உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 22, 2011

கடலூர் சிறையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வேட்பு மனுவில் கையெழுத்து

கடலூர்:

         கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரியம்பிச்சை வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னைக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.  அதையடுத்து திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்தமாதம் 13-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

             இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் பரஞ்ஜோதி நேற்று மனுதாக்கல் செய்தார். தி.மு.க. சார்பில் ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  நேரு நில அபகரிப்பு வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அதனைத்தொடர்ந்து கே.என்.நேருவின் வக்கீல்கள் ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை கடலூர் ஜெயிலுக்கு சென்றனர். சிறை அதிகாரிகள் அனுமதி பெற்று திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கே.என்.நேருவிடம் கையெழுத்து பெற்று சென்றனர். 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செப்டெம்பர் 25ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூர்:

          கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

        தமிழகத்தில் தனியார் முன்னணி நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்கள் நிரப்பப்படவுள்ளனர். அதையொட்டி வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

பங்கேற்கும் நிறுவனங்களும், ஊதிய விவரமும்:

ஜெ.கே., டயர் - 
சிவில் மற்றும் கம்ப்யூட்டர் தவிர அனைத்து டிப்ளமோ இன் இன்ஜினியரிங், வயது 18 முதல் 22 வரை இருக்க வேண்டும். 
மாத ஊதியம் 7,500 ரூபாய்.

செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை, 

10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி
வயது 18 - 20, 
உதவித்தொகை மாதம் 5,000 ரூபாய். 

டாடா நிறுவனம்

12ம் வகுப்பு தேர்ச்சி,
வயது 18 - 20 வரை, 
மாதம் 6,900 ரூபாய். 

ஏர்டெல் நிறுவனத்தில் 

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக், 
வயது 18 - 35,
கல்வித் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். 
குறைந்த பட்சம் மாதம் 7,000 ரூபாய்.

ஐ.எஸ்.எஸ்.எஸ்.டி.பி., 

செக்யூரிட்டி சர்வீஸ்,
அனைத்து கல்வித் தகுதிகளும்,
வயது வரம்பு இல்லை. 
கல்வித்தகுதிக் கேற்ற ஊதியம். 
குறைந்தபட்சம் 7,195 ரூபாய்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.














Read more »

இலவச மடிக்கணினியை கொண்டு மாணவர்கள் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத்

விருத்தாசலம்:

             மடிக்கணினியை கொண்டு மாணவர்கள் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அரசு பள்ளியில் சனிக்கிழமை நடந்த மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் சம்பத் பேசினார்.

           இதில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினர்.

விழாவில் அமைச்சர் செல்விராமஜெயம் பேசியது: 

            இந்த மடிக்கணினியை பயன்படுத்தி தங்கள் கல்வி அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும். எனது பிள்ளைகள் கூட மடிக்கணினி கேட்டார்கள். என்னால் அப்போது வாங்கித்தர முடியவில்லை. ஆனால், இன்று ஜெயலலிதா அன்னையாக இருந்து மடிக்கணினி வழங்கி இருக்கிறார். அவருக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

மைச்சர் சம்பத் பேசியது: 

               மடிக்கணினி வழங்கும் திட்டம் மகத்தான திட்டமாகும். ஏழை மாணவர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.  முதல்வர் உங்களுக்கு உற்றத்தாயாக இருந்து மடிக்கணினி வழங்குகிறார். பாடங்களில் உள்ள சந்தேகங்களை கண்டறிந்து நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் இடைநிற்கக்கூடாது. அதற்காகத்தான் இந்த மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களைவிட நீங்களும் சிறப்பாக பயின்று தேர்ச்சிபெற முடியும். மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினியில் தனியாக சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதை யார் வாங்கிப் பயன்படுத்தினாலும் கண்டுபிடித்துவிடுவோம். மாணவர்கள் மடிக்கணினியை பயன்படுத்தி உலக நடப்புகளைக் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

                    மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி, முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலர் பத்ரூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.








Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

            உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் திங்கட்கிழமை வெளியிட்டார்.

          கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள் மற்றும் ஐந்து நகராட்சிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக மாவட்ட வாக்காளர் பட்டியலை திங்கட்கிழமை கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சடையப்பன் பெற்றுக் கொண்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சினேகலதா, கடலூர் நகராட்சி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் அமுதவல்லி கூறியது:

          நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அருகில் உள்ள தாசில்தார், ஆர்.டி.ஓ.,விடம் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவட்டத்தில்

8,21,685 ஆண்கள்,
7,93,791 பெண்கள்

மொத்தம் 16,15,476

வாக்காளர்கள் உள்ளனர்.

           அதில்

ஐந்து நகராட்சிகளில்

1,31,524 ஆண் வாக்காளர்களும்,
1,32,851 பெண் வாக்காளர்களும்

மொத்தம் 2,64,375 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில்,

கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் சிதம்பரம் ஆகிய நகராட்சிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். 

விருத்தாசலம் நகராட்சியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

அதேப்போன்று மாவட்டத்தில் உள்ள 16 பேரூட்சிகளில்

91,881 ஆண்கள்,
88,094 பெண்கள்
மொத்தம் 1,79,975 வாக்காளர்களும்,

13 ஊராட்சி ஒன்றியங்களில்

5,98,280 ஆண்கள்,
5,72,846 பெண்கள்
மொத்தம் 11,71,126

வாக்காளர்கள் உள்ளனர்.

அதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் மட்டும் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

            உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக ஐந்து நகராட்சிகளில்

329 ஓட்டுச்சாவடிகளும், 1

6 பேரூராட்சி பகுதிகளில் 276 ஓட்டுச்சாவடிகளும்,

13 ஊராட்சி ஒன்றியங்களில் 2,772 ஓட்டுச்சாவடிகள்

மொத்தம் 3,377 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.










Read more »

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் ஓட்டுப்பெட்டிகள்

கடலூர்:

          உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்திற்குத் தேவையான ஓட்டுப் பெட்டிகள் மதுரை மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கான தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

               மற்ற பதவிகளுக்கான தேர்தல் சாதாரணமாக ஓட்டுச் சீட்டின் மூலம் ஓட்டுப்பதிவு செய்து பெட்டியில் போடப்படும். அதற்காக கடலூர் மாவட்டத்தில் 1,500 ஓட்டுப்பெட்டிகள் மட்டும் இருப்பு இருந்தது. இந்நிலையில் மதுரையில் இருந்து 5,000 ஓட்டுப்பெட்டிகள் கடலூர் மாவட்டத்திற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டன. அவற்றில் முதல் கட்டமாக 2,000 ஓட்டுப்பெட்டிகள் மதுரையில் இருந்து மாவட்டத்திற்கு வந்திறங்கியுள்ளன.















Read more »

M.K. Stalin meeting K. N. Nehru and K. Ponmudy now lodged in Cuddalore Central Prison


http://www.thehindu.com/multimedia/dynamic/00788/22TH_STALIN_PRISON_788235e.jpg

 Former Deputy Chief Minister M.K. Stalin met former Cabinet colleagues K.N. Nehru and K. Ponmudy in the Cuddalore Central Prison on Wednesday. Photo: C. Venkatachalapathy

       People will teach Jayalalithaa a proper lesson and vote against her autocratic rule not only in the Tiruchi by-poll but also in the local body elections, former Deputy Chief Minister M.K. Stalin said here on Wednesday. Talking to reporters here after meeting K. N. Nehru and K. Ponmudy now lodged in Cuddalore Central Prison, Mr. Stalin charged the State Election Commission with acting as a handmaid of the AIADMK. If the State Election Commission adopted any arbitrary practice, the DMK would seek legal redress to ensure fair conduct of the elections. He was accompanied by former Health Minister M.R.K. Pannerselvam, former MLA Ela.Pugazhendi and Chennai Mayor R. Subramanian.

Another warrant

           The Tiruchi police served another arrest warrant on Mr. Nehru on Wednesday. It has been handed over to Jail Superintendent G. Shanmugasundaram. The new case was booked on the basis of a complaint filed by P. Karunanidhi of Kollampalayam in Erode district alleging that Mr. Nehru and nine others had grabbed 10,000 sq.ft. near the Tiruchi airport in 2007. Mr. Nehru is in jail in a case related to the land grab for construction of the party office in Tiruchi. About the second arrest warrant, the Jail Superintendent clarified that if Mr. Nehru secured bail in the earlier case, the jail authorities had to release him immediately. Now, with the second warrant pending against him, he would be produced before the relevant court and not enlarged on bail.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior