உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

கிராம மக்​கள் சாலை மறி​யல்

பண் ​ருட்டி,​ நவ. 20:​

தள​வா​டப் பொருள்​கள் வந்​தி​றங்கி ஒராண்​டா​கி​யும் மின்​மாற்றி அமைக்​கா​த​தால் ஆத்​தி​ரம் அடைந்த கட்​ட​முத்​துப்​பா​ளை​யம் கிராம மக்​கள் வெள்​ளிக்​கி​ழமை சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ ​

பண்​ருட்டி வட்​டம் அண்​ணா​கி​ரா​மம் ஒன்​றி​யம் பூண்டி ஊராட்​சி​யைச் சேர்ந்​தது கட்​ட​முத்​துப்​பா​ளை​யம்,​ இக்​கி​ரா​மத்​தில் சுமார் 5 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்​டோர் வசித்து வரு​கின்​ற​னர். ​​ ​ இக்​கி​ரா​மத்​தில் உள்ள மின்​மாற்​றி​யில் இருந்து மின் அழுத்​தம் குறை​வாக கிடைப்​ப​தால்,​ வீடு​க​ளில் மின் விளக்​கு​கள் வெளிச்​சம் குறை​வாக உள்​ளது . மின் மோட்​டார்​கள் இயங்​கா​த​தால் குடி​நீர் தட்​டுப்​ப​டும்,​ விவ​சாய நிலத்​திற்கு தண்​ணீர் பாய்ச்​சு​வ​தும் பாதிக்​கப்​பட்டு பொது மக்​கள் அவதி அடைந்து வந்​த​னர்.இது குறித்து தக​வல் அறிந்த மின்​வா​ரி​யம் இப்​ப​கு​தி​யில் மற்​றொரு மின்​மாற்​றியை அமைக்க தேவை​யான தள​வா​டப் பொருள்​களை இறக்கி மின்​மாற்றி அமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டது.​ ​ இந்​நி​லை​யில் மின்​கம்​பம் நட​வுள்ள சாலை புறம்​போக்கு இடத்தை ஆக்​கி​ர​மித்து வைத்​துள்​ள​தா​கக் கூறப்​ப​டும் முன்​னாள் கிராம நிர்​வாக அலு​வ​லர் ராஜா​ராம் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் மின்​மாற்றி அமைக்​கும் பணி கிடப்​பில் போடப்​பட்​டது.இது தொடர்​பாக கிராம மக்​கள் மாவட்ட ஆட்​சி​யர்,​ வட்​டாட்​சி​யர் ஆகி​யோ​ருக்கு பல​முறை மனு அளித்​தும் எந்த பல​னும் ஏற்​ப​ட​வில்லை.​ ​ ​ இத​னால் ஆத்​தி​ரம் அடைந்த கட்​ட​முத்​துப்​பா​ளை​யம் கிராம மக்​கள் பூண்டி ஊராட்சி மன்​றத் தலை​வர் ஜெ.குமார்,​ அதி​முக பிர​மு​கர் கரு​ணா​க​ரன் ஆகி​யோர் தலை​மை​யில் எல்.என்.புரம் மின்​சார வாரிய அலு​வ​ல​கம் முன்,​ சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் சாலை மறி​யல் ஈடு​பட்​ட​னர்.​ ​ இது குறித்து தக​வல் அறிந்த வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​ மின்​சார வாரிய உதவி செயற் பொறி​யா​ளர் சாய்​சுப்​பி​ர​ம​ணி​யன் ஆகி​யோர் பொது மக்​க​ளி​டம் சம​ர​சம் பேசி,​ கட்​ட​முத்​துப்​பா​ளை​யம் சென்று பிரச்​னைக்​கு​றிய இடத்​தைப் பார்​வை​யிட சென்​ற​னர். இத​னைத் தொடர்ந்து பொது மக்​கள் சாலை மறி​ய​லைக் கைவிட்​ட​னர். இத​னால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் 45 நிமி​டம் போக்​கு​வ​ரத்து தடை​பட்​டது.

Read more »

ஊரை​விட்டு ஒதுக்​கப்​பட்ட தலித் குடும்​பம்

சிதம் ​ப​ரம்,​ நவ. 20:​

சிதம்​ப​ரம் அருகே தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த விரி​வு​ரை​யா​ளர் குடும்​பத்​தி​னர் ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​னர். இது​கு​றித்து அவ்​வி​ரி​வு​ரை​யா​ளர் கிள்ளை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்.​ ​

சிதம்​ப​ரத்தை அடுத்த கொடிப்​பள்​ளம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் த.சர​வ​ணக்​கு​மார் சமு​தா​யத்​தைச் சேர்ந்த இவர் அண்​ணா​ம​லைப் பல்​க​லை​யில் பொரு​ளா​தா​ரத் துறை​யில் விரி​வு​ரை​யா​ள​ராக உள்​ளார். இவர் கொடிப்​பள்​ளம் அருகே உள்ள பின்​னத்​தூர் மேற்கு கிரா​மத்​தைச் சேர்ந்த ஒளி​மு​க​மது என்​ப​வ​ருக்​குச் சொந்​த​மான நிலத்தை 2005-ம் ஆண்டு முதல் குத்​த​கைக்கு எடுத்து பயி​ரிட்டு வந்​துள்​ளார். அந்த நிலத்தை ஒளி​மு​க​மது ​ விற்க முன்​வந்த போது அதை சர​வ​ணக்​கு​மார் விலை கொடுத்து வாங்​கி​யுள்​ளார்.​ இந்​நி​லை​யில் அக்​கி​ரா​மத்​தைச் சேர்ந்த சிலர் அந்த நிலத்தை ஊர் மக்​க​ளுக்கு இல​வச வீட்​டு​ம​னைப்​பட்​டா​வாக வழங்க தரு​மாறு கேட்​ட​னர். அதற்கு சர​வ​ணக்​கு​மார் மறுத்​த​தால் கிராம பஞ்​சா​யத்​துக்கு அழைத்து இந்த நிலத்தை ஊருக்​காக விட்​டுக் கொடுக்க வேண்​டும் எனக்​கோ​ரி​னர். அதற்கு சர​வ​ணக்​கு​மார் "எனது தலை​மு​றை​யில் முதல்​மு​றை​யாக நிலம் வாங்​கி​யுள்​ளேன். அரு​கா​மை​யில் வேறு நிலங்​கள் உள்​ளன. அதை வாங்​கிக் கொள்​ளுங்​கள்' எனக்​கூ​றி​விட்டு சென்​ற​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. ​ இந்​நி​லை​யில் இம்​மா​தம் 17ம் தேதி செவ்​வாய்க்​கி​ழமை ஊர் பஞ்​சா​யத்து கூட்​டப்​பட்டு சர​வ​ணக்​கு​மார் வீட்​டுக்கு யாரும் செல்​லக்​கூ​டாது,​ கடை​க​ளில் மளி​கைப் பொருள்​களை கொடுக்​கக்​கூ​டாது. யாரும் உறவு வைத்​துக் கொள்​ளக்​கூ​டாது. மீறி​னால் ​ ரூ.5 ஆயி​ரம் அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும் என உத்​த​ர​வி​டப்​பட்​ட​தாக கூறப்​ப​டு​கி​றது. ​இது​கு​றித்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்' என்று கிள்ளை காவல் நிலை​யத்​தில் சர​வ​ணக்​கு​மார் வியா​ழக்​கி​ழமை புகார் அளித்​தார். கிள்ளை போலீ​ஸôர் புகா​ரைப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர். ​ இது​கு​றித்து சென்னை மனித உரிமை ஆணை​யம்,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர்,​ ஆதி​தி​ரா​விட நலத்​துறை செய​லா​ளர் ஆகி​யோ​ருக்​கும் கடி​தம் அனுப்​பி​யுள்​ள​தாக சர​வ​ணக்​கு​மார் தெரி​வித்​தார்.

Read more »

கொள்​ளைக் கூட்டு சதி​யில் ஈடு​பட்ட 4 பேர் கைது

​ சிதம்​ப​ரம்,​ நவ. 20:​

கொள்​ளை​ய​டிப்​ப​தற்​காக கூட்டு சதி​யில் ஈடு​பட்​டி​ருந்த தமி​ழர் விடு​த​லைப்​படை இயக்​கத்​தைச் சேர்ந்​த​வர் உள்​ளிட்ட 4 பேரை சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர் தலை​மை​யி​லான தனிப்​படை போலீ​ஸôர் வியா​ழக்​கி​ழமை கைது செய்​த​னர். அவர்​க​ளி​ட​மி​ருந்து கைத்​துப்​பாக்​கியை போலீ​ஸôர் பறி​மு​தல் செய்​த​னர்.​ ​ திருட்டு மற்​றும் கொள்​ளைச் சம்​ப​வங்​களை தடுக்​க​வும்,​ குற்​றச்​செ​யல்​க​ளில் ஈடு​பட்டு வரும் ரவு​டி​களை பிடிக்​க​வும் சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர் தலை​மை​யி​லான தனிப்​ப​டையை மாவட்ட போலீஸ் சூப்​ரண்​டன்ட் அஸ்​வின்​கோட்​னீஷ் அமைத்​துள்​ளார். இந்​நி​லை​யில் தனிப்​படை போலீ​ஸôர் தங்​க​ளுக்கு கிடைத்த தகவ​லின் பேரில் விருத்​தா​ச​லம் பகு​தி​யில் மணி​முத்​தாறு செல்​லி​யம்​மன்​கோ​வில் பின்​பு​றம் திடீர் சோதனை மேற்​கொண்​ட​னர்.​ ​ அப்​போது கொள்​ளை​ய​டிப்​ப​தற்​காக கூட்டு சதி​யில் ஈடு​பட்​டி​ருந்த மத்​திய ரிசர்வ் ​ போலீஸ் படையி​லி​ருந்து பணி​நீக்​கம் செய்​யப்​பட்ட அரி​ய​லூர் மாவட்​டம் கொக்​க​ர​சன்​பேட்​டை​யைச் சேர்ந்த தியா​க​ரா​ஜன் ​(36), தமி​ழர் விடு​த​லைப்​படை இயக்​கத்​தில் உள்ள விருத்​தா​ச​லத்​தைச் சேர்ந்த அசோக்​கு​மார் ​(28), அரி​ய​லூர் மாவட்​டம் ஆண்​டி​ம​டத்​தைச் சேர்ந்த கருக்கை ஜெயக்​கு​மார் ​(26), விருத்​தா​ச​லம் பழ​ம​லை​நா​தர் நக​ரைச் சேர்ந்த ஆனந்​தன் ​(21) ஆகிய 4 பேரை போலீ​ஸôர் கைது செய்​த​னர். மேலும் அவர்​க​ளி​ட​மி​ருந்து கைத்​துப்​பாக்கி ஒன்​றை​யும் போலீ​ஸர் பறி​மு​தல் செய்​த​னர். இது​கு​றித்து விருத்​தா​ச​லம் போலீ​ஸôர் வழக்​குப் பதிந்​துள்​ள​னர்.

Read more »

பெண் தற்​கொலை​: 5 போலீஸôர் நீதி​மன்​றத்​தில் ஆஜ​ராக உத்​த​ரவு

கட​லூர்,​ நவ. 20:​

கண​வரை மது​வி​லக்​குப் போலீ​ஸôர் கைது செய்​த​தால் மனம் உடைந்து மனைவி தற்​கொலை செய்து கொண்ட சம்​ப​வம் தொடர்​பாக,​ 5 போலீஸ் காவ​லர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜ​ராக வேண்​டும் என்று நீதி​பதி வெள்​ளிக்​கி​ழமை உத்​த​ர​விட்​டார். ​​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த நஞ்​சை​ம​கத்து வாழ்க்கை என்ற கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் கூலித் தொழி​லாளி சண்​மு​கம். அவ​ரது மனைவி சாந்தி. கடந்த 30-4-2004 அன்று சண்​மு​கத்தை சிதம்​ப​ரம் மது​வி​லக்​குப் போலீ​ஸர் சாரா​யம் விற்​ற​தா​கக் கைது செய்ய முயன்​ற​னர். அவர் வீட்​டில் இல்​லா​த​தால் மனைவி சாந்​தி​யைப் பிடித்​துச் சென்​ற​னர். இதற்கு அப்​ப​குதி மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​னர்.​ ​ இந்த நிலை​யில் சாந்​தி​யி​டம் போலீ​ஸôர் பணம் வாங்​கிக் கொண்டு அவரை விட்​டு​விட்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. மறு​நாள் சண்​மு​கம் மது​வி​லக்​குப் போலீ​ஸô​ரி​டம் சரண் அடைந்​தார். அவ​ரைப் போலீ​ஸôர் கைது செய்​த​னர். இத​னால் மனம் உடைந்த சாந்தி,​ தூக்​கிட்​டுத் தற்​கொலை செய்து கொண்​டார். இச்​சம்​ப​வம் குறித்து ஊர் மக்​கள் கிளர்ந்து எழுந்​த​தன் கார​ண​மாக,​ சிதம்​ப​ரம் சார் ஆட்​சி​ய​ராக இருந்த ராஜேந்​திர ரத்னு விசா​ரணை நடத்தி அர​சுக்கு அறிக்கை அனுப்​பி​னார்.​ ​ இச்​சம்​ப​வம் தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட போலீஸ் காவ​லர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்த,​ தமி​ழக அரசு அண்​மை​யில் உத்​த​ர​விட்டு உள்​ளது. இந்த வழக்கு கட​லூர் முதன்மை குற்​ற​வி​யல் நீதித்​துறை நடு​வர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளது. வழக்கு நீதி​பதி ஜாகீர்​உ​சேன் முன்​னி​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை விசா​ர​ணைக்கு வந்​தது.​ ​ குற்​றம் சாட்​டப்​பட்​டில் சம்​பந்​தப்​பட்ட போலீஸ் காவ​லர்​கள் நட​ரா​ஜன்,​ கலி​ய​மூர்த்தி,​ தன​பால்,​ பாஸ்​கர்,​ கணே​சன் ஆகிய 5 பேரை​யும் நீதி​மன்​றத்​தில் ஆஜ​ரா​கு​மாறு,​ நீதி​பதி ஜாகீர் உசேன் உத்​த​விட்​டார். வழக்கு விசா​ர​ணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதி​பதி தள்ளி வைத்​தார்.

Read more »

ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தில் மருத்​துவ முகாம்

பண்ருட்டி,​ நவ.20:​

நெய்வேலி கல்வி அறக்​கட்​டளை சார்​பில்,​ கீழக்​கொல்​லை​யில் இயங்​கும் நெய்வேலி ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தில் அண்​மை​யில் மருத்​துவ முகாம் நடை​பெற்​றது.​ ​ நெய்வேலி கல்வி அறக்​கட்​டளை தலை​வர் ஆர்.சந்​தி​ர​சே​கர் தலை​மை​யில் நடை​பெற்ற முகா​மில்,​ மருத்​து​வர்​கள் செந்​தில்,​ அகி​லா​செந்​தில்,​ ஆதி​கே​ச​வப்​பெ​ரு​மாள்,​ பக​வத்​லீனா ஆகி​யோர் கொண்ட மருத்​து​வக் குழு​வி​னர் மாணவ,​ மாண​வி​க​ளுக்கு மருத்​துவ பரி​சோ​தனை செய்​த​னர்.ôண​வி​கள் பெண் மருத்​து​வர்​க​ளு​டன் கலந்​து​ரை​யா​டல் நடத்​தி​னர். இதில் மாண​வி​க​ளின் கேள்​வி​க​ளுக்​கும்,​ சந்​தே​கங்​க​ளுக்​கும் பெண் மருத்​து​வர்​கள் பதி​ல​ளித்​த​னர். மாண​வர்​கள் தனித்​த​னியே மருத்​துவ ஆய்​வுக்கு உட்​ப​டுத்​தப்​பட்​ட​னர். இதில் உடல் நலத்தை பேணு​தல்,​ விழிப்​பு​ணர்வு,​ சிகிச்சை குறித்த வழி​காட்​டு​த​லும் அளிக்​கப்​பட்​டது. முகா​மில் செய​லர் எம்.நட​ரா​ஜன்,​ பொரு​ளா​ளர் என்.தங்​க​துரை,​ இயக்​கு​னர்​கள் ஆர்.எல்.ஜெய​வெங்​கட்​ரா​மன்,​ சுதா​ரா​ம​ராசு உள்​ளிட்​ட​வர்​கள் கலந்​து​கொண்​ட​னர். கல்வி நிறு​வ​னத்​தின் கற்​பித்​தல் குழு மற்​றும் தர மேம்​பாட்​டுக் குழு விரி​வு​ரை​யா​ளர்​கள் இதற்​கான ஏற்​ப​டு​களை செய்​தி​ருந்​த​னர்.

Read more »

104 பேருக்கு ​ கனரா வங்கி கட​னு​தவி

​ நெய்வேலி,​ நவ. 20:​

கனரா வங்​கி​யின் 104-ம் ஆண்டு தினத்தை முன்​னிட்டு,​ 104 பேருக்கு ரூ. 15.5 லட்​சம் கடன் வழங்​கும் நிகழ்ச்சி நெய்வேலி வட்​டம்-​6 வங்​கிக் கிளை​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​ கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள கனரா வங்​கி​யின் 16 கிளை​க​ளி​லும்,​ நலி​வ​டைந்த நிலை​யில் உள்​ள​வர்​க​ளுக்கு குறைந்த வட்​டி​யில் கட​னு​தவி வழங்​கப்​பட்​டது. இதில் ஊன​முற்​றோர் மற்​றும் பெண்​க​ளுக்கு முன்​னு​ரிமை அளிக்​கப்​பட்​டது.​ இந்த கடன் வழங்​கும் நிகழ்ச்​சி​யில் கனரா வங்​கி​யின் திருச்சி சரக மேலா​ளர் ராம​லிங்​கம்,​ நெய்வேலி வங்​கிக் கிளை​யின் முதன்மை மேலா​ளர் வெள்​ளைச்​சாமி மற்​றும் கிளை மேலா​ளர்​கள் பங்​கேற்​ற​னர்.

Read more »

கட​லூ​ரில் இன்று ​ உழைக்​கும் மக​ளிர் மாநாடு

​கட​லூர்,​ நவ.20:​

எல்.ஐ.சி. உழைக்​கும் மக​ளிர் மாநாடு கட​லூ​ரில் சனிக்க்​கி​ழமை ​(நவம்​பர் 21) நடக்​கி​றது.​ ​ கட​லூர்,​ விழுப்​பு​ரம்,​ மற்​றும் புதுவை மாநில எல்.ஐ.சி. அலு​வ​ல​கங்​க​ளில் பணி​யாற்​றும் பெண்​கள் இதில் கலந்து கொள்​கி​றார்​கள்.

பிற்​ப​கல் 2 மணிக்கு கட​லூர் எல்.ஐ.சி. அலு​வ​ல​கத்​தில் நடை​பெ​றும் இந்த மாநாட்​டுக்கு,​ வேலூர் கோட்ட மக​ளிர் துணைக்​குழு இணை அமைப்​பா​ளர் காமாட்சி தலைமை வகிக்​கி​றார். இணை அமைப்​பா​ளர் எஸ்.ஜெயஸ்ரீ வர​வேற்​கி​றார். ​​ ​ தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தா​ளர் சங்க மாநில பொதுச் செய​லா​ளர் தமிழ்ச்​செல்​வன் மாநாட்​டைத் தொடங்கி வைத்து பேசு​கி​றார். அனைத்​திந்​திய ஜன​நா​யக மாதர் சங்க கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் வாலண்​டீனா,​ வேலூர் கோட்ட எல்.ஐ.சி. ஊழி​யர் சங்​கத் தலை​வர் தச​ர​தன் ஆகி​யோர் வாழ்த்​திப் பேசு​கின்​ற​னர்.

Read more »

கிராம யாத்​திரை ​ இன்று சிதம்​ப​ரம் வருகை

​ ​சிதம்​ப​ரம்,​ நவ. 20 :​

விஸ்​வ​மங்​கள கோமாதா கிராம யாத்​திரை சனிக்​கி​ழமை சிதம்​ப​ரம் வரு​கி​றது. இத​னை​யொட்டி சிதம்​ப​ரம் மேல​வீ​தி​யில் கிராம யாத்​திரை குழு​வி​ன​ருக்கு மாலை 6 மணிக்கு வர​வேற்பு அளிக்​கப்​ப​டு​கி​றது. ​ ஆடிட்​டர் கே.வைத்​தி​ய​நா​தன் தலைமை வகிக்​கி​றார். மௌ​ன​சாமி மடா​தி​பதி சுந்​த​ர​மூர்த்தி சுவா​மி​கள் ஆசி​யு​ரை​யாற்​று​கி​றார்.
நிகழ்ச்சி ஏற்​பா​டு​களை இந்து இயக்​கப் பொதுச் செய​லா​ளர் ஆர்.பால​கி​ருஷ்​ணன்,​ செய​லா​ளர் ஜோதி குரு​வா​யூ​ரப்​பன் உள்​ளிட்​டோர் செய்​துள்​ள​னர்.

Read more »

தன்​னம்​பிக்​கை​யோ​டு நேர்​மு​கத்​தேர்வை அணு​குங்​கள்

நெய்வேலி, நவ. 20:​

நேர்​மு​கத் தேர்வை தைரி​யத்​து​ட​னும்,​ தன்​னம்​பிக்​கை​யு​ட​னும் அணுக வேண்​டும் என வட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை துவங்​கிய வேலை​வாய்ப்பு முகா​மில் மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் கனி​மொழி கேட்​டுக்​கொண்​டார்.​ ​

கட​லூர் மாவட்​டத் திமுக சார்​பில் படித்த இளை​ஞர்​க​ளுக்​கான வேலை​வாய்ப்பு முகாம் வட​லூர் வள்​ள​லார் குரு​கு​லம் மேல்​நி​லைப் பள்​ளி​யில் வெள்​ளிக்​கி​ழமை தொடங்​கி​யது. 3 நாள்​கள் நடை​பெ​ற​வுள்ள இந்த முகாமை மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் கனி​மொழி வெள்​ளிக்​கி​ழமை தொடங்​கி​வைத்​துப் பேசி​யது:​ இந்த முகாமை நடத்த முயன்​ற​போ​தெல்​லாம் அடாத பெய்த மழை​யால 3 முறை ஒத்​தி​வைக்​கப்​பட்​டது.​ ​ பந்​தல் போடவே பெரும் போராட்​டம் என்​றா​கி​விட்​டது. இருப்​பி​னும் விடா​மல் இந்த வேலை​வாய்ப்பு முகாமை நடத்​தியே தீர​வே​ண​டும் என்ற தீரத்​து​டன் செயல்​பட்டு இன்று ஒரு​வ​ழி​யாக முகாம் தொடங்​கி​விட்​டது.​ ​ கட​லூர் மாவட்​டத்​தில் 16 இடங்​க​ளில் இருந்து விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன. இதன்​மூ​லம் 54 ஆயி​ரம் பேர் இந்த வேலை​வாய்ப்பு முகா​முக்கு பதி​வு​செய்​துள்​ள​னர். வெள்​ளிக்​கி​ழமை 15 ஆயி​ரம் பட்​ட​தா​ரி​கள் முகா​மில் பங்​கேற்​றுள்​ள​னர்.​ ​ நேர்​மு​கத் தேர்​வில் பங்​கேற்​கக் கூடி​ய​வர்​கள் தைரி​யத்​து​டன்,​ தெளி​வாக பேசுங்​கள். ஒரு​வ​ருக்கு 5 வாய்ப்​பு​கள் வழங்​கப்​ப​டு​கின்​றன. அறி​மு​க​மான நிறு​வ​னத்தை மட்​டுமே தேர்ந்​தெ​டுக்​கா​தீர்​கள். பரீட்​ச​யம் இல்​லாத நிறு​வ​ன​மாக இருந்​தா​லும் அங்கே அணுகி உங்​க​ளது திற​மைக்​கேற்ப வேலையை பெற்​றுக்​கொள்​ளுங்​கள். இதன் மூலம் உங்​க​ளது வாழ்க்​கைக்​கை​யைத் தொடங்​குங்​கள் என்​றார் கனி​மொழி.​ விழா​விற்​குத் தலை​மை​வ​கித்த அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர்​செல்​வம் பேசு​கை​யில்,​ மிகப்​பெ​ரிய அள​வில் நடை​பெ​றும் இந்த முகாமை இங்கு நடத்த தூணாக நின்ற கட்​சி​யி​ன​ருக்கு தனது பாராட்​டு​களை தெரி​வித்​துக் கொள்​வ​தா​கக் கூறி​னார்.​ விழா​வில் அமைச்​சர் தங்​கம் தென்​ன​ரசு,​ ஓபி​ஆர் கல்வி நிறு​வ​னங்​க​ளின் தாளா​ளர் செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்​ ஒருங்​கி​ணைப்​பா​ளர் போஸ்கோ,​ முகா​மில் பங்​கேற்க வந்​துள்ள ஊன​முற்​றோர்,​ கர்ப்​பிணி மற்​றும் குழந்​தை​யு​டன் வந்​தி​ருக்​கும் பெண்​க​ளுக்கு நேர்​மு​கத் தேர்வை அணுக முன்​னு​ரிமை அளிக்​கப்​ப​டும் என அறி​வித்​தார்.​ இந்த முகாமை முன்​னிட்டு வட​லூர் நக​ரமே தைப்​பூச தினம் போல் காட்​சி​ய​ளிக்​கி​றது.

Read more »

ஆலைக் கழி​வு​க​ளால் விளை நிலங்​கள் பாதிப்பு

கட ​லூர், ​நவ. 20:​

சர்க்​கரை ஆலைக் கழி​வு​க​ளால் விளை நிலங்​கள் பாதிக்​கப்​பட்​டது குறித்து தகுந்த நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்
வெள்​ளிக்​கி​ழமை தெரி​வித்​தார். ​​ ​
கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலை​மை​யில் நடந்​தது. நெல்​லிக்​குப்​பம் சர்க்​கரை ஆலைக் கழி​வு​க​ளால் 100 ஏக்​கர் விளை நிலங்​கள் பாதிக்​கப்​பட்டு இருப்​ப​தாக,​ மாவட்ட விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்​கச் செய​லா​ளர் ரவீந்​தி​ரன் உள்​ளிட்ட விவ​சா​யி​கள் புகார் தெரி​வித்​த​னர். அதற்​குப் பதில் அளித்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​யது:​ ​​ ​ விளை நிலங்​களை மாசுக் கட்​டுப்​பாடு வாரிய அலு​வ​லர்​கள் பார்​வை​யிட்​ட​னர். பாதிப்பு இரு வகை​யில் ஏற்​பட்டு இருக்​க​லாம். ஆலைக் கழி​வு​க​ளும் வெளி​யே​று​கின்​றன. நெல்​லிக்​குப்​பம் நக​ராட்​சிக் கழி​வு​க​ளும் அப்​ப​கு​தி​யில் வெளி​யே​று​கின்​றன. சர்க்​கரை ஆலைக் கழி​வு​க​ளைப் போல் நக​ராட்​சிக் கழி​வு​க​ளும் மோச​மா​னவை. ​ சல​வைத் தூள்​க​ளில் இப்​போ​தெல்​லாம் மிக மோச​மான ரசா​ய​னங்​கள் கலக்​கப்​ப​டு​கின்​றன. அத​னால்​தான் அழுக்கு படிந்த துணி​களை பிரஷ் வைத்​துத் தேய்க்க வேண்​டாம் என்​றெல்​லாம் விளம்​ப​ரப்​ப​டுத்த தொடங்​கி​விட்​ட​னர். ​​ ​ எனவே ஆலைக் கழி​வு​கள்,​ நக​ராட்​சிக் கழி​வு​கள்,​ வயல்​க​ளில் தேங்கி உள்ள கழி​வு​கள்,​ நிலத்​தடி நீர் போன்​ற​வற்றை ஆய்வு செய்ய மாசுக் கட்​டுப்​பாடு வாரி​யத்​துக்கு உத்​த​ர​விட்டு இருக்​கி​றேன். இப்​பி​ரச்​னைக்​குத் தீர்வு காண ஒருங்​கி​ணைந்த திட்​டம் வகுக்​கப்​ப​டும். சம்​பந்​தப்​பட்​ட​வர்​க​ளுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்டு நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும். என்​றார் ஆட்​சி​யர்.​ ​ ஆட்​சி​யர் மேலும் கூறி​யது:​​ சிதம்​ப​ரம் புற​வ​ழிச் சாலை​யால் விவ​சா​யத்​துக்கு ஏற்​பட்டு இருக்​கும் பாதிப்​பு​கள் குறித்து மத்​திய அர​சின் சாலைப் பிரிவு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். இதற்​கா​கத் தனித் திட்​டம் தயா​ரித்து நிறை​வேற்ற வேண்​டும். சிதம்​ப​ரம் நக​ராட்​சிக் கழி​வு​கள் கான்​சா​கிப் பாசன வாய்க்​கா​லில் கலப்​ப​தைத் தடுக்க,​ சிதம்​ப​ரம் நக​ராட்சி தனி சுத்​தி​க​ரிப்பு நிலை​யம் அமைக்க வேண்​டும். ​​ வெள்​ளப் பாதிப்​பு​க​ளுக்கு நிரந்​தத் தீர்வு காணப்​ப​டும். கிரா​மப் புறங்​க​ளில் ஏரா​ள​மான களங்​கள் காணப்​ப​டு​கின்​றன. தனி​யார் கள​மாக இருந்​தா​லும்,​ அவற்றை மேம்​ப​டுத்த நமக்​கு​நாமே திட்​டத்​தில் நிதி வழங்​கத் தயா​ராக இருக்​கி​றேன் என்​றார் ஆட்​சி​யர்.

Read more »

என்​எல்சி தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்பு சார்​பில் நிர்​வா​கத்​தி​டம் ஸ்டி​ரைக் நோட்​டீஸ்

நெய்வேலி, நவ. 20:​

என்​எல்சி தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்பு சார்​பில் நிர்​வா​கத்​தி​டம்
வெள்​ளிக்​கி​ழமை ஸ்டி​ரைக் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது.​ ​

என்​எல்சி தொழி​லா​ளர்​க​ளுக்​கான புதிய போனஸ் மற்​றும் ஊக்க ஊதி​யம்,​ தொழி​லா​ளர்​க​ளுக்கு எதி​ரான நட​வ​டிக்​கையை கைவிட வேண்​டும் என்று வலி​யு​றுத்தி தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்பு சார்​பில் தொடர் போராட்ட நட​வ​டிக்கை ​ அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ ​ அதன்​படி வெள்​ளிக்​கி​ழமை தொழி​லா​ளர்​கள் ஊர்​வ​ல​மா​கச் சென்று நிர்​வா​கத்​தி​டம் ஸ்டி​ரைக் நோட்​டீஸ் வழங்​கு​வது என முடி​வு​செய்​யப்​பட்​டது.​ ​ அதற்​கான ஊர்​வ​லம் அம்​பேத்​கர் சிலை​ய​ருகே தொடங்​கி​யது. இந்த ஊர்​வ​லத்​துக்கு எச்​எம்​எஸ் சங்​கத் தலை​வர் சுகு​மார் தலைமை வகித்​தார். சிஐ​டியு சங்க தலை​வர் குப்​பு​சாமி ஊர்​வ​லத்​தைத் தொடங்​கி​வைத்​தார். ஊர்​வ​லத்​தில் 2 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட தொழி​லா​ளர்​கள் கலந்​து​கொண்​ட​னர். ஊர்​வ​லம் என்​எல்சி தலைமை அலு​வ​ல​கத்​தில் முடி​வ​டைந்​த​தை​ய​டுத்து,​ தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்​பைச் சேர்ந்த நிர்​வா​கி​கள்,​ நிறு​வன தலைமை அலு​வ​ல​கத்​தில் உள்ள நிர்​வா​கத்​துறை அதி​கா​ரியை சந்​தித்து ஸ்டி​ரைக் நோட்​டீஸ் வழங்​கி​னர்.​ ​ இதைத் தொடர்ந்து நவம்​பர் 24-ம் தேதி நெய்வேலி நக​ரின் முக்​கி​யப் பகு​தி​க​ளில் தெரு​மு​னைப் பிர​சா​ரம் செய்​ய​வி​ருப்​ப​தாக எச்​எம்​எஸ் சங்​கத் தலை​வர் சுகு​மார் தெரி​வித்​தார்.

Read more »

ரூ.35 லட்சம் பொருள்கள் பறிமுதல்: 6 பேர் கைது

சிதம் ​ப​ரம்,​ நவ. 20:​

தமிழ்நாட்டில் வழிப்பறி மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ன. ​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த பரங்​கிப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் திரு​டு​போன பொருள்​களை உரி​ய​வர்​க​ளி​டம் ஒப்​ப​டைக்​கும் நிகழ்ச்சி வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது. இதில் விழுப்​பு​ரம் சரக டிஐஜி மாசா​ன​முத்து,​ கட​லூர் எஸ்.பி. அஸ்​வின் கோட்​னீஷ் ஆகி​யோர் உரி​ய​வர்​க​ளி​டம் பொருள்​களை ஒப்​ப​டைத்​த​னர். இந்​நி​கழ்ச்​சி​யில் சிதம்​ப​ரம் டிஎஸ்பி மா.மூவேந்​தன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​ ​ இது​கு​றித்து டிஐஜி மாசா​ன​முத்து நிரு​பர்​க​ளி​டையே தெரி​வித்​தது:​ கட​லூர் மாவட்​டத்​தில் தொடர்ந்து நடந்து வந்த திருட்டு,​ கொள்ளை,​ வாக​னத் திருட்டு ஆகிய குற்​றங்​களை கண்​டு​பி​டிக்க சிதம்​ப​ரம் டிஎஸ்பி மா.மூவேந்​தன் தலை​மை​யின் கீழ் பரங்​கிப்​பேட்டை காவல் நிலைய ஆய்​வா​ளர் புக​ழேந்தி மற்​றும் டெல்டா பிரிவு தனிப்​படை சப்-​இன்ஸ்​பெக்​டர் அமீர் ஆகி​யோர் கொண்ட தனிப்​படை போலீ​ஸôர் ஈடு​ப​டுத்​தப்​பட்​டுள்​ள​னர்.​ ​ இந்​நி​லை​யில் சிதம்​ப​ரத்தை அடுத்த பி.முட்​லூர் மெயின்​ரோட்​டில் தனிப்​படை போலீ​ஸôர் வியா​ழக்​கி​ழமை வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டி​ருந்​த​னர். அப்​போது சிதம்​ப​ரம் நோக்கி வந்த காரை நிறுத்தி அதில் வந்த வட​லூ​ரைச் சேர்ந்த சிங்​கா​ர​வேலு ​(34), கும்​ப​கோ​ணம் மேல​கா​வே​ரி​யைச் சேர்ந்த சகா​பு​தீன் ​(39) ஆகி​யோரை சந்​தே​கத்​தின்​பே​ரில் கைது செய்து விசா​ரித்​த​தில் பல்​வேறு இடங்​க​ளில் வீடு புகுந்து திரு​டி​யது தெரி​ய​வந்​தது. மேலும் அவர்​கள் அளித்த தகவ​லின்​பே​ரில் அவ​ரது கூட்​டா​ளி​கள் கட​லூ​ரைச் சேர்ந்த அருள்​பாண்​டி​யன் ​(21), காட்​டு​மன்​னார்​கோ​வில் தெம்​மூ​ரைச் சேர்ந்த ஜெய்​சங்​கர் ​(39), நெய்வேலி வடக்​குத்​தைச் சேர்ந்த ரமேஷ் ​(23), மதுரை கிடா​ரி​கு​ளத்​தைச் சேர்ந்த பிர​பா​க​ரன் ​(31) ஆகி​யோர் கைது செய்​யப்​பட்​ட​னர். ​ ​ இக்​கும்ப​லின் தலை​வ​னாக செயல்​பட்ட கேரள மாநி​லம் திரு​வ​னந்​த​பு​ரத்​தைச் சேர்ந்த கணேஷ்​கு​மார் உளுந்​தூர்​பேட்​டை​யில் டிப்​பர் லாரி திரு​டப்​பட்ட வழக்​கில் கட​லூர் மத்​திய சிறைச்​சா​லை​யில் உள்​ளார். பல்​வேறு மாவட்​டங்​க​ளைச் சேர்ந்த மேற்​கண்ட 9 பேர் கொண்ட கும்​பல் கட​லூர் மத்​திய சிறைச்​சா​லை​யில் இருந்த போது ஒன்று சேர்ந்து தமி​ழ​கத்​தில் கட​லூர்,​ விழுப்​பு​ரம்,​ திருச்சி,​ நாகை மாவட்​டங்​க​ளில் பல்​வேறு திருட்டு சம்​ப​வங்​க​ளில் ஈடு​பட்​டது விசா​ர​ணை​யில் தெரி​ய​வந்​தது. ​ பின்​னர் அவர்​க​ளி​ட​மி​ருந்து திருச்சி,​ தஞ்சை,​ நாகை,​ விழுப்​பு​ரம்,​ கட​லூர் ஆகிய மாவட்​டங்​க​ளில் பல்​வேறு இடங்​க​ளில் திரு​டிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.35 லட்சம்.

Read more »

வேன்​க​ளில் சிக்​கித் தவிக்​கும் சிறார்​கள்

நெய்வேலி, ​ நவ. 19:

வெகு தொலை​வில் இருந்து நெய்​வே​லி​யில் உள்ள பள்​ளி​க​ளுக்கு வேன் மூலம் வரும் இளம் சிறார்​கள் சொல்லி மாளாத் துய​ரத்​துக்கு ஆளா​கின்​ற​னர்.​ கட​லூர் மாவட்​டத்​தில் நெய்​வே​லி​யில் உள்ள சில பள்​ளி​கள் சிறந்து விளங்​கு​வ​தால் அப்​பள்​ளி​க​ளில் நெய்​வே​லி​யைச் சுற்​றி​யுள்ள ஊர்​க​ளில் இருந்து ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ,​மாண​வி​யர் படித்​து​வ​ரு​கின்​ற​னர். இவர்​கள் பலர் தனி​யார் வேன் மூலமே வரு​வ​தால் 35-க்கும் மேற்​பட்ட வேன்​கள் தினந்​தோ​றும் நெய்வேலி வந்து செல்​கின்​றன. மேலும் பல மாண​வர்​கள் பஸ்​கள் மூலம் வந்து செல்​கின்​ற​னர்.​ இந்த வேன்​க​ளில் குறைந்​த​பட்​சம் 25 மாண​வர்​கள் முதல் 30 மாண​வர்​கள் வரை திணிக்​கப்​பட்டு அழைத்து வரப்​ப​டு​கின்​ற​னர். இவர்​க​ளின் புத்​த​கப் பைகள் வேனில் இட​மில்​லா​மல் சரக்கு மூட்​டை​கள் போல் வேனின் கூரை​யில் அடுக்கி வைக்​கப்​பட்டு கொண்டு வரப்​ப​டு​கின்​றன. பள்ளி வந்​த​வு​டன் மாண​வர்​கள் அவ​சர அவ​ச​ர​மாக இறக்​கப்​பட்டு,​அவர்​க​ளின் புத்​த​கப் பைக​ளும் தூக்கி வீசப்​ப​டு​வது வாடிக்​கை​யாகி வரு​கி​றது.​ மாண​வர்​கள் வீட்டி​லி​ருந்து கிளம்​பும் போது அவ​ச​ர​மாக புறப்​பட்டு,​ வேன்​க​ளில் போதிய இட​மில்​லா​மல்,​ஒரு​வர் மீது ஒரு​வர் அமர்ந்​து​கொண்டு பள்​ளிக்கு வரு​கின்​ற​னர். இத​னால் அவர்​க​ளுக்கு கவ​னச் சித​றல் ஏற்​ப​டு​கி​றது.​ ​ பெற்​றோர்​க​ளும் பிள்​ளை​களை கிளப்​பி​விட்​டால் போதும் என்ற மனோ​பா​வத்​து​டன் செயல்​ப​டு​வ​தால் பிள்​ளை​கள் பள்​ளிக்கு குறித்த நேரத்​தில் சென்​றார்​களா என்​ப​தைக் கூட அவர்​கள் உறுதி செய்து கொள்​வது கிடை​யாது​ ​ மற்​றொரு பிரச்​னை​யை​யும் பெற்​றோர்​கள் கவ​னத்​தில் கொள்​ளா​தது பெரும் ஆச்​ச​ரி​யம் அளிக்​கக்​கூ​டி​ய​தாக உள்​ளது. தங்​கள் பிள்​ளை​களை ஏற்​றிச் செல்​லும் வாக​னத்​துக்கு முறை​யான ஓட்​டு​நர் இருக்​கி​றாரா,​ வேனுக்​கு​ரிய ஆவ​ணங்​கள் உள்​ளதா என்​ப​தைப் பற்​றி​யெல்​லாம் விசா​ரிக்​கா​ம​லேயே பிள்​ளை​களை அனுப்​பி​வி​டு​கின்​ற​னர்.​ வேன் ஓட்​டு​ந​ரும்,​ தனது வரு​மா​னத்தை மன​தில் கொண்டு,​ கணக்​கி​ல​டங்கா மாணவ,​ மாண​வி​யர்​களை ஏற்​றிக்​கொண்டு,​ வேக​மாக வேனை ஓட்​டிச் செல்​வ​தன் விளைவு,​ விபத்​தில் முடி​வ​டை​கி​றது. அண்​மை​யில் விருத்​தா​ச​லத்​தில் இருந்து மாண​வர்​களை ஏற்​றி​வந்த வேன் மந்​தா​ரக்​குப்​பம் அருகே கவிழ்ந்​த​தில் 20-க்கும் மேற்​பட்ட மாண​வர்​கள் காய​ம​டைந்​த​னர்.​ ​ மாண​வர்​கள் குறித்த நேரத்​தில் வீட்டி​லி​ருந்து கிளம்​பி​யும்,​ வேன் ஓட்​டு​நர்​கள் தாம​தத்​தால்,​ குறித்த நேரத்​திற்கு பள்​ளிக்கு வந்து சேர​மு​டி​யா​மல் ​ பள்ளி நிர்​வா​கத்​தின் தண்​ட​னைக்கு ஆளாக நேரி​டு​கி​றது.​ தங்​கள் பிள்​ளை​கள் சிறந்த பள்​ளிக்கு சென்று வந்​து​விட்​டால் போதும். அவன் தானா​கவே படித்​து​வி​டு​வான் என்ற மனோ​பா​வம் பெரும்​பா​லான பெற்​றோர்​க​ளி​டம் நில​வு​கி​றது. இந்த விப​ரீத மனோ​பா​வம் பிள்​ளை​க​ளின் எதிர்​கா​லத்தை பாழாக்​கி​வி​டும் என்​பதை ஏனோ பெற்​றோர்​கள் உண​ரு​வ​தில்லை.​ பெற்​றோர்​கள் முடிந்​த​வ​ரை​யில் சிறார்​களை தங்​கள் குடி​யி​ருப்​பு​க​ளுக்கு அரு​கா​மை​யில் உள்ள கல்வி நிறு​வ​னங்​க​ளில் பயி​லச் செய்து அவர்​கள் ஓர​ளவு வளந்த பின்​னர் அவர்​களை சற்று தூரத்​தில் உள்ள பள்​ளி​க​ளுக்கு அனுப்​பு​வது மாண​வர்​க​ளின் எதிர்​கா​லத்​துக்கு சிறந்​த​தாக அமை​யும்.
சிந்​திப்​பார்​களா பெற்​றோர்​கள்.

Read more »

தில்லி ஆர்​ப்பாட்​டத்​தில் ​ தமி​ழக கரும்பு விவ​சா​யி​கள் பங்​கேற்பு

​கட​லூர்,​ நவ. 19:

புது​தில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்ற கரும்பு விவ​சா​யி​கள் சங்க ​ ஆர்ப்​பாட்​டத்​தில் தமி​ழக விவ​சா​யி​கள் பங்​கேற்​ற​னர்.​ இத் தக​வலை இந்​திய விவ​சா​யி​கள் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பின் தமிழ்​மா​நில பொதுச் செய​லா​ளர் விருத்​த​கிரி தெரி​வித்​தார்.​ கரும்​புக்கு விலை நிர்​ண​யம் செய்ய,​ புதிய முறையை மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. கரும்​புக்​கான நியா​ய​மான சன்​மான விலை என்ற பெய​ரில் அவ​ச​ரச் சட்​டத்தை மத்​திய அரசு அக்​டோ​பர் இறு​தி​யில் பிறப்​பித்து இருக்​கி​றது. இந்த அவ​ச​ரச் சட்​டத்​துக்கு நாடு முழு​வ​தும் உள்ள கரும்பு விவ​சா​யி​கள் பலத்த எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​ற​னர். ​இந்த அவ​ச​ரச் சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​விக்​கும் வகை​யில் விவ​சாய சங்​கங்​கள் சார்​பிóல புது​தில்​லி​யில் புதன்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடந்​தது. ​​ இந்​திய விவ​சா​யச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்பு சார்​பில் அதன் தலை​வர் பச​வ​ராஜ் சம்​பகே தலை​மை​யில் நடந்த இந்த ஆர்ப்​பாட்​டத்​தில்,​ இந்த அமைப்​பின் தமி​ழக பொதுச் செய​லா​ளர் விருத்​த​கிரி,​ பொரு​ளா​ளர் தணி​காச்​ச​லம்,​ புதுவை மாநி​லச் செய​லா​ளர் சோம​சுந்​த​ரம் உள்​ளிட்ட 10 பேர் கலந்து கொண்​ட​தாக விருத்​த​கிரி தெரி​வித்​தார். ​ கூட்​ட​மைப்​பின் தலை​வர் பச​வ​ராஜ் சம்​பகே,​ இது​தொ​டர்​பாக குடி​ய​ர​சுத் தலை​வர் ​ பிர​திபா பாட்​டீலை சந்​தித்து அவ​ச​ரச் சட்​டத்​தைத் திரும்​பப் பெறு​மாறு வலி​யு​றுத்​தி​ய​தா​க​வும் அவர் கூறி​னார்.

Read more »

மழை​ கட​லூர் மாவட்​டத்​தில் 127 கி.மீ. சாலை​கள் சேதம்

கட ​லூர்,​ நவ. 19:​

வட​கி​ழக்​குப் பருவ மழை​யால் கட​லூர் மாவட்​டத்​தில் 126.86 கி.மீ. சாலை​கள் சேதம் அடைந்து இருப்​ப​தாக மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தெரி​வித்​தார். ​​ ஆட்​சி​யர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ ​​

மழை கார​ண​மாக மாநில நெடுஞ்​சா​லை​கள் 50.20 கி.மீ., மாவட்​டத்​தின் முக்​கிய சாலை​கள் 17.80 கி.மீ., இத​ரச் சாலை​கள் 58.86 கி.மீ. சேதம் அடைந்​துள்​ளன. இவை ரூ. 27.75 லட்​சத்​திóல தாற்​கா​லி​க​மாக சீர​மைக்​கப்​பட்டு உள்​ளன. ​​ கட​லூர் மாவட்​டத்​தில் 3 ஆண்,​ 2 பெண்,​ 2 சிறு​வர் ஆக மொத்​தம் 7 நபர்​கள் உயி​ரி​ழந்​துள்​ள​தாக தக​வல் கிடைத்​துள்​ளது. இவர்​க​ளில் 4 நபர்​க​ளுக்கு விசா​ரணை அடிப்​ப​டை​யில் தலா ரூ. 1 லட்​சம் வழங்​கப்​பட்டு இருக்​கி​றது. மற்​ற​வர்​க​ளுக்கு,​ விசா​ரணை அடிப்​ப​டை​யி​லும்,​ காவல்​துறை அறிக்கை,​ பிரே​தப் பரி​சோ​தனை செய்​யப்​ப​ட​வில்லை என்​ப​தா​லும் மற்​றும் நிவா​ர​ணம் வேண்​டாம் என்று தெரி​வித்​த​தா​லும் வழங்​கப்​ப​ட​வில்லை. ​ ​​ 37 கால்​ந​டை​கள் இறந்​துள்​ளன. தகுதி அடிப்​டை​யில் 14 இனங்​க​ளுக்கு நிவா​ர​ணம் வழங்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்டு உள்​ளது. ​​ 473 வீடு​கள் பகு​தி​யா​க​வும்,​ 139 வீடு​கள் முழு​மை​யா​க​வும்,​ பாதிக்​கப்​பட்டு உள்​ள​தா​கத் தக​வல் கிடைத்​துள்​ளது. விசா​ரணை அடிப்​ப​டை​யில் இது​வரை 333 வீடு​க​ளுக்கு,​ நிவா​ர​ணம் வழங்​கப்​பட்​டுள்​ளது. மற்​ற​வர்​க​ளுக்கு நிவா​ர​ணம் வழங்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கி​றது. ​​ ஊராட்​சி​க​ளில் உள்ள 253 சிறு​பா​சன ஏரி​க​ளில் 76 ஏரி​கள் ​ முழு​மை​யா​க​வும்,​ 63 ஏரி​கள் 75 சத​வீ​த​மும் நிரம்பி உள்​ளன. 681 ஊராட்​சி​க​ளில் 3,045 மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்​டி​கள் குளோ​ரின் கலந்து சுத்​தம் செய்​யப்​பட்டு உள்​ளன. 436 குடி​நீர் மாதி​ரி​க​ளில் 396 மாதி​ரி​கள் குடி​நீர் வடி​கால் வாரி​யத்​தால் பரி​சோ​தனை செய்​யப்​பட்டு உள்​ளன. ​​ கட​லூர் நக​ராட்​சி​யில் பாதா​ளச் சாக்​டைத் திட்​டம் மற்​றும் மழை​யி​னால் ஏற்​பட்ட சாலைப் பாதிப்​பு​கள் போர்க்​கால அடிப்​ப​டை​யில் சீர்​செய்​யப்​பட்டு வரு​கி​றது என்​றும் செய்​திக் குறிப்பு
தெரி​விக்​கி​றது. ​

Read more »

சிதம்​ப​ரம் நக​ராட்சி ​துரித நட​வ​டிக்கை

சிதம் ​ப​ரம்,​ நவ. 19:

சமீ​பத்​தில் பெய்த கன​மழை கார​ண​மாக சிதம்​ப​ரம் நக​ரின் தாழ்​வான பகு​தி​க​ளில் மழை​நீர் தேங்​கி​யது. தேங்​கிய மழை​நீர் தற்​போது வடி​யத் தொடங்​கி​யுள்ள நிலை​யில் அப் பகு​தி​யில் வாந்​தி​பேதி,​ வயிற்​றுப்​போக்கு முத​லிய நோய்​கள் பர​வா​மல் தடுக்க சிதம்​ப​ரம் நக​ராட்சி துரித நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்டு வரு​கி​றது.​ துப்​பு​ரவு ஆய்​வா​ளர்​கள் மற்​றும் துப்​பு​ர​வுப் பணி ​ மேற்​பார்​வை​யா​ளர்​கள்,​ பாதிக்​கப்​பட்ட இடங்​க​ளில் துப்​பு​ர​வுப் பணி​யா​ளர்​களை கொண்டு பிளீச்​சிங் பவு​டர்,​ சுண்​ணாம்பு ஆகி​ய​வற்றை தூவி வரு​கின்​ற​னர். பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை ஆணை​யர் ஜான்​சன் நேரில் பார்​வை​யிட்​டுó நிவா​ர​ணப் பணி​களை மேற்​கொண்​டுள்​ளார்.​ கொசுக்​கள் அதி​க​மாகி சிக்​குன்​கு​னியா,​ மலே​ரியா,​ ​யானைக்​கால் போன்ற நோய்​களை தடுக்க பாக்​கிங் மெஷின் மூலம் புகை மருந்து அடிக்​கப்​பட்டு வரு​கி​றது. நக​ரில் 3 கைமெ​ஷின்​கள்,​ 1 பெரிய மெஷின் மூல​மும் புகை மருந்து அனைத்து குடி​யி​ருப்பு பகு​தி​க​ளி​லும் அடிக்​கப்​பட்டு வரு​கி​றது. குடி​நீரை காய்ச்சி பயன்​ப​டுத்​து​மாறு பொது​மக்​க​ளுக்கு ஆணை​யர் ஜான்​சன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். ​

Read more »

மழை பாதிப்பு குறித்து ஆய்வு

கட​லூர்,​ நவ. 19:​

கட​லூர் மாவட்​டத்​தில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கி​றது. ​​ ​ வட​கி​ழக்​குப் பருவ மழை தொடங்​கி​ய​தைத் தொடர்ந்து கட​லூர் மாவட்​டத்​தில் அக்​டோ​பர் 28-ம் தேதி முதல் 15 நாள்​கள் கன மழை பெய்​தது. இத​னால் பெரும்​பா​லான ஏரி​கள் குளங்​கள் நிரம்பி விட்​டன. அணை​கள்,​ பெரிய ஏரி​கள் நிரம்பி வழிந்து ஆயி​ரக்​க​ணக்​கான கன​அடி நீர் கட​லுக்கு வீணா​கச் சென்று கொண்டு இருக்​கி​றது. அதே நேரத்​தில் முறை​யான வடி​கால் வசதி இல்​லா​த​தால் மழை​நீர் விளை நிலங்​க​ளுக்​குள் புகுந்து,​ வழக்​கம்​போல் இந்த ஆண்​டும் சேதங்​க​ளை​யும் விளை​வித்து இருப்​ப​தாக விவ​சா​யி​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​ குடிசை வீடு​க​ளுக்​குள் மழை​நீர் புகுந்து ஏழை எளிய மக்​கள் பல​ரும் பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர். வீடு​கள் பல இடிந்து விழுந்து உள்​ளன. சாலை​கள் பெரி​தும் சேதம் அடைந்து உள்​ளன. மழை பாதிப்​பு​க​ளுக்கு நிவா​ர​ணம் வழங்​கு​வ​தற்​கான ஆய்​வுப் பணி மாவட்ட நிர்​வா​கத்​தால் முடுக்கி விடப்​பட்டு உள்​ளது. மழை​யால் உ.யிரி​ழந்​த​வர்​க​ளின் குடும்​பங்​க​ளுக்கு ரூ.1 லட்​சம் நிவா​ர​ணத் தொகை வழங்​கப்​பட இருக்​கி​றது. ​​ ​ மழை​யி​னால் 3 பேர் இறந்​துள்​ள​னர். 23 கால்​ந​டை​கள் இறந்​துள்​ளன. 675 வீடு​கள் சேதம் அடைந்து உள்​ளன. பயிர்​கள் சேதம் தண்​ணீர் வடிந்த பின்​னர்​தான் தெரி​ய​வ​ரும். ​​ ​ குறிஞ்​சிப்​பா​டியை அடுத்த பெரு​மாள் ஏரி பாச​னப் பகு​தி​க​ளில் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​களை அலு​வ​லர்​கள் செவ்​வாய்​கி​ழமை ஆய்வு செய்​த​னர். மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ மாவட்ட ஆட்​சி​ய​ரின் நேர்​முக உத​வி​யா​ளர் ​(விவ​சா​யம்)​ மணி,​ வேளாண் உதவி இயக்​கு​நர் அசோ​கன் மற்​றும் வரு​வாய்த்​துறை அலு​வ​லர்​கள் இந்த ஆய்வை மேற்​கொண்​ட​னர்.​ ​ மழை​யால் சேதம் அடைந்த சாலை​கள் குறித்து நெடுஞ்​சா​லைத் துறை அலு​வ​லர்​கள் கணக்​கெ​டுப்பு நடத்தி வரு​கி​றார்​கள்.

Read more »

42வது நூலக வார விழா

கட ​லூர்,​ நவ.18: ​

கட​லூர் மாவட்ட மைய நூல​கத்​தில்,​ 42-வது நூலக வார விழா​வை​யொட்டி நடந்த புத்​த​கக் கண்​காட்​சியை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் திங்​கள்​கி​ழமை தொடங்கி வைத்​தார். ​​ ​ விழா​வில் நூல்​களை அறி​மு​கம் செய்​து​வைத்து பேரா​சி​ரி​யர் விஷ்​ணு​தா​சன்,​ புல​வர் ராம​லிங்​கம் ஆகி​யோர் பேசி​னர். முதல் நிலை நூல​கர் பச்​சை​யப்​பன்,​ ​ நூலக வாச​கர் வட்​டத் தலை​வர் தங்க.சுதர்​ச​னம் ஆகி​யோர் பேசி​னர். மாவட்ட நூலக அலு​வ​லர் அசோ​கன் வர​வேற்​றார். ​​ கட​லூர் மாவட்ட மைய நூல​கம் பற்றி தெரி​விக்​கப்​பட்ட சில தக​வல்​கள்:​ ​​ கட​லூர் மாவட்ட மைய நூல​கத்​தில் குழந்​தை​கள் பிரிவு,​ குறிப்​பு​தவி வழங்​கும் பிரிவு,​ குடி​மைப் பணி மையம்,​ நாளி​தழ்,​ சஞ்​சிகை படிப்​ப​கப் பிரிவு,​ நூல்​கள் வழங்​கும் பிரிவு,​ ​ ​ இணைய தள வச​திப் பிரிவு ​(குளிர்​சா​தன வச​தி​யு​டன்)​,​ நகல் எடுக்​கும் கரு​வி​யு​டன் கூடிய பகுதி என 8 பிரி​வு​கள் உள்​ளன. ​ ​​ மொத்த நூல்​கள் இருப்பு 1,28,430. குழந்​தை​கள் பிரிவு நூல்​கள் 7,804. மொத்த உறுப்​பி​னர்​கள் 17,773. புர​வ​லர்​கள் 121. ​2008-09ல் வாச​கர்​கள் வருகை 80,402. வழங்​கப்​பட்ட புத்​த​கங்​கள் 38,630. குறிப்​பு​தவி நூல்​கள் 59,154. ​​ மொத்த கிளை நூல​கங்​கள் 39. ஊரக நூல​கங்​கள் 16. பகுதி நேர நூல​கங்​கள் 8. ​ இணைய தள வச​தி​யு​ட​சன் கூடிய நூல​கங்​கள் மாவட்ட மைய நூல​கம்,​ கிளை நூல​கங்​கள் ​ சிதம்​ப​ரம்,​ விருத்​தா​ச​லம்,​ சேத்​தி​யாத்​தோப்பு,​ பண்​ருட்டி,​ புவ​ன​கிரி,​ காட்​டு​மன்​னார்​கோ​யில்,​ கட​லூர் முது​ந​கர்,​ கங்​கை​கொண்​டான்.

Read more »

காப்​பீடு திட்டத்தில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி

பண் ​ருட்டி,​ நவ. 19:

பண்​ருட்​டி​யில்,​ உயிர் காக்​கும் உயர் சிகிச்சை காப்​பீட்​டுத் திட்​டத்​திற்​கான புகைப்​ப​டம் எடுக்​கும் பணியை ​ நகர்​மன்​றத் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன் வியா​ழக்​கி​ழமை தொடங்கி வைத்​தார்.​ பண்​ருட்டி நகர மக்​களை காப்​பீடு திட்​டத்​தில் சேர்ப்​ப​தற்​கான இப் பணி அரசு மேல்​நி​லைப் பள்​ளி​யில் தொடங்​கி​யது. தொடக்க விழா​வில் வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​ சமுக பாது​காப்பு வட்​டாட்​சி​யர் புவ​னேஸ்​வரி,​ நில​வரி தனி வட்​டாட்​சி​யர் பி.பன்​னீர்​செல்​வம்,​ நக​ராட்சி ஆணை​யர் கே.உமா​ம​கேஸ்​வரி,​ திமுக நக​ரச் செய​லர் கே.ராஜேந்​தி​ரன்,​ கவுன்​சி​லர் தட்​சி​ணா​மூர்த்தி உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

போக்​கு​வ​ரத்து ​ஊழி​யர்​கள் போராட்டம்

​ கட​லூர்,​ நவ. 19:

கட​லூர் மாவட்ட வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்​துத் துறை பணி​யா​ளர்​கள் செவ்​வாய்க்​கி​ழமை கறுப்​புச் சின்​னம் அணிந்து அலு​வ​ல​கங்​க​ளுக்கு வந்து இருந்​த​னர். ​​ வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்​துறை அலு​வ​ல​கங்​க​ளில் காலி​யாக இருக்​கும் பணி இடங்​களை நிரப்ப வேண்​டும்,​ தொழில் நுட்​பப் பிரி​வி​னர் மற்​றும் தொழில்​நுட்​பப் பிரிவு அல்​லாத அமைச்​சுப் பணி​யா​ளர்​க​ளி​டையே பார​பட்​ச​மாக நடந்து கொள்​ளும் போக்​கைக் கைவிட வேண்​டும் என்ற கோரிக்​கைளை வலி​யு​றுத்தி,​ தமிழ்​நாடு போக்​கு​வ​ரத்​துப் பணி​யா​ளர்​கள் ஒன்​றி​யத்​தைச் சேர்ந்த ஊழி​யர்​கள் கறுப்​புச் சின்​னம் அணிந்து வேலைக்கு வந்​தி​ருந்​த​னர். டிசம்​பர் 2-ம் தேதி மாநி​லம் முழு​வ​தும் அனைத்து ​ஊழி​யர்​க​ளும் ஒட்​டு​மொத்த சிறு​வி​டுப்பு எடுக்​கப் போவ​தா​க​வும் அறி​வித்​த​னர். ​ ​​ இது​கு​றித்து அர​சுப் பணி​யா​ளர் சங்க மாநி​லத் தலை​வர் கு.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​​ தமிழ்​நாடு அரசு போக்​கு​வ​ரத்​துத் துறை​யில் 900 பணி​யி​டங்​கள் காலி​யாக உள்​ளன. 300 உத​வி​யா​ளர் பணி​யி​டங்​க​ளில் நிரப்​பப் படா​மல் உள்​ளன. ​​ ஒழுங்கு நட​வ​டிக்கை,​ பத​வி​உ​யர்வு,​ தளர்​வாணை வழங்​கு​தல் போன்​ற​வற்​றில் தொழில்​நுட்​பப் பணி​யா​ளர்​க​ளுக்​கும் அமைச்​சுப் பணி​யா​ளர்​க​ளுக்​கும் இடையே பார​பட்​சம் காட்​டப்​ப​டு​கி​றது. பணி சீர​மைப்​புக்​காக இத்​து​றை​யில் ஏற்​ப​டுத்​தப்​பட்ட துணைப் போக்​கு​வ​ரத்து நிர்​வாக ஆணை​யத்​தின் அதி​கா​ரி​க​ளுக்கு அதி​கா​ரம் வழங்​கப்​ப​டா​மல் உள்​ளது.​ 10 அம்​சக் கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி போராட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது என்றார்.

Read more »

முதலை கடித்து பெண் சாவு

சிதம் ​ப​ரம்,​ நவ. 19:​

சிதம்​ப​ரம் அருகே வியா​ழக்​கி​ழமை ஆற்​றின் ஓரம் புல் அறுத்​துக் கொண்​டி​ருந்த பெண் முதலை கடித்து இறந்​தார்.​ ​ இந்​ நி​லை​யில் சிதம்​ப​ரத்தை அடுத்த வேளக்​குடி மேல்​ஆறு வாய்க்​கால் அருகே சண்​மு​கம் என்​ப​வ​ரது மனைவி சாவித்​திரி வியா​ழக்​கி​ழமை ஆடு​களை மேய்த்து கொண்டு ஆற்​றின் ஓரம் புல் அறுத்​துக் கொண்​டி​ருந்​தார். அப்​போது ஆற்​றில் இருந்த முதலை அப்​பெண்ணை கவ்வி ஆற்​றுக்​குள் இழுத்​துச் சென்று கடித்​துக் குத​றி​யது. அருகே ஆடு மேய்த்​த​வர்​கள் கம்பு,​ கல்​லால் தாக்​கி​ய​தில் முதலை அப் பெண்ணை விட்​டு​விட்டு தப்​பி​யது. அங்​குள்​ள​வர்​கள் அப்​பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்​த​போது அவர் இறந்​தது தெரி​ய​வந்​தது.

Read more »

இன்று விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம்

கட ​லூர்,​ நவ.19:​

கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெ​றும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்​தார். ​​ ஆட்​சி​யர் செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ ​​ 20-ம் தேதி வெள்​ளிக்​கி​ழமை காலை 10-30 மணிக்கு மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட வளர்ச்சி மன்​றக் கூடத்​திóல் நடை​பெ​றும். முதல் நிகழ்​வாக விருத்​தா​ச​லம் வேளாண்மை அறி​வி​யல் நிலைய விஞ்​ஞா​னி​க​ளால்,​ விவ​சா​யி​க​ளுக்கு தொழில்​நுட்ப ஆலோ​ச​னை​கள் வழங்​கப்​ப​டும். அதைத் தொடர்ந்து வேளாண் இணை இயக்​கு​ந​ரால் திட்​டப் பணி​கள் குறித்து விளக்​கம் அளிக்​கப்​ப​டும். ​​ பின்​னர் விவ​சா​யி​கள் வேளாண் சார்ந்த குறை​க​ளைத் தெரி​விக்​கா​லம். சம்​பந்​தப்​பட்ட துறை அலு​வ​லர்​கள் உரிய,​ விளக்​க​மான பதில் அளிக்​க​வும் தொடர் நட​வ​டிக்​கை​கள் எடுக்​க​வும் மாவட்ட ஆட்​சி​ய​ரால் அறி​வு​றுத்​தப்​பட்டு உள்​ளது என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

Read more »

தடை செய்​யப்​பட்ட அமைப்​பைச் சேர்ந்​த​வர் கைது

சிதம் ​ப​ரம்,​ நவ. 19: ​

சிதம்​ப​ரம் அருகே தடை செய்​யப்​பட்ட தமி​ழர் விடு​த​லைப் படை​யைச் சேர்ந்​த​வர் துப்​பாக்​கி​யு​டன் கைது செய்​யப்​பட்​டார்.​ கட​லூர் மாவட்​டத்​தில் முக்​கி​யக் குற்​றங்​களை கண்​டு​பி​டிக்​க​வும்,​ தீவி​ர​வா​தி​கள் நட​மாட்​டத்தை கண்​கா​ணிக்​க​வும் மாவட்ட காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஷ்,​ ​ சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர் தலை​மை​யிóல் தனிப்​படை அமைத்து கண்​கா​ணித்து வந்​தார்.​ இந்​நி​லை​யில் சிதம்​ப​ரத்தை அடுத்த திரு​முட்​டம் போலீஸ் சர​கம் கொக்​க​ர​சன்​பேட்டை கிரா​மத்​தில் துப்​பாக்கி மற்​றும் வீச்​ச​ரி​வா​ளு​டன் தங்​கி​யி​ருந்த தியா​க​ரா​ஜன் என்​ப​வரை சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர் தலை​மை​யி​லான தனிப்​ப​டை​யி​னர் வியா​ழக்​கி​ழமை பிடித்​த​னர்.​ தியா​க​ரா​ஜன் கொடுத்த தகவ​லின் பேரில் மேலும் 3 பேரை கட​லூர் மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​க​ளில் தனிப்​படை போலீ​ஸôர் பிடித்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர். பிடி​பட்​ட​வர்​கள் அனை​வ​ரும் தடை செய்​யப்​பட்ட தமி​ழர் விடு​த​லைப்​படை இயக்​கத்​தைச் சேர்ந்​த​வர்​கள் என போலீஸ் தரப்​பில் கூறப்​ப​டு​கி​றது. இவர்​கள் கட​லூர் மாவட்​டத்​தில் பல்​வேறு குற்​றச்​செ​யல்​க​ளில் ஈடு​பட்​டுள்​ள​தா​க​வும்,​ இதில் மேலும் சிலர் சிக்​கு​வார்​கள் என​வும் கூறப்​ப​டு​கி​றது.

Read more »

பிஎஸ்என்எல் ஊழி​யர்​கள் ​உண்​ணா​வி​ர​தம்

கட​லூர்,​ நவ.19: ​ ​

பி.எஸ்.என்.எல். ஊழி​யர்​கள் சங்​கத்​தி​னர் கட​லூ​ரில் வியா​ழக்​கி​ழமை உண​ணா​வி​ர​தம் . சென்னை சி.டி.எஸ். பகு​தி​யில் பணி​நீக்​கம் செய்​யப்​பட்ட 6 ஒப்​பந்த் தொழி​லா​ளர்​களை மீண்​டும் வேலைக்கு எடுத்​துக் கொள்ள வேண்​டும். கார்ப்​ரேட் அலு​வ​லக வழி​காட்​டுத​லின்​படி ஒப்​பந்த ஊழி​யர்​க​ளுக்கு,​ ஊதி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும்,​ ஒப்​பந்த ஊழி​யர்​க​ளின் ஊதி​யத்​தில் இருந்து இ.பி.எஃப்., இ.எஸ்.ஐ. பிடித்​தம் செய்​வதை உறுதி செய்ய வேண்​டும் என்ற கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி இந்த உண்​ணா​வி​ர​தம் நடந்​தது.​ மாவட்​டப் பொது​மே​லா​ளர் அலு​வ​ல​கம் அருகே நடந்த இந்த உண்​ணா​வி​ர​தத்​துக்கு பி.எஸ்.என்.எல். ஊழி​யர் சங்க மாவட்​டத் தலை​வர் ஐ.எம்.மதி​ய​ழ​கன் தலைமை தாங்​கி​னார். கட​லூர் நகர அனைத்​துக் குடி​யி​ருப்​போர் நலச் சங்​கக் கூட்​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் மு.மரு​தா​வா​ணன் தொடங்கி வைத்​துப் பேசி​னார்.​ பி.எஸ்.என்.எல். ஊழி​யர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் கே.டி.சம்​பந்​தம்,​ தமிழ்​நாடு தொலைத்​தொ​டர்பு ஒப்​பந்​தத் தொழி​லா​ளர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் ஏ.அண்​ணா​மலை உள்​ளிட்ட பலர் உண்​ணா​வி​ர​தத்​தில் பங்​கேற்​ற​னர்.​ கோரிக்​கை​களை விளக்கி தொழிற்​சங்க நிர்​வா​கி​கள் முத்​துக்​கு​மா​ர​சாமி,​ முத்​து​வேல்,​ ஜி.கோவிந்​த​ரா​ஜுலு,​ எஸ்.பழநி,​ பி.ராஜேந்​தி​ரன்,​ என்.முக​மது இக்​பால்,​ கே.வெங்​கட்​ர​ம​ணன் ஆகி​யோர் பேசி​னர். மாவட்ட அமைப்​புச் செய​லா​ளர் சாரங்​க​பாணி நன்றி கூறி​னார்.

Read more »

நீர் நிலை​கள் ஆக்​கி​ர​மிப்​பால் வீணா​கும் மழை நீர்

பண் ​ருட்டி,​ நவ.19:

நீர் நிலை​கள் ஆக்​கி​ர​மிப்பு கார​ணத்​தால் மழை காலத்​தில் கிடைக்​கும் மழை நீர் வீணா​வ​து​டன்,​ வயல் வெளி​யில் பாய்ந்து விவ​சா​யப் பயிர்​கள் சேதம் அடை​கின்​றன.​ ​ பண்​ருட்டி வட்​டத்​தில் அண்​மை​யில் பெய்த கன மழை​யால் பல ஆயி​ரக் கணக்​கான விவ​சாய விளை நிலங்​கள் தண்​ணீ​ரில் மூழ்கி சேதம் அடைந்​தன. நீர் நிலை ஆக்​கி​ர​மிப்பு மற்​றும் நீர் வழி ஆக்​கி​ர​மிப்​பால் மழை நீர் செல்ல வழி​யின்​றியே இச் சேதம் ஏற்​பட்​டுள்​ளது.​ பண்​ருட்டி நக​ரம் மற்​றும் பண்​ருட்டி,​ அண்​ணா​கி​ரா​மம் ஒன்​றி​யப் பகு​தி​க​ளில் 28 ஏரி​கள் உள்​ளன. இந்த ஏரி​க​ளின் மூலம் ​ 3175 ஹெக்​டர் விவ​சாய நிலங்​கள் பாசன வசதி பெறு​கின்​றன. தமி​ழ​கத்​தில் கடந்த இரு வாரங்​க​ளாக பெய்த மழை​யால் நத்​தம்,​எலந்​தம்​பட்டு,​ சேமக்​கோட்டை,​ எழு​மேடு,​அவி​ய​னூர் பைத்​தாம்​பாடி,​ கரும்​பூர்,​ உளுந்​தாம்​பட்டு,​ அக்​க​ட​வள்ளி,​ கண்​ட​ரக்​கோட்டை,​ புல​வ​னூர்,​ வீரப்​பார்,​ விசூர் உள்​ளிட்ட ​ ஊர்​க​ளில் உள்ள 15 ஏரி​கள் நிரம்பி வழி​கின்​றன. மேலும் உள்ள 13 ஏரி​க​ளில் நீர் மட்​டம் உயர்ந்து வரு​கி​றது.​ ​ ​ இவற்​றில் பெரும்​பா​லான ஏரி​கள் ஆக்​கி​ர​மிப்பு செய்​யப்​பட்டு நெல்,​ கரும்பு போன்ற பயிர்​கள் பயி​ரி​டப்​பட்​டுள்​ளன. இந்த ஆக்​கி​ர​மிப்​பால் ஏரி​யின் நீர்ப் பிடிப்பு பகுதி குறைந்து உள்​ள​து​டன்,​ ஏரி​யில் பயி​ரி​டப்​பட்ட பயிர்​களை பாது​காக்க ஏரி​யின் நீர் வெளி​யேற்​றப்​ப​டு​கி​றது. இத​னால் மழைக்​கா​லத்​தில் நீர்ப் பிடிப்பு பகு​தி​யில் மழை மற்​றும் வெள்ள நீர் தேங்​கா​மல் ஏரி​கள் குறு​கிய காலத்​தில் வற்​றி​வி​டு​கின்​றது.பண்​ருட்டி மற்​றும் அண்​ணா​கி​ராம பகு​தி​யில் உள்ள பெரும்​பா​லான ஏரி​களை உள்​ளூர் அர​சி​யல் பிர​மு​கர்​கள் ஆக்​கி​ர​மித்து வைத்​துள்​ள​னர். இவர்​கள் கட்​டுப்​பாட்​டில் உள்ள ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற அதி​கா​ரி​க​ளும் முன் வரு​வ​தில்லை. மேலும் சிலர் தங்​கள் நிலத்​தின் அருகே உள்ள ஆறு,​ ஏரி,​ குளம்,​ குட்டை கால்​வாய்,​ ஓடை ஆகி​ய​வற்றை ஆக்​கி​ர​மித்து தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்​துள்​ள​னர். இத​னால் உபரி நீர் வெளி​யேற வழி​யின்றி விவ​சாய நிலங்​க​ளில் புகுந்து சேதத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது. ​ நீர்​வள ஆதார அமைப்​பு​கள் ​(பாசன பிரிவு)​ மூலம் ஏரி,​ ஆறு,​ கால்​வாய்,​ குளம் போன்​றவை பரா​ம​ரிக்​கப்​ப​டு​கின்​றன. ​ இவற்றை பரா​ம​ரிக்க அரசு ஒதுக்​கும் நிதியை,​ நீர்​வள ஆதார அமைப்​பு​கள் முறை​யா​கப் பயன்​ப​டுத்​து​வ​தில்லை என குற்​றச்​சாட்டு எழு​கி​றது. இந்த அமைப்​பு​கள் பண்​ருட்டி வட்​டத்​தில் இவற்றை சீர் செய்​ய​வில்லை,​ இவற்றை முறை​யாக செய்​தி​ருந்​தால் மழை காலத்​தில் தண்​ணீர் வீணா​கா​மல் சேமிக்​கப்​ப​டு​வ​து​டன்,​ விவ​சாய நிலங்​க​ளுக்​கும் பாதிப்பு இருக்​காது என சமூக ஆர்​வ​ளர்​கள் தெரி​விக்​கின்​றன.

Read more »

லண்​ட​னில் தமி​ழக சுற்​று​லாத்​துறை

சிதம் ​ப​ரம்,​ நவ.19:​

லண்​டன் மாந​க​ரத்​தில் ஆண்​டு​தோ​றும் நவம்​பர் மாதம் 2-வது வாரத்​தில் ரர்ழ்ப்க் பழ்​ஹஸ்ங்ப் ஙஹழ்ற்​ என்ற பெய​ரில் மாபெ​ரும் உலக சுற்​றுலா சந்தை நடை​பெற்று வரு​கி​றது. இந்த அண்டு நவம்​பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை இது நடை​பெற்​றது.​ ​ இதில் 100க்கும் மேற்​பட்ட நாடு​கள் பங்​கேற்று தங்​க​ளு​டைய நாட்​டில் உள்ள சுற்​றுலா ஸ்த​லங்​க​ளை​யும்,​ சுற்​றுலா சம்​மந்​தப்​பட்ட தொழில்​க​ளுக்​கான விற்​பனை ஒப்​பந்​தங்​க​ளை​யும்,​ விளம்​பர தக​வல்​க​ளை​யும் பரி​மா​றிக் கொள்​கின்​றன. இந்த ஆண்டு இந்​திய சுற்​று​லாத்​துறை ஐச​ஈ​ஐஅ டஅ​ய​ஐ​க​ஐ​ஞச​ என்ற பெய​ரில் பெரிய அரங்கை அமைத்து இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாநி​லங்​க​ளின் சுற்​றுலா அரங்கை அமைத்​தி​ருந்​தது. தொடக்​க​நா​ளன்று இந்​தி​யச் சுற்​றுலா அரங்கை மத்​திய சுற்​று​லாத்​துறை அமைச்​சர் குமா​ரி​செல்ஜா துவக்கி வைத்​தார்.​ ​ இதில் முக்​கி​ய​மாக தமி​ழ​கத்​தின் புகழ்​பெற்ற சுற்​றுலா ஸ்த​லங்​க​ளான ஸ்ரீந​ட​ரா​ஜர் கோயில்,​ கங்​கை​கொண்​ட​சோ​ழ​பு​ரம்,​ தஞ்சை பெரி​ய​கோ​வில்,​ மதுரை மீனாட்சி அம்​மன் ​ கோயில் ஆகி​ய​வற்றை முன்​னி​றுத்தி அரங்​கு​களை அமைத்து விளம்​ப​ர​ப​டுத்​தி​யது. மேலும் தமி​ழ​கத்​தில் உள்ள சுற்​றுலா செல்​லக்​கூ​டிய மலைப்​ப​கு​தி​கள்,​ கடற்​க​ரை​கள்,​ பட​குக் குழாம்​கள்,​ பற​வை​கள் சர​ணா​ல​யம் உள்​ளிட்ட வெளி​நாட்​டுப் பய​ணி​களை ஈர்க்​கும் வண்​ணம் அரங்​கு​களை அமைத்​தி​ருந்​தது.​ ​ தமி​ழ​கத்​தின் சார்​பில் சுற்​று​லாத்​துறை அமைச்​சர் சுரேஷ்​ரா​ஜன்,​ ஆணை​யர் மோகன்​தாஸ் மற்​றும் தமி​ழ​கத்​தில் உள்ள பிர​பல ஹோட்​டல் அதி​பர்​கள்,​ சுற்​றுலா முக​வர்​கள் பங்​கேற்​ற​னர். இச்​சந்​தை​யில் சிதம்​ப​ரம் ஹோட்​டல் சார​தா​ராம் நிர்​வாக இயக்​கு​நர் ஆர்.எம்.சுவே​த​கு​மார் பங்​கேற்று சிதம்​ப​ரம் நக​ரத்​தை​யும்,​ நட​ரா​ஜர் ஆல​யம்,​ பிச்​சா​வ​ரம் மற்​றும் அத​னைச் சுற்​றி​யுள்ள சுற்​றுலா ஸ்த​லங்​கள் குறித்து வெளி​நாட்டு சுற்​றுலா முக​வர்​கள்,​ பிர​தி​நி​தி​கள்,​ பய​ணி​கள் ஆகி​யோ​ருக்கு எடுத்​து​ரைத்​தார்.

Read more »

காசோலை மோசடி:​ சேலம் அரிசி வியா​பாரி கைது

கட ​லூர்,​ நவ. 19: ​

ரூ. 8.21 லட்​சம் காசோலை கொடுத்து மோசடி செய்​த​தாக சேலத்​தைச் சேர்ந்த அரிசி வியா​பா​ரி​யைப் போலீ​ஸôர் வியா​ழக்​கி​ழமை கைது செய்​த​னர். ​​ சேலத்​தைச் சேர்ந்​த​வர் கிருஷ்​ண​மூர்த்தி ​(55). அவ​ரது மனைவி தில​கம் ​(48). இரு​வ​ரும் பல்​வேறு இடங்​க​ளில் இருந்து அரிசி வாங்கி மொத்த வியா​பா​ரம் செய்து வரு​கின்​ற​னர். இவர்​கள் கட​லூரை அடுத்த பெரிய பிள்​ளை​யார் மேடு கிரா​மத்​தில் உள்ள அரிசி ஆலை ஒன்​றில் இருந்து ரூ. 8.21 லட்​சம் மதிப்​பி​லான அரி​சி​யைக் கொள்​மு​தல் செய்​துள்​ள​னர். ​​ அதற்​காக கிருஷ்​ண​மூர்த்தி ரூ. 8.21 லட்​சத்​துக்​குக் வங்​கிக் காசோலை அளித்​துள்​ளார். மனைவி பெய​ரில் இருந்த கணக்​கில் இருந்து ராமச்​சந்​தி​ரன் என்​ப​வர் பெய​ரில் அந்​தக் காசோலை அளிக்​கப்​பட்டு இருந்​த​தாம்,​ ஆனால் காசோ​லையை அரிசி ஆலை உரி​மை​யா​ளர் துரை​ராஜ் வங்​கி​யில் சமர்ப்​பித்​த​போது,​ காசோலை வழங்​கப்​பட்ட வங்​கிக் கணக்கு நிலு​வை​யில் இல்லை என்று திரும்​பி​யது. ​இது​கு​றித்து துரை​ராஜ் கட​லூர் மாவட்​டக் குற்​றப் புல​னாய்​வுப் போலீஸ் பிரி​வில் புகார் செய்​தார். போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​னர். ​ இது​தொ​டர்​பாக கிருஷ்​ண​மூர்த்​தியை கைது செய்​த​னர். அவ​ரது மனைவி தில​கத்​தைத் தேடி வரு​கி​றார்​கள். ​

Read more »

காப்​பீடு திட்ட புகைப்​பட பணி:​ தேர்வு எழு​தும் மாண​வர்​கள் பாதிப்பு

பண்​ருட்டி,​ நவ. 19:

பண்​ருட்​டி​யில் உயிர் காக்​கும் உயர் சிகிச்சை காப்​பீட்​டுத் திட்​டத்​திற்​கான புகைப்​ப​டம் எடுக்​கும் பணி​யால் பள்​ளி​க​ளில் இடைப் பரு​வத் தேர்வு எழு​தும் மாண​வர்​கள் பாதிப்​ப​டைந்​துள்​ள​னர்.​ காப்​பீடு திட்​டத்​தில் சேர்​வ​தற்​கான புகைப்​ப​டம் மற்​றும் கைரேகை பதிவு செய்​யும் பணி பண்​ருட்டி நக​ரில் வியா​ழன் மற்​றும் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெ​று​கி​றது. இத் திட்​டத்​தில் சேர தகு​தி​யு​டைய பய​னா​ளி​கள் அவ​ர​வர் ​ வாக்கு செலுத்​தும் மையத்​தில் சென்று புகைப்​ப​டம் எடுத்​துக்​கொள்​ள​லாம் என அறி​வு​றுத்​தப்​ப​டி​ருந்​தது.​ பண்​ருட்டி நக​ரில் பள்​ளி​கள்,​ அலு​வ​ல​கங்​கள் என 37 மையங்​க​ளில் இப்​பணி நடை​பெற்​றது. இதில் பெரும்​பா​லான மையங்​கள் பள்​ளி​க​ளா​கும். தற்​போது மேல்​நிலை மற்​றும் உயர்​நி​லைப் பள்​ளி​யில் படிக்​கும் மாண​வர்​க​ளுக்கு இரண்​டாம் இடைப்​ப​ரு​வத் தேர்வு நடக்​கும் சம​யத்​தில்,​ புகைப்​பட பணி பள்ளி வளா​கத்​தில் நடை​பெற்​ற​தால் தேர்வு எழு​தும் மாண​வர்​க​ளி​டையே ​ ​ கவ​னச் சிதைவை ஏற்​ப​டுத்​தி​ய​து​டன்,​ போதிய இட​வ​சதி இல்​லா​த​தால் மாண​வர்​கள் வெளி​யில் அமர்ந்து தேர்வு எழு​தி​னர்.இதே​போல் நக​ராட்சி பள்​ளி​க​ளில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெற்​ற​தால் இட​வ​சதி இன்றி அனைத்து மாண​வர்​க​ளும் ஒன்​றாக அமர்ந்து இருந்​த​னர். மேலும் மழை பெய்து ஒழு​கி​ய​தால் வகுப்​ப​றை​கள் நனைந்​துள்ள நிலை​யில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணிக்கு வகுப்​ப​றை​கள் ஒதுக்​கி​ய​தால் மாண​வர்​கள் அவதி அடைந்​த​னர்.

Read more »

ரூ.1449 கோடி ​கடன் வழங்க வங்​கி​கள் திட்​டம்

கட​லூர்,​ நவ. 18:​

கட​லூர் மாவட்​டத்​தில் அனைத்து வங்​கி​க​ளும் 2010-2011-ம் ஆண்​டில் ரூ.1449 கோடி கடன் வழங்​கத் திட்​ட​மிட்டு உள்​ளன. ​ ​ ​ நபார்டு வங்கி தயா​ரித்த கட​லூர் மாவட்​டத்​துக்​கான 2010-2011-ம் ஆண்​டுக்​கான வளம் சார்ந்த வங்​கிக் கடன் திட்​டத்தை செவ்​வாய்க்​கி​ழமை கட​லூ​ரில் நடந்த வங்​கி​யா​ளர்​கள் கூட்​டத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வெளி​யிட்​டார். 2010-2011-ம் ஆண்​டில் கட​லூர் மாவட்​டத்​தில் வங்​கி​கள் ரூ.1449 கோடி கடன் வழங்​கும் என்று மாவட்ட ஆட்​சி​யர் தெரித்​தார். ​ ​ நபார்டு வங்​கி​யின் மாவட்ட உத​விப் பொது மேலா​ளர் ராஜ​கோ​பா​லன் பேசு​கை​யில்,​ வங்​கி​யா​ளர்​கள் தயா​ரித்த நடப்பு ஆண்​டுக்​கான கடன் திட்​டத்தை விட 12.6 சதம் கூடு​த​லா​கக் கடன் வழங்​கும் வகை​யில்,​ புதிய திட்​டம் தயா​ரிக்​கப்​பட்டு இருப்​ப​தா​கத் தெரி​வித்​தார். ​ ​ 2010-2011-ம் ஆண்​டுக்​கான கடன் திட்​டத்​தில் விவ​சா​யத்​துக்கு ரூ.1001 கோடி ஒதுக்​கப்​பட்டு உள்​ளது. இது மொத்​தக் கடன் திட்​டத்​தில் 69 சதம் ஆகும். தொழில் துறைக்கு ரூ.69 கோடி​யும்,​ இதர முன்​னு​ரி​மைக் கடன்​க​ளுக்கு ரூ.379 கோடி​யும்,​ ஒதுக்​கப்​பட்டு உள்​ளது. மேலும் இது​வரை நபார்டு வங்​கி​யின் ஊர​கக் கட்​டு​மான வளர்ச்சி நிதித் திட்​டத்​தில் ரூ.215 கோடி செல​வில் கட​லூர் மாவட்​டத்​தில் 602 விரி​வாக்​கத் திட்​டங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு இருப்​ப​தா​க​வும் உத​விப் பொது​மே​லா​ளர் ராஜ​கோ​பா​லன் தெரி​வித்​தார். ​ ​ ​ வங்​கி​யா​ளர்​கள் தயா​ரிக்​குóம் 2010-2011-ம் ஆண்​டுக்​கான கடன் திட்​டம் இந்த வளம் சார்ந்த வங்​கிக் கடன் திட்​டத்​தைச் சார்ந்தே இருக்​கும் என்​றும் அவர் கூறி​னார். ​​ ​ கடன் திட்​டத்​தின் முதல் பிர​தியை மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் இருந்து சென்னை பாரத ஸ்டேட் வங்​கி​யின் துணைப் பொது மேலா​ளர் ஞான​வேல் பெற்​றுக் கொண்​டார் என்​றும்
செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

Read more »

அரசுக் கட்​ட​டம் இடிக்​கும் பணி ஒத்திவைப்பு

​சிதம்​ப​ரம்,​ நவ. 18:​

சிதம்​ப​ரத்தை அடுத்த முகை​யூர் கிரா​மத்​தில் தனி​யார் நிலத்​தில் கட்​டப்​பட்​டுள்ள கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கம்,​ ஊராட்சி அலு​வ​ல​கம் ஆகி​ய​வற்றை இடித்து உரி​மை​யா​ள​ரி​டம் ஒப்​ப​டைக்​கு​மாறு சிதம்​ப​ரம் மாவட்ட முதன்மை உரி​மை​யி​யல் நீதி​மன்​றம் ஆணை பிறப்​பித்​துள்​ளது. ​ ​ நீதி​மன்ற உத்​த​ர​வின்​படி புதன்​கி​ழமை பொக்​லை​னு​டன் கட்​ட​டத்தை ஊழி​யர்​கள் இடிக்​கச் சென்​ற​னர். ஆனால் கிராம நிர்​வாக அலு​வ​லர் உடல்​நிலை சரி​யில்​லா​மல் விடுப்​பில் இருந்​த​தால் அலு​வ​ல​கக் கட்​ட​டம் இடிப்​பது ஒத்தி வைக்​கப்​பட்​டது.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த முகை​யூர் கிரா​மத்​தில் பொன்​முடி என்​ப​வ​ரது மனைவி மல்​லிகா என்​ப​வ​ருக்​குச் சொந்​த​மான இடத்​தில் கீரப்​பா​ளை​யம் பஞ்​சா​யத்து யூனி​யன் சார்​பில் கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​க​மும்,​ ஊராட்சி அலு​வ​ல​க​மும் கட்​டப்​பட்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. இது​கு​றித்து சிதம்​ப​ரம் நீதி​மன்​றத்​தில் மல்​லிகா வழக்கு தொடுத்​தார். வழக்கு விசா​ரணை முடி​வுற்று கடந்த 28-2-2006-ல் அலு​வ​ல​கக் கட்​ட​டத்தை இடித்து நிலத்தை உரி​மை​யா​ள​ரி​டம் ஒப்​ப​டைக்​கு​மாறு நீதி​பதி தீர்ப்​ப​ளித்​தார்.​ ​ ஆனால் இது​வரை அந்த இடத்தை கீரப்​பா​ளை​யம் வட்​டார வளர்ச்சி அலு​வ​லர் ​ ஒப்​ப​டைக்​கா​த​தால் ஜப்தி செய்து ஒப்​ப​டைக்​கு​மாறு மனு​தா​ரர் மல்​லிகா சிதம்​ப​ரம் மாவட்ட உரி​மை​யி​யல் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். மனு​வின் மீது விசா​ரணை நடத்​திய நீதி​பதி சாந்தி அலு​வ​ல​கக் கட்​ட​டத்தை இடித்து உரி​மை​யா​ள​ரி​டம் ஒப்​ப​டைக்​கு​மாறு உத்​த​ர​விட்​டார். அதன்​பே​ரில் புதன்​கி​ழமை நீதி​மன்ற ஊழி​யர்​கள் கட்​ட​டத்தை இடிக்க பொக்​லை​னு​டன் சென்​ற​னர். கிராம நிர்​வாக அலு​வ​லர் விடு​மு​றை​யில் சென்​றி​ருந்​த​தால் இடிப்​பதை ஒத்​தி​வைத்து திரும்​பி​னர்.

Read more »

காப்​பீட்​டு திட்​டம்:​ இன்​று​ மு​தல் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி

​பண்​ருட்டி,​ நவ.18:​

உயிர் காக்​கும் உயர் சிகிச்சை திட்​டத்​துக்​கான புகைப்​ப​டம் மற்​றும் கைரே​கைப் பதிவு செய்​யும் பணி பண்​ருட்டி நக​ரில் வியா​ழன் மற்​றும் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெ​ற​வுள்​ளது. ​ ​ தகு​தி​யா​ன​வர்​கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்​குள் அவ​ர​வர் வாக்கு செலுத்​தும் இடத்​துக்கு நல​வா​ரிய உறுப்​பி​னர் அட்டை அல்​லது குடும்ப அட்​டை​களை எடுத்து சென்று பதிவு செய்​துக்​கொள்​ள​ளாம்.

Read more »

மாணவர்களுக்கு அன்​ன​தா​னம்

நெய்வேலி ,​ நவ.18: ​

நெய்வேலி டாக்​டர் முரு​கன் சமூக நல அறக்​கட்​டளை சார்​பில் பள்ளி மாணவ,​மாண​வி​ய​ருக்கு அன்​ன​தா​னம் வழங்​கும் நிகழ்ச்சி நெய்வேலி வட்​டம் 19-ல் உள்ள டேனிஷ் மிஷன் நடு​நி​லைப் பள்​ளி​யில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது. ​ டாக்​டர் முரு​க​னின் 2-ம் ஆண்டு நினை​வு​நாளை முன்​னிட்டு நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் என்​எல்சி நில எடுப்​புத் துறை பொது மேலா​ளர் என்.எஸ்.ராம​லிங்​கம் 120 மாணவ,​மாண​வி​ய​ருக்கு உண​வு​களை வழங்​கி​னார். முன்​ன​தாக பொறி​யா​ளர் பாலச்​சந்​தர் நிகழ்ச்​சிக்கு தலைமை வகித்​தார். அழ​கு​ராஜ் வர​வேற்​றார். டாக்​டர் முரு​கன் அறக்​கட்​ட​ளை​யைச் சேர்ந்த ஸ்ரீதர்,​நட​ரா​ஜன்,​வர​த​ரா​ஜன்,​சண்​மு​கம்,​ பாபு மற்​றும் பாண்​டி​யன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior