உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 13, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்னுரிமை

              தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளில், சிறிய பணிகளை மேற்கொள்ள, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பயன்படுத்தப்படுகிறது. இதில் வேலை செய்பவருக்கு, எட்டு மணி நேர வேலைக்கு, அதிகபட்சமாக, 119 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. வேலை செய்யும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் 4,000 ஹெக்டேர் சேதம்

             "தானே" புயலால், மொத்தம், 1.76 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண் பயிர்களும், 48 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான தோட்டக்கலை பயிர்களும், சேதமடைந்ததாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதற்காக, 210 கோடி ரூபாய் நிவாரணத் தொகையும் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில், புயல் பாதிப்பு மாவட்டங்களை சேர்ந்த சவுக்கு விவசாயிகள், தங்கள் பயிருக்கு நிவாரண தொகை அறிவிக்கப்படவில்லை என,...

Read more »

கடலூர் முது நகரில் தேங்காய் நார் கயிறு விற்பனை அதிகரிப்பு

கடலூர் முதுநகர்:         தானே புயலால் சேதமடைந்த கூரை வீடுகள் சீரமைக்க பயன்படும் தேங்காய் நார் கயிறுகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 30ம் தேதி வீசிய புயலில் மாவட்டத்தில் 3 லட்சம் கூரை வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகள் சீரமைக்கும் பணி தற் பொழுது நடைபெற்று வருகிறது. இதனால் கூரை வீடு கட்ட தேவைப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு தேவை அதிகத் துள்ளது. கடலூர் முதுநகர் பகுதிகளில் உள்ள 12க்கும்...

Read more »

தானே புயல் நிவாரண நிதிக்கு முழுமையான வரி விலக்கு

         தானே புயல் கடந்தபோது கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.            போர்க்கால அடிப் படைகளில் சீரமைப்பு பணிகள் அந்த மாவட்டங்களில் நடக்கின்றன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்...

Read more »

திட்டக்குடியில் தானே புயல் நிவாரணத் தொகை வழங்கக்கோரி எம்.எல்.ஏ., தமிழ் அழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

  திட்டக்குடி:             தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் திட்டக்குடி தொகுதியை புறக்கணிக்க கூடாது. கடலூர் மாவட்டம் முழுவதையும் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து பாதிப்பு கணக்கெடுப்பில் பாரபட்சம் காட்டாமல் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும்...

Read more »

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று

         பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று தயாராகி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில், 7.5 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 11 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்., 2ம் வாரத்தில் பிராக்டிக்கல் தேர்வு நடக்க உள்ளதால், அவர்களுக்கு பதிவு எண்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior