உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 24, 2011

பண்ருட்டி கஸ்தூரிபாய் வீதியில் அடிக்கடி பழுதாகும் ஆழ்குழாய்க் கிணறு






பண்ருட்டி:

           பண்ருட்டி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள ஆழ்குழாய்க் கிணறு போர் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் தண்ணீரின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

            பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்குண்டான நடவடிக்கை கூட நகர நிர்வாகம் எடுக்கவில்லை என அப்பகுதி கவுன்சிலர் துரை.ராமகிருஷ்ணன் வேதனையுடன் கூறினார். பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் கஸ்தூரிபாய் வீதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆழ்குழாய்க் கிணறு மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகர நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது.

             கடந்த ஒரு மாதகாலமாக இந்த ஆழ்குழாய்க் கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுவதால், கஸ்தூரிபாய் வீதி, பனங்காட்டு தெரு, தனபால்செட்டி தெரு, சோமேஸ்வரன் கோயில் வீதி, பழைய மார்க்கெட் வீதி, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீரின்றி அவதி அடைந்து வருகின்றனர்.

             கஸ்தூரிபாய் வீதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட போர் மூலம் நகர நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வந்தது. இதில் இருந்த 12 எச்.பி. மோட்டார் பழுதடைந்ததைத் தொடர்ந்து நகர நிர்வாகம் 6 எச்.பி. மோட்டாரை பொருத்தியது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லை. மேலும் பழுதி நீக்கி பொருத்தப்படும் மோட்டார்கள் ஒரு சில நாள்களிலேயே பழுதடைந்து விடுகிறது.

                ஆழ்குழாய்க் கிணற்றில் என்ன குறை? ஏன் அடிக்கடி மோட்டார் பழுதடைகிறது? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. திட்டமிடப்படாத பணியால் பொது மக்களின் வரிப்பணம் வீண் விரையமாகிறது. கடந்த ஒரு மாத்தில் மட்டும் இந்த போது பலமுறை பழுதாகிவிட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

            இது குறித்து நகராட்சி அதிகாரிகளோ, நகரமன்ற உறுப்பினர்களோ கண்டுக் கொள்ளவில்லை. ஆழ்குழாய்க் கிணறு இல்லாதவர்கள் தண்ணீருக்கு கஷ்டப்படுகின்றனர். நகர நிர்வாகம் லாரி மூலம் கூட தண்ணீர் விநியோகம் செய்ய முன்வரவில்லை என வேதனையுடன் கூறினர்.

 இது குறித்து நகரமன்ற உறுப்பினர் துரை.இராமகிருஷ்ணன் கூறியது: 

            "இப்பகுதியில் உள்ள போர் சரியில்லை, இதனால் அடிக்கடி பழுதடைகிறது. இது குறித்து நகர நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தண்ணீர் விநியோகிக்கும் லாரியும் பழுதாகி உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என தெரிய வருகிறது' என கூறினார்.






Read more »

டான்செட் 2011-12 தேர்வு முடிவு வெளியீடு

            "டான்செட்' தேர்வு முடிவு அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

             அண்ணா பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட முதுநிலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு "டான்செட்' அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.  2011-12 கல்வியாண்டுக்கான "டான்செட்' தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  

     இந்த தேர்வுக்கான முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக இணைய தளம்  




மூலம் தேர்வு முடிவை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.


Read more »

பண்ருட்டி நகர பகுதியில் வீதிகளில் குப்பைகள்

ண்ருட்டி:

      பண்ருட்டி நகர நிர்வாகம் நகர பகுதியில் குப்பைகளை அகற்றாததால் நகரத்தில் உள்ள 33 வார்டு வீதிகளில் எங்கும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

           பண்ருட்டி நகராட்சியின் 33 வார்டுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 17 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைகளை கொட்ட உரிய இடத்தை நகர மற்றும் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து தராததால் கடந்த பல ஆண்டுகளாக நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் புகழ்பெற்ற கெடில நதியில் கொட்டியும், பள்ளம் தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சுற்றுசூழல் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

           இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நகரப் பகுதியில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை. நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் 110-க்கும் மேற்பட்டோர் இருந்து, நகரப் பகுதியில் குப்பை அள்ளுதல், கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட எந்த பணியியும் பெயரளவில் கூட நடைபெறவில்லை. இதனால் நகரப் பகுதியின் வீதிகள், பள்ளிகள், அரசு துறை அலுவலகங்கள், மருத்துவமனை என எங்கு பார்த்தாலும் குப்பைகள் காற்றில் பறந்துக் கொண்டுள்ளது. 

          மேலும் சில இடத்தில் தேங்கிய குப்பைகளை நகராட்சிப் பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் இடத்தில் இருந்து பல்வேறு புகார்கள் மனுக்கள் வந்த போதும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். 

இது குறிதது நகராட்சி அலுவலக ஊழியர்கள் கூறியது 

             நகரப் பகுதியில் குப்பைகள் அள்ளுவதற்கு 8 வாகனங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக வாகனங்கள் பராமரிப்பு என தீர்மானம் நிறைவேற்றி பணம் எடுத்ததுடன் சரி வாகனத்தை பழுது பார்க்கவோ, பராமரிக்கவோ இல்லை. இதனால் வாகனங்கள் மிகமோசமான நிலையில் ஓடாமல் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய ஓரிரு வாகனம் மட்டும் இயங்குவதால் 33 வார்டு பகுதியிலும் குப்பைகள் அகற்ற முடியவில்லை என கூறினர். பண்ருட்டி நகர நிர்வாகம் சீர்கெட்டு பொது மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் வசதிகளை நிறைவேற்றவில்லை.

            து குறித்து நகர மற்றும் மாவட்ட அதிகாரிகளும் கவலைப்படவில்லை என்பதே உண்மை. பண்ருட்டி நகர நிர்வாகம் புத்துயிர் பெற அதிகாரிகள் முன்வருவார்களா?





Read more »

இந்திய கடற்படையில் பணி

  

          இந்திய கடற்படைக்கு ஸ்டுவர்டு, சமையலர், டோப்பாஸஸ் பணிக்கு 17 முதல் 21 வயதிற்குட்பட்டோரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 

          இது குறித்த விபரங்களை http://www.nausena-bharti.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் ஜூன் 22 மற்றும் ஜூலை 8. வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






Read more »

கடலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை தயாரிப்பு பணி புகைப்படம் பதிவு செய்யும் முகாம்

கடலூர் : 
 
          தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்க, புகைப்படம் பதிவு செய்யும் முகாம் வரும் 27ம் தேதி துவங்குகிறது என கலெக்டர் கூறியுள்ளார்.

இது பற்றி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: 

            தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களில் இருந்து தகவல் சேகரிக்கும் பணி மக்கள் தொகை கணக்கெடுப்பு காலமான கடந்தாண்டு ஜூன்- ஜூலையில் நடந்தது. மக்கள் தொகை பதிவேடு தயாரிக்க கடலூர் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி முதல் பண்ருட்டியில் பூங்குணம், எழுமேடு கிராமத்திலும், குறிஞ்சிப்பாடியில் சிறுபாலையூர் (வடக்கு), பூதம்பாடியிலும், சிதம்பரத்தில் பூந்தோட்டம், தவர்த்தாம்பட்டிலும் ஐந்து வயதும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்கள், பத்து விரல் கைரேகைப் பதிவு மற்றும் விழித்திரை பதிவு செய்ய முகாம்கள் நடக்கிறது. 

           இதர கிராமங்கள் மற்றும் நகரப் பகுதியில் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்படும். முகாம் நடக்கும் இடம், நேரம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தாசில்தார்களால் தகவல் தெரிவிக்கப்படும். முகாம் நடக்கும் போது 2010-11ம் ஆண்டு ஜூன்-ஜூலையில் கொடுக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டினை கொண்டு வர வேண்டும். மேலும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஆகியவற்றை அசலாக கொண்டு வர வேண்டும். கடந்தாண்டு ஜூன்-ஜூலையில் நடந்த முதற்கட்ட கணக்கெடுப்பில் பெயர் இடம் பெறாவிட்டால், தற்போது முகாம் நடக்கும் இடத்திற்கு சென்று கணக்கெடுப்பாளரிடம் பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இவர்களுக்கு பின்னர் புகைப்படம் பதிவு செய்யப்படும். 







Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

        மாணவர்கள் நடப்பாண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற அரசால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: 

           தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்துவ, முஸ்லிம், பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களைச்சார்ந்த அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11, 12ம் வகுப்பு மற்றும் வாழ்க்கை தொழில் கல்வி ஐ.டி.ஐ, ஐ.டி.சி., பாலிடெக்னிக், டிப்ளமோ இன் நர்சிங், ஆசிரியர் தொழில் பட்டயப்பயிற்சி, இளங்கலை மற்றும் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை நடப்பாண்டிற்கு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

           எனவே மேற்படி பயிற்சி தரும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிறுவனங்களில் பயிலும் தகுதியான சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெறுவதற்கு முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு எந்த கல்வி உதவித்தொகையும் பெற்றிருத்தல் கூடாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் 27ம் தேதி துவக்கம்

விருத்தாசலம் : 


            விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி துவங்குகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           விருத்தாசலம் அரசு கல்லூரியில் இளங்கலை பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி துவங்குகிறது. அதன்படி 27ம் தேதி சிறப்பு பிரிவில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், இலங்கை தமிழர்கள் ஆகிய மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. 

            வரும் 28ம் தேதி பி.ஏ., ஆங்கிலம், 29ம் தேதி பி.எஸ்சி., கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடத்திற்கும், 30ம் தேதி பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடத்திற்கும், ஜூலை 4ம் தேதி பி.ஏ., தமிழ், பி.காம்., வணிகவியல், பி.ஏ., வரலாறு பாடத்திற்கும் கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் 9 மணிக்கு வரவேண்டும். 





Read more »

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் 27ம் தேதி துவக்கம்

கடலூர் : 

        கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் 27ம் தேதி துவங்குகிறது.


இது குறித்து கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

            கடலூர், அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 2011-12ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு முதற்கட்ட கவுன்சிலிங் வரும் 27ம் தேதி துவங்குகிறது. 

         அன்றைய தினம் இளமறிவியல் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கு நடக்கிறது. இளங்கலைத் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், வரலாறு மற்றும் வணிகவியல் துறைகளுக்கு 28ம் தேதி நடக்கிறது. இக் கவுன்சிலிங்கில் பகுதி 3ல் உள்ள பாடப்பிரிவுகளில் 501க்கு மேல் 800க்குள் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மொழிப் பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்குரிய பாடத்தில் 120க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு.
 

            கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் காலை 9 மணிக்கு உரிய சான்றிதழ்கள் மற்றும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சேர்க்கைக் கட்டணத்துடன் கல்லூரிக்கு வர வேண்டும். கல்லூரியில் சேர வரும் மாணவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை கட்டாயம் அழைத்து வர வேண்டும். இரண்டாம் கட்டமாக 4ம் தேதி நடக்கும் கவுன்சிலிங்கில் இளம் அறிவியல் துறைக்கும், 5ம் தேதி இளங்கலைத் துறைக்கும் நடக்கிறது. 

             இதில் பகுதி 3ல் உள்ள பாடப்பிரிவுகளில் 350க்கு மேல் 500க்குள் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மொழிப் பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்குரிய பாடத்தில் 100க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு. பகுதி 3ல் 350க்கு கீழ் மற்றும் மொழிப் பாடங்களில் 100க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

Read more »

51-kg Panruti jackfruit steals record

http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_vertical/article-images/ken_0.jpg.crop_display.jpg





       Mr Ken Love, a veteran fruit grower of Hawaiin, is perhaps one of the best losers in the world.

        He was all smiles as he saw his Guinness record of having grown the biggest jackfruit (35 kg) being surpassed by humble farmers of Panruti in Tamil Nadu who lugged along a 51 kg specimen to the three-day National Jackfruit Festival being held at the Kanakakunnu Palace here.

   “This is amazing” an out-of-breath Love told Deccan Chronicle after trying to lift the monster ‘chakka’. “It is true that I have lost my record. But I love jackfruit so much that I don’t mind losing.”

         Mr Haridas, who carted the fruit to the fest, says that even bigger specimens were grown by farmers of Panruti in Cuddalore district. “Last month, there was one jackfruit which weighed around 80 kg, but it was sold,” he said. Mr Love could not but admire the mammoth jackfruit from all angles. He also promised the farmers that he would help them do the paper work to mark their achievement in the Guinness Book.

       A top-notch Associated Press reporter in Europe, Mr Love turned to farming in 1992 and is now the executive director of the Hawaii Tropical Fruit Growers Association. He is presenting a paper at the festival and is also wearing the apron of a chef to prepare tasty jackfruit jam for the attendees . “I want to popularise jackfruit everywhere,” he said. “It is both tasty and healthy. I grow lots of it in my farm. Unfortunately I could not get a Hawaiin shirt with jackfruit on it and had to opt for breadfruit.”

          Perhaps Love’s passion for jackfruit will also bring it back to fa-shion among Keralites, who have been neglecting it as a low-down rustic entity.






Read more »

It's brass vessels that prop up several families at Kannarapettai in Cuddalore


Making brass vessels is the sole occupation of over 150 families at Kannarapettai in Cuddalore.

CUDDALORE: 

         Even while the rest of the world is grappling with inflationary pressure, recession, retrenchment and layoff, over 150 families at Kannarapettai near here are too busy to pay attention to any of these economic predilections. They are fully occupied with their traditional pursuit of making brass vessels throughout the year, and hence, their habitations are always ricocheting with hammer beats and lighted with ever glowing embers in the furnaces.

         R.Venkatesh, one of the residents, told The Hindu that vessel-making had been the means of livelihood for the families in Kannarapettai for generations. Their workmanship had been recognised all over south India and hence, the finished products had found ready markets in Karnataka, Andhra Pradesh and Kerala. It was a common belief that brass vessels made at Kumbakonam were renowned for their quality and varieties.

          But Mr Venkatesh averred that Kannarapettai continued to supply large volume of brass vessels to Kumbakonam, and the pots with broad mouth and wide rims were termed as “Kumbakonam pots.” At any point of time 16 varieties of vessels were being produced in the factories, including measurements and circular metallic seat with three legs (‘mukkali” in Tamil).

       Mr Venkatesh said that all units were undertaking only job works from traders and wholesale dealers for which they were paid wages either on the basis of weight of the products or on a piece rate. But he would not disclose the charges fixed on both the counts. The traders would provide them with the brass sheets which they would cut according to the requirements. For instance, the pot would require four pieces — bottom, middle portion, neck and mouth.

          While the bottom and middle parts were attached horizontally, the neck part was attached vertically. The workmanship comes to the fore while giving shape to the vessels and heating up the joints. For heating either coal embers or gas was utilised and the one made of the traditional furnace method were less expensive and more lasting, while the vessels made of latter technology were costlier and having lesser life. G.Selvam, another vessel maker, acknowledged the fact that water stored in brass vessels was good for health because it would neutralise the harmful bacteria. But on the other hand the kitchenware made of brass should necessarily be coated with lead inside so the cooked food would not have any adverse impact on health.

          Since, brass would lose its sheen soon it could be rubbed with tamarind and rinsed with water to get back the sparkle. Both of them said that their job ended with shaping up the vessels and it was up to the traders to get it polished. Mr Venkatesh said that they were averse to manufacturing the vessels on their own because of the marketing and logistic problems which might require larger manpower and transport facility, and hence, they were content with taking up the job works. “Since there is a constant demand for household vessels there is no dearth of work orders,” Mr Venkatesh added.






 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior