உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 28, 2011

2011 உலககோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை

Date Local GMT IST Match Details Venue
Feb 12, 2011 09:30 04:00 09:30 Kenya vs West Indies, 1st Warm up ODI Colombo
Feb 12, 2011 09:30 04:00 09:30 Sri Lanka vs Netherlands, 2nd Warm up ODI Kandy
Feb 12, 2011 14:30 08:30 14:00 Bangladesh vs Canada, 3rd Warm up ODI Day Night Match Chittagong
Feb 12, 2011 14:30 09:00 14:30 Ireland vs New Zealand, 4th Warm up ODI Day Night Match Nagpur
Feb 12, 2011 14:30 09:00 14:30 South Africa vs Zimbabwe, 5th Warm up ODI Day Night Match Chennai
Feb 13, 2011 14:30 09:00 14:30 India vs Australia, 6th Warm up ODI Day Night Match Bangalore
Feb 15, 2011 09:30 04:00 09:30 Ireland vs Zimbabwe, 7th Warm up ODI Nagpur
Feb 15, 2011 09:30 04:00 09:30 Kenya vs Netherlands, 8th Warm up ODI Kandy
Feb 15, 2011 14:30 08:30 14:00 Bangladesh vs Pakistan, 9th Warm up ODI Day Night Match Mirpur
Feb 15, 2011 14:30 09:00 14:30 Australia vs South Africa, 10th Warm up ODI Day Night Match Bangalore
Feb 16, 2011 09:30 03:30 09:00 Canada vs England, 11th Warm up ODI Mirpur
Feb 16, 2011 09:30 04:00 09:30 Sri Lanka vs West Indies, 12th Warm up ODI Colombo
Feb 16, 2011 14:30 09:00 14:30 India vs New Zealand, 13th Warm up ODI Day Night Match Chennai
Feb 18, 2011 14:30 08:30 14:00 England vs Pakistan, 14th Warm up ODI Day Night Match Mirpur
Feb 19, 2011 14:30 08:30 14:00 Group B : Bangladesh vs India, 1st ODI Day Night Match Mirpur
Feb 20, 2011 09:30 04:00 09:30 Group A : New Zealand vs Kenya, 2nd ODI Chennai
Feb 20, 2011 14:30 09:00 14:30 Group A : Sri Lanka vs Canada, 3rd ODI Day Night Match Hambantota
Feb 21, 2011 14:30 09:00 14:30 Group A : Australia vs Zimbabwe, 4th ODI Day Night Match Ahmedabad
Feb 22, 2011 14:30 09:00 14:30 Group B : England vs Netherlands, 5th ODI Day Night Match Nagpur
Feb 23, 2011 14:30 09:00 14:30 Group A : Pakistan vs Kenya, 6th ODI Day Night Match Hambantota
Feb 24, 2011 14:30 09:00 14:30 Group B : South Africa vs West Indies, 7th ODI Day Night Match Delhi
Feb 25, 2011 09:30 03:30 09:00 Group B : Bangladesh vs Ireland, 8th ODI Mirpur
Feb 25, 2011 14:30 09:00 14:30 Group A : Australia vs New Zealand, 9th ODI Day Night Match Nagpur
Feb 26, 2011 14:30 09:00 14:30 Group A : Pakistan vs Sri Lanka, 10th ODI Day Night Match Colombo
Feb 27, 2011 14:30 09:00 14:30 Group B : India vs England, 11th ODI Day Night Match Kolkata
Feb 28, 2011 09:30 04:00 09:30 Group A : Canada vs Zimbabwe, 12th ODI Nagpur
Feb 28, 2011 14:30 09:00 14:30 Group B : West Indies vs Netherlands, 13th ODI Day Night Match Delhi
Mar 1, 2011 14:30 09:00 14:30 Group A : Sri Lanka vs Kenya, 14th ODI Day Night Match Colombo
Mar 2, 2011 14:30 09:00 14:30 Group B : England vs Ireland, 15th ODI Day Night Match Bangalore
Mar 3, 2011 09:30 04:00 09:30 Group B : South Africa vs Netherlands, 16th ODI Mohali
Mar 3, 2011 14:30 09:00 14:30 Group A : Pakistan vs Canada, 17th ODI Day Night Match Colombo
Mar 4, 2011 09:30 04:00 09:30 Group A : New Zealand vs Zimbabwe, 18th ODI Ahmedabad
Mar 4, 2011 14:30 08:30 14:00 Group B : Bangladesh vs West Indies, 19th ODI Day Night Match Mirpur
Mar 5, 2011 14:30 09:00 14:30 Group A : Australia vs Sri Lanka, 20th ODI Day Night Match Colombo
Mar 6, 2011 09:30 04:00 09:30 Group B : South Africa vs England, 21st ODI Chennai
Mar 6, 2011 14:30 09:00 14:30 Group B : India vs Ireland, 22nd ODI Day Night Match Bangalore
Mar 7, 2011 14:30 09:00 14:30 Group A : Canada vs Kenya, 23rd ODI Day Night Match Delhi
Mar 8, 2011 14:30 09:00 14:30 Group A : Pakistan vs New Zealand, 24th ODI Day Night Match Kandy
Mar 9, 2011 14:30 09:00 14:30 Group B : India vs Netherlands, 25th ODI Day Night Match Delhi
Mar 10, 2011 14:30 09:00 14:30 Group A : Sri Lanka vs Zimbabwe, 26th ODI Day Night Match Kandy
Mar 11, 2011 09:30 04:00 09:30 Group B : West Indies vs Ireland, 27th ODI Mohali
Mar 11, 2011 14:30 08:30 14:00 Group B : Bangladesh vs England, 28th ODI Day Night Match Chittagong
Mar 12, 2011 14:30 09:00 14:30 Group B : India vs South Africa, 29th ODI Day Night Match Nagpur
Mar 13, 2011 09:30 04:00 09:30 Group A : New Zealand vs Canada, 30th ODI Mumbai
Mar 13, 2011 14:30 09:00 14:30 Group A : Australia vs Kenya, 31st ODI Day Night Match Bangalore
Mar 14, 2011 09:30 03:30 09:00 Group B : Bangladesh vs Netherlands, 32nd ODI Chittagong
Mar 14, 2011 14:30 09:00 14:30 Group A : Pakistan vs Zimbabwe, 33rd ODI Day Night Match Kandy
Mar 15, 2011 14:30 09:00 14:30 Group B : South Africa vs Ireland, 34th ODI Day Night Match Kolkata
Mar 16, 2011 14:30 09:00 14:30 Group A : Australia vs Canada, 35th ODI Day Night Match Bangalore
Mar 17, 2011 14:30 09:00 14:30 Group B : England vs West Indies, 36th ODI Day Night Match Chennai
Mar 18, 2011 09:30 04:00 09:30 Group A : Ireland vs Netherlands, 37th ODI Kolkata
Mar 18, 2011 14:30 09:00 14:30 Group A : Sri Lanka vs New Zealand, 38th ODI Day Night Match Mumbai
Mar 19, 2011 09:30 03:30 09:00 Group B : Bangladesh vs South Africa, 39th ODI Mirpur
Mar 19, 2011 14:30 09:00 14:30 Group A : Pakistan vs Australia, 40th ODI Day Night Match Colombo
Mar 20, 2011 09:30 04:00 09:30 Group A : Zimbabwe vs Kenya, 41st ODI Kolkata
Mar 20, 2011 14:30 09:00 14:30 Group B : India vs West Indies, 42nd ODI Day Night Match Chennai
Mar 23, 2011 14:30 09:30 15:00 TBC vs TBC, 1st Quarter Final ODI Day Night Match Mirpur
Mar 24, 2011 14:30 10:00 15:30 TBC vs TBC, 2nd Quarter Final ODI Day Night Match Colombo
Mar 25, 2011 14:30 09:30 15:00 TBC vs TBC, 3rd Quarter Final ODI Day Night Match Mirpur
Mar 26, 2011 14:30 10:00 15:30 TBC vs TBC, 4th Quarter Final ODI Day Night Match Ahmedabad
Mar 29, 2011 14:30 10:00 15:30 TBC vs TBC, 1st Semi Final ODI Day Night Match Colombo
Mar 30, 2011 14:30 10:00 15:30 TBC vs TBC, 2nd Semi Final ODI Day Night Match Mohali
Apr 2, 2011 14:30 10:00 15:30 TBC vs TBC, The Final ODI Day Night Match Mumbai   

Read more »

"ராஜராஜன் 1000" நெல் சாகுபடி முறைக்கு அரசு உதவி


(விருத்தாசலம்) நீர்வள, நிலவளத் திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டம் தச்சூரில் "ராஜராஜன் 1000' நெல் சாகுபடி முறையை பயன்படுத்தியுள்ள விவசாயிகள்.
 
விருத்தாசலம்: 

           கோமுகி அணை பாசன விவசாயிகள் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையில் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். மேலும் இம்முறையை ஊக்குவிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது.  

இம்முறை குறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் அருட்செந்தில் தெரிவித்தது: 

           தமிழகத்திலுள்ள ஆற்றுப்படுகை பாசனப் பகுதிகளை அதிகப்படுத்தும் வகையில் உலக வங்கி உதவியுடன், தமிழ்நாடு அரசு நீர்வள, நிலவளத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.  இம்முறையின் மூலம் விழுப்புரம், கடலூர் மற்றும் சேலம் மாவட்டப் பகுதிகளில் கோமுகி அணை பாசனப் பகுதிகளில் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையை விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு களைக்கருவி, நடவு அடையாளக் கருவி, உரங்கள் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.  

           ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையில் 1 ஏக்கருக்கு நாற்றங்கால் 40 ச.மீ. அளவும், 3 கிலோ விதையும் போதுமானது. ஆனால் நடைமுறை சாகுபடிக்கு நாற்றங்காலில் அளவு 320 ச.மீ. தேவைப்படுகிறது. மேலும் விதை சுமார் 16 முதல் 24 கிலோ வரை தேவைப்படும். ராஜராஜன் 1000 முறையில் நாற்று வயது 14 முதல் 15 நாள்களாகும். எனவே விவசாயிகள் இம்முறையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.  நடைமுறைப்படுத்த வேண்டிய நாற்றங்கால் முறை: 1 ஏக்கருக்கு மேற்கண்டபடி விதையும், அளவும் போதுமானது. 

           நடவு வயலின் ஓரத்தில் 1-க்கு 5 மீ. அளவுள்ள 8 மேடைகளை அருகிலிருக்கும் மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும். இதில் மக்கிய தொழு உரத்தை தெளிக்கலாம். நிலப்பரப்புக்கு மேல் 5 செ.மீ. உயரம் மேடை அமைத்த பின் மேடைமேல் பாலித்தின் அல்லது பிரித்த உரச் சாக்குகளையோ பரப்ப வேண்டும். மீண்டும் 4 செ.மீ. உயரத்துக்கு மண்ணை நிரப்ப வேண்டும். விதைநேர்த்தி செய்ய 1 கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் அசோபாஸ் உயிர் உரம் 3 கிலோ விதைக்கு 1 பாக்கெட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் மற்றும் அசோபாஸ் ஆகியவற்றை தேவையான அளவு அரிசிக்கஞ்சி அல்லது தண்ணீரில் கரைத்து பின் அவற்றை விதைகளுடன் நன்றாக கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். 

             உலர்த்திய விதைகளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பின் முளைகட்ட வேண்டும்.  முளைகட்டிய பின் ஒவ்வொரு 5 ச.மீ. மேடையிலும் 375 கிராம் விதையை பரவலாக விதைக்க வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கலாம் அல்லது சுற்றியிருக்கும் பள்ளங்களில் தண்ணீர் நிரப்பலாம். இதைத் தொடர்ந்து முளைத்த நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து வயலுக்கு எடுத்துச் செல்வது சிறப்பானதாகும். 

              இதனால் நாற்றுகளின் வேர்ச் சூழ்நிலை மாறாமல் நடப்பட வாய்ப்பிருப்பதால், செடிகள் பச்சை பிடிப்பது உடனடியாகத் தொடங்கும். நாற்றுகளை மண்ணோடு பத்தையாக எடுத்து முறம் அல்லது அட்டைப் பெட்டியில் வைத்து, நடவு இடத்தில் நடும்போது நாற்றுகளை பிரித்து நடலாம்.  ÷இம்முறையில் 25-க்கு 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்ய வேண்டும். இதில் அடையாளமிட்ட கயிறையோ அல்லது நடவு அடையாளக் கருவியையோ பயன்படுத்தலாம். 1 குத்துக்கு 1 நாற்று என்ற விகிதம் முடிந்த அளவுக்கு வேர்கள் மேல் நேக்காமலும், ஆழமாக இல்லாமலும் நடுவது நல்லது. 

             இம்முறையில் பெரும்பாலும் இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்களை ரசாயன உரங்களோடு பயன்படுத்துவது மட்டுமல்லாமல், பயிருக்குத் தேவைப்படும் காலகட்டங்களில் அவற்றைப் பிரித்து இடவேண்டும். மேலும் இம்முறையை பயன்படுத்துவதால் ஆள் செலவு குறைகிறது. வயலில் நீரைத் தேக்க வேண்டிய அவசியமில்லை. அதிக தூர்கள் வரும். இதனால் அதிக கதிர்கள் மற்றும் மணிகள் உண்டாகும். இதனால் அதிக லாபம் பெறலாம் என அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவல்களை கோமுகி நீர்பாசன விவசாயிகள் சங்கங்கள் மூலமாக தொடர்பு கொண்டு பெறலாம் எனவும் அவர் கூறினார்.

Read more »

தமிழகத்தில் விரைவில் அமரர் ஊர்தி திட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சிதம்பரம்:

             மிழகத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் அமரர் ஊர்தி கொண்டு வரப்பட்டு அதற்கு தனி தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு இறந்தவர்களை இலவசமாக எடுத்துச் செல்லும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரம் நகர திமுக சார்பில் 16 கால் மண்டபத் தெருவில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியது:

           இளைஞர்கள் எழுச்சியுடனும், மொழி உணர்வுடனும் இருக்க வேண்டும். கருணாநிதி தலைமையிலான ஆட்சியை மீண்டும் கொண்டு வர உறுதி எடுத்து கொள்ள வேண்டும். கருணாநிதி மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வகுகிறார். 108 ஆம்புலனஸ் திட்டம் மூலம் இதுவரை 7 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனவே கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

             கூட்டத்துக்கு நகர அவைத் தலைவர் எஸ்.கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். தலைமைக்கழகப் பேச்சாளர் நெய்வேலி விக்கிரமன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜேம்ஸ்விஜயராகவன், ராஜேந்திரகுமார், ஒன்றியச் செயலர்கள் இரா.மாமல்லன் (குமராட்சி), பூபாலன் (கீரப்பாளையம்), முத்துசாமி (காட்டுமன்னார்கோவில்), முத்துபெருமாள் (பரங்கிப்பேட்டை), ஜெயராமன் (புவனகிரி), நகர இளைஞரணி அமைப்பாளர் அப்புசந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தம்


அரசு பஸ்களின் இயக்கம் குறைந்ததால், தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையம்.
பண்ருட்டி:
 
          கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை பண்ருட்டி திமுகவினர் நிர்பந்தித்தும், மிரட்டியும் பஸ்சை  இயக்க செய்தனர்.  தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய அறிவித்திருந்தனர். 
 
            இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. பண்ருட்டி பணிமனையில் பணியாற்றும் தொமுச தொழிற்சங்கத்தினர் பெரும்பாலானோர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காலையில் இயக்க வேண்டிய பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையில் நின்றிருந்தன.  இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.  ÷இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., சபா.இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.எஸ்.எம்.தணிகைசெல்வம் உள்ளிட்ட திமுகவினர் பண்ருட்டி பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். மதியம் 2 மணிக்கு பின்னர் பஸ்கள் இயக்கியதாக தெரிகிறது.  
 
கடலூர் 
 
            கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. எம்.எல்.எஃப். உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. 40 சதவீதம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக, தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.  இதனால் அந்த வழித் தடங்களில் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. 

Read more »

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 1.50 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தருவிப்பு

கடலூர்:

             சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 1.5 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுத்துவரப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். கடலூர் மாவட்ட தேர்தல் ஏற்பாடுகளை வியாழக்கிழமை பிரவீண்குமார் ஆய்வு செய்தார். 

பின்னர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்  பேசியது:

             கடலூர் மாவட்டத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தேன். தேர்தல் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று உள்ளன. தமிழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன்பு தருவிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், வாக்குப் பதிவின் நேரம் பதிவாகாது.எனவே வாக்குப் பதிவு நேரம் பதிவாகும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 1.5 லட்சம், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

              கடலூர் மாவட்டத்துக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் அரசு கருவூலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்தேன்.வாக்காளர்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வாக்குப் பதிவு இயந்திரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் 1,000 வாக்குகள் பதிவு செய்து, காண்பிக்க இருக்கிறோம்.10 சதவீதம் வாக்குப் பதிவு இயந்திரங்களில் இந்த வாக்குப் பதிவு, செய்து காண்பிக்கப்படும். 

            வாக்குப் பதிவு இயந்திரங்கள் 3 கட்டமாக சோதனை செய்யப்படும். மின்னணு இயந்திரங்களில் பயிற்சி அளிக்க, முதல் கட்டமாக மாஸ்டர் டிரெய்னர்கள் வர இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பாளர்கள்.தமிழகத்தில் 11.46 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் புதிதாக 49,976 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போதைய சட்ட மன்றத்தின் ஆயுள் காலம் மே 13-ம் தேதி வரை உள்ளது.மே 10-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முந்தைய தேர்தல்களில் மார்ச் 1-ம் தேதி, தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

               தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அதுபற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.தேர்தல் ஆணைய விதிகளின்படி, அரசுப் பணிகளில் 3 ஆண்டுகள் ஓரிடத்தில் பணிபுரிந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் மூலம் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள்களில் வேட்பாளர் பற்றி கட்டுரைகள் எழுதப்பட்டால், அது விளம்பரமாகக் கருதப்பட்டு, அதற்கான தொகை வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்றார் பிரவீண்குமார் .மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read more »

சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ரயில் மறியல்


ரயில் மறியல் போராட்டத்தை ஆதரித்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசுகிறார் சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் கே.ராஜேந்திரன்
சிதம்பரம்:

          சிதம்பரத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் செய்ய வந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்.  

           பல்கலைக்கழகத்துக்கு வந்து செல்லும் நேரத்துக்கு ரயில்களின் நேரத்தை மாற்றி அமைக்குமாறும், ஏற்கெனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என கோரி அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் இ.சந்தோஷ்குமார் தலைமையில் 800 பேர் வியாழக்கிழமை விழுப்புரம்-மயிலாடுதுறை ரயிலை மறிக்க வந்தனர்.  அவர்களை ரயில்வே போலீசார்   மற்றும் சிதம்பரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தினர்.  போலீஸôர் ரயில் மறியல் செய்ய தடுத்ததால் பிளாட்பாரத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

           போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி தேசியக் குழு உறுப்பினரும், சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவருமான வழக்கறிஞர் கே.ராஜேந்திரன், பாஜக நிர்வாகிகள் வே.ராஜரத்தினம், இரா.திருமேணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட மாணவரணிச் செயலர் கெய்க்வாட்பாபு உள்ளிட்டோர் பேசினர்.  பின்னர் சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.இந்துமதி, ரயில்வே நிலைய மேலாளர் பட்டாபிராமன், ரயில்வே டி.எஸ்.பி. மாணிக்கம், சிதம்பரம் டி.எஸ்.பி. ஆர்.மோகன், வட்டாட்சியர் எம்.காமராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவித்து இரண்டு மாதங்களில் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததால், மாணவர்கள் தாற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

Read more »

கடலூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்கள்: சுய தொழில் தொடங்க கலெக்டர் அழைப்பு

கடலூர்:

         படித்து வேலை தேடும் இளைஞர்கள் கடன் பெற்று சுயமாக தொழில் தொடங்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

           படித்து வேலைதேடும் இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்பினை பெறும் வகையில் தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டு தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த பட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் பொதுபிரிவினர் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

          குடும்ப ஆண்டு வருமானம் 1.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு 5 லட்ச ரூபாயும், சேவை தொடர்பான தொழில்களுக்கு 3 லட்ச ரூபாயும், வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு ஒரு லட்சமும் கடன் தொகையாக வழங்கப்படுகிறது.இதில் திட்ட அறிக்கையில் 10 சதவீதம் தொகையினை பொதுப் பிரிவினர் விளிம்புத் தொகையாக செலுத்த வேண்டும். 

            திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.விண்ணப்பம் மாவட்ட தொழில் மையம் மூலம் பெற்று பூர்த்தி செய்து இரட்டை நகலில் திட்ட அறிக்கை, கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் நேரடியாகவோ, அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். படித்த வேலைதேடும் இளைஞர்கள் மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம்.

Read more »

கடலூரில் ரூ.48.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் :குடியரசு தின விழாவில் கலெக்டர் வழங்கினார்

கடலூர் :

          கடலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றி 48.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

             கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் காலை 8 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் தேசிய கொடி ஏற்றி வைத்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீசடன் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, பள்ளி என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய 42 போலீசாருக்கு முதல்வரின் காவலர் பதக்கம் வழங்கி சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மரியாதை செய்யப்பட்டது.

            தொடர்ந்து 48.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு துறையினர் சாகசங்கள் நிகழ்த்தினர். கூடுதல் கலெக்டர் வீரராகவராவ் (மாவட்ட வளர்ச்சி முகமை), எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச்செல்வன், டி.ஆர். ஓ., ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் அசோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சிதம்பரம்: 

                ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., இந்துமதியும், நகராட்சியில் சேர்மன் பவுஜியாபேகமும் கொடியேற்றினர். தாசில்தார் காமராஜ், தில்லைகோவிந்தன் பங்கேற்றனர்.அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை மைதானத்தில் துணைவேந்தர் ராமநாதன் கொடியேற்றி என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
 
காட்டுமன்னார்கோவில்: 

            ஒன்றியத்தில் சேர்மன் ஜெயச்சந்திரனும், குமராட்சியில் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மாமல்லனும், பேரூராட்சியில் தலைவர் கணேசமூர்த்தியும், லால்பேட்டை பேரூராட்சியில் தலைவர் சபியுல்லாவும் கொடியேற்றினர்.

புவனகிரி: 

                மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் தனலட்சுமி கலைவாணன் கொடியேற்றினார்.
 
பரங்கிப்பேட்டை: 

            ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் முத்து பெருமாள், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முகமது யூனுஸ், கிள்ளை பேரூராட்சியில் தலைவர் ரவிச்சந்திரன் கொடியேற்றினர்.

பண்ருட்டி: 

            நகராட்சியில் சேர்மன் பச்சையப்பன், துணை சேர்மன் கோதண்டபாணி தலைமையில் கமிஷனர் உமாமகேஸ்வரி கொடியேற்றினார்.
 
விருத்தாசலம்: 

             ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முருகேசனும், நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் முருகனும் கொடியேற்றினர். கமிஷனர் திருவண்ணாமலை மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
 
 நெல்லிக்குப்பம்: 

            நகராட்சியில் சேர்மன் கெய்க்வாட் பாபு கொடியேற்றினார். கமிஷனர் புவனேஸ்வரி பங்கேற்றார்.
 
சிறுபாக்கம்: 

               மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர்கள் தமிழரசி, செல்வநாயகி முன்னிலையில் சேர்மன் சின்னசாமி கொடியேற்றினார். துணை சேர்மன் கல்யாணி பங்கேற்றார்.

Read more »

Fishermen block traffic in Cuddalore



Voicing protest: Members of Tamil Nadu Meenavar Peravai block traffic in Cuddalore on Thursday.


CUDDALORE: 

            Fishermen in Cuddalore and Villupuram districts abstained from fishing on Thursday, in protest against the killings of Tamil Nadu fishermen by the Sri Lankan Navy.

        Fish vendors also joined the protest. The fishermen also organised protest meetings in coastal villages, condemning the killings and urging the Central and State governments to take measures to protect the lives of fishermen. Members of Tamil Nadu Meenavar Peravai blocked traffic at the Uzhavar Sandhai here for about an hour, criticising the Sri Lankan Navy. At Marakkanam in Villupuram district, fishermen blocked traffic on East Coast Road.

Read more »

Media monitoring team to keep tab on poll expenditure

CUDDALORE: 

         Chief Electoral Officer Praveen Kumar has said that “district-level media monitoring teams” will be constituted in the State to keep a tab on expenditure incurred on media coverage by candidates for the coming Assembly elections.

         This was one of the five aspects contemplated to keep poll expenses of candidates within specified limits, Mr. Kumar told a press conference here on Thursday. These teams would be assigned the specific task of perusing newspapers and closely watching private television channels for advertisements by candidates. The expenses incurred in this regard would also be taken into consideration while computing poll accounts.

             An appeal would be sent to the media to refrain from carrying “paid news.” The CEO further said that the Bihar example would be emulated for the elections wherein it would be made mandatory for candidates to open exclusive bank accounts for poll expenses. Every transaction, including in cash, should be accounted for. Besides this, in every Assembly constituency video surveillance would be mounted to capture pictures of every facet of campaign such as vehicular movement, arrangements of feasts and distribution of enticements to voters.

             Phone numbers and website address of polling officials would be widely publicised to allow voters to lodge complaints, if any, even with photographic evidence. On follow-up action taken in previous cases of violation of poll rules, the CEO said that it was mostly related to defacement of property. Only a handful of cases on expenditure were pending in courts.

           Mr. Kumar said that 1,50,000 Electronic Voting Machines used prior to 2006 were being replaced with those brought from Gujarat and Uttar Pradesh. The post-2006 EVMs were fitted with a timer device to keep track of hour-wise polling trend. This would help detect malpractices at closing hours, which was a common complaint. On adding new features to EVMs, such as issue of receipts delineating the vote cast, he said that a committee headed by P.V. Indiresan, former Director of Indian Institute of Technology-Madras, was studying the issue.

          The first phase of checking EVMs in the presence of leaders of political parties had started. Two more rounds would be conducted before polls. Training for master trainers on conduct of polls would begin in the second or third week of February.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior