உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 05, 2011

கடலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டி பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் வரவேற்பு

கடலூர்:

          கடலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் கடலூர் இசைப்பள்ளியை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
இது குறித்து கலைபண்பாட்டு மையம் மண்டல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் ஆக்கப்பூர்வமான கலைகளை வெளிக்கொண்டு வர, அரசு ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகளை நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வருகிறது. மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்க கலைப்போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.நடனப்போட்டி: பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்பட பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை.

குரலிசைப்போட்டி: 

              கர்நாடக இசை, தேசியப்பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி, நாட்டுப்புறப் பாடல்களை பாட வேண்டும்.ஓவியப்போட்டி: 40க்கு 30 செ.மீ., அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்ட்டிங் என எந்த வகையிலும் ஓவியங்கள் அமையலாம். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

              மாவட்ட கலைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற சிறார்கள் மாநில அளவிலான கலைப்போட்டியில் சவகர் சிறுவர் மன்ற செலவிலேயே பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் படிப்புச் சான்றிதழ்களுடன் 

கடலூர் புதுப்பாளையம், 
மாவட்ட இசைப்பள்ளியை அணுகவும்.

Read more »

சிதம்பரத்தில் அனுக்கிரகா கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு 2 லட்சத்திற்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா

சிதம்பரம்:

            சிதம்பரத்தில் அனுக்கிரகா கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.

               நந்தனார் பெண்கள் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சச்சிதானந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன் முன்னிலை வகித்தார். அனுக்கிரகா கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் மணிரத்தினம், டேபிள் டென்னிஸ் போட்டியில் மாநில அளவில் பங்கேற்க உள்ள மாணவிகள் தேன்குழலி, பாண்டிச்செல்வி ஆகியோருக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் உட்பட 2 லட்சத்திற்கான கல்வி உதவித் தொகை வழங்கினார்.
 

                  டாக்டர் சங்கர், சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு குழு செயலர் இளங்கோ, ஓய்வு பெற்ற ஆசிரியர் மணிவேல், கிள்ளை பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கலியமூர்த்தி, அறக்கட்டளை செயலர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து ஆண்கள் பள்ளியிலும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.










Read more »

திட்டக்குடியில் பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி வகுப்புகள் துவக்க விழா

திட்டக்குடி:
 
         பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி வகுப்புகள் துவக்க விழா மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா திட்டக்குடியில் நடந்தது. திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி நிறுவனர் கோடிப்பிள்ளை தலைமை தாங்கினார். தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் முருகேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் சண்முகம், கருணாநிதி, கண்ணன், இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் லெனின் நன்றி கூறினார்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior