உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 28, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் கணித மன்றம் துவக்க விழா

விருத்தாசலம் :

     விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கணித மன்றம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். கணிதத் துறை பேராசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கணித மன்ற செயலர் முத்துலட்சுமி வரவேற்றார். சேலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் கணித மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மன்ற இணைச் செயலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.













Read more »

பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மாணவர் சங்கம் சார்பில் லந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம்:

       சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  அன்புமணி ராமதாஸ் பேசியது:-

          மாணவர்கள் எதை நினைத்தாலும் சாதிக்கலாம். கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஒருவர் இருந்தால் அவரிடம் நான் வரம் கேட்டால் பெரிய பணக்காரராக வேண்டும் எனவோ, பிரதமராக வேண்டும் எனவோ கேட்க மாட்டேன். எனது கல்லூரி பருவத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என கேட்பேன்.

           வருங்கால இந்தியர்கள் நீங்கள். இந்த இளைஞர்களை வழிநடத்தி செல்லும் வித்தியாசமான தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஒருவர்தான். இம்மண் சாதாரன மண் கிடையாது. 1967ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த அண்ணாமலைப் பல்கலை. மண். இந்தி எதிர்ப்பு மொழிப்போர் போராட்டம் இம்மண்ணில் தொடங்கி மாணவர்கள் போராடிய மண். இதன் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதே மண்ணில் நாம் ஒன்று கூடியுள்ளோம். ஒற்றுமையுடன் போராடுவோம் அடுத்து நிச்சயம் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். ஆட்சிக்கு வரவைப்போம். திராவிடக் கட்சிகள் மாறி, மாறி 45 ஆண்டுகள் ஆண்டு குடிகார நாடாகவும், பிச்சைக்காரர்கள் நாடாகவும், இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாகவும் ஆக்கிவிட்டது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தராது. கல்வி, சுகாதாரம், வேளாண் இடுபொருள்களை இலவசமாக கொடுப்போம். இதுதான் மற்றவர்களுக்கும், நமக்கும் வித்தியாசம். அரசியல் வேண்டாம் என மாணவர்கள் சொல்ல முடியாது. அவசியம் அரசியலுக்கு வந்தாக வேண்டும்.

               எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் நீங்கள்தான். உலக நாடுகளில் புரட்சிகள் நடைபெற்று வருபதற்கு இளைஞர்கள்தான் காரணம். அதே போன்ற புரட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும். சினிமா ஒரு பொழுது போக்கு. அதனை பார்த்துவிட்ட மறந்துவிட வேண்டும். ஆனால் நம் மக்கள் அதனை உண்மை என்று நம்பி ஏமாந்து போகின்றனர். இந்தியாவில் தமிழ் நாட்டை தவிர, எந்த மாநிலத் திலும் சினிமாக்காரகள் ஆண்டதில்லை. 45 ஆண்டு களாக சினமாவில் வேஷம் போட்டவர்களும், வசனம் எழுதியவர்களும்தான் ஆண்டு வருகின்றனர்.

          தற்போது தமிழகத்திற்கு ஒரு நடிகை முதல்வர், ஒரு நடிகர் எதிர்க்கட்சி தலைவர். அண்ணாதுரை எம்.ஏ. படித்தவர். அவருக்கு பிறகு இவர்கள் யாரும் படித்தவர்கள் கிடையாது. இனி தமிழ்நாட்டை படித்தவர்கள் ஆள வேண்டும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வேளாண்மை குறித்து புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற செயல்திட்டத்தை பா.ம.க. புத்தகமாக வெளியிட்டுள்ளது. பா.ம.க. ஒரு வித்தியாசமான கட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமைதி புரட்சி ஏற்பட்டது. இளைஞர்கள் அந்த புரட்சியை ஏற்படுத்தினர். அ.தி.மு.க.விற்கு ஒட்டுப்போடவில்லை. தி.மு.க.விற்கு எதிராக ஓட்டு போட்டார்கள். ஓட்டு போட வேறு யாரும் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம். உறுதியாக தெரிவிக்கிறோம். பா.ம.க. தலைமையில் தனி அணி அமைப்போம். திராவிட கட்சிகள் திராவிடன் என்ற வார்த்தையை வைத்து ஏமாற்றி வருகிறார்கள்.

           திராவிடர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக உள்ளனர். ஆனால் அங்கு திராவிட கட்சிகள் கிடையாது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் உள்ளது. கேரளாவில் நாயர்மேனன் தவிர வேறு யாரும் ஆள முடியவில்லை. ஆந்திராவில் ரெட்டி, நாயுடு தவிர வேறு யாரும் ஆளவில்லை. திராவிட கட்சிகள் தலைவர்கள் கருணாநிதி, எம்ஜிஆர்., ஜானகி, ஜெயலலிதா. வைகோ யாரும் தமிழன் கிடையாது. தமிழன் யார் என்றால் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒருவர்தான். பாமக ஆட்சிக்கு வந்தால் சினிமா கலாச்சாரம், மது ஆகியவற்றை ஒழிப்போம். திமுக ஆட்சியில் 85 ஆயிரம் கோடி இலவசமாக வழங்கப் பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் கோடி மின்திட்டத்திற்கு ஒதுக்கியிருந்தால் மின்வெட்டு வந்திருக்காது. மின் கட்டணம் உயர்ந்திருக்காது. 20 ஆயிரம் கோடி போக்குவரத்து துறைக்கு ஒதுக்கியிருந்து பஸ் கட்டணம் உயர்ந்திருக்காது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

               கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட தமிழக மாணவர் சங்க செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் முருகன் வரவேற்றார். பாமக மாநிலத் தலைவர் மணி மாநில இளைஞரணி செயலாளர் அறிவுச்செல்வன், தமிழக மாணவர் சங்க தலைவர் பாரிமோகன், துணைப் பொதுச்செயலாளர் திருஞானம், பா.ம.க. மாவட்டச் செயலாளர் வேணு. புவனேஸ்வரன், சமூக முன்னேற்ற சங்கம் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் பேராசிரியர் செல்வகுமார், பேராசிரியர் மணிவண்ணன் உள்ளிட் டோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் அண்ணா மலைப் பல்கலைக்கழகம், கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் மருத்துவர் ராமதாஸ் அறிவியல் கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லரிகளைச் சேர்ந்த தமிழக மாணவர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்று பேசினர். தமிழக மாணவர் சங்க (தெற்கு) மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.









Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 17-வது முறையாக உண்டியல் திறப்பு

சிதம்பரம்:
 
       சிதம்பரம் நடராஜர் கோவிலில்  17-வது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 443 காணிக்கை வசூலாகியது. 
 
          புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு கையகப்படுத்தியது.அதையடுத்து கோவிலுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் 9 உண்டியல்கள் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. உண்டியல் வைக்கப்பட்டு இது வரை 18 முறை திறக்கப் பட்டு உள்ளது.அதன் மூலம் இது வரை 70 லட்சத்து 91 ஆயிரத்து 669 ரூபாய் வசூலாகி உள்ளது.
 
          இது தவிர 141 கிராம் தங்கம், 565 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் கோவிலுக்குள் இருக்கும் உண்டியலை திறந்து காணிக்கையை எண்ண இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி நேற்று 17-வது முறையாக கோவிலில் உள்ள 9 உண்டியல்களும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன் தலைமையில் கோவில் செயல் அதிகாரி சிவக்குமார் முன் னிலையில் திறக்கப்பட்டது.
 
         அதைதொடர்ந்து காணிக்கை பணம் ஒட்டு மொத்தமாக எண்ணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 443 காணிக்கை வசூலாகி இருந்தது.   இது தவிர மலேசியா -503 ரிங்கட், இலங்கை - ரூ.1220, கனடா- 20 டாலர், அமெரிக்கா-3 டாலர், இங்கிலாந்து பவுண்டு-3 ஆகியவையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். தங்கம் 81/2 கிராம், வெள்ளி 105 கிராம் ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். காணிக்கை எண்ணும் போது பிரச்சினை ஏதும் நடக்காமல் இருக்க சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior