உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 18, 2012

கடலூர் மாவட்டத்தில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் நிகழ்வாண்டில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். 

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

          கடலூர் வட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில் விநியோகிப்பதற்குத் தயாராக கடலூர் முதுநகர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, இலவச  மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆய்வு செய்தார். விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இப் பொருட்கள் கடலூர் முதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பண்டகச் சாலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கே.என்.பேட்டை, திருவந்திபுரம் பகுதிகளில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில்  கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 

பின்னர் இதுதொடர்பாக ஆட்சியர் கூறியது: 

           கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்த சிறப்புத் திட்டமான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக, ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் புயல் காரணமாக இப்பொருட்கள் வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு, புயல் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்றது.தற்போது மீண்டும் தகுதியுள்ள அனைவருக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

         இதற்காக கடலூர் வட்டத்துக்கு மட்டும் 2,308 மின் விசிறிகள், 7,702 மிக்ஸிகள், 5,575 கிரைண்டர்கள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில்  இவற்றை விநியோகிக்கும் பணி நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில், நிகழ்வாண்டில் 2,723 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் இவ்வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தலா ரூ.1.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படுவது சிறப்பம்சம் ஆகும். இதனால் பயனாளிகளுக்கு மின் கட்டணச் செலவு இல்லை. நாட்டிற்கும் மின்சேமிப்பு ஏற்படும். 

              இத் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் சம்மந்தப்பட்ட 26-12-2011 அன்று ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர். ஆய்வின்போது சார் ஆட்சியர் கிரண் குராலா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் நிகழ்வாண்டில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். 

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

          கடலூர் வட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில் விநியோகிப்பதற்குத் தயாராக கடலூர் முதுநகர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, இலவச  மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆய்வு செய்தார். விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இப் பொருட்கள் கடலூர் முதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பண்டகச் சாலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கே.என்.பேட்டை, திருவந்திபுரம் பகுதிகளில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில்  கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 

பின்னர் இதுதொடர்பாக ஆட்சியர் கூறியது: 

           கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்த சிறப்புத் திட்டமான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக, ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் புயல் காரணமாக இப்பொருட்கள் வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு, புயல் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்றது.தற்போது மீண்டும் தகுதியுள்ள அனைவருக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

         இதற்காக கடலூர் வட்டத்துக்கு மட்டும் 2,308 மின் விசிறிகள், 7,702 மிக்ஸிகள், 5,575 கிரைண்டர்கள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில்  இவற்றை விநியோகிக்கும் பணி நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில், நிகழ்வாண்டில் 2,723 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் இவ்வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தலா ரூ.1.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படுவது சிறப்பம்சம் ஆகும். இதனால் பயனாளிகளுக்கு மின் கட்டணச் செலவு இல்லை. நாட்டிற்கும் மின்சேமிப்பு ஏற்படும். 

              இத் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் சம்மந்தப்பட்ட 26-12-2011 அன்று ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர். ஆய்வின்போது சார் ஆட்சியர் கிரண் குராலா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்திற்கு களப்பணி பயிற்சிக்கு 39 எஸ்.ஐ.,க்கள் வருகை

கடலூர் :

        சென்னையில் பயிற்சி முடித்த 39 சப் இன்ஸ்பெக்டர்கள் களப்பணி பயிற்சிக்கு கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். 

         சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,061 சப் இன்ஸ்பெக்டர்கள் கடந்ததாண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல், கடந்த 16ம் தேதி வரை பயிற்சி முடித்தனர். பயிற்சி முடித்தவர்களில் 39 சப் இன்ஸ்பெக்டர்கள் களப்பணி பயிற்சி பெற கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பெண்கள் உட்பட 32 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும், 2 பெண்கள் உட்பட 7 பேர் ஆயுதப்படை பிரிவிலும் ஆறு மாதம் களப்பணி பயிற்சி பெற உள்ளனர்.
 
       அவர்கள் போலீஸ்காரர்களின் அன்றாட பணிகளான சம்மன் சர்வீஸ், கோர்ட்டுக்கு சம்மன் செய்வது, எஸ்கார்டு, நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பயிற்சிகளை பெறுவர். பயிற்சி முடித்த பின் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு முறையான பணி வழங்கப்படும்.














Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

விருத்தாசலம் : 

        விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரியில் இருந்து ஊர்வலமாகச் சென்ற மாணவ - மாணவிகள் கல்லூரியில் குடிநீர், கழிப்பிடவசதி செய்து தரக் கோரியும், மூடப்பட்டுள்ள நூலகத்தைத் திறக்கவும், லேப்டாப், கல்வி ஊக்கத் தொகை வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் சென்று ஆர்.டி.ஓ., ஆனந்தகுமாரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். 






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior