உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

மழையில் சம்பா அறுவடை பாதிப்பு

பண்ருட்டி: 

             பண்ருட்டியில் திடீரென வெள்ளிக்கிழமை பெய்த மழையால், சம்பா நெல் அறுவடைப் பணி பாதிப்படைந்தது.

              கடலூர் மாவட்ட பண்ருட்டி வட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் பயிரிடப்பட்டிருந்தது. இதன் அறுவடைப் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கையில் இருந்து தமிழகம் வழியாக தெற்கு ஆந்திரம் வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை பரவியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.÷இந்நிலையில் பண்ருட்டி வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுமார் 1 மணி நேரம் பரவலான நல்ல மழை பெய்தது. இதனால் பண்ருட்டி வட்டாரத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் அறுவடைப் பணி தடைபட்டதுடன், நெல் கதிர்களை களத்திற்கு கொண்டு செல்லும் பணியும், கதிர் அடிக்கும் பணியும் பாதிப்படைந்தது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடித்தால் விளைந்த நெல் பயிர்கள் மடிந்து முளைப்பு விட்டுவிடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் மணிலா, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு இம்மழை பயனுள்ளதாக இருக்கும் என கூறினர்.

Read more »

நெய்வேலியில் கடுங்குளிர்

நெய்வேலி:

                 மரங்கள் அடர்த்தியாக உள்ள நெய்வேலியில் கடுமையான குளிர்க் காற்று வீசுகிறது. நெய்வேலி நகரத்தில் சுமார் பல லட்சம் மரங்கள் உள்ளன. என்எல்சி நகர நிர்வாகத்தின் தோட்டக்கலைத் துறை சார்பிலும், நிறுவனத்தில் சுற்றுச்சூழல் துறை சார்பிலும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதோடு இல்லாமல் நெய்வேலி நகரில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளிலும் சராசரியாக 10 மரங்களுக்கு குறையாமல் இருக்கும்.÷எனவே மழைக் காலங்களில் நெய்வேலியில் தொடர் மழை பெய்யும், மார்கழி மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருப்பின் நெய்வேலியில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும், மாலை 5 மணிமுதல் மறுநாள் காலை 8 மணிவரை குளிர்க்காற்று வீசுவதால் பலரும் கம்பளி ஆடை அணிந்தே வெளியே வருகின்றனர். வெப்ப நிலையைப்  பொறுத்தமட்டில் 20 டிகிரிக்கு குறைவாக இருப்பதால், குளிர் நெய்வேலி வாசிகளை வாட்டிவதைக்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இடைவிடாமல் கனமழை பெய்ததால் குளிரின் தாக்கம் வழக்கத்தைவிட கூடுதலாகவே இருந்தது.

Read more »

ஊராட்சித் தலைவரை சிறை பிடித்தவர் மீது வழக்கு

பண்ருட்டி: 

               அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்கவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் சக்கரத்தாழ்வாரை, ஊராட்சி அலுவலகத்தில் பூட்டி சிறை பிடித்த சச்சிதானந்தத்தின் மீது பண்ருட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

             பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்கவரப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரத்தாழ்வார். இவர் உறுப்பினர்களுடன் ஊராட்சி மன்றக் கட்டடத்தில் வியாழக்கிழமை மாதாந்திரக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, கீழ்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த சச்சிதானந்தம் என்பவர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனக்கூறி மன்றக் கட்டடத்தை பூட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்களை சிறை பிடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பண்ருட்டி போலீஸôர் விரைந்து சென்று சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரத்தாழ்வார் கொடுத்த புகாரின் பேரில், சச்சிதானந்தத்தின் மீது பொது இடத்தில் அசிங்கமாக திட்டுதல், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Read more »

குரங்குகள் அட்டகாசம்: குமுறும் கிராம மக்கள்

நெய்வேலி:

               பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த நடுக்குப்பம் கிராமத்தில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக படாதபாடுபடுகின்றனர்.

              பண்ருட்டி வட்டம் வல்லம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட நடுகுப்பம் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் முந்திரி மற்றும் பலா விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. இந்த கிராமத்தில் சுற்றித் திரியும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் இப்பகுதி மக்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் கொஞ்சம் நஞ்மல்ல. வீட்டின் கூரைகளை பிய்த்துப்  போடுவது, மண்பானையில் வைத்துள்ள தண்ணீரைக் குடிப்பதற்காக பானைகளை கீழே சாய்த்து தண்ணீர் குடிப்பது, வீட்டில் சமைத்து வைக்கப்பட்டுள்ள சோற்றுப் பானைகளை தூக்கிக் கொண்டு செல்வது, முந்திரிப் பயிர்களை எடுத்துச்செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கிராமப் பெண்கள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். ராணி என்ற பெண் கூறுகையில் எங்கள் வீட்டில் இளம் வயது குழந்தைகள் உள்ளனர். இவர்களை வெளியே விளையாடக் கூட அனுப்புவதற்கு பயமாக உள்ளது. சந்தைக்கு சென்று வாங்கி வந்த காய்கறிகளை தூக்கிக் கொண்டு மரத்தில் ஏறிவிடுகிறது.

                   வீட்டின் மேல்பகுதியில் செல்லும் கேபிள்டிவி வயர்களை இந்தக் குரங்குகள் அறுத்துவிடுகின்றன. ஆனால் கேபிள்டிவி உரிமையாளர்கள் எங்களிடம் சண்டையிடுகின்றனர். குரங்குதான் அறுத்தது என்றாலும் நம்ப மறுக்கின்றனர், இதனால் எங்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது என்றார் அஞ்சலை என்ற பெண் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு பண்ருட்டி சென்று வீடு திரும்பிய போது, வீட்டின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்று உள்ளே சென்று பார்த்தபோது, இட்லிக்கு அரைத்து வைத்திருந்த மாவு, சாம்பார் ஆகியவற்றின் பாத்திரங்களை கீழே தள்ளி, அதில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். குரங்குகளை அடித்தால் பாவம் சேரும் என்பார்கள். ஆனால் அவை செய்யும் சேட்டையை எங்களால் தாங்க முடியவில்லை. எனவே இந்தக் குரங்குகளின் அட்டகாசத்தை அடக்க பண்ருட்டி வட்டாட்சியர், வனத்துறை மூலம் குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read more »

சி.ஐ.டி.யூ. மாநில நிர்வாகிகள்

கடலூர்: 

           கடலூரில் நடைபெற்ற சி.ஐ.டி.யூ. மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளராக அ.செüந்தரராஜன், பொருளராக பி.எம்.குமார், உதவிப் பொதுச் செயலாளர்களாக ஆர்.சிங்காரவேலு, கே.பழநிவேலு, வி.குமார் மற்றும் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட 13 துணைத் தலைவர்களும், கடலூர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட 16 செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப்ப ட்டனர்.

Read more »

ஊராட்சிகளில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ள 406 ஊராட்சிகளில், பொங்கல் தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

   ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            கடந்த 3 ஆண்டுகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 406 ஊராட்சிகளில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொங்கல் திருநாளன்று 406 ஊராட்சிகளிலும், இளைஞர்களுக்கு தனிநபர்களுக்கும்  குழுக்களுக்கும் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஆண், பெண் இருபாலருக்கும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், சதுரங்கம், கேரம், 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், வாலிபால், டென்னிக்காய்ட் ஆகிய போட்டிகள் இடம்பெறும்.  போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்து கொண்டவர்களுக்கு 10-ம் தேதி வரை முன்னோடிப் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதிப் போட்டிக்கு வீரர்கள் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதிப் போட்டிகள் பொங்கலன்று நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவரைத் தொடர்பு கொள்ளலாம்.   விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

Read more »

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

                         விருத்தாசலத்தில் கல்விக் கடன் வழங்காத, ஸ்டேட் பாங்க் களப்பணி அலுவலரை மாற்றக்கோரி காங்கிரஸ் சார்பில், வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில், கல்விக் கடன் வழங்காத பாரத ஸ்டேட் பாங்க் களப்பணி அலுவலரை மாற்றக்கோரியும், நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                       நகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை ஏற்றார், வட்டார தலைவர் ராஜீவ்காந்தி, மணிகண்டன், செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அசோக்குமார், நகர் மன்ற உறுப்பினர் கென்னடி, நகர பொருளர் சர்தார் பாஷா, செயலர் கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

600 சிமென்ட் மூட்டைகளுடன் லாரி கடத்தல்: இளைஞர் கைது

கடலூர்:

                 600 சிமென்ட் மூட்டைகளுடன் லாரியைக் கடத்தியதாக பச்சமுத்து (27) வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

               பெண்ணாடம் அருகில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து 600 சிமென்ட் மூட்டைகளுடன், அரியலூர் மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வம் (41), கிளீனர் மணிகண்டன் ஆகியோர் வியாழக்கிழமை மாலை பெரியகுளம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.÷வழியில் திட்டக்குடி வெள்ளாற்றங் கரையில் லாரியை நிறுத்திவிட்டு, இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது, லாரியை ஒருவர் கடத்திச் சென்று விட்டாராம். லாரி மற்றும் சிமென்ட் மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.10.60 லட்சம்.

                     இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திட்டக்குடி போலீஸôரிடம் சிமென்ட் மூட்டைகளுடன் லாரி பிடிபட்டது. லாரியை கடத்தி வந்த திட்டக்குடி இளமங்கலத்தைச் சேர்ந்த ராசுநயினார் மகன் பச்சமுத்து கைது செய்யப்பட்டார். அவர் இதே லாரி நிறுவனத்தில்  2 ஆண்டுகளுக்கு முன் டிரைவராக வேலை பார்த்தவர் என்று கூறப்படுகிறது.

Read more »

பஸ்ûஸ மறித்து கொள்ளையிட திட்டமிட்ட 3 பேர் கைது

சிதம்பரம்: 

                  சிதம்பரம் அருகே பஸ்ûஸ மறித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட திட்டமிட்டு நின்றிருந்த 3 பேரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

                  சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.அம்பேத்கர், குமரேசன் மற்றும் போலீஸôர் வியாழக்கிழமை இரவு சிதம்பரத்தை அடுத்த உசுப்பூர் ரயில்வேகேட் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்த பூதவராயன்பேட்டை பழனியப்பன் (27), செந்தில்குமார் (28), கிள்ளையைச் சேர்ந்த கர்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர். மேலும் தப்பிஓடிய அண்ணாமலைநகரைச் சேர்ந்த சுவாமிநாதன், சுரேந்திரன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். மேற்கண்ட கும்பல் அவ்வழியே வரும் பஸ் மற்றும் லாரியை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டமிட்டு நின்றிருந்தது போலீஸôர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read more »

15-ம் தேதி மதுக்கடைகள் மூடப்படும்

கடலூர்:

                     திருவள்ளுவர் தினமான 15-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து மதுக்கடைகளும் மது அருந்தும் இடங்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். மதுக்கடைகளின் மேற்பார்வையாளர்கள் மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் இடங்கள் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மீறி யாராவது திறந்தால் கடை மேற்பார்வையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

குடிசைப் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல்

நெய்வேலி: 

                நெய்வேலியில் வட்டம் 21 குடிசைப் பகுதி மக்கள் கடை வீதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி வட்டம் 21 பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு நகர நிர்வாகம் மின் இணைப்பு வழங்கியுள்ளது. சிலர் தங்களது குடிசைப் பகுதிக்கு மேலே செல்லும் மின்கம்பிகளில் நகர நிர்வாகத்தின் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பான வகையில் மின் திருட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் மின்னழுத்தம் ஏற்பட்டு, அங்கிருந்த மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு மின்துண்டிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

                     இதனால் அப்பகுதி முழுவதும் வியாழக்கிழமை மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மின்துண்டிப்பை சரிசெய்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை அதிகாலை அப்பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து என்எல்சி நகர நிர்வாக அதிகாரி சம்பவ இடத்துக்குச் சென்று, அப்பகுதி மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டதையடுத்து, அப்பகுதி மக்கள்  கலைந்து சென்றனர். இதை அடுத்து மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து சகஜ நிலையை அடைந்தது.

Read more »

நிஷா புயல் இழப்பீடு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:

                    சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் குறுவட்ட கிராமங்களுக்கு 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிஷா புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த 25.18 விழுக்காடு இழப்பீட்டை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கீரப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழக உழவர் முன்னணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                   உழவர் முன்னணி மாவட்டச் செயலர் சி.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆலோசகர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அய்யனூர் பொ.ரத்தினசங்கர் நன்றி கூறினார்.

                 இதுகுறித்து கி.வெங்கட்ராமன் தெரிவித்தது: 2008 நவம்பர் மாதம் ஏற்பட்ட நிஷா புயல், வெள்ளத்தால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடலூர் மாவட்டத்தையும் ஒன்றாக அறிவித்தது. காப்பீடுத் திட்டத்தின் கீழ் ஒரத்தூர் குறுவட்டப் பகுதி கிராமங்களுக்கு 2008-ம் ஆண்டு 25.18 விழுக்காடு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழக உழவர் முன்னணியினர் முதல்வர் மற்றும் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். 2008-ம் டிசம்பர் 5-ம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவித்தனர். அறிவிப்பை தொடர்ந்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4.10.2009, 7.10-2009- ல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இழப்பீடு தொகையை அதிகரிப்பது குறித்து வேளாண் காப்பீட்டு கழகத்திற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு தொகை அதிகரித்து வழங்கப்படவில்லை என கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.

Read more »

நெல் கொள்முதல் விலை உயர்வு: வியசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்:

                      கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 114 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிட்டப்பட்டு உள்ளது. இதில் பொங்கலுக்குள் 60 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விடும் என்றும், ஏனைய கொள்முதல் நிலையங்கள் 20-ம் தேதிக்குள் திறக்கப்படும் என்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழக அரசு சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.1,050 (மத்திய அரசு விலை ரூ. 930) என்றும், மிகச் சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1100 (மத்திய அரசு விலை ரூ. 980) அறிவித்து உள்ளது. நெல்லுக்கு விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் அறுவடை ஆகும் அனைத்து நெல்லும் அரசு கொள்முதல் நிலையங்களுக்கே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more »

கடலூரில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் பற்றாக்குறை

கடலூர்:

                          கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் உள்பட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது ஆழ்குழாய் கிணற்று பாசனப் பகுதிகள், டெல்டா பகுதிகளில் வடவாறு மற்றும் வடக்கு ராஜன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கி விட்டது.

                          தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தொடர்ந்து ஆள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. எனவே  பெரும்பாலான நிலங்களில் இயந்திரங்கள் மூலமாகவே அறுவடை நடக்கிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தின் மொத்தத் தேவையில் 10 சதவீதம் அறுவடை இயந்திரங்கள் கூட இங்கு இல்லை. நெல் அறுவடை இயந்திரத்தின் விலை ரூ.25 லட்சத்துக்கு மேல் இருப்பதால், கடலூர் மாவட்ட விவசாயிகளால் அதை வாங்க முடியவில்லை என்று தெரிவிக்கிறார்கள். கடலூர் மாவட்டத்துக்குத் தேவையான 100-க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம் பகுதிகளில் இருந்தே வரவழைக்கப்படுகின்றன.அறுவடை இயந்திரத்துக்கு நாளொன்றுக்கு 500 லிட்டருக்கு மேல் டீசல் தேவைப்படும். தற்போது அறுவடை நடந்து வரும் பகுதிகளில் சேத்தியாத்தோப்பு, குமாரக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.திடீரென பல அறுவடை இயந்திரங்கள் வந்ததால், அவற்றுக்குத் தேவையான டீசலை இப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களால் வழங்க முடிவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  

              இதுகுறித்து மாட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண் பணிகள்) மணியிடம் கேட்டபோது, இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதுபற்றி பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையில் 3 அறுவடை இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. அவைகளும் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. அறுவடைப் பணிகள் மற்றும் வேளாண் பணிகளுக்கு கூடுதலான இயந்திரங்களை, வேளாண் பொறியியல் துறை வாங்கி, விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும். டயர் மாடல் அறுவடை இயந்திரத்துக்கு கடந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ.1,000 ஆக இருந்த வாடகை, இந்த ஆண்டு ரூ.1,300 ஆகவும், பெல்ட் மாடல் அறுவடை இயந்திரத்துக்கு வாடகை ரூ.1,200 ஆக இருந்தது ரூ.1,800 ஆகவும் அதிகரித்து விட்டது. எனவே வேளாண் பொறியியல் துறை இத்தகைய இயந்திரங்களை வாங்கி வைத்து இருந்தால், விவசாயிகள் அறுவடை போன்ற வேளாண் பணிகளை குறைந்த செலவில் மேற்கொள்ள முடியும் என்றார்.

Read more »

படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

சிதம்பரம் :

             சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மூழ்கினார். சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை சின்னார் புதுப்பேட்டையை சேர்ந்த சுப்ரமணியன் (45), ஆனந்த் (30), பாஸ்கரன் (40)ஆகியோர் நேற்று காலை மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்றனர். அலையின் சீற்றத் தில் படகு கவிழ்ந்து மூவரும் கடலில் மூழ்கினர். அவர்களில் பாஸ்கரன், ஆனந்த் இருவரும் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கினர். சுப்ரமணியனை மீனவர்கள் கடலில் தேடி வருகின்றனர்.

Read more »

கடலூர் பகுதியில் பைக் திருடிய புதுச்சேரி வாலிபர்கள் இருவர் கைது

கடலூர் :

                   கடலூரில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய புதுச்சேரி வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மூன்று மோட்டார் சைக்கிள்கள் கைப்பற் றப்பட்டுள்ளன. கடலூர் புதுநகர் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் லியாகத் அலி,ஏட்டுகள் தேசிங்குராஜன், முருகன், சண்முகம், அமானுல்லா, ஞானமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று விடியற்காலை கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசா ரித்தனர்.

               அதில் அவர்கள் புதுச்சேரி முத்த ரையர்பாளையம் கோவிந்தன் கோவில் தெரு மாயகிருஷ்ணன் மகன் சரவணன் (23), அரியாங்குப்பம் டோல் கேட் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ரமேஷ் என்கிற சக்திவேல் (31) என்பதும், அவர் கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கடலூர் எல்.ஐ.சி., அலுவலக வளாகத் தில் திருடியதும், அதேபோன்று கலெக் டர் அலுவலகம் மற்றும் மஞ்சக்குப்பம் மார்க் கெட் பகுதிகளில் தலா ஒரு மோட்டார் சைக்கிள் களை திருடியது தெரிய வந்தது. அதன்பேரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும், ஏற்கனவே திருடி விற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிந்து நேற்று மாலை கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more »

உழவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

புவனகிரி :

                    மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உழவர் முன்னணி சார்பில் கீரப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிஷா புயல், வெள்ளத்தில் புவனகிரி அடுத்த ஒரத்தூர் பகுதி விவசாய பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு மத்திய அரசின் காப்பீடு தொகை முழுமையாக பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் அதன்படி இழப்பீட்டு தொகை வழங்கவில்லை.

                 இதனைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் நேற்று கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆலோசகர் வெங்கட்ராமன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். பின்னர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். முன்னதாக புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.

Read more »

மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் பலி

சிறுபாக்கம் :

                ராமநத்தம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வடமாநிலத்தை சேர்ந்தவரை போன்று தோற்றமளித்த மனநிலை பாதிக் கப் பட்ட வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். சுமார் 30 வயது மதிக்கத் தக்க அவர் ராமநத்தம் பகுதியில் எழுத்தூர் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உடல் சிதறி இறந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Read more »

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நெய்வேலி :

              ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். வடக்குத்து ஊராட்சி தலைவர் இன்ஜினியர் அன்புமணி (38). இவரை சில தினங்களாக தொலைபேசியில் மர்ம நபர் மிரட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அன்புமணி அலுவலகம் முன்பாக நிறுத்தி வைத்திருந்த அவரது கார் மர்ம நபர்களால் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அன்புமணி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவந்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் திராவிடன் (28) என்பவரை கைது செய்தனர்.

Read more »

வீடு புகுந்து தகராறு: மூவர் கைது

நடுவீரப்பட்டு :

             குடிபோதையில் அடுத்தவர் வீட்டில் புகுந்த தகராறு தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். நடுவீரப்பட்டு அடுத்த திருமானிக்குழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி என்கிற சஞ்சீவ்காந்தி. இவர் கடந்த 5 ம் தேதி இரவு 12 மணிக்கு குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் வீட்டில் நுழைந்தார். இதனை சுப்ரமணியன் கண்டித்தால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நடவீரப்பட்டு போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து குணசேகரன், மணிகண்டன்,சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

போலீசாரை திட்டியவர் கைது

கடலூர் :

              புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து பணியில் இருந்த போலீசாரை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(49). இவர் நேற்று முன்தினம் புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று அங்கு பாரா பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ரசூல்கானிடம் ""எங்கடா உங்க இன்ஸ்பெக்டர் என்னடா ஸ்டேஷன் வைத்து நடத்ததுகிறீர்கள்'' என ஆபாசமாக திட்டியுள்ளார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

Read more »

சாராயம் விற்ற பெண் கைது

பரங்கிப்பேட்டை :

                பதநீர் விற்பது போல் நடத்து சாராயம் விற்றுக் கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுச்சத்திரம், சாமியார்பேட்டை பகுதியில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது சாமியார்பேட்டை பள்ளி அருகில் பிளாஸ்டிக் குடத்தில் பதநீர் விற்பது போல் சாராயம் விற்றுக் கொண்டிருந்த கடலூர் முதுநகர் தம்பியப்பன் மனைவி சாவித்திரி(40) என்பவரை கைது செய்தனர்.

Read more »

பைக் மோதி விபத்து: மாணவர் பலி

பரங்கிப்பேட்டை :

            மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் மாணவர் இறந்தார். பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை மண்டபத்தெருவை சேர்ந்தவர் சையது முகம்மது மகன் ஜான் பாஷா (17), அதேப்பகுதி அப்துல் ரசாக் மகன் பாரூக்பாஷா(19). இருவரும் பரங்கிப் பேட்டை அரசு பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் பைக்கில் பரங்கிப் பேட்டையில் இருந்து முட்லூருக்கு சென்றனர். ஜான் பாஷா பைக்கை ஓட்டினார். ரயிலடி அருகே சென்றபோது முன்னால் சென்ற மாட்டு வண்டி மீது பைக் மோதியது. தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜான்பாஷா மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நிவாரணம் வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் :

             மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி சிதம்பரத் தில் ஆர்ப்பாட் டம் நடந்தது. தொடர் மழை மற்றும் கலப்பட விதையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங் கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட தலைவர் கண் ணன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப் பினர்கள் ஜின்னா, ஜாகீர் உசேன், கோபாலகிருஷ்ணன், குணசேகரன் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் நாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ராஜாராமன், ஜக்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

குடும்பம் நடத்த மனைவி மறுப்பு: விரக்தியில் கணவர் தற்கொலை

பண்ருட்டி :

               குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் திடீர்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(26). இவரது மனைவி சல்வி(20). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதமாகிறது. கர்ப்பமாக இருந்த செல்விக்கு கடந்த மாதம் அபார்ஷன் ஆனது. அதன் பிறகு செல்வி மேலிருப் பில் உள்ள தனது தாய் வீட் டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பாலமுருகன் மேலிருப்பு கிராமத்திற்கு சென்று செல்வியை வீட்டிற்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். விரக்தியடைந்த பாலமுருகன் காட்டாண்டிக்குப்பத் தில் சேதுபதி என்பவரின் தோப்பில் உள்ள பலா மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் :

                கல்வி கடன் வழங் காத ஸ்டேட் பாங்க் கள அலுவலரை மாற்றகோரி காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்., தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ராஜீவ்காந்தி, மணிகண்டன், செல்வராணி முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்., மாவட்ட தலைவர் அசோக்குமார், கவுன்சிலர் கென்னடி, நகர பொருளாளர் சர்தார் பாஷா, செயலாளர் கண் ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கடல் அலை சீற்றம் மீன்பிடி தொழில் பாதிப்பு

கடலூர் :

             கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் கடலூரில் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் லேசான மழை துவங்கியது. மதியம் 12 மணிக்கு பலத்த மழை பெய்தது. கடலூர் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, ராசாபேட்டை, சொத்திக்குப் பம், சித்திரைப்பேட்டை, பெரியக்குப்பம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.கடலூர், பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. விசைப் படகுகள், பைபர் படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

Read more »

விபத்து நஷ்ட ஈடு வழங்காத இரண்டு அரசு பஸ்கள் ஜப்தி

சிதம்பரம் :

              சிதம்பரத்தில் விபத்துக் கான நஷ்ட ஈடு வழங்காத இரண்டு அரசு விரைவு பஸ்கள் ஜப்தி செய்யப் பட்டன. சிதம்பரம் அடுத்த நங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சாலையில் நடந்து சென்றபோது கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் மோதி இறந்தார். அவரது மனைவி சாந்தி இழப்பீடு கோரி சிதம்பரம் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

                     வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமி, கணேசமூர்த்தி குடும்பத்திற்கு இழப்பீடாக 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை விரைவு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என கடந்த 2004ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். ஆனால் இதுவரை விரைவு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. அதே போன்று மற்றொரு விபத்தில் காயமடைந்த கலையரசி என் பவருக்கும் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை.

                      இதுகுறித்து சாந்தி மற்றும் கலையரசி ஆகியோர் சிதம்பரம் விரைவு கோர்ட்டில் முறையீடு செய்தனர். அதன்பேரில் நீதிபதி தேவசகாயம் (பொறுப்பு) விசாரணை நடத்தி, நஷ்ட ஈடு வழங்காத விரைவு போக்குவரத்து கழக பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டர். அதன்பேரில் நேற்று சிதம்பரத்தில் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு விரைவு போக்குவரத்து பஸ்கள் இரண்டையும் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் நிறுத்தினர்.

Read more »

தமிழ் புத்தாண்டு பிரசார வாகன உலா

விருத்தாசலம் :

                  விருத்தாசலத்தில் தமிழ் புத்தாண்டு விழிப்புணர்வு பிரசார வாகன உலா துவங்கியது. விருத்தாசலத்தில் தமிழ் மக்கள் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் பிறந்தநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நாள் விழிப்புணர்வு பிரசார வாகன உலா துவங்கியது. இதில் திருக்குறள் விழிப்புணர்வு, தமிழ் புத்தாண்டு கொண்டாடும் முறைகள், கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். இரண்டு நாள் நகரின் முக்கிய இடங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது. அறக்கட்டளை நிறுவனர் கருப்பையா, புலவர் சிவராமசேது, செழியன், பழமலை, அசோக்குமார், தில்லைவாணன், நாராயணன், எழுத்தாளர் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக விழிப்புணர்வு போட்டி

 கடலூர் :

                  மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, சுலோகம் எழுதும் போட்டிகள் நடந்தது. நூலகம் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நூலகத்துறை சார்பில் கட்டுரை, பேச்சு, சுலோகம் எழுதும் போட் டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் மஞ்சக்குப் பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான போட்டி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

                 நூலக அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தார். பச்சையப்பன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். இதில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 42 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் 22ம் தேதி நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். போட்டி ஏற்பாடுகளை தமிழாசிரியர் கருணாநிதி செய்திருந்தார். அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

கடலூர், சிதம்பரத்தில் 91 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர் :

             கடலூர், சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் நாளை 91 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர்கள் கடலூர் குமார், சிதம்பரம் ஜான்சன் விடுத்துள்ள செய்திக் குறிப்புகள்: 

              போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (10ம் தேதி)யும், வரும் பிப்.7ம் தேதி என இரு கட்டமாக நடக்கிறது. இதற்காக கடலூர் நகராட்சி பகுதியில் 68 மையங்களும், சிதம்பரம் நகராட்சி பகுதியில் 23 மையங்களும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

                 இப்பணியில் நகராட்சி பொது சுகாதாரம், குடும்ப நலத்துறை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத் திட்டப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள், சத்துணவு திட்ட பணியாளர்கள் உட் பட 400 பேர் ஈடுபடுகின் றனர். நரிக்குறவர்கள் மற் றும் நகராட்சி பகுதியில் தங்கியிருப்பவர்களை கண்டறிந்து சொட்டு மருந்து வழங்க தனிக் குழுக்கள் அமைக்கப் பட் டுள்ளன. பொது மக்கள் ஐந்து வயது குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு பயனடையவும் என செய்திக்குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம்

நெல்லிக்குப்பம் :

                 மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியின் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்த முருகன் மனைவி ஆதிலட்சுமி (30). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ வலியால் துடித்தார். அவரை 108 ஆம்புலன்சில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, காராமணிக்குப் பம் அருகே ஆதிலட்சுமிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் பைலட் துரைராஜ், மருத் துவ உதவியாளர் அமலா ஆகியோர் ஆதிலட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர். சற்று நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய் மற்றும் சேயை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நெல்லிக்குப்பத்தில் உள்ள 108 ஆம்புலன்சில் இதுவரை 10 பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது.

Read more »

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ரத ஊர்வலம்

கடலூர் :

           போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ரத ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக் கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கிட பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட ரத ஊர்வலத்தை கலெக்டர் சீத்தாராமன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மீரா பங்கேற்றனர். டி.ஆர்.ஓ.. நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த ரதம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

Read more »

விழிப்புணர்வு குழுவினருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

சிதம்பரம் :

            போலியோ விழிப்புணர்வு பேரணியாக புதுச் சேரியில் இருந்து நாகப் பட்டினம் வரை சென்றவர்களுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது. புதுச்சேரி ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்பணர்வு பேரணி புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வரை சென்றது. சிதம்பரம் வந்த பேரணிக்கு சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் தலைவர் சஞ்சீவி, உறுப்பினர்கள் செந்தில்குமார், ரவி, செயலாளர் மாதவன் உள்ளிட் டோர் நினைவு பரிசு வழங்கினர்.

Read more »

நடராஜர் கோவில் உண்டியல் திறப்பு

சிதம்பரம் :

          சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியலில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 477 ரூபாய் வசூலாகியிருந்தது; இதுதவிர, வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. சிதம்பரம் நடராஜர் கோவில், பிப்., 2, 2009ல், அறநிலையத் துறை கட்டுப் பாட்டிற்கு கொண்டு வரப் பட்டு, 5ம் தேதி, காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டது. காணிக்கை அதிகரித்ததால், மேலும் ஐந்து இடங் களில் உண்டியல் வைக்கப் பட்டு, நேற்று, ஒன்பது உண்டியல்களும் திறக்கப் பட்டன. அதில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 477 ரூபாய் வசூலாகியிருந்தது; அத்துடன் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை நாட்டு கரன்சிகள் ஏராளமாக இருந்தன.இக்கோவிலை அரசு ஏற்று, ஓராண்டு நிறைவடைவதற்குள், ஐந்து முறை உண்டியல் திறக் கப்பட்டு, இதுவரை, 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வசூலாகியுள்ளது.

Read more »

பூலோகநாதர் கோவிலில் சிவ விஷ்ணு பஜனை

நெல்லிக்குப்பம் :

              நெல்லிக்குப்பத்தில் இன்று தனூர் மாத சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் நடக்கிறது.நெல்லிக்குப்பத்தில் பழமையான பூலோகநாதர் கோவில் உள்ளது. இங்கு வெங்கடாஜலபதி சன்னதியும் உள்ளது. ஒரே இடத் தில் நின்றபடி சிவனையும், பெருமாளையும் தரிசிக்க முடிவது சிறப்பாகும். அனைத்து கோவில்களிலும் சிவன், விஷ்ணு பஜனைகள் தனித்தனியாக நடக்கும். இக்கோவிலில் மட்டும் தனூர் மாதத்தில் சிவன், விஷ்ணு பஜனை ஊர்வலம் ஒன்றாக நடக் கும். இன்று 9ம் தேதி காலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே செல்கின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior