்​றக் காவ​லில் வைக்​கு​மாறு குற்​ற​வி​யல் நீதித் துறை ​ நடு​வர் வாசு​தே​வன் உத்​த​ர​விட்​டார்.​
            இ ​தற்கு கண்​ட​னம் தெரி​வித்த அதி​மு​க​வி​னர் ஜெயல​லிதா பேரவை நக​ரச் செய​லர் எம்.எம்.​ கம​லக்​கண்​ணன் தலை​மை​யில் போலீ​ஸô​ரை​யும்,​​ தமி​ழக அர​சை​யும் கண்​டித்து கோஷ​மிட்​ட​படி முக்​கி​யச் சாலை வழி​யாக ஊர்​வ​ல​மா​கச் சென்​ற​னர்.​ இ​த​னால் ஏற்​பட்ட பதற்​றத்​தை​ய​டுத்து,​​ பண்​ருட்​டி​யில் கடை​கள் அடைக்​கப்​பட்​டன.​

Read more »

கலச​லி‌ங்​க‌ம் ​பாலிடெக்னிக்கி‌ல் ம‌ண்​டல வி‌ளை​ய‌ô‌ட்​டு‌ப் ‌பே‌ô‌ட்டி

  நெய்வேலி ம‌ண்​டல பாலிடெக்னிக்  க‌ல்​லூ​ரி​க​ளு‌க்​கி​‌டை​யி​ல‌ôன வி‌ளை​ய‌ô‌ட்​டு‌ப் ‌பே‌ô‌ட்​டி​க‌ள்,​​ கிரு‌ஷ்​ண‌ன்​‌கே‌ô​வி‌ல் அரு‌ள்​மிகு கலச​லி‌ங்​க‌ம் ப‌ôலி​‌டெ‌க்​னி‌க் க‌ல்​லூ​ரி​யி‌ல் ந‌டை​‌பெ‌ற்​றது.​​ சது​ர‌ங்​க‌ம்,​​ ‌கேர‌ம்,​​ இற​கு‌ப் ப‌ந்து ம‌ற்​று‌ம் ‌மே‌ஜை‌ப் ப‌ந்து வி‌ளை​ய‌ô‌ட்​டு‌ப் ‌பே‌ô‌ட்​டி​க‌ள் ந‌டை​‌பெ‌ற்​றன.​​ ‌பே‌ô‌ட்​டி​க‌ளை கலச​லி‌ங்​க‌ம் இ‌ன்‌ஸ்‌ட்​டி​யூ‌ட் ஆ‌ப் ‌டெ‌க்​ன‌ô​லஜி முத‌ல்​வ‌ர் எ‌ஸ்.ஆ‌ர்.ஸ்ரீகு​ம‌ô‌ர் ‌தெ‌ôட‌ங்கி ‌வை‌த்​து‌ப் ‌பேசி​ன‌ô‌ர்.​​ ‌தெ‌ôட‌க்க விழ‌ô​வி‌ல் கலச​லி‌ங்​க‌ம் க‌ல்​வி​யி​ய‌ல் க‌ல்​லூ​ரி​யி‌ன் தனி அலு​வ​ல‌ர் ​ ல‌ட்​சு​ம​ண‌ன்,​​ நி‌ர்​வ‌ôக அதி​க‌ôரி கரு‌ப்​ப​ச‌ôமி உ‌ள்​ளி‌ட்ட பல‌ர் கல‌ந்து ‌கெ‌ô‌ண்​ட​ன‌ர்.​​ ‌கேர‌ம் ‌பே‌ô‌ட்​டி​யி‌ல் ர‌ôஜ​ப‌ô​‌ளை​ய‌ம் பி.ஏ.சி.ஆ‌ர்.​ ப‌ôலி​‌டெ‌க்​னி‌க் க‌ல்​லூ​ரி​யு‌ம்,​​ சது​ர‌ங்​க‌ப் ‌பே‌ô‌ட்​டி​யி‌ல் ந‌ôச​‌ரே‌த் ‌ஜெய​ர‌ô‌ஜ் அ‌ன்​ன​ப‌ô‌க்​கி​ய‌ம் ப‌ôலி​‌டெ‌க்​னி‌க் க‌ல்​லூ​ரி​யு‌ம்,​​ இற​கு‌ப் ப‌ந்​து‌ப் ‌பே‌ô‌ட்​டி​யி‌ல் ‌கே‌ôவி‌ல்​ப‌ட்டி ல‌ட்​சுமி அ‌ம்​ம‌ô‌ள் ப‌ôலி​‌டெ‌க்​னி‌க் க‌ல்​லூ​ரி​யு‌ம்,​​ ‌மே‌ஜை‌ப் ப‌ந்​து‌ப் ‌பே‌ô‌ட்​டி​யி‌ல் ந‌ôக‌ர்​‌கே‌ô​வி‌ல் ச‌ன் இ‌ன்‌ஸ்‌ட்​டி​யூ‌ட் ஆ‌ப் ‌டெ‌க்​ன‌ô​லஜி க‌ல்​லூ​ரி​யு‌ம் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்​றன.​​ ‌பே‌ô‌ட்​டி‌க்​க‌ôன ஏ‌ற்​ப‌ô​டு​க‌ளை கலச​லி‌ங்​க‌ம் ப‌ôலி​‌டெ‌க்​னி‌க் க‌ல்​லூ​ரி​யி‌ன் உட‌ற்​க‌ல்வி இய‌க்​கு​ந‌ர் ‌செ‌ல்​வ​க​‌ணே‌ஷ் ‌செ‌ய்​தி​ரு‌ந்​த‌ô‌ர்.​

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior