உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 04, 2010

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி வெள்ளி விழா


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தோற்றம்.
 
சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா வருகிற அக்டோபர் 3,4,5,6 தேதிகளில் கொண்டாடப்படுகிறது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.
 
இதுகுறித்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 
 
                     பிற்படுத்தப்பட்ட பகுதியான கடலூர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்கள் நலன் கருதி இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமியால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 1985-ம் ஆண்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது.தற்போது 25-வது ஆண்டு நிறைவு விழாவை வெள்ளி விழாவாக அக்டோபர் 3-6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறோம். அக்டோபர் 3-ம் தேதி சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அண்ணாமலைப் பல்கலை. நகர்ப்புற சுகாதார மையத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்புக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
   
                       அக்டோபர் 4-ம் தேதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இணைவேந்தர் மற்றும் துணைவேந்தர் பெயர்களில் தலா 1 லட்சம் செலவில் வெள்ளி விழா அறக்கட்டளை தொடங்கப்படுகிறது. அக்டோபர் 5-ம் தேதி காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா நடைபெறுகிறது. இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். துணைவேந்தர் எம்.ராமநாதன் தலைமை வகிக்கிறார். பி.சி.ராய் மற்றும் பத்மபூஷன் விருது பெற்ற மூத்த பேராசிரியர் டாக்டர் என்.ரங்கபாஷ்யம் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். 
 
                     முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு வாழ்த்துரையாற்றுகிறார். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் வரவேற்கிறார். அக்டோபர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

Read more »

இன்று சர்வதேச விலங்குகள் தினம்

     

       
                  விலங்குகளை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்., 4ம் நாள் சர்வதேச விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
       
                வன ஆர்வலரும், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருமான பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரிவன் நினைவுநாளை குறிப்பிடும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1931ம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் இத்தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. தற்போது இத்தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

              பாலூட்டிகளுக்கு மட்டுமே காதுமடல்கள் இருக்கும். விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு "நாய்' சிம்பன்சியால் கண்ணாடியில் முகம்பார்த்து தன்னை தெரிந்து கொள்ள முடியும். சிப்பி தன் வாழ்நாளில் பலமுறை ஆணாகவும் பெண்ணாகவும் மாறிக் கொள்ள முடியும்.

                  பூனைகளுக்கு இனிப்பு சுவை தெரியாது யானைகளுக்கு பார்வை கருப்பு வெள்ளைதான். ஒரு கண்ணை திறந்து கொண்டே டால்பினால் தூங்க முடியும். ஒரு எறும்பால் தன்னைவிட 50 மடங்கு எடையை தூக்க முடியும். மனிதனின் நாசியை விட நாய்களுக்கு ஆயிரம் மடங்கு திறன் அதிகம். நத்தை மூன்று ஆண்டுகளுக்கு கூட தூங்கும். ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் டம்ளர் பால் வழங்கும்.


அழிந்து வரும் இந்திய விலங்குகள்

கங்கை சுறா

                   இந்தியாவில் ஓடும் கங்கை நதியில் அதிகமாக வாழும் ஒருவகை சுறா மீன். இது ஹூக்ளி, பிரம்மபுத்திரா, மகாநதி போன்ற ஆறுகளிலும் வாழ்கின்றன. நீண்ட மூக்கு மற்றும் சிறிய கண்களை உடைய தோற்றம் கொண்டது. சுமார் 7 அடி நீளம் உடையது. இது மிகவும் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது.

காண்டாமிருகம்

                சுமத்ரான் காண்டாமிருகம் 5 அடி உயரம் கொண்டது. தலை முதல் பின்புறம் வரை 10 அடி நீளம் கொண்டது. இது இந்தியா, இந்தோனேசியா, பூடான், மியான்மர் , வங்கதேசம் ஆகிய நாடுகளில் சதுப்புநிலக் காடுகள், மழைக்காடுகள் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. பழங்கள், செடிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. 275க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இவை உள்ளன.

ஆலிவ் ரிட்லி

                 பசிபிக் பெருங்கடலில் பெருமளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழ்கின்றன. இந்திய பெருங்கடல், ஜப்பான், நியூசிலாந்து, அட்லாண்டிக் கடல் போன்ற 80 நாடுகளின் கடல் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. 60 முதல் 70 செ.மீ நீளமுடையது. இமயமலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

ஆசிய கருப்பு கரடிகள்

                  உயரம் 7 அடி. நகங்கள் 4.4 இன்ச் நீளம். எடை 90 கிலோ முதல் 120 கிலோ வரை. தாவரங்கள், பழங்களை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் உடல் உறுப்புகளைப் பயன்படுத்துவதற்காக வேட்டையாடப்படுகின்றன. மனிதர்களைத் தாக்கும் திறனை இவை பெற்றிருந்தாலும் கூட, மனிதர்களால்தான் இவை தாக்கப்படுகின்றன.

நீலகிரி வரையாடு

                 தமிழகத்தில் நீலகிரி மலை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வரையாடுயாகள் வாழ்கின்றன. இது 4 ஆயிரம் அடிக்கு மேல் உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. வரையாடுகள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று. வெப்பமான நேரங்களில் பாறை இடுக்களில் ஓய்வெடுக்கும். கேரளாவின் இரவிக்குளம் தேசியப் பூங்காவில் சுமார் ஆயிரம் வரையாடுகள் வாழ்கின்றன.

சிங்க வால் குரங்குகள்

                இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. இதன் வால் சிங்கத்தின் வாலைப் போல உள்ளதால் இது சிங்கவால் குரங்கு என அழைக்கப்படுகிறது. இதன் உடம்பில் உள்ள முடிகள் கருப்பு நிறத்தில் இருக்கும். தலையைச் சுற்றி பொன்னிற, சாம்பல் நிற முடியைக் கொண் டிருக்கும். தலை முதல் வால் வரையிலான நீளம் 40 செ.மீ. முதல் 60 செ.மீ., வரை இருக்கும். இதன் சராசரி ஆயுள் காலம் 20 ஆண்டு. மனிதர் களிடமிருந்து தனித்து வாழும் குணம் படைத்தவை. தற்போது களக்காடு - முண்டந்துறை சரணாலயத்தில் அதிகமாகக் காணப்படு கின்றன.

சிங்கங்கள்

                 ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் தேசிய வனவிலங்குப் பூங்கா பகுதியில் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. குஜராத் அரசின் தகவலின் படி, 411 ஆசிய சிங்கங்கள் கிர் வனப்பகுதியில் வாழ்கின்றன. இது 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின் 361 ஆக இருந்தது தற்போது 52 அதிகரித் துள்ளது.

பாண்டா

              பாண்டா அதிகளவில் உண்பது மூங்கில் களைத்தான். முட்டை, சிறிய பறவைகள், சிறிய பாலூட்டிகள் போன்ற வற்றையும் உணவாக உட்கொள்கின்றன. இது மனிதர்கள் வசிக்காத இடத்தில் தனியே வாழும் தன்மை உடையது. உலகில் 800க்கும் மேற்பட்ட வன விலங்கு பூங்காக்களில் வாழ்கின்றன.

புலிகள்

                   நமது நாட்டின் தேசிய விலங்கு புலி. ஆனால் இதன் நிலை இன்று ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது 1411 புலிகள் மட்டுமே வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தவிர வங்கதேசத்தில் 200, நேபாளத்தில் 155, பூடானில் 60 என்ற எண்ணிக்கையில் புலிகள் வாழ்கின்றன. புலிகள் எண்ணிக்கை சீராக இருந்தால்தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் மேய்ச்சல் விலங்குகள் அதிகப்படியாக பெருகி, காடுகளின் வளம் குறையும்.

யானைகள்

                  உலகில் உள்ள விலங்குகளில் மிகப்பெரியதும், நீண்ட நாள் வாழக்கூடிய உயிரினம் யானைகள். தற்போது ஆப்ரிக்கா புதர்வெளி யானைகள், ஆப்ரிக்க காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் ஆகியவை மற்றுமே உலகில் வாழ்கின்றன. ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் வாழ்கின்றன. யானைகளின் எண்ணிக்கை நல்ல நிலையில் இருந்தாலும் கூட காடுகளை மனிதன் ஆக்கிரமிப்பதாலும், இதன் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் சில நேரங்களில் இவை ரயில்களில் அடிபட்டு இறக்க நேரிடுகின்றன.  

Read more »

சிதம்பரம் அருகே ஆற்றை கடக்க முயன்றவர் முதலை கடித்து பரிதாப சாவு


காட்டுமன்னார்கோவில் : 

              சிதம்பரம் அருகே பழைய கொள்ளிட உப்பனாற்று வடிகாலை கடந்து சென்றவர், முதலை கடித்து இறந்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (48). சிதம்பரத்தில் மளிகைக் கடையில் வேலை பார்த்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, ஊருக்குச் செல்லும் பஸ்சை தவற விட்டதால் காட்டுமன்னார்கோவில் பஸ்சில் சென்று புதுப்பூலாமேடு வந்தார். 

                     பின்னர் இரவு 10.30 மணிக்கு நந்திமங்கலத்திற்கு பழைய கொள்ளிடம் உப்பனாறு வடிகால் வாய்க்கால் வழியாக வீட்டிற்குச் சென்றார். அப்போது ஆற்றில் இருந்த முதலை, இளங்கோவின் தலையை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.
முதலையின் பிடியில் சிக்கிய இளங்கோவன் அலறல் சத்தம் கேட்டு கரையோர கிராமத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்க முயன்றனர். ஆனால், முதலை அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. தகவல் அறிந்த குமராட்சி சப் - இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆற்றில் இளங்கோவனை தேடினர். உடல் கிடைக்கவில்லை. இதற்கிடையே நேற்று காலை நந்திமங்கலம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கரையோரம் இளங்கோவன் உடல் கிடந்தது. இளங்கோவன், முதலை கடித்து இறந்ததை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அத்திப்பட்டு கிராமத்திற்கு வந்து அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Read more »

தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு தனியார் துறையிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை

சிதம்பரம்:

              தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய சட்ட வரைவை முதல்வர் கொண்டுவர வேண்டும் என்று தமிழகத் தமிழாசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழகத் தமிழாசிரியர் கழக மாநில சிறப்புத் தலைவர் சு.நஞ்சப்பனார் சிதம்பரத்தில் கூறியது:

                 தமிழகத் தமிழாசிரியர் கழகம் ஆண்டுக்கு 4 செயற்குழுக் கூட்டங்களை நடத்துகிறது. சிதம்பரத்தில் நடைபெற்ற 4-வது செயற்குழுக் கூட்டத்தில் மேலவைத் தேர்தலில் தமிழாசிரியர் கழகம் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. 15 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இக்கழகம், திரு.வி.க.வால் தோற்றுவிக்கப்பட்டது. பல்வேறு தமிழ்ச் சான்றோர்கள் நிர்வாகிகளாக இருந்துள்ளனர்.

                 தமிழாசிரியர் கழகத்தின் நீண்ட நாளைய கோரிக்கையான, தமிழ்வழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்றிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் இந்த விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழ்வழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்தால் தமிழகத்தில் நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதமும் உயர்ந்துள்ளது.

                        தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததாலும், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு கட்டணச் சலுகை அளித்ததாலும் இந்த ஆண்டு சுமார் 75 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். தமிழில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அம்மாணவர்கள் உயர் படிப்பு பயில உதவித்தொகை வழங்க வேண்டும். ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி அரசு கல்வித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

                   இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற அக்.9-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை முழுக்க போராட்டம் நடத்தப்படும் என்று சு.நஞ்சப்பனார் தெரிவித்தார். மாநிலத் தலைவர் ஆ.ஆறுமுகம், பொதுச்செயலாளர் இரா.வெங்கடேசன், பொருளாளர் க.வஞ்சிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

வெளிநாடுகளுக்குப் பறக்கும் வண்டிப்பாளையம் பொம்மைகள்


கடலூர் வண்​டிப்​பாளையத்​தில் பொம்மை தயா​ரிக்​கும் தொழி​லாளி.
 
கடலூர்:
 
              கடலூரை அடுத்த பண்டிதர்பாளையம் என்பதுதான் பின்னாளில் வண்டிப்பாளையம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே சிறந்த நகரமாக விளங்கியது வண்டிப்பாளையம். தற்போது கடலூர் நகரத்தின் ஒரு பகுதியாக, சற்று பின்தங்கிய பகுதியாகவும், பழமையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்கி வருகிறது.  
 
                 வண்டிப்பாளையத்தில் பொம்மை தயாரிக்கும் தொழில் பாரம்பரியம் மிக்கதாக பல தலைமுறைகளைத் தாண்டி நிலைத்து நிற்கும் தொழிலாக இருந்து வருகிறது. வண்டிப்பாளையத்தை அடுத்த மணவெளி கிராமத்திலும் அண்மைக்காலமாக பொம்மைத் தொழில் வளரத் தொடங்கி இருக்கிறது. வண்டிப்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. அவர்களில் பல குடும்பத்தினர் பல தலைமுறைகளாக பொம்மை தயாரித்து வருகிறார்கள். பொதுவான கலைத்திறன் கொண்ட பொம்மைகள் மற்றும் கடவுள்களின் உருவங்களில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. 
 
              கிறிஸ்தவ மதத்தினருக்கான பொம்மைகள் மற்றும் இந்து மதத்தினருக்கான பொம்மைகள் எனத் தனித்தனிக் குடும்பங்கள் இவற்றைத் தயாரிக்கின்றன. ஆண்டு முழுவதும் வீடுகளில் நடைபெறும் இத்தொழில், நவராத்திரி மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் விற்பனையின் உச்சக் கட்டத்தை அடைவதும், மற்ற காலங்களில் சாதாரணமான விற்பனையும், உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தும் காலமாகவும் அமைந்து உள்ளது. தற்போதைய விற்பனையில் கிருஷ்ணர், ராதை, லட்சுமி, முருகன் பொம்மைகள் சிறப்பான இடத்தைப் பிடித்து உள்ளன.
 
பொம்மைத் தொழில் குறித்து வண்டிப்பாளையம் துரைராஜ் கூறியது
 
                 எங்கள் குடும்பத்தினர் 3 தலைமுறையாக பொம்மை செய்து வருகிறோம். வண்டிப்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மைத் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. பலர் பாரம்பரியமாகச் செய்து வருகிறார்கள். வண்டிப்பாளையத்தில் பெரும்பாலும் களிமண் மற்றும் காகிதக் கூழால் தயாரிக்கும் பொம்மைகள்தான் அதிகம். களிமண்ணால் செய்து அதைச்சுட்டு பின்னர் வர்ணம் தீட்டுகிறோம். காகிதக் கூழை அரைத்து வாங்கி அதில் சுக்கான் மாவு, மரவள்ளிக் கிழங்குமாவு ஆகியவற்றைச் சேர்த்து பொம்மை தயாரிக்கிறோம். 
 
                          அச்சுகளில் வார்த்து எடுத்து காய வைத்து வர்ணம் தீட்டுகிறோம். பொம்மைத் தொழிலில் மனைவி பிள்ளைகள் என்று குடும்பமாக உழைக்கிறோம். காலை 7 மணிக்கு தொழில் செய்யத் தொடங்குவோம். பல நேரங்களில் இரவு 10 மணி வரைகூட தொழில் செய்வோம்.  இந்தத் தொழிலில் உழைப்புதான் முக்கியம். உழைப்புக்கு ஏற்பதான் ஊதியம் கிடைக்கும். வண்டிப்பாளையத்தில் 10க்கு கிடைக்கும் சிறிய விநாயகர் சிலை முதல், 5 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள கலையம்சம் பொருந்திய சிலைகளும் தயாரிக்கிறோம். 
 
                   கடலூரில் இருந்து மும்பை, தில்லி, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பொம்மைகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சென்னையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் வண்டிப்பாளையம் பொம்மைகளை வாங்கி, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ மதம் சார்ந்து பொம்மைகள் கேரளம், கோவா போன்ற மாநிலங்களுக்கு அதிகமாக விற்பனை ஆகின்றன என்றார் துரைராஜ்.

Read more »

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறவிருக்கும் மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கலாம்: ஆட்சியர்

கடலூர்:

           மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறவிருக்கும், பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு, மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள், முன் வைப்புத் தொகை ஏதுமின்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              தமிழக அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், தனியார் கல்வி நிலையங்களில் பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயில்வோருக்கு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை வழங்க ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

            இக்கல்வி உதவிóத் தொகை பெறும் மாணவர்கள், முன்வைப்புத் தொகை ஏதுமின்றி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்க வங்கிக் குழுவால் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்வி உதவித் தொகை பெறத் தகுதி வாய்ந்த மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் பயிலும் கல்வி நிலையங்களை அணுகி, வங்கிக் கணக்கு தொடங்கி பயன் அடையலாம்.

                    கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், கல்வி உதவித் தொகை பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்காக, வங்கிக் கணக்கு தொடங்கவும், வங்கிக் கணக்கு விவரங்களை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கிக் கணக்கு தொடங்க மாணவர்களுக்கு அடையாள அட்டைகளையும் அவர்கள் வழங்க வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் 25-க்கு 10 மளிகைப் பொருள்கள் விற்பனை

கடலூர்:
 
               கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில், மானிய விலையில் 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய மளிகைப் பொட்டலம் 25-க்கு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: 

                 நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொட்டலம், 50-க்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இத் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த பொட்டலத்தில், மிளகாய்த் தூள், மல்லித்தூள், ஒரு குடும்பத்தின் சராசரித் தேவையைவிட அதிகம் இருப்பதாகவும், ஒரே நேரத்தில் 50க்கு பொருள்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

                          ஏழை எளிய மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் வகையில், 25 விலையில் 10 மளிகைப் பொருகள் அடங்கிய பொட்டலம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 25-க்கு வழங்கப்படும் பொட்டலத்தில் மல்லித்தூள் 50 கிராம், வெந்தயம் 25 கிராம், கடுகு 25 கிராம், உளுத்தம்பருப்பு 25 கிராம், மிளகு 25 கிராம், சீரகம் 50 கிராம், கரம் மசாலா 10 கிராம் ஆகியவை உள்ளன. மேற்கண்ட 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்கள், நியாயவிலைக் கடைகளில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, மாதத்துக்கு 2 பொட்டலங்கள் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

A (H1N1) Vaccination drive begins at Cuddalore District


Preventive measure: The vaccination drive under way at the Cuddalore Government Headquarters Hospital on Saturday. Collector P. Seetharaman is in the picture. 
 
CUDDALORE: 

         Collector P. Seetharaman inaugurated a drive to administer A (H1N1) vaccines to the public, at the Cuddalore Government Headquarters Hospital here on Saturday.

           Joint Director in-charge (health services) Kamalakannan, Medical Superintendent Ramachandran and Deputy Director R. Meera were present. Dr. Meera told reporters that two types of vaccines were available at the hospital – nasovax, which would be applied through nasal cavities and vaxiflu, an intramuscular injection. While the drops were recommended for those above three years of age, the injection was recommended for those above 18 years.

               However, the vaccines were not recommended for those below three years of age, those who were having allergy to egg and egg products, pregnant women and diabetics. The vaccines were available at prices lower than market rates, she said. The drops were being administered for Rs. 115 and the injection, Rs. 225. The hospital had adequate stock of the vaccines and the stocks would be replenished as per requirements, Dr. Meera said. The vaccines were safe and would not lead to any complication, she added. The Health Department was maintaining surveillance over the instances and monitoring the cases reported at the tertiary care centres.

Read more »

Annamalai University recently launched Film technology-related programmes

CUDDALORE: 

               Annamalai University recently launched film technology related programmes, being offered through the distance education mode in collaboration with Jeevan Softech Limited, Hyderabad.

             Those who were present on the occasion included Union Minister of State for Human Resource Development D. Purandeswari, vice-chancellor M. Ramanathan, Director of the Directorate of Distance Education S.B. Nageswara Rao, Jeevan Softech Chairman D. Seetharamaiah, film producer Tammareddy Bharadwaja and actor Chalapathi Rao. A statement from the university said that Ms. Purandeswari congratulated the university and the company for having come together to launch the programmes. She stressed the need for starting more educational institutions to meet the demands of the growing population.

             Mr. Ramanathan said that the programmes would include M.B.A and B.B.A in media management, and, diploma and certificate programmes. Film was a powerful medium that reflected the cultures of particular sections and also acted as a means of entertainment, he added.

Read more »

“Buildings worth Rs. 1,091 crore built for Health Department”

CUDDALORE: 

           Buildings worth Rs. 1,091 crore were built for the Health Department and about 30,000 medical personnel recruited in the State in the past four years, according to Health Minister M.R.K. Panneerselvam.

             He was speaking at a function held to distribute free colour television sets and free gas connections at Nathamedu in Sethiathope block near here on Friday. He said that the recruits included 6,070 doctors and 11,940 nurses. Every year, medicines worth Rs. 636 crore were given to government hospitals across the State, Mr. Panneerselvam said. A total of 2,03,057 people underwent life-saving treatment to the extent of Rs 537.36 crore under the Kalaignar Health Scheme so far, he added. A total of 6,26,918 lives were saved through the 108 ambulance service.

            Mr. Panneerselvam said that all possible preventive measures had been taken against A (H1N1) influenza for which vaccines were being administered at the general hospitals in Chennai, Coimbatore, Vellore and Cuddalore. Collector P. Seetharaman said that under the Kalaignar Housing Scheme, 26,119 concrete houses would be built this year and all arrangements had been made for the supply of bricks and other construction materials at reasonable prices. He noted that the first concrete house was built under the scheme at Thachankadu in Parangipettai block.

           He called upon the panchayat presidents to help in the completion of such houses in their areas. Mr. Panneerselvam gave away 2,397 free colour television sets and 528 free gas connections. In Cuddalore district as many as 4,86,485 families had been given TV sets so far and 91,000 families free gas connections. Farm loans amounting to Rs. 246 crore were waived benefiting as many as 1,02,535 farmers.

Read more »

Ramalinga Adigalar has done yeoman service to humanity, Tamil: Finance Minister

CUDDALORE: 

           Ramalinga Adigalar, popularly known as Vallalar, has done a yeoman service to humanity and Tamil language. His Tamil diction was of extraordinary quality, unparalleled by any other scholars, said K. Anbazhagan, Finance Minister.

            He was speaking at a function held at the Sathya Gnana Sabai at Vadalur near here on Saturday. Mr. Anbazhagan said that through his life Vallalar had demonstrated how one could achieve immortality by serving the society. Peace and harmony could prevail only when the heart was filled with love and non-violence. The concept of god was universal and therefore could not be confined to the teachings and ideologies of any particular community or religion.

            Mr. Anbazhagan further said that Vallalar's holistic thoughts were all comprehensive, intended for the good of all creations on the earth. He strongly advocated that humanity should not only learn to live in harmony but should also show compassion to animals and plants. Having realised that hunger was a debilitating force that led to other conflicts Vallalar had started mass feeding by setting up a kitchen that was working round-the-clock.

            The preaching of Vallalar got reflected in the rationality of Periyar Ramasamy, ahimsa of Mahatma Gandhi and humaneness of Mother Teresa. The Thiruvarutpa and Thiruvasagam were the treasure troves, containing the valuable guidance for streamlining thoughts and action for creating a better society. In this context the Minister said that there was nothing wrong in reciting Tamil verses in the places of worship built by Tamil kings. However, the influence of other languages in religion had become deeply entrenched.

              It was owing to the strivings of Chief Minister M. Karunanidhi, and, the cooperation of Prime Minister Manmohan Singh and Congress leader Sonia Gandhi that Tamil could attain the classical language status, Mr. Anbazhagan added. On the occasion he inaugurated the new hall erected in front of the Sathya Gnana Sabai, released low-cost Thiruvarutpa books, and, laid foundation stones for the construction of a mandapam at Puthu Mariamman temple and building for the Block Development Officer at Kurinjipadi. Health Minister M.R.K. Panneerselvam, Hindu Religious and Cultural Endowment Minister Periyakaruppan, K.S. Alagiri, MP, and others participated.

Read more »

Rajah Muthiah Medical College gets Rs.60 lakh grant from UGC

CUDDALORE: 

             Rajah Muthiah Medical College of Annamalai University, as part of its Silver Jubilee celebrations now on, has extended its intensive care unit to provide timely health care to more number of patients and built an auditorium to conduct seminars and symposiums to update the knowledge of the faculty, according to M. Ramanathan, Vice-Chancellor of Annamalai University.

             Addressing a press conference here Dr. Ramanathan, who had earlier served as the Medical Superintendent and Principal of the college, as well as Dean, Faculty of Medicine, said that the University Grants Commission had sanctioned a grant of Rs.60 lakh to the medical college for conducting camps for cancer detection and screening patients for cardiac problems.

          Dr. Ramanathan said started 25 years ago on August 1985 the medical college had a hospital attached to it right from the beginning to render quality and specialty health care services to the people of the backward region. The 1,500-beded hospital was equipped with modern equipment such as CT scan, MRI, mammography, colour Doppler with ultrasonogram, C-arm, laparoscopes and endoscopes.

              Every day it treats 3,000 outpatients and 1,110 in-patients, and annually it performed 14,485 scheduled surgeries and 5,885 emergency surgeries. It was also running a “Hospital on wheels,” an air-conditioned ambulance service with doctors, paramedical staff and sophisticated equipment such as ventilators, defibrillator and cardiac monitors, and life-saving drugs.

            The hospital's community medicine division had adopted three Primary Health Centres and a rural health centre. Dr. Ramanathan further said that its plastic surgery division had specialised in treatment of lymphoedema and filariasis. The hospital had a blood bank and a Raja Muthiah Blood Donors Club to create awareness among the students and the people about the significance of blood donation. It was also issuing identity cards and certificate of appreciation to the blood donors, he added.

            N. Chidambaram, Dean, Faculty of Medicine, said that yoga therapy would also be introduced in the hospital. The year-long Silver Jubilee celebrations would culminate on Wednesday. S. Viswanathan, Medical Superintendent, said that in recognition of the academic achievements the Royal College of Physicians and Surgeons, Glasgow, had awarded FRCS to Dr. Ramanathan and himself, and, FRCP to Dr. Chidambaram.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior