உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

             மாணவர்களின் முழு விவரங்கள் பதிவுசெய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:  

         மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டில் ஒவ்வொரு மாணவரின் பெயர், முகவரி, பிறப்பு, பள்ளிச் சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, பெற்றோர் பெயர், பெற்றோர் வருமானம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இதன்மூலம் மாணவர்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர நேரும்போது இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும்.  இதன் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாகக் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்க வழிவகை செய்யப்படும். 

 ஸ்மார்ட் வகுப்புகள்:

               முதல்கட்டமாக, 5 அரசுப் பள்ளிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். வகுப்பறையில் கணினி முறையில் பாடம் நடத்தப்படும். இதயம் குறித்து பாடம் நடத்தும்போது, ஒலி, ஒளி அமைப்பில் வெண் திரையில் இதயம் தோன்றும். இதன்மூலம், பாடங்கள் மாணவர்கள் மனதில் நீண்ட நாள்கள் நிற்கும். 

ல்வித் தகவல் மேலாண்மை: 

            கல்வித் தகவல் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அமைப்பு, அமைவிடம், கட்டட வசதி போன்றவை பதிவு செய்யப்படும். அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓய்வு பெறும் நாள் போன்ற எல்லா விவரங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்படும்.  இந்த முறையில் பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, இடைநிற்றல், தேர்வுகள், தேர்ச்சி போன்றவை பதிவு செய்யப்படும். இதில் பள்ளியில் பயிலும் மாணவர் ஒவ்வொருவருக்கும் தர எண் அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் அந்த மாணவரின் நிலை கண்காணிக்கப்படும்.








Read more »

வடலூரில் பள்ளிச் சிறுமி கடத்தல்


நெய்வேலி:
 
          வடலூரை அடுத்த தென்குத்து கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகளை மர்ம நபர்கள் புதன்கிழமை கடத்திச்சென்றதாகத் தெரிகிறது.  இது குறித்து போலீசார்  தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 
 
                 வடலூரை அடுத்த வானதிராயபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் ஆர். கனிதா(10). இச்சிறுமி வடலூர் ஆபத்ராணபுரத்தில் உள்ள திரிபுரணேனி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறார்.  இந்நிலையில் சிறுமி புதன்கிழமை பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவதற்காக பள்ளி வாயிலில் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. நெடுநேரம் ஆகியும் சிறுமி வீடு வந்த சேராததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று பார்த்துள்ளனர். 
 
                 ஆனால் அங்கிருந்து சிறுமி சென்றுவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.  இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வியாழக்கிழமை நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இப்புகாரை அடுத்து நெய்வேலி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திவருகிறார். இருப்பினும் சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது நெய்வேலி டிஎஸ்பி மணி, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சிறுமியை கடத்தியது கடத்தல் கும்பலா அல்லது உறவினர்களா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
 
 
 
 

Read more »

3.11 கோடியில் கடலூர் சிறைக் காவலர் குடியிருப்புகளை வீடியோ கான்பரன்ஸிங் மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

கடலூர்:

               சிறைத்துறை காவலர்களுக்கு கடலூர் கேப்பர் மலையில் ரூ.3.11 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்து காணொலி மூலம் (வீடியோ கான்பரன்ஸிங்) மூலம் திறந்துவைத்தார். 

 சிறைத்துறை நவீனமயமாக்கும் திட்டத்தில் கடலூர் கேப்பர் மலையில் 

 63 சிறைக் காவலர்கள், 2 தலைமை சிறைக் காவலர்கள்,
1 உதவி சிறை அலுவலர், 
1 கூடுதல் கண்காணிப்பாளர் 
ஆகியோருக்கு, குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 

இக்குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்து முதல்வர் பேசியது:

                சிறைத் துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகள். அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகாமையில் அமைத்திட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கைதிகளை பாதுகாக்கும் பணியில், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். இதை கருத்தில் கொண்டு, தற்போது தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள சிறைத்துறை குடியிருப்புகளைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

               இத்தருணத்தில் சிறைத்துறை அலுவலர்கள் தங்கள் பணியினை, சிறந்த முறையில் ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி நிகழ்ச்சியில் பேசுகையில், 

             கடலூரில் சிறைக காவலர்கள் குடியிருப்புகளை திறந்து வைத்துள்ள முதல்வருக்கு, கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குடியிருப்புகளில் முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தப்படி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுச் சூழலை பசுமையாக்க மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் சென்றடைய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்வேன் என உறுதி கூறுகிறேன் என்றார்.

                பயனாளிகள் சார்பாக சிறைக் காவலர் வெற்றிச்செல்வன் மனைவி சாந்தி பேசினார். நிகழ்ச்சியில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், சிறைத்துறை திருச்சி மண்டல துணைத் தலைவர் துரைசாமி, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 







Read more »

கடலூர் மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன் சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்க புதிய திட்டம்


கடலூர்:
 
                 சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்கும் வகையில், தனியார் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளைத் தங்க வைக்கவும், அவர்களுக்கு நமது கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் உணவு வகைகளை அளிக்கவும் வகை செய்யும் திட்டம், கடலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி அறிவித்து உள்ளார். 

இது குறித்து ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               தமிழக முதல்வரின் அறிவுரைப்படி சுற்றுலாத் துறையினரால், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன், உணவுடன் கூடிய உறைவிடத் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்திலும், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில், மூன்றாம் இடத்திலும் உள்ளது. பொழுதுபோக்கு, மருத்துவம், கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வந்து தங்கும், வெளிமாநிலப் பயணிகள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து உள்ளது. 

             நடுத்தர சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் தற்போது போதுமானதாக இல்லை. எனவே கடலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, உணவுடன் கூடிய உறைவிடம் அளிக்கும் திட்டம், சுற்றுலாத் துறை மூலம் விரிவு படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தனியார் தங்கள் வீடுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு அளிக்கலாம். அவ்வாறு தங்கள் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளை, உணவுடன் தங்க வைக்க விரும்புவோர் தங்கள் பெயர்களை, சுற்றுலாத் துறையில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். உணவுடன் கூடிய உறைவிடத் திட்டம் பற்றிய கையேடுகளில், விவரங்கள் அளிக்கப்படும். 

இத்திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை தங்கள் வீடுகளில் தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள், 

சுற்றுலா அலுவலர், 
ரயில்வே ஃபீடர் சாலை, 
சிதம்பரம் (தொலைபேசி எண் 04144- 238739, செல்ஃபோன் 9789055400 ) 

என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




Read more »

கடலூர் மாவட்டத்தில் மருத்துவ அலுவலர், ஊழியர்களுக்கும் குறுந்தகவல் மூலம் வருகைப் பதிவு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், எஸ்.எம்.எஸ். மூலம் தினமும் பணி வருகைப் பதிவை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் முறை, செப்.1 முதல் அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார். 

கடலூர்  ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

             கடலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் முறை, 1-8-2011 முதல் அமல்படுத்தப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு வருவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

               இம்முறை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இந்த முறையை மேலும் விரிவு படுத்தி, மாவட்டத்தில் உள்ள மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவையும் எஸ்.எம்.எஸ். மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பும் திட்டம் 1-9-2011 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் பொதுமக்களின் வரவேற்புடன் மேலும் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. 

              எனவே ஆசிரியர்கள் முன்னுதாரணமாக எஸ்.எம்.எஸ்.மூலம் வருகைப் பதிவினை அளித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களும் ஊழியர்களும் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 





Read more »

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) தடுப்பு வேலி

கடலூர் : 

              கடலூர் சில்வர் பீச்சில் குளிப்பவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

                கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாலை நேரத்தில் ஏராளமான பொது மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களில் வாலிபர்கள், சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குளித்து மகிழ்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சுனாமிக்குப்பிறகு கடல் அலையில் பெரிதும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அடிக்கடி சீற்றம் ஏற்படுவதுடன் திடீரென அலையில் சிக்கியவர்களை உள்ளிழுக்கவும் செய்கிறது. இந்நிலையில் உள்ளூர் மக்கள் அல்லாமல் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குளிப்பதற்காக கடலில் இறங்குகின்றனர். 

               ஆழமில்லை என கருதி கடலில் சிறிது தூரம் சென்று விடுகின்றனர். அப்போது நீச்சல் தெரியாதவர்கள் திடீரென வரும் அலையில் சிக்கி இறக்க நேரிடுகிறது. எங்கிருந்தோ வருபவர்களெல்லாம் முகவரி தெரியாமல் மடிந்து விடுகின்றனர். இதைத் தடுப்பதற்காக பரந்த கடற்கரையில் போலீசார் காவல் பணியில் காத்திருந்தும் பலனில்லை. இருப்பினும் ஏதாவது ஒரு மூளையில் இச்சம்பவம் நடந்து விடுகிறது. எனவே இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடக்காத வண்ணம் கடற்கரையில் குறிப்பிட்ட பகுதியில் தடுப்பு வேலி அமைத்து விட்டால் குளிப்பவர்களுக்கு இடையூறு இல்லாமலும், உயிரிழப்பு இல்லாமலும் தடுக்க முடியும். எனவே பல லட்ச ரூபாய் செலவில் சில்வர் பீச்சை அழகுபடுத்தும் அரசு தடுப்பு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







Read more »

காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுருகுல மேல்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காட்டுமன்னார்கோவில் : 

              காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுருகுல மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1972ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த பழைய மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து தங்களின் பசுமை நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். 

               காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுருகுல மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த 1972ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த பழைய மாணவர்கள் 40 பேர் 40 ஆண்டு இடைவெளிக்கு பின் சந்தித்து தங்களின் பசுமை நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். இந்த சந்திப்பில் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், தற்போது பள்ளியின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சின்னமணி உள்ளிட்ட 40 பேர் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி தங்களின் பசுமையான நெகிழ்வுகளை நினைவு கூர்ந்தனர். 

             பழைய நினைவுகளின் அடிப்படையில் தங்களை பெயர் சொல்லியும் ஒருமையிலும் அழைத்துக் கொண்டதுடன், துள்ளித் திரிந்த இடங்கள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியரிடம் தண்டனை பெற்றது உள்ளிட்டவைகளை நினைத்து பார்த்து உற்சாகமடைந்தனர். நேற்று நடந்த இந்த சந்திப்பில் தற்போது விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுடன் சேர்ந்து தங்கள் செலவில் அசைவ மதிய உணவை அனைவருக்கும் வழங்கி தாங்களும் உண்டு மகிழ்ந்தனர். இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் சார்பில் தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வரும் மதிவாணன், பிரபல வியாபாரியாக உள்ள உதயசூரியன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.







Read more »

கடலூரில் 24 கிராமங்கள் பயனடையும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய துவக்க விழா

திட்டக்குடி:
           
               திட்டக்குடியை அடுத்துள்ள தொளார் கிராமத்தில் தொளார், கொத்தட்டை, திருவட்டத்துறை, இறையூர், கொடிக்களம் உட்பட 24 கிராமங்கள் பயனடையும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றினை அனுமதித்துள்ளது. இந்த சுகாதார நிலைய துவக்க விழா நடந்தது.

            விழாவிற்கு தமிழக சமூக நலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் தலைமை தாங்கினார். விழாவில் ஜெயப்பிரகாஷ், ஆனந்தன், லோகநாதான், மணிகண்டன் ஆகிய 4 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் தலா 25ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையும் 18 மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
 
சிறப்பு திட்டங்கள் அமலாக்க துறை அமைச்சர் எம்.சி. சம்பத் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தும் பேசியது:-


            இந்த மருத்துவ மனைக்கு சொந்தக் கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்படும் மருத்துவ துறையில் முதன்மை பெறவேண்டும் என்ற கருத்துடன் முதல்-அமைச்சர் அம்மா செயல் படுகிறார். எந்தப்பகுதிக்கு எது தேவையோ அதை செய்து தருபவர் அவர் தான். உலக அளவில் சூப்பர் ஸ்பெஷலாட்டி தரத்துடன் சென்னை மருத்துவமனை அமையஉள்ளது.

            இந்த ஆண்டு அவர் முதல்வராக பொறுப்பேற்ற வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டு. தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த புதிய மருத்துவமனை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் தான் பெண் சிசு அதிகமாக உள்ள மாவட்டம். கர்ப்பிணி பெண் களுக்காக 3 கட்டங் களாக வழங்கும் வகையில் 12ஆயிரம் ரூபாய் நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கியுள்ளார். கர்ப்பிணி பெண்கள் இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

             மிகவும் பின்தங்கிய இந்த பகுதியில் அனைவரும் அனைத்து மருத்துவ வசதிகளையும் பெறவேண்டும் என விரும்பி தான் இந்த மருத்துவ மனையை அனுமதித்துள்ளோம். இவ்வாறு எம்.சி. சம்பத் பேசினார். 
 
விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசியது:-

             தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். முதல்- அமைச்சர் அம்மா சொல்வதை விட செய்துகொண்டு இருப்பதுதான் அதிகம். தினமும் ஒரு திட்டம் என அறிவித்து அதை செயல் படுத்தியும் வருகிறார். முதல்-அமைச்சர் அம்மா ஒவ்வொரு நிமிடமும் என்ன செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்களோ பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவார் களோ என சிந்தித்து செயல்படுகிறார்.

             தொட்டில் குழந்தை திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளார். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை கொண்டுவந்துள்ளார். இவ்வாறு செல்வி ராமஜெயம் பேசினார். விழாவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அமுத வல்லி, திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்அழகன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மனோகர், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமணிராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

               விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், தாசில்தார்கள் சையத்ஜாபர் விஜயமேரி, கண்ணன்,மருத்துவ அலுவலர்கள் மாலதி, வலம்புரிஜான், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை இயக்குனர் சம்பத் அனைவரையும் வரவேற்றார். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 

Read more »

TN Government to appoint 14,377 teachers at all levels

              The State government would appoint 14,377 teachers at all levels to improve access to higher education and ensure success of students in public examinations, C.Ve. Shanmugam, Minister for School Education, has said.

          Moving the demands for grants for his department, Mr. Shanmugam announced that 2,682 postgraduate teachers, 5,790 graduate teachers, 4,342 secondary teachers, 1,538 special educators and 25 farm trainers would be appointed. The total allocation for school education has increased by Rs. 3,187 crore compared to last year. Under a NABARD scheme XI, Rs. 260 crore would be spent on basic infrastructure in 260 schools. As many as 1,353 librarian posts would also be filled. About 831 posts of headmaster would be created in middle schools this academic year, he said.

            The government had also earmarked Rs 41.3 crore for identifying and educating children with special needs. A major component would be spent on students with dyslexia who are estimated to be 10 to 15 per cent. At a review meeting, the Chief Minister had specifically asked the department to concentrate on educating dyslexic and autistic children as they suffered at the hands of teachers and parents who were pressuring these children to perform more without understanding their learning disabilities. Special educators would be appointed for the purpose, Mr. Shanmugam said. Besides, three new residential schools would be started this year for educating orphaned and street children.

           Students would be given smart cards with personal and academic details and the data could facilitate admission to any school at the time of migration due to family circumstances. Smart classrooms would be set up in five government schools at a cost of Rs 1.25 crore. From this year, special supplementary examinations would be held for students failing in all subjects in public exams, instead of three subjects, he announced. 





Read more »

Nagarjuna Oil Corporation Limited to be ready by December with Rs 12,000 cr more

            Nagarjuna Oil Corporation Limited (NOCL) is aiming to ready its petroleum refinery project in northeastern Tamil Nadu by this year-end, with an additional investment of Rs 12,000 crore.

            NOCL, along with Tamil Nadu Industrial Development Corporation, is setting up the Rs 7,160-crore project with an annual capacity of six million tonnes at Thiruchopuram in Cuddalore district, industries minister S P Velumani said today. An additional investment of Rs 2,500 crore is being made in key infrastructure facilities such as captive port, tankages and a captive power plant by NOCL’s associates, he told the state Assembly. 

           NOCL has also commenced preliminary engineering work for expanding its refining capacity to 15 million tonnes per annum with an additional investment of about Rs 12,000 crore. This expansion will be completed by 2015. The construction period will generate employment for about 5,000 persons. It will double once the refinery goes into full operation, Velumani added. Thiruchopuram, a captive port of the refinery project, will be developed as an all-weather deep-sea port to handle the crude oil, petroleum fuel, coal for Tamilnadu Electricity Board and other cargo. 


Besides Cuddalore, this port will boos industry and trade in the districts of Villupuram, Thiruvannamalai, Salem, Namakkal, Karur, Perambalur and Ariyalur, the minister added.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior