உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

வரும் கல்வியாண்டு முதல் திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட நடவடிக்கை: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்


   
               
              திருவாரூர், விழுப்புரத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 93 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை அவர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். 
 
ஆய்வுக்குப் பின்னர்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
 
                திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க தேவையான கட்டுமானப் பணிகளை வரும் 30-ம் தேதிக்குள் முடிக்க அலுவலர்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், கூடுதலாக தொழிலாளர்களைக் கொண்டு பணியை விரைவுப்படுத்துமாறு  ஒப்பந்தக்காரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வியாண்டில் திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். எனவே, வரும் கல்வியாண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

downlaod this page as pdf

Read more »

மலேசியாவில் தங்க அனுமதி: தமிழக அரசுத் தரப்பில் மெளனம்

             சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அந்த நாட்டு அரசு ஒரு மாத காலத்துக்கு விசா அனுமதி தந்துள்ளது. மலேசியா விசா முடிவடைந்த நிலையில், அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் அவர் சென்னைக்கு வந்தார். இந்திய அரசு ஆறு மாத காலத்துக்கு விசா தந்ததன் அடிப்படையில் அவர் சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விமான நிலையத்துக்குச் சென்றபோது, தமிழக காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு விமான நிலைய வளாகத்துக்குள் சென்றனர். இருந்தாலும் பார்வதி அம்மாளையும், அவருக்குத் துணையாக வந்த பெண்ணையும் நள்ளிரவில் மலேசியாவுக்கே அதிகாரிகள் திரும்ப அனுப்பி வைத்தனர்.

                  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான தமிழர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த அதிபர் ராஜபட்ச இந்தியாவுக்கு வந்தால் கோவில்களில் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்கும் நிலையில், பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சைக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. மத்திய அரசு விசா கொடுத்திருந்த நிலையில், பார்வதி அம்மாளை அனுமதிக்க கூடாது என்று தமிழக காவல் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனரா என்ற கேள்விக்கு மெüனமே பதிலாக இருக்கிறது.

                   னிக்கிழமை முழுக்க இதுபற்றி பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இதில் தமிழக அரசுக்கு சம்பந்தம் உண்டா, இல்லையா என்பது பற்றியோ, எதற்காக பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது பற்றியோ அரசுத் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவு மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பார்வதி அம்மாளுக்கு ஒரு மாத காலத்துக்கு அந் நாட்டு அரசு விசா அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கெனவே மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் அவர், தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்திய அரசு உதவிகள் செய்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு, சிகிச்சைக்காக வந்தபோதுகூட, தமிழகத்தில் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கவில்லை என்ற பிரச்னை பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தமிழக அரசு இதனை செய்திருக்காது: ராமதாஸ்


              விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு திருப்பி அனுப்பியிருக்காது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னைக்கு வந்து பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 
               விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். சிகிச்சைக்காக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அவர் சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விமானத்திலிருந்து அவரை இறங்கவிடாமல், மீண்டும் அதே விமானத்தில் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் நவீன மருத்துவ சிகிச்சைக் கிடைப்பதால்தான் 81 வயதான அவர், இங்கே சிகிச்சைப் பெற வந்திருக்கிறார்.அவர் இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வழங்கியிருக்கிறது. அப்படியானால், இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்பதுதானே பொருள்.அப்படியிருந்தும், சென்னை நகரில் அவரை இறங்க விடாமல் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்குக் காரணமானவர்கள் யார்?நிச்சயமாக தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதனை செய்திருக்கமாட்டார்கள். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. முன்பு ஒருமுறை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் பாலசிங்கம் மற்றும் சந்திரஹாசன் ஆகியோரை சென்னையிலிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கி தடுத்து நிறுத்தியவர் முதல்வர் கருணாநிதி. எனவே, அவரது அரசு இதனை செய்திருக்காது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகள்தான் இந்தச் செயலை செய்திருக்கக் கூடும். 
 
                    இத்தகைய நடவடிக்கைகளுக்கு அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள்தான்.அவர்களது அனுமதியின்றி வெளிநாட்டவர் யாரும் இந்தியாவிற்குள் நுழைய முடியாது. சென்னை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார்கள்.மத்திய அரசின் அனுமதியில்லாமல், அவர்கள் கட்டளையிடாமல் இங்குள்ள குடியேற்ற அதிகாரிகள் செயல்பட்டிருக்க முடியாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்பதில் சந்தேகமில்லை. உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற மனிதநேயமற்ற செயல் நடந்ததாக வரலாறு இல்லை.எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைப் பெற அனுமதிப்பதுதான் உலக நாடுகள் கடைப்பிடித்து வரும் நடைமுறை.
 
                        நமது பகை நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கே வந்து, சிகிச்சை பெற்றுச் செல்ல அனுமதி வழங்கி வரும் நிலையில், இங்குள்ள ஆறரை கோடி தமிழர்களை நம்பி சிகிச்சைப் பெற வந்த பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே, சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள பார்வதி, மீண்டும் சென்னைக்கு வந்து தேவையான மருத்துவச் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்த அனுமதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.
 
தமிழகத்துக்கு அழைத்து வர வேண்டும்: தொல். திருமாவளவன்
 

மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:  
 
               இந்த நடவடிக்கைக்கு யார் காரணமாயிருந்தாலும், எது காரணமாயிருந்தாலும் அதை நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது. மனிதநேயமற்ற இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பார்வதி அம்மாளை தமிழகத்திற்கு அழைத்து வரவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய விவகாரம்: நெடுமாறன், வீரமணி, கிருஷ்ணசாமி கண்டனம்
 

          
               மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு  தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பழ. நெடுமாறன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
                    பிரபாகரனின் தாயார் பார்வதி 80 வயதை எட்டிய மூதாட்டி. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். இலங்கைச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு ஆளாகி, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.அவர் இந்தியாவில் 6 மாதம் தங்கியிருக்க, வெள்ளிக்கிழமை காலையில்தான் இந்திய அரசு விசா வழங்கியது.  ஆனால், இரவில் சென்னை வந்த அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

                              பார்வதி வருவதை இந்திய அரசு விரும்பாவிட்டால், அவருக்கு விசா வழங்காமல் இருந்திருக்கலாம். காலையில் விசா வழங்கிவிட்டு, இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். இந்திய அரசு விசா வழங்கிய பிறகு, சிலரின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். 22-ல் வைகோ, பழ. நெடுமாறன் உண்ணாவிரதம்: பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய சம்பவத்தைக் கண்டித்து வரும் 22-ம் தேதி சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள வைகோ, மேற்படி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்:

பார்வதியிடம் முறைப்படியான விசா இருந்துள்ளது. அப்படியிருந்தும் அவரை சென்னையில் சிகிச்சை பெறக் கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பியதைவிட மனிதாபிமானமற்ற, கொடுஞ்செயல் வேறு இருக்க முடியாது.

                    இதற்கு மத்திய அரசோ அல்லது அதில் பணிபுரியும் அதிகாரிகளோ, யார் காரணம் என்றாலும்,  அது கண்டனத்திற்கு உரிய செயலாகும்.

க.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்:

                   பிரபாகரனின் தாயார் என்பதைத் தவிர, வேறு எந்தக் குற்றமும் புரியாதவர் பார்வதி. அவர் நாடு கடத்தப்பட்டவரோ அல்லது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியோ அல்ல. எனவே, அவருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர்ஜுன் சம்பத் கண்டனம்:

சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பியதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
           வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஊடுருவி இந்தியாவின் பொருளாதாரத்துக்கே ஆபத்து விளைவுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

             இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேலுப்பிள்ளையின் மனைவியும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாருமான பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. இது மனிதநேயமற்ற செயல். இதுபற்றி தமிழக முதல்வரோ, மனிதநேய அமைப்புகளோ பேசாமல் இருப்பதும் வருத்தத்துக்குரியது. இதுகுறித்து உரிய விளக்கத்தை தமிழக முதல்வர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

காவல் துறையினர் கருத்து

               பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் அதற்கு இந்திய அரசு அனுமதி அளித்திருந்ததாகவும் தெரிகிறது.

                  இந்நிலையில், வைகோ மற்றும் நெடுமாறன் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு போகாமல் இருந்திருந்தால் மற்ற பயணிகளை போல எந்த பிரச்னை இல்லாமல் அவர் சென்னைக்கு வந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருக்கக் கூடும் என்று காவல் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
 

Read more »

நெய்வேலியில் எம்.ஜி.ஆர்., சிலை: ஜெ., திறப்பு

Latest indian and world political news information
  
நெய்வேலி:

                  நெய்வேலியில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை 19 ஆண்டிற்கு பிறகு ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.நெய்வேலி வட்டம் 9ல் கடந்த 1991ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சிலை நிறுவப்பட்டது. பல்வேறு சிக்கல் காரணமாக சிலை திறக்கப்படாமல், மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை திறக்க கடந்த மாதம் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி நேற்று நடந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் மாலை 3 மணிக்கு நெய்வேலிக்கு வந்தார். அங்கிருந்து காரில் சென்று வட்டம் 9ல் நிறுவப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்தார்.பின், தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டைக் கண்டித்து நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.

downlaod this page as pdf

Read more »

கணினி அறிவியல் குறித்த தேசிய அளவிலான பயிலரங்கம்

 சிதம்பரம்:

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் பாங்கை பகுத்தறியும் முறை மற்றும் ஆராய்ச்சி என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கத்தை அண்மையில் நடத்தியது. தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் கே.சீதாராமன் வரவேற்றார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பயிலரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார்.  பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் பி.பழனியப்பன். திருச்சி அண்ணாபல்கலை முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். விரிவுரையாளர் எஸ்.விஜயபானு நன்றி கூறினார். மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் துறைத் தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி


நெய்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிடும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் எம்.சி.சம்
நெய்வேலி:
 
              மிழகத்தில் 2700 மெகாவாட் மின்சார உற்பத்தி இழப்பு எப்படி ஏற்பட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
 
மின்வெட்டைக் கண்டித்து நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜெயலலிதா பேசியது:
 
                 அதிமுக ஆட்சியிலிருந்த 2006-ம் ஆண்டுவரை தமிழகம் மின் மிகை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்னுற்பத்தியில் உபரி மாநிலமாகவும் தமிழகம் இருந்தது. 2006-ம் ஆண்டு தமிழகத்தில் 10 ஆயிரத்து 11 மெகாவாட் மின்னுற்பத்தி இருந்தது. இதை 2006-07 ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். தற்போது மின்னுற்பத்தி 7 ஆயிரத்து 300 மெகாவாட்டாக உள்ளது. அதாவது 2 ஆயிரத்து 700 மெகாவாட் குறைந்துள்ளது. தமிழக அனல் மின் நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாததாலும், சரியான நிர்வாகமின்மையினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் தமிழக மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
 
                       திமுக அரசின் மோசமான செயல்பாடுகளால் தமிழகம் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது.1991-96-ம் ஆண்டுவரை அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் 1300 மெகாவாட் மின்னுற்பத்தி அதிகரித்தது. பின்னர் 2001-06-ம் ஆண்டு வரையிலான ஆட்சியின் போது கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது தமிழக அனல்மின் நிலையங்கள் சிறந்த பராமரிப்புக்கான தேசிய விருதுகளைப் பெற்றன. காற்றாலையில் தமிழகம் முதலிடம் வகித்தது.தமிழகத்தின் மின்வாரியப் பொருள்களை மறு மதிப்பீடு செய்ய ரூ.8 ஆயிரத்து 500 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.நிலக்கரி இறக்குமதியில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. எண்ணூரிலிருந்து மேட்டூருக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட நிலக்கரி, தற்போது எண்ணூரிலிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் மேட்டூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக ஒரு டன்னுக்கு ரூ.485 செலவழிக்கப்படுகிறது. இந்த லாபம் கருணாநிதியின் குடும்பத்துக்கு போய்ச் சேருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழக மின்வாரியத்துக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்படுகிறது. இப்போது கருணாநிதியின் கவனம் நிலக்கரி இறக்குமதியில்தான் உள்ளது. தமிழகத்தில் ஒரு அனல்மின் நிலையத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு 140 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அப்படியானால் 12 அனல்மின் நிலையங்களுக்கும், ஓர் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்தோனேசியாவில் இருந்து 2.1 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவில் 82 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலக்கரி 103 டாலருக்கு தமிழக மின்வாரியத்தால் வாங்கப்படுகிறது. 
 
                 இதன்மூலம் 1 டன்னுக்கு ரூ.1000 வரை கருணாநிதி குடும்பத்தினருக்குப் போய் சேருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் தனியார் அனல்மின் நிலையங்கள் மூலமாக கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும், அதன் மூலம் பல லட்சம் கொள்ளையடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. திமுக அரசின் கையாலாகாததனத்தால் தமிழக மின்வாரியத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.13 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.வடசென்னை அனல்மின் நிலையம் கடந்த 40 தினங்களாக இயங்கவில்லை. இதன்மூலம் வருவாய் இழப்பு ரூ.70.56 கோடி. மின்வாரியத்தின் மோசமான செயல்பாட்டாலும், பராமரிப்பின்மையாலும், அலட்சியத்தாலும் தமிழக மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 522 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றார் ஜெயலலிதா.அதிமுக ஆட்சிக்கு வந்தால்...2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மின் பற்றாக்குறையைப் போக்குவதுதான், அரசின் முதல் பணியாக இருக்கும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒரு சில மாதங்களில், மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்படும். 24 மணி நேர மின்சாரம், தங்கு தடையின்றி அனைவருக்கும் அளிக்கப்படும் என்ற உறுதியை நான் இப்போது உங்களுக்கு வழங்குகிறேன்.மக்கள் நலன் காக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி 2011-ல் அமைந்தவுடன், மின் உற்பத்தியில் தமிழகம் நிச்சயம் மிகை மாநிலமாக விளங்கும் என்றார் ஜெயலலிதா.


downlaod this page as pdf

Read more »

நெய்வேலியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு

 நெய்வேலி:

                    நெய்வேலியில் நிறுவப்பட்டு 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர். சிலையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். நெய்வேலிக்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்த ஜெயலலிதா, வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலையைத் திறந்துவைத்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகேவுள்ள அண்ணா திடலில் மின்வெட்டைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தலைமை ஏற்று நடத்தினர். முன்னதாக முன்னாள் அமைச்சர் செம்மலை வரவேற்றார். மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத் நன்றி கூறினார்.   ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், பி.எச்.பாண்டியன், மதுசூதனன், செங்கோட்டையன், முத்துசாமி, பா.வளர்மதி, மு.தம்பிதுரை, தளவாய் சுந்தரம், நயினார் நாகேந்திரன், பொன்னையன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு:

                     ஜெயலலிதாவுக்கு மாவட்ட அதிமுக, நெய்வேலி நகர அதிமுக, என்.எல்.சி. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஜெயலலிதாவுக்கு கடலூர் மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் நெய்வேலி விமானத் தளத்திலிருந்து ஆர்ப்பாட்ட மேடை வரையிலான சுமார் 6 கி.மீ. தூரம் வரை அதிமுக கொடிக் கம்பங்களும், டிஜிட்டல் பேனர்களும், பனை ஓலையிலான அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன் தலைமையில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உதயக்குமார், அபு, தட்சிணாமூர்த்தி, அதிமுக நகரச் செயலர் ரவிச்சந்திரன் மாவட்டப் பிரதிநிதி வெற்றிவேல், வி.சேகர், ஊ.மங்களம் சிவசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

downlaod this page as pdf

Read more »

ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாமுக்கு போலிச் சான்றுகளுடன் வரும் இளைஞர்க

 கடலூர்:

             கடலூரில் நடைபெற்று வரும் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமுக்கு, இளைஞர்கள் சிலர் போலிச் சான்றுகளுடன் வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தில் சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் டெக்னீஷியன், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் கிளர்க், சிப்பாய் வர்த்தகப் பணி, ஸ்டோர்கீப்பர் டெக்னிகல் போன்ற பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் முகாம் கடலூரில் 13-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுவையைச் சேர்ந்த இளைஞர்களுக்காக இந்த ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க வரும் இளைஞர்களுக்கு முதலில் உயரம் சரிபார்க்கப்படுகிறது. அடுத்து அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இதில் இளைஞர்கள் சிலர் போலிச் சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயன்றது ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

                சான்றிதழ்களில் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலிச் சான்றிதழ் அளித்த இளைஞர்கள் உடனடியாக முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டதாகும் அவர் கூறினார். இளைஞர் ஒருவர் போலிச் சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால், உடனே காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்வதுதான் முறை, என்றாலும் அந்த இளைஞரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு செய்யாமல் முகாமை விட்டு வெளியேற்றி விடுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இடைத்தரகர்கள் சிலர் பணத்துக்காக இளைஞர்களுக்கு போலிச் சான்றிதழ்களை தயாரித்து அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

download this page as pdf

Read more »

நூலகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடு சென்றுவர வாய்ப்பு

கடலூர் : 

             நூலகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் இலவசமாக வெளிநாடு சுற்றுலா சென்று வர வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
 
              கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை, ஊர் புற பகுதி நேர நூலகங்களில் 'நூலகக் கோடை முகாம்' மே மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில், நமது உலகம் நூலகம் என்னும் திட்டத்தின் கீழ் 2010-11ம் ஆண்டில் வட்ட அளவிலான நூலகப் போட்டிகள் 6, 7, 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வரும் மே 9ம் தேதி தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி, 16ம் தேதி ஆங்கில எழுத்து நிரப்புதல் போட்டி, 23ம் தேதி கணித விளையாட் டுப் போட்டி, 30ம் தேதி பொது அறிவுப்போட்டி ஆகியன நடத்தப்படவுள்ளன.
 
                       போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் இம்மாதம் ஏப்ரல் 30ம் தேதிக்குள் நூலகத்தில் உறுப்பினராக சேர வேண்டும். எனவே, பள் ளியில் பயிலும் மாணவ மாணவிகளை இப்போட்டியில் கலந்து கொள்ள செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை கடலூர் மாவட்ட நூலக அலுவலர் அசோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
                    மேலும் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக் கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வரும் 2011ம் ஆண்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் நூலகத்தில் உறுப்பினராக வேண்டும். அரசுப் பள்ளி, பிற பள்ளிகள் என தனித்தனியே நடத்தப்படும் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் ஐரோப்பா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல் லப்படுவார்கள். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள அரசுப் பொது நூலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

download this page as pdf

Read more »

சட்டசபையில் பேச நேரம் ஒதுக்காத போது மேலவை தேவையில்லை : இந்திய கம்யூ., தா.பாண்டியன் கருத்து

ஸ்ரீமுஷ்ணம் : 

               தி.மு.க., அரசின் வருவாய் பெருகியுள்ள நிலையில் வருவாய் ஈட்டும் திட்டங்களுக்கு தொகையை ஒதுக்கீடு செய் யவில்லை என இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் தா.பாண்டியன் கூறினார்.
 
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்குப்பாளையத்தில் விபத்தில் இறந்த விவசாய தொழிலாளர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வருகை தந்த இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் தா.பாண்டியன்  கூறியதாவது

                    அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை கடந்தும் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என தெரியவில்லை. அரசின் 'கான்கிரீட்' வீடு கட்டும் திட்டத்திற்கு தற்போதுள்ள விலைவாசி உயர் வின் காரணமாக ஒதுக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் ரூபாயில் வீடு கட்ட முடியாது. அதனை இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
                  மின் பற்றாக்குறையை போக்க தமிழக அரசிடம் தற்போது எந்த திட்டமும் இல்லை. அரசின் வருவாய் தற்போது 66 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது. கடனும் 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது. இருந்தாலும் அரசாங்கம் உற்பத்திக்கான திட்டங்களுக்கு நிதியை ஒதுக்காமல் கேளிக்கைகளுக்கும், அரசு நிகழ்ச்சிகளுக்கும் நிதியை வீண் விரயம் செய்து வருகிறது.
 
                   தமிழகத்தில் வேரோடு அழிந்து வரும் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும். சட்டசபையில் பேச போதுமான நேரம் ஒதுக்காத போது மேலவை தேவையில்லை. அதிகாரமும், அடிப்படையும் இல்லாமல் மேலவையில் நடக் கும் விவாதங்கள் பட்டி மன்றமாகவே அமையும். விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் நாடு முழுவதும் வரும் 27ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து  கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும். முதல்வரை புகழ்ந்தால் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்ற நிலையில் தற்போது தமிழகம் சென்று கொண்டுள்ளது. அனைத்தும் தெரிந்த முதல்வர் நிதியை ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு ஒதுக்குவதோடு, தமிழகத்தில் நடக்கும் கொலைகளையும் தடுக்க வேண்டும். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.


downlaod this page as pdf

Read more »

தமிழக மின்சாரத்தை தமிழகத்திற்கே விநியோகிக்க மே மாதம் 10ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

 சிதம்பரம் : 

                    தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மே மாதம் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தொழில் முனைவோர் அமைப்பு முடிவு செய்துள்ளது.

                    சிதம்பரத்தில் தொழில் முனைவோர் அமைப்பு ஆலோசனைக் கூட்டம்  அமைப்பாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. முருகப்பன், சண்முகம், அருண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   கூட்டத்தில் அதிகளவில் வேலை வாய்ப்பை வழங்கும் சிறு தொழில்களுக்கு மின்வெட்டை அமல்படுத்துவதை கண்டித்தும். மற்ற மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அந்த மாநிலங்களுக்கு பயன்படுவது போல் தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும் தமிழகத்திற்கே வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
               இக்கோரிக்கையை வலியுறுத்தி மே மாதம் 10ம் தேதி சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மணிவண்ணன், சுப்ராயன், கதிரவன், சக்திவேல், பிரபாகரன், ரமேஷ், வேல்முருகன், துரைராஜ், விஜய், நாராயணன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவராஜன் நன்றி கூறினார்.

download this page as pdf

Read more »

சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் விடியல் விழா! : இந்த ஆண்டு நடக்குமா என எதிர்பார்ப்பு


சிதம்பரம் : 

                சுற்றுலாத் தலமான பிச்சாவரம் கடற்கரையில் சூரிய தரிசன விழாவான 'விடியல் விழா' நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க் கின்றனர்.
 
                 சுற்றுலாத் தலமான சிதம்பரம் நகரில் நடராஜர் கோவில், பிச்சாவரம் வன சுற்றுலா மையம் இருப் பது சிறப்பு. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சிதம்பரம் வருகின்றனர். பிச்சாவரம் வன சுற் றுலா மையத்தையொட்டி அமைந்துள்ள சின்னவாய்க்கால் என்ற தீவு பகுதியில் இருந்து அதிகாலை சூரிய உதயத்தை துள்ளியமாக கண்டு களிக்கலாம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தை சுற்றுலா மையமாக மாற்ற சுற்றுலாத்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
 
              இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு கலெக்டராக இருந்த ககன்தீப்சிங் பேடி மற்றும் சிதம்பரம் சப் கலெக்டராக இருந்த ராஜேந்திர ரத்னூ ஆகியோர் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சென்றிருந்தபோது அதிகாலை சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அவர்கள், சுற்றுலா மையமாக்க  ஏற்ற இடமாக சின்னவாய்க்கால் உள்ளது என சுற்றுலாத் துறைக்கு பரிந்துரை செய்தனர். அதன் முதற்படியாக அந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி 'தில்லை வனத்தில் ஓர் விடியல்' என்ற சூரிய உதய தரிசன விழா நடத்தப்பட்டது.
 
                 அப்போதைய சுற்றுலாத் துறை கமிஷனர் சக்திகாந்த்தாஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இங்கிலாந்து, தென் அமெரிக்கா, பிரான்ஸ், கென்யா, பிரேசில், சுவிஸ்லாந்து உள் ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமான சுற் றுலா பயணிகள் பங்கேற்றனர். அதிகாலை 5 மணிக் கெல்லாம் அந்த திட்டு பகுதிக்கு வந்த அதிகாரிகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் யோகா மற்றும் பின் னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் இசைச் கச்சேரியுடன் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
 
            இந்த சுற்றுலா மையத்தில் மாதத்தில் 2 முறையாவது சூரிய உதய நிகழ்ச்சி விழா நடத்த ஏற்பாடு செய்யப்படும் என சுற்றுலாத்துறை கமிஷனர் கூறினார். ஆனால் அதே ஆண்டு இறுதியில் ஏற் பட்ட சுனாமியால் விடியல் விழா முயற்சி கைவிடப்பட்டது. அதன் பிறகு 2008ம் ஆண்டு கலெக்டராக இருந்த ராஜேந்திர ரத்னூ முயற்சியால் ஏப்ரல் 20ம் தேதி  விடியல் விழா கொண்டாடப்பட்டது. ஆனால் விழாவிற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என தெரிகிறது.
 
                  சுனாமிக்கு பின் மாவட்ட நிர்வாகம், கிள்ளை பேரூராட்சி, சுற் றுலாத்துறை சார்பில் விமர்சையாக நடத்தப் பட்ட விழா தொடர்ந்து நடக்கும் என சுற்றுலாப் பயணிகள் பெரிதும் எதிர் பார்த்தனர். ஆனால் கடந்த ஆண்டு விடியல் விழா நடத்த எவரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த ஆண்டாவது கண்டிப்பாக விடியல் விழா நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சுற் றுலா பயணிகள் காத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை முயற்சி எடுத்து விழா நடத்த முன் வர வேண்டும் என கோரிக் கையும் வைத்துள்ளனர்.

download this page as pdf

Read more »

கால்நடை சிகிச்சை முகாம்


சிறுபாக்கம் : 

             சிறுபாக்கத்தில் அரசு கால்நடை நீர் நில வளத் திட்டத்தின் கீழ் கால் நடைகளுக்கு மலட்டு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.
 
                 கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் செந்தாமரை கண்ணன் முகாமை துவக்கி வைத்தார்.  கால்நடை உதவி மருத்துவர்கள் ஒரங்கூர் கார்த்திகேயன், மங்களூர் சுப்ரமணியன், நல்லூர் தில்லை கோவிந்தன், வேப்பூர் கண்மணி உள்ளிட்டோர் சிகிச்சை அளித் தனர். தொடர்ந்து கிடாரி கன்றுகளை சிறப்பாக பராமரித்து வந்த 8 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

download this page as pdf

Read more »

விளையாட்டுப் பள்ளியில் தங்கி படிக்க போட்டி தேர்வு: மே 1ம் தேதி துவக்கம்

 கடலூர் : 

                 அரசு விளையாட்டு பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு ஒன்றிய அளவிலான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 1ம் தேதி துவங்குகிறது.
 
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               தமிழகத்தில் இயங்கி வரும் 13 விளையாட்டு பள்ளிகள் மற்றும் விடுதிகளில் வரும் கல்வி ஆண் டிற்கு தடகளம், கூடைப் பந்து, கிரிக்கெட், கால் பந்து, ஹாக்கி, நீச்சல், வாலிபால், குத்துச் சண்டை, டேக்வாண்டா விளையாட்டுகளில் ஆர் வம் உள்ள மாணவர்களும், தடகளம், கூடைப் பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கைப்பந்து, வாள் சண்டை மற்றும் நீச்சல் போட்டிகளில் ஆர்வம் உள்ள மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
 
                 இதற்காக ஒன்றியம், மாவட்டம் மற்றம் மாநில அளவுகளில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் உணவு, தங்குமிடம், விளையாட்டு சீருடை வழங்கி விளையாட்டுப் பயிற்சி அளிக் கப்படும். 13, 14, 15 மற்றும் 18 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒன்றிய அளவிலான தேர்வுகள் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 4ம் தேதிவரை நடக்கிறது. புதுப்பேட்டை, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளிகளில் 1ம் தேதி நடக் கிறது. கீரப்பாளையம் வடக்குப்பாளையம் சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி ஒன்றியங்களில் அந்தந்த பகுதி மேல்நிலைப் பள்ளிகளில் 2ம் தேதி தேர்வு நடக்கிறது. 3ம் தேதி எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி, தொழுதூர் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 4ம் தேதி மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி, லால்பேட்டை அரசு பள்ளி, காட்டுமன்னார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர் ஒன்றியத்திற்கு அண்ணா விளையாட்டரங்கிலும் தேர்வு நடக்கிறது.
 
                விளையாட்டு பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப் பம் பெற்று பூர்த்தி செய்து தங்கள் பகுதியில் போட்டிகள் நடக்கும் அன்று உரிய சீருடையுடன் பங்கேற்க வேண்டும். இதுபற்றி மேலும் தகவல் வேண்டுவோர் மாவட்ட விளையாட்டு அலுவலர் அல்லது போட்டிகள் நடக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

download this page as pdf

Read more »

விருத்தாசலம், சிதம்பரத்தில் மின் தடை நேரம் மாற்றம்


விருத்தாசலம் : 

          விருத்தாசலம் பஸ் நிலையப் பகுதியில் இன்று முதல் மின் நிறுத்த நேரம் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருத்தாசலம் செயற் பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                விருத்தாசலம் நகர எல் லைக்குட்பட்ட வயலூர், புதுக்குப்பம், காலேஜ் ரோடு, சரோஜினி நகர், பஸ் நிலையம், ஜங்ஷன் ரோடு, புதுப்பேட்டை, பூதாமூர், சிதம்பரம் ரோடு, கடை வீதி, சேலம் ரோடு, மணலூர், காந்தி நகர், கம்பர் தெரு, பெண்ணாடம் ரோடு, பூந்தோட்டம் ஆகிய பகுதிகளுக்கான மின் தடை நேரம் இன்று (19 ம் தேதி) முதல் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.
சிதம்பரம்: 

                   சிதம்பரம் மற்றும் பு.முட்லூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, மணலூர், அண்ணாமலை நகர், மாரியப்பா நகர்  புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (19ம் தேதி) முதல் காலை 9மணியில் இருந்து 12 வரையிலும்,  காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்ரீமுஷ்ணம் நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் மதியம் 12 மணி முதல் 3 மணிவரையிலும், சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அதனை சுற் றியுள்ள பகுதியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

downlaod this page as pdf

Read more »

பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., இல்லத் திருமணம்

 விருத்தாசலம் : 

              விருத்தாசலத்தில் பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் திருமணம் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
 
                   விருத்தாசலம் திருமலை திருச்சானூர் திருமண மண்டபத்தில் பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மகன் திருமணம் நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்கள் அருண் - காவியாவை வாழ்த்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணி, ஆரணி எம்.பி., கிருஷ்ணசாமி, வன்னியர் சங்க தலைவர் குரு, முன்னாள் எம்.பி., பொன்னுசாமி, வேல்முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

downlaod this page as pdf

Read more »

ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை : புதிய தமிழகம் கட்சி முடிவு

 கடலூர் : 

              ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
                 புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். தமிழர் சேனை மாவட்ட செயலாளர் பாஷா முன்னிலை வகித்தார். மாணவரணி மாவட்ட செயலாளர் வெற்றிவேலன் வரவேற்றார். நிர்வாகிகள் சுகுமார், மைனர், சதாசிவம், சுதாகர், தேவேந்திரன், வீரபாண்டி, பிரகாஷ், சிவக் கொழுந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
                       கூட்டத்தில், விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்வது என்ற உத்தரவை தமிழக அரசு திரும் பப் பெற வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். கடலூர் தபால் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை சுற்றி மதில் சுவர் கட்டி, பூங்கா அமைக்காததைக் கண் டித்து கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் மே மாதம் 22ம் தேதி ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

downlaod this page as pdf

Read more »

மேல்பட்டாம்பாக்கம் பள்ளி கட்டட பணி எம்.எல்.ஏ., பார்வை


நெல்லிக்குப்பம் : 

             மேல்பட்டாம்பாக்கம் பள்ளி கட்டட பணியை எம்.எல்.ஏ., சபா ராஜேந் திரன் பார்வையிட்டார்.
 
                         மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று மாடி கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பார்வையிட்டார். வரும் கல்வியாண்டில் பள்ளி துவங்குவதற்கு முன் கட்டட பணியை தரமாக முடிக்க உத்தரவிட்டார். பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, நகரமன்ற துணைத் தலைவர் புகழேந்தி, பலராமன், பழனிவேல், சுரேஷ்பாபு, ராஜா, ஞானமணி, கவுன்சிலர் தமிழ்மாறன் கலந்து கொண்டனர்.

Read more »

விருத்தாசலம் கல்லூரி நகர் வடக்கு பகுதியில் சாலை மற்றும் பூங்காவில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு


விருத்தாசலம் :  

          விருத்தாசலம் கல்லூரி நகர் வடக்கு பகுதியில் சாலை மற்றும் பூங்காவில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர்.
 
இதுகுறித்து கல்லூரி நகர் வடக்கு பகுதி பொதுமக்கள் சார்பில் ஆர்.டி.ஓ., முருகேசனிடம் அளிக்கப் பட்ட மனு: 

             விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரி அருகில் கல்லூரி நகர் உள்ளது. நகரின் வடக்கு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 30 அடி சாலையும், அருகிலேயே பூங்காவிற்கு 10 சென்ட் இடமும் ஒதுக்கப்பட்டது. இந்த சாலை வழியை அடைத்து தனி நபர் ஒருவர் கொட்டகை அமைத்து ஆக் கிரமிப்பு செய்துள் ளார். அதுபோல் அருகில் உள்ள பூங்காவிற்கான இடத்தை சுற்றி கம்பி வேலி போட்டு  மற்றொருவர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். நாங்கள் கல்லூரிக்கு சொந்தமான இடத்தின் வழியேதான் எங்கள் பகுதிக்கு சென்று வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பையும், சிறுவர்கள் விளையாடும் பூங்காவின் ஆக்கிரமிப்பையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

போலீசார், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

 திட்டக்குடி : 

            திட்டக்குடி நகைக் கடைகளில் நடைபெறும் திருட்டை தவிர்க்க போலீசார் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.
 
           போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் சம்பந்தம் வரவேற்றார். கூட்டத்தில், நகைக் கடைகளில் பக்ளர் அலாரம், 'டிவி' இணைப்புடன் வீடியோ கேமரா, பலமான கதவுகள், ஒருவழிப்பாதை, சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந் தால் உடன் தொலைபேசி எண் 100ல் தொடர்பு கொள்வது, திருட்டு நகைகளை பெறக் கூடாது, கடை வீதிகளில் புதியதாக செக்யூரிட்டி நியமிப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது. நகைக் கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் பாண்டியன், செயலாளர் சங்கர், பொருளாளர் ஐயப்பன், உப தலைவர் தயாளன், கிருஷ்ணமூர்த்தி, பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

Read more »

மூன்று ஒன்றியங்களுக்கு குடிநீர் வசதி என்.எல்.சி., நிர்வாகம் நிதி ஒதுக்கீடு

 கடலூர் : 

            கம்மாபுரம், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களின் குடிநீர் வசதிக்காக என்.எல்.சி., நிர் வாகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
 
            கடந்தாண்டு முழு ஊரக சுகாதாரத் திட்டத்தில் தன் னிறைவு பெற்ற 47 ஊராட் சிகளின் தலைவர்களுக்கு மத் திய அரசின் 'நிர்மல் கிராம் புரஷ்கார்' விருது வழங்கும் விழா கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடந்தது. திட்ட இயக்குனர் ராஜஸ்ரீ வரவேற்றார். 

சுகாதார திட்டத்தில் தன்னிறைவு பெற்ற கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில, குமராட்சி, கீரப்பாளையம், மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் மற்றும் மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 47 ஊராட்சிகளின் தலைவர்களுக்கு கலெக்டர் சீத்தாராமன் மத்திய அரசின் 'நிர்மல் கிராம் புரஷ்கார்' விருது மற்றும் கேடயம் வழங்கி பேசுகையில், 

               'உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மக்களின் ஒத்துழைப்பால் முழு  சுகாதார திட்டத்தில் மாநிலத்தில் கடலூர் மாவட் டம் முதலிடம் பிடித்துள்ளது.  இத்திட்டத்தில் கடந் தாண்டு சிறப்பாக செயல் பட்ட 47 ஊராட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் 'நிர்மல் கிராம் புரஷ்கார் விருது' வழங்கப்படுகிறது. இதனை பின்பற்றி பிற ஊராட்சி தலைவர்களும் முழு சுகாதார திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஊராட்சி தலைவர்கள் குடிநீர் தடையின்றி வழங்க கவனம் செலுத்த வேண்டும். குடிநீர் வசதிக்காக போதிய நிதி உள்ளது. தற்போது கம்மாபுரம், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த என்.எல்.சி., நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது' என பேசினார்.

download this page as pdf

Read more »

குடிநீர் பாட்டில் ஆய்வு செய்ய கோரிக்கை


விருத்தாசலம் : 

           குடிநீர் பாட்டில்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என விருத்தாசலம் நகராட்சிக்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுகுறித்து மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜீ நகராட்சி கமிஷனரிடம் அளித் துள்ள மனு: 

                 விருத்தாசலம் நகரில் நகராட்சி அதிகாரிகள் பல கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய் ததை வரவேற்கிறோம். கடைகளில் மட்டும் ஆய்வு செய்யாமல், மொத்த விற்பனையாளர்களின் குடோன்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் குடிநீர் பாட்டில்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

downlaod this page as pdf

Read more »

பரிவிளாகம் கிராமத்தில் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம்

 கடலூர் : 

               காட்டுமன்னார்கோவில் அடுத்த பரிவிளாகம் கிராமத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் வரும் 21ம் தேதி பொது மக்கள் குறை கேட்கிறார். காட்டுமன்னார்கோவில் வட்டம், பரிவிளாகம் கிராமத்தில் வரும் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இம்முகாம் தொடர்பாக வி.ஏ.ஓ., அலுவலகத்தின் முன்பாக பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெற பெட்டி வைக்கப்படும். மனு கொடுக்க விரும்பும் பொதுமக்கள் நேரில் வந்து மனுக்களை பெட்டியில் போடலாம்.   மேலும் அன்று காலை 10 மணியளவில் வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் நேரில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளனர்.
 
                   இவ்வாறு பெறப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நடவடிக்கையின் விபரம் மற்றும் கோரிக்கைக்களுக்கான பதிலை மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும். மேலும் மனுநீதி நாளன்று பொது மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்களை சம்மந்தப்பட்ட துறையினர் செய்து காண்பிக்கவுள்ளனர்.

Read more »

போலீசாரை கண்டித்து போராட்டம் பா.ம.க., மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

 குறிஞ்சிப்பாடி : 

                           பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் மோகன், விஜயகாந்தி, தட்சணாமூர்த்தி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரவேல் வரவேற்றார்.  மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் திருமால்வளவன் பேசினார். பண்ருட்டி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர்கள் சக்கரவர்த்தி, செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், ஒன்றிய தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் 28ம் தேதி மகாபலிபுரத்தில் வன்னியர் இளைஞர் சங்கம் நடத்தும் சித்திரா பவுர்ணமி விழாவில் கலந்து கொள்வது. வழிசோதனைபாளையத்தில் நடந்த கலவரத்தில் மோட்டார் கொட்டகைகளுக்கு தீ வைத்து கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்துவது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

downlaod this page as pdf

Read more »

காட்டுமன்னார்கோவிலில் தீ தொண்டு நாள் விழா

 சிதம்பரம் : 

              காட்டுமன்னார்கோவிலில் தீ தொண்டு நாள் விழாவையொட்டி லால்பேட்டை வார சந்தையில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செய்முறை விளக் கம் செய்து காண்பிக்கப் பட்டது.
 
                  காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை சார்பில் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீ விபத்து முதலுதவி மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் செய்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் லால்பேட்டை வார சந்தையில் தீ விபத்து முதலுதவி செய்வது பற்றி நிலைய தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் செயல் முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

download this page as pdf

Read more »

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பயிற்சி

நெல்லிக்குப்பம் : 

              பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பயற்சி முகாம் நடந்தது. அண்ணாகிராமம் வட்டார வள மையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பயற்சி முகாம் நடந்தது. அண்ணாகிராமத்தில் உள்ள 42 ஊராட்சிகள் நகராட்சியில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்தனர். மேற்பார்வையாளர் சம்பத்குமார், பயிற்றுநர்கள் குண சுந்தரி, கஜேந்திரன், பாமா ஆகியோர் பள்ளி செல்லா 98 மாணவர்களை கண்டறிந்தனர். இவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

downlaod this page as pdf

Read more »

ஆதிமூலேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு

 பரங்கிப்பேட்டை : 

              சிதம்பரம் அருகே ஆதிமூலேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 
              சிதம்பரம் அடுத்த அகரம் மண்டப தெருவில் புகழ்பெற்ற ஆதிமூலேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்து வருகிறது. சித்திரை மாதம் முதல் வாரத்தில் ஆதிமூலேஸ்வரர் மூலவர் மீது கோபுரம் வழியாக சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டு சித்திரை 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை ஆதிமூலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிப்பாடு, ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சித்திரை 1ம் தேதியில் இருந்து கோவில் எதிரே உள்ள கோபுரம் வழியாக சூரிய ஒளி மூலவர் மீது லேசாக பட்டு வந்தது. நேற்று சூரிய ஒளி மூலவர் மீது முழுவதும் விழுந்து அற்புத நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

சின்னவாய்க்காலில் கழிவு நீர் நோய் பரவும் அபாயம்

 கடலூர் : 

             கடலூர் நத்தவெளி ரோடில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
                  கடலூர் நத்தவெளி ரோடு அருகே அகலமான சின்ன வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்கால் திருவந்திபுரம் சாலைக்கு இணையாக பாதிரிக்குப்பத்தில் இருந்து   அரசு அச்சக கட்டடம் அருகே சாலையை கடந்து கெடிலம் ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் லட்சமி சோரடியா பள்ளி வரை நகராட்சியில் தூர் வாரப்பட்டு உள்ளது. மீதியுள்ள பகுதி தூர் வாராத  காரணத்தால் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் வாய்க்காலில் அடைத்துக் கொண்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் நத்தவெளி சாலை அருகே குளம் போல் தேங்கி நிற்கிறது. பாதிரிக்குப்பத்தில் இருந்து வரும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

நெல்லிக்குப்பம் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் தொடும் தூரத்தில் மின் ஒயர்: நடவடிக்கை தேவை


நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் சிறுவர்கள் தொட்டு விடும் உயரத்தில் மின் கம்பங்களில் 'பியூஸ்' கேரியர், மின் ஒயர்கள் தொங்குவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
நெல்லிக்குப்பம்:

                     கீழ் பட்டாம்பாக்கம் தேசிய துவக்கப் பள்ளி வளாகம் அருகிலேயே தெரு விளக்குகளுக்கான சுவிட்ச் போர்டு உள்ளது. இதற்கு மூடியில்லாததோடு மிகவும் தாழ்வாக ஒயர்கள் தொங்குகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் தொடும் உயரத்தில் ஒயர்கள் உள்ளன. நெல்லிக்குப்பம் நகராட்சியில் தெரு விளக்குகள் பராமரிப்பு பணி  தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அலட்சியமாக செயல்படுவதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
                 மேலும் அதே பகுதியில் ராமர் கோவில் உட்பட பல இடங்களில் இதுபோன்ற சுவிட்ச் போர்டுகள் தாழ்வாக கைக் கெட்டும்  உயரத்தில் உள்ளது. விபத்துகள் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சேத்தியாத்தோப்பு: 

               பெரியக்குப்பம் கிராமத்தில் சாலையின் மைய பகுதியில் மின் கம்பத்தில் தரையிலிருந்து ஒரு அடி தூரத் தில் அந்த பகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கும்  'பியூஸ்' கேரியர் பெட்டி திறந்த நிலையில் காணப்படுகிறது. அப்பகுதியில் குடியிருப்பவர்கள் பல முறை பெட்டியை அகற்றக் கோரியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

download this page as pdf

Read more »

புவனகிரியில் அடிக்கடி 'டிராபிக் ஜாம்' மக்கள் அவதிக்கு நிரந்தர தீர்வு எப்போது?

 புவனகிரி : 

                  புவனகிரி கடைத்தெரு பகுதியில் அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஏற்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 
               நெய்வேலியிலிருந்து சிதம்பரம் வழியாக நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், கடலூரிலிருந்து வரும் வாகனங்களும் புவனகிரியை கடந்துதான் செல்ல வேண்டும். அதனால் தினமும், பஸ், லாரி, கார் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் புவனகிரி வழியாக செல்கிறது. ஆனால் இத்தனை வாகனங்கள் செல்லும் புவனகிரியில் விஸ்தாரமான சாலை வசதி இல்லை. இருக்கும் சாலையும் ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி விட்டது. அடிக்கடி சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் எந்த பயனும் இல்லை. அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளும் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் புவனகிரி கடைத் தெரு பகுதியில் நேருக்கு நேர் வாகனங்கள் வந்து விடுவதால் அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

download this page as pdf

Read more »

சென்னிநத்தம் பகுதிக்கு தனி மயானம் கோரி முதல்வருக்கு மனு


சேத்தியாத்தோப்பு : 

              சென்னிநத்தம் பகுதிக்கு தனி மயானம் மற்றும் மயானபாதை அமைத்து தர முதல்வருக்கு கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுபற்றி கிராம மக்கள் சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

              சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட சென்னிநத்தம் (தெற்கு) பகுதியில் சமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் பகுதிக்கென்று தனியாக மயான வசதி ஏதும் இல்லை. நீண்ட காலமாக எங்கள் பகுதியில் இறப்பவர்களை வெள்ளாற்றின் மைய பகுதியில் எரிப்பதும், கரையோர பகுதியில் புதைப்பதும் நடைமுறையில் உள்ளது. தற்போது கரையோர பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து விட்டதால் அங்கு வசிப்போர் பிணங்களை புதைக்கவும், வெள்ளாற்றில் எரிக்கவும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு தனியாக மயானமும், மயான பாதையும் அமைத்து தரவேண்டி பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் பலனில்லை. எனவே சென்னிநத்தம் பகுதிக்கு மயான வசதியும், பாதையும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

விநாயகர் சிலை மாயம் கடலூரில் பரபரப்பு

கடலூர் : 

               கடலூர் நத்தவெளி ரோடு கங்கையம்மன் கோவிலில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
 
                 திருப்பாதிரிப்புலியூர், நத்தவெளி ரோட்டில் கங் கையம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள முருகர், விநாயகர் சிலை வைத்து அப்பகுதி மக்கள் பூஜை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி சரவணன் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 4 மணிக்கு பூஜை செய்வதற்காக பார்த்தபோது விநாயகர் சிலை காணாதது கண்டு திடுக்கிட்டார். காணாமல் போனது கல் சிலையாக இருப்பதால் புதியதாக கோவில் கட்டியுள்ளவர்கள் வழிபடுவதற்காக எடுத்துச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


downlaod this page as pdf

Read more »

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

 பண்ருட்டி : 

                 பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
 
                 பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிவேல் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குருதண்டபாணி வரவேற்றார். அண்ணாகிராமம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடாஜலம், சிவக்குமார், மேற்பார்வையாளர் சம்பத்குமார், ராமமூர்த்தி, மணிவேல், ராமசாமி, சேகர்  ஆகியோர் பேசினர். இதில் ஆசிரியை கள் இந்திராகாந்தி, ஜான்சி பாய், சத்தியவாணி, சேகர்  உட்பட பலர் பங்கேற்றனர்.

download this page as pdf

Read more »

கடலூர் முதுநகரில் படகுகள் பழுது நீக்கும் பணி தீவிரம்

 கடலூர் : 

                   கடலில் மீன்பிடிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்கள் விசைப் படகுகளை பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
             கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் அடைகின்றன. அந்த நேரத்தில் வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன் வளம் குறைந்து வருகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டும் கடலில் மீன் வளத்தை மேம்படுத்தும் பொருட்டும் கோடை காலங்களில் 45 நாட்கள் மீன் பிடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனையடுத்து விசைப்படகில் சென்று சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிக்க கடந்த 15ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி மீனவர்கள் தங்கள் விசைப் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த தருணத்தை  மீனவர்கள் பயன்படுத்திக் கொண்டு படகில் மராமத்து பணிகளை பார்க்கவும், இன்ஜினில் உள்ள பழுது நீக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

download this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior