உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 27, 2011

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செல்போன் மூலமாக தொலைதூரக்கல்வி


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்

 

 செல்போன் தொழில் நுட்பத்தின் வழியாக தொலைதூரக்கல்வி


 சிதம்பரம்:

            அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புதிய முயற்சியில் மாணவர்களுக்கு செல்போன் மூலமாக பாடங்களை வழங்க பெங்களூரில் உள்ள மொபிசிர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நிகழ்ச்சியில் துணைவேந் தர் டாக்டர் ராமநாதன் பேசுகையில் 

             தொலை தொடர்பு சாதனம் இக்காலத்தில் அனைவருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆதலால், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொழில்நுட்ப கூட்டு முயற்சியில் சர்டிபிகெட் ப்ரொக்ராம் இன்பண்டமண்டல் ஆப் மூட்சுவல் பண்ட்ஸ் என்ற பாடத்தினை வரும் கல்வி யாண்டு 2011-12 முதல் மாணவர்களுக்கு செல்போன் மூலமாக பாடங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

              பாடத்திட்டம், வழிமுறைகள், பாடங்கள், குறிப்பேடுகள் மற்றும் செயல்முறை பயிற்சி ஏடுகள் ஆகிய எல்லாவற்றையுமே செல்போன் மூலமாகவே வழங்கப்படுவது இதன் முக்கிய அம்சம் என குறிப்பிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ரத்தினசபாபதி மற்றும் மொபிசிர் டெக்னா லஜிஸ் பிரைவேட் லிமிடெட் மேனேஜிங் டைரக்டர் கே.சி.வேணுகோபால் ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைவேந்தர் முன்னிலை யில் கையெழுத்தானது.

              தொலைதூர கல்வி இயக்கக இயக்குனர் டாக்டர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், மொபிசிர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் சீப் ஆபரேட்டர் எம். குரு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more »

பண்ருட்டி அருகே புதுமையான திருமணம்: 3 அடி உயர மணமகனுக்கு 2 1/2 அடி உயர மணமகள்

  பண்ருட்டியில் புதுமையான திருமணம்:

 

 3 அடி உயர மணமகனுக்கு 2 1/2 அடி உயர மணமகள்

 
பண்ருட்டி:
 
             பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ஞானஜோதி (வயது 28). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் 3 அடி உயரமே இருந்தார். இவருக்கு இவரது பெற்றோர் பல இடங்களில் பெண் பார்த்தார்கள். ஆனால் உடனடியாக பெண் கிடைக்கவில்லை.

            பண்ருட்டி வீரசிங்ககுப்பம் அருகே உள்ள புலவன் குப்பத்தை சேர்ந்த சுப்புராமன் என்பவரின் மகள் சங்கீதா (27) 10-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இருவரும் 2 1/2 அடி உயரமே இருந்தார். இதை அறிந்து ஞானஜோதியின் பெற்றோர் இளையபெருமாள், சகுந்தலா ஆகியோர் அங்கு சென்று சங்கீதாவை பெண் கேட்டனர்.

            அவர்களும் சங்கீதாவை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தனர். பின்னர் சங்கீதாவை ஞானஜோதி சந்தித்து பேசினார். இருவருக்கும் பிடித்திருந்தது. இதையொட்டி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.   ஞானஜோதி-சங்கீதா திருமணம் காடாம்புலியூர் கதிர்வேல்படையாச்சியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

              ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மணமகன் பட்டு வேட்டியும், பட்டு சட்டையும் அணிந்திருந்தார். மணமகள் கூரைப்புடவை கட்டியிருந்தார். புரோகிதர்கள் மந்திரம் ஓத மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். மணமகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் நடந்தது குறித்து மணமகன் ஞானஜோதி கூறியது:-

                   2 வருடமாக மனமகள் தேடினேன். மணமகள் கிடைக்கவில்லை. எனவே எனக்கு திருமணம் நடக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு சங்கீதா மணமகளாக கிடைத்திருக்கிறார். அவரை திருமணம் செய்ததால் நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மணமகள் சங்கீதா கூறியது:

            எனக்கு எப்படியும் திருமணம் நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படி திருமணம் நடைபெற்றுள்ளது. நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

ஒரு மணி நேரத்தில் 45 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையங்கள்: என்.எல்.சி தலைவர் அன்சாரி


நெய்வேலி:

            குடியரசு தினம், நெய்வேலி நகரில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. தலைவர் அன்சாரி, நெய்வேலி நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

             பாரதி விளையாட்டரங்கில் அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். பின்னர் என்.எல்.சி. பாதுகாப்புப்படை, தீயணைப்புப்படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை, ஊர்க் காவல்படை, தேசிய மாணவர்படை, நாட்டுநலப் பணித்திட்ட மாணவ மாணவிகள், சாரண சாரணியர், விளையாட்டு வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் விழா மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சி, என்.எல்.சி. நிர்வாகத்துறை இயக்குனர் ஆச்சார்யா வரவேற்புரையுடன் தொடங்கியது. தொடர்ந்து குடியரசு தின செய்தி வழங்கிய அன்சாரி கூறியது:-

 
              இந்தியா, பொருளாதாரத்தில் வலிமை மிகுந்த ஒரு நாடாக அனைவராலும் மதிக்கப்பட்டால் தான், சர்வதேச சமூகத்தில் நமது நாடு ஒரு முக்கிய அங்கத்தினைப் பெறும். இதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது. இம்முயற்சியானது, தேசத்தின் வளர்ச்சிக்காக பொதுத்துறை ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையும் கூட. இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் 8.5 சதவீதம் சீரான பொருளாதார வளர்ச்சியை பெற்று வருகிறது.

              தேசத்தின் வளர்ச்சியில் என்.எல்.சி நிறுவனத்தின் பங்கும் வளர்ந்து வரும் வகையில், நிறுவனத்தின் செயல்பாடுகளை, பணியாளர்கள் தங்கள் கடின உழைப்பால் மேலும் மேம்படுத்த வேண்டும். பழுப்பு நிலக்கரியை மட்டுமே எரிபொருளாகக் கொண்டு, செயல்பட்டு வரும் பட்சத்தில், என்.எல்.சி பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருப்பதால், நிலக்கரியை எரி பொருளாகக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களை அமைக்க என்.எல்.சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

             புதிய அனல் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அடிப்படையிலான கொள்கை, என்.எல்.சிக்கு ஒரு சவா லாக இருப்பினும், தகுந்த நேரத்தில் என்.எல்.சி மேற் கொண்ட விரைவான நட வடிக்கைகளால், ராஜஸ் தான் மாநிலம் பித்நோக் பகுதியிலும், பர்சிங்சர் பகுதியிலும், தமிழகத்திலும், உத்திரப்பிரதேச மாநிலத்திலும் நான்கு புதிய அனல் மின் நிலையங்களை என்.எல்.சி. நிறுவனமே அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

              ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இரு மின் நிலையங்கள் (ஒரு மணி நேரத்திற்கு தலா இரண்டரை லட்சம் யூனிட்) பழுப்பு நிலக்கரி மூலமும் தமிழகம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இரு மின் நிலையங்களும் (ஒரு மணி நேரத்திற்கு தலா இரண்டரை லட்சம் யூனிட்) நிலக்கரியின் மூலமும் இயங்கும் தன்மை கொண்டவை. இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொது அமைப்புகள் சார்பில் அன்னதானம்



கடலூர்:

         கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் 274 சிவதலங்களுள் ஒன்றாகும். 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி 1 1/2 கோடி ரூபாய் செலவில் கோவில் திருப்பணிகள் நடை பெற்றன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 19-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

                 இதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. மகா கும்பாபிஷேகம் இன்று (26-ந்தேதி) நடை பெற்றது. காலை 5 மணி முதல் 7 மணிவரை யாகபூஜையும், 7.30 மணி முதல் 8 மணிவரை மஹா பூர்ணாஹ¨தி, தீபாராதனை யாத்ரா தானம் ஆகிய பூஜைகளும் நடைபெற்றன. இது முடிந்த பின்னர் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு ராஜகோபுரம் மற்றும் சகல விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பாலமணி, மகாதேவன், நாகராஜன் ஆகியோர் தலைமையில் 108 சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர்.

                 விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி மாலா, அய்யப்பன் எம்.எல்.ஏ., நீதிபதி ராமபத்ரன் ஆகியோர் பங்கேற்றனர். அங்காளபரமேஸ்வரி ஆலய தக்கார் அரிமா ஆர்.வி. நாகராஜன், சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் வி.பி.எஸ். கணேசன், ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணன், புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நியூ அழகப்பா ஜுவல்லரி உரிமையாளர்கள் அழகப்பா ராஜகோபால், ரமேஷ்குமார், தமிழ்நாடு வெஜிடேரியன் ரெஸ்டாரண்டு உரிமையாளர் ராஜமாணிக்கம், அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேவல்குமார், தொகுதி இணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மாதவன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி கல்யாண சுந்தரம், பி.கே. ரியல் எஸ்டேட் உரிமையாளர் வெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமணன், சூர்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் நாராயணன், முத்து கலர் லேப் உரிமையாளர் முத்து உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

                     கும்பாபிஷேகத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், குப்புசாமி, பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் சுந்தரவடி வேலு, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு உள்பட 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  200 தன்னார்வ தொண்டர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். 5 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். கும்பாபிஷேகத்தை யொட்டி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. பொது அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றம் குடிநீர் வழங்கப்பட்டது.  கடலூர் நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. ஈஷா யோகா மையம் மற்றும் வெளிநாட்டினர் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

                கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் ஜெகநாதன், கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், ஆய்வாளர் வெங்கடேசன், வழிபடுவோர் சங்க தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Read more »

Cuddalore Padaleeswarar Temple Mahakumbabhishekam held


People witnessing Mahakumbabhishekam at Padaleeswarar temple in Thirupadiripuliyur on Wednesday

CUDDALORE: 

          A large number of devotees drawn from various places descended on Cuddalore to witness the Mahakumbabhishekam performed at renowned Sri Padaleeswarar Temple at Thirupadiripuliyur here on Wednesday.

         The rituals that started at 5 a.m. by savants led by T.K. Balamani Sivachariar of Thirukannangudi culminated in Mahakumbabhishekam at about 9.30 a.m. A music band from Isha Yoga Centre gave an enthralling performance just before the main event that whipped up spiritual fervour among the devotees.The accompanying commentaryover the public address system also riveted the attention of the gathering. A helicopter, hired by a private company, hovered over the temple and showered flower petals on the gopurams to the delight of the gathering.

        As the turnout was so huge, the organisers had requisitioned the services of the fire service personnel to spray the holy water on them through the multi-chute fire tenders at low speed. Many philanthropists and service organizations had put up make-shift stalls to dispense water and buttermilk to the visitors. The entire Cuddalore town wore a festive look on account of the Mahakumbabhishekam and the Republic Day celebrations. The Padaleeswarar Temple Worshippers' Association had also incorporated a new chute to drain the milk poured over the Nandi during Pradhosham time. The Association had also put up many brass stands for placing the lighted earthen lamps so as to prevent any oil spill or stains on the temple walls.

             The Mahakumbabhishekam was performed after a gap of about 14 years at a cost of Rs 1.25 crore and a lion's share of it had come from the members of the Association. The Hindu Religious and Charitable Endowment Department had spent less than Rs 9 lakh on the renovation of the Raja gopuram. In the evening Thiru Kalyanam was performed and the deities were taken in a procession on silver Rishaba vahanam. The temple is categorised as first grade one with an annual collection from the hundis amounting to Rs 40 lakh, according to HR & CE Department sources.

Read more »

Gram sabhas conduct social audit of fair price shops



Collector P. Seetharaman participating in a grama sabha in Cuddalore on Wednesday.


CUDDALORE: 

           Besides discussing the fund allocation for various projects and the progress of the ongoing works, the Gram Sabha meetings convened in Cuddalore and Villupuram districts on Wednesday also conducted social audit on the performance of the fair price shops and the implementation of the Mahatma Gandhi National Rural Employment Gurantee Scheme.

         The villagers participated in good numbers to get themselves informed of the various works being taken up in their respective places. They also voiced their grievances over the delay in the disbursement of old age pension and financial assistance to the differently-able persons. The Gram Sabha proceedings were monitored by the designated officials who intervened wherever necessary to convince the villagers about arrangements made for the redress of their grievances.

           The Gram Sabhas also acted as the forums for distribution of forms to the villagers for getting a financial assistance to the extent of Rs. 15,000 for carrying out repair works to the cluster houses that were over 10 years old. At Sedarpalayam in Cuddalore district, Collector P.Seetharaman participated in the Gram Sabha meeting. He applauded the villagers for having made the session a lively one by discussing the local issues in an enlightened manner.

             The Collector called upon the villagers to enrol in the rural employment guarantee scheme and earn up to Rs. 100 every day. He cited the instance of the people at Thittakudi where in a large number of villagers had come under the purview of the scheme. He also scrutinised the works to be undertaken in Sedarpalayam for which an amount of Rs. 31 lakh had been earmarked for the current year.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior