உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 02, 2011

கடலூர் தபால்துறை ரூ. 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நீதிமன்ற உத்தரவு

கடலூர்:

              அஞ்சல் அலுவலகத்தில் டெபாசிட் செய்த தொகையைப் பெறுவதில் எழுந்த பிரச்னை காரணமாக, சேவைக் குறைபாட்டுக்காக, பெண்ணுக்கு கடலூர் தலைமை அஞ்சல் நிலையம், வட்டியுடன் ரூ. 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று, கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

                  கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் வசீகரனின் மனைவி குணமலர். 2004-ம் ஆண்டு அவர், புதுவை அஞ்சல் நிலையத்தில் ரூ. 60 ஆயிரம் டெபாசிட் செய்து இருந்தார். பின்னர் அந்த டெபாசிட்டை கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு மாற்றினார். டெபாசிட் முதிர்வடைந்தபோது, பணத்தைப் பெற்றுக் கொள்ள தனது கணவர் வசீகரனுக்கு அதிகாரம் அளித்து இருந்தார். கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வசீகரன் சென்று, டெபாசிட் தொகையைக் கேட்டதற்கு, புதுவையில் டெபாசிட் செய்தபோது பெறப்பட்ட மாதிரிக் கையொப்பம் மற்றும் டெபாசிட் செய்ததற்கான விண்ணப்பம் ஆகியவை புதுவையில் இருந்து வரவில்லை. 

              எனவே அவற்றை வசீகரன்தான் சென்று பெற்றுவர வேண்டும் என்றும் கூறிவிட்டனராம். இதனால் உடனடியாக டெபாசிட் தொகையைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் மூலமாக விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியும், அஞ்சல் நிலையம் டெபாசிட் தொகையை அளிக்க முன்வரவில்லை.எனவே வசீகரன், குணமலர் ஆகியோர் கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்து, அண்மையில் தீர்ப்புக் கூறினர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைக் குறைபாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கான நஷ்டஈடாக ரூ. 3 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 2 ஆயிரம், டெபாசிட் தொகையை திருப்பித் தரும் வரை, அத்தொகைக்கு சாதாரண வட்டியும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

             இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார்.2008-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வாகன ஆர்.சி.புத்தகம் தரமறுத்த வங்கிகடன் முழுவதையும் செலுத்திய பிறகும், வாகனத்துக்கான ஆர்.சி. புத்தகத்தைத் தரமறுத்த எச்.டி.எப்.சி. வங்கி, ரூ. 5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

                 கடலூர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்த அருணாச்சலம். எச்.டி.எப்.சி. வங்கியில் கடன் பெற்று, இருசக்கர வாகனம் வாங்கினார். கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்திய பிறகும், அவருக்கு வாகனப் பதிவுச் சான்றை (ஆர்.சி. புத்தகம்) எச்.டி.எப்.சி. வங்கி திருப்பி வழங்கவில்லை. இது தொடர்பாக கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அருணாச்சலம் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் எச்.டி.எப்.சி. வங்கி அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.எனவே பாதிக்கப்பட்டவருக்கு வாகனப் பதிவுச் சான்றை உடனே வழங்க வேண்டும். 

               மன உளைச்சலுக்காக ரூ. 3 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ. 2 ஆயிரமும், எச்.டி.எப்.சி. வங்கி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கிலும் பாதிக்கப்பட்டவர் சார்பில் எம்.நிஜாமுதீன் ஆஜரானார்.

Read more »

தமிழகத்தில் 40 அரசு மருத்துவமனைகளில் சிசு மருத்துவ மையங்கள்

கடலூர்:

         தமிழகத்தில் உள்ள 40 அரசு மருத்துவமனைகளில் சிசு மருத்துவ மையங்கள் (பச்சிளங் குழந்தை தீவிர சிகிச்சை, கண்காணிப்புப் பிரிவு) தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

                ஒரு மையம் தொடங்க தலா ரூ. 25 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை செலவாகும் என்றார். மாநிலத்தில் 7-வதாக, கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ள, சிசு மருத்துவ மையத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

அப்போது அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது: 

             தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 31 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது. இப் பிரிவு தொடங்கப்பட்டு வருவதன் மூலம், குழந்தைகள் இறப்பு விகிதம் மேலும் குறையும். குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நவீன கருவிகள் இடம்பெறுவதுடன் குழந்தைகளுக்குச் சிறந்த சிகிச்சை இந்த சிசு மையங்களில் வழங்கப்படும்.  ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் வரை அரசு,  தனியார் சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தை, முதல்வர் கருணாநிதி கடந்த 27-ம் தேதி தொடங்கி வைத்தார். 

               இதுவும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைக்கும். தமிழகத்தில் 27-ம் தேதி 66.10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது.  கடலூர், காட்டுமன்னர்கோயில் அரசு மருத்துவமனைகளில் தலா ரூ. 1.50 கோடியிலும், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 2.90 கோடியிலும் புறநோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்குகள் கட்டுவதற்கு, துணை முதல்வர் கடந்த 13-ம் தேதி அடிக்கல் நாட்டினார். திங்கள்கிழமை அந்தக் கட்டங்கள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது என்றார் அமைச்சர்.  

            நிகழ்ச்சியில் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜா, கடலூர் மருத்துவத் துறை இணை இயக்குநர் கமலக்கண்ணன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆர்.மீரா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மனோகரன், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read more »

சிதம்பரத்தில் இன்று 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா





சிதம்பரம் : 

           சிதம்பரம் நடராஜர் கோவிலில், 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, இன்று துவங்குகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், 1981 முதல், 29 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட, பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு, 30வது நாட்டியாஞ்சலி விழா, இன்று துவங்கி, 6ம் தேதி வரை நடக்கிறது. டில்லி சங்கீத நாடக அகடமி தலைவர் லீலா சாம்சன் துவக்கி வைக்கிறார்.

Read more »

பள்ளி பருவத்தில் போதை கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் பாதிப்பு

பண்ருட்டி : 

               தண்ணீர் இல்லாத காலி பாக்கெட்டில், "சொல்யூஷன்' ஊற்றி, சிறுவர்கள் போதையில் திளைக்கும் பழக்கத்தைத் தடுக்க, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

             சைக்கிள், "டியூப்' ஒட்ட பயன்படும் ஆல்கஹால் உள்ள, சொல்யூஷன் பேஸ்ட், பெவிகால், பைப்புகள் ஒட்ட பயன்படுத்தும் சொல்யூஷன், ஒயிட்னர் போன்றவற்றை, போதை பொருட்களாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள், 200 மி.லி., காலி தண்ணீர் பாக்கெட்டுகளில், சொல்யூஷன் ஊற்றி, அதைக் கசக்கி நுகரும் போது, நல்ல போதை தலைக்கேறுவதாக கூறுகின்றனர். 

           பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் செல்லும் பல மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் ரயில்வே ரோடு, மரங்கள் உள்ள பகுதியில், தண்ணீர் இல்லாத பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில், சொல்யூஷன் ஊற்றி போதை ஏற்றுகின்றனர். இது குறித்து பண்ருட்டி, புதுப்பேட்டை போலீசாருக்கும், வியாபார பிரமுகர்களுக்கும் தெரிந்தும், இதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளவில்லை. எதிர்கால இந்தியாவை உருவாக்க வேண்டிய சிறு வர்கள், தவறான பாதைக்கு செல்வதை தவிர்க்க போலீசார், வியாபாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.


Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு : 30 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு





       பிளஸ் 2    தேர்வு எழுதும் 

அனைவருக்கும் தேர்வில் அதிக 

மதிப்பெண் பெற எமது வாழ்த்துக்கள்,

இந்த ஆண்டிலும் நம் மாவட்டத்தில் 

சிறப்பான தேர்ச்சி விழுக்காடு பெற

வாழ்த்துகிறோம். 


கடலூர் : 

              இன்று துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 63 மையங்களில் 15 ஆயிரத்து 678 மாணவிகள் உட்பட மொத்தம் 30 ஆயிரத்து 83 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

             முறைகேடுகளை தவிர்க்க 15 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (2ம் தேதி) துவங்குகிறது. அதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 9,202 மாணவர்கள், 11 ஆயிரத்து 102 மாணவிகள் 40 மையங்களிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 5,203 மாணவர்கள், 4,576 மாணவிகள் 23 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் மாணவர்களை விட 1,273 மாணவிகள் கூடுதலாக உள்ளனர்.
               ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் மாற்று எண் முதன்மை கண்காணிப்பாளர் தலா ஒருவர் வீதம் 63 மையங்களுக்கு 189 பேரும், தேர்வறை கண்காணிப்பாளராக 1,728 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு தலா ஐந்து பேர் கொண்ட 15 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 

              இதில் ஐந்து குழுவினர் சி.இ.ஓ., அரசு தேர்வுத்துறை துணை இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், டி.இ.ஓ.,க்கள் தலைமையில் செயல்படுவர். மாணவிகளை சோதனை செய்யும் பொருட்டு ஒவ்வொரு குழுவிலும் பெண் ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். தேர்வில் முறைகேடு செய்யும்போது பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் தேர்வை ரத்து செய்வதுடன், தொடர்ந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும்.

Read more »

தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள்

        தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை 01.03.2011 அன்று வெளியிட்டார். 

அப்போது தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷிபேசுகையில்,

             தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கும் (ரிசர்வ்.), 2 தொகுதிகள் பழங்குடியினத்தவருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தலையொட்டி மொத்தம் 54 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 பேர்.

             தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 99.85 சதவீதம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை 100 சதவீதமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 5 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகள் ஆகும். அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன.

             புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போட முடியாது. இந்த அட்டை இல்லாத வாக்காளர்கள், அருகில் உள்ள தேர்தல் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Read more »

தொடங்கியது +2 தேர்வு! 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள்!

            தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ந் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது.

           பிளஸ் 2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள்.  சென்னை மாநகரில் 445 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 49 ஆயிரத்து 8 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள்.

             புதுச்சேரியில் 31 தேர்வு மையங்களில் 95 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 517 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 5 ஆயிரத்து 212 பேர் மாணவிகள். 6 ஆயிரத்து 305 பேர் மாணவர்கள். மொத்தத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுக்காக 1,890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூட மாணவர்களை தவிர தனித்தேர்வர்களாக 57 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள்.

            தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 15 மணிக்கு முடிகிறது. இதில் கேள்விகளை வாசிக்க வழக்கம்போல 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. டிஸ்லெக்சியா, பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள், வாய் பேசாதவர்கள் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர்கள் சொல்வதை தேர்வில் எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

            தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் 5 லட்சத்து 15 ஆயிரத்து 281 பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

Read more »

Test of their flawless recitation ability, memory power

CUDDALORE: 

         The hall of the E.I.D.Parry's Recreation Club at Nellikuppam in Cuddalore district reverberated with the recitation of verses from “Thiruppavai, Thiruvembavai and Thiruppalliyezhuchi” for the whole day.

         Not less than 700 students in the age group of 9-10, drawn from 30 schools, were queuing up to participate in the recitation competition held recently under the aegis of the Pavai Vizha Committee, and were patiently but eagerly waiting for their turn to prove their mettle. A majority of them happened to be girls while the boys formed about 10 per cent of the turnout, mostly hailing from rural background. All the participants had memorised a total of 69 verses in these sacred works authored by Andal and Manickavasagar.

         A panel of judges evaluated their performance, primarily on two criteria: flawless recitation ability and the robust memory power to pick the verses at random on the direction of the panel members. Some of the students exhibited extraordinary talent in this aspect by proving their thorough knowledge of the verses. Sri Sarada Vidyalaya at Vanpakkam achieved the coveted honour of bagging the rolling trophy and its Class V student Sowmya getting the first prize.

            Chandru, a Class IV student of the Viswanathapuram Municipal School, came second, and Geetha, a Class V student of the Thorapadi Panchayat Union School attained the third place. Ashiba, a Class V student of Melpattampakkam Balavihar Primary and Nursery School, got the consolation prize. Committee president K.S.Krishnagopal told The Hindu that the competition was the 47th annual event and every passing year it was witnessing increased participation. It had its genesis in 1960 when Lalitha, a resident of Janakiram Nagar at Nellikuppam, started teaching the local students the verses along with the Bhagvad Gita and formed them part of the bhajans.

          Later, on the suggestion of Chandrasekarendra Saraswathi Swamigal of Kanchi Mutt it was broad-based to include the students studying Class IV and V in the local schools. Now, the event had acquired almost the district-level dimension. Dr. Krishnagopal said that the objective was to impart value education, inculcate sense of harmonious living and to improve memory power of the students so as to enable them to emerge as productive citizens. He appreciated the cooperation of the headmasters and teachers in this endeavour.

         Ever since 2000, Dr Krishnagopal and K.Srikanth are rendering free health care services to the participants. SBI Chief Manager (Puducherry) Narayanan delivered the presidential address and K.Thirumalai read out the annual report. Besides trophies and cups for the winners certificates and educational aids were given away to all the participants.

Read more »

Natyanjali begins today

CUDDALORE: 

         The 30th edition of “Natyanjali” will get off to a colourful start at the Nataraja temple in Chidambaram on Wednesday.

          The five-day event will witness forms of dance such as Bharatanatyam, Kuchupudi, Mohini Attam, Kathak, Odissi, Sattriya, Manipuri and Chhau. A.K. Natarajan, president of Natyanjali Trust, told The Hindu that this year a unique programme would be held in which exponents of various dance forms would perform on the same platform, like Jugalbandhi in music concerts. Mr. Natarajan said that styled as “Nritya sangamam,” the event would stretch from 10.45 p.m. (March 2), to 12.10 a.m. (March 3) during which artists would give individual performance for specified time and later, a joint dance treat.

         It would be a confluence of culture and skill, flowing from various parts of the country and culminating at the Chidambaram temple. Other highlights of the programme would be dance dramas, “Rajarajeswara vijayam,” to be enacted on Thursday and “Mahadevam,” the concluding event on the final day. Mr. Natarajan said that as was the custom, artists from all over the country and abroad were too eager to participate in the fete. Only after close scrutiny of the profiles, artists and troupes have been allowed to perform. Besides encouraging artists from elsewhere, the Trust also made it a point to support local talent.

          As of now, there were at least about six dance schools in Chidambaram and they would be given chances. Mr. Natarajan categorically said that no repeat performance by any artist would be permitted. However, Padma Subrahmanyam would be an exception because of her association with the Trust from its inception and her help in conducting the festival. He categorically said that it was certainly not the platform for “arangetram” of individual artists.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior