உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

கடலூர் மாவட்டத்தில் அரசு தட்டச்சு தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் விபரம்

கடலூர்:

அரசு தட்டச்சு தேர்வு தமிழகத்தில் வரும் 31ம் தேதி 96 மையங்களில் நடக்கிறது.

தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தட்டச்சு தேர்வு வரும் 31ம் தேதி மாநிலத்தில் 96 மையங்களில் நடக்கிறது. அதில் வரும் 31ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலைத் தேர்வுகள் 4 அணிகளாகவும், செப்டம்பர் 1ம் தேதி இளநிலை தேர்வில் 5வது அணியும், முதுநிலைத் தேர்வு மூன்று அணிகளாக நடக்கிறது. அன்றைய தினமே உயர் வேகத் (ஹை ஸ்பீடு) தேர்வு மற்றும் 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான புகுமுக இளநிலைத் தேர்வு நடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் 

1. கடலூர் கிருஷ்ணசாமி பாலிடெக்னிக் கல்லூரி, 
2. சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, 
3. நெய்வேலி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, 
4. விருத்தாசலம் அரசு செராமிக் கல்லூரி 

ஆகிய நான்கு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், 

விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி,
திண்டிவனம் பி.வி.பாலிடெக்னிக் கல்லூரியிலும், 

புதுச்சேரியில், 

1. புதுச்சேரி மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் 
2. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி 

ஆகிய மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.

இத்தேர்வை 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் புகுமுக இளநிலை தட்டச்சு தேர்வும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலைத் தேர்வும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலைத் தேர்வும், தட்டச்சில் முதுநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் "ஹை
ஸ்பீடு' தேர்வு எழுதுகின்றனர்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என கோரி சாலை மறியல்

விருத்தாசலம்: 

விருத்தாசலத்தில் உணவு பாத்திரத்துடன் சாலையில் அமர்ந்து அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட் டில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலையில் விடுதியில் சமைத்த உணவை பாத்திரத்துடன் எடுத்து வந்த மாணவர்கள் விருத்தாசலம்- ஆலடி ரோட்டில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் சையத் ஜாபர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடந்த 10 நாட்களாக விடுதியில் உணவு சரிவர வழங்கப்படவில்லை என்றும், சமைத்த உணவுகளில் பூச்சி இருந்ததாகவும், இது குறித்து வார்டனிடம் கேட்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என்றும், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்றும் மாணவர் கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் சையத் ஜாபர் இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றன

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior