உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் எண்ணெய் பனை சாகுபடி பயிற்சி

 கடலூர் : 

                கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு எண் ணெய் பனை சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி நடந்தது.
 
                       கரும்பு ஆராய்ச்சி நிலைய முனைவர் பாலராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். கடலூர் வட் டார உதவி வேளாண் இயக்குனர்  இளவரசன் வரவேற்றார். துணை இயக்குனர் பாபு எண்ணெய் பனை அபிவிருத்தி திட்டம், பிற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் அமரேசன் மண் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். உற்பத்தி அலுவலர் சாலமன் செல்வசேகர், முன் னாள் பண்ணை வானொலி அலுவலர் துகிலி சுப்ரமணியம், காவேரி பாமாயில் நிறுவன ஒருங்கிணைப் பாளர் நாகப்பன், மாவட்ட பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் எண்ணெய் பனை சாகுபடி குறித்தும், பாமாயில் ஆலைகளுடன் விவசாயிகள் தொடர்பு கொள்ள ஏற்ற வழிமுறைகள் குறித்தும் விளக்கினர். ஏற்பாடுகளை கடலூர் உதவி வேளாண் அலுவலர்கள் ஜெயராமன், ஜெயமணி. பரமசிவம், தெய்வசிகாமணி, பிரபாகரன், காவிரி பாமாயில் நிறுவன அலுவலர் மனோகர் செய்திருந்தனர். கடலூர் வட்டார விவசாயிகள் 50 பேர் பங்கேற்றனர். கடலூர் வேளாண்  அலுவலர் சின்னக்கண்ணு நன்றி கூறினார்.

Read more »

பெண்ணாடம் - செந்துறை அரசு பஸ் இயக்கம்

திட்டக்குடி : 

               பெண்ணாடம்-செந் துறை புதிய வழித் தடத்தில் அரசு பஸ் இயக்க விழா நடந்தது.
 
                       பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு தி.மு.க., நகர செயலாளர் குமரவேலு தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி, மாவட்ட இளைஞரணி மதியழகன், நகர இளைஞரணி காதர், செந்துறை தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆண்டிமடம் எம்.எல். ஏ., சிவசங்கரன் புதிய வழித் தடத்தில் அரசு பஸ்சை இயக்கி வைத்தார்.  

                       நிகழ்ச்சியில் தங்கசீனிவாசன், துணை செயலாளர்கள் முருகேசன், தமிழ்ச்செல்வி, வார்டு செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், ராஜேந்திரன், சுகுணா உட் பட பலர் கலந்து கொண்டனர்.  தினசரி 8 முறை இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Read more »

தாசில்தார் அலுவலகம் முற்றுகை

காட்டுமன்னார்கோவில் : 

                 குடும்ப அட்டைகளை தகுதி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் திடீர் பரபரப்பு ஏற் பட்டது.
 
                 காட்டுமன்னார்கோவிலை அடுத்த கருப் பேரி, குஞ்சமேடு கிராமங்களில் உள்ள 80 பேர் அங்குள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில் இரு கிராமத்தைச் சேர்ந்த80 பேரின் குடும்ப அட்டைகள் நீக்கம் செய் யப்பட்டதால், இவர்களுக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுத்துள்ளார்.  இதைத் தொடர்ந்து நேற்று மாலை கருப்பேரி மற்றும் குஞ்சமேட்டைச் சேர்ந்த 80 பேர் காட்டுமன்னார் கோவில் தாசில் தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

                    முற்றுகையிட்டவர்களிடம் தாசில்தார் வீரபாண்டியன் பேச்சுவார்தை நடத்தினார். பின்னர் குடும்ப அட்டைகள் நீக்கம் குறித்து விசாரணை செய்து மீண்டும் உங்களுக்கு ரேஷன் பொருட் கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.  இதனால் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக மீண்டும் சம்பத் நியமனம்

கடலூர் : 

                கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக நியமிக் கப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பத் கடலூரில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் அண்ணாதுரை  சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
 
               அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க.,   மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் களை நியமனம் செய்தார். இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீண்டும் நியமனம் செய்யப்பட் டுள்ளார். அவைத் தலைவராக அருணாசலம், இணைச் செயலாளராக சுமதி, துணை செயலாளர்களாக முருகுமணி, தவமணி சக்கவரவர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
                      மாவட்ட செயலாளர் சம்பத் நேற்று மாலை கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள எம்.ஜி.ஆர்., மற் றும் அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்தார். முன்னதாக அ.தி.மு.க., தொண்டர் கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, முத்துகுமரசாமி, அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன்,விவசாய அணி செயலாளர் காசிநாதன், மருத்துவரணி சீனுவாச ராஜா, வக்கீல் பிரிவு பாலகிருஷ்ணன்,சரவணன், மீனவரணி மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் உள்ளது : நடராஜன்

கடலூர் : 

                     ஒரு தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் தான் உள்ளது என கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் பேசினார்.
 
                 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. வேதியியல்துறை தலைவர் அனுசூயா தலைமை தாங்கினார். சந்திரன் வரவேற்றார்.
 

                   வேலை வாய்ப்புகள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் துவக்கி வைத்து பேசியதாவது:  இன்ஜினியர், டாக்டர் துறைகள் கிடைக்க வில்லை என வருத்தமடையக் கூடாது. எந்த துறை என்பது முக்கியமல்ல. நீங்கள் எடுக்கும் துறையில் "நம்பர் ஒன்'னாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலே உலகம் உங் களை பாராட்டும்.  ஐ.ஏ. எஸ்-  ஐ.பி.எஸ்., மாணவர்கள் கலைக் கல்லூரிகளில் இருந்துதான் அதிகம் வருகின்றனர். நீங்கள் என்ன கனவு காண்கிறீர்களோ அது போல் ஆவீர்கள். நினைப்பதை பெரிதாக நினைக்க வேண்டும்.
 
                      தற்போது நாட்டில் முக்கியமான பதவிகளில் பெண்கள் தான் உள்ளனர். ஜனாதிபதி, சபாநாயகர், காங்., தலைவர் சோனியா உள்ளிட்டவர்கள் பெண் கள்தான். பெண்கள்  நினைத்தால் சமுதாயத்தை மாற்ற முடியும். ஒரு தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் தான் உள்ளது.  அப்போதுதான் ஜனாதிபதி கூறிய வளமான இந்தியா, வல்லரசான இந்தியாவை உருவாக்கமுடியும் என்றார்.
 
                    திருச்சி மண்டலத் துணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) சுரேஷ் குமார், பயிற்சித்துறை இயக்குனர் நடராஜன், கணிதத்துறை உதவி பேராசிரியர் சாந்தி, மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் கர்னல் ஜைத்துன் ஆகியோர் பேசினார்.  இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

Read more »

சிறுபாக்கத்தில் தீயணைப்பு நிலையம் ஊராட்சி தலைவர் முதல்வருக்கு மனு

சிறுபாக்கம் : 

                  சிறுபாக்கத்தில் தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும் என முதல்வருக்கு ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன் மனு அனுப்பியுள்ளார்.
 
                  திட்டக்குடி தாலுகாவில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக உள்ளது. இதனை சுற்றி எஸ். புதூர், அரசங்குடி, மாங்குளம், மங்களூர், மலையனூர், ஒரங்கூர் உள்ளிட்ட 40 க்கு மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ஏழை மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். தீ விபத்து மற்றும் இயற்கை இடர்பாடு காலங்களில் சம்பவ இடத்திற்கு தகவல் தெரிந்து வேப்பூர், திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து பாதிப்பை சரி செய்வதற்குள் இழப்பீடு அதிகமாக ஏற்படுகிறது.  எனவே, போர்க்கால அடிப்படையில் ஏழைகளின் நலன் கருதி சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Read more »

புதிய நிர்வாகிகள் தேர்வு

சிதம்பரம் : 

                   தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 
                   தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்டகிளை கூட்டம் தலைவர் (பொறுப்பு) பொன்னுசாமி தலைமையில் நடந்தது. கலியபெருமாள் முன் னிலை வகித்தார். பன்னீர் செல்வம் வரவேற்றார். செயலர் திருநாராயணன் அறிக்கை வாசித் தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சந்தானம், துணை தலைவர் ராமசாமி, இணைச் செயலாளர் நடராஜன், செயற்குழு உறுப்பினர்களாக செல்வராஜ், கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டனர்.  கவுரவ தலைவர் இப்ராஹிம் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். வெங்கட்ராமன் நன்றி தெரிவித்தார். ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more »

சி.என்.பாளையம் சுப்பரமணியர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நடுவீரப்பட்டு : 

                 சி.என்.பாளையம் சுப்பரமணியர்,  முத்துமாரியம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு சம்பஸ்ரா மற்றும் 108  திருவிளக்கு பூஜை நடந்தது.
 
                            காலை 10 மணிக்கு மஹா கணபதி ஹோமத் துடன் துவங்கி பின்பு சம்பஸ்ரா பூஜை நடந் தது. 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 4 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத  சுப்பரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடந்தன. பூஜையில் ஏராளமான சுமங்கலிகள் கலந்து கொண்டு அம் மனை வழிபட்டனர். இரவு 9 மணிக்கு சுவாமிகள் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் மற்றும் ராஜாராம், சரவணன் தலைமையில் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Read more »

அண்ணாமலை பல்கலை இன்ஜினியரிங் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கட்டிய அரங்கம் திறப்பு

சிதம்பரம் : 

                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இன்ஜினிரியங் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப் பட்ட அரங்கை துணைவேந்தர் திறந்து வைத்தார்.
 
                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இன்ஜினிரியங் கல்லூரியில் 1950-56ல் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக 20 லட்சம் ரூபாய் செலவில் அரங்கம் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு பதிவாளர் ரத்தினசபாபதி தலைமை தாங்கினார்.  இன்ஜினிரியங் புல முதல்வர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் ராமநாதன் அரங்கை திறந்து வைத்தார். முன்னதாக மரம் நடுதல், ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம், அன்னதானம், ராணி சீதை ஆச்சி பள்ளியில் சுத்திகரிப்பு குடி நீர் பிளாண்ட், மாணவர்களுக்கு பயிற்சி பட்டரை, நலத்திட்டங்கள் ஆகியன நடந்தது. முன்னாள் மாணவர்கள் குழுவின் தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் ஆனந்தராஜன், பொருளாளர் சுப்ரமணியன், பால்பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், ராஜாராம் ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்தனர்.  ஒரு லட்சம் ரூபாயில் இன்ஜினியரிங் நூல்கள், ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் பயிலும் மாணவி ஒருவருக்கு உதவி தொகை வழங்க அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.

Read more »

நகராட்சி பள்ளியில் குடிநீர் இணைப்பு திறப்பு விழா

விருத்தாசலம் : 

                   விருத்தாசலம் திரு.வி.க., நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அரபு எமிரேட் தொழிற் பயிற்சி மையம் சார்பில் இலவச குடிநீர் இணைப்பு திறப்பு விழா நடந்தது.
 
                  தலைமை ஆசிரியர்  தீர்த்தலிங்கம் தலைமை தாங்கினார். தொழிற்பயிற்சி உரிமையாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.  ஆசிரியர் சகுந்தலா வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அந் தோணிசாமி குடிநீர் இணைப்பை திறந்து வைத்தார். கவுன்சிலர் சாமுவேல் கென்னடி, தீபா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினம், அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், கல்விகுழு உறுப் பினர்கள் சந்தானம், பாலசுப்ரமணியன், நாராயணன், நரிக்குறவர் சங்க தலைவர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

ஸ்ரீராமன் பள்ளிக்கு கல்விக்குழு விருது

ஸ்ரீமுஷ்ணம் : 

          ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளிக்கு சிறந்த கிராம கல்விக்குழுக்கான விருது வழங் கப்பட்டுள்ளது.
 
               ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீராமன் காலனியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு 2009-10 ஆண்டிற்கான சிறந்த கிராமக் கல்விக்குழு விருது வழங்கப் பட்டுள்ளது. இந்த விருதினை கடலூரில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில்  முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயா ஆகியோர் கிராம கல்விக்குழு தலைவர் செல்வி, தலைமை ஆசிரியர் உமாதேவி ஆகியோரிடம் வழங்கினர்.

Read more »

செம்மேடு ஊராட்சியில் மனுநீதி நாள் ரூ.8.60 லட்சம் மதிப்பில் உதவிகள்

பண்ருட்டி :

               பண்ருட்டி அடுத்த செம்மேடு ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 395 ரூபாய்க்கான நலத்திட்டங்களை கலெக் டர் (பொறுப்பு) நடராஜன் வழங்கினார்.
 
                    பண்ருட்டி அடுத்த செம் மேடு ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நேற்று ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் சாந்திஅர்ச்சுனன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்                (பயிற்சி) அழகுமீனா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயகுமார், வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், தாசில்தார் பாபு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஒ., செல்வராஜ் வரவேற்றார்.
 
 முகாமில் கலெக்டர் நடராஜன்(பொறுப்பு) நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:- 

             செம்மேடு ஊராட்சியின் கோரிக்கையின் பேரில்   30ஆயிரம் கொள் ளவு கொண்ட இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 6 லட்சம் செலவில் புதிய தொட்டி கட்டப்படும்.  செம்மேடு- மேலிருப்பு 1.6 கி.மீட்டர் தார்சாலை அமைக்கும் பணி, செம்மேடு- பேர்பெரியான்குப்பம்  சாலை  பணி யும் துவங்க உள்ளது என்றார்.  விழாவில்  8 லட்சத்து 60ஆயிரத்து 39 5ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நடராஜன்(பொறுப்பு) வழங்கினார்.

Read more »

பெண்ணாடத்தில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

திட்டக்குடி : 

                    பெண்ணாடத்தில் காப்பீட்டு திட்டம் மற்றும் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமில் ஆயிரத்து 270 பேருக்கு இலவச சிகிச்சையளிக்கப்பட்டது.
 
                பெண்ணாடம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுசுகாதாரத்துறை, நோய் தடுப்புத் துறை சார்பில் வரும்முன் காப்போம் மற்றும் கலைஞர் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் நேற்று காலை நடந்தது. மாளிகைகோட்டம் ஊராட்சி தலைவர் வசந்தா தலைமை தாங் கினார். நல்லூர் சேர்மன் ஜெயசித்ரா, ஊராட்சி துணைத்தலைவர் வசந்தா, ஒன்றிய கவுன்சிலர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தனர். நல்லூர் வட்டார மருத் துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி வரவேற்றார். முகாமில் டாக்டர்கள் தமிழரசன், வலம்புரிச் செல்வன், சீனுவாசன், விஜயபாபு, ரஜினி, மீனா, கண்காணிப்பாளர் முருகதாஸ் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் இருதயம், சிறுநீரகம், காசநோய், எச்.ஐ.வி., கண் உள் ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர். இதில் ஸ்கேன் 35, எச். ஐ.வி., 36, சிறுநீர் மற்றும் இரத்தம் 684 உட்பட ஆயிரத்து 270 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளும், 12 பேர் கண்அறுவை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் நல்லூர் ஆணையர்கள் சந்திரகாசன், ரவிசங்கர்நாத், தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வி, மருந்தாளுனர் முருகன், ஊராட்சி உறுப்பினர்கள் தமிழ்செல்வி, செல்வம், காளிமுத்து உட் பட பலர் பங்கேற்றனர்.

Read more »

அ.தி.மு.க., செயலாளராக இளஞ்செழியன் தேர்வு

சேத்தியாத்தோப்பு : 

                 சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க., செயலாளராக இளஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
                         சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கான தேர்தல் முன் னாள் அமைச்சர் வளர்மதி, தேர்தல் பொறுப்பாளர் காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.  அப்போது நகர செயலாளர் பொறுப்பிற்கு அ.தி.மு.க., தேர்தல் பிரிவு மண்டல செயலாளரான தொழிலதிபர் இளஞ்செழியன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். நகர செயலாளர் பதவிக்கு வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் நகர செயலாளராக இளஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதற்கான அறிவிப்பை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

Read more »

மானாவாரி வயல் திருவிழா

ராமநத்தம் : 

                 கீழக்கல்பூண்டியில் உழவர் மன்றம் சார்பில் முத்து சோள பயிர் களை பயிரிட வலியுறுத்தி வயல் திருவிழா நடந்தது.
 
            கீழக்கல்பூண்டி உழவர் மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உழவர் மன்ற தலைவர்கள் ஆலத்தூர் ரவிச்சந்திரன், மேலக்கல்பூண்டி விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கீழக்கல்பூண்டி உழவர் மன்ற பொருளாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணி விழாவினை துவக்கி வைத்து விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், அரசு வழங்கும் மானியங்கள் குறித்தும் விளக்கினார். நாமக்கல் மாவட்ட சின்ஜெண்டா மக்காச் சோள நிறுவன அதிகாரிகள்  மானாவாரி நிலங்களில் மக்கா சோள பயிர் களை பயிரிடுவது, அதன் மூலம் அதிகளவு வருவாய் ஈட்டுவது  குறித்து விளக்கினர்.

Read more »

சாரணர் முகாம்

கடலூர் :

              கடலூர் அக்ஷர வித்யாஷரம் பள்ளியில் சாரண, சாரணியர் முகாம் நடந்தது. இருதயராஜ் முகாமை கொடியேற்றி துவக்கி வைத்தார். பள்ளியின் துணை முதல்வர் மேத்யூ ஜெயரத்னம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை மேலா ளர் ரமணி ஷங்கர், பள்ளி தாளாளர் விஜயலட்சுமி, இளையபெருமாள் மற்றும் ஆசிரியர் கள்,  சாரண, சாரணியர் கள் 60 பேர் பங்கேற்றனர்.

Read more »

துவக்க விழா

ராமநத்தம் : 

                     ராமநத்தம் அடுத்த தொழுதூரில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடந்தது.
 
                  தொழுதூர் ஊராட்சி தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். தொழுதூர் ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, உழவர்மன்ற தலைவர்கள் மேலக்கல்பூண்டி விஜயகுமார், ஆலத்தூர் ரவிச்சந்திரன், நாம் அமைப்பு வேணுகோபால் முன்னிலை வகித்தனர். கீழக்கல்பூண்டி உழவர் மன்ற தலைவர் ரவிச் சந்திரன் வரவேற்றார். திட்டக்குடி தாசில்தார் கண்ணன் குத்துவிளக்கு ஏற்றினார்.துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மைத் துறை) மணி கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் பாலு, உதவியாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல் கொள் முதல் நிலைய உதவியாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

புகைப்பட கண்காட்சி

நெய்வேலி : 

               மந்தாரக்குப்பத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.
 
                     அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் கலாசார சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், யு.டி.யு.சி. தொழிற்சங்கம் இந்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கண்காட்சியின் முடிவில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமை தாங்கினார். கம்யூ., கட்சியின் கடலூர், விழுப்புரம் மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் செல்வம், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

நடராஜர் கோவில் தெற்கு வாயிலை திறக்க ஏழைகள் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                      சிதம்பரத்தில் நந்தனார் நுழைந்த நடராஜர் கோவில் தெற்கு வாசலை திறக்க கோரி ஏழைகள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                         சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.  மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட பிற்படுத்தப்பட்ட பேரவை தலைவர் தனசேகரன், ஜோசப் ராஜ் முன்னிலை வகித்தனர். ஏழைகள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன், மக்கள் குடியரசு கட்சி தலைவர் திருவள்ளுவன், பிற்படுத்தப் பட்டோர் பேரவை பொது செயலாளர் வீரவன்னியராஜா, உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன், ஆதிதிராவிட நல சங்க நிறுவனர் அன்புதீபன், ஆதிதிராவிட முன் னேற்ற கழக தலைவர் மாமல்லன் கண்டன உரையாற்றினர். தமிழ்தேசிய காங்., மாநில தலைவர் லோகநாதன், மக்கள் தேசம் கட்சி தலைவர் ராசிக்பரித் கோதண்டபாணி, பாட்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

Read more »

கால்நடை மருந்து குடோனில் தீ விபத்து

கடலூர் : 

                     கடலூரில் கால்நடை மருந்து குடோனில் ஏற் பட்ட தீ விபத்தில்  மருந்து பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
 
                     கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் சொரக் கால்பட்டு வான்டர் லேன் தெருவில் கால்நடைகளுக்கான கணேஷ் மெடிக்கல் ஏஜென்சி வைத்துள்ளார். கடலூர், திருவண் ணாமலை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மொத்த மருந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மருந்து குடோன் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்ரமணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மருந்து குடோனில் இருந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மருந்து பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.  இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

வீட்டில் புகுந்து திருட்டு மூன்று பேர் கைது

கிள்ளை : 

                சிதம்பரம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து பொருட்களை திருடிச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
 
              சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர்  கலியபெருமாள். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார்.   அப்போது அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி(30). பாஸ்கர்(45). பாலமுருகன்(30). மூவரும் வீட்டின் ஓடுகளை பிரித்து விட்டு பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரின் கிள்ளை சப் இன்ஸ் பெக்டர் வினாயகமுருகன் வழக்கு பதிந்து கருணாநிதி, பாஸ்கர், பாலமுருகன் மூவரையும் கைது செய்தார்.

Read more »

நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி

விக்கிரவாண்டி : 

                போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக  மிரட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
 
                   வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(48). இவர் மீது பல திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கடந்த மூன்று  தினங்களுக்கு முன் போலீசார், தனது மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டியதாக கூறி நேற்று காலை 9.30 மணியளவில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். விக்கிரவாண்டி போலீசார், தீயணைப்பு அதிகாரிகள், ஊராட்சித் தலைவர் வசந்தி நாகராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
                  வழக்குகள் குறித்து தன்னை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என எழுதி தர வேண்டும் என்று வருவாய் துறையினரிடம் ராஜா கூறினார்.  தீயணைப்பு வீரர் கார்த்திக்  பைப் வழியாக டேங்க் மேல் ஏறினார். அதனை அறிந்த ராஜா கைலியை கிழித்து டேங்க் ஏணியில் சுறுக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதை பார்த்த ராஜாவின் மகள் இளம்தாரகை(15) மயங்கி விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டது.
 
                   மண்டல துணை தாசில்தார்  சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் எஸ்.பி.,யிடம் நேரில் அழைத்து சென்று பேச வைப்பதாக கூறியதன் பேரில் சமாதானம் அடைந்து தனது வீட்டிலிருந்து மாற்று துணி எடுத்து வரக்கூறி மதியம் 2.10 மணிக்கு டேங்க் மேலிருந்து இறங்கினார். நான்கரை மணி நேர போராட்டத்தை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். ராஜாவை போலீசார் வாக்கூரிலேயே விட்டுவிட்டுச் சென்றனர்.

Read more »

ரூ.2.50 லட்சம் திருட்டு: ஆந்திர வாலிபருக்கு சிறை

கடலூர் : 

               மோட்டார் பைக்கை திருடிய வாலிபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
 
                வாழப்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடலூரில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.  கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, கடலூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில், கம்பெனி பணம் 2.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, மோட்டார் பைக்கின் டேங்க் கவரில் வைத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த ஒருவர் உங் கள் பணம் கீழே கிடக்கிறது என கூறவே, வெங்கடேசன் கீழே கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு, டேங்க் கவரை பார்த்த போது  பணம் காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். புகாரின் பேரில் கடலூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
 
                     விசாரணையில்  ஆந் திரா மாநிலம் ஓ.ஜி., குப் பத்தை சேர்ந்த கோவிந் தசாமி மகன் குமார்(22) பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் குமாரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ், குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Read more »

வீட்டுக்கு தீ வைப்பு: 20 பேர் மீது வழக்கு

பண்ருட்டி : 
                 
               பண்ருட்டியில்  குடிசை வீட்டிற்கு தீ வைத் தவர் களை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                   பண்ருட்டி லிங்க்ரோடு சாலையில் குடியிருப்பவர் சங்கர். இவரது குடிசைக்கு அருகில்  உறவினர்கள் தனகோடி, மங்கம்மாள்  குடியிருந்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்னையில் வசிக்கும் குமார்  மற்றும்  ஆதரவாளர் கள் 20பேர் குடிசை வீட்டிற்குள் புகுந்து இந்த இடத்தை நாங்கள் வாங்கி விட்டோம் என வீட்டிற்கு தீ வைத்தனர். இதனை தடுத்த  சங்கர் மனைவி முத்துலட்சுமி, மனோகர், அவரது மனைவி லீலா மற்றும் தனகோடி, மங்கம்மாள் ஆகியோர் மீது அக்கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி வீட்டில் இருந்த பொருட் களை சூறையாடினர். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் குமார் உள்ளிட்ட 20பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior