உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 13, 2012

Maoist leader lodged in Cuddalore prison stages fast

CUDDALORE:

 A Maoist leader, who was arrested on charges of indulging in anti-national activities and lodged at Cuddalore central prison, began an indefinite fast from Wednesday morning demanding proper amenities and free movement in the high-security prison. In a petition submitted to the superintendent of prison, Vivek, 47 complained of poor basic amenities in the prison and declared that he will fast unto death if the prison administration fails to extend proper amenities.



Read more »

பண்ருட்டியில் கொசு ஒழிப்புக்கு 4 புதிய இயந்திரங்கள்

பண்ருட்டி:

பண்ருட்டி நகர பகுதியில் கொசுக்களை அழிக்க நான்கு புதிய கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு கொசு புகை மருந்து அடிக்கும் பணி தொடங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகர நிர்வாகம் சார்பில் 4 கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, அனைத்து வார்டு பகுதிகளிலும் புகை மருந்து அடிக்கப்பட உள்ளது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் கொசு புகை மருந்து அடிக்கும் பணியை திங்கள்கிழமை துவக்கி வைத்தார். அதிமுக நகர செயலர் எஸ்.ஏ.சி.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.ராதா, சுகாதார அலுவலர் பி.குமார், சுகாதார ஆய்வாளர்கள் பாண்டியன், திண்ணாயிரமூர்த்தி, வட்டப் பிரதிநிதி கருப்பையா, சோமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




Read more »

சிதம்பரம் சமூக நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற தாசில்தார் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள்

சிதம்பரம் :

சிதம்பரம் சமூக நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு வரை கல்லூரியிலேயே உதவி தொகை பெற்றனர்.  இந்த ஆண்டு முதல் சமூக நலத்துறை மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உழவர் பாதுகாப்பு திட்ட கார்டு வைத்துள்ள குடும்பத்தில் இருந்து  கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., சான்று,  கல்லூரியில் படிக்கும் ஆதாரச் சான்று, குடும்ப உழவர் கார்டு, ஜாதிச் சான்று நகலுடன் தாசில்தார் அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு துறையில் கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்களை பார்வையிட்டு உதவித் தொகை வழங்கப்படுகிறது. நேற்று சிதம்பரம் சமூக நலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக் கவும், கல்வி  உதவி தொகை பெறவும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குவிந்தனர். பொறியியல் படிக்கும் மாணவருக்கு 2250 ரூபாய், மாணவிக்கு 2750 ரூபாய், பட்டப்படிப்பு படிக்கும் மாணவருக்கு 1750 ரூபாய், மாணவிக்கு 2250 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பெற்று உதவி தொகைக்கான காசோலைகளை சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ராமச்சந்திரன் வழங்கினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior