உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 02, 2010

கடலூர் மாவட்டத்தில் கன மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது : 200 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது

கடலூர் : 

                கடந்த 26ம் தேதி பெய்த பேய் மழையால் பெருக்கெடுத்த மழை நீர் வடிவதற்குள் நேற்று முன்தினம் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

                இடைவிடாது பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய போதிலும் கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தது. கடந்த மாதம் வங்கக் கடலில் ஏற்பட்ட "ஜல்' புயல் காரணமாக இரண்டு நாள் கனமழை பெய்தது.

                  அதன்பிறகு எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 23ம் தேதி இரவு முதல் மழை பெய்யத் துவங்கியது. பரவலாக மிதமாக பெய்து வந்த மழை கடந்த 26ம் தேதி தீவிரமடைந்தது. ஒரே நாளில் மாவட்டத்தில் சராசரியாக 200 மி.மீ., அளவு மழை கொட்டியது.

                    இதற்கிடையே மாவட்டத்தின் நீர் ஆதார பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கன மழை பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் பெருக்கெடுத்ததால் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தா, வெள்ளாறு, பரவனாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மாவட்டமே வெள்ளக்காடானது. 

                     குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தேரி மற்றும் சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தில் வெள்ளாற்று கரை உடைந்ததால் 8 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. விருத்தாசலத்தில் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் விருத்தாசலம் - சேலம், விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை, அரியலூர் மாவட்டம் செங்கால் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் காட்டுமன்னார்கோவில் - திருச்சி, வடலூர் - சேத்தியாத்தோப்பு சாலை போக்குவரத்து தடைபட்டது.

                    அதேப்போன்று வடிகால்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் கடலூர் முதுநகர், வண்டிப்பாளையம், குழந்தை நகர், தானம் நகர், நவநீதன் நகர், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், ராமநாதன் நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளாறு, கொள்ளிடம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாக்களில் பல கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்தன. முகத்துவாரம் தூர்ந்து போனதால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வடிவதில் தாமதமானது. மாவட்டத்தின் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

                    27ம் தேதி பகல் 12 மணிக்கு மேல் மழை விட்டது. அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வடிகால் வாய்க்கால்களை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரியதால் மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மழை நீர் வடிந்தது. மேலும் பெரும்பாலான இடங்களில் மோட்டார் மூலமும் நீர் வெளியேற்றப்பட்டது. மழை நின்றதால் நீர் நிலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்ததால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மெல்ல, மெல்ல குறைந்து வந்தது. 

                 இன்னும் இரண்டு நாள் மழை விட்டால் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில் வங்கக் கடலில் மீண்டும் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்யத் துவங்கியது. இரவு 8 மணிக்கு மேல் தீவிரமடைந்த மழை விடிய, விடிய கொட்டியது.

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விவரம்: 

பரங்கிப்பேட்டையில் 185, 
புவனகிரி 102, 
சிதம்பரம் 93, 
கொத்தவாச்சேரி 87, அ
ண்ணாமலை நகர் 86.80,
கடலூர் 84,
சேத்தியாத்தோப்பு 76,
வானமாதேவி 68.30,
பெலாந்துறை 64,
காட்டுமன்னார்கோவில் 62,
லக்கூர் 48,
லால்பேட்டை 44,
பண்ருட்டி 40,
விருத்தாசலம் 38.20,
மேமாத்தூர் 38,
குப்பநத்தம் 33.20,
கீழ்ச்செருவாய் 30,
ஸ்ரீமுஷ்ணம் 30,
தொழுதூர் 20,
காட்டுமயிலூர் 20,
வேப்பூர் 16 மி.மீ.,

              மழை பெய்துள்ளது.

                 மாவட்டத்தின் வடிகால் பகுதியான பரங்கிப்பேட்டை, புவனகிரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் கடந்த 26ம் தேதி பெய்த மழை நீர் முற்றிலுமாக வடியாத நிலையில், நேற்று முன்தினம் ஒரே இரவில் பெய்த கன மழை காரணமாக மேற்கண்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

                    இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து கனமழை கொட்டியதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் சூழும் கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீட்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

Read more »

வலைகளில் இருந்து தப்பிய வயல்வெளி பறவை நண்பர்கள் !

கடலூரை அடுத்த செம்மங்குப்பம் அருகே உழவு நடைபெறும் வயலில், பூச்சிகளைத் திண்பதற்காக சூழ்ந்து கொண்ட கொக்குக் கூட்டம்.
கடலூர்:

                 பயிர்களைக் காப்பாற்ற ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவதால், இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு மீண்டும் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

                பூமியில் உயிரினங்கள் அனைத்தும், ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவைகளாகவே உள்ளன. இந்தச் சங்கிலித் தொடரில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டால், அனைத்து உயிரினங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.÷நெல் பயிரில் ஏதேனும் சிறு அளவில் பூச்சி தோன்றினாலே, நமது விவசாயிகள் வயல் முழுமைக்கும் வலுவான ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்து விடுகிறார்கள். 

                  இதனால் சம்மந்தப்பட்ட பூச்சிகள் அழியும் அதே நேரத்தில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகின்றன. தொடர்ந்து பூச்சிக் கொல்லி மருந்துடனும், ரசாயன உரங்களுடனும் வாழவேண்டிய நிலை பயிர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை உண்டு வாழ்பவை கொக்கு, மடாயான், நாரை போன்ற பறவைகள். நெல் வயல்களில் உழவு ஆரம்பித்த உடனேயே கொக்கு உள்ளிட்ட பறவைகள் வயல்வெளிகளைச் சூழ்ந்து கொள்ளும்.

                 காற்றில் ஈரப்பதம் அதிமாகும்போது, உருவாகும் படைப்புழு, அந்துப் பூச்சிகள், இலை சுருட்டுப்புழு, குருத்துப் பூச்சி உள்ளிட்ட பூச்சிப் புழுக்களை இப்பறவைகள் கொத்திச் சாப்பிட்டு விடும். இதனால் நோய்களில் இருந்து பயிர்கள் காக்கப்படுகின்றன. சிறு அளவில் பூச்சிப் புழுக்கள் காணப்படும்போதே விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை அடித்து விடுவதால், பயிர்களுக்கு நன்மை பயக்கும் தட்டான், ஊசித் தட்டான், தரைவண்டு, பொறிவண்டு, சிலந்தி, குளவி உள்ளிட்டவற்றையும் பூச்சிக் கொல்லி மருந்துகள் அழித்து விடுகின்றன.

                பூச்சிக் கொல்லி மருந்துகள் அடித்த வயல்வெளிகளுக்கு, விவசாயிகளின் நண்பனான கொக்கு, மடாயான் உள்ளிட்ட பறவைகளும் வருவதில்லை. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் வனப்பகுதியில் ஏராளமான கொக்கு, மடாயான், நாரை உள்ளிட்ட பறவைகள் உள்ளன. இவை கடலூர் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்து இரை தேடுகின்றன. வயல்வெளி நண்பர்களாக வலம் வருகின்றன. 

               ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வயல்வெளிகளிலும், வனப் பகுதிகளிலும் நரிக் குறவர்களின் துப்பாக்கிகளுக்கும், வலைகளுக்கும் இரையாகி வந்தன. இவற்றின் இறைச்சி ஹோட்டல்களிலும், பரோட்டாக் கடைகளிலும் மக்களுக்குச் சுவையான விருந்தாகி வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தில் கொக்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு வருகிறது. கொக்குகளை சுட்டும், பிடித்தும் அங்காடிகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லும் நரிக்குறவர்கள் பலர், வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பலருக்கு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது கொக்கு உள்ளிட்ட பறவைகளை வயல்வெளிகளில் அதிகமாகப் பார்க்க முடிகிறது 

இது குறித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முட்லூர் விஜயகுமார் கூறுகையில், 

                 "விவசாயிகளின் நண்பர்களான கொக்கு, நாரை, மடாயான் போன்ற பறவைகள், பெருமளவுக்கு அழிக்கப்பட்டு வந்தன.÷இதுகுறித்து பல ஆண்டுகளாக விவசாயிகள் குறைகேட்கும் கூட்டங்களில், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.÷இதனால் கொக்கு உள்ளிட்ட பறவைகள் அதிக அளவில் சுதந்திரமாக வயல்வெளிகளைச் சுற்றி வருகின்றன.

                வயல்களில் பூச்சித் தொல்லை குறைந்து வருகிறது. வயல்வெளிகளில் பயிர்களில் அமர்ந்து, அந்துப் பூச்சிகள் உள்ளிட்டவற்றைக் கொத்தித் தின்னும் கொக்கின் அழகு அலாதியானது.  விவசாயம் செழிக்க பறவை இனங்கள் காப்பாற்றப்பட வேண்டும்."

பூச்சிக்கொல்லியை பயன்படுத்தியதில்லை

                     நான் 10 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியது இல்லை. லேசான பூச்சித் தாக்குதல் தெரிந்தால், நொச்சி, ஆடாதோடா, பீச்சலாத்தி, வேம்பு இலைகளை பறித்து வந்து, தண்ணீர் விட்டு அவித்து, அவற்றை அந்த நீருடன் சேர்த்து அரைத்து, தெளிப்பான் மூலம் தெளித்து விடுவேன். இது அற்புதமான இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து. இதனால் எனது வயலில் பூச்சிகள் அண்டுவது இல்லை' என்றார்.

Read more »

நீர் தேங்கியுள்ள பயிர்களைப் பாதுகாக்க வேளாண்துறை ஆலோசனை

சிதம்பரம்: 

                 வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நெற்பயிர் பாதிக்கப்படலாம். மேலும் பூச்சி, பூஞ்சாணங்களால் நெற்பயிருக்கு பாதிப்பு உண்டாகலாம். எனவே விவசாயிகள் கீழ்கண்ட பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என பரங்கிப்பேட்டை உதவி வேளாண்மை இயக்குநர் இ.தனசேகர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

விவரம் வருமாறு: 

                  நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி பயிர் மூழ்காத அளவு நீரை வெளியேற்ற வேண்டும். தற்போது மூழ்கியிருக்கும் பகுதிகளில் இளம்பயிரில் நட்ட குத்துக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அதே ரக நாற்றுகள் கிடைத்தால் போக்கிடங்களில் நடவு செய்ய வேண்டும்.

               சம்பா பயிர் நடவு செய்து 30-40 நாள்களுக்கு மேல் இருப்பின், இப்பயிரில் தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு போன்ற பூச்சிகளும் பயிர் அடர்ந்து வளர்ந்திருக்கின்ற பகுதியில் புகையான், பச்சைத்தத்து பூச்சிகள், எலிகளின் சேதம் போன்றவை காணப்படலாம்.

                இவற்றை கண்காணித்து பூச்சிக் கட்டுப்பாட்டிற்கான மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். பூச்சிகளின் தாக்குதல் தென்படும் இடங்களில் 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற அளவில் புரோபினோபாஸ் மருந்தை கலந்து கைத்தெளிப்பான் மூலம் மழை இல்லாத நேரத்தில் தெளிக்கவும்.

                  தற்போது குலை நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிகையாக நடவு வயலில் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் கலவையை 30 கிலோ நன்கு மக்கிய மற்றும் உலர் நிலையில் உள்ள சாண எரு கலந்து இட வேண்டும். மேலும் ஏக்கருக்கு கார்பன்டசிம் 100 கிராம் அல்லது டிசைசைக்ளோசால் 200 கிராம் மருந்து 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

                  பாக்டீரியா இலைக்கருகல் மற்றும் கீறல் நோய்களின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீத பசுஞ்சாணக் கரைசல் 100 லிட்டர் நீரில் கரைத்து 12 மணி நேரம் ஊற வைத்து தெளிந்த நீரை வடித்து இத்துடன் 100 லிட்டர் நீரை கலந்து 200 லிட்டராக்கி தெளிக்கவும். அல்லது ஸ்டரெப்டோமைசின் சல்பேட்டுடன் டெட்ராசைக்கிளின் கலந்து மருந்து கலவையை ஏக்கருக்கு 120 கிராமுடன் காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவும்.

                நீர்வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 55 கிலோ யூரியாவுடன் 45 கிலோ ஜிப்சம் மற்றும் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து இத்துடன் 42 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.

                   பயிரின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக 200 லிட்டர் நீரில் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்சல்பேட்டைக் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும் என உதவி வேளாண்மை இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார்.

Read more »

தமிழகம் முழுவதும் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி விரிவாக்கம்

தமிழகம் முழுவதும் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைக்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி
   
              தமிழகம் முழுவதும் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

                 ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி முதலில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கோவையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது.இப்போது இந்த வசதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இந்த புதிய வசதியைத் தொடங்கி வைத்து ஆர்க்காடு வீராசாமி பேசியது:

                    மின் கட்டண வசூல் மையங்கள் பரவலாக இருந்தாலும் இறுதி நேரத்தில் கட்டணம் செலுத்த வருபவர்களே அதிகம். இதனால், நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து கட்டணத்தைச் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே தாழ்வழுத்த மின் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் முறை சென்னையில் 2008-ல் தொடங்கப்பட்டது. கோவை மண்டலத்துக்கு 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் இவ்வசதி விரிவுபடுத்தப்பட்டது.

              பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதால் இதை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சி செயல் வடிவம் பெற்றுள்ளது.ரூ. 3 கோடி செலவில் புதிய வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களை நிறுவி இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். இப்போது 7 வங்கிகளில் மட்டுமே இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. நுகர்வோர்களின் வசதிக்காக மேலும் பல வங்கிகளுக்கு அனுமதி வழங்கவுள்ளோம். 

                 அதேபோல குறிப்பிட்ட 50 அஞ்சல் அலுவலகங்களில் மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. இதுவும் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.மின் பற்றாக்குறையைப் போக்க கரும்புச் சக்கை, காற்றாலை ஆகியவற்றின் மூலம் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவை அனைத்தும் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

                 விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் மோட்டார் இணைப்பு தரும் அரசின் திட்டத்துக்கு கூடுதலாக 750 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இதையும் கருத்தில் கொண்டு மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் ஆக்கப்பூர்வமான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.இந்த நிகழ்ச்சியில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் சி.பி.சிங், அரசு செயலர் டேவிதார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,
  
எங்கிருந்தும் செலுத்தலாம்! 

                 இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியால், தமிழகத்தின் எந்த ஒரு பகுதியில் உள்ள வீட்டுக்கும் எந்த இடத்தில் இருந்தும் கட்டணம் செலுத்தலாம். உதாரணமாக, மதுரையில் உள்ள ஒரு வீட்டின் மின் கட்டணத்தை சென்னையில் இருந்தவாறே கட்டலாம். கிராமப்புறங்களில் உள்ள பலர், வேலை நிமித்தமாக நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்கள். தனது கிராமத்தில் உள்ள வீட்டின் மின் கட்டணத்தை - இணையதள வசதி உள்ள எந்தப் பகுதியில் இருந்தும் கட்டலாம்.

இணையதள முகவரி:


http://www.tneb.in/

https://www.tnebnet.org/awp/TNEB





 

Read more »

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: வரைவு விதிமுறைகள் இணையதளத்தில் வெளியீடு

            குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வரைவு விதிமுறைகள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

                 தமிழக அரசின்  www.tn.gov.in/​schooledu​c​ation/​ இணையதளத்திலும், பள்ளிக் கல்வித் துறையின்  www.pallik​alvi.in என்ற இணையதளத்திலும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இந்த விதிமுறைகளைப் பார்வையிட்டு தங்களது கருத்துகளை டிசம்பர் 20-ம் தேதிக்குள் அரசுக்குத் தெரியப்படுத்தலாம்.

இணை இயக்குநர் (உயர் கல்வி), 
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம்,
சென்னை - 600006 

என்ற முகவரிக்கு தங்களது கருத்துகளை அஞ்சலில் அனுப்பலாம். 

இமெயில் முகவரி:  jdhssed​@nic.in​

Read more »

வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு : விருத்தாசலம் பஸ் நிலையம் தத்தளிப்பு



விருத்தாசலம் : 

               விருத்தாசலம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை பெய்ததால், பஸ் நிலையம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 

                கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தின் முக்கிய வடிகாலாக 3.5 மீட்டர் அகலம் கொண்ட ஆலடிரோடு ஊத்து ஓடை வழியாக சின்னகண்டியங்குப்பம், எம்.ஆர்.கே., நகர், ஆலடி ரோடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகர் பகுதியின் மழை தண்ணீர் வெளியேறும்.

                  இந்த ஓடை தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, ஒரு அடி அகலம் கொண்ட சிறிய கால்வாயாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் இப்பகுதியிலிருந்து வெளியேறும் தண்ணீர் உள்வாங்காமல் தெருக்களில் வழிந்தோடுகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இடை விடாது பெய்த மழையால், விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரில் உள்ள ஏரியும், சின்னகண்டியங்குப்பத்தில் உள்ள ஏரியும் நிரம்பி வழிந்தது. 

                    களுங்கு வழியாக, வெளியேறிய வெள்ளம் வடிகால் வசதி இல்லாததால் எம்.ஆர்.கே., நகர், கருணாநிதி நகர் ஆகிய நகர்களின் தெருக்களின் வழியே ஓடி பஸ் நிலையத்திற்குள் புகுந்து வெள்ளக்காடானது. இதனால் பயணிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

Read more »

சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடியில் 13 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின




சேத்தியாத்தோப்பு : 

               கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கனமழை காரணமாக. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கரும்பு மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளன. 

               கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. வாரச் சந்தை தினமான நேற்று சந்தை மைதானம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள கத்தாழை, கரிவெட்டி, சோழத்தரம் குடிகாடு ஆகிய கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

                எரும்பூர், வளையமாதேவி, ஆனைவாரி, பின்னலூர், மிராளூர், மஞ்சக்கொல்லை, வாண்டையாங்குப்பம், ஓடாக்கநல்லூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழை நீருடன், என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரும் சேர்ந்து பரவனாறு வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதால், சேத்தியாத்தோப்பை அடுத்த நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, மதுவானைமேடு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

                   வீராணம் ஏரி, பெலாந்துறை அணை, மேமாத்தூர் அணை ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் குறைந்துள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் மீண்டும் மழை துவங்கியுள்ளதால் மக்கள் எந்த நேரத்திலும், வெள்ளம் வரக்கூடும் என்ற அச்சத்துடன் உள்ளனர்.

குறிஞ்சிப்பாடி:

                      கடந்த இரண்டு நாட்களாக நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கனமழையாலும், நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து அளவிற்கு அதிகமாக தண்ணீர் கன்னியாக்கோயில் ஓடையின் வழியாக வெளியேற்றுவதால், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாக்கோயில் ஓடை தண்ணீர் செங்கால் ஓடை வழியாக பரவனாற்றில் கலப்பதால் கன்னியாக்கோயில் ஓடை, செங்கால் ஓடை, பரவனாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

                     வெள்ளப்பெருக்கு காரணமாக ஓடைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சேரக்குப்பம், எல்லப்பன்பேட்டை, அரங்கமங்கலம், அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், பூதம்பாடி, மருவாய், திருவெண்ணைநல்லூர் கிராமம், ஓணாங்குப்பம், அந்தராசிபேட்டை, ஆடூர் அகரம், குண்டியமல்லூர், கருங்குழி, கொளக்குடி ஆகிய கிராமங்களில் பெரும்பகுதி மழைநீர் ‹ழ்ந்துள்ளது. இப் பகுதியில் 3,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின. இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்ததால் வீடு இழந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Read more »

மழைநீரில் ஒழுகும் பண்ருட்டி சப் கோர்ட் வக்கீல்கள் ஊழியர்கள் அவதி

பண்ருட்டி : 

              பண்ருட்டி சப் கோர்ட் மற்றும் முன்சீப் கோர்ட் கட்டடத்தில் தொடர் மழை காரணமாக கட்டடத்திற்குள் நீர் கசிவதால் பணிகள் பாதித்துள்ளது. 

               பண்ருட்டியில் சப் கோர்ட் ஹால்,  மாவட்ட முன்சீப் கோர்ட் ஹால் மற்றும் ஆவண காப்பகம், அலுவலக ஊழியர்கள் பணிபுரியும் கட்டடம், வக்கீல்கள் சங்க அலுவலக கட்டடம் ஆகியவை பகுதியில் உள்ள ஒடுகளில் இருந்து மழைநீர் தொடர்ந்து கசிந்து வருகிறது. கடந்த 1954ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Read more »

தேவனாம்பட்டினம் சில்வர் பீச் புறக்காவல் நிலையம் அழகுப்படுத்தும் பணி

கடலூர் : 

            தேவனாம்பட்டினம் சில்வர் பீச் புறக்காவல் நிலையம் அழகுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வளாகத்தில் புறக்காவல் நிலையம் இயங்கி வந்தது. 

                  கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் போது, இந்த புறக்காவல் நிலையம் முற்றிலுமாக சேதமடைந்தது. பின், அதே இடத்தில் புறக்காவல் நிலையம் புதியதாக அமைக்கும் பணி முடிவடைந்து, மீண்டும் செயல்படத் துவங்கின. இதையடுத்து புறக்காவல் நிலையத்தை அழகுப்படுத்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் முயற்சி மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக காவல் நிலைய வளாகத்தில் புற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், நுழைவு வாயிலில் இரண்டு பீரங்கிகள் அமைக்கப்பட்டு, அழகுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Read more »

Vehicular movement disrupted at Cuddalore District



Battered: Many places in the Oldtown area in Cuddalore remained under water on Wednesday. 
 
CUDDALORE: 

             Vehicular traffic on Vadalur-Kumbakonam road near here was disrupted on Wednesday owing to the overflowing Paravanar at Maruvai. The canals on either side of the road are carrying water beyond their capacity, thereby, inundating farmlands and habitations.

            Meanwhile, the Veeranam tank has been getting a steady inflow of 1,300 cusecs and to maintain the level at 42 ft (maximum 47.5 ft), 1,500 cusecs of water is being released from the tank.

               This time around, the authorities are discharging excesses from the Veeranam tank into Paal Vaikkal instead of the Velliangal Odai. Earlier, the Velliangal Odai, through which heavy volume of water was let out from the tank, caused havoc in at least 40 villages . While water-logging has been cleared in three of these places the residents of Nandimangalam are still reeling under the impact of the heavy rain. Collector P. Seetharaman, along with officials, including District Revenue Officer S. Natarajan and Public Relations Officer Pon. Muthiah, visited these areas on Wednesday to organise relief measures.

               On the instruction of Health Minister M.R.K.Panneerselvam, the Collector also arranged for distribution of 10,000 food packets to residents of rain-affected areas in 10 villages in Kurinjipadi Assembly constituency, including Varadarajanpettai, Maruvai, Kalgunam, Kothavacheri, Kundiamallur and Andikuppam. The Collector also checked foodgrain stocks in the Cuddalore and Kattumannarkoil godowns of the Tamil Nadu Civil Supplies Corporation and arranged for the transportation of the required quantity of rice to the rain-hit areas.

            Later, the Collector inspected submerged crops at places such as Keerapalayam, Sethiathope and B.Mutlur. He also met the residents at Veeranatham, Keezhavalliyur, Kumaratchi, Kopadi, Meyyathur, Pudhu Pulamedu, Nanjalur and Kathazhai, who related their difficulties to him. The Collector said that the officials were monitoring water sources and also keeping ready sandbags and other materials to plug any breaches.

Residents' woes

                Residents of Periyar Nagar and Suthukulam in the Old Town area have complained for want of proper drainage system inundation had become a common feature, throwing normal life out of gear.
      
              A. Bhaskar (37), a resident, said that the canal running along the elevated railway track in the area was too small to carry stormwater and sewage. A small causeway with inlaid pipes could hardly act as the conduit for draining the rainwater. As a result, pot-hole filled roads filled with hip-deep water were posing grave danger to the commuters. A high-level bridge at this point would mitigate their sufferings, Mr. Bhaskar added.

Holiday

              Owing to incessant rain, Collector Seetharaman declared holiday for all the schools in the district on Thursday. On account of continuous downpour, Villupuram Collector R.Palanisamy declared holiday for all schools in Villupuram district on Thursday.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior