உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 13, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்னுரிமை

              தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளில், சிறிய பணிகளை மேற்கொள்ள, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பயன்படுத்தப்படுகிறது. இதில் வேலை செய்பவருக்கு, எட்டு மணி நேர வேலைக்கு, அதிகபட்சமாக, 119 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. வேலை செய்யும் நேரத்துக்கு ஏற்ப, இத்தொகை முடிவு செய்யப்படுகிறது.

             இத்திட்டத்தின் கீழ் வேலை செய்ய, 90 சதவீதம் பெண்களே வருகின்றனர். 10 சதவீதம், வயது முதிர்ந்த ஆண்கள் வருகின்றனர். எனினும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் இத்திட்டம் நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நூறு கோடி அதிகம்
 
                இந்த நிதியாண்டில், தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கென, 3,572 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த டிச., 31ம் தேதி வரை, 1,962 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டு, டிசம்பர் வரை செலவிட்ட தொகையை விட, 100 கோடி ரூபாய் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் தொகையில் 80 சதவீதத்தை, தமிழக அரசு செலவிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2,700 கோடியில், 2,300 கோடி செலவிடப்பட்டது. மீதம் 400 கோடி ரூபாய், இந்த ஆண்டில் சேர்க்கப்பட்டது.

சீரமைப்பு பணிக்கு...
 
            இந்த ஆண்டுக்கு, இதுவரை செய்துள்ள செலவு போக, மீதமுள்ள தொகையில் பெரும் பகுதி, கடலூர் மாவட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட தனியார் நிலங்கள் மற்றும் பொது இடங்களில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், சீரமைப்பு பணிகளும் அதிகளவில் நடக்கும் என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.



















Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் 4,000 ஹெக்டேர் சேதம்

             "தானே" புயலால், மொத்தம், 1.76 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண் பயிர்களும், 48 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான தோட்டக்கலை பயிர்களும், சேதமடைந்ததாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதற்காக, 210 கோடி ரூபாய் நிவாரணத் தொகையும் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில், புயல் பாதிப்பு மாவட்டங்களை சேர்ந்த சவுக்கு விவசாயிகள், தங்கள் பயிருக்கு நிவாரண தொகை அறிவிக்கப்படவில்லை என, குமுறுகின்றனர். தோட்டக்கலை பயிரான சவுக்கு, கடலூர் மாவட்டத்தில், பயிர் பரப்பளவில் வாழைக்கு அடுத்தப்படியாக உள்ளது. மாவட்டத்தில், 4,000 ஹெக்டேர் அளவிற்கு சவுக்கு சேதமடைந்துள்ளது, என தெரிகிறது.

சவுக்கு விவசாயிகளின் நிலை குறித்து, பண்ருட்டி வட்டம், பணப்பாக்கத்தைச் சேர்ந்த சவுக்கு விவசாயி, சவுந்தரராஜன் கூறியது 

             ""8.5 ஏக்கரில், சவுக்கு பயிரிட்டிருந்தேன். புயலில் அனைத்தும் சேதமடைந்துவிட்டது. ஒரு ஏக்கரில் 40 முதல் 50 டன் சவுக்கு பயிராகும். ஒரு டன் 2,000 ரூபாய்க்கு விலைபோன சவுக்கு, தற்போது 700 ரூபாய்க்கு தான் விலை போகிறது. தமிழக அரசு, முந்திரி, பலா போன்ற தோட்டக்கலை பயிர்களைப் போல, சவுக்கிற்கும் நிவாரணத் தொகை தர வேண்டும்,'' என்றார்.

இதுகுறித்து, கடலூர் மாவட்ட கலெக்டர், அமுதவள்ளி கூறியது

          "கடலூர் மாவட்டத்தில், 4,000 ஹெக்டேர் அளவிற்கு சவுக்கு சேதமடைந்துள்ளது. இதற்கான நிவாரணத்தை தனியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

பயிர் காப்பீடு தொகை? 

                "பயிர் கடன்பெறும் விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு தொகை கட்டாயம் பிடித்தம் செய்யப்படுகிறது. பயிர் காப்பீடு செய்து, "தானே'புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், சில மாதங்களில் இழப்பீடு வழங்கப்படும்,' என, கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவள்ளி கூறினார்.













Read more »

கடலூர் முது நகரில் தேங்காய் நார் கயிறு விற்பனை அதிகரிப்பு

கடலூர் முதுநகர்:

        தானே புயலால் சேதமடைந்த கூரை வீடுகள் சீரமைக்க பயன்படும் தேங்காய் நார் கயிறுகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 30ம் தேதி வீசிய புயலில் மாவட்டத்தில் 3 லட்சம் கூரை வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகள் சீரமைக்கும் பணி தற் பொழுது நடைபெற்று வருகிறது. இதனால் கூரை வீடு கட்ட தேவைப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு தேவை அதிகத் துள்ளது. கடலூர் முதுநகர் பகுதிகளில் உள்ள 12க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்காய் நார் கயிறுகள் விற்பனை சூடு பிடித்துள்ளன. சாதாரண நேரங்களில் நடைபெறும் விற்பனையை விட இரு மடங்காகியுள்ளது. இதனால் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற கயிறு 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Read more »

தானே புயல் நிவாரண நிதிக்கு முழுமையான வரி விலக்கு

         தானே புயல் கடந்தபோது கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

           போர்க்கால அடிப் படைகளில் சீரமைப்பு பணிகள் அந்த மாவட்டங்களில் நடக்கின்றன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 5250 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.  தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக மறு வாழ்வு அளிப்பதற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கும்படி முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது உணர்வு உள்ளவர்கள், தொழில் அதிபர்கள், அரசு சாரா அமைப்புகள், தர்ம சிந்தனையாளர்கள் நன்கொடை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

            அவரது வேண்டுகோளை ஏற்று பல்வேறு அமைப்புகள், அரசு ஊழியர்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள். முதலாவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஒ.) மாநில தலைவர் இரா.சண்முகராஜா அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்குவதாக அறிவித்தார். அவர் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அதற்கான கடிதத்தையும் கொடுத்தார்.

இதுபற்றி இரா. சண்முகராஜா கூறியது:-
 

               புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உரிய நிவாரணம் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் நன்கொடை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசில் பணிபுரியும் 13 1/2 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிப்பதற்கு முன் வந்துள்ளனர். ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்தன் மூலம் சுமார் ரூ. 150 கோடிக்கு மேல் கிடைக்க வழிவகை உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

         இதைத் தொடர்ந்து பல்வேறு அரசு சங்கங்கள் தானாக முன்வந்து நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய கடிதம் கொடுத்து வருகிறார்கள்.  

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அதன் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் கடிதம் கொடுத்துள்ளார்.

 தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்  தலைவர் கூறியது:-

           புயல் பாதித்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியதும் அரசு டாக்டர்கள் தங்களின் பங்களிப்பு அதில் இருக்க வேண்டும் என்று கருதி தங்களின் ஒருநாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்தனர். அரசு டாக்டர்கள் 15 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதன் மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சுமார் ரூ. 2 கோடி கிடைக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

           தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சார்பில் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ளும்படி அதன் தலைவர் பொ.சவுந்திரராஜன் கடிதம் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அலுவலர் கழக தலைவர் பொ.சவுந்திரராஜன் கூறுகையில்,

             புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்பட அரசு அலுவலர் கழகம் சி மற்றும் டி பிரிவு விரும்புகிறது. முதல்-அமைச்சர் எங்களின் ஒருநாள் ஊதியத்தை ஏற்று மக்கள் துயரத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டுகிறோம் என்றார்.  

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தலைவர் கே.கணேசன் கூறியது:-

           தானே புயல் நிவாரண நிதிக்கு எங்களது சங்கம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளம் வழங்க முடிவு செய்து கடிதம் கொடுத்துள்ளோம். சங்கத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ. 8 1/2 கோடி உதவி தொகை கிடைக்கும். மேலும் சங்கம் சார்பில் கடலூரில் புயலால் கடுமையாக பாதித்த 400 பேருக்கு வேட்டி-சேலையும், 10 கிலோ அரிசியும்  வியாழக்கிழமை வழங்கப்பட்டது . அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.  

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் ரவி ரெங்கராஜ், பொதுச் செயலாளர் பாக்கியநாதன், இணை பொதுச்செயலாளர் வாசு ஆகியோர் கூறுகையில், 

கடலூர், விழுப்புரம் மக்களுக்கு உதவ கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

              தலைமை செயலக சங்கம், தொடக்கப்பள்ளி, ஆசிரியர் கூட்டணி, வருவாய்த்துறை அலுவலர் சங்கம், அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க கடிதம் கொடுத்துள்ளனர்.  

            பல்வேறு சங்கங்கள் கொடுத்துள்ள கடிதங்கள் மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரே நாளில் சுமார் ரூ. 200 கோடி குவிந்துள்ளது. தொடர்ந்து நிதி அளித்து வருகிறார்கள். நிதி உதவி அளிப்பவர்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படுகிறது.









Read more »

திட்டக்குடியில் தானே புயல் நிவாரணத் தொகை வழங்கக்கோரி எம்.எல்.ஏ., தமிழ் அழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/2d4c27b6-59c6-4c49-a7b1-c4242c814c6a_S_secvpf.gif
 
திட்டக்குடி:

             தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் திட்டக்குடி தொகுதியை புறக்கணிக்க கூடாது. கடலூர் மாவட்டம் முழுவதையும் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து பாதிப்பு கணக்கெடுப்பில் பாரபட்சம் காட்டாமல் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி தொகுதி தே.மு.தி.க. சார்பில் திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் தமிழ் அழகன் தலைமை தாங்கி பேசியது:-

              அனைத்து தரப்பு மக்களுக்கும் எந்தவித வேறு பாடுமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். அதிகாரிகள் பட்டியல் தயாரித்து நிவாரணம் வழங்குவதாய் உறுதி அளித்துள்ளனர். அ.தி.மு.க. அரசு தே.மு.தி.க.வை எதிர்கட்சியாக பார்க்கிறது. எங்களை அப்படி பார்த்தால் பரவாயில்லை தே.மு.தி.க. வெற்றி பெற்ற 29 தொகுதி மக்களையும் எதிரிகளாகவே பார்க்கிறது. கேட்டால் தே.மு.தி.க. பெற்ற வெற்றி நாங்கள் போட்ட பிச்சை என்கிறார்கள் மனதை தொட்டு சொல்லட்டும் அ.தி.மு.க. வெற்றி தே.மு.தி.க.வின் உழைப்பால்தான். முந்திரி, தென்னை, போன்றவை வளர 20 ஆண்டுகளாகும். இந்த சரிவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும். வேளாண் கடனை ரத்து செய்யவேண்டும். மத்திய அரசு குறைந்த பட்சம் 50 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

               உரிய நிவாரணம் முறையாக வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தியும் சிறை நிரப்பியும் நிவாரணத்தை பெற்றே தீருவோம், இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சிவானந்தம், மாவட்ட துணை செயலாளர் பாபுஜி, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகர செயலாளர்கள் கபிலன், விஜயமணி, மாவட்ட நிர்வாகி மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் மருதமுத்து, பொருளாளர் செல்வகுமார், மகளிர் அணி துணை செயலாளர் செல்வராணி, மாவட்ட இளைஞரணிசெயலாளர் சங்கர் உட்பட பலர் பேசினர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று

         பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று தயாராகி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில், 7.5 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 11 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்., 2ம் வாரத்தில் பிராக்டிக்கல் தேர்வு நடக்க உள்ளதால், அவர்களுக்கு பதிவு எண்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு பதிவெண்கள் வழங்கப்படும்.


               இந்த ஆண்டு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனால், மாணவர்களின் போட்டோ, சான்றிதழில் பதிவு செய்யப்பட்டு, பதிவெண்கள் பதிவு செய்யும் பணிகள் இரவு பகலாக நடக்கிறது. கிண்டியில் உள்ள டேட்டா சென்டரில் தினமும் ரூ. 200 சம்பளத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சமச்சீர் கல்வி அமலாக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த ஆண்டு, அறிவியல் பாடத்திற்கு பிராக்டிக்கல் தேர்வு நடக்க உள்ளது. இதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே நடத்திக் கொள்ள அதிகாரமளித்துள்ளனர். 














Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior