உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

கடலூர் மாவட்ட ஆட்சியர் உட்பட 21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம்: தமிழக அரசு

            21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவு

(ஆட்சியர்கள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

        பி.உமாநாத்-நிதித் துறை இணைச் செயலாளர் (கோவை மாவட்ட ஆட்சியர்).

பி.சீதாராமன்-சுனாமி திட்ட இயக்குநர் (கடலூர் மாவட்ட ஆட்சியர்).

எம்.வள்ளலார்-தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையாளர் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்).

சி.காமராஜ்-போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் (ஈரோடு மாவட்ட ஆட்சியர்).

ராஜேந்திர ரத்னு-சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை இணைச் செயலாளர் (கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்).

ஜெ. உமா மகேஸ்வரி-உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் (கரூர் மாவட்ட ஆட்சியர்).

ஆர்.பழனிச்சாமி-நகராட்சி நிர்வாகங்களின் இணை ஆணையாளர் (விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்).

எம்.விஜயகுமார்-சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை துணைச் செயலாளர் (பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்).

ஏ.சுகந்தி-சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட துணைச் செயலாளர் (புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்)

.டி.என்.ஹரிஹரன்-ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துணைச் செயலாளர் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்).

ஜெ.சந்திரகுமார்-வருவாய்த் துறை இணைச் செயலாளர் (சேலம் மாவட்ட ஆட்சியர்).

எம்.எஸ்.சண்முகம்-தொழில் துறை இணைச் செயலாளர் (தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்).

எம்.ஜெயராமன்-தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணைச் செயலாளர் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்).

டி.பி.ராஜேஷ்-தமிழ் வளர்ச்சித் துறை, அறநிலையங்கள், செய்தித் துறை துணைச் செயலாளர் (திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்).

சி.சமயமூர்த்தி-பொதுத் துறை இணைச் செயலாளர் (திருப்பூர் மாவட்ட ஆட்சியர்).

வி.கே.சண்முகம்-வேளாண்மைத் துறை இணைச் செயலாளர் (விருதுநகர் மாவட்ட ஆட்சியர்).

டி.கே.பொன்னுசாமி-எரிசக்தித் துறை இணைச் செயலாளர்  (அரியலூர் மாவட்ட ஆட்சியர்).

வி.பழனிகுமார்-தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் (வேலூர் மாவட்ட ஆட்சியர்).

எஸ்.மதுமதி-சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்)-(நாமக்கல் மாவட்ட ஆட்சியர்).

வி.சம்பத்-தமிழ்நாடு வெடிபொருட்கள் நிறுவன மேலாண் இயக்குநர்-(சிவகங்கை மாவட்ட ஆட்சியர்).

மகேசன் காசிராஜன்-தமிழ்நாடு நீர்ப்பாசன மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநர்-(திருச்சி மாவட்ட ஆட்சியர்).

Read more »

மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்றனர் கடலூர் மீனவர்கள்


மீன்களை கடலூர் துறைமுகத்தின் மீன் இறங்கு தளத்தில் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

  
கடலூர்:
 
           45 நாள் தடைகாலம் முடிந்து திங்கள்கிழமை கடலுக்குச் சென்ற கடலூர் மீனவர்கள், அதிக அளவில் மத்தி மீன்களைப் பிடித்து வந்தனர். 

             மீன்கள் அதிகம் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், கடல் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்க ஆண்டு தோறும், தமிழக அரசால் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை காலத்தில் கடலூரில் மீன்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. வெளியூர்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டன. மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் வஞ்சரம் மீன் கிலோ ரூ. 500 வரை உயர்ந்தது. 

              கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை விலை போகும் சங்கரா மீன்கள்கூட, கிலோ ரூ. 200 முதல் ரூ. 230 வரை விற்பனை செய்யப்பட்டன.இந்த ஆண்டு மீன்பிடித் தடைகாலம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியுடன் முடிவடைந்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். 62 கி.மீ. நீள கடற்கரை உள்ள கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. மீன் பிடித் தடைக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, மிகப்பெரிய விசைப் படகுகள் சுமார் 1,000 மற்றும் ஏராளமான சிறிய விசைப் படகுகளும் மீன்பிடிக்கச் சென்றன. 

மீன்கள் பிடிபட்டது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது: 

             மீன் பிடித் தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்ற பெரிய படகுகளில் 20 சதவீதமும், சாதாரணப் படகுகளில் 50 சதவீதமும் திங்கள்கிழமை கரை திரும்பின. கரை திரும்பிய படகுகளில் பெரும்பாலும் மத்தி மீன்கள் அதிகமாகக் காணப்பட்டன. ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் பெரிய விசைப் படகுகள் கரை திரும்பிய பிறகுதான், மீன்கள் எந்த அளவுக்குப் பிடிபட்டன என்ற விவரம் முழுமையாகத் தெரியவரும். சூறை, கவலை, கெந்தலு, சங்கரா ஆகிய மீன்கள், மிகக் குறைவாகக் கிடைத்தன. திங்கள்கிழமை கடல் காற்று கொஞ்சம் அதிகமாக இருந்தது. எனினும் அதனால் மீன்பிடித் தொழிலில் பாதிப்பு எதுவும் இல்லை.

             மத்தி மீன்கள் ஒரு பெட்டி (70 கிலோ) திங்கள்கிழமை ரூ. 400 முதல் ரூ. 500 வரை விலை போனது. அவை பெரும்பாலும் கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கொண்டு செல்லப் பட்டன. கேரள மாநிலத்தில் மீன் பிடித் தடைகாலம் இனிமேல்தான் தொடங்க உள்ளது. அதன் பிறகு கடலூரில் பிடிபடும் மத்தி மீன்களுக்கு, கேரளத்தில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.



Read more »

சிதம்பரம் மணலூரில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பந்து பூ

சிதம்பரம்:

             ஆண்டுக்கு ஒருமுறை, மே மாதத்தில் மட்டும் பூக்கும் அழகிய பந்து பூ சிதம்பரத்தில் இப்போது பூத்துள்ளது. இதனை அறிந்த இப்பகுதி மக்கள் அந்த அரிய வகை பூவை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர். சிதம்பரம் மணலூரில் உள்ள நித்யா நர்சரி கார்டனில் இந்த அதிசயப் பூ பூத்துள்ளது. 

இது குறித்து நர்சரி கார்டனின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் கூறியது:

             "இந்த பூ லில்லி வகை குடும்பத்தைச் சேர்ந்தது. மலைப்பிரதேசத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இந்த பூ காணப்படும். இந்த பூ பால்பூ என்றும், மே மாதம் பூப்பதால் மே பூ என்றும் அழைக்கப்படுகிறது. கிழங்கு போன்ற இதன் விதையை பூமியிலோ அல்லது பூச்சாடியிலோ விதைத்தால் வருடத்திற்கு ஒருமுறை திடீரென மே மாதத்தில் இலை இல்லாமல் நீண்ட தண்டுபோல் வளர்ந்து பந்து போன்று பூ பூக்கும். இந்த பூ ஒரு மாதம் வரை வாடாமல் இருக்கும். பின்னர் தண்டு மற்றும் பூவும் வாடி செடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். பின்னர் அடுத்த வருடம் மே மாதம்தான் இந்த பூ பூக்கும்' என்றார் அவர்.



Read more »

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் தொடக்கம்

கடலூர்:

           2011 மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிக், மற்றும் ஆங்கிலோ இந்திய தேர்வுகள் எழுதி 3 அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் உடனடித் தேர்வு எழுதத் தேவையான விண்ணப்பப் படிவங்கள் திங்கள்கிழமை (மே- 30) முதல் ஜூன் 3-ம் தேதி வரை விநியோகக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்து உள்ளது. 

 அரசுத் தேர்வுகள் துறை கடலூர் மண்டலத் துணை இயக்குநர் தே. ராமச்சந்திரன் இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

                பள்ளிகள் மூலமாகத் தேர்வு எழுதித் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில், 3-6-2011 வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

 தேர்வுக் கட்டணம்: 

எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எஸ்.எல்.சி.யில் 3 பாடங்கள் வரை ரூ. 125. 
மெட்ரிக் ஒரு பாடம் ரூ. 135. 
2 பாடங்கள் ரூ. 235. 
3 பாடங்கள் ரூ. 335. 

ஆங்கிலோ இந்தியத் தேர்வு ஒரு பாடம் ரூ. 85.
2 பாடங்கள் ரூ. 135. 
3 பாடங்கள் ரூ. 185.  

           2011 மார்ச் மாதம் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதித் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக் கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பணமாகச் செலுத்தி, விண்ணப்பத்தை அளிக்கலாம்.

               தனித் தேர்வர்கள், அரசுக் கருவூலத்தில் கட்டணத்தைச் செலுத்தி, ரசீதினை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவற்றுடன் 3-6-2011க்குள் அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே இலவச ஆட்டோ சேவை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:

             காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். 

           அதனைத் தொடர்ந்து இலவச ஆட்டோ சேவையையும் தொடங்கி வைத்தார். அவசர காலத்தில் பொதுமக்கள் இந்த ஆட்டோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் ஏ. அருண்மொழிதேவன் தலைமை வகித்தார். குமராட்சி ஒன்றியச் செயலாளர் கே.ஏ. பாண்டியன் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர் நாக. முருகுமாறன், மாவட்ட பேரவைச் செயலாளர் வி.கே. மாரிமுத்து, ஒன்றிய பேரவைச் செயலாளர் ஜெயமணி, காட்டுமன்னார்கோவில் நகர செயலாளர் எம்ஜிஆர்தாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லால்பேட்டை நகரச் செயலாளர் நஜீர்அகமது நன்றி கூறினார்.




Read more »

கடலூரில் அரசு வழங்கும் இலவச பொருட்களை பெற ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு

கடலூர்: 

           அரசு வழங்கும் இலவச பொருட்களை பெறுவதற்காக, ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, தேர்தலுக்குப் பின் அதிகரித்து வருகிறது.

            கடந்த தி.மு.க., அரசில் ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் "டிவி', காஸ், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம், இலவச நிலம் உள்ளிட்ட பல திட்டங்கள் அனைத்தும், ரேஷன் கார்டு அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் அரிசி இலவசம், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம், தாலிக்கு தங்கம், பசுமை வீடு, ஆடு, மாடு என ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. 

              இந்த இலவச பொருட்களை விரைந்து வழங்குவதற்காக, அ.தி.மு.க., அரசு சார்பில், தனியாக ஒரு துறையே செயல்பட்டு வருகிறது. அரசு வழங்கும் இச்சலுகையை பெறுவதற்காக, பொதுமக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஏற்கனவே தி.மு.க., ஆட்சியில் இருந்த இலவசங்களை விட, இந்த ஆட்சியில் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை முழுமையாக பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு அடிப்படையாக உள்ள ரேஷன் கார்டு பெற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள், ஒரே ரேஷன் அட்டையை பயன்படுத்தி வந்தனர். 

              அரசு வழங்கும் சலுகையை பெறுவதற்காக, கூட்டுக் குடும்பமாக உள்ளவர்கள் அவற்றை பிரித்து ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து வருகின்றனர். இதன் காரணமாக, வழக்கமாக மாதம் தோறும் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களை விட, தற்போது 25 சதவீத விண்ணப்பங்கள் கூடுதலாக வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Read more »

கடலூரில் அரசு துறை தேர்வு: 817 பேர் பங்கேற்பு

கடலூர் : 

            கடலூரில் கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் அரசு துறை தேர்வுகளின் நேற்று அதிகளவாக 817 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள அரசு துறைகளின் பதவி உயர்வுக்காக துறை சார்ந்த கணக்கு தேர்வு உள்ளிட்ட அனைத்து துறைகள் சம்பந்த பட்ட துறை தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. 

             கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வாளாகத்தில் துறை தேர்வுகள் கடந்த 24ம் தேதி துவங்கியது. காலை, மாலை இரு வேளைகளும் தேர்வுகள் நடந்து வருகிறது. இத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த ஆறு நாட்களாக நடந்து வரும் தேர்வில் நேற்று நடந்த தேர்வில் 1,144 பேர் தேர்வு எழுத அழைப்பு அனுப்பட்டிருந்தது. அதில் 817 பேர் பங்கேற்றனர். பதவி உயர்விற்கான தேர்வு என்பதால் அரசு பணியில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர். 




Read more »

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சார்நிலை பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கடலூர் : 

           சார்நிலை பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. 

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு 1 மற்றும் தொகுதி 1 முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் உள்ள புத்தகங்களை படித்து பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 



Read more »

சிதம்பரத்தில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வேலை வாய்ப்பு முகாம்

சிதம்பரம் : 

          ஏ.சி.டி., இண்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்களின் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 

             சிதம்பரத்தில் உள்ள ஏ.சி.டி., இன்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்களின் கூட்டு இலவச திட்டமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் சிதம்பரத்தில் உள்ள ஏ.சி.டி., இன்டர்நேஷனல் தலைமை அலுவலகம் மற்றும் விருத்தாசலத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. 

          முகாமில் 63 சிறுகுறு மற்றும் டைனி நிறுவனங்களும் 11 பெரிய நிறுவனங்களும் மாணவர்களை தேர்வு செய்தது. ஏ.சி.டி., இன்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்கள், தமிழகத்திலுள்ள கிளை நிறுவனங்களில் பயிற்சி முடித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற 298 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இன்டர்நேஷனல் ஐ.டி. சொசைட்டி நிர்வாக இயக்குனர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஆர்.பி., இன்போடெக் நிறுவன இன்ஜினியர் வரவேற்றார். 

              ஏ.சி.டி., இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் தண்டபாணி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் கிளை நிர்வாக இயக்குனர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனிதா நன்றி கூறினார்.



Read more »

இனி எல்லாமே இன்பம் - நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம் : 

         சிதம்பரத்தில் இனி எல்லாமே இன்பம் எனும் நூல் வெளியிடப்பட்டது. சிதம்பரம் மாரியப்பா நகர் திருநாவுக்கரசு என்பவர் எழுதிய நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரி புல முதல்வர் பழனியப்பன் வெளியிட்டார். வீனஸ் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராமமூர்த்தி, பொருளாரத்துறை சிவப்பிரகாசம், வெங்கடாஜலபதி, விஸ்வநாதன், நடராஜ், ரங்கநாதன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலாசிரியர் திருநாவுக்கரசு ஏற்புரை வழங்கினார்.



Read more »

கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக பகலவன் பொறுப்பேற்பு

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 62வது எஸ்.பி.,யாக பகலவன் நேற்று பொறுப்பேற்றார். 

            தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். அதில், கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் சென்னை, புளியந்தோப்பு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். அவர் நேற்று முன்தினம் மாறுதலாகி சென்றார். அவருக்கு பதிலாக சென்னை பூக்கடை உதவிய ஆணையராக இருந்த பகலவன் கடலூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று காலை கடலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். 

          அவருக்கு உட்கோட்ட டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள பகலவன், டி.எஸ்.பி.,யாக இருந்து எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று திருச்சியில் உதவி ஆணையராகவும், பின்னர் விழுப்புரத்தில் எஸ்.பி.,யாகவும், இறுதியாக சென்னை பூக்கடை உதவி ஆணையராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Read more »

PG programme in costume design and fashion at Vivekanandha College for Women Tiruchengode

         A two-year post graduate course –Master of Science in Costume Design and Fashion (CDF) – has been introduced at Vivekanandha College for Women, Tiruchengode, from this academic year. Chairman of Vivekanandha Educational Institutions for Women Dr. M. Karunanidhi said that the course has been introduced based on the increasing demand from the industry for postgraduates from this field of study.

      The sanctioned strength for the first academic year (2011-12) was 30 students and would be doubled in the following year. The programme covers subjects such as fibre science, yarn and fabric technology with accessories, ornaments and decoration that are covered in textile and fashion designing course. In addition it also covers boutique shop management, beauty parlour management and beauty care theory and practical laboratories, he added. Equipment worth Rs. 30 lakh has been imported for the course, Mr. Karunanidhi said.




Read more »

Fair price shops get electronic weighing machines in Cuddalore District





Cuddalore Collector P.Seetharaman giving away electronic weighing machines to the fair price shops run by self-help groups in Cuddalore on Monday.


CUDDALORE: 

      Collector P.Seetharaman handed over the electronic weighing machines to four self-help groups who are running the fair price shops in Cuddalore district on Monday.

The details of the shops are as follows: 

Alli SHG at M.Podaiyur in Mangalore block; 
Aruvi SHG at Perur in Keerapalayam block; 
Mother Teresa SHG at Kurinjikkudi—Valasakkadu in Keerapalayam block and 
SHG No.6 at Therkkuthittai in Mel Bhuvanavigir block.

                The weighing machines costing Rs 6,500 each would help in accurate measurement of the essential commodities to be supplied through the fair price shops. These groups had also been given the measurements for rice and kerosene, from the funds provided by the Mahalir Thittam.


Read more »

திங்கள், மே 30, 2011

கடலூர் பாதிரிக்குப்பத்தில் ஜூன்-1 ம் தேதி இலவச அரிசி திட்டம் தொடக்க விழா : அமைச்சர் எம்.சி.சம்பத்


கடலூர்:
           அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பேட்டி:

       தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமை யிலான இந்த அரசு வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் ஏழை, எளிய குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் இதற்கான தொடக்க விழா கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடக்கிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 525 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. கடலூர் தொகுதியில் பழுதடைந்துள்ள நடை பாதைகள் சீரமைக்கப்படும்.

               கடலூர் நகராட்சி பகுதியில் காலியாக உள்ள பொது இடங்களை கண்டறிந்து அங்கு அழகிய பூங்காக்கள் அமைக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது போல கடலூர் சில்வர் பீச் அழகுபடுத்தப்படும், படகு குழாம் சீரமைக்கப்படும். அடுத்த ஆண்டு கோடை விழா கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

              இதில் நகர செயலாளர் குமார் என்கிற குமரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, தொகுதி செயலாளர் சி.கே.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், விவசாயஅணி காசிநாதன், பேரவை இணை செயலாளர் ஏ.ஜி.மதியழகன், பொருளாளர் ஆர்.வி. ஆறுமுகம், மகளிர் அணி நாகரத்தினம், பேச்சாளர் புலிசை சந்திரகாசன், வக்கீல் மாசிலாமணி, கவுன்சிலர் கந்தன், முன்னாள் நகர பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஏழுமலை, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் வீரமணி, தே.மு.தி.க. நகர செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா, லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Read more »

என்.எல்.சியில். சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி:

                  என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நெய்வேலி புதுநகர் 19-வது வட்டம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

* என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியத்தை அமுல்படுத்த வேண்டும்.

* அலுவலக பணி நேரம் மாற்றத் திட்டத்தை நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.

* இரவு பணியில் வேலை பார்க்கும் தொழி லாளர்களுக்கு, அதிகாரி களுக்கு இணையாக ரூ.60-ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தி தர வேண்டும்.

* இன்கோசர்வ் தொழிலாளர்களுக்கு பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு 15 ஆண்டு கள் பணி முடித்தவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்.

* போனஸ்- இன்சென்டிவ் அலவன்ஸ்களில் வித்தி யாசம் இல்லாமல் அதிகாரி களுக்கு இணையாக வழங்க வேண்டும்.

* உணவக தொழிலாளர்களின் பதவி உயர்வை சரி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 61 ஆயிரம் விதவை- முதியோருக்கு ரூ.1000 உதவித்தொகை

 கடலூர் மாவட்டத்தில் 61 ஆயிரம் விதவை- முதியோருக்கு ரூ.1000 உதவித்தொகை: அமைச்சர் செல்வி ராமஜெயம் தகவல்
 
கடலூர்:

                சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செல்விராமஜெயம் முதல் முறையாக நேற்று கடலூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு கலெக்டர் சீத்தாராமன், வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கோட்டாட்சியர் முருகேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், செய்தி- மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளும், கட்சி பிரமுகர்களும் அமைச்சருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்துகள் கொடுத்தும் வரவேற்றனர்.

           இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கலெக்டர் சீத்தாராமன், வருவாய் அதிகாரி ராஜேந்திரன், சமூகநலத்துறை அதிகாரி புவனேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி சீனிவாசன் ஆகியோருடன் அமைச்சர் செல்விராமஜெயம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் செல்விராமஜெயம்  கூறியது:-


            விதவை பெண்கள், முதியோர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1,000-மாக உயர்த்தி வழங்கப்படும் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி இந்த உதவித்தொகை வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி (செவ்வாய்கிழமை) வரை வழங்கப்படும். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 61 ஆயிரத்து 984 பேர் பயன் அடைவார்கள். இதற்காக மாதந்தோறும் ரூ.6 கோடியே 19 லட்சத்து 84 ஆயிரம் செலவிடப்படுகிறது. சமூகநலத்துறையின் திட்டங்கள் கடந்த ஆட்சியை விட மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

                இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாகரத்தினம், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராமலிங்கம், ஜெயலலிதா ஒன்றிய பேரவை செயலாளர் வீரமணி, முன்னாள் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் சங்கர், ஆசிரியர் நாகராஜன், நகர பொருளாளர் சிவகுமார், நகர ஜெயலலிதா பேரவை தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

Read more »

அசுத்தமாக்கப்படும் கடலூர் ஆறுகள்: நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறி


ஜவான்ஸ் பவன் அருகே குப்பை மேடாக மாற்றப்பட்டு வரும் கெடிலம் ஆறு.
 
கடலூர்:

       கடலூரில் குப்பைகளைக் கொட்டி ஆறுகள் குப்பை மேடுகளாக மாற்றப்பட்டு வருவதால், நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறி வருகிறது.

              பெண்ணையாறு, கெடிலம் ஆறு, உப்பனாறு ஆகியவை கடலூர் நகரம் வழியாக ஓடி வங்கக் கடலில் கலக்கின்றன.பெண்ணையாற்றிலும் கெடிலம் ஆற்றிலும் மழை காலங்களில் மட்டுமே வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றன. வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் நீர்வழிப் போக்குவரத்துக்காக வங்கக் கடலோரம் உருவாக்கப்பட்ட உப்பனாற்றில், பெண்ணை ஆறும் கெடிலம் ஆறும் கலந்து கடலில் சங்கமம் ஆகின்றன.இதனால் நீண்ட தூரம் உள்ள உப்பனாற்றில் ஏராளமான ரக மீன்கள் உள்ளன. 

               எனவே கடலூர் உப்பனாற்றில் சிறிய படகுகள் மூலமாகவும், தூண்டில்களைப் பயன்படுத்தியும், 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் குடும்பங்கள் மீன்களைப் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தன.ஆனால் ஆலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு இதுதான் சரியான இடம் என்று கடலூரை மத்திய அரசு தேர்வு செய்ததால், மேல்நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள், சாயங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் பன்னாட்டுத் தொழிற்சாலைகள், துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி தரம் வாய்ந்த ஜெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவை உப்பனாற்றின் கரையில் நிறுவப்பட்டு உள்ளன.

             இவற்றின் மோசமான ரசாயனக் கழிவுகள் உப்பனாற்றிலும், கடலிலும் கலப்பதால், உப்பனாறு பெருமளவில் மாசுபட்டு மீன்களே இல்லாத நிலைக்குச் சென்று கொண்டு இருக்கிறது.இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடலூர் மக்களின் சுகாதாரமும் கேள்விக் குறியாக மாறிவிட்டது.தற்போது நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற தன்மையால், கெடிலம் மற்றும் பெண்ணையாறுகளும் மாசுபட்டு வருகிறது. கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளில் நகரின் கழிவுகள் அனைத்தும் கொட்டப்படுகின்றன.

               ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், கோழிக் கடைகள் வைத்து இருப்போர் கழிவுகள் அனைத்தையும் ஓசையின்றி ஆறுகளில் கொட்டி நகரை அசுத்தத்தின் கேந்திரமாக மாற்றி வருகிறார்கள்.பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் ஆறுகளில் தாராளமாகக் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டக் கழிவுகளையும் சுத்திகரித்து, உப்பனாற்றில் கலந்துவிடத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

           ஏற்கெனவே ஆறுகளில் 15 கி.மீ. தூரம் வரை கடல் நீர் புகுந்து விட்டதால், கடலூர் நகரில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறிவிட்டது. மாசுபட்ட நிலத்தடி நீர், கட்டுப்பாடின்றி கழிவுகள் கண்ட இடங்களில் எல்லாம் கொட்டிவிடும் பரிதாப நிலையால், கடலூர் நகரம் மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறி வருவது, மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.




Read more »

மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்தது : மீன்பிடிப்பில் கடலூர் மீனவர்கள்

 கடலூர்:

            நாள்கள் மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்ததால், கடலூர் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.62 கி.மீ. தூரம் கடற்கரையைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. 

               ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் வசதி கொண்ட 1000 பெரிய படகுகள், கட்டுமரங்கள் மற்றும் 5 ஆயிரம் சிறிய படகுகள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன.ஏப்ரல் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாக இருப்பதால், மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், அந்தக் காலத்தில் வங்கக் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.பெரிய படகுகளில் சென்று சிறிய மீன்களைக் கூட பிடித்துவிடும் வலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

              சிறிய படகுகள், கட்டுமரங்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தன.மீன்பிடித் தடைகாலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலூர் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், ஞாயிற்றுக்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்றனர்.90 சதவீதம் படகுகள் மீன்பிடிக்கச் சென்று இருப்பதாக மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார். 

                இவற்றில் பெரும்பாலான படகுகள் மீன் பிடித்து கொண்டு இன்று (திங்கள்கிழமை) காலை கரை திரும்பும் என்றும், மற்ற படகுகள் ஆழ்கடலில் 3 அல்லது 4 நாள்கள் தங்கி மீன் பிடித்துவிட்டுக் கரை திரும்பும் என்றும் சுப்புராயன் தெரிவித்தார். மீன்கள் ஏராளமாகக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




Read more »

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானம் மற்றும் முதல் பட்டதாரிச் சான்று பெற மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு

பண்ருட்டி:

           வருமானம் மற்றும் முதல் பட்டதாரிச் சான்று பெற மாணவர்களும், பெற்றோர்களும் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

           பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஜாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் முதல் பட்டதாரிக்கான சான்றுகளை பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளனர்.  

            பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட சான்றுகளை பெற விண்ணப்பித்துள்ளனர்.  கடந்த சில நாள்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு சனிக்கிழமை சான்றுகள் வழங்கப்படும் என வட்டாட்சியர் அலுவலகத்தினர் கூறியுள்ளனர்.  இதைத் தொடர்ந்து சனிக்கிழமை ஏராளமானோர் சான்றுகளைப் பெற பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.  ஆனால் வாயிலில் சனி, ஞாயிறு விடுமுறை என எழுதி கதவு மூடியிருந்ததால் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கோபமடைந்ததால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.   பின்னர் வட்டாட்சியர் அனந்தராம் கூடியிருந்தவர்களிடம் சமரசம் பேசி திங்கள்கிழமை சான்று தருவதாக கூறி அனுப்பி வைத்தார்.  

பின்னர் வட்டாட்சியர் அனந்தராம் கூறியது,

         முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்று கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விடுமுறை நாளான சனிக்கிழமை கூட்டம் அதிகம் வந்தனர்.  விடுமுறை நாள்களிலும் பரிசீலனைப் பணி நடைபெற்று வருகிறது. எனவே சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு திங்கள்கிழமை சான்றுகள் வழங்கப்படும் என அனந்தராம் கூறினார்.  



Read more »

கடலூர் கோயில்களில் அக்னி நட்சத்திர தோஷம் நீங்க சிறப்புப் பூஜை

கடலூர்:

           அக்னி நட்சத்திரத் தோஷம் நீங்க கடலூர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  

             கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கியது. இதனால் கடலூரில் கடும் வெயில் தகித்தது.   பல நாள்களில் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டியது. மக்களை வாட்டி வதைத்த அக்கினி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. அக்கினி நட்சத்திர காலத்தில் மக்களுக்கு பலவேறு தோஷங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தோஷங்களை நிவர்த்தி செய்ய கடலூர் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.  

              கடலூர் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் அக்னி நட்சத்திரம் நிறைவு சிறப்பு பூஜை சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிவரை நடந்தது.  108 கலசங்களில் புனித நீர் ஊற்றி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு, பாடலீஸ்வரருக்கு அந்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.  மகாதேவ குருக்கள், நாகராஜ குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜைகளைச் செய்தனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெகந்நாதன், செயல் அலுவலர் மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read more »

சிதம்பரம் அருகே அமைச்சர் செல்வி ராமஜெயம் வரவேற்பு விழாவில் பட்டாசு வெடித்து தீ விபத்து

சிதம்பரம்:

            சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் நேரில் சென்று ஆறுதல் அளித்து இலவச வேட்டி-சேலை, அரிசி மற்றும் நிவாரணத் தொகை ஆகியவற்றை வழங்கினார். 

               சிதம்பரத்தை அடுத்த பூங்கொடி, தரசூர் ஆகிய கிராமங்களில் தீவிபத்தில் 12 வீடுகள் அண்மையில் எரிந்து சேதமடைந்தன. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒருவரான செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை மேற்கண்ட கிராமங்களுக்குச் சென்று வேட்டி-சேலை, அரிசி மற்றும் நிவாரணத் தொகை தலா ரூ.2 ஆயிரம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். 

              இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், கோட்டாட்சியர் எம்.இந்துமதி, வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை சிதம்பரத்தை அடுத்த புவனகிரி, கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

சிறப்பான வரவேற்பு: 

               தமிழக சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செல்வி ராமஜெயம் சனிக்கிழமை இரவு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது சொந்த ஊரான பரங்கிப்பேட்டைக்குச் செல்லும் வழியில் சிதம்பரத்தை அடுத்த பி.முட்லூரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பி.முட்லூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். பி.முட்லூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு வாகனங்களில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். இதனால் கடலூர் - சிதம்பரம் சாலையில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டை தளர்த்துவாரா?  

வெடி கலாசாரம்:  

              தனது சொந்த தொகுதியான புவனகிரி தொகுதியில் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது கீரப்பாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவுக்கு வந்தபோது சாலையில் 2 ஆயிரம் வாலா வெடியை வைத்து தீ வைத்தனர். அவ்வழியே வந்த வாகனங்களை போலீசார்  நிறுத்தாததால் அந்த நேரத்தில் சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்ஸின் அடியில் வெடி சிக்கி வெடித்தது. 

             இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து அங்கும், இங்கும் ஓடினர். டிரைவர் உடனடியாக பஸ்ûஸ எடுத்ததால் பயணிகள் அமைதியடைந்தனர். வெடியின் மீது சிக்கிய பஸ் சிறிதுநேரம் நின்றிருந்தால் பஸ் தீப்பிடித்திருக்கும் என பயணிகள் தெரிவித்தனர். அமைச்சர் செல்லும் இடமெல்லாம் வெடி, வெடித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இச்செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்ததை பார்க்க முடிந்தது. மேலும் செல்வி ராமஜெயத்தை மக்கள் நெருங்க விடாமல் கட்சி நிர்வாகிகள் தடையாக இருந்ததால் பொதுமக்கள் அமைச்சரிடம் சென்று தங்களது குறைகளை தெரிவிக்க இயலவில்லை என தெரிவித்தனர். 

            எனவே எதிர்காலத்தில் அமைச்சர் செல்வி ராமஜெயம் வெடி கலாச்சாரத்தை தடுத்து, கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டை தளர்த்து பொதுமக்களை சந்திக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


 

Read more »

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நகர பகுதிக்கு மாற்ற வேண்டும்: ஆட்டோ ஓட்டுனர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர் : 

           வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நகர பகுதிக்கு மாற்ற வேண்டும் என கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

             கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நலச் சங்கக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஆட்டோ சங்க அலுவலகத்தில் நடந்தது. நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். துணைச் செயலர் சண்முகம், பொருளாளர் ஜெயக்குமார், கவுரவத் தலைவர் செல்வமூர்த்தி, துணைத் தலைவர் அமானுல்லா ஷெரீப் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில், புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

             குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைத்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை கடலூர் நகர பகுதிக்கு மாற்ற வேண்டும். 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும். பெட்ரோல் விலை மற்றும் ஆட்டோ காப்பீட்டு தொகையை உயர்த்தியதை கண்டிப்பது. பசுமை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 



Read more »

இந்திய விமானப் படை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

         இந்திய விமானப் படையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

          இந்திய விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு முகாம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இப்பணியில் சேர விருப்பம் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 , இன்டர் மீடியேட் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் படித்து 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பம் வேண்டுவோர் ( www.indianairforce.nic.in ) என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் 10ம் தேதிக்குள், 

சென்ட்ரல் ஏர்மென் செலக்சன் போர்டு,
தபால் பெட்டி எண் 11807,
புதுடில்லி - 110010

என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்குள் சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.

இதுகுறித்த விவரம் வேண்டுவோர் 

"ஏர்மென் செலக்சன் சென்டர்,
ஏர்போர்ஸ் ஸ்டேஷன்,
தாம்பரம்,
சென்னை - 600046
என்ற முகவரியிலோ

அல்லது 044-22791853, 044-22396565 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Read more »

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : கடலூர் மாவட்டத்திற்கு 30 வது இடம்

தமிழக மாவட்டங்களின்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் வருமாறு:-

1. விருதுநகர் (95.93)
2. ஈரோடு   (93.83)
3. தூத்துக்குடி  (93.01)
4. சிவகங்கை (92.85)
5. பெரம்பலூர் (92.29)
6. தேனி (91.41),
7. தஞ்சை (90.86),
8. திருச்சி (90.25),
9.மதுரை (90.10),
10.கன்னியாகுமரி (89.21),
11. நெல்லை (88.83)
12. சென்னை (88.21),
13.ராமநாதபுரம் (88.01),
14.திண்டுக்கல் (88.00),
15 கரூர் (87.23).
 16- நாமக்கல் (86.55),
17.அரியலூர் (84.50),
18.கோவை (83.96),
19.நீலகிரி (83.76),
20.தருமபுரி (83.76)
21.புதுக்கோட்டை (83.39),
22.திருப்பூர் (83.00),
23.கிருஷ்ணகிரி (82.79),
24.நாகப்பட்டினம் (81.82),
25.வேலூர் (80.82),
26.காஞ்சீபுரம் (80.75),
27.சேலம் (80.28, )
28.விழுப்புரம் (80.03),
29.திருவண்ணாமலை (80.00).

கடைசி 3 இடத்தில் கடலூர், திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்கள் இருக்கின்றன.

கடலூர் மாவட்டம் 78.85 தேர்ச்சி விகிதம் பெற்று 30-வது இடத்திலும், திருவள்ளூர் மாவட்டம் 76.51 சதவீத தேர்ச்சி பெற்று 31-வது இடத்திலும் இருக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதத்தில் திருவாரூர் மாவட்டம் 32-வது கடைசி இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 76.10 சதவிகிதம் மாணவ-மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Read more »

ஞாயிறு, மே 29, 2011

சமூகநலத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆலோசனை

கடலூர்:

            முந்தைய தி.மு.க. அரசைவிட, முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் சமூகநலத் துறை திட்டங்கள், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்று தமிழக சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார்.  

          சமூக நலத்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதும், முதல்முறையாக செல்வி ராமஜெயம் சனிக்கிழமை கடலூர் வந்தார்.  மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் ஊழியர்கள் திரளாக வந்து, அமைச்சர் செல்வி ராமஜெயத்தை வரவேற்றனர்.  சமூகநலத் துறை திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.  

பின்னர் சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், 

         "முந்தைய ஆட்சியைவிட சமூகநலத் துறை திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக நடத்துவார்.  தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, முதியோர், விதவையர், ஆதரவற்றோர் மற்றும் திருமணம் ஆகாத 50 வயதுக்கு மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ. 500-ல் இருந்து ரூ. 1,000-ஆக உயர்த்தி இருக்கிறார்.  இந்தத் தொகை ஜூன் 1-ம் தேதியில் இருந்து 7-ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடும் என்றார்.


Read more »

தமிழக அமைச்சர்களுக்கு அரசுக் குடியிருப்புகள் அறிவிப்பு

       தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு சென்னை, கிரீன் வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த பங்களா வீடுகளில் அமைச்சர்கள் தங்களது குடும்பத்துடன் இன்னும் சில தினங்களில் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

           தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, அக்கட்சியை சேர்ந்த 33 எம்.எல்.ஏ.,க்கள் கடந்த வாரம் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு அரசு சார்பில் பங்களா வீடுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த வீடுகள் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு முக்கிய பிரமுகர்கள் குடியிருப்பில் அமைந்துள்ளன. மொத்தம் 26 வீடுகள் கொண்ட இந்த பங்களா குடியிருப்பில், கடந்த ஐந்து வருடங்களாக தி.மு.க.,வை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் வசித்து வந்தனர்.

       தேர்தலில் தி.மு.க.,தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற அரசு உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து மாஜி அமைச்சர்களும் தங்களது வீடுகளை காலி செய்தனர். இதையடுத்து, அந்த பங்களா வீடுகளை புதிய அமைச்சர்களின் பயன்பாட்டிற்காக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், புதிய அமைச்சர்களுக்கான வீடுகள் ஒதுக்கீடு பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம்:

* ஓ.பன்னீர் செல்வம் (நிதியமைச்சர்)
* செங்கோட்டையன் (வேளாண்மைத்துறை அமைச்சர்)
* விஸ்வநாதன் (மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்)
* கே.பி.முனுசாமி (நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்)
* சண்முகவேலு (தொழில்துறை அமைச்சர்)
* வைத்தியலிங்கம் (வீட்டு வசதித்துறை மற்றும் ஊரக வீட்டு வசதித்துறை அமைச்சர்)
* கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர்)
* கருப்பசாமி (கால்நடைத்துறை அமைச்சர்)
* பழனியப்பன் (உயர்கல்வித்துறை அமைச்சர்)
* சண்முகம் (பள்ளிக் கல்வித்துறை)
* ராஜு (கூட்டுறவுத்துறை அமைச்சர்)
* பச்சைமால் (வனத்துறை அமைச்சர்)
* பழனிச்சாமி (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்)
* சண்முகநாதன் (இந்து அறநிலையத்துறை அமைச்சர்)
* ராமலிங்கம் (பொதுப்பணித்துறை அமைச்சர்)
* வேலுமணி (சிறப்பு பணிகள் செயலாக்கத்துறை அமைச்சர்)
* சம்பத் (ஊரக தொழில்துறை அமைச்சர்)
* தங்கமணி (வருவாய்த்துறை அமைச்சர்)
* கோகுல இந்திரா (வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்)
* செல்வி ராமஜெயம் (சமூக நலத்துறை அமைச்சர்)
* டி.வி.ரமணா (கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர்)
* ந.சுப்பிரமணியன் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்)
* செந்தில் பாலாஜி (போக்குவரத்துத்துறை அமைச்சர்)
* புத்திசந்திரன் (சுற்றுலாத்துறை அமைச்சர்)
* ஆர்.சிவபதி (விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்)என, 

           மொத்தம் 25 புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன் கூறுகையில்,

             "இங்குள்ள 26 பங்களா வீடுகளுக்கும் புதிய அமைச்சர்களுக்கான வீடுகள் ஒதுக்கீடு பட்டியலை, அரசு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது குடியிருப்பில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். மீதமுள்ள அமைச்சர்கள் இன்னும் சில தினங்களில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் குடியேறுவர்' என்று கூறினார்.

விபத்தில் இறந்த மரியம்பிச்சைக்கு ஒதுக்கப்பட்ட பங்களா வீடு : 

        தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு, அரசு சார்பில் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான பட்டியல் ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. அதில், கடந்த சில தினங்களுக்கு முன் கார் விபத்தில் இறந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாரியம்பிச்சைக்கும் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் அவரது வீடு மீதமுள்ள அமைச்சர்களில் ஒருவருக்கு வழங்கப்படலாம்' என தெரிவித்தார். 




Read more »

கடலூர் மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசலே சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கு காரணம்

         கட்சியில் புரையோடியுள்ள ஜாதிய உணர்வு மற்றும் கோஷ்டி அரசியல் காரணமாக, தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள, 20 தொகுதிகளிலும் தி.மு.க., படுதோல்வி அடைய நேரிட்டுள்ளது' என கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியது:

             ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த தற்போதைய கடலூர், விழுப்புரம் மாவட்டம், தி.மு.க., தேர்தலை சந்தித்த காலத்தில் இருந்தே கோட்டையாக விளங்கி வந்தது.அந்த கால கட்டத்தில் தொண்டர்கள் ஜாதி, மதங்களை மறந்து கொள்கை பிடிப்போடு இருந்தனர். தொண்டர்களை வழி நடத்திய நிர்வாகிகளும் அவ்வாறே செயல்பட்டனர். கொள்கை ஈடுபாடும், ஆற்றல் மிக்கவர்கள் நிர்வாகிகளாக இருந்ததால், மாவட்டமே தி.மு.க.,வின் கோட்டையாக விளங்கியது.

           ஒருங்கிணைந்த மாவட்ட செயலராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது கட்சியில் ஜாதிய உணர்வு மேலோங்கியதால், தொண்டர்கள் ஜாதி வாரியாக பிளவுபட்டனர். அதேகால கட்டத்தில், கட்சியின் பொறுப்புகளுக்கு ஏற்கனவே பொறுப்புகளில் இருந்தவர்களின் வாரிசுகளே நியமிக்கப்பட்டனர். இதனால், காலம் காலமாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் பதவிக்கு வரமுடியாததால் அவர்களின் செயல்பாடு குறைந்தது.

           இந்நிலையில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தை, கட்சியின் நிர்வாக வசதிக்காக, கடலூர் மற்றும் விழுப்புரம் என இரு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு கடலூர் மாவட்ட செயலர் பதவிகளுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், விழுப்புரம் மாவட்ட செயலர் பொன்முடியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடாமல், ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வந்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வன்னியர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அல்லாதவர்களே, கட்சிப் பதவிகளுக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்கினர்.

           அனைத்திற்கும் மேலாக, மாவட்டத்தில் கட்சி பொறுப்புகளுக்கு வருபவர்கள் தங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். இவர்களை மீறி, கட்சியில் கோலோச்ச முயன்றவர்கள், மாவட்ட செயலர்களால் பல்வேறு வழிகளில் ஓரம் கட்டப்பட்டனர்.

          இவ்வாறு கட்சி ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவரான, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் மகன் சம்பத், பழனியப்பன், கடலூர் மாவட்ட செயலராக இருந்த மருதூர் ராமலிங்கம், துரை கிருஷ்ணமூர்த்தியின் மகன் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் உள்ளிட்ட பலர் ஓரம் கட்டப்பட்டனர். இவர்களுக்கு கட்சி பதவி முதல் எம்.எல்.ஏ., சீட் பெற முடியாமல் மாவட்ட செயலர்கள் தடை ஏற்படுத்தி வந்தனர். இதே பாணியை கடந்த தேர்தலிலும் கையாண்டனர். தனது எதிர்ப்பாளர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே, வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குத் தள்ளி விட்டனர்.

        இவர்களால் ஓரம் கட்டப்பட்ட நிர்வாகிகள், கட்சியில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க சொந்த கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்க, உள்ளடி வேலைகளில் ஈடுபடத் துவங்கியதால் கோட்டையில் ஓட்டை விழத் துவங்கியது. இதே நிலைதான் நடந்து முடிந்த தேர்தலிலும் நீடித்தது.

          கடலூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த அய்யப்பனுக்கு "சீட்' மறுக்கப்பட்டது. அந்த விரக்தியில் அவர் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க உள்ளடி வேலை செய்தார். அவரை அழைத்து சமாதானம் செய்வதற்கு பதிலாக, அவரை கட்சியை விட்டு நீக்கச் செய்தனர். அவர் வேறு வழியின்றி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அ.தி.மு.க.,வில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக மாவட்டத்தின் தலைநகர் தொகுதியான, கடலூரில் தி.மு.க., வேட்பாளர் வரலாறு காணாத வகையில் படுதோல்வி அடைய நேரிட்டது.

           பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட சபா ராஜேந்திரன், மாவட்ட செயலரின் எதிரணி என்பதால், அவரை தோற்கடிக்க உள்ளடி வேலைகள் படு ஜோராக நடந்தது. இதேபோன்று மாவட்ட செயலரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிட்ட, குறிஞ்சிப்பாடி தொகுதியில் அவரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து முழுவீச்சில் உள்ளடி வேலைகளை செய்தனர். இதில் உச்சகட்டமாக பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க விழுப்புரம் மாவட்ட செயலரான பொன்முடியும், அவரை தோற்கடிக்க மற்றொரு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் முன்னோடி அமைச்சர் ஒருவரும் உள்ளடி வேலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

        இதே உள்ளடி வேலை விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அரங்கேறியது. இழந்த பெருமையை மீட்க, கட்சியின் தலைமை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, எங்களைப் போன்ற மூத்த தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. இவ்வாறு தி.மு.க., மூத்த நிர்வாகி கூறினார்.


Read more »

கடலூர் செம்மண்டலத்தில் புதிய பேருந்து நிலையம்: ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர் : "

            "கடலூர் செம்மண்டலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறினார். 

கடலூரில் ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறியது: 

              முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் நலன் கருதி 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை வரும் 1ம் தேதி துவக்கி வைக்கிறார். கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 60 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 525 பேர் 20 கிலோ அரிசி பெறும் பயனாளிகள் ஆவர். இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் அரசு விழாவாக வரும் 1ம் தேதி நடக்கிறது. 

         கடலூர் நகரில் நடைபாதை சீரமைக்கப்படும். தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப்படும். ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது போல் சில்வர் பீச் புதுப்பித்து படகு குழாம் சீரமைக்கப்படும். கோடை விழா அடுத்த ஆண்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் செம்மண்டலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சம்பத் கூறினார்.



Read more »

சனி, மே 28, 2011

சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.பிரியதர்ஷினி மாவட்ட அளவில் 2-ம் இடம்

சிதம்பரம்:

            சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவி ஜி.பிரியதர்ஷினி, 487 மதிப்பெண்கள் பெற்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், நகர அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

              சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம்-இந்திராணி தம்பதியின் மகளான பிரியதர்ஷினி, கணிதத்தில் 100, தமிழில் 95, ஆங்கிலத்தில் 96, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 97-ம் பெற்றுள்ளார்.மாணவி பிரியதர்ஷினியை பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஏ.சம்பந்தம், தலைமை ஆசிரியர் ராஜன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

மாணவி பிரியதர்ஷினி பேசுகையில் 

           இரவு, பகல் பாராமல் படித்து வந்தேன். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஊக்கமளித்ததால் அதிக மதிப்பெண் பெற்றேன். எதிர்காலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்து நல்ல பொறியாளராக திகழவேண்டும் என்பது எனது ஆசை என மாணவி பிரியதர்ஷினி தெரிவித்தார்.


 

Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 55 பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி

கடலூர்:
   
         கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக் தேர்வுகளில் 55 பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெறச் செய்து, சதம் அடித்து உள்ளன.  

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளிகள்: 

              என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி மந்தாரக்குப்பம், கடலூர் சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, வடலூர் புனித ஜான் மேல்நிலைப் பள்ளி, சாத்தங்குப்பம் அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி, கன்னித் தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி, பி.மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, கே.மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆபத்தாரணபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, வடலூர் புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி.  

விருத்தாசலம் கல்வி மாவட்டம்:  

              கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி, புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி, மோவூர் அரசு உயர்நிலைப் பள்ளி, எறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி. அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, நாட்டார் மங்கலம் உயர்நிலைப் பள்ளி, தொழுதூர் உயர்நிலைப் பள்ளி, எறுமனூர் வி.இ.டி. உயர்நிலைப் பள்ளி, கீழக்கல்பூண்டி அன்னை தெரசா உயர்நிலைப் பள்ளி,  மெட்ரிக் பள்ளிகள் 

 கடலூர் கல்வி மாவட்டம்: 

               சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி, நெய்வேலி ஜான் ஜோசப் குளூனி மேல்நிலைப் பள்ளி, கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி பாலவிகார் மேல்நிலைப் பள்ளி, கடலூர் சி.கே. மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி ராதிகா மெட்ரிக் பள்ளி, கடலூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி,  குறிஞ்சிப்பாடி செயின்ட் பால்ஸ், நெல்லிக்குப்பம் புனித டொமினிக் பள்ளி, குள்ளஞ்சாவடி கண்ணன் மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி செயின்ட் ஜான்ஸ், சுப்பிரமணியபுரம் சீவா மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் சரசு மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் ஸ்ரீ வித்யா கலா கேந்திரா, சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளி, நெய்வேலி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சூரக்குப்பம் மெட்ரிக் பள்ளி, குறிஞ்சிப்பாடி ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி, தட்டாஞ்சாவடி புனித அன்னாள் மெட்ரிக் பள்ளி, கடலூர் புனித அந்தோனி மெட்ரிக் பள்ளி, நெல்லிக்குப்பம் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளி, குறிஞ்சிப்பாடி அருணாச்சலா மெட்ரிக் பள்ளி, திருப்பாப்புலியூர் பெஸ்ட் மெட்ரிக் பள்ளி, ஆணையம்பேசட்டை அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி.  

விருத்தாசலம் கல்வி மாவட்டம்: 

               திட்டக்குடி இந்தியன் மெட்ரிக் பள்ளி, நாட்டார் மங்கலம் அருள் மெட்ரிக் பள்ளி, லால்பேட்டை இமாம் கஜாலி மெட்ரிக் பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் தேவஅமுதம் மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளி, வேப்பூர் அய்யனார் மெட்ரிக் பள்ளி, காட்டுமன்னார்கோயில் ஜி.கே.எம். மெட்ரிக் பள்ளி, பூதங்குடி செயின்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி, பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் ஆக்சீலியம் மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் செந்தில் மெட்ரிக் பள்ளி.

அனைவரும் தோல்வி: 

           ஸ்ரீமுஷ்ணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தோல்வியுற்றனர்.  கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக் தேர்வில் 31 பள்ளிகள் மட்டுமே சதம் அடித்தன. இந்த ஆண்டு 55 பள்ளிகள் சதம் அடித்து உள்ளன. 


Read more »

பத்தாம் வகுப்பு தேர்வில் பண்ருட்டி பகுதியில் அரசுப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் உயர்வு

பண்ருட்டி:

         10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பண்ருட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதுடன், மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

            பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 295 மாணவர்களில் 190 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன ர்.பள்ளியின் தேர்ச்சி வீதம் 64.4 சதவீதமாகும். இதில் டி.வாசு 483, ஜி.விக்னேஷ் 477, பி.குமரபாஸ்கரன் 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதில் டி.வாசு அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார்.

 திருவதிகை பாவாடை பள்ளி: 

             திருவதிகை பாவாடைபிள்ளை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 104 மாணவர்கள் தேர்வு எழுதியில் 102 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98 சதவீதம். இதில் சந்தோஷ்குமார், பிரசன்னராஜாகோபால் ஆகிய இரு மாணவர்கள் 470, ஜி.சந்தியா 461, சுரேஷ்குமார் 458 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். கணக்குப் பாடத்தில் திருமால் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். 23 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

             மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 95 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி வீதம் 98 சதவீதம். இதில் ஜெய்சூரியா 482, அஷ்டலட்சுமி, தனசேகர் 480, தனபாக்கியம் 478 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். அஷ்டலட்சுமி, தனபாக்கியம், சுந்தர்ராஜன் ஆகியோர் கணிதப்பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

               குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 80 மாணவர்களில் 77 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதம். ஆர்.ராஜ்குமார், பி.பானுமதி, ஆர்.திவ்யா ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தைப் பெற்றனர். தமிழ், அறிவியல், சமுக அறிவியல் பாடத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மெட்ரிக் பள்ளிகள் 100 வீதம் தேர்ச்சி: 

             பண்ருட்டியில் உள்ள ரத்தனா (செயின்ட் ஜான்ஸ்), திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பண்ருட்டி லட்சுமிபதி நகரில் இயங்கும் ரத்தனா மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். எஸ்.அரபத்நிஷா 449, என்.ராம்குமார் 439, ஜி.மதுமிதா 425 ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்களை பள்ளியின் உரிமையாளர் சி.மாயக்கிருஷ்ணன், தாளாளர் எம்.ராமக்கிருஷ்ணன், முதல்வர் எம்.ரவி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்.

             இதேபோல் திருவள்ளுவர் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். ராஜலட்சுமி 456, கவிபிரியா 451, மோனிக்கா 432 ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். இதில் 6 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.


Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ரஞ்சிதா முதலிடம்


மாணவி எஸ்.ரஞ்சிதாவை பாராட்டும் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.மணிமொழி. உடன், மாணவியின் பெற்றோர்.
 
நெய்வேலி:

           பத்தாம் வகுப்புத் தேர்வில் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ரஞ்சிதா 493 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

                 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாயின. இதில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ரஞ்சிதா முதலிடம் பிடித்தார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்.பிரியங்கா 489 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடத்தையும், எஸ்.ஆனந்தி 486 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடத்தையும் பிடித்தனர். இப் பள்ளியில் இந்த ஆண்டு 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டுக் காரணமான பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.மணிமொழி, ஆசிரியர்களை என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி மற்றும் இயக்குநர்கள் பாராட்டினர்.



Read more »

கடலூரில் பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டும் வாகனங்கள்: நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறி

கடலூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உப்பனாற்றின் கரையில், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் வாகனம்.

கடலூர்:

             கடலூரில் கண்ட இடங்களில் எல்லாம், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறிவருகிறது. 

              கடலூர் கட்டுப்பாடற்ற நகரமாக மாறிவருகிறது. வீடுகளுக்கு நகராட்சிக் குடிநீர் இணைப்புகளை நகராட்சி அனுமதியின்றி இரவோடு இரவாக, தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நகராட்சி உறுப்பினர்களின் மறைமுக ஆதரவு இதன் பின்னணியில் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறது. 

             இதனால் நகராட்சிக்குக் குடிநீர் வரி கிடைப்பது தடைபடுகிறது. நகரில் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளன. இவற்றில் மீதமாகும் உணவுப் பொருள்கள், இலைகள் உள்ளிட்ட குப்பைகள் மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் சாலையோரங்களில் எவ்வித பயமும் இன்றி கொட்டப்படுகின்றன. நகரைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை வீதிகளில் ஆங்காங்கே கொட்டி எரிக்கிறார்கள். 

             கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளின் கரைகளில் கொட்டும் போக்கும் வேகமாகப் பரவி வருகிறது. பல கோடி செலவிட்டு கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டும், அவை ஒன்றுக்கொன்று சரியான மட்டத்தில் கட்டப்படாததால், தனித்தனி தொட்டிகளாக மாறி, சாக்கடை நீர் வெளியேற்றப்படாமல் தேங்கி, கொசு உற்பத்திக் கேந்திரங்களாக மாறிவிட்டன. அண்மைக் காலமாக இச் சுகாதாரக் கேடுகளின் வரிசையில் கைகோர்த்து நிற்பவர்கள், செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும் நபர்கள். அழகாக வர்ணம் தீட்டப்பட்டு, நிறுவனங்களின், உரிமையாளர்களின் பெயர்கள், தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் என பலத்த பந்தாவுடன் நகரில் வலம் வரும் செட்டிக் டாங்க் சுத்தம் செய்வோர், நகரின் சுகாதாரத்தை நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள். 

              செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்ய ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கும் இவர்கள், கழிவுகளைக் கண்ட இடங்களில் எல்லாம் கொட்டி, மற்றவர்களின் சுகாதாரத்தைக் கெடுத்து வருகிறார்கள். கெடிலம், பெண்ணையாறு, தேசிய நெடுஞ்சாலையோரம் உப்பனாறு, கடலூர் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால், மஞ்சக்குப்பம் பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் கழிவுகளைக் கொட்டிச் சென்று விடுகிறார்கள். 

             குடலைப் பிடுங்கும் துர்நாற்றத்துடன் விளங்கும் அப்பகுதி சுகாதாரம் பற்றி, யாருக்கும் கவலையற்ற போக்கு கடலூரில் நீடித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையோரம் பாதாளச் சாக்கடை கழிவு நீரகற்றும் நிலையம், சுடுகாடு, கரும காரியக் கொட்டகை உள்ள உப்பனாற்றங்கரைப் பகுதியை, சுகாதாரக் கேட்டின் மையமாக மாற்றி வருகின்றனர், செட்டிக் டேங்க் சுத்தம் செய்வோரும் ஹோட்டல் உரிமையாளர்களும். இவர்களைக் கேட்க நாதியற்ற நிலை, திறமையற்ற நகராட்சி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. 

              கடந்த காலங்களில் இந்த நகராட்சியையே குப்பைத் தொட்டியாக மாற்றிய அதிகாரிகள் அகற்றப்பட்டு, நன்கு செயல்படும் அதிகாரிகள் பொறுப்பு ஏற்று இருக்கும் நிலையில், இத்தகைய புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் விரும்புகிறார்கள். 

இப் பிரச்னை குறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது 

              இத்தகைய புகார்கள் நகராட்சிக்கு நிறைய வருகின்றன. ஜூன் 5-ம் தேதி செப்டிக் டாங்க் வாகன உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க இருக்கிறேன். அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கண்டிப்பாக, நகராட்சியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேறும்போது, செட்டிக் டாங்க் கழிவு பிரச்னை ஏற்படாது. 

             செப்டிக் டாங்க், மற்றும் சாக்கடை உள்ளிட்ட கழிவுகளைச் சுத்தம் செய்வோர், பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். காப்பீடு செய்து இருக்க வேண்டும். விஷ வாயுக்களை கண்டறியும் கருவி நகராட்சியில் வாங்கப்பட்டு உள்ளது என்றார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior